செவ்வாய், 31 டிசம்பர், 2019

உடல்குறைபாடுகளுடன்கூடிய அரசனின் உருவப்படம்


முன்னொரு காலத்தில், ஒரு காலும் ஒரு கண் மட்டுமே உள்ள அரசனொருவன்ஒரு நாட்டினை ஆண்டுவந்தான் , ஆனால் அந்த அரசன் மிகவும் புத்திசாலி யாகவும் கனிவாகவும் அரசான்டதால். அந்நாட்டில் மக்கள் அனைவரும், அனைத்து வளங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தனர். ஒரு நாள் அந்த மன்னன் அரண்மனை மண்டபத்தின் வழியே நடந்து கொண்டிருந்தபோது, அம்மண்டபத்தின் சுவர்களில் அவருடைய முன்னோர்களின் உருவப்படங்களைக் கண்டார். அதனை தொடர்ந்து வருங்காலத்தில் தன்னுடைய சந்ததிகளும் இதே மண்டபத்திற்குள் வந்தால் ஏற்கனவேஉள் ள தன்னுடைய முன்னோர்களுடைய உருவப்படங்களுடன் தன்னுடைய உருவப்படமும் இருந்தால் தன்னையும் நினைவில் கொள்வார்கள் என்று அவர்எண்ணினார். ஆனால்,அவரது உடல் குறைபாடுகளுடன் இருந்ததால் அம்மன்னரின் உருவப்படம்மட்டும் இதுவரையில் அம்மண்டபத்தில் வரையப்படவில்லை. அதனால் குறைபாடுகளுடன்கூடிய தன்னுடைய உருவப் படத்தையும் வரைந்து அவற்றுடன் சேர்க்கமுடியுமா என்ற சந்தேகம் அவருக்கு எழுந்தது , அவ்வாறு வரையப்படும் அவருடைய உருவப்படம் எப்படி அமையும் என்று தெரியவில்லை. இருந்தபோதிலும் அவர் தனது நாட்டிலுள்ள அனைத்து பிரபல ஓவியர்களையும் தன்னுடைய அவைக்கு அழைத்து. அரண்மனையில் தன்னுடைய உருவப்படத்தை வைக்க விரும்புவதாகவும் தன்னுடைய உருவப்படத்தை அழகாக வரைவதற்காக எந்தவொரு ஓவியரும் முன்வரலாம் என்றும் அறிவித்தார். மேலும் அரண்மனை மண்டபத்தில் தன்னுடைய உருவப்படத்தினை யார்மிகவும் அழகிய ஓவியமாக வரைகின்றாரோ அவருக்கு நல்லபரிசுபொருட்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்தார். அவையில் கூடிய ஓவியர்கள் அனைவரும் அந்த அரசனுக்கு ஒரு காலும் ஒரு கண்ணும் மட்டுமே இருப்பதால் தங்களால் அவருடைய உருவப்படத்தை அழகிய ஓவியமாக வரையமுடியாது எனசிந்திக்கத் தொடங்கினர். குறைபாடுகளுடைய அரசனுடைய உருவத்தை கொண்டு உருவப்படத்தை மட்டும் எவ்வாறு மிகவும் அழகாக உருவாக்க முடியும்? அது சாத்தியமில்லை, அவ்வாறு வரையப்படும் உருவப்படம் நன்றாக அமையவிவில்லை என்றால் அரசன் கோபமடைந்து தங்களைத் தண்டிப்பார். எனவே நமக்கெதற்கு வம்பு என ஒவ்வொருவராக சாக்கு போக்கு கூறிகொண்டு, அனைவரும் பின்வாங்கி, மன்னரின் உருவப்படம் தங்களால் வரைய இயலாது என ஒவ்வொருவரும் மிகவும் பணிவுடன் மறுத்து சென்றனர். இந்நிலையில் திடீரென்று ஒரு ஓவியர்மட்டும்தன்னுடைய கையை உயர்த்தி, நான் நிச்சயமாக அனைவரும் மிகவும் விரும்பும் வகையில் அரசனின் அழகான உருவப்படத்தை உருவாக்குவேன் என்று கூறினார். அதனைக் கேட்ட மன்னர் மிகவும் மகிழ்ச்சியடைந்து அரண்மனை மண்டபத்தில் தன்னுடைய உருவப்படத்தை வரைவதற்கு அந்த ஓவியருக்கு அனுமதி அளித்தார் , மற்ற ஓவியர்கள் அனைவரும் இந்த ஓவியர் மட்டும் குறைபாடுகளுடைய அரசனின் உருவப்படத்தை எவ்வாறு அழகாக வரையமுடியும் என ஆச்சரியமாகவும் அவ்வாறான உருவப்படத்தினை காண ஆர்வமாகவும் இருந்தனர் அரண்மனை மண்டபத்தில் அந்த ஓவியர் அரசனுடைய உருவப்படத்தை வரையத் தொடங்கி வண்ணப்பூச்சுகளால் நிரப்பி வரைந்து கொண்டிருந்தார் ஒருவழியாக நீண்ட கால அவகாசம் எடுத்துக் கொண்ட பிறகு, இறுதியாக, உருவப்படம் தயார் வந்து பார்வையிடலாம் என்று அந்த ஓவியர்அறிவித்தார்! அரசன் உடல் ஊனமுற்றவர் என்பதால் ஓவியர் அரசனின் உருவப்படத்தை எவ்வாறு அழகாக மாற்றி வரைய முடியும்? அதனால் அரசனுடைய உருவப்படம் எவ்வாறு இருக்குமோ அரசன்அந்த ஓவியருக்கு என்ன தண்டனை வழங்குவாரோ ? என அனைவரும், மிகவும்அச்சத்துடனும் பதட்டமாகவும் இருந்தனர், ஆனால் அந்த ஓவியர் வரைந்திருந்த அரசனின் உருவப்படத்தை அரண்மனை மண்டபத்தில் கண்டபோது, அரசன் உட்பட அரசசபையில் இருந்த அனைவரும் திகைத்துப் போனார்கள். அரசன் ஒரு,குதிரையின் மேல் ஒரு கால் மட்டும் பார்வையாளர்களின்கண்களில் படுமாறு அமர்ந்து கொண்டு ,அரசன் தனது வில்லைப் பிடித்து, ஒரு கண்ணை மூடிக்கொண்டு அம்பினை வேட்டையாடுவதற்காகக் குறி பார்க்குமாறு அரசனின் உருவப்படத்தை வரைந்திருந்தார் அந்தஓவியர். அரசனின் குறைபாடுகளை புத்திசாலித்தனமாக மறைத்து ஓவியர் மிகவும் அழகான உருவப்படத்தை உருவாக்கியிருப்பதைக் கண்டு மன்னர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அதனை தொடர்ந்து மன்னர் அந்த ஓவியருக்கு மிகப் பெரிய பரிசுபொருளை வழங்கி கௌரவித்தார். நீதி: நாம் எப்போதும் மற்றவர்களைப் பற்றி நேர்மறையாக சிந்தித்து அவர்களின் குறைபாடுகளை புறக்கணிக்க வேண்டும். . எதிர்மறையான சூழ்நிலையில்கூட சாதகமாக சிந்தித்து அணுகினால், நம்முடைய பிரச்சினைகளை இன்னும் திறமையாக தீர்வுசெய்ய முடியும்.

சனி, 28 டிசம்பர், 2019

இன்றைய போட்டி மிகுந்த உலகில் நம்முடைய வாழ்க்கைபயனத்தில் கண்டிப்பாக வெற்றிபெறஇப்போதே உறுதிமொழி எடுப்போம்


ஒரு ஜப்பானியரும் ஒரு அமெரிக்கரும் காட்டிற்கு சென்று வேட்டையாடவிரும்பினார்கள் , . அதற்காக அவ்விருவரும்அருகிலுள்ள அடர்ந்த காட்டிற்குள் சென்றனர் . அந்த அடர்ந்த காட்டில் அவர்களிருவரும் சிறுசிறு விலங்குகளையும் பறவைகளை யும் வேட்டையாடி கொண்டே சென்று கொண்டிருந்தபோது வேட்டியாடுவதற்காக வைத்திருந்த அவர்களுடைய துப்பாக்கிகளிலிருந்த தோட்டாக்கள் காலியாகிவிட்டதை உணர்ந்தார்கள். அந்த சூழலில் திடீரென அவர்களுக்கு அருகில் சிங்கம் ஒன்று கர்ஜிக்கும் ஒலியை கேட்டனர் அதனை தொடர்ந்து இந்நிலையில் தங்களால் அந்த சிங்கத்தை எதிர்கொள்ளஇயலாது என தெரிந்து கொண்டு உடன் இருவரும் அந்த அடர்ந்த காட்டினை விட்டு வெளியேறுவதற்காக வேகமாக ஓட ஆரம்பித்தனர். ஆனால் அவ்விருவரில் ஜப்பானிய ர் மட்டும் ஓட்டத்தை நிறுத்தி அவரது காலில் அணிந்திருந்த முழுக்காலணிகளை கழற்றி கைகளில் எடுத்து கொண்டார் இதனை கண்ட அமெரிக்கர், "நீங்கள் என்ன செய்கிறீர்கள்? சீக்கிரம் வாருங்கள் நாமிருவரும் இந்த காட்டினைவிட்டு வெளியேறு வதற்காக நம்முடைய மகிழ்வுந்து இருக்குமிடத்திற்கு விரைவாக ஓடிடுவோம் "என கோரினார் . அதற்கு ஜப்பானியர், "நான்ஒன்றும் செய்யவில்லைஐயா ஆனாலும் நாமிருவரும் ஓடும்போது நான் உங்களுக்கு முன்னால் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமல்லவா மேலும் அவ்வாறு நான் முந்தி சென்று நம்முடைய மகிழ்வுந்திற்கு சென்று ஏறிபயனம் செய்யவேண்டுமல்லவா அப்போதுதானே சிங்கத்திடமிருந்து நான்தப்பிக்கமுடியும் இந்த முழுக்காலணிகளானவை வேகமாக ஓடுவதற்கு இடைஞ்சலாக இருக்கின்றன அதனால் இந்த முழுக்காலணிகளை கழற்றிவிட்டேன் இப்போது பாருங்கள் நம்மில் யார் முதலில் மகிழ்வுந்திற்கு செல்கின்றோம் என்பதை." எனக்கூறிகொண்டு மகிழ்வுந்து இருக்கும்இடம்நோக்கி பறந்தோடி சென்றார் , இந்நிலையில் இந்த கதையே கேட்பவர் அனைவரும் , அய்யய்யோ அந்த அமெரிக்கரை சிங்கம் தாக்கிவிட்டதா அதன்பிறகு என்ன நடந்தது என கதைகேட்பதில் அதிகம் ஆர்வுமுடன் இருப்பார்கள் அல்லவா நிற்க : அதேபோன்று இன்றைய போட்டி மிகுந்த உலகில் நம்முடைய வாழ்க்கைபயனமானது மிகவும் கடுமையானது, சூறாவளியாக சுழன்று ஓடும் நீரோட்டம்போன்ற நம்முடைய இந்த வாழ்க்கை பயனத்தில் மற்றவர்களை விட நாம் ஓரிரு படிகளாவது கூடுதலாக முன்னேற வேண்டியது கண்டிப்பாக தேவையாகும் . நம்மிடம் இவ்வளவு பெரிய நாடு ம் ஏராளமான இயற்கைவளங்களும் உள்ளன. அதனை கொண்டு எப்போதும் சிறந்த தரமுள்ள பொருட்களை அல்லது சேவைகளை வழங்குவதை உறுதிபடுத்திகொண்டு பாடுபட்டால், உலகின் பல நாடுகளுடன் ஒப்பிடும்போது நம்முடைய நாடு வெற்றிபாதையில் பலமைல்களுக்கு முன்னால் இருக்கும் என்பது திண்ணம் கற்றுக்கொள்ள ஒருபோதும் தாமதமில்லை இப்போதுஇருந்துகூட கற்றுகொண்டால் வெற்றிபெறமுடியும் வாழ்த்துகள்

வெள்ளி, 27 டிசம்பர், 2019

வருமான வரிபடிவங்களை சமர்ப்பிக்கும்போது பொதுவாக நம்மனைவரிடமும் எழும் தவறுகளும் அவற்றினை தவிர்ப்பதற்கான வழிமுறைகளும்


1.தவறானவருமானவரிபடிவத்தை தெரிவுசெய்தல்(SELECTION OF WRONG ITR): நம்முடைய வருமானம் என்னென் அதற்கு பொருத்தமானவருமானவரி படிவம் எதுஎன தெரியாமல் குழப்பத்தில் தவறான படிவத்தை தெரிவுசெய்திடுவர் இதனை தவிர்த்திட https://www.incometaxindia.gov.in/Supporting%20Files/ITR2018/Instructions/Instruction_ITR7_2018.pdf/ என்ற முகவரியில் கூறிய அறிவுரைகளை நன்கு படித்தறிந்து நம்முடைய வருமானத்தினை எந்தவகையான படிவத்தில் சமர்ப்பிக்கவேண்டுமென சரியான படிவத்தை தெரிவுசெய்திடுக 2 வருமான வரியை அதிகமாக அல்லது குறைவாக பிடித்து செலுத்தியதாக சமர்பித்தல் (UNDER/OVER REPORTING OF DEDUCTIONS): நம்முடைய வருமானம் எவ்வளவு அந்த வருமானத்திற்கு நடப்புநிதியாண்டின் எவ்வளவு வரிசெலுத்தவேண்டும் என சரியாக கணக்கிடாமல் அதிக வரிபிடித்தம் செய்வது அல்லது குறைவாக பிடித்தம் செய்து செலுத்துவது ஆகிதவறுகளை சரிசெய்திட நமக்கு வழங்கப்பட்ட படிவம் 16 அல்லது 26Sஆகியவற்றின் வாயிலாக எவ்வளவு வருமானவரி பிடித்தம் செய்து செலுத்தப்பட்டது என அறி்ந்து கொண்டு அதற்கேற்ப நம்முடைய வருமானவரியை சரியாக கணக்கிட்டு செலுத்திடுக 3 வருமான வரிபடிவத்தில் அனைத்து வருமானங்களையும் காட்டாது விட்டிடுதல் (NOT DISCLOSING ALL INCOME IN ITR): சம்பளதாரர்களெனில் அதற்கான படிவம் 16 கொடுத்துள்ளது மட்டும்தான் தம்முடைய வருமானம் என்றும் வியாபாரம் செய்பவர்கள் அதுமட்டும்தான் தம்முடைய வருமானம் என்றும் மற்றவகையில் கிடைக்கும் வருமானத்தை கணக்கில் கொள்ளாமல் விட்டுவிடுகின்றனர் இந்நிலையில் FDds, mutual fund, shares, interest ,income from freelance work போன்ற பல்வேறு வகையில் கிடைக்கின்ற வருமானங்களையும் விடுபடாமல் இருப்பதற்காக இவைகளனைத்திற்கும் PAN எனும் பொதுவான ஒரே வருமானவரிஎண் பயன்படுத்தப்பட்டால் அவைகளுக்காக வழங்கபடும் வருமானவரிபிடித்த சான்றிதழ்களைகொண்டுமிகச்சரியாக வருமானவரி கணக்கிட்டு சமர்ப்பிக்கலாம் 4 வரிவிலக்கு வருமானங்களை அறிக்கையில் காண்பிக்காது விட்டிடுதல் (NON-REPORTING OF EXEMPT INCOME): PPF இற்கான வட்டி ,டிவிடென்ட், நீண்டகாலமுதலீட்டு ஆதாயம் ,ஆயுள்காப்பீட்டு முதிர்வுதொகை போன்றவைகளை அதற்கான பகுதியில் குறிப்பிடுவது நல்லது 5 கடைசிநேரம்வரை காத்திருத்தல்: நம்மில் பெரும்பாலானோர் வருமான விவரங்களை கணக்கிட்டவுடன் வருமானவரிபடிவம்தயார்செய்து சமர்ப்பிப்போம் என்றில்லாமல் கடைசிநாள்வரை காத்திருந்து கடைசிநாளன்று அனைவரும் ஒட்டுமொத்தமாக வருமானவரி இணையதளத்திற்குள் உள்நுழைவுசெய்வதால் சரியான நேரத்திற்குள் நம்முடைய வருமானவரிபடிவத்தை சமர்ப்பிக்கமுடியாமல் தத்தளிக்கின்ற நிலையை ஏற்படுத்திடுகின்றனர் இதனை தவிர்த்து வருமானவிவரங்களை கணக்கிட்டு முடிந்தவுடன் உடனடியாக எப்போது வேண்டுமானாலும் வருமானவரிபடிவத்தை தயார்செய்து சமர்ப்பிப்பது நல்லது 6 வருமானவரி படிவஏற்புகை படிவத்தை கையொப்பமிட்டு சமர்ப்பிக்கதவறுதல்: பொதுவாக நாம்தான் இணையதளத்தில் நம்முடைய வருமான வரிபடிவத்தை சமர்ப்பித்துவிட்டோமே அதனால் தனியாக அதற்கான ஏற்புகை படிவத்தை கையொப்பமிட்டு எதற்காக சமர்ப்பிக்கவேணடும்என விட்டுவார்கள் அவ்வாறானவர்கள் E-VERIFY என்பதை தெரிவுசெய்து சரிபார்த்திடுக அல்லது ITR V (ACKNOWLEDGEMENT)என்பதை பதிவிறக்கம்செய்து நம்முடைய கையொப்பமிட்டு குறிப்பிட்ட காலகெடுவிற்குள் சமர்ப்பித்திடுக.

புதன், 25 டிசம்பர், 2019

இந்தியஉணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் (FSSAI)


இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களிலும் துறைகளிலும் நடைமுறையில் இருந்து வந்த உணவு தொடர்பான சிக்கல்களைக் கையாளும் பல்வேறு சட்டங்களையும் ஆணைகளையும் ஒருங்கிணைத்து புதிய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், 2006( Food Safety and Standards Act, 2006) என்பது நடைமுறை படுத்தப்பட்டுள்ளது இந்த சட்டத்தை கண்காணித்து செயல்படுத்துவதற்காக இதன் கீழ் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம்( The Food Safety and Standards Authority of India (FSSAI)) என்பது . உற்பத்தி, சேமித்தல், விநியோகித்தல், விற்பனைசெய்தல், இறக்குமதி செய்தல் ஆகிய உணவு தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை பாதுகாப்பதற்காகவும், உணவிற்கான அறிவியல் அடிப்படையிலான தரநிலைகளை பராமரிப்பதற்காகவும், உருவாக்கப்பட்டுள்ளது. இது மனித நுகர்விற்கான பாதுகாப்பானதும் ஆரோக்கியமானது-மான உணவு கிடைக்கும் தன்மையை உறுதிப்படுத்துகிறது. உணவுமாசுறுதல் தடுப்பு சட்டம் 1954(Prevention of Food Adulteration Act, 1954), பழங்களின் உற்பத்திகள் ஆணை,1955 (Fruit Products Order , 1955) கறிஉணவுகளின் உற்பத்திகள் ஆணை, 1973 (Meat Food Products Order , 1973) , காய்கறி எண்ணெய் உற்பத்திகள் (கட்டுப்பாட்டு) ஆணை, 1947 (Vegetable Oil Products (Control) Order, 1947) , சமையல் எண்ணெய் கட்டுதல் (ஒழுங்குமுறை) ஆணை 1988(Edible Oils Packaging (Regulation)Order 1988), கரைப்பானின் பிரித்தெடுக்கப்பட்ட எண்ணெய், சமையல் உணவு மற்றும் சமையல் மாவு (கட்டுப்பாட்டு) ஆணை, 1967 (Solvent Extracted Oil, De- Oiled Meal and Edible Flour (Control) Order, 1967), பால் மற்றும் பால்பொருட்கள்ஆணை,1992 (Milk and Milk Products Order, 1992)என்பன போன்ற பல்வேறு சட்டங்கள் ஆணைகள் அனைத்தும் 2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு 5 ஆம்நாள் முதல் நீக்கம் செய்யப்பட்டு அவைகளுக்கு பதிலாக இந்த புதிய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம் 2006 ஆனது நடைமுறை படுத்தப்பட்டுள்ளது . உணவு பாதுகாப்பு , தரநிலைகள் தொடர்பான அனைத்து பணிகளையும் செய்து முடிப்பதற்காக எந்தவொரு நபரும் பல்வேறு நிலைகளுக்கும் பல்வேறு துறைகளுக்கும் செல்வதற்கு பதிலாக ஒற்றை சாளரமுறையில் தீர்வு காண்பதற்காக சுதந்திரமான இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் என்பதை இந்த சட்டம் நிறுவுகை செய்கின்றது இந்த உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தின் தலைமை அலுவலகம் புதுதில்லியாகும் இதுவும் அனைத்து மாநிலங்களில் இதேபோன்று நிறுவுப்பட்டுள்ள ஆணையங்களும் சேர்ந்து இந்த உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம்,2006இன் பல்வேறு விதிகளை கண்காணித்து கட்டுபடுத்துகின்றது இந்தியாவில் எந்தவொரு உணவு தொடர்பான வியாபாரத்தையும் தொடங்குவதற்கு முன் இந்தFSSAI இன்உரிமம் பெறுதல் அல்லது FSSAIஇல் பதிவுசெய்தல் கட்டாயமாகும். அதாவது உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள், உணவகங்கள், சிறிய உணவகங்கள், மளிகை கடைகள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், வீடுகள் சார்ந்த உணவு தொழில்களை செய்பவர்கள், பால்பொருட்கள் உற்பத்தி செய்பவர்கள், உணவு உற்பத்திசெய்பவர்கள், சில்லறை விற்பனையாளர்கள், மின்னனு-சில்லறை விற்பனையாளர்கள் போன்ற உணவு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு உணவு தொடர்பான வணிகங்கள் அனைத்தும் இந்த FSSAI இல் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் இவ்வாறு பதிவுசெய்துகொண்டு இவர்களுக்காகவென ஒதுக்கப்படும் 14 இலக்க பதிவு எண் அல்லது உணவுப் பொதிகளில் அச்சிடப்பட வேண்டிய உணவு உரிம எண் கண்டிப்பாக பெறப்படவேண்டும். FSSAI பதிவு பதிவுசெய்வதால் உண்டாகும் பயன்கள் நிறுவனமானது தன்னுடைய வியாபாரத்தை ஒரு புதிய திசையில் வளரச்செய்து தம்முடைய உரிமையையும் தகுதியையும் நிறுவுவதற்கு இது உதவுகிறது நிறுவனத்தினுடைய பிராண்ட் உணவுப் பொருட்களில் பல்வேறு புதுமைகளை புகுத்தி மேம்படுத்திகொள்ள இது உதவுகிறது இதனடிப்படையில் கிடைக்கும் உணவுப்பொருட்கள் நல்ல தரமான பாதுகாப்பான உணவு எனும் எண்ணம் நுகர்வோர்களுக்கு ஏற்படச்செய்கின்றது மேலும் இந்த உணவானது பாதுகாப்பு மற்றும் தரத்தில் உயர்ந்தது என நுகர்வோர்களிடம் நம்பிக்கை. ஏற்படச் செய்கின்றது அதுமட்டுமல்லாது சர்வதேச அமைப்புகளுடன் இணக்கமாக இருக்கும் உணவு பாதுகாப்பு தரங்களை தொடர்ச்சியாக புதுப்பித்தலுக்கும் மேம்படுத்துவதற்கும் இதில் பதிவுசெய்து கொண்ட நிறுவனத்திற்கு உதவுகின்றது FSSAI உரிமம் தேவைபடுபவர்: 1.இணையத்தின் வாயிலாக அல்லது இணையம் அல்லாது உணவுப்பொருட்களை விற்பணை செய்பவர் 2.அனைத்து உணப்பொருட்களையும் வழங்குபவர்கள் 3.உற்பத்திசெய்தல் ,கட்டுதல் ,விற்பணைசெய்தல்,ஏற்றுமதிசெய்தல் ,இறக்குமதிசெய்தல், சேமித்து வைத்தல் ஆகிய உணவு உற்பத்தி செய்யும் இடத்திலிருந்து நுகர்வோர்களிடம் சென்றடையும் வரையிலான அனைத்து பணிகளையும் கையாளுபவர்கள் 4. அனைத்து பிஸ்கட் போன்ற தயார்நிலை உணவுப்பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் , 5.பால் , பால்பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் 6,உணவுப்பொருட்கள் எடுத்துசெல்லும் போக்குவரத்தாளர்கள் 7ஊறுகாய் , உலர் பழம் தயாரிப்பாளர்கள் , 8.பொருட்களை சேமித்துவைத்திடும்களஞ்சியங்கள் மற்றும் கிடங்குகள் 9.உணவகங்கள் , துரித உணவுகங்கள் FSSAI உரிமங்களின் / பதிவுகளின் பல்வேறு வகைகள்: 1 FSSAIஇன் மத்திய உரிமம் ஒரு நிறுவனத்தின் வருடாந்திர உணவு வியாபார வருமானமானது ரூ. 20 கோடிக்கு மேல் இருந்தால். FSSAIஇன் மத்திய உரிமம் கண்டிப்பாக தேவையாகும். இந்த FSSAIஇன் மத்திய உரிமம் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. மேலும், உணவுப்பொருள் தொடர்பான தொழில் செய்திடும் FBO க்கள் தம்முடைய தலைமை அலுவலகத்திற்கு இந்த மத்திய உரிமத்தினை பெற வேண்டும், அதிலும் ஒன்றிற்குமேற்பட்ட மாநிலங்களில் உணவு வியாபாரம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டிருந்தாலும் நாடு முழுவதும் பல்வேறு அலுவலகங்களை கொண்ட உணவு வணிகத்தில் ஈடுபட்டுக்-கொண்டிருந்தாலும், FSSAIஇன் மத்திய உரிமத்தில் பதிவுசெய்துகொள்ள வேண்டும், பொதுவாக ஒவ்வொரு கடையின் விற்பணை வருமானத்தின் அடிப்படையில் தம்முடைய மாநில அல்லது மத்திய உரிமத்தை பெற வேண்டும். இந்த உரிமத்தின் அதிகபட்ச காலம் 5 ஆண்டுகள் குறைந்தபட்சம் ஒரு வருடமாகும். FSSAI இன் மாநில உரிமம் சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள், சேமிப்பு அலகுகள், பொருள் போக்கு-வரத்தாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், சந்தைப்படுத்துபவர்கள், விநியோகிப்-பாளர்கள் போன்ற உணவுதொடர்பான வியாபாரத்தை செய்பவர்களின் வருடாந்திர உணவு வியாபார வருமானம் ரூ. 12 லட்சத்திற்கும் மேல் ரூ. 20 கோடிக்குள் இருப்பவர்கள் FSSAI இன் மாநில உரிமத்தை பெற வேண்டும். மேலும் நாள் ஒன்றுக்கு 2 டன்களுக்குமேல் உணவு உற்பத்தி திறன் கொண்ட உற்பத்தியாளர்கள், நாள் ஒன்றுக்கு 50000 லிட்டர் மேல் வர்த்தகத்தை கையாளும் பால் பொருட்கள் உற்பத்தியாளர்கள் , 3 நட்சத்திரம் மற்றும் அதற்குமேல் உள்ள தங்கும் விடுதிகள் , உணவுப்பொருட்களை மீண்டும் கட்டுபவர்கள், மறுபெயர் அச்சிட்டு ஒட்டுபவர்கள் , பொழுது போக்குமன்றங்கள், உணவகங்கள் , ஆண்டு வருமானம் எவ்வளவு இருந்தாலும் கேட்டரிங் வர்த்தகம் செய்திடும் அனைத்து நிறுவனங்களும் இந்தFSSAI இன்மாநில உரிமம் பெற வேண்டும் இந்த உரிமத்தின் அதிகபட்ச காலம் 5 ஆண்டுகளும் குறைந்தபட்சம் ஒரு வருடமுமாகும் FSSAI இன் பதிவு சிறியஅளவிலான உணவுஉற்பத்தியாளர்கள், சேமிப்பு அலகுகள், உணவுப்போக்கு-வரத்தாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், சந்தையாளர்கள், விநியோகிப்பாளர்கள் போன்ற உணவு வணிக நிறுவனங்களின் வருடாந்திர உணவு வியாபார வருமாணம் ரூ. 12 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்கள் அனைவரும் இந்த FSSAI இல் பதிவு செய்து கொள்ளவேண்டும்.. பொதுவாக யாராவதொருவர் இவ்வாறான உணவு தொடர்பான ஒரு வியாபாரத்தைத் தொடங்கி, எதிர்பார்க்கப்பட்ட வருவாயை உறுதி செய்யாத நிலையில், இந்த அடிப்படையான FSSAI பதிவில் பதிவு செய்துகொள்வது நல்லது அதன்பின்னர் இந்நிறுவனத்தின் வருடாந்திர வருவாய்ரூ. 12 லட்சம் மேல் உயரும்போது இந்த FSSAI இன் பதிவினை மாநில உரிமமாக மேம்படுத்தி கொள்ளவேண்டும். இந்த உரிமத்தின் அதிகபட்ச காலம் 5 ஆண்டுகளும் குறைந்தபட்சம் ஒருவருடமுமாகும் இந்த FSSAI இல் பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்கள் மத்திய மற்றும் மாநில FSSAI உரிமத்திற்கு 1.உரிமையாளரின் / இயக்குநர்களின் / நிறுவனத்தின் வருமானவரிபதிவுஎண் (PAN) 2.உரிமையாளரின்/ இயக்குநர்களின் (ஆதார்,கடவுச்சீட்டு,வாக்காளர் அட்டைபோன்றவை) 3.உரிமையாளரின் / இயக்குனர்களின் மார்பளவு உருவப்படம் 4.வளாகத்தை வைத்திருப்பதற்கான ஆதாரம்(வாடகை ஒப்பந்தம் /பயன்பாட்டு பட்டியல்) 5.நிறுவனம் உருவாக்கியதற்கான சான்று / கூட்டான்மை ஒப்பந்தம் / MOA & AOA சான்றிதழ் 6.தயாரிக்கப்பட்ட அல்லது பதப்படுத்தப்பட்ட அல்லது சேமித்த உணவுப் பொருட்களின் பட்டியல் 7.உணவு பாதுகாப்பு மேலாண்மை அமைப்பு திட்டம் ஏதேனும் இருந்தால் தயாராக இருக்கும் வர்த்தக உரிமம் 8.நிறுவனத்தின் உற்பத்தி அல்லது கையாளும் உணவு வகைகளின் பட்டியல் 9.நிறுவனத்தின் கையாளபடும் உபகரணங்களின் பட்டியல் FSSAIஇன் அடிப்படை பதிவு செய்வதற்காக 1.உரிமையாளரின் / இயக்குநர்களின் / நிறுவனத்தின் வருமானவரிபதிவுஎண் (PAN) 2.உரிமையாளரின்/இயக்குநர்களின்(ஆதார், கடவுச்சீட்டு,வாக்காளர் அட்டை, போன்றவை) 3.உரிமையாளரின் / இயக்குனர்களின் மார்பளவு உருவப்படம் 4.வளாகத்தை வைத்திருப்பதற்கான ஆதாரம் (வாடகை ஒப்பந்தம் / பயன்பாட்டு பட்டியல்) 5..நிறுவனம் உருவாக்கியதற்கான சான்று / கூட்டான்மை ஒப்பந்தம் / MOA & AOA சான்றிதழ் இவ்வாறான FSSAI இன் பதிவை நாம் இருக்கும் இடத்திலிருந்தவாறே இணையத்தின் வாயிலாக பதிவுசெய்து கொள்ளலாம் அதற்கான வழிமுறை பின்வருமாறு படிமுறை 1: இந்த FSSAI இன் படி பதிவுசெய்வதற்கான அனைத்து தகுதிகளும் தேவையான ஆவணங்களும் இருக்கின்றதாவென முதலில் சரிபார்த்துகொள்க. படிமுறை 2: பின்னர் நமக்கான உரிமம் அல்லது பதிவு வகை எதுவன தேர்ந்தெடுத்திடுக படிமுறை 3:FSSAIஇன் இணைய பக்கத்திற்கு சென்று பயனாளர் பெயர் கடவுச்சொற்களுடன் இந்த உணவு உரிமம் மற்றும் பதிவு முறை அமைவிற்கு உள்நுழைவு செய்க படிமுறை 4: அதன்பின்னர் FSSAI வலைத்தளத்தில் FSSAI உணவு உரிமம்/பதிவு படிவத்தில் தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளீடுசெய்து பூர்த்தி செய்க படிமுறை 5:பின்னர்அவ்விவரங்களுக்கான ஆதார ஆவணங்களை பதிவேற்றம் செய்திடுக. படிமுறை6: பிறகு பதிவுசெய்வதற்கான கட்டணத்தை (மத்திய உரிமம், மாநில உரிமம் அல்லது / பதிவு ஆகியவற்றின்) இணையத்தின் வாயிலாக அல்லது சலான் வழியாக செலுத்துக படிமுறை 7: தொடர்ந்து இதே இணையதளபக்கத்தில் உருவாகும் படிவம் B ஐ அச்சிட்டு அதில் பதிவுசெய்பவர் தம்முடைய கையெழுத்தினை இட்டு அந்த படிவத்தை வருடுதல் (Scan) செய்து அதைப் பதிவேற்றம் செய்திடுக உடன் இந்த விண்ணப்பம் பெறப்பட்டதற்கான ஒப்புதல் கடிதம் கிடைக்கப்பெறும். படிமுறை 8: இணையம் வாயிலாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்தபின்னர்நம்முடைய விண்ணப்பத்தில் திருத்தம் ஏதேனும் செய்ய வேண்டியிருந்தால் அதற்காக அரசானது இந்த படிவத்தை நமக்கு அனுப்பிவைத்திடும் - அவ்வாறு திருத்தம்செய்வதற்காக நமக்கு கிடைக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் நாம் அதனை சரிசெய்து அனுப்பிவைத்திடவேண்டும் அவ்வாறு நாம் அதில் கோரிய-விவரங்களை சரிசெய்து பதிலளிக்காவிட்டால், நம்முடைய FSSAI இன் பதிவு-செய்வதற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படும். படிமுறை 9: பொதுவாக இவ்வாறு நாம் விண்ணப்பிக்கும் நம்முடைய விண்ணப்பத்தை முழுமையாக மீளாய்வு செய்து மாநில அல்லது மத்திய FSSAI உரிமமெனில்30முதல் 50 வேலை நாட்களுக்குள் அரசானது அதற்கான ஒப்புதலை வழங்கும் அடிப்படை பதிவிற்கு மட்டுமெனில் 3முதல்7 வேலை நாட்களுக்குள் அரசானது அதற்கான ஒப்புதலை வழங்கும்(ஒவ்வொரு மாநிலத்திற்கேற்ப இந்த காலஅளவு மாறுபடும்)

திங்கள், 23 டிசம்பர், 2019

வருமானவரி அறிக்கை(ITR)யில் சரக்கு சேவைவரி(GST)யின் விவரங்கள்


2017-18 நிதி ஆண்டின் முதல் மூன்றுமாதங்களுக்கு(அதாவது 01.04.2017 முதல் 30.06.2017 வரை) மத்திய அரசின் உற்பத்தி வரி(Exise Duty)என்றும் மாநில அரசுகளின் மதிப்புகூட்டுவரி (VAT) என்றும் அதற்கு பிறகு ஒன்பது மாதங்களுக்கு (அதாவது 01.07.2017 முதல் 31.03.2018 வரை) சரக்கு சேவைவரி (சசேவ(GST))என்றும் நடைமுறைபடுத்தப்பட்டது அதனை தொடர்ந்து தற்போது நிறுவனங்கள் தங்களுடைய 2017-18 ஆம் ஆண்டிற்கான கணக்குகளை முடித்து தணிக்கை செய்துவருமானவரி அறிக்கைகளையும்(IncomeTax Return (ITR)) தயார்-செய்து சமர்ப்பிக்க தயாராக உள்ளன இந்நிலையில் பொதுவாக 2016-17 ஆம் நிதியாண்டுவரையில் நிறுவனங்கள் தங்களுடைய வருமானவரிவிவர அறிக்கைகளை சமர்ப்பிக்கும் போது Excise Duty ,VATஎன்பன போன்ற மறைமுகவரி விவரங்களுடன் சேர்த்து சமர்ப்பிக்கும் நடைமுறை பின்பற்றப்படுவதில்லை ஆயினும் தற்போது இந்த புதிய(சசேவ(GST)) நடைமுறைபடுத்தப்-பட்ட பின்னர் நிறுவனங்கள் அனைத்தும் தங்களுடைய வருமானவரி அறிக்கையில் கண்டிப்பாக இந்த(சசேவ(GST)) விவரங்களையும் சேர்த்து சமர்ப்பிக்கவேண்டும் எனும் நடைமுறை செயல்படுத்திடபடுகின்றது அதாவது சசேவ (GST) இல் பதிவுசெய்திட்ட வியாபார வருமானமும் தொழிற்முறை (Professional) வருமானமும் பெறுபவர்கள் அனைவரும் தங்களுடைய வருமானவரி அறிக்கையில் கண்டிப்பாக இந்தசசேவ(GST) விவரங்களையும் சேர்த்து சமர்ப்பிக்கவேண்டும் சம்பளம் அல்லது பிற ஆதாரங்களில் இருந்து வருமானம் பெறுபவர்களான ITR 1 . ITR 2 ஆகிய வருமானவரி படிவங்களை சமர்ப்பிப்போர் தங்களுடைய ITRகளுடன் எந்த சசேவ(GST)விவரங்களையும் வழங்க வேண்டியதில்லை. ஆனால்ITR 3 முதல் ITR 6 வரையிலான வருமானவரிபடிவங்களை சமர்ப்பிப்போர் தங்களுடைய வருமானவரி அறிக்கையில் கண்டிப்பாக இந்த சசேவ(GST) விவரங்களையும் சேர்த்து சமர்ப்பிக்கவேண்டும் வருமானவரிபடிவம் ITR 3 சமர்ப்பிப்போர் 1.இவர்கள் தங்களுடைய வருமானவரி படிவத்துடன் சசேவ(GST) நடைமுறை படுத்தப்பட்ட பின்னர் 9 மாத விற்பணையில் விதிக்கப்பட்ட சசேவ(GST)இன் வரிவிவரங்களான CGST, SGST,IGST,UTGST ஆகியவற்றுடன் சேர்த்து சமர்ப்பிக்கவேண்டும் இந்த விவரங்களனைத்தும் இந்நிறுவனங்கள் சசேவஇணையதளத்தில்(GSTportal)ஏற்கனவே சமர்ப்பித்த இது தொடர்பான தங்களுடைய மின்னனு பொறுப்பு பதிவேட்டின் (electronic liability register) விவரங்களுடன் மிகச்சரியாக இருக்கவேண்டும் 2.தொடர்ந்து தாம்கொள்முதல்செய்த பொருட்களுடன் சேர்ந்த CGST, SGST, IGST, UTGST ஆகிய சசேவ(GST)வரியை தாங்கள் செலுத்திடும் சசேவ(GST)வரியில் கழித்துகொண்டு நிகரமாக செலுத்தியிருப்பார்கள் இந்த சசேவ(GST) வரவுதொகையானது இதே சசேவ இணைய தளத்தில் (GST portal) ஏற்கனவே சமர்ப்பித்துள்ள இதுதொடர்பான இவர்களுடைய மின்னனு வரவு பதிவேட்டின் electronic credit ledger) விவரங்களுடன் மிகச்சரியாக இருக்கவேண்டும் 3.அதனோடு வரிசெலுத்துவோர் நிகரமாக தாம் செலுத்தவேண்டிய சசேவ(GST)வரி விவரங்களை தங்களுடைய வருமான வரிவிவரங்களில் தெரிவிக்கவேண்டும் இந்த நிகர சசேவ(GST) வரியானது இவர்களுடைய சசேவஇணையதளத்தில் (GST portal) ஏற்கனவே சமர்ப்பித்துள்ள இதுதொடர்பான நிகரதொகையயாகவுள்ள மின்னனு ரொக்கபேரேட்டுடன் (electronic cash ledger)மிகச்சரியாக இருக்கவேண்டும் 4 மேலும் வரிசெலுத்துவோர் 31.03.2018 அன்று தாம் நிகரமாக செலுத்தவேண்டிய CGST, SGST, IGST, UTGST ஆகிய சசே(GST)வரியை தம்முடைய வருமானவரிவிவர அறிக்கையில் (ITR) குறிப்பிடவேண்டும் 5 மிகமுக்கியமாக வரிசெலுத்துவோர் தாம் அதிகமாக செலுத்திய CGST, SGST, IGST, UTGST ஆகிய சசே(GST) வரியை அரசிடமிருந்து மிகுதி வரவேண்டிய ஆனால் இலாப-நட்ட கணக்கில் வருமானமாக காட்டப்படாதவை ஏதேனும் இருந்தால் அவ்விவரங்களை தனியாக தங்களுடைய வருமானவரிவிவர அறிக்கையில் காண்பிக்கவேண்டும் வருமானவரிபடிவம் ITR 4 சமர்ப்பிப்போர் இவர்கள் தங்களுடைய தங்களுடைய வருமானவரி படிவத்துடன் சசேவ(GST) நடைமுறை படுத்தப்பட்ட தங்களுடைய 9 மாத விற்பணையின் மொத்த விற்பணைவருமான விவரங்களை சமர்ப்பிக்கவேண்டும் இந்த தொகையும் இவர்கள் ஏற்கனவே சமர்ப்பித்த சசேவ(GST)அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையும் மிகச்சரியாக இருக்கவேண்டும் மேலும் இவர்களின் சசேவ(GST) பதிவுஎண்ணை கண்டிப்பாக தங்களுடைய வருமானவரி படிவத்தில் இவர்கள் குறிப்பிடவேண்டும் இது சசேவ(GST)நடைமுறை படுத்தபடும் முதல் ஆண்டாகும், அதனால் சசேவ(GST) இன்-கீழ் வரி செலுத்துவோர் இந்த ஆண்டு பல்வேறு தவறுகளை செய்திருக்கலாம். மேலும் வரி செலுத்துவோர் தங்களுடைய சசேவ(GST)இன் கீழ் இவர்களுடைய கணக்கில் பதிவு-செய்துள்ள கணக்குகளுடன் ஒப்பிடுவதற்கு கடினமான பணியாககூட இருக்கலாம். ஆயினும் வரி செலுத்துவோர் வருமான வரிஅறிக்கையை(ITR) சமர்ப்பிப்பதற்கு முன் சசேவ(GST) ஆண்டறிக்கையுடன் சரியாக இருக்கின்றதாவென மீண்டும் ஒருமுறை சரிபார்த்து கொள்க. தவறு ஏதேனுமிருந்தால் சரிசெய்து கொள்க என பரிந்துரைக்கப்-படுகின்றது

சனி, 21 டிசம்பர், 2019

சிங்கமும் ஏழை அடிமையும்


முற்காலத்தில் பெரிய பெரிய பணக்காரர்களும் அவர்களின் கீழ் ஏராளமானஅடிமைகளும் வாழும் நடைமுறை இருந்துவந்தது ஆனாலும் இப்போதுஇந்த இருபத்தி.யொன்றாம் நூற்றாண்டில் கூட புதியநவீனமான அடிமை சமூகத்தில் அவ்வாறு அடிமையாக தாங்கள் வாழ்கின்றோம் என்றுதெரியாமலேயே நாமெல்லோரும் வாழ்ந்து வருகின்றோம் அவ்வாறான ஒரு முதலாளியிடம் வாழ்ந்துவந்த அடிமையொருவன் தன்னுடைய முதலாளியால் அதிக கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு பொறுக்கமுடியாமல் காட்டிற்கு சென்றால் கொடியவிலங்குகளுக்கு இரையாகி தன்னுடைய உயிரை மாய்த்து கொள்வோம் என ஓடினான் அங்கே காட்டில் ஒருசிங்கமானது இரைதேடுவதற்காக ஓடிடும்போது முள்ஒன்று அதனுடைய காலில் குத்திவிட்டதால் நடக்கமுடியாமல் அதிக வலியுடன் படுத்துகிடந்ததை கண்டான் இந்த அடிமை சரி இந்த சிங்கத்தின் காலில் தைத்த முள்ளை எடுத்துவிடுவோம் அதன்பின்னர் அது நம்மை அடித்து சாப்பிட்டுவிடும் என முடிவுசெய்து அந்த சிங்கத்தின் காலில் தைத்த முள்ளை மிகவும் சிரமமபட்டு எடுத்தபின்னர் அருகிலிருந்த முட்பதரில் வளர்ந்திருந்த பச்சிலையை பறித்து முள்தைத்த சிங்கத்தின் காலில் சாறு பிழிந்து விட்டான் அந்த அடிமை சிறிது நேரத்தில் அந்த சிங்கத்தின் கால் வலி சரியாகிவிட்டது அதனால் அந்த சிங்கமானது அந்த அடிமையை அடித்து தின்றாமல் சென்றுவிட்டது சரி உயிர் இருக்கும் வரையில் வயிற்று பசியையாவது தீர்ப்போம் என அருகிலிருந்த காட்டு பழச்செடிகளிலிருந்து பழங்களை பறித்து தின்று பசியாறினான் இந்நிலையில் அந்த அடிமையினுடை முதலாளியானவன் இவனை எப்படியாவது தேடிகண்டுபிடித்து அழைத்துவருமாறும் மேலும் காட்டில் உள்ள மற்ற விலங்குகளை வேட்டையாடி கொண்டுவருமாறும் தன்னுடைய அடியாட்களை அனுப்பியிருந்தான் அந்த முதலாளியின் அடியாட்கள் காட்டிற்கு வந்து இந்த அடிமையையும் சிங்கம் போன்ற பல்வேறு விலங்குகளையும் சிறைபிடித்து கொண்டு திரும்பினார்கள் திரும்பிய பின்னர் இந்த அடிமை காட்டிற்கு தப்பித்து சென்றதால் அவனுக்கு தக்கதண்டனை வழங்கவேண்டும் என அந்த முதலாளி விரும்பினான் அதனால் தாங்கள் சிறைபிடித்து வந்த சிங்கம் இருக்கும் கூண்டிற்குள் தப்பிசென்ற இந்த அடிமையை உள்ளே தள்ளி கூண்டினை அடைத்து விட்டாான்அந்த முதலாளி என்ன ஆச்சரியம்அந்த கூண்டிலிருந்த சிங்கம் இந்த அடிமையால் அதனுடைய காலில் தைத்திருந்த முள் எடுத்து காத்த சிங்கமாகும் அதனால் அந்த சிங்கமானது மிகவும் நட்புணர்வுடன் அவனுடைய கைகளை நக்கி கொடுத்து கொண்டிருந்தது நீதி: ஒருவருக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் உதவியை நாம் செய்தால் , அதற்கு பிரதிபலணாக நமக்கு உதவக்கூடிய செயல்களின் பலன்களைப் கண்டிப்பாக பெறுவோம்.

வெள்ளி, 20 டிசம்பர், 2019

எந்தவொரு நிறுவனத்திலும்பணியில் சேராமலேயே சுதந்திரமாக பணிபுரிந்து சம்பாதிப்பதற்கு உதவும் இணையதளங்கள்


ஒருசில சுதந்திரமான இணையதளங்கள் எந்தவொருநிறுவனத்திலும் அடிமையாகாமல் சுதந்திரமாக பணிபுரிந்து போதுமான பணத்தினை ஈட்டிடுவதற்காக உதவுகின்றன அதிலும் தேவையானசேவைகளை இணையத்தின் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு இவை வழங்கு கின்றன சுதந்திரமாக பணிபுரிந்து பணம் ஈட்டிடுவதற்கு விரும்பு-வோர்கள் முழுநேரமாகஅல்லது பகுதிநேரமாக தம்முடைய வீ்ட்டிலிருந்தவாறுகூட பணிபுரியவும் அதற்கானஒப்பந்தத்தை மேற்கொள்ளவும் இவை பேருதவியாய் விளங்குகின்றன அவைகளுள் ஒருசில பின்வருமாறு 1.Upwork எனும் தளமானது 12 மில்லியன் பயனாளர்களையும் பல்வேறு வாடிக்கையாளர்களையும் கொண்டு சுதந்திரமாக பணிசெய்திட விரும்பு-வோர்களுக்கு மிகவிரைவாக தேவையான பணிகளை அதாவது ஏறத்தாழ மூன்று மில்லியன் பணிகளை விரைவாக கிடைக்கசெய்கின்றது ஒவ்வொரு செயல்-திட்டத்திற்கும் அல்லது பணிக்கும் எவ்வளவு என தனித்தனியாக தொகையானது நிர்ணயம் செய்யப்பட்டு அதில் நம்முடைய பணிக்கேற்றவாறு அல்லது காலஅளவிற்கு ஏற்றவாறு தொகைவழங்கப்-படுகின்றது எழுதுதல் வடிவமைத்தல்,மெய்நிகர் உதவியாளர்களாக செயல்படுதல் என்பனபோன்ற பல்வேறு பணிவாய்ப்புகள் இதில் கிடைக்கின்றன மேலும் விவரங்களுக்கு https://www.upwork.com/ என்ற இணைய தள பக்கத்திற்குசென்றறிந்து பயன்பெறுக 2. Fiverr என்பது ஒரு சுதந்திரமாக பணிசெய்து போதுமான பணத்தினை ஈட்டிடுவதற்காக உதவிடும் மிகவும்பிரபலமான இணையதளமாகும் இது அனைத்து வகையான பணிகளும் கிடைக்க செய்கின்றது பணிவாய்ப்பு வழங்கிடும் நிறுவனங்களுடன் ஒரு சிறந்த இணைப்பு பாளமாக இது விளங்குகின்றது மேலும் இந்த தளத்தின் வாயிலாக நம்முடைய சேவையை விற்பணை செய்திடமுடியும் இதில் பணிஒன்றிற்கு அடிப்படை விலையாக குறைந்தபட்சம் ஆறுடாலரிலிருந்து துவங்குகின்றது மேலும் விவரங்களுக்கு https://www.fiverr.com/ என்ற இணைய தள பக்கத்திற்குசென்றறிந்து பயன்பெறுக 3.People per Hour என்பது மற்றொரு பிரபலமான வேலைவாய்ப்பினை வழங்கிடும் இணையதளமாகும் இது முக்கியமாக கணினிசெயல்திட்டங்களான developers, SEO, writers, coders ஆகியவற்றில் மட்டும்அதிக பணிவாய்ப்புகளை வழங்குகின்றது இதிலுள்ள WorkStream எனும் கருவியானது நிறுவனங்களையும் பணிபுரிபவர்களையும் இணைத்திடும் பாளமாகவும் பணம் வழங்குதலிலும் நிருவகிப்பதிலும் சிறப்பாக செயல்படுகின்றது அதிக பட்ச வியாபாரம் தொடர்பான பணிக்கு இது உதவுகின்றது நம்முடைய பணியைபற்றிய விவரங்களை கானொளிபடங்களாக இதில் பதிவுசெய்து கொண்டால்நமக்கு பணி-அறிவிப்புகளை நமக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பிவைக்கின்றது அதனை தொடர்ந்து நமக்கான பணியை நாம் பெறவும் தொடர்ந்து பணிக்கான தொகை நமக்கு கிடைக்கவும் இடைமுகமாக செயல்படுகின்றது மேலும் விவரங்களுக்கு https://www.peopleperhour.com/ என்ற இணைய தள பக்கத்திற்குசென்றறிந்து பயன்பெறுக 4. 99 Designs என்பதுவடிவமைப்பாளர்களுக்கான ஒரு மிகச்சிறந்த பணிவாய்ப்பினை வழங்கிடும் இணயதளமாகும் இதில் தற்போது ஒருமில்லியன் வடிவமைப்பாளர்கள் உலகமுழுவதிற்கும் பதிவுசெய்துள்ளனர் பொதுவாக இது அனைத்து வாடிக்கையாளர்-களுடனும் இணைப்பினை ஏற்படுத்தி தங்களின் வடிவமைப்புதிறனை காண்பிக்குமாறு செய்கின்றது வாடிக்கை-யாளர்களும் தங்களுடைய வியாபாரம் தொடர்பான விவரங்களை வழங்கி அதற்கேற்ற வியாபார குறியீடுகள்(லோகோ) போன்றவைகளை வடிவமைத்திடுமாறு கோருகின்றனர் இதன்பின்னர் தேவையான வடிவமைப்பினை பெற்று வியாபார நிறுவனங்களும் திருப்தி கொள்கின்றன வடிவமைப்பாளர்களும் தேவையான பணத்தினை இதன் வாயிலாக ஈட்டுகின்றனர்மேலும் விவரங்களுக்கு https://99designs.com/ என்ற இணைய தள பக்கத்திற்குசென்றறிந்து பயன்பெறுக 5.Guru .என்பது மிகவும் நீண்டகாலமாக வேலைவாய்ப்பினை வழங்குகின்ற மிகவும் பிரபலமான இணையதளமாகும் இது தொழில்நுட்ப வியாபார திட்டங்களுக்கு மட்டும் வேலைவாய்ப்பினை வழங்கிடும் இணையதளமாகும் சுதந்திரமாக பணிசெய்ய விரும்புவோர் தங்களுடைய சுயவிவரங்களை இதில்பதிவுசெய்து கொண்டால் போதும் அதனை பார்வையிடும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தகுதியானவர்களை தெரிவு-செய்து கொள்கின்றனர். இந்த பணியானது ஒருமணிநேரம் ,ஒரு வாரம் ,ஒருமாதம் அல்லது குறிப்பிட்ட பணிமுடிப்பதற்கு மட்டுமென தெரிவுசெய்து கொள்ளமுடியும் மேலும் விவரங்களுக்கு .https://www.guru.com/ என்ற இணைய தள பக்கத்திற்குசென்றறிந்து பயன்பெறுக 6.iFreelance என்பது சுதந்திரமாக பணிபுரிபவர்களுக்கான மற்றொரு பிரபலமான இணைய-தளமாகும் இதுphotography, videography, traditional art, writing, marketing, architecture translation,, engineeringஎன்பனபோன்ற பல்வேறு வகையான சுதந்திரமானபணிகளை வழங்கும் இணையதளமாகும் இதில் மிகஎளிதாக நம்முடைய விவரங்களை பதிவுசெய்து கொண்டு நமக்கான பணியைதேடிபெறஉதவுகி்ன்றது மேலும் விவரங்களுக்கு https://www.ifreelance.com/ என்ற இணைய தள பக்கத்திற்குசென்றறிந்து பயன்பெறுக 7. Freelancerஎன்பது சுதந்திரமாக பணிபுரிபவர்களுக்கான பிரபலமான இணைய-தளமாகும் இதுmarketing, writing, web design, என்பனபோன்ற பல்வேறு வகையான சுதந்திரமான பணிகளை வழங்குமொரு இணையதளமாகும்இதில் வாடிக்கையாளர்கள் பல்வேறு பணப்பரிசுகளின் வாயிலாக தங்களுக்கு தேவையான சுதந்திரமான பணிபுரிபவர்களை தெரிவுசெய்கின்றனர்.மேலும் விவரங்களுக்கு https://www.freelancer.com/ என்ற இணைய தள பக்கத்திற்குசென்றறிந்து பயன்பெறுக

புதன், 18 டிசம்பர், 2019

ஒரு வணிக குறியீட்டினை(Trade Mark)எவ்வாறு பதிவுசெய்வது


ஒரு தனிநபரோ அல்லது வணிக நிறுவனமோ அல்லது பிற சட்டப்படியான நபரோ தமது வணிகப் பொருட்களையோ அல்லது சேவைகளையோ தன்னுடைய வாடிக்கையாளரிடம் தனித்துவமாய் அடையாளப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் ஒரு தனிப்பட்ட சின்னத்தையே அல்லது குறியீட்டையே வணிக குறியீடு என அழைப்பார்கள். இந்த வணிக குறியீடானது நம்முடைய வியாபார பொருட்களை அல்லது சேவைகளை மற்ற வியாபார பொருட்களிலிருந்து அல்லது சேவைகளிலிருந்து வேறுபடுத்தி காண்பிக்கின்றது. இவ்வாறானதொரு வணிக குறியீட்டை நம்முடைய நிறுவனத்தின் பெயரில் பதிவுசெய்வதன் மூலம், நம்முடைய வணிக குறியீட்டில் நம்முடைய பொருளை உற்பத்தி செய்து சந்தைபடுத்தலாம் அல்லது சேவைகளை வழங்கலாம் மேலும் சந்தையில் மற்ற போலியான வணிக குறியீடு களிலிருந்து நம்முடைய வணிக குறியீட்டினுடைய தனித்துவத்தை நம்மால் பாதுகாக்கமுடியும். எந்தவொரு மூன்றாம் நபராவது நம்முடையவணிக குறியீட்டினை சட்டவிரோதமாக பயன்படுத்தினால் உடன் அவர்மீது இந்த வணிக குறியீட்டின் உரிமையாளரான நம்மால் அதற்காக சட்டபடியான நடவடிக்கை எடுக்கமுடியும். இந்த வணிக குறியீட்டினை அதற்குரிய கட்டணத்துடன் வணிக குறியீட்டின்பதிவு அலுவலகத்தில் நாம் பதிவுசெய்துகொண்டால் அந்த பதிவானது பத்தாண்டுகளுக்கு செல்லுபடியாகும் மேலும் தேவையெனில் உரிய கட்டணத்துடன் புதுபித்துக்கொள்ளவேண்டும் பல்வகை பொருட்கள் அல்லது சேவைகளுக்கான வணிக குறியீடுகளை பதிவு செய்வதற்கு ஒரேயொரு விண்ணப்பம் மட்டுமே போதுமானதாகும் இவ்வாறான வசதி வாய்ப்புகளை கொண்ட இந்த வணிக குறியீட்டினை இணையத்தின் வாயிலாகவும் பதிவுசெய்திடமுடியும் அதற்கான படிமுறைகள் பின்வருமாறு: 1. முதலில்நாம் பதிவு செய்ய விரும்பும் வணிககுறியீட்டிற்கான சொல்லை அல்லது சின்னத்தினை (Logo)வேறு யாரும் பயன்படுத்தவில்லை என்பதை உறுதி படுத்திகொள்க இதற்காக. பின்வரும் இணையமுகவரிக்கு சென்று சரிபார்த்து உறுதி படுத்தி கொள்க. https://ipindiaonline.gov.in/tmrpublicsearch/frmmain.aspx/ தொடர்ந்து நம்முடைய வியாபாரம் எந்த வகைகளுக்குள் வருகின்றது என சரிபார்த்திடுக இதற்கான இணையமுகவரி https://ipindiaonline.gov.in/tmrpublicsearch/classfication_goods_service.htm/ஆகும் 2.பின்னர் இந்த இணைய வாயிலின் வழியாக வணிக குறியீட்டினை பதிவுசெய்ய விரும்பும் விண்ணப்பதாரரான உரிமையாளர் அல்லது பதிலாள் அல்லது பதிவுபெற்ற வழக்குரைஞர் ஆகியோர் இந்த இணையபக்கத்திலுள்ள அதற்கான படிவத்தில் தேவையான அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்திடுக. அதனுடன் தம்முடைய மூன்றாம் வகுப்பு(class) இரும கையொப்ப சான்றிதழை(digital Signature Certificate(DSC)) யும் இணைத்து சமர்ப்பித்திடுக. 3.படிமுறை இரண்டில் கூறிய அனைத்தும் சரியாக செயல்படுத்தியபின்னர் இவ்வாறு பதிவுசெய்திடும் விண்ணப்பதாரரால் தன்னுடைய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்திடும்போது வழங்கிய மின்னஞ்சல் முகவரிக்கு இவ்வாறு பதிவுசெய்திடும் செயல் அனைத்தும் சரியாக உள்ளது என்பதை உறுதிபடுத்திடுவதற்கான மின்னஞ்சல் ஒன்று வந்த சேரும் அதில் குறிப்பிட்ட இந்த விண்ணப்பதாரர் வணிக குறியீடு பதிவுசெய்திடும் இணையபக்கத்தில் தம்முடைய கணக்கில் உள்நுழைவுசெய்வதற்கான இணைய இணைப்பொன்றும் இந்த மின்னஞ்சலுடன் கிடைக்கப்பெறும் 4.இவ்வாறு வெற்றிகரமாக தம்முடைய வணிக குறியீட்டினை பதிவுசெய்திடும் நடைமுறைகளை முடித்தபின் தொடர்ந்து பயனாளர் தனக்கு கிடைத்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் வாயிலாக தம்முடைய கணக்கிற்குள் உள்நுழைவு செய்து TM-A எனும் படிவத்தைபூர்த்தி செய்திடுக பின்னர் இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்திலுள்ள Payment எனும் இணைப்பினை தெரிவு செய்து சொடுக்குக அதனை தொடர்ந்து தோன்றிடும் திரையில் NEFTஅல்லது Credit Card போன்றவற்றில் நாம் எந்தவகையில் பதிவு கட்டணத்தினை செலுத்தவிரும்புகின்றோம் என்பதை தெரிவுசெய்து அதன்வாயிலாக பதிவுகட்டணத்தினை செலுத்துக இவ்வாறு சரியாக பதிவுகட்டணத்தினை செலுத்தியவுடன் பதிவுக்கட்டணம் செலுத்தியதற்கான ஏற்புகை சீட்டு ஒன்று உடன் தானாகவே உருவாகிவிடும் 5.ஆயினும் இந்த பதிவுகட்டணம் ஏற்றுகொள்ளப்பட்டதற்கான ஏற்புகை சீட்டினை இரண்டு நாட்கள் கழித்து இதே இணையதளபக்கத்தின் Generate Receipt எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து பெற்றுகொள்க 6.இவ்வாறான வணிக குறியீடு பதிவுசெய்வதற்கான நடைமுறைகள் அனைத்தும் சரியாக பின்பற்றி செயல்படுத்தியிருந்தால் இணையத்தின் வாயிலாக நம்முடைய வணிக குறியீட்டினை பதிவுசெய்வதற்கான நம்முடைய விண்ணப்பமானது வணிக குறியீட்டு பதிவு அலுவலர்களால் சரிபார்க்கப்படும் அனைத்தும் சரியாக இருக்கின்றன என திருப்தியுற்றால் நம்முடைய வணிக குறியீட்டின் பெயரையும் வணிககுறியீட்டையும் வணிக குறியீட்டின்சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி சரியாக இருக்கின்றதாவென வணிக குறியீட்டு பதிவாளரால் மீண்டும் ஒருமுறை சரிபார்க்கப்படும் அதன் பின்னர் இந்தியாவில் வெளியிடப்படும் வணிக குறியீடு காலமுறை இதழில் நம்முடைய வணிக குறியீடு வெளியிடப்படும் அதனோடு குறிப்பிட்ட விண்ணப்பததாரருக்கு இந்த வணிக குறியீட்டினை வழங்குவதில் யாருக்காவது ஆட்சேபணை இருந்தால் அதனை 30நாட்களுக்குள் தெரிவிக்குமாறு வணிக குறியீட்டு பதிவுத்துறையால் அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்படும் அவ்வாறான ஆட்சேபணை எதுவும் முப்பது நாட்களுக்குள் வரவில்லை-யெனில் இந்த வணிக குறியீட்டினை பதிவுசெய்த விண்ணப்பதாரருக்கு அவர் பதிவுசெய்த வணிக குறியீட்டிற்கான சான்றிதழ் ஒன்று வணிக குறியீட்டு பதிவாளரால் வழங்கப்படும் இவ்வாறான செயல்முறைகள் நடைபெற்றுகொண்டிருக்கும்போது விண்ணப்பம் செய்தவர் தம்முடைய பொருட்களுக்கான அல்லது சேவைகளுக்கான வணிக குறியீட்டின் அருகில் TM அல்லது SMஎன்ற குறியீட்டினை பயன்படுத்தி கொள்ளலாம் இங்கு TM என்பது பொருட்களுக்காகவும் SMஎன்பது சேவைகளுக்காகவும் வணிக குறியீட்டிற்காக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது என பொருளாகும் பிறகு சான்றிதழ் கைக்கு கிடைக்கப்பெற்றபின்னர் தமக்கு அனுமதிக்கப்பட்ட வணிக குறியீட்டுடன் ® என்ற குறியீட்டினை பயன்படுத்தி கொள்ளலாம் .இந்த வணிக குறியீட்டினை பதிவுசெய்வதற்கு தேவையான ஆவணங்கள் பின்வருமாறு அ.தனிப்பட்டநபர் எனில் 1. வணிக குறியீட்டின் அல்லது வர்த்தக சொற்றொடரின் நகல் (விரும்பினால் ), 2 விண்ணப்பதாரரானவர் முகவர் அல்லது பதிவுபெற்ற வழக்குரைஞர் எனில் கையொப்பமிடப்பட்ட படிவும் எண் 48, 3. தனிநபரின் அல்லது உரிமையாளரின் அடையாளச்சான்று , 4. தனிநபரின் அல்லது உரிமையாளரின் முகவரி ச்சான்று ஆகியவைகளாகும் ஆ.கூட்டாண்மைநிறுவனம்அல்லதுவரையறுக்கப்பட்டகூட்டாண்மைநிறுவனம் அல்லது நிறுமம் எனில் 1. வணிக குறியீட்டின் அல்லது வர்த்தக சொற்றொடரின் நகல் (விரும்பினால் ), 2 கையொப்பமிடப்பட்ட படிவும் எண் 48, .3. சிறுநிறுவனம் எனில் பணிஆதார பதிவுசான்றிதழ், 4 நிறுமபதிவுசான்றிதழ் அல்லது கூட்டாண்மை பதிவுசான்றிதழ் அல்லது கூட்டாண்மை ஒப்பந்தம், 5.கையொப்பமிடுபவரின் அடையாளச்சான்று, 6 கையொப்பமிடுபவரின் முகவரிச்சான்று 7. நிறுமம் எனில் பதிவுசெய்வதற்கான இயக்குநர்களின் குழுவின், தீர்மானம் ஆகியவைகளாகும்

சனி, 14 டிசம்பர், 2019

எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்


முன்னொரு காலத்தில், காட்டில் வாழும் சிங்கம் ஒன்று மிகவும் வயதாகி, தனது உணவுக்காக அங்கிங்கும் என அலைந்து திரிந்து எந்தவொரு விலங்கையும் தன்னுடைய இரையாக கொன்று தின்ன முடியாத நிலை ஏற்பட்டது . எனவே, அது தனக்குத்தானே , என் வயிற்று பசியை தனிப்பதற்காக நான் ஏதாவது செய்ய வேண்டும், இல்லையென்றால் நான் பட்டினியால் இறந்துவிடுவேன். என்னசெய்வது என யோசித்துக்கொண்டே இருந்தது, கடைசியில் ஒரு அருமையான யோசனை ஒன்றினை அடைந்தது. அதாவது அந்த சிங்கமானது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக நடித்து கொண்டு குகையில் படுத்துக்கொள்ள முடிவு செய்தது , பொதுவாக இவ்வாறு நமக்கு அருகில் இருப்பவர்கள் யாருக்காவது உடல்நிலைசரியில்லாமல் படுத்த படுக்கையாக கிடக்கின்றனர் எனில் உடன் சுற்றுபுறத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஒருவர் பின்ஒருவராக அவர்களுடை வீட்டில் அவர்களுக்கு அருகில் சென்று நலம் விசாரிப்பதுநம்முடைய வழக்கமல்லவா அதேபோன்று மற்ற விலங்குகள் தன்னுடைய உடல்நிலை குறித்து விசாரிக்க எந்த விலங்காவது குகைக்குள் வந்து சேரும் நாம் உடன் அதனை அடித்து தின்று நம்முடைய வயிற்று பசியை ஆற்றிகொள்ளலாம் என முடிவுசெய்து பொல்லாத திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்ததுஅதனை தொடர்ந்து அந்த சிங்கத்திற்கான நலம் விரும்பிகள் பல அந்த சிங்கத்தினை நலம்விசாரிக்க குகைக்குள் சென்றவுடன் அவைகள் கொல்லப்பட்டு அந்த சிங்கத்திற்கு நல்ல இரையாகிவிட்டன. ஒரு நாள், ஒரு நரி அந்த சிங்கத்தைப் பார்க்க வந்தது. நரிகள் இயற்கையாகவே புத்திசாலித்தனமாக இருப்பதால், அந்நரி குகையின் வாயில் நின்று பார்த்தது. அதனுடைய ஆறாவது உணர்வு வேலை செய்தது மேலும் அது யதார்த்தநிலையை அறிந்து கொண்டது . எனவே, அது வெளியில் இருந்துகொண்டே சிங்கத்திடம், “ஐயா, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் உடல்நிலை இப்போது பரவாயில்லையா என நலன் விசாரித்தது” அதற்கு சிங்கம் , “எனக்கு உடல்நிலை சரியில்லை. நடக்கவே முடியவில்ல ஆனால் நீ ஏன் உள்ளே என்னுடைய அருகில்வந்து நலன்விசாரிக்ககூடாது? ” என பதிலளித்தது அதனை தொடர்ந்து நரி , “நானும் குகைக்குள் உங்களுக்கு அருகில் வந்து நலன்விசாரிக்க விரும்புகிறேன், ஐயா! ஆனால் உள்வரும் வழித்தடத்தை பார்த்தவுடன், குகைக்குச் வரும் பாதையில் உள்ளே அனைவரும் வந்ததற்கான கால் தடம் மட்டுமே காணப்படுகின்றன ஆனால் அவை வெளியே திரும்பி வந்ததற்கான காலடி எதுவும் காணவில்லை ஐயா அதனால் அவ்வாறாக , திரும்பி வெளியேறமுடியாமல் உள்ளே மட்டும் வருவதற்கு நான் ஒன்றும் முட்டாள்தனமாக இருக்கமாட்டேன். என கூறி , நரி மற்ற விலங்குகளை எச்சரிக்கச் சென்றுவிட்டது. நீதி: எந்தவொரு சூழ்நிலையிலும் அடுத்த படிமுறையை பின்பற்றுவதற்கு முன் அதனால் நமக்கு பாதிப்பு ஏதேனும் ஏற்படுமாவென எப்போதும் எச்சரிக்கையாக கவணமுடன் செயல்படுக

புதன், 11 டிசம்பர், 2019

கடனளிப்பு கடிதம் என்றால் என்ன


LC. என சுருக்கமாக அழைக்கப்படும் கடனளிப்பு கடிதங்களானவை (LETTERS OF CREDIT) வியாபார நடவடிக்கைகளின் அடிப்படையான உயிரோட்டமாக மிகமுக்கிய பங்காற்றுகின்றன இவ்வாறான கடனளிப்பு கடிதங்களை வியாபார நிறுவனங்கள் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் பின்வருமாறு 1.இந்த கடனளிப்புகடிதமானது ஒரு ஒளிவு மறைவற்ற பாதுகாப்பான ஆவணமாகும் 2 .பொதுவாக விற்பணைசெய்திடும் பொருட்களை அல்லது சேவைகளை வழங்குவதிலிருந்து கொள்முதல் செய்பவரிடமிருந்து அதற்கான தொகையானது விற்பனையாளருக்கு கிடைத்திடும் வரை பல்வேறு நிலைகள்உள்ளன அதனால் விற்பணையாளருக்கு தன்னுடைய உற்பத்தி பொருளை விற்பணைசெய்திடும்போது அதற்கான விற்பணைதொகை கிடைப்பதற்கு அதிக காலஅவகாசம் ஏற்படுகின்றது. அதனை தவிர்த்து உடனடியாக விற்பணை தொகை கிடைப்பதற்கு ஏதுவாக இந்த கடனளிப்புகடிதம் அமைகின்றது. 3.பொருட்களை அல்லது சேவைகளை வழங்கிய நாளிலிருந்து அதற்கான தொகையை பயனாளிகளிடமிருந்து பெறுகின்றநாள்வரை விற்பணையாளருக்கு கண்டிப்பாக விற்பணைத்தொகை கிடைக்கும் என்பதற்கான உறுதிமொழியாக இந்த கடனளிப்பு கடிதமானது பயன்படுகின்றது 4.விற்பணையாளர் இந்த கடனளிப்புகடிதங்களை பெற்றதன்அடிப்படையில் பொருளிற்கான தொகை பெற்றதை போன்று கருதி உடன் பொருளை அல்லது சேவையை வழங்க துவங்கலாம் 5.இந்த கடனளிப்பு கடிதம் கிடைக்கப்பெற்றவர்அதன் இறுதி நாள்வரை காத்திருக்காமல் உடனடியாக நடைமுறை மூலதனம் தேவையெனில் வங்கியில் இதனை சமர்ப்பித்து தொகையை பெற்றுகொள்ளலாம் 6.இந்த கடனளிப்பு கடிதமானது பொருட்களை அல்லது சேவையை பெறுபவரின் நம்பகத்தன்மையை அதற்கான தொகைவழங்குவதற்கான திறனை உறுதி படுத்திடுகின்றது 7 கொள்முதல் செய்பவரின் நம்பகத்தன்மையை சரிபார்ப்பதற்காகவென தனியாக ஆய்வுபணிஎதுவும் செய்து உறுதிபடுத்தி கொள்ளவேண்டும் என்றில்லாமல் விற்பணையாளர் தன்னுடைய பொருட்களை அல்லது சேவையை வழங்குவதில் மட்டும் கவணம் செலுத்தினால் போதும் 8.விண்ணப்பதாரரின் (கொள்முதல் செய்பவரின்)ஏற்புகை இல்லாமல் இந்த கடனளிப்பு கடிதத்தில் திருத்தம் எதுவும் செய்யமுடியாது 9. பொருட்களை அனுப்பிவைத்தவுடன் அதனை கொண்டுசெல்லும் வழியில் பொருட்கள் காணாமல் போனாலும் அல்லது இழந்துபோனாலும் அந்த பொருளிற்கான தொகை ஏற்கனவே கிடைத்துவிட்டது என விற்பணையாளர் கவலைப்படாமல் நிம்மதியாக தன்னுடைய வழக்கமான பணியை தொடரலாம் 10 இருநாடுகளுக்கிடையே பொருட்களை கொண்டுசெல்லும்போது ஏற்படும் இழப்பினாலும் அதற்கான தொகை கிடைக்காது என அஞ்சத்தேவையில்லை ஓரே நாட்டில் மட்டுமல்லாது இருவேறுநாடு-களுக்கிடையே கூட இந்த கடனளிப்புகடிதத்தினை பயன்படுத்தி பொருட்களின் விற்பணை அல்லது கொள்முதல் செய்வதற்காக பயன்படுத்தி கொள்ளமுடியும் இவ்வாறானவசதி வாய்புகளை கொண்ட கடனளிப்புகடிதங்களை பயன்படுத்தி கொள்வதற்கான நடைமுறைகள் பின்வருமாறு முதலில் கொள்முதல் செய்பவர் தான் குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து பொருட்களை கொள்முதல் செய்வதற்காக கடனளிப்புகடிதம் ஒன்றினை உருவாக்கி தன்னுடைய ஏற்பகை வங்கியின்கிளைக்கு அதனை ஏற்றுஉறுதிபடுத்திடுமாறு கோருவார் அதனை தொடர்ந்து கடனளிப்புகடிதத்தினை ஏற்கும் வங்கியின் கிளையானது அந்த நிறுவனத்தின் கடந்தகால நிதிநடவடிக்கையின் நம்பகத்தன்மையின் அடிப்படையில் கடனளிப்பு கடிதத்தினை ஏற்றுக்கொள்வதாக கையொப்பிட்டு வழங்குவர் அதன்பின்னர் இந்த கடனளிப்பு கடிதமானது விற்பணையாளருக்கு கொள்முதல் செய்பவரால் அனுப்பிவைக்கப்படும் பின்னர் உடனடியாக தன்னுடைய நிறுவனத்தின் நடைமுறை மூலதனத்தை மேம்படுத்திடும்பொருட்டு கழிவுத்தொகைபோக மிகுதி நிகரமாக தொகை-பெறுவதற்காக விற்பணையாளர் அல்லது பயனாளர் தனக்கு கிடைத்த இந்த கடனளிப்புகடிதத்தினை நியமனம் செய்யப்பட்ட தன்னுடைய வங்கிகிளையில் சமர்ப்பிப்பார் (கடனளிப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு சமர்ப்பிக்கவேண்டிய நாளிற்கு முன் ) அதன்பின்னர் பயனாளரால் சமர்ப்பிக்கப்பட்ட கடனளிப்பு கடிதமானது அதற்கான நிபந்தனைகளுக்கு இணங்க சரியாக எழுதபட்டுள்ளதாவென நியமனம் செய்யப்பட்ட வங்கிகிளையானது பரிசோதித்து சரிபார்த்திடும் பின்னர் அவ்வாறு பரிசோதித்திடும்போது அந்த கடனளிப்பு கடிதத்தில் குறைகள் அல்லது முரண்பாடுகள் ஏதேனும் இருந்தால், உடன் நியமனம் செய்யப்பட்ட வங்கிகிளையானது அதனை சரிசெய்து மீண்டும் சமர்ப்பிக்குமாறு பயனாளருக்கு அந்த கடனளிப்புக்கடித்தத்தை திருப்பிவிடும் அதன்பின்னர் அந்த கடனளிப்புகடிதத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து மீண்டும் அனுப்பிடுமாறு கொள்முதல் செய்பவருக்கு பயனாளரால்திரும்ப அனுப்பபடும் இவ்வாறு நியமனவங்கிகிளையால் சுட்டிகாட்டப்பட்ட குறைகளை கொள்முதல் செய்பவர்சரிசெய்து பயனாளருக்கு( விற்பணையாளர்) திரும்ப அனுப்பப்பட்டு மீண்டும் நியமனவங்கி-கிளையில் சமர்ப்பிக்கப்படும் பின்னர் நியமனவங்கிகிளையானது தன்னிடம்சமர்ப்பித்த கடனளிப்புகடிதத்தினை அந்த தொகையை வழங்குமாறு அதனைஏற்றுகொண்ட வங்கிகிளைக்கு அனுப்பி வைத்திடும் அதன்பின்னர் ஏற்றகொண்ட வங்கிகிளையானது அந்த கடனளிப்புகடிதத்தில் அனைத்து நிபந்தனைகளும்சரியாக இருக்கின்றனவா என மீண்டும் ஒருமுறை சரிபார்த்து நியமன வங்கிகிளைக்கு ஏற்றுகொண்ட வங்கிகிளையானது குறிப்பிட்டதொகையை வழங்கிடும் . அதனை தொடர்ந்து நியமனவங்கியானது கழிவுத்தொகை போக மிகுதி நிகரத்-தொகையை மட்டும் விற்பணயாளரான பயனாளிக்கு வழங்கிடும் பிறகு இறுதியாக விண்ணப்பதாரர் தான்ஏற்றுகொண்ட இறுதிநாளின்போது கடனளிப்பு கடிதத்திற்கான முழுத்தொகையை ஏற்றுகொண்ட வங்கிகிளைக்கு செலுத்தி தம்முடைய கடனை தீர்வுசெய்திடுவார் இவ்வாறான நடைமுறைகளுக்கிடையில் விற்பனையாளர்கள் கடனளிப்புகடிதத்தின் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, குறிப்பிட்ட பொருட்களை அல்லது சேவைகளை வழங்கிடும் நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு முடிவுபெறும்

வெள்ளி, 6 டிசம்பர், 2019

தவறுகளிலிருந்து கற்றல்


தாமஸ் ஆல்வா எடிசன் எனும் அறிவியல் அறிஞர் தற்போது நாமெல்லோரும் பயன்படுத்திவரும் மின்சாரத்தில் எரிகின்ற ஒளி விளக்கைத் கண்டுபிடிப்பதற்காக வெவ்வேறு பொருட்களில் மின்சாரத்தினை பாய்ச்சி அதனை தற்போது நாம் பயன்படுத்திவருகின்ற வெளிச்சம் தருகின்ற ஒளிரும் விளக்கை போன்று எரியச்செய்திடுமாறு இரண்டாயிரம்முறை மிககடுமையாக முயற்சித்தார். ஆயினும் அவை எதுவும் திருப்திகரமாக மின்சாரத்தில் எரிந்து ஒளிரவில்லை அவ்வாறான நிலையில் , அவரது உதவியாளர் , “ஐயா நாம் இதுவரை செய்த பணிகள் அனைத்தும் வீண். ஏறத்தாழ இரண்டாயிரம் வகையான பொருட்களில் நாம் முயற்சிசெய்தும் ஒன்றுகூட நமக்கு வெற்றிதரவில்லை,மேலும் இவ்வாறு மின்சாரத்தை சரியாகப் பயன்படுத்தி ஒளிரும் விளக்கை எரியச்செய்ய முடியுமா என்று உறுதியாக தெரியவில்லை. அதனால் இதோடு இந்த ஆய்வினை விடுத்து வேறு ஏதேனும் பயனுள்ள பணிகளை செய்யலாம் ” என கோரினார் அதனை தொடர்ந்து எடிசன் , “ஓ, நாம் வெகுதூரம் பயனித்து வந்துவிட்டோம், இதுவரையில் நிறைய கற்றுக்கொண்டோம். அதாவது மின்சாரத்தில் எரியும் ஒரு நல்ல மின் விளக்கை உருவாக்க நம்மால் பயன்படுத்த முடியாத இரண்டாயிரம் கூறுகள் இருப்பதை நாம் அறிந்தகொண்டோம். அவைகளை விடுத்து வேறு புதியவழிமுறைகளில் முயன்றால் வெற்றி பெற்றிடுவோம் ” என மிகவும் நம்பிக்கையுடன் பதிலளித்தார் என்ன ஆச்சரியம் அடுத்த ஒருசில நாட்களில் டங்ஸ்டன்எனும் இழையானது மின்சாரத்தில் எரிந்து நன்கு ஒளி உமிழ்வதை கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்தார் நீதி: நம்முடைய தவறுகளையே வெற்றிபடிக்கல்லாக மாற்றிகொண்டு அயராது முயற்சிசெய்தால் அவைகளிலிருந்து புதியஏதேனும் ஒன்றை சாதிக்கமுடியும்

புதன், 4 டிசம்பர், 2019

நிறுமங்களின் அனைத்து பொதுபங்களும் இனி தாராளமயமாக்கல் வடிவத்தில்(Demat) மட்டுமே கையாளபடும்


பொதுபங்குகளின் வெளியீடுகளின் மூலம் பொதுமக்களிடமிருந்து பங்குத்தொகை பெற்று பங்குசந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்களும் 2.10.2018 முதல் மேலும் புதிய பங்குகளை வெளியிடுவதாக இருந்தாலும் பங்குதாரர்களுக்கிடையே பங்குகளை பரிமாற்றம் செய்வதாக இருந்தாலும் தாராளமயமாக்கல் வடிவம்(Demat) எனும் புதிய வழிமுறையில் மட்டுமே செய்யவேண்டும் என நிறுமங்களின் விவகாரத்துறை அமைச்சகம் தனது சுற்றறிக்கையின் வாயிலாக உத்திரவிட்டுள்ளது அதாவது இதுவரையில் பங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே தாராளமயமாக்கல் வடிவத்தில்(Demat) இருந்துவந்ததற்கு பதிலாக அனைத்து நிறுவனங்களும் மேலும்புதியதாக வெளியிடும் பங்களையும் பங்கு பரிமாற்றங்-களையும் தாராளமயமாக்கல் வடிவத்தில்(Demat) மட்டுமே 2.10.2018 முதல் செயற்படுத்தவேண்டும் என உத்திரவிட்டுள்ளது நிறுவனங்களில் பங்குபரிமாற்ற நடவடிக்கைகளில் மேலும் வெளிப்படைத்தன்மை,, முதலீட்டாளர்களின் பாதுகாப்பு நிறுமங்களின் நிருவாகத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மேலும் இதன்பொருட்டு நிறுமங்களின் விதிகளும் திருத்தப்பட்டிருக்கின்றன இதன்வாயிலாக கிடைக்கும் முக்கிய நன்மைகள் பின்வருமாறு 1பங்குசான்றிதழ்கள் காணாமல் போதல், திருட்டுபோதல், அழிந்துபோதல், மோசடியாக அபகரித்தல் என்பனபோன்ற அபாயங்களை அறவே அகற்றப்படும் 2. வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல், பினாமி பங்குதாரர் நடவடிக்கைகள் , நிறுமனங்கள் தம்முடைய பங்குதாரர்களுக்கு முன் தேதியிடப்பட்டு பங்குகளை வழங்குதல் என்பனபோன்ற பல்வேறு தவறான நடைமுறைகளை தடுக்கும் வகையில் நிறுவனங்களின் நிருவாக அமைப்புமுறை இதன்மூலம்மேம்படுத்தப்படும் 3.பங்குகளின் பரிமாற்றத்தின்போது முத்திரை வரி செலுத்துவதில் இருந்து விலக்கு. அளிக்கப்படும் 4. பங்குகளின் பரிமாற்றம்செய்தல் ,அடைமானம் செய்தல் போன்ற நடவடிக்கைகளை எளிமையாக்கபடும் ஆகியனவாகும் பொதுமக்களுக்காக பங்குகளை வெளியிடுவதற்கான விதிமுறைகள் 2014 விதிமுறை 9 க்குப் பின்,"9A. எனும் திருத்தம் செய்வதன் வாயிலாக இந்த புதிய நடைமுறை 2.10 .2018 நடைமுறைக்கு வருகின்றது அதனை தொடர்ந்து 2.10.108 முதல்எந்தவொரு பட்டியலிடப்படாத பொது நிறுவனமும் பொதுபங்குகளை இனி வெளியிடுவதாக இருந்தால் தாராளமயமாக்கல் வடிவத்தில்(Demat) மட்டுமே வெளியிடப்படவேண்டும் இதனை தொடர்ந்து பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்கள் அனைத்தும் வைப்புத்தொகைச் சட்டம், 1996 ன் விதிமுறைகளுக்கு இணங்க தாம் இதுவரை வெளியிடுதல் செய்து தற்போது நடப்பு பங்குகளை வைத்திருக்கும் அனைத்து பங்குதாரர்களின் பங்கு பத்திரங்களின் வகைக்கேற்ப உலகளாவிய பொதுப்பங்குகளின் சுட்டிஎண் (International security Identification Number (ISIN))ஒன்றினை ஒதுக்கீடு செய்து அந்த தகவலை பங்குதாரர்களுக்கு அறிவிப்பு செய்திடவேண்டும் மேலும் புதிய பங்குகளை வெளியிடுதல் அல்லது மிகைஊதிய பங்குகளை(Bonus Share) வழங்குதல் அல்லது உரிமை பங்குகள் (Right Share)வழங்குதல் ஆகியவற்றின் எந்தவொரு பங்குபத்திரமும் வழங்குவதற்கு, முன்னர், அதன் விளம்பரதாரர்கள், இயக்குநர்கள், முக்கிய மேலாளர்கள் ஆகியோரின் பங்குபத்திரங்கள் அனைத்தையும் நிறுமமானது தாராளமயமாக்கல் வடிவத்திற்கு(Demat) மாற்றிடவேண்டும் பத்திரங்கள் மற்றும் பங்கு பரிவர்த்தனை வாரிய (டெபாசிட்டரிகள் மற்றும் பங்கேற்பாளர்கள்) விதிமுறை 55Aஇன் கீழ் தணிக்கை அறிக்கையை ஒவ்வொரு ஆறுமாதத்திற்கு ஒருமுறை தங்களுக்கு அருகேயுள்ள நிறுமங்களின் பதிவாளருக்கு சமர்ப்பிக்கவேண்டும் பங்குசந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்களின் பங்குகளை வைத்திருக்கும் எந்தவொரு நபரும் தன்னுடைய பங்குகளை மற்றவர்களுக்கு பரிமாற்றம் செய்யவிரும்பினால் முதலில் தான் வைத்திருக்கும் பங்குகளுக்கான பத்திரத்தை தாராளமயமாக்கல் வடிவத்தில்(Demat)உருமாற்றம் செய்தபின்னரே மற்றவர்களுக்கு பங்குகளை பரிமாற்றம் செய்திடும் பணியை மேற்கொள்ளமுடியும் இத்தகைய தாராளமயமாக்கல் வடிவம்(Demat) செய்வதால் எழும் எந்தவொரு குறைபாடுகளையும் அல்லது பங்குசந்தையில் பட்டியலிடப்படாத பொது நிறுவனங்களின் பங்குகளை வைத்திருக்கும் தனிநபர்களுக்கு குறைகள் ஏதேனும் இருந்தாலும் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதிய ஆணையத்தினை (The Investor Education and protection Fund Authority( IEPF)) அனுகிதீர்வு செய்து கொள்ளலாம்.

சனி, 30 நவம்பர், 2019

தந்தையும் அவருடைய மகன்களும்


ஒரு தந்தைஅவருடைய இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வந்தார் ஆனாலும் அந்த குடும்பத்தில் எப்போதும் சண்டையும் சச்சரவுமாக இருந்துவந்தது, அதாவது அவருடைய இரண்டு மகன்களும் தங்களுக்குள் தொடர்ந்து எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களின் சச்சரவுகளுக்கு தன்னுடைய தனது அறிவுரைகளால் எவ்வளவு கடுமையாக முயன்றும் தீர்வு காணமுடியவில்லை சரிஎன இறுதியாகஇன்னும் ஒருமுறை மட்டும் முயற்சி செய்திடுவோம் என , ஒற்றுமையின் நன்மையை அவ்விருவரும் தெரிந்து கொள்வதற்கு ஒரு நடைமுறை விளக்கத்தை வழங்க அவர் தீர்மானித்தார்.அதன்பின்னர் ஒரு நாள் தன் மகன்களிடம் தங்களுடைய வீட்டில் அடுப்பு எரிப்பதற்கு விறகு ஒன்றுகூடஇல்லை அதனால் அருகிலிருக்கும் காட்டிற்கு சென்று ஆளுக்கு ஒரு கட்டு சுள்ளி குச்சிகளைக் சேகரித்து கொண்டு வரச் சொன்னார். அவ்விருவரும் அவ்வாறு கொண்டுவந்தார்கள் அதனை தொடர்ந்து அவ்விருவரிடமும் அந்த சுள்ளிகள் மிகநீளமாக உள்ளன அடுப்பில் வைத்து எரிப்பதற்கு ஏதுவாகசிறு சிறு துண்டுகளாக உடைத்து கொடுக்குமாறும் ஆனால் விறகுகள் கட்டப்பட்ட கட்டினை மட்டும் அவிழ்க்காமல் அவைகளை உடைத்து சிறுசிறு துண்டுகளாக ஆக்கிடுமாறு கோரினார் அவர்கள் இருவரும் தாங்கள் கொண்டுவந்த விறகு கட்டுகளை அவிழ்க்காமல் சிறு சிறுதுண்டுகளாக உடைத்திட முழு பலத்தோடு முயற்சித்தார்கள், ஆனாலும் அவர்களால் அவ்வாறு உடைத்திட முடியவில்லை. பரவாயில்லை பிள்ளைகளே நீங்கள் கொண்டுவந்த விறகுகளின் கட்டினை அவிழ்த்துவிட்டு சிறு சிறுதுண்டுகளாக உடைத்திட முயற்சி செய்யுங்களேன் என ஆலோசனை கூறினார் என்ன ஆச்சரியம் அவ்விரும் தங்களுடைய விறகுகட்டுகளை அவிழ்த்த பின்னர் தனித்தனியாக குச்சிகளை உடைத்திடமுயன்றபோது எளிதாக உடைக்கமுடிந்தது விரைவில் தாங்கள் கொண்டுவந்த கட்டுகளிலிருந்த குச்சிகள் முழுவதையும் சிறு சிறுதுண்டுகளாக உடைத்து முடித்து விட்டார்கள் அதன்பின்னர் தன்னுடைய மகன்கள்இருவரிடமும் “பிள்ளைகளே பார்த்தீர்களா சிறு சுள்ளிகுச்சிகள் ஒன்றாக கட்டுகளாக இருந்தபோது என்னதான் கடுமையாக முயன்றாலும் உங்களால்உடைத்திட முடியவில்லை் ஆனால் அந்த கட்டினை அவிழ்த்தவுடன் எவ்வளவு எளிதாக உடைக்க முடிந்தது அதுபோன்று நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்தால் நன்கு பலமாக இருந்து உங்களுடைய வாழ்வில் வெற்றி பெறுவீர்கள் ஒற்றுமையில்லாமல் பிளவுபட்டிருந்தால் இந்த குச்சிகளைப் போலநீங்கள் வாழ்வில் வெற்றிபெற முடியாது என அறிவுரை கூறினார் நீதி ஒற்றுமையே நல்ல வலிமையாகும்

புதன், 27 நவம்பர், 2019

புதிய சரக்கு சேவைவரியின் கீழான மின்வழிபட்டியல் எனும் வசதி


மின்வழிபட்டியல்( E-wayBill) என்பது சரக்கு சேவை வரியின் கீழ் பொருளின் மதிப்பு ரூ.50000/-இற்கு மேல் இருந்தால் கண்டிப்பாக பொருந்தும் அதற்கு குறைவாக இருந்தால் விருப்பபட்டால் மட்டும் பயன்படுத்தி கொள்க பொருள் வழங்குபவர் இருக்கும் இடத்திற்கும் பொருளினை பெறுபவரின் இடத்திற்கும் இடைபட்டதூரம் பத்துகிலோமீட்டர் வரையிலும் தேவையில்லை அவ்வாறே இருவரும் ஒருமாநிலமென்றாலும் தேவையில்லை விற்பணையாகும் அனைத்து பொருட்களும் இந்த மின்வழிபட்டியல் விற்பணைபட்டியல்அல்லது பொருள்வழங்கும் பட்டியலுடன் மட்டுமே எடுத்து செல்லவேண்டும் இந்த மின்வழிபட்டியலானது பகுதி அ (Part A) ,பகுதி ஆ (Part B) ஆகிய இருபகுதிகளைகொண்டது பகுதி அ (Part A) இல் பெறுபவரின் GSTIN எண், வழங்குவதற்காக கொண்டுசெல்லும் இடத்தின் பெயர்(Place of delivery), விற்பணை பட்டியலின் அல்லது பொருள் வழங்கும் பட்டியலின் எண் (Invoice/DC No), விற்பணை பட்டியலின் அல்லது பொருள் வழங்கும் பட்டியலின் நாள் (Invoice/DC date), பொருளின் மதிப்பு (Value of goods), அந்த பொருளிற்கான HSN குறியீட்டு எண் (Codeno) வாகணத்தின் ஆவணஎண் (Transporter Document No) ஆகிய விவரங்கள் உள்ளடங்கியிருக்கும் பகுதி ஆ (Part B) இல் இந்த பொருளை எடுத்துசெல்லும் வாகணத்தின் எண் (vehicle number) விவரம் குறிக்கப்பட்டிருக்கவேண்டும் இந்த மின்வழிபட்டியலானது தூரம் நூறு கிமீட்டர் எனில் ஒருநாள் செயலில் இருக்கும் அதற்குமேல் ஒவ்வொரு நூறு கிமீட்டருக்கும் ஒவ்வொருநாள் கூட்டியவாறு செயலில் இருக்கும் ஒவ்வொரு விற்பணைபட்டியலிற்கும் ஒவ்வொரு மின்வழிபட்டியல் இருக்கவேண்டும் அதாவது ஒரு வாகணத்தில் எத்தனை( பொருட்கள் அன்று) விற்பணை பட்டியலிற்கான பொருட்கள் இருக்கின்றதோ அத்தனை மின்வழிபட்டியல் இருக்கவேண்டும் மாநிலங்களுக்கு இடையேயான பொருட்களின் விற்பணைக்கு 1.02. 2018 முதல் கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும் மாநிலத்திற்குள் அல்லது மாநிலங்களுக்கு இடையே என அனைத்து பொருள் போக்குவரத்திற்கும் எனில் 1.06.2018முதல் கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும் இணையதளத்தில் GST INV-1 என்ற படிவத்திற்கான விவரங்களை வழங்கினால் EWB-01எனும் இந்தமின்வழிபட்டியல் தானாகவே உருவாக்கப்பட்டு நாம் அச்சிடுவதற்கு தயாராகி விடும் ஒருங்கிணைந்த பட்டியலே EWB-01ஆகும் இடையில் வாகணத்தினை நிறுத்தி ஆய்வுசெய்திடும்போது EWB-03என்ற பட்டியிலின்பகுதி அவில் பதிவாகும் அரைமணிநேரத்திற்குமேல் வாகணம் தடைபடுமானால் உடன் வாகணஉரிமையாளர் EWB-04 என்ற படிவத்தில் தங்களுடைய விவரங்களை சமர்ப்பிக்கவேண்டும்

சனி, 23 நவம்பர், 2019

தீங்கு விளைவிப்ப வர்களிடமிருந்து தூரமாக விலகி செல்க


மிகவும் அதிக குளிரான பனிகாலத்தில் ஒருநாள் அதிகாலையில் விவசாயி ஒருவர் தன்னுடைய வயல் வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அவருடைய நிலத்தில் தரையெல்லாம் பனிக்கட்டியால் உறைந்த நிலையில் பாம்பு ஒன்று அவ்விடத்தில் நகர்ந்து செல்வதற்கு முயன்றும் முடியாமல் பணிகட்டியால் உறைந்திருந்ததை கண்ணுற்றார். அந்த பாம்பு ஆனது உயிர்வாழ்வதற்காக வே முடியாத எவ்வளவு ஆபத்தான மாட்டிகொண்டுள்ளது என இரக்கப்பட்டு அந்த பாம்பினை அந்த சூழலிலிருந்து எடுத்து மீண்டும் பழையவாறு உயிர்தப்பிக்க உதவிடவேண்டும் எனமுடிவுசெய்து கையில் ஒருகுச்சியை எடுத்து அதன்மூலம் அந்த பாம்பினை மிககடினமாக முயன்று எடுத்து தன்னுடைய வீட்டிற்கு கொண்டு வந்துசேர்ந்தார். அவருடைய வீட்டில் குளிரை விரட்டிடுவதற்கான வெப்பமூட்டும் இயந்திரம் இருந்ததால் அந்த பாம்பு விரைவில் புத்துயிர் பெற்றது, அதனோடு அது ஊர்ந்து நகர்ந்து செல்வதற்கு போதுமான வலிமை யும் பெற்றுவிட்டது, அதன்பின்னர் தான் குளிரில் விரைத்து இறக்கபோகின்ற நிலையில் தன்னை அங்கிருந்து எடுத்து கொண்டு வந்த காத்திட்ட அந்த விவசாயியை கடித்தது. அதனால் அந்தவிவசாயி பாம்பின் விஷம் உடல்முழுதும் பரவி இறக்கபோகும் நிலைக்கு ஆளானார் அந்நிலையில் அவருடைய உறவினர்கள் அவரை சுற்றி மிக சோகமாக அமர்ந்திருந்தனர் . அவர் தனது கடைசி மூச்சை விடும் நிலையில் தன்னை ,சுற்றி இருந்த உறவினர்களிடம், “ஒரு துரோகி மீது பரிதாபப்படக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்” என்றார். நாம் எவ்வளவுதான் நல்ல முறையில் நடந்து கொண்டு நல்லது செய்தாலும், தங்களின் தன்மையை ஒருபோதும் மாற்றாத மாற்றிகொள்ளாத மாற்ற விரும்பாத ஒருசில தீங்கு விளைவிப்பவர்கள் இருக்கின்றார்கள். அதனால் எப்போதும் விழிப்புடன் , அவர்களிடமிருந்து தூரமாக விலகி செல்க என அறிவுறுத்தப்படுகின்றது.

சனி, 16 நவம்பர், 2019

மற்றவர்கள் ஏமாற்ற முயற்சிக்காதீர்கள்


ஒருகிராமத்து விவசாயி ஒருவர் தனது நிலத்திலிருந்த கிணற்றை மற்றொரு விவசாயிக்கு விற்றார். அடுத்த நாள் அந்த கினற்றினை வாங்கிய விவசாயி ஆனவர் தன்னுடைய நிலத்தில் இருந்த பயிர்களுக்கு தண்ணீரை பாய்ச்சுவதற்காக அந்தக் கிணற்றிலிருந்து தண்ணீரை எடுக்கச் சென்றபோது, கினற்றை விற்ற விவசாயி ஆனவர் அந்தகினற்றிலிருந்து தண்ணீரை எடுக்க அனுமதிக்கவில்லை. மேலும் அதற்கான காரணமாக அவர் , "நான் உங்களுக்கு கிணற்றை மட்டுமே விற்றேன், அதிலிருக்கும் தண்ணீரை அல்ல, எனவே நீங்கள் இந்த கிணற்றிலிருந்து தண்ணீரை எடுக்க முடியாது." என்ற கூறினார் இதனால் அந்த கினற்றைவாங்கிய விவசாயி மிகவும் சோகமாகி பேரரசர் அக்பரிடம் சென்று நிகழ்வுகள் அனைத்தையும் விவரித்து கூறி தனக்கு நீதி கேட்டார். உடன் பேரரசர் தன்னுடைய மதியூக மந்திரியான பீர்பாலிடம் ஒப்படைத்து அதற்கு தக்கதீர்வு காணுமாறு உத்திரவிட்டார் . கிணற்றை விற்ற நபரை பீர்பால் அழைத்து, “கிணற்றின் தண்ணீரை ஏன் பயன்படுத்த அனுமதிக்கவில்லை. அந்த கிணற்றை மற்றொரு விவசாயிக்கு விற்றுவிட்டீர்கள். அல்லவா ” என கேட்டார் உடன் கினற்றை விற்ற நபர்,“ ஐயா, நான் கிணற்றை மட்டுமே விவசாயிக்கு விற்றேன், அதிலுள்ள தண்ணீர் அல்ல. அதனால் அந்த கிணற்றிலிருந்து தண்ணீரை எடுக்க அவருக்கு உரிமை இல்லை. ” என பதில்கூறினார் அதனை தொடர்ந்து பீர்பால் புன்னகைத்து , “நல்லது, ஆனால் பாருங்கள், நீங்கள் இந்த விவசாயிக்கு கிணற்றை மட்டுமே விற்றுள்ளீர்கள், தண்ணீர் உங்களுடையது என்று நீங்கள் கூறுகிறீர்கள் என்பதால், உங்கள் தண்ணீரை அந்த விவசாயியின் கிணற்றில் வைத்திருக்க உங்களுக்கு உரிமை இல்லை. உங்கள் தண்ணீரை அவரது கிணற்றில் வைத்திருக்க விவசாயிக்கு நீங்கள் வாடகை செலுத்தவேண்டும், அல்லது அந்த தண்ணீரை உடனடியாக அவருடைய கிணற்றிலிருந்து வெளியே எடுத்து கொள்ளவேண்டும். ” என தீர்ப்புகூறினார் இவ்வாறு பீர்பால் தீர்ப்பு கூறியதும் கினற்றை விற்றவர் தான் மிகவும் சிக்கலில் மாட்டிகொண்டதை அறிந்து கொண்டு தான்இனி அந்த கினற்றை விற்றவருடன் தகராறு செய்து தண்ணீர் எடுப்பதை தடுக்கமாட்டேன் ஒத்துகொண்டார் நீதி :மற்றவர்கள் ஏமாற்ற முயற்சிக்காதீர்கள். நாம் எவ்வளவு புத்திசாலி என்று நினைத்தாலும் அதற்காக விலை செலுத்தவேண்டியிருக்கும் என்பதை கவணத்தில் கொள்க.

சனி, 9 நவம்பர், 2019

நூலில்லாத பட்டம்


நகரத்தில் வாழும் ஒரு தந்தையும் அவருடைய மகனும் ஒரு முறை அந்நகரத்தின் உள்ள பூங்காவில் நடத்தப்பட்ட பட்டம் பறக்க விடும்திரு விழாவை கண்டு களிக்கச் சென்றனர். அந்த பட்டம் பறக்க விடும் திருவிழாவில் வானம் முழுவதும் பல்வேறு வண்ணங்களாலான பட்டங்கள் பறந்து கொண்டு இருந்ததைக் கண்டு அவருடைய மகன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அதனை தொடர்ந்து அவருடைய மகன் தானும் வானத்தில் அவ்வாறு ஒரு பட்டத்தை பறக்கவிட விரும்புவதாகவும் அதற்காக தனக்கு அதற்கு தேவையான பட்டம் , நூல்கண்டு ஆகியவற்றை உடனடியாக வாங்கி கொடுக்குமாறு தன்னுடைய தந்தையிடம் கோரி அதிக அடம்பிடித்து அழ ஆரம்பித்தான் எனவே, அந்த பட்டம் பறக்க விடும்திருவிழா நடைபெறும் பூங்காவில் அவைகளை விற்ணைசெய்கின்ற ஒரு கடைக்கு அந்த தந்தை தன்னுடைய மகனை அழைத்து சென்றார்.அந்த கடையில் அவர் தனது மகனுக்காக பட்டம் ஒன்றினையும் தேவையானநூல்கண்டையும் வாங்கிமகனிடம் வழங்கினார் அவரது மகன்உடனடியாக அந்த பட்டத்தை நூலில் இணைத்து பறக்கவிட ஆரம்பித்தான். விரைவில், அந்த பட்டமானது வானத்தில் உயரத்தில் பறக்க ஆரம்பித்ததது. சிறிது நேரம் கழித்து, மகன், “அப்பா,இந்த நூலானது பறக்கும் பட்டத்தை அதற்குமேல் உயரமாக பறக்க விடாமல் தடுத்துவைத்திருப்பதாகத் எனக்கு தெரியவருகின்றது, அதானல் பட்டத்தை இணைத்துள்ள நூலினை அறுத்து அந்த தடையை உடைத்தவிட்டால், பட்டமானது சதந்திரமாக மேலும் உயரத்தில் பறப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் அல்லவா அதனால் நூலால் கட்டி இழுத்து பிடிப்பதை அறுத்துவிடட்டுமா அப்பா ? ” என சந்தேகம் எழுப்பியதை தொடர்ந்து , தந்தை பட்டமானது இணைத்து கட்டப்பட்ட நூலை வெட்டி இணைப்பினை நீக்கினார் தொடர்ந்து இழுத்து பிடித்திருந்த கட்டு அகற்றப்பட்டதால் .அந்த பட்டமானது உடனடியாக மேலே பறந்து செல்ல ஆரம்பித்தது. ஆஹா பிரமாதம் பட்டமானது சுதந்திரமாக வெகு உயரத்திற்க சென்றுவிடும் என அந்த மகன் மிகவும் குதூகலிக்க துவங்கினான் ஆனால், சிறிதுநேரம் கழித்து அந்த பட்டமான மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாக கீழே வர ஆரம்பித்தது.முடிவில் அருகிலிருந்த மொட்டை மாடியில் பறக்காமல் விழுந்துவிட்டது . இதைக் கண்டு அவருடைய மகன் மிகவும் ஆச்சரியப்பட்டான். நூலினால் இணைத்து கைகளால் இழுத்து பிடித்திருந்த தடை நீக்கம் பட்டுவிட்டதால் பட்டமானது சுதந்திரமாக மேலே உயர பறக்க முடியும், ஆனால் அதற்கு பதிலாக அது ஏன் கீழே விழுந்துவிட்டது .என சந்தேகம் எழுந்தது அதனால் தனது தந்தையிடம் , “அப்பா, இணைத்திருந்த நூலை வெட்டிவிட்ட பிறகு, பட்டமானது சுதந்திரமாக மேலேஉயரத்தில் பறக்க முடியும் என நான் நினைத்தேன். ஆனால் அது ஏன் கீழே விழுந்தது? ”என்ற சந்தேகவினாவினை எழுப்பினான் அதற்கு தந்தை, “மகனே, நாம் வாழும் நம்முடைய வாழ்க்கையின் உச்சத்தில், நாம் ஒரு சில செயல்களுடன் பிணைக்கப்பட்டுள்ளோம் என்று நினைக்கிறோம், மேலும் அவை நம்மை மேலும் உயரவிடாமல் தடுக்கின்றன என்றும் தவறாக எண்ணிவிடுகின்றோம்.அந்த நூலானது பட்டத்தை உயரமாகப் பறக்கவிடாமல் இழுத்து பிடிக்கவில்லை, ஆனால் காற்று மெதுவாகச் அடிக்கும்போது பட்டமானது உயரத்தில் இருக்க உதவுகின்றது, காற்று வீசும்போது,பட்டமானது சரியான திசையில் நூல் வழியாக மேலே சென்று பறக்க உதவிகின்றது. அந் நூலை வெட்டிடும்போது, நூல் வழியாக பட்டத்திற்கு வழங்கிய ஆதரவு இல்லாமல் அது கீழே விழுந்துவிட்டது ” என விள.க்கமளித்தார் மகன் தன்னுடய தவறை உணர்ந்தான். நீதி: சில நேரங்களில் நாம் நம் குடும்பத்தினருடன், பிணைக்கப்படாவிட்டால், விரைவாக நம்முடைய வாழ்க்கையில் புதிய உயரங்களை அடைய முடியும் என்று தவறாக எண்ணுகின்றோம். ஆனால், நம்முடைய வாழ்க்கையில் கடினமான நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் ஆதரவளிப்பதன் வாயிலாக நாம் தப்பிப்பிழைக்கஉதவுகிறார்கள் என்பதையும், நம் முடையவாழ்க்கையில் உயரங்களை அடைய ஊக்குவிக்கின்றார்கள் என்பதையும் உணரத் தவறிவிட்டோம். அவர்கள் நம்முடைய முன்னேற்றத்தை தடுத்து பிடித்துவைக்கவில்லை, ஆனால் நாம் முன்னேறுவதற்காக ஆதரவளிக்கிறார்கள். அதனால் குடும்ப உறுப்பினர்களை எப்போதும் அனுசரித்து ஒற்றுமையுடன் வாழமுயற்ச்சித்திடுக .

சனி, 2 நவம்பர், 2019

நம்முடைய பணியை துவங்கிடும் முன் அந்த பணியை எவ்வாறு செய்து முடிப்பது என நன்கு சிந்தித்து திட்டமிட்டு செயல்படுத்திடுக


முன்னொரு காலத்தில் மரம்வெட்டிடும் தொழிலாளி ஒருவர் மரவியாபாரியிடம் தனக்கு மரங்களை வெட்டிடும் பணிவழங்கும்படி கோரினார் அந்த தொழிலாளி நல்ல திறனுடைய வர் என்பதால் மரவியாாரியும் தன்னுடைய வியாபாரத்திற்கு தேவையான மரங்களை வெட்டிடுவதற்காகஅந்த மரம்வெட்டும் தொழிலாளியை பணியில் அமர்த்தி மரம் வெட்டுவதற்கான கோடாளி ஒன்றினை கொடுத்து அன்று காட்டில் குறிப்பிட்ட பகுதியில் மரம்வெட்டிடும் பணியை முடிக்குமாறும் சாயுங்காலம் எவ்வளவு மரம் வெட்டுகின்றாரோ அதற்கேற்ப கூலி வழங்கபெறும் என உத்திரவிட்டார் அதனை தொடர்ந்து அந்த மரம் வெட்டிடும் தொழிலாளி நாள்முழுதும் பாடுபட்டு 20 மரங்களை வெட்டி முடித்து தன்னுடைய முதலாளியிடம் அதனை காண்பித்தார் மரவியாபாரியும் ஆஹா பரவாயில்லையே இன்று 20 மரங்களை வெட்டியுள்ளாயே வாழ்த்துகள் இதேபோன்று தினமும் உன்னுடைய பணி நன்றாக இருக்கவேண்டும் என பராட்டி அன்றைய மரம் வெட்டியதற்கான கூலியை கொடுத்தனுப்பினார் மறுநாள் அந்த தொழிலாளி முதல்நாளைவிட கடுமையாக முயன்றும் 18 மரங்களை மட்டுமே வெட்டிமுடித்திடமுடிந்தது அன்றைய நாள் முடிவில் வியாபாரியும் பரவாயில்லை இன்னும் சிறிது முயற்சிசெய்திருக்கலாம் என கூறிஇரண்டாம் நாள் மரம் வெட்டியதற்கான கூலியை கொடுத்தனுப்பினார் இவ்வாறு அடுத்தடுத்த நாட்களிலும்அந்த தொழிலாளி வெட்டிடும் மரங்களின் எண்ணிக்கையானவை இரண்டிரண்டாக குறைந்து கொண்டே வந்து அந்தவாரம் முடிவில் எவ்வளவுதான் மிககடினமாக முயன்று பணிபுரிந்தாலும் அந்த மரம்வெட்டிடும் தொழிலாளியால்8 மரங்களை மட்டுமே வெட்டிமுடிக்க முடிந்தது அதனால் அன்று அந்த மரவியாபாரி என்னதம்பி தினமும் நீ வெட்டிடும் மரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றன என வினவியபோது நீங்கள் வேண்டுமானால் நேரில் வந்து பாருங்கள் ஐயா நான் முந்தைய நாட்களைவிட மிககடுமையாக முயன்றும் வெட்டுகின்ற மரங்களின் எண்ணிக்கை யானவை குறைகின்றன காரணம்தான் எனக்கு தெரியவில்லை என அப்பாவிபோன்று கூறினார் சரிதம்பி நீ மரம் வெட்டுவதற்காக உன்னிடம் கொடுத்த கோடாளியை தினமும் கூர்தீட்டினாயா என அந்த வியாபாரி வினவியபோது அந்த மரம்வெட்டிடும் தொழிலாளியானவர் பொழுதுக்கும் மரம் வெட்டவே நேரம் சரியாக போய்இருட்டிவிடுகின்றது அப்புறம்எங்கே கோடாளியை கூர்தீட்டுவது என பதில்கூறினார் அந்த தொழிலாளி .அதெல்லாம் பரவாயில்லை தினமும் பணியை துவங்கிடும் முன் முதலில் கோடாளியை கூர்தீட்டு அதன்பிறகு மரம் வெட்டிடும் பணியை துவங்கிடு என முதலாளி கூறியதால் மறுநாள் தன்னுடைய மரம் வெட்டிடும் பணியை துவங்கிடும் முன் கோடாளியை நன்கு கூர்தீட்டியபின் மரம் வெட்டஆரம்பித்தார் என்ன ஆச்சரியம் பணியில்சேர்ந்த முதல் நாளில்வெட்டிய அளவு அன்று மரங்களை அந்த தொழிலாளியால் வெட்டிமுடிக்கமுடிந்தது அதேபோன்று நாம் அன்றன்றுநம்முடைய பணியை துவங்கிடும் முன் அந்த பணியை எவ்வாறு செய்து முடிப்பது என நன்கு சிந்தித்து திட்டமிட்டு செயல்படுத்தினால் நம்முடைய பணியின்எண்ணிக்கையும் அதன் தன்மையும் குறைவுபடாமல்தொடர்ந்து செய்து முடிக்கமுடியும் என தெரிந்து கொள்க

சனி, 26 அக்டோபர், 2019

மகிழ்ச்சியைத் துரத்த வேண்டாம். மற்றவர்களுக்கு உதவுகின்ற மனப்பான்மையானது மகிழ்ச்சியை தானாகவே கொண்டுவரும்


ஒரு கிராமத்தில் முதியவர் ஒருவர் வாழ்ந்துவந்தார்.அவர் எப்போதும் மற்றவர்களைபற்றிய மிக மோசமான மனநிலையில் மிகநீண்ட காலமாக அவர்களை பற்றி இல்லாததும் பொல்லாததுமாக விஷமத்தனமாக குறைகூறி கொண்டிருந்தார் மேலும் அவர் மற்றவர்களிடையே மகிழ்ச்சியற்ற உணர்வை உருவாக்குகின்ற அவதூறு பிரச்சாரத்தையும் செய்து கொண்டிருந்தார். அதனால் அவரைத் தவிர்ப்பதற்காக அந்த கிராமத்து மக்கள் தங்களால் முடிந்தவரை அவரிடம் அனுகாமல் தூர விலகிவிலகி ஓடிச் சென்றனர் இவ்வாறான சூழலில் அவருக்கு எண்பது வயதாகும்போது, ஒருநாள் . "அந்த வயதானவர் இன்று மகிழ்ச்சியாக இருக்கின்றார், அவர் யாரைப் பற்றியும் புகார் கூறுவதிவில்லை, யாரைகண்டாலும் வெறுத்து ஒதுக்காமல் புன்னகைசெய்கின்றார், மேலும் அவரது முகம் கூட புத்துணர்ச்சியுடன் தென்படுகின்றது. மிகமுக்கியமாக யாருக்காவது எந்தவொரு உதவிவேண்டுமானாலும் தான் செய்யதயாராக இருப்பதாக உதவிக்கரம் நீட்டுகின்றார் " எனும் செய்தி காட்டுதீபோன்று உடனடியாக அந்த கிராமத்தில் வாழும் மக்கள் எல்லோருரிடமும் பரவியது அவ்வாறான செய்தியை கேள்வியுற்றதும் அந்த கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரும் அந்த வயதான மனிதரைச் சுற்றி கூடி, "மிகவும் அதிசயமாக இருக்கின்றதே எவ்வாறு இப்படி மாறிவிட்டீர்கள் உங்களுக்கு என்ன நேர்ந்தது?" என மூலைக்குமூலை அவரிடம் கேள்விகேட்க ஆரம்பித்தனர் அதனை தொடர்ந்து அம்முதியவர், " அதிசயம் ஒன்றும் இல்லை யப்பா. எண்பது ஆண்டுகளாக நான் மகிழ்ச்சியைத் துரத்திக் கொண்டிருந்தேன், அது பயனற்றது என நேற்றுதான் தெரிந்துகொண்டேன்அதாவது நான் மகிழ்ச்சியுடன் வாழவேண்டுமானால் மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை மகிழ்ச்சியுடன் செய்தால் போதும் என தெரிந்துகொண்டேன் அதனால் நானும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன் என்னை சந்திக்கின்ற மற்றவர்களும் இப்போது மகிழ்ச்சியாக இருக்கின்றனர்." என கூறிக்கொண்டிருந்தார் நாம் வாழும் நம்முடைய வாழ்க்கைக்கான மகிழ்ச்சியைத் துரத்த வேண்டாம். மற்றவர்களுக்கு உதவுகின்ற மனப்பான்மையானது மகிழ்ச்சியை தானாகவே கொண்டுவரும் என்ற செய்தியை மனதில் கொள்க

சனி, 19 அக்டோபர், 2019

உண்மையான அழகு என்பது கண்களால் காணக்கூடிய உருவத்தோற்றம்அன்று, உள்ளத்தில் இருக்கக்கூடியதுஆகும்


ஒரு காலத்தில் ஒரு செல்வந்த முதியவர் மிகப் பெரிய வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவருடைய உடல்நிலை நாளுக்கு நாள் பலவீனமாக ஆகிகொண்டிருந்ததால், தன்னையும் தன்னுடைய பெரிய வீட்டையும் அவரால் கவனித்துக் கொள்ள முடியவில்லை, எனவே வீட்டின் அனைத்து வேலைகளுக்கும் அவரை கவனித்துக் கொள்வதற்கும் உதவக்கூடிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்தினால் நல்லது என எண்ணினார் அதனை தொடர்ந்துஅம்முதியவர் அங்கு, சங்கு ஆகிய இரண்டு ஊழியர்களை நியமித்தார். அங்கு ஒரு அழகான இளைஞனாக இருந்தான், சங்கு ஒரு அசிங்கமான தோற்றமுடைய இளைஞனாக இருந்தான் . இருவரும் பணியில் சேர்ந்த முதல்நாள் அவ்விருவரும் அம்முதியவர் முன்னிலையில் கைகட்டி நின்றுகொண்டிருந்தனர் முதலில் அம்முதியவர் அங்குவை அழைத்து தனக்கு குடிப்பதற்கு தேநீர் தயாரித்து கொண்டுவருமாறு கூறினார். உடன் அங்கு சமையலறைக்கு சென்றபிறகு, அந்த முதியவர் சங்கு எனும் வேலைக்காரன் பக்கம் திரும்பி, "அங்கு நீ மிகவும் மோசமானவன், நம்பத்தகாதவன் என்று உன்னைப் பற்றி தவறாக என்னிடம் கூறுகின்றானே அவ்வாறுதான் நீ இருப்பாயா?" என வினவினார் அம்முதியவர் அவ்வாறு தன்னிடம் கூறியதும் சங்கு ஒரு கணம் யோசித்து, "அங்கு மிகவும் அழகானவன் மிகவும் நல்லவனாயிற்றே அவன் என்னை பற்றி அவ்வாறு கூறியிருக்கமுடியாதே " என்று பதில் கூறினான். அத்தகைய அழகான அங்கு தன்னைபற்றி இல்லாததும் பொல்லாததும் கண்டிப்பாக ஒருபோதும் சொல்ல மாட்டானே எனும் நம்பிக்கை சங்குவிற்கு இருந்தது. எனவே சங்கு அந்த முதியவரிடம், " , என்னிடம் ஏதாவது தவறு இருக்க வேண்டும்ஐயா அதனால் அங்கு என்னைபற்றி அவ்வாறு கூறியிருக்கலாம் ஐயா. அந்த தவறு என்னவென தெரிந்துகொணடு சரிசெய்து கொள்கின்றேன் ஐயா " என பதலளித்தான் ஆஹா அசிங்கமாக தோற்றமளித்தாலும்சங்கு குணத்தில் மிகவும் நல்லவனாக இருக்கின்றானே என எண்ணுமாறு சங்கு தன்னுடைய நல்ல குணத்தால் அந்த முதியவர் ஈர்க்கப்பட்டார் அதனைதொடர்ந்து அம்முதியவர் சங்குவின்மீது நல்ல அபிப்பிராயம் கொண்டார் . இதற்கிடையில், அங்கு அம்முதியவர்கோரியவாறு ஒரு கோப்பை தேநீருடன் சமையலறையில் இருந்து திரும்பிவந்துசேர்ந்தான் அந்த முதியவர் சங்கு பக்கம்திரும்பி தனக்கு காலை சிற்றுண்டி தயாரித்துகொண்டுவா என சங்குவை சமையலறைக்கு அனுப்பினார், சங்கு சமையலறைக்கு சென்றபின்னர் அங்குபக்கம் திரும்பி, "அங்கு நீ மிகவும் மோசமானவன், நம்பத்தகாதவன் என்று உன்னைப் பற்றி தவறாக என்னிடம் கூறுகின்றானே அவ்வாறுதான் நீஇருப்பாயா?" என சந்தேகம் எழுப்பினார் முதியவர். இவ்வாறாக முதியவர் கூறியதைக் கேட்டவுடன் அங்கு மிகவும் கோபமடைந்து சங்குவை கண்டபடி திட்டஆரம்பித்தான் மேலும் "சங்கு ஒரு மோசடிசெய்பவன் அவன் எப்போதும் மற்றவர்களை பற்றி அவதூறு கூறிக்கொண்டே இருப்பான்" என கோபமாகவும் படபடப்பாகவும் அம்முதியவரிடம் சங்குவைபற்றி இல்லாத பொல்லாத செய்திகளையும் சேர்த்து கூறினான் அங்கு இவ்வாறு கோபமாக சங்குவை பற்றி கூறியதும் ஒரு அழகான தோற்றம் கொண்ட மனிதனுக்கு உள்ளேமனமானது கொடூரமாக இருக்கின்றதே, அதே நேரத்தில் அசிங்கமாக தோற்றமுடைய மனிதனுக்கு மிகப்பெரிய நல்லமனதாக இருக்கின்றதே என்று அம்முதியவர் சிந்திக்க ஆரம்பித்தார். "உண்மையான அழகு என்பது கண்களால் காணக்கூடிய உருவத்தோற்றம்அன்று, உள்ளத்தில் இருக்கக்கூடியதுஆகும். நம் கண்களால் காண்பது ஒருநாள் மறைந்துவிடும், ஆனால் நம் உள்ளத்தில் இருக்கக்கூடியது என்றென்றும் நிலைத்திருக்கும் ..."

சனி, 12 அக்டோபர், 2019

நெருக்கடியான நேரத்தில் மிகச்சரியாகசிந்தித்து தெளிவாக முடிவெடுத்தால் வெற்றிபெறமுடியும்


முன்னொரு காலத்தில் ஒருநகரத்தில் சில வணிகர்கள் வசித்து வந்தனர். அவர்கள் வியாபாரத்திற்கு எங்கு சென்றாலும், ஒன்றாகச் செல்வது வழக்கம். ஒருமுறை அவர்கள் வெகுதூரம் பயணித்து, எடுத்துச் சென்ற பொருட்கள் அனைத்தையும் விற்று ஏராளமான அளவில் பணத்தினை சம்பாதித்தனர் அதன் பின்னர் அவ்வியாபாரத்தில் கிடைத்த பணத்துடன் வீடு திரும்பினர். திரும்பும் வழியில் ஒரு அடர்ந்த காடு இருந்தது, அதிகாலைநேரத்தில் அந்த காட்டினை கடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது நடுகாட்டில் இரண்டு கொள்ளையர்கள் புதரில் மறைந்திருந்தனர். வணிகர்கள் அந்ததிருடர்கள் மறைந்திருப்பதை கவணிக்காமல் பயனம் செய்து கொண்டிருந்தனர். அந்த கொள்ளையர்கள் இருவரும் திடீரென புதரிலிருந்துவெளிவந்து அவர்களுக்கு முன் மேலும் பயனம்செய்யஅனுமதிக்காமல் வழிமறித்து நின்று கொண்டு. தங்களுடைய கையிலுள்ள பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி உயிர் பிழைக்கவேண்டுமானால், அவ்வணிகர்களிடம் இருந்த பணம் விலையுயர்ந்து பொருட்கள் ஆகியஅனைத்தையும் கீழே போடுமாறு கட்டளையிட்டனர். வணிகர்களின் கைகளில் தற்காப்பிற்கான ஆயுதம் ஏதும் இல்லை எனவே வணிகர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தபோதிலும், கொள்ளையர்களுக்கு அடிபணிய வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். ஆதலால் வணிகர்கள் தாம் அணிந்திருந்த கைக்கடிகாரம் உட்பட அனைத்து பொருட்களையும் கொள்ளையர்களிடம் இழந்தனர். எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் வணிகர்கள் அனைவரின் உடைமைகள் முழுவதையும் கொள்ளையடித்ததால் மிகவும் அதிககர்வத்துடன் அவ்வாறு கொள்ளையடித்த வணிகர்களுக்கு முன்பாக திருடர்கள் ராஜாக்களைப் போல அமர்ந்துகொண்டு வணிகர்கள்.தங்களுடைய வீடுகளுக்கு திரும்புவதற்கு முன்பு தங்கள் முன்னிலையில் வணிகர்கள் அனைவரும் நடனமாடுமாறு கட்டளையிட்டனர். அவ்வணிகர்கள் அனைவரும் தங்களுடைய அனைத்து பொருளையும் இழந்து மட்டுமல்லாமல் அந்த கொள்ளையர்கள் திருப்தி அடைவதற்காக நடனமும் ஆடவேண்டுமா என தங்களுடைய இக்கட்டான நிலையை வெளியில் வாய்விட்டு பேசமுடியாமல் நொந்துகொண்டு நடனமாடினார்கள் அவ்வணிகர்களில் ஒருவர். மட்டும் தனக்கும் தனது நண்பர்களுக்கும் ஏற்பட்ட இந்த நெருக்கடியிலிருந்து எவ்வாறு தப்பிசெல்வது என சிந்திக்க ஆரம்பித்தார். மேலும் வணிகர்கள் ஆடவேண்டிய நடனம் குறித்தும், கொள்ளையர்கள் தரையில் அமர்ந்திருக்கும் விதம் குறித்தும் அவர் யோசித்துக் கொண்டிருந்தார். அவ்வாறு பல்வேறு வகையில் சிந்தித்துக்கொண்டிருந்தபோது, கொள்ளையர்கள் இருவரும் தங்களுடைய ஆயுதங்களை கைகளில் வைத்திருக்காமல் தரையில் வைத்துவிட்டதை அவர் கவனித்தார். , அக்கொள்ளையர்களை முழுமையாக முட்டாளாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மற்ற வணிகர்களுடன் சேர்ந்துஇவரும் அந்த கொள்ளையர்கள் தன்மீது சந்தேகிக்க கூடாது என ஒப்புக்காக பெயரளவில் நடனமாடத் தொடங்கினர். இந்நிலையில் மிகவும் புத்திசாலிதனமாக அந்த கொள்ளையர்களை விரட்ட வேண்டும் என இறுதியாக முடிவுசெய்தார் ஏற்கனவே கொள்ளையர்கள் தங்களுடைய ஆயுதங்களை தரையில் வைத்துவிட்டதை கவனித்திருந்ததால், அவர் அதைப் பற்றி தனது நண்பர்களுக்கு சமிக்ஞை செய்தார், அதனை கவணித்தவணிகர்கள் அனைவரும் திடீரென்று திருடர்கள் தரையில் வைத்துவிட்ட அந்த ஆயுதங்களை தங்களுடைய கைகளில் எடுத்துக்கொண்டு கொள்ளையர்கள் மீதுபாய்ந்து தாக்கதொடங்கினர். இவ்வாறு தங்களுடைய ஆயுதத்தையே வணிகர்கள் தங்களுக்கு எதிராக திரும்ப தாக்குவதற்கு பயன்படுத்துவார்கள் என அவ்விரு கொள்ளையர்களும் எதிர்பார்க்கவில்லை, அதனால் அவ்விருவரும் எப்படியாவது . தங்களுடைய உயிர்பிழைத்தால் போதுமென வணிகர்களின் பிடியிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு தாங்கள் கொள்ளையடித்த பொருட்களையும் அப்படியே போட்டுவிட்டு ஓடத் தொடங்கினர். அதனை தொடர்ந்து அவ்வணிகர்கள் அனைவரும் தங்களுடைய, மதிப்புமிக்க பொருட்களையும் பணத்தையும் தரையிலிருந்து பொறுக்கி சேகரித்து எடுத்துகொண்டு பத்திரமாக வீடுவந்து சேர்ந்தனர்

சனி, 5 அக்டோபர், 2019

காணாமல் போன கைகடிகாரம்


ஒரு முறை ஒருகிராமத்தில் வாழும் மிகப்பெரிய பணக்கார விவசாயி ஒருவருடைய கைக்கடிகாரமானது அவருடைய நெற்களஞ்சியத்தில் காணாமல் போய்விட்டது . அது சாதாரண கைகடிகாரம் அன்று, அது அவர் இளைஞனாக கல்லூரிக்கு படிக்கசெல்லும்நிலையில் அவருடைய தாய் அவருடைய பிறந்த நாளின்போது பரிசாக அளித்தது அதனால் அந்த கைக்கடிகாரத்தை தன்னுடைய தாயின் நினைவாக மிகபத்திரமாக பாதுகாத்து மிகவும் உணர்வுபூர்வமாக எப்போதும் தன்னுடன் வைத்துகொண்டிருந்தார் அதனால் அதனை எப்படியாவது தேடிகண்டுபிடித்தவேண்டிய கட்டாயநிலையில் நெற்களஞ்சியம் முழுவதும் நீண்டநேரம் அவர்தேடியும் அவருக்கு அந்த கைக்கடிகாரம் மட்டும் கிடைக்கவேயில்லை அதனை தொடர்ந்து எப்படி தேடியும் எவ்வளவுநேரம் தேடியும் அந்த கைக்கடிகாரத்தை மட்டும் தேடிகண்டு பிடித்திடமுடியவில்லையேயென மிகவும் சோர்வுற்றிருந்த போது அருகில் சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்ததை கவணித்தஅவர் அவர்களை அழைத்து "பிள்ளைகளே என்னுடைய கைகடிகாரம் இன்று இங்கு காணாமல் தொலைந்த விட்டது அதனை யார்தேடிகண்டுபிடித்து கொடுத்தால் அவ்வாறு அதைக் கண்டுபிடித்த நபருக்கு ரூ.100/- பரிசாக கொடுக்கின்றேன்" என கூறியதை தொடர்ந்து அந்த பிள்ளைகள் அனைவரும் "ஆகா! கைக்கடிகாரத்தை தேடி-கண்டு பிடித்து கொடுத்தால் ரூ.100/- பரிசாக கிடைக்கின்றதா அப்படியெனில் உடனடியாக தேடிடுவோம்" என உற்சாக குரலில் கத்திகொண்டு அக்குழந்தைகள் நெற்களஞ்சியத்திற்குள் விரைந்தோடிவந்து, அந்த நெற்களஞ்சியம் முழுவதையும் சுற்றி சுற்றி தேடிவந்தனர். ஆனால் அந்த பிள்ளைகள் அனைவரும் எவ்வளவு நேரம் தேடியும் அவர்களாலும் அந்த கைக்கடிகாரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் மிகவும் சோர்வுற்று அவர்கள் அனைவரும் தங்களால் அந்த கைக்கடிகாரத்தினை தேடிகண்டு பிடித்திட முடியவில்லை யென கூறி அவரிடம் விடைபெற்றுகொண்டு வெளியில் சென்று வழக்கம் போன்று விளையாடுவதற்கு சென்றுவிட்டனர் ஆயினும் அவர்களுள் ஒரு சிறுவன் மட்டும் அவரிடம் வந்து தன்னை மீண்டும் தேடிட அனுமதித்தால் தான் கண்டிப்பாக அந்த கைக்கடிகாரத்தை தேடிகண்டுபிடித்து கொண்டுவந்து தருவதாகவும் அதனால் தனக்கு மற்றொரு வாய்ப்பை வழங்கும்படியும் கோரினான் கண்டிப்பாக கிடைக்காது என நம்பிக்கை யற்று இருந்தநிலையில் அந்த சிறுவனின் நம்பிக்கையான உறுதிமொழியை கேட்டு அவனுக்கு உற்சாகம் அளிக்கும் பொருட்டு "சரிதம்பி நெற்களஞ்சியத்திற்குள் சென்று தேடிகண்டுபிடித்து கொண்டுவா மேலும் ரூ.100/-சேர்த்து ரூ.200/- பரிசாக வழங்குகின்றேன்" என அனுமதி்த்தார் அதனை தொடர்ந்து அந்த சிறுவன் அந்த நெற்களஞ்சியத்திற்குள் மீ்ண்டும் சென்று அவருடைய கைக்கடிகாரத்தை தேடஆரம்பித்தான் என்ன ஆச்சரியம் சிறிது நேரம் கழித்து அந்தச் சிறுவன் கையில் அவருடைய கைகடிகாரத்துடன் வெளியே வந்துசேர்ந்தான்! அந்த விவசாயிமிகவும் சந்தோஷமாகவும் ஆச்சரியமாகவும் "நானும் நீண்டநேரமாக தேடிபார்த்தும் கிடைக்கவில்லை உன்னுடன் விளையாடிய பிள்ளைகள் அனைவரும் நீண்டநேரம் தேடியும் கிடைக்கவில்லை ஆனால் உனக்கு மட்டும் எப்படி தம்பி கிடைத்தது" என கேள்வியெழுப்பினார் "அது ஒன்றும் இல்லை ஐயா! அவர்கள் அனைவரும் ஒரே கூச்சலாகவும் சத்தமாகவும் பேசிகொண்டு தேடியதால் அவர்களால் இந்த கைகடிகாரத்தை தேடிகண்டுபிடித்திடமுடியவில்லை ஆனால் நான் மிகஅமைதியாக நெற்களஞ்சியத்தின் மையத்திற்குள் தரையில் சிறிதுநேரம் அமர்ந்திருந்தேன் அப்போது அமைதியாக இருந்ததால் இந்த கைக்கடிகாரம் இயங்கும் டிக் டிக் எனும் ஒலி மட்டும் என்னுடைய காதில் கேட்டது அதனைதொடர்ந்து அந்த டிக் டிக் எனும் ஒலிவந்த திசையில் தேடிகொண்டே சென்றபோது குவியலான வைக்கோலிற்கு அடியில் இந்த கைகடிகாரம்இருந்தது கண்ணுற்று எடுத்துவந்தேன்" என பதில் கூறினான் உடன் தன்னுடைய கைக்கடிகாரத்தை பெற்றுகொண்டு தான் வாக்களித்தவாறு அந்த சிறுவனுக்கு ரூ.200/- பரிசாக வழங்கினார் ஆம் அமைதியான மனம் அலைபாயும் மனதை விட சிறப்பாக தெளிவாக சிந்தித்து எந்தவொரு பிரச்சினைக்கும் உண்டான தீர்வினை எளிதாக கிடைக்கச்செய்யும் அதனால் தற்போதைய நம்முடைய ஆரவாரமான வாழ்க்கையில் தினமும் சிறிதுநேரம் அமைதியாக அமர்ந்து சிந்தித்தால் நம்முடைய அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுசெய்வதற்கான வழி கண்டிப்பாக கிடைக்கும் என்ற செய்தியை மனதில் கொள்க

சனி, 28 செப்டம்பர், 2019

நம்முடைய வாழ்க்கையில் பணத்தினால் நமக்கான மகிழ்ச்சியை வாங்க முடியாது


ஒருபணக்கார, விலையுயர்ந்த ஆடை அணிகலண்களை அணிந்த பெண் மனநல மருத்துவ ஆலோசகர் ஒருவரிடம் சென்று தன்னுடைய வாழ்க்கையில் முழுவதும் தனக்கு வெறுமையாகவும் பயனற்றதாகவும் இருப்பதாக புகார் அளித்தார், மேலும் தன்னுடைய கணவன் காலமான பிறகு தான் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. பெரிய வீட்டில் தான் மட்டும் தனியாக நெடுமராக நின்றுவிட்டதாகவும் தன்னுடைய பெரிய வீடு ,அதில் தற்போது உள்ள ஆடம்பரமான கார், விலையுயர்ந்த வீட்டு உபயோகபொருட்கள், பிரஞ்சு வாசனை திரவியம், பாரசீக தரைவிரிப்பு, இறக்குமதி செய்யப்பட்ட இசைக்கருவிகள்ஆகியவை அனைத்தும் தனக்கு பயனற்ற பொருட்களாக தோன்றுவதாகவும் கூறினாள் . அதுமட்டுமல்லாது மிகநீண்ட சிந்தனைக்குப் பிறகு, தான் ஏதாவது செய்யவேண்டும் என முடிவு செய்ததாகவும் ஆயினும் அடுத்து என்ன செய்வது எனும் மிகப்பெரிய கேள்விக்கு தன்னால் விடை காண முடியாமல் தொக்கி நிற்பதாகவும் . எனவே தனக்கு மிக நிரந்தரமான நீண்டகால மகிழ்ச்சியைத் அடைவதற்கான ஆலோசனை கூறி வழிகாட்டிடும் ஒரு ஆலோசகரைப் தேடிவருவதாகவும் அவ்வாறான ஆலோசகர் தாங்கள்தான் அதனால் தாங்கள் தனக்கு இந்நிலையில்தக்க ஆலோசனைகளைகூறி வழிகாட்டிடுமாறு அவரிடம் கோரினாள்.

உடன் அந்த ஆலோசகர் தன்னுடைய அலுவலக மாடிகளை சுத்தம் செய்துகொண்டிருந்த ஒரு வயதான பெண்மணியை அழைத்தார். பின்னர் ஆலோசகர் அந்த பணக்கார பெண்மணியிடம், "மாரியம்மாவிற்கு எப்படி மகிழ்ச்சி கிடைத்தது என்பதைக் அவர் கூறுவதை தாங்கள் இங்கே கேட்கப் போகின்றீர்கள். நீங்கள் செய்யவேண்டியது எல்லாம், அந்தம்மாள் கூறுவதைசிறிது செவிசாய்த்து கேட்டால் மட்டும் போதுமானதாகும்" என்று கூறி மாரியம்மாவை தன்னுடைய வாழ்க்கை பற்றிய கதையை அந்த பணக்கார பெண்மணியிடம் விவரமாக எடுத்துகூறிடுமாறு கேட்டு கொண்டார் அந்த மனநலஆலோசகர்.

அதனை தொடர்ந்து அந்த வயதான துப்புரவுப் பணிபுரியும் மாரியம்மாள் தன்னுடைய கையில் வைத்து பணிசெய்துகொண்டிருந்த விளக்குமாறை கீழே போட்டுவிட்டு வந்து அந்த பணக்கார பெண்மணிக்கு அருகிலிருந்தவொரு நாற்காலியில் அமர்ந்து தன்னுடைய கதையை கூற ஆரம்பித்தாள் "என் கணவர் மலேரியாவால் இறந்தார், பின்னர் மூன்று மாதங்களுக்குப் பிறகு எங்களது ஒரே மகன் கார் விபத்தில் கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து எனக்கு உதவ யாரும் வரவில்லை எனக்கு பேச்சுதுனைக்குகூட யாரும் அருகில்இல்லை. எனக்கு எதுவும் இல்லை எல்லாமே இழந்துவிட்டது போன்ற ஒரு வெற்றிடம் என்கண்முன் நின்று என்னை பயமுறுத்தியது அதனால்இரவில். என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை, சரியாக வேளாவேளைக்குஎன்னால் சாப்பிட முடியவில்லை, அதனால் என்னுடைய வாழ்க்கையை அன்றோடு முடிந்தது என்று துக்கத்தில் அழக்கூடமுடியாதல் தத்தளித்து தவித்துகொண்டிருந்தேன்" .

"இந்நிலையில் அன்றொருநாள் மாலை, வீட்டிற்கு வெளியில் சென்று திரும்பி வரும்போது சிறிய பூனைக்குட்டியொன்று என்னைப் பின்தொடர்ந்து வீட்டிற்குள் உள்நுழைந்தது அது குளிர்காலமானதால் வெளியே மிகவும் குளிர்ச்சியாக இருந்தது அதனால் அந்த பூனை குட்டியை பார்க்க மிகபாவமாக இருந்தது . அதற்கு எப்படியாவது உதவவேண்டும் என எண்ணி அந்த பூனைக்குட்டியை உள்ளே விட முடிவு செய்தேன். மேலும் கொஞ்சம் பாலை காய்ச்சி அந்த பூனைக்குட்டிக்காக ஒரு தட்டில் ஊற்றினேன் அதனைதொடர்ந்து, அந்த பூனைக்குட்டி தட்டை சுத்தமாக நக்கி பாலைகுடித்துவிட்டு என்னுடைய காலடியில் வந்து என்னுடைய பாதத்தில் தன்னுடைய முகத்தினை தேய்த்தது அப்படியே என்னுடைய காலடியில்படுத்து கொண்டது அதனை கண்டவுடன் , ஒரு சிறிய உயிருள்ள மிருகத்திற்கு சிறிதளவு உதவியஉடன் தனக்கு உதவியவர்களுக்கு தன்னுடைய நன்றியைஎவ்வாறு தெரிவித்து கொண்டதென அறிந்து முதன் முறையாக என்னுடைய மனதில் மகிழ்ச்சியுடன் நான் சிரித்தேன்."

"ஒரு சிறிய பூனைக்குட்டிக்கு உதவுவது என்னைப் புன்னகைக்கச் செய்ததால், அதேபோன்று இவ்வுலகில் வாழும் மக்களுக்காக ஏதாவது உதவிசெய்வது என்னை மேலும் மகிழ்ச்சியாக மாற்றக்கூடும் என்று நான் நினைத்தேன். எனவே அடுத்த நாள் நான் கோதுமைமாவினால் சிலரொட்டிகளை சுட்டெடுத்துகொண்டு, பக்கத்து வீட்டில் உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக படுக்கையில்இருந்த ஒரு வயதானவரிடம் கொடுத்து உண்ணுமாாறு உபசரித்தேன் உடன் அவர் மிகமனமகிழ்வுடன் தன்னுடைய மகளைபோன்று தனக்கு உதவியதற்கு மிகவும் நன்றிகூறினார் . இவ்வாறே ஒவ்வொரு நாளும் நான் யாராவது ஒருவருக்கு உதவிய செய்திட முயற்சித்தேன். அதனை தொடர்ந்து அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இன்று, என்னை விட நன்றாக நிம்மதியுடன் தூங்கும் மனமகிழ்ச்சியுடன் சாப்பிடும் யாரையும் நான்பார்க்கவில்லை. தற்போது மற்றவர்களுக்கு ஏதாவது உதவி செய்வதன் மூலம் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். "என்று கூறினாள்

இவ்வாறு மாரியம்மாள் கூறியதை கேட்ட பணக்கார பெண்மணி "இந்த உலகில் பணத்தினால் வாங்கக்கூடிய அனைத்து பொருட்களையும் என்னிடம் வைத்திருக்-கின்றேன், ஆனால் அவ்வாறான பணத்தினால் எனக்கான மகிழ்ச்சியைகூட வாங்கமுடியும் என இதுவரை இறுமாந்திருந்தேனே" என மிகவும்ஓலமிட்டு அழ ஆரம்பித்ததாள்.

நம்முடைய வாழ்க்கையில் பணத்தினால் நமக்கான மகிழ்ச்சியை வாங்க முடியாது அதற்கு பதிலாக மற்றவர்களுக்கு உதவுகின்ற நம்முடைய செயலால் மற்றவர்களை எவ்வளவு மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்பதைப் பொறுத்து நம்முடைய மகிழ்ச்சியான வாழ்க்கைஅமைந்திருக்கும் .என தெரிந்து கொண்டாள் அந்த பணக்கார பெண்மணி அதன்பிறகு அந்த பணக்கார பெண்மனி அந்த நகரின் ஒரு தொண்டு நிறுவனத்தின் தலைவரானார். இப்போது அந்த பெண்மணி மக்களுக்கு சேவை செய்வதிலும், அவர்களுக்கு அன்றாடம் மகிழ்ச்சியைக் அளிக்க கூடிய செயல்களை கண்டுபிடிப்பதிலும் மும்முரமாக இருக்கின்றார் .

சனி, 21 செப்டம்பர், 2019

எப்போதும் நல்லவைகளையே அனைவரின் பார்வையில் படுமாறு மாற்றி கொண்டுசெல்வது சிறந்தது


.முன்னொரு காலத்தில் அரசனொருவன் இருந்தான் அவன் அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்ற நல்ல திறனுடைய அரசனாக அரசுபுரிந்து வந்தான் ஏதோவொரு அசம்பாவித நிகழ்வினால் அவனுடைய ஒரு காலும் ஒரு கண்ணும் இழந்துவிட்டான் ஆனாலும் அனைவராலும் விரும்பம்படுமாறு திறனுடன் ஆட்சி புரிந்துவந்தான் தன்னைபற்றிய நினைவுகள் பிற்காலத்தில் நிலையாக இருக்கவேண்டுமெனில் தலைநகருக்கு அருகிலிருந்த மலைகுன்றுகளில் தன்னை அழகிய ஓவியமாக வரைந்துவைத்தால் நல்லது என திட்டமிட்டு அவ்வாறு தன்னை அழகிய ஓவியமாக வரைந்திடுமாறு கேட்டு கொண்டான் அதனடிப்படையில் பலஓவியர்களும் உடல் குறைபாடுகளுடைய அரசனை எவ்வாறு அரசன் கோரியவாறு ஒரு அழகிய ஓவியமாக வரைய முடியும் என தயங்கினர் மயங்கினர் ஆனாலும் ஒரு ஓவியர் மட்டும் அரசன் காட்டில் வேட்டையாடும்போது அம்பினை குறிபார்ப்பது போன்று ஒரு கண்மட்டும் தெரியுமாறும் மற்றொருகண் மறைந்திருக்குமாறும் அவ்வாறே குறிபார்ப்பதற்கு ஏதுவாக ஒருகாலை மடித்து நிற்குமாறு அரசனுடைய குறைகளை மறைத்து சிறந்த ஓவியமாக தெரியுமாறு அரசனை ஓவியமாக வரைந்தார் அரசனின் உடலில் பல குறைபாடுகள் இருந்தாலும் அவைகளை பார்ப்பவர்கள் காணமுடியாமல் மறைத்து சிறந்த உயிரோட்டமுடைய ஓவியமாக வரைந்ததை அனைவரும் பார்த்து புகழ்ந்தனர் அவ்வரசனும் அந்த ஓவியனுக்கு வாக்களித்தவாறு ஓவியம் வரைவதற்காக பொன்னும் பொருளும் வழங்கி கவுரவித்தான் அதேபோன்று நம்முடைய வாழ்வில் எதிர்படும் நல்லவைகள் கெட்டவைகள் ஆகியவற்றில் எப்போதும் நல்லவைகளையே அனைவரின் பார்வையில் படுமாறு மாற்றி கொண்டுசெல்வது சிறந்தது எனமதில் கொள்க.

சனி, 14 செப்டம்பர், 2019

ஊழியர்களுக் கான பங்குமுதலீட்டு திட்டம் (Employee Stock Option (ESO))ஒருஅறிமுகம்


ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்காவும் அந்நிறுவனம் வெற்றிகரமாக செயல்படுவதற்கா-கவும் அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியார்கள் ,அலுவலர்கள் ,இயக்குநர்கள் ஆகியோர் செய்து வரும் அரும்பெரும் பணிகளுக்காக அவர்களை கௌரவிக்கும் பொருட்டு ஒரு நிதியாண்டில் அதிகபட்சம் 200 நபருக்கு மிகாமல் தம்முடைய நிறுவனத்தின் பங்குகளை முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட சலுகை விலையில் குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்கள் கொள்முதல் செய்து கொள்ளுமாறு அனுமதிக்கப்படுவதையே ஊழியர்களின்பங்குமுதலீட்டு திட்டம் (Employee Stock Option (ESO)) என அழைக்கப்படுகின்றது ஆயினும் இந்த வகையான வாய்ப்பு பங்குசந்தை-பரிமாற்றத்தின் வாயிலாக அனுமதிப்பதில்லை அதற்கு பதிலாக இவர்கள் நேரடியாக நிறுவனத்தில் இருந்துமட்டுமே பங்குகளை குறிப்பிட்ட காலக்கெடு-விற்குள் நிர்ணயம்செய்யப்பட்ட சலுகை விலையில் கொள்முதல் செய்திட-வேண்டும் இது ஊழியார்கள், அலுவலர்கள், இயக்குநர்கள் ஆகியோர்களுக்கு வழங்கப்படும் ஒரு மறைமுகமான ஊக்கத்தொகையாக கருதப்படுகின்றது அதாவது நிறுவனம் ஒன்று 1000 பங்குகளை பங்கு ஒன்று ரூ.50 வீதம் இந்த திட்டத்தின் அடிப்படையில் வழங்குவதாக கொள்வோம் ஒன்றிரண்டு ஆண்டு கழித்து அவ்வாறு இந்த திட்டத்தின்கீழ் கொள்முதல் செய்த பங்குகளை அன்றைய சந்தை நிலவரத்தின் படி உதாரணமாக ரூ70 விற்பணைவிலையாக இருக்கின்றது எனில் அந்த விலைக்கு விற்பணைசெய்திடும்போது இந்த பங்குகளை கொள்முதல் செய்த ஊழியருக்கு வருமானமாக ரூ.20000 தொகை கிடைக்கின்றது இதையே மறைமுக ஊக்கவிப்பு தொகை என அழைக்கப்-படுகின்றது இவ்வாறான ESO திட்டத்தின் படி பங்குகளை ஊழியர்களுக்கு வழங்குவதாக இயக்குநர்களின் குழுக்கூட்டத்திலும் பொதுப்பேரவையிலும் சிறப்புத்தீரமானம் ஒன்றினை நிறைவேற்றிடவேண்டும் இந்த ESO திட்டத்தின் வாயிலாக வழங்கப்பட்ட பங்குகள் குறித்த தனியாக பதிவேடுகள் பராமரிக்க-வேண்டும் நிறுமச்செயலர் அல்லது வேறு அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் இந்த பதிவேட்டினை பராமரித்திட அனுமதி பெற்றிருக்கவேண்டும் இயக்குநர்களின் அறிக்கையில் இந்த ESO திட்டம்குறித்த விவரங்களை குறிப்பிடவேண்டும் மேலும் பொதுப்பேரவை கூட்டத்திற்கான ஆண்டறிக்கையிலும் இந்த விவரங்களை குறிப்பிடவேண்டும் போன்றவையே இந்த ESO திட்டத்தினை செயல்படுத்துவதற்கான நிபந்தனைகளாகும்

சனி, 7 செப்டம்பர், 2019

மகன் தன்னுடைய தந்தைக்கு ஆற்றும் கடைமை


ஒருநாள் மாலைநேரத்தில் தனது வயதான தந்தையைஒருவர் ஒரு உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். அவருடைய தந்தை மிகவும் வயதானவராகவும் பலவீனமானவராகவும் இருந்ததால்,அவ்வுணவகத்தில் அந்த வயதான தந்தை சாப்பிடும்போது, அவரது உடையின்மீதும் உடல்மீதும் சாப்பிடும் உணவுதுகள்கள் சிந்திகொண்டும் சிதறிகொண்டும் சாப்பிட்டுகொண்டிருந்தார். அவருடைய மகன் தன்னுடைய தந்தை உணவு உண்பதை அமைதியாக பார்த்து கொண்டிருந்தார் அதனை கண்ணுற்ற உணவகத்தில்சாப்பிட்டு கொண்டிருந்த மற்றஅனைவரும் அவ்வாறு சிந்திக்கொண்டும் சிதறிகொண்டும் வயதானவர் சாப்பிடுவதை மிக வெறுப்புடனும் மிககேவலமாகவும் பார்த்துகொண்டிருந்தனர். ஒருவழியாக அந்த வயதானவர் சாப்பிட்டு முடித்ததும், அவரது மகன், மிகவும் பாதுகாப்பாக அவரை கை கழுவும் இடத்திற்கு அழைத்துச் சென்று, உடை முழுவதும் இறைந்து கிடந்த உணவுத் துகள்களைத் துடைத்துசுத்தம்செய்து, அவருடைய கைகளையும் கழுவச்செய்த பின்னர் , அவரது தலைமுடியை சீப்பினால் சீவி, அவரது கண் கண்ணாடியை சரியாக பொருத்தி வெளியே அழைத்து வந்தார். அவ்விருவரும் வெளியே வந்தபோது, அவ்வுணவகத்தில் உணவு அருந்தி கொண்டிருந்த மிகுதி அனவரும் , இந்நிலையில் வேறு யாராவதுஇவ்வாறான தர்மசங்கடமான சூழலில் அமைதியாக பொறுமையாக செயல்படமுடியுமா என ஆச்சரியத்துடன் அம்மகனின் செயலை புரிந்து கொள்ள முடியாமல் அமைதியாக பார்த்து கொண்டிருந்தனர். தாங்களிருவரும் உணவருந்தியதற்காக ஆகும் கட்டணத்தொகையை அவ்வுணவக முதலாளியிடம் கொடுத்து தீர்த்துக் கொண்டபின்னர் அம்மகனும் தனது தந்தையுடன்அந்த உணவகத்தை விட்டு வெளியேறி கொண்டிருந்தனர் அந்த நேரத்தில், அவ்வுணகத்தில் இருந்த மற்றொரு மத்தியவயதுடைய மனிதர் அந்த வயதானவரின் மகனை அழைத்து,"தம்பி நீங்கள் இங்கு எதையாவது விட்டுவிட்டு செல்கின்றீர்களா?". என கேள்வி எழுப்பினார் அதற்கு , “நான் ஒன்றையும் விட்டுவிட்டுசெல்லவில்லை ஐயா, ” என அந்த வயதான மனிதனுடைய மகன் பதிலளித்தார் . அதனை தொடர்ந்து அந்த நடுத்தரவயதுடையவர் ,"இல்லை தம்பி நீங்கள் ஒவ்வொரு மகனும் தன்னுடைய தந்தையை எவ்வாறு பாதுகாத்து கவணித்து கொள்ளவேண்டும் என ஒரு மகன் தன்னுடைய தந்தைக்கு ஆற்றும் கடைமையை அனைவரும் காணுமாறான பாடத்தை விட்டுவிட்டுசெல்கிறீர்கள் ". என்றார் அந்த உணவகம் அமைதியாக இருந்தது.

சனி, 31 ஆகஸ்ட், 2019

பலூன்வியாபாரி


ஒரு கண்காட்சியில் ஒருவியாபாரி பலூன்களை விற்றுகொண்டிருந்தார். அந்த வியாபாரியிடம் சிவப்பு, மஞ்சள், நீலம் பச்சை உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களிலும் பலூன்கள் இருந்தன. பலூன் வியாபாரம் மெதுவாக இருக்கும்போதெல்லாம், அவர் வாயுநிரப்பப்பட்ட பலூனை காற்றில்பறக்க விடுவார், பலூன்களானவை வானத்தில் மேலேபறந்து செல்வதைக் கண்டஉடன் அந்த கண்காட்சிக்கு தத்தமது பெற்றோர்களுடன் வந்திருந்த குழந்தைகள் அனைவரும்ஓடிவந்து அந்த பலூன் வியாபாரியிடமிருந்த ஒரு பலூனையாவது வாங்கி சென்றனர். , அந்த பலூன்வியாபாரியினுடைய பலூன்களின் விற்பனை மீண்டும் உயரும். அவர் நாள் முழுவதும் இவ்வாறான செயல்முறையினை பின்பற்றி தன்னுடைய வியாபாரத்தை தொடர்ந்து கொண்டிருந்தார். இந்நிலையில், யாரோ ஒருவர் தன்னுடைய சட்டையை இழுத்துக் கொண்டிருப்பதை உணர்ந்து யார் இழுக்கின்றனர் எனஅவர் திரும்பிபார்த்தபோது ஒரு சிறுவனைப் கண்டார், "நீங்கள் ஒரு கருப்பு பலூனை விடுவித்தால், அதுவும்வாணத்தில் பறக்குமா?" என அந்த சிறுவன் கவலையுடன் கேட்டான் அந்த சிறுவனின் கோரிய தோரணையால் தூண்டப்பட்ட அந்தபலூன்வியாபாரி "தம்பி இந்த பலூன்கள் பறப்பதற்கு இந்த பலூன்களின் நிறம் முக்கியமன்று, அவைகளின் உள்ளே நிரப்பட்டிருக்கும்வாயு தான் காரணம்பலூன்களின்வாயு இருப்பதால் பலூன்களை மேலேபறக்கச் செய்கின்றது."என பதிலளித்தார் அந்த பலூன்களை போன்றே நம்மில் சில தனிநபர்கள், நிறுவனங்கள் அல்லது நாடுகள் மற்றவர்களை விட ஏன் மிகவும் வெற்றிபெறுகின்றனர் என்று நாம் எப்போதாவது யோசித்திருக்கின்றோமா? அது ஒரு ரகசியம் அன்று. அவர்களனைவரும் மிகவும் திறம்பட செயல்படுகிறார்கள். அதாவது மிகவும் மதிப்புமிக்க சொத்தில் முதலீடு செய்வதன் மூலம் அதை எப்படி முன்னேற்றபாதைக்கு கொண்டுசெல்வது என அவர்கள் கற்றுக்கொண்டார்கள். அதனடிப்படையில் அந்த தனிநபரின், நிறுவனத்தின் அல்லது நாட்டின் வெற்றியானது அவர்களின் சரியான முடிவினை பொறுத்து அமைகின்றது .

சனி, 24 ஆகஸ்ட், 2019

ஒரு நிறுவனத்தின் பணியாளர்கள் தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகத்தேர்வு


நிறுவனத்தின் நிருவாகி: உன்னைபற்றி சொல்.
நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டவர்: நீ என்பதற்கான பதில் பெயரே உன்னை என்பதாகும் ஐயா!
நிறுவனத்தின் நிருவாகி: இந்த நிறுவனத்தில் நீ என்னஎதிர்பார்க்கின்றாய்?
நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டவர்: இந்த நிறுவனம் மாதாமாதம்எனக்கு சரியாக சம்பளம் கொடுக்குமா என்பதே என்னுடைய எதிர்பார்ப்புகள் ஐயா!
நிறுவனத்தின் நிருவாகி: முந்தைய நிறுவனத்தில் பணிபுரியும்போது உன்னுடைய சாதனை என்ன?
நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டவர்: அங்கு மதியம் சாப்பிட்டபின்னர் பணியிடத்தில் தூங்காமல் விழித்திருப்பதுதான் என்னுடைய மிகமுக்கியமான சாதனையாகும் ஐயா!
நிறுவனத்தின் நிருவாகி: ஏன் இந்த நிறுவனத்திற்கு பணிபுரியவரவிரும்புகின்றாய்?
நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டவர்: வேறு எந்த நிறுவனமும் என்னை நேர்முகத்தேர்விற்கு அழைக்கவில்லை அதைவிட இந்த நிறுவனம் என்னுடைய வீட்டிற்கு அருகில் உள்ளது அதனால்தான் ஐயா!
நிறுவனத்தின் நிருவாகி: ஏன் முந்தைய நிறுவனத்தின் பணியை விட்டு வெளியில் வந்துவீட்டீர்?
நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டவர்: முன்பு நான் பணிபுரிந்த நிறுவனமானது தன்னுடைய அலுவலகத்தை வேறு எங்கோ இடம் மாற்றிகொண்டதுர் அவ்வாறுஅந்தஅலுவலகத்தினை எங்கு மாற்றினார்கள் என அதன் மாற்றப்பட்டமுகவரி பற்றி எனக்கு தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை அதனால் அந்தநிறுவனத்தின் பணியை வீட்டுவிட்டேன்ஐயா!
நிறுவனத்தின் நிருவாகி: இந்த நிறுவனத்தில் மாதத்தில் இருபத்திநான்கு நாட்கள் வெளியில்பயனம் செய்யவேண்டும் அவ்வாறான பணியை செய்யமுடிமா?
நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டவர்: ஆஹா! ஊர்சுற்றும் பணியென்றால் எனக்கு மிகவும் விருப்பமானதுதான் ஐயா! ஆனால் நான் எங்கு செல்கின்றேன் என்றுமட்டும் கேள்விகேட்ககூடாது!.

சனி, 17 ஆகஸ்ட், 2019

பெரிய கோடீஸ்வரனும் மூன்று பிச்சைகாரர்களும்


ஊரில் நல்ல இரக்ககுணமுள்ள கோடீஸ்வரன் ஒருவன் இருந்தான். மூன்று பிச்சைக்காரர்கள் அந்த கோடீஸ்வரனிடம் உதவிக்காக அணுக நினைத்தனர். முதல் பிச்சைகாரன் கோடீஸ்வரனிடம் சென்று : "ஐயா! தயவுசெய்து எனக்கு பத்து ரூபாய் மட்டும் பிச்சை கொடுங்கள் ஐயா!." என கோரினான். இந்தமுதல்பிச்சைகாரனின் கோரிய தோரணையை கண்டு அந்த கோடீஸ்வரன் மிகவும் அதிர்ச்சியடைந்தான். "என்ன! நான் உன்னிடம் கடன்பட்டிருப்பதைப் போல பத்து ரூபாய் கொடுங்கள் என என்னிடம் கோருகின்றாய்! நான் என்ன உனக்கு கடனாளியா? உனக்கு எவ்வளவு தைரியம்? ஒரு பிச்சைக்காரனுக்கு பத்து ரூபாய்தான் என்னால் கொடுக்க முடியுமா! , நான் அவ்வளவு கேவலமாக போய்விட்டேனா ! இந்தா ஐந்து ரூபாய் இதனை எடுத்துக்கொண்டு தூரஓடிபோஇங்கு திரும்பவும் வராதே!" என்று அந்த கோடீஸ்வரன் ஐந்து ரூபாயை மட்டும் கொடுத்து பிச்சைகாரனை விரட்டிஅடித்தான். அந்த முதல் பிச்சைகாரன் ஐந்து ரூபாயை மட்டும் அந்த கோடீஸ்வரனிடமிருந்து வாங்கிகொண்டு சென்றான். அடுத்தஇரண்டாவது பிச்சைக்காரன்அதே கோடீஸ்வனிரிடம் சென்று: "ஐயா! நான் கடந்த பத்து நாட்களாக உணவில்லாமல் பட்டினியாக இருக்கின்றேன் . தயவுசெய்து நான் சாப்பிடுவதற்கு ஏதாவது உதவுங்கள்ஐயா." எனக்கோரினான் அதனைதொடர்ந்து"உனக்கு எவ்வளவு வேண்டும்?" என அந்த கோடீஸ்வரன் இரண்டாவது பிச்சைகாரனிடம் கேட்டான்.அதற்கு இரண்டாவது பிச்சைகாரன்"நீங்கள் என்ன கொடுத்தாலும் போதும் ஐயா" என பதிலளித்தான். அதனைதொடர்ந்து அந்த கோடீஸ்வரன்", இந்தா நூறு ரூபாய் . குறைந்தது மூன்று நாட்களுக்கு நல்ல உணவைக்சாப்பிடுவதற்குஇது போதுமானதாகும்." என இரண்டாவது பிச்சைக்காரனுக்குஅவன் கேளாமளேயே நூறு ரூபாயைகோடீஸ்வரன் வழங்கினான் அந்தநூறுரூபாயை மட்டும் பெற்றுகொண்டு இரண்டாவது பிச்சைகாரன் அங்கிருந்து சென்றான். மூன்றாவது பிச்சைக்காரன்அதே கோடீஸ்வரனிடம் வந்து. "ஐயா, உங்களுடைய உன்னத குணங்களையும் தயாளகுணங்களையும் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், அதனால், உங்களை என்னுடைய வாழ்நாளில் ஒருமுறையாவது நேரில் பார்க்கவேண்டும் என்ற பேராவலுடன் நான் உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். இதுபோன்ற தொண்டு மனப்பான்மை உடையவர்கள் நிச்சயமாக நாம் வாழும் இந்த பூமியில் காண்பது மிகவும் அரிதிலும் அரிது ஐயா" என்று கோடீஸ்வரனை மிகவும் புகழ்ந்து கூறினான்.அவ்வாறான சொற்களை பிச்சைகாரனின் வாயிலிருந்து வந்ததும் மிகவும் மகிழ்ச்சியுற்றகோடீஸ்வரன்"தயவுசெய்து இந்த நாற்காலியில் உட்காருங்கள் ஐயா" என்று கோடீஸ்வரன் மூன்றாவது பிச்சைகாரனிடம் கூறி தன்னுடைய வீட்டிலுள்ள நாற்காலியில் அமரச்செய்தான்.மேலும் "நீங்கள் மிகவும் சோர்வாகத் தோன்றுகிறீர்கள். தயவுசெய்து வயிறார இந்த உணவை சாப்பிடுங்கள்" என மூன்றாவது பிச்சைக்காரனுக்கு போதுமான உணவை கோடீஸ்வரன் வழங்கினான். மூன்றாவது பிச்சைகாரன் உணவு உண்ட பின்னர் " ஐயா நான் உங்களுக்காக என்ன செய்ய வேண்டும் என்று இப்போது கூறுங்கள்" என மிகப்பணிவுடன் அந்த மூன்றாவது பிச்சைகாரனிடம் கோடீஸ்வரன் கோரினான். "ஐயா நான் ஒரு சிறந்த நபரைச் சந்திக்க மட்டுமே வந்தேன். ஆனால் நீங்களோ ஏற்கனவே எனக்கு வயிறார உணவைவழங்கிவிட்டீர்கள்.இதைவிட உங்களிடமிருந்து வேறு என்னஎனக்கு தேவை? அதைவிடநீங்கள் ஏற்கனவே என்னிடம் அசாதாரணஅன்பினை காட்டியுள்ளீர்கள் அதுவேபோதும் ஐயா!" எனமூன்றாவது பிச்சைகாரன்கூறியதும் மிகவும் மனம் குளி ர்ந்து" ஐயா உங்களைபோன்ற நபர்கள் நண்பர்களாக எனக்கு அருகில் எப்போதும் இருக்கவேண்டும் அதுவே என்னுடைய வாழ்க்கையின் குறிக்கோள் " என்ற வேண்டுகோளுடன் தன்னுடன் இருக்கும்படிமிகவும் கெஞ்சினான், தொடர்ந்து அந்த மூன்றாவது பிச்சைகாரனுக்காக ஒரு நல்ல வீட்டைக் கட்டிகொடுத்து அதில், அவனது வாழ்நாள் முழுவதும் வாழ்வதற்கு தேவையான பொருட்களை வழங்கி பிச்சைகாரனைகோடீஸ்வரன் நன்கு கவனித்துகொண்டான் பொதுவாக நாம் எவ்வாறு மற்றவர்களை அனுகுகின்றோமோ அதற்கேற்பவே உதவியும் மரியாதையும் கிடைக்கும் என தெரிந்து கொள்க

புதன், 14 ஆகஸ்ட், 2019

குரங்கும் மரத்தாலான ஆப்பில் பழமும்


காட்டில் குரங்கு ஒன்று வாழ்ந்துவந்தது அது பசியெடுத்தால் தேவையானஅளவு மரங்களில் காய்த்து தொங்கிய பழங்களை பசியாற பறித்து தின்றபின்னர் ஓய்வெடுத்துகொள்ளும் பின்னர் மீண்டும் பசிஎடுத்தால் மீண்டும் பசியாற தேவையான அளவு பழங்களைபறித்து தின்றபின்னர் ஓய்வெடுத்துகொள்ளும் இவ்வாறு அதனுடைய நடைமுறை வாழ்க்கையானது சென்று கொண்டிருக்கம்போது ஒருநாள்அந்த காட்டிலிருந்த குரங்கு தவறுதலாக மக்கள் குடியிருக்கும் நகரத்திற்கு வந்து சேர்ந்தது அங்கு ஒருவீட்டி்ல கண்ணைகவரும் வகையில் அழகான ஆப்பில் பழங்கள் குவியலாக இருந்ததைபார்த்ததும்பேராசையினால் அந்த குரங்கானது தன்னுடைய கைகளில்அனைத்து ஆப்பில் பழங்களையும் அள்ளி எடுத்திட முயன்று முடியாமல் முடிவில் ஒன்றை மட்டுமே எடுத்துகொண்டு காட்டிற்கு ஓடியது காட்டில் இந்த வண்ணமயமான ஆப்பிலை பார்த்த மற்ற குரங்குகள் அந்த ஆப்பில் பழத்தை அபகரித்திட துரத்திகொண்டு வந்தன உடன் இந்த குரங்கு மற்ற குரங்குகளுக்கு கிடைக்காமல் வெகுதூரத்திற்கு ஓடியது சிறிதுதூரம் சென்றபின்னர் தன்னை யாரும் பின்தொடரவில்லை என்பதை உறுதிசெய்து கொண்டு தான் கொண்டுவந்த ஆப்பில் பழத்தை கடித்து தின்னலாம் என கடிக்க முற்பட்டபோது ஐயோபாவம் அந்த ஆப்பில் பழமானது வண்ணம் பூசப்பட்டமரத்தால் செய்யப் பட்டதாகும் அதனால் அந்தகுரங்கினுடைய பற்களுக்குதான் வலி ஏற்பட்டதே தவிரஎவ்வளவு முயன்றும் பசியாற கடித்து தின்னமுடியவில்லை மீண்டும் பசிஎடுத்ததால் மீண்டும் முயன்றும் கடித்து தின்ன முடியவில்லை சரி வேறுஏதாவது பழமரங்கள் அருகில் உள்ளதாவென தேடிபார்த்தபோது அருகில் பல்வேறு பழமரங்களில் பழங்கள் காய்த்து தொங்கின அந்த மரங்களில் ஏறி அவைகளையாவது பறித்து தின்றுபசியாறலாம் என்றால் கையிலுள்ள தின்னமுடியாத ஆப்பில் பழத்தை தரையில் வைத்தால்தான் அந்த பழமரங்களில் ஏறமுடியும் என்ற நிலையில் ஆப்பில் பழத்தை கீழே வைத்திட்டால்வேறு யாராவதுதான் மரத்தில் ஏறிஇறங்குவதற்குள் எடுத்து தின்றுவிட்டால் என்ன செய்வது என பேராசையினால் அதனை தரையில் வைத்திடமுடியாமல் மரத்திலும் ஏறமுடியாமல் பசியோடு தவித்தது நேரம் ஆக பசி அதிகமாகி கொண்டேயிருந்தது அதனோடு கையில் தொடர்ந்து அந்த கடித்து தின்னமுடியாத ஆப்பில் பழத்தை வைத்து கொண்டிருப்பதால் கைகளுக்கு அதிக வலிஏற்பட்டு தரையில் அந்த ஆப்பில் பழத்தை வைக்கவும் முடியாமல் தின்னவும் முடியாமல் தவிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது இதற்குமேல் பசிதாங்கமுடியாத நிலையில் அந்த கடித்துதின்னமுடியாத ஆப்பில் பழத்தை தரையில் வைத்துவிட்டு அருகில்இருந்த மரத்தில் ஏறி தேவையானஅளவு வேறு பழங்களைபறித்து தின்று பசியாறியது இதேபோன்றே நாமும்நம்முடைய பேராசையினால் தேவையற்ற பயனற்றபல்வேறு எண்ணங்களையும் கருத்துகளையும் நம்முடைைய மனதில் வலிய சேர்த்து வைத்துகொண்டு பயன்படுத்தமுடியாமல் அல்லலுறுகின்றோம் முதலில் அவற்றை அறவே ஒதுக்கிவைத்துவிட்டு வாழ்வில் வெற்றிபெறுவதற்கு உதவிடும் ஆக்கபூர்வமான நல்ல பயனுள்ள கருத்துகளை மட்டும் மனதில் கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது

சனி, 10 ஆகஸ்ட், 2019

நேர்மையான பெண்குழந்தை


இளம்வயது தொழிலதிபர் ஒருவர்தங்களுடைய மகிழ்வுந்தில் குடும்பத்தாருடன் அடுத்து இருந்த நகரத்திற்கு சென்று வீட்டிற்கு திரும்பிவந்து கொண்டிருந்தார் அவர்களுடையவீடு இன்னும் நான்கு அல்லது ஐந்து கிலோமீட்டர் இருக்கும்போது தங்களுடையவீட்டிற்கு இந்தமாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி கொண்டு செல்லலாம் என ஒரு பெரிய கடையின் வாயிலில் வண்டியை நிறுத்தம் செய்து குடும்ப உறுப்பினர் அனைவரும் அந்த கடையின் உள்ளே சென்று மளிகை பொருட்களை வாங்கிகொண்டு மீண்டும் தங்களுடைய மகிழ்வுந்தில் ஏறி வீடு திரும்பினர் தங்களுடைய வீட்டில் வண்டியைவிட்டு இறங்குவதற்கு குடும்பஉறுப்பினர் அனைவரும் தயாராகும் போது அவர்களுடைய சிறிய பெண்குழந்தையானதுமளிகை பொருட்கள் வாங்கிய அந்த கடையில் சிறிய சாக்லேட் பை ஒன்றினை கையிலெடுத்துவைத்திருந்தது அதற்கான தொகைகடைக்கு வழங்கப்படவில்லை வேடிக்கை பார்த்து கொண்டே வந்த அந்த பெண்குழந்தையானதுஅப்போதுதான் ஞாபகம் வந்து அப்பா அப்பா இந்த சாக்லேட்டிற்கான ரூபாயை அந்த கடைகாரருக்கு தரவில்லையே கண்டிப்பாக அதற்கான ரூபாயை கடைக்காரருக்கு கொடுத்துவிடவேண்டும் அப்பா என கூறியது அந்த சாக்லேட்டிற்கான விலை பத்து ரூபாய் மட்டுமே இருக்கும் அதனால் அதற்காக மீண்டும் அவ்வளவு தூரம் வண்டியில் செல்வதா வேண்டாமாஎன தடுமாறி நின்றபோது வேண்டுமானால் நான் நடந்தே போய் இதற்கான பணத்தை அந்த கடைக்காரருக்கு கொடுத்துவிட்டு வந்துவிடவா அப்பா எனஅவர்களுடைய பெண்குழந்தை கூறியதும் அந்த இளம் தொழிலதிபர் தன்னுடைய பெண்குழந்தையின் நேர்மையை கண்டு மனம் நெகிழ்ந்து மகிழ்வுந்தை வீட்டு கீழிறங்காமல் அப்படியே கடைக்கு திரும்பி சென்றனர் அங்கு கடைக்கு சென்று அந்த கடைகாரரிடம் அந்த குழந்தையானது மாமா உங்களுக்கு பணம் கொடுக்காமல் தவறுதலாக இந்த சாக்லேட் பையை எடுத்து சென்றுவிட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் இந்தாருங்கள் அந்த சாக்லேட் பைக்கான தொகை என தன்னுடைய கையிலிருந்த பத்துரூபாயைஅந்த கடைக்காரருக்கு கொடுத்தது உடன்அந்த கடைக்காரர் அந்த பெண்குழந்தையின் நேர்மையை மெச்சி இந்தபெண்குழந்தையின் நேர்மையை அந்த கடைக்கு வந்த அனைவருக்கும் தெரியுமாறு அறிவிப்பு செய்தார் அதுமட்டுமல்லாமல் அந்த நகரத்தின் சிறந்த குழந்தையாக அந்த ஆண்டு அந்த பெண்குழந்தை தெரிவுசெய்யப்பட்டது சாக்கலேட்பைக்கான தொகை கொடுத்துவிட்டதால் அந்த இளம் தொழிலதிபர்குடும்ப உறுப்பினர்அனைவரும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வீடுசென்று சேர்ந்தனர்

சனி, 3 ஆகஸ்ட், 2019

கொத்தனாரும் மேற்பார்வையாளரும்


நகர்புறத்தில் அடுக்குமாடி கட்டுவதற்கான பணிகள் நடைபெற்றுகொண்டிருந்தன. அங்கு மேல் தளத்திலிருந்து அந்த அடுக்குமாடி கட்டுவதை மேற்பார்வையிடும் மேற்பார்வையாளர் உடனடியாக ஏதோவொரு முக்கியமான பணியை செய்யுமாறு கூறுவதற்காக கீழ்தளத்தில் பணி செய்து கொண்டிருக்கும் கொத்தனார் ஒருவரை பெயரிட்டுஅழைத்தார் பல்வேறு பணிகளினால்உருவாகும் ஓசையினால் அந்த கொத்தனாரும் மேற்பார்வையாளரின் அழைப்பை கவணிக்காமல் தன்னுடைய பணியை செய்துகொண்டிருந்தார் இரண்டு மூன்றுமுறை கொத்தனாரின் பெயரை மேற்பார்வையாளர் அழைத்தும் எதற்குஅழைத்தார்கள் என அந்த கொத்தனார் திரும்பிகூட பார்த்திடாமல் இருந்ததை தொடர்ந்து மேற்பார்வையாளர் தன்னுடைய பையிலிருந்து நூறுரூபாய் தாள் ஒன்றினை எடுத்து அதே கொத்தனாருக்கு அருகில் விழுமாறு விட்டெறிந்தார் இப்போது அந்த கொத்தனார் இன்று படம் பார்ப்பதற்கான செலவிற்கு ஆயிற்றுஎன அருகில்வந்து விழுந்த ரூபாய்தாளினை எடுத்து தன்னுடைய பையில் வைத்து கொண்டு தொடர்ந்து தன்னுடைய பணியை செய்து கொண்டிருந்தார் மீண்டும் மற்றொரு நூறு ரூபாய் தாளினை அந்த மேற்பார்வையாளர் கொத்தனாரை நோக்கி வீசினார் மீண்டும் ஆகா அருமை படம் பார்க்க செல்லும்போது நல்லஉணவகத்தில் இன்று நன்றாக சாப்பிட்டு செல்வதற்காயிற்று என அந்த கொத்தனார் தன்னருகில்வந்து விழுந்த ரூபாய் தாளினை எடுத்து தன்னுடைய பையில் வைத்து கொண்டு மீண்டும் தொடர்ந்து தன்னுடைய பணியை செய்து கொண்டிருந்தார் அதனால் எரிச்சலுற்ற மேற்பார்வையாளர் சிறு கல்லை எடுத்து அந்த கொத்தனாரின் தலையின்மீது படுமாறு விட்டெறிந்தார் அந்த கல்லும் மிகச்சரியாக அந்த கொத்தனாரின் தலையில் விழுந்தவுடன் சுரீர் என வலிஉருவானதை தொடர்ந்து அந்த கொத்தனார் அந்த கல்வந்த வழியை அன்னாந்து பார்த்தார் அப்போதுதான் மேற்பார்வையாளர் அவரை மேல்தளத்திற்கு வருமாறு அழைத்ததைதொடர்ந்து மேல் தளத்திற்கு சென்றார் மனிதர்களில்பெரும்பாலோனோர் இதேபோன்று நம்முடைய வாழ்க்கைபாதையில் நமக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகளை யார்செய்தார்என பார்த்து அவர்களுக்கு நன்றிகூற மாட்டோம் ஆனால் நமக்கு ஏதேனும் சிறியஅளவில் தீங்கு ஏற்பட்டால் உடனடியாக நாம் அதனை கவணத்தில் கொண்டு அதனை ஏற்படுத்தியவரை அடையாளம் கண்டு அவர் நம்மைவிட பலசாலியாக இருந்தால் அவர்களுடன் மேலும் நமக்கேன் வம்பு என தாண்டி சென்றிடுவோம் ஆனால் நம்மைவிட பலமற்றவர்களெனில் அவர்களைஉண்டு இல்லையென ஒரு வழி செய்தபின்னர் வேறு எந்தவொருபணியை செய்யதுவங்கிடுவோம் இதுவே மனிதனின் இயல்பான குணமாகிவிட்டது அதற்கு பதிலாக தவறுதலாக கூட இவ்வாறு ஏற்ட்டிருக்கும் என மன்னித்து செல்வதுதான் சுமுகமாக வாழ்வதற்கான வழியாகும் என செயல்படுக மேலும் நமக்கு நன்மை செய்பவரை யாரென அறிந்து அவர்களுக்கு நன்றி சொல்வது நம்மீது மதிப்பு அதிகமாக்குவதற்கு ஏதுவாகும் அதனால் நமக்கு மேலும் உதவி தயங்காமல் கிடைக்க ஏதுவாகிவிடுமல்லவா

சனி, 27 ஜூலை, 2019

கல்லால்அல்லது உலோகத்தால உருவாக்கப்பட்ட சிலையானது நம்முடைய கோரிக்கையை எவ்வாறு நிறைவேற்றமுடியும்


நானும் எங்களுடைய சிறிய மகளும் கோயில் ஒன்றிற்கு சென்றோம் கோயிலின் முகப்பிற்கு சென்றபோது உண்மையான சிங்கம் ஒன்று நம்மை நோக்கி பாய்ந்து வருவதை போன்றிருந்த அந்த கோவிலின் தூனிலிருந்த சிற்பத்தை பார்த்த எங்களுடைய சிறியமகள் அப்பா அப்பா சிங்கம் ஒன்று நம்மை அடித்து சாப்பிடவருகின்றது அதனால் வாருங்கள்நாம் கோயிலிற்குள் போகாமல் வெளியே ஓடிவிடலாம் என கத்தி கூச்சலிட்டாள் மகளே அது உண்மையான சிங்கம் அன்று சிங்கம் போன்ற சிலைதான் அதற்குஉயிரில்லை நம்மை ஒன்றும் அடித்து கொல்லாது பயப்படாமல் வா நாம் இந்த கோயிலின் உள்பகுதிக்கு செல்வோம் என ஆறுதல் கூறி பயத்தை போக்கியபின்னர் கோவிலின் உட்பகுதிக்கு சென்றோம் அப்போது எங்களுடைய மகள் அதெல்லாம் சரியப்பா இதுஅது சிலைதான் அதனால் உண்மையான சிங்கம் போன்று நம்மை எதுவும் செய்யாது என கூறுகின்றீர் ஆனால்இந்த கோயிலின் உட்புறம் இருக்கின்றதே கடவு சிலைள் அதுவும் சிலைதானே அதுமட்டும் எப்படி நம்முடைய குறைகளனைத்தையும் தீர்த்து வைக்கமுடியும் என பதில் கேள்வி கேட்டவுடன் எங்களுடைய சிறிய மகளின் கேள்விக்கு என்னால் பதில் பேசமுடியாமல் நின்றுவிட்டேன் அதுவும் உண்மைதானே நட்ட கல்லை சுற்றியே நான்கு பூக்களை வைத்திட்டால் சுற்றிசுற்றி வந்து சாமி சாமி என கும்பிடுவர் நட்டகல்லும் பேசுமோ நாதன் உன்உள்ளிருக்கையில் என முன்டாசு கவிஞர் பாரதியார் கூறிசென்றார் நாம் முயன்று நம்முடைய செயல்களை செய்திடாமல் கல்லால்அல்லது உலோகத்தால உருவாக்கப்பட்ட சிலையானது நம்முடைய கோரிக்கையை எவ்வாறு நிறைவேற்றமுடியும்

சனி, 20 ஜூலை, 2019

தர்பூசனி பயிரிட்ட விவசாயியும் கிராமத்து சிறுவர்களும்


ஒரு கிராமத்தில் ஒரேயொரு விவசாயிமட்டும் கோடைகாலத்தில் பயன்படும் தர்பூசனியை தன்னுடைய நிலத்தில் பயிரிட்டிருந்தார் அவருடைய விளைநிலம் முழுவதும் தர்பூசனிபழம் பழுத்திருந்தன ஆயினும் சிறுவர்கள் அவர் இல்லாத நேரத்தில் அவருடைய கொல்லைக்கு வந்து தர்பூசனி பழத்தை அறுத்து சாப்பிட்டு சென்றனர் இதனை எவ்வாறு தடுப்பது என சிந்தித்து கடைசியாக எச்சரிக்கை இந்த கொல்லையில் விளைந்த தர்பூசனி பழத்தில் ஒன்றுமட்டும் சயினைடு விசம் கலந்தது என்ற அறிவிப்பு பலகை ஒன்றினை கட்டி தொங்கவிட்டு சென்றார் அதன்பின்னர் அந்த கிராமத்து சிறுவர்கள் தர்பூசனி பழத்தை அறுத்து சாப்பிடலாம்என அங்கு வந்தபோது இந்த எச்சரிக்கை பலகையை கண்டவுடன் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டனர் ஆயினும் ஒரு சிறுவன் மட்டும் சிறிது நேரம் ஆலோசித்து அதே அறிவிப்பு பலகையில் ஒன்றன்று இரண்டில் மட்டும் சயினைடு விசம் கலந்தனவாகும் என எழுதி வைத்து விட்டு சென்றான் அதன் பிறகு அந்த விவசாயி திரும்ப வந்து இந்த எச்சரிக்கையை பார்த்தவுடன் ஐயய்யோ என்னுடைய கொல்லையில் விளைந்த தர்பூசனி பழம் எதையும் பறித்து விற்கமுடியாது போய்விட்டதே என தலையில்கைவைத்து கொண்டு உட்கார்ந்துவிட்டான்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...