சனி, 29 ஆகஸ்ட், 2020

தேவையுள்ள அரசனும் ஒரு முனிவரும்


முன்னொரு காலத்தில் மிகவும் புகழ்பெற்ற  மன்னர் ஒருவர் அரசாளும் நாட்டினுடைய நகரத்தில் ஒரு முனிவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவ்வாறு  அம்முனிவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, தரையில் ஒரு நாணயத்தை கண்டு அதை எடுத்தார்.  தற்போதைய தனது எளிய வாழ்க்கையில் மிகவும் திருப்தியாக வாழ்வதால் அம்முனிவருக்கு அந்த நாணயத்தைப் பயன்படுத்தவேண்டிய தேவை ஏற்படவில்லை. எனவே, அதை தேவைப்படும் வேறுயாருக்காவது நன்கொடையாக வழங்க அவர் திட்டமிட்டார். அதனால் அந்த நாணயம்தேவைப்படுவர் யாராவது இருக்கின்றார்களா என அவர் நாள் முழுவதும் அந்த நகரத்தின் தெருக்களில் தேடி கொண்டிருந்தார், ஆனால் அப்படி யாரையும் அவர் காணவில்லை. இறுதியாக, அவர் பயனிகள் தங்குவதற்கான சத்திரத்தை அடைந்து அன்றிரவு அங்கேயே கழித்தார்.
அடுத்த நாள் காலையில், அவர் தனது அன்றாட நடவடிக்கைகளுக்காக காலையில் எழுந்து வெளியில் செல்லும்போது, அந்த நகரத்தின் அரசன் அடுத்தநாட்டுடன்போரிடுவதற்காக தயாராகி தன்னுடைய படையுடன் போருக்கு செல்வதை கண்டு சாலை ஓரமாக படைகள் செல்வதற்காக வழிவிட்டு ஒதுங்கி நின்று பார்த்து கொண்டிருந்தார். சாலையோரம் முனிவர் நிற்பதைக் கண்ட மன்னன், தன் படையை சிறிதுநேரம் நிறுத்தும்படி கட்டளையிட்டான். பின்னர் மன்னன் முனிவரிடம் வந்து, “வணக்கம் ஐயா!, பக்கத்து நாட்டுடன் போரிட்டு  வென்று என்னுடைய நாட்டினை விரிவுபடுத்துவதற்காக படையுடன் செல்கிறேன். எனவே போரில் வெற்றிபெற  ஆசீர்வதியுங்கள் ”. என வணங்கியவாறு கூறினான்
 முனிவர்சிறிது நேரம்  யோசித்த பிறகு, அரசனிடம் நேற்று அந்நகரில் தான் கண்டெடுத்த   நாணயத்தை கொடுத்தார்!  நான் இந்த நாட்டிற்கே அரசன் என்னிடம் கேவலம் ஒரேயொரு நாணயத்தை கொடுப்பதா என அந்த அரசன் மிகவும்  கோபமடைந்தார்,  இருந்தாலும் கோபத்தை அடக்கிகொண்டு ! அந்த நாட்டு அரசன் மிக  ஆர்வத்துடன் அந்த  முனிவரிடம், “நீங்கள்  எனக்கு இந்த ஒரு நாணயத்தை வழங்குவதன் பொருள் என்னஐயா?” என்று கேட்டார்.
அரசன் கேட்ட சந்தேகத்திற்கு  முனிவர் , “அரசனே! நேற்று உன்னுடைய நாட்டின்  தெருக்களில் உலாவும்போது இந்த நாணயத்தை  கண்டேன். எனக்கு அந்த நாணயம் தேவையில்லை. எனவே, நான் அதை ஏதாவதொரு ஏழைக்கு நன்கொடையாக அளிக்கலாம்  என்று முடிவு செய்தேன். அதனால் நேற்று காலைமுதல் மாலை வரை அவ்வாறான ஏழை யாராவது இருக்கின்றார்களா அவர்களுக்கு இந்த நாணயத்தை வழங்கலாம் என தேடினேன், ஆனால் அப்படி யாரும் இல்லை. உன்னுடைய நாட்டில் வாழும் மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.  மேலும் மக்கள் அனைவரும் தங்களிடம் இருப்பதில் மிகவும் திருப்தியுடன் வாழ்வதாக தோன்றியது. எனவே இந்த நாணயத்தின் தேவையுள்ளவர்கள் யாரையும் நான் காணவில்லை. ஆனால் இன்று, இந்த நாட்டின் அரசன்மட்டும், திருப்தியில்லாமல் இன்னும் அதிகமாகப் பெற விரும்புகிறார், அரசன்மட்டும் ஏற்கனவே தன்னிடம் உள்ளவற்றில் திருப்தி அடையவில்லை, அதனால் இந்த நாணயம் இந்த அரசனக்குமட்டும் கண்டிப்பாகத் தேவை என்று உணர்ந்தேன். அதனால் உங்களிடம் வழங்கினேன் ” என நீண்ட விளக்கமளித்தார்
மன்னர் தனது தவறை உணர்ந்து பக்கத்து நாட்டுடன் போரிட்டு தன்னுடைய நாட்டினை விரிவாக்கம் செய்திடவேண்டும் என திட்டமிட்ட போரை கைவிட்டார்.
நீதி: நம்மிடம் இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்க நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். , நாம் அனைவரும் ஏற்கனவே வைத்திருப்பதை விட அதிகமாகவோ அல்லது சிறப்பாகவோ வேண்டுமென விரும்புகிறோம், ஆனால் நம்மிடம் ஏற்கனவே இருப்பதை அனுபவிப்பதற்கான வாய்ப்பை வீணாக்கி கொண்டிருக்கின்றோம். நம்மிடம் இல்லாததை வைத்திருப்பவர்கள் இருக்கிறார்கள், நம்மிடம் இருப்பதை விட அதிகமாக வைத்திருப்பவர்கள் ஒருசிலர் இருப்பார்கள். அதனால் நம்மை மற்றவர்களுடன் எப்போதும் ஒப்பிட வேண்டாம், இருப்பதை கொண்டு மகிழ்ச்சியாக இருந்திடுக,

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

கட்டாயமாக மாற்றக்கூடிய கடனீட்டுபத்திரங்களை சமவிகித பங்குகளாக எவ்வாறுமாற்றுவது

 

கடனீட்டு பத்திரம்’ என்பது நிறுவனங்களுக்கு நிதிவசதி ஏற்படுத்தக்கூடிய ஒரு கடன் வாங்குவதற்கான கருவியாகும், இதனை நிறுவனங்கள் தங்களுக்கு நீண்ட காலத்திற்குதேவையானகடன்தொகையை நிலையான வட்டி விகிதத்தில் வாங்குவதற்காகப் பயன்படுத்திகொள்கின்றன.கடன் பத்திரங்கள், பத்திரங்கள் அல்லது வேறு எந்த கருவியும் உள்ளடங்கிய, அவ்வாறான கடன்பெறுவதற்காக நிறுவனத்தின் சொத்துக்களின் மீது அடைமானமாக ஆக்கப்பட்டாலும் ஆக்கப்படவில்லைஎன்றாலும் ஒரு நிறுவனத்தின் கடனை நிரூபிக்கும் எதுவும் கடன்பத்திரமாகும்” என நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 2 (30) கடன் பத்திரங்களை பற்றி வரையறுக்கிறது. மேலும் நிறுவனங்களின் விதி 18 (பங்கு மூலதனம் மற்றும் கடன் பத்திரங்கள்) விதிகள், 2014 மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் பிரிவு 71, கடன் பத்திரங்கள் பற்றி விவாதிக்கின்றன.

மாற்றத்தக்க கடனீட்டுபத்திரங்கள் என்பது ஒரு நிறுவனத்தால் வழங்கப்படும் கடனீட்டு பத்திரங்களின் வகைகளில் ஒன்றாக வரையறுக்கப்படுகிறது, இதனை அந்நிறுவனத்தின் பங்குகளாக மாற்றப்படலாம். கட்டாயமாக மாற்றக்கூடிய கடனீட்டு பத்திரங்கள்(Compulsorily convertible debenture), கடனீட்டுபத்திரங்களின் செலவாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அந்நிறுவனத்தின் சமவீத பங்காக மாற்றப்படுகிறது. இதனை CCDஎனும் சுருக்கமான பெயரால் அழைக்கப்படுகிறது. இந்தCCD என்பது தூய கடன் அல்லது தூய பங்கு ஆகியவற்றின் கலவையாக இருப்பதில்லை. நிறுவனத்தின் இந்த கடனீட்டு பத்திரங்களின் வெளியீட்டின் போது, கடன்தொகைகளில் இருந்து சமவீத பங்கு மூலதனத்திற்கு மாற்றுவதற்கான விகிதம் எந்த விகிதத்தில் இருக்கும் என்பதை இந்த சிசிடி தீர்மானிக்கிறது.
இவ்வாறான சிசிடிஐ சமவீதபங்காக மாற்றுவதற்கான நடைமுறை பின்வருமாறு;

1. நிறுவனத்தின் Articles of Associationஇல் இவ்வாறு மாற்று விருப்பத்தை அனுமதிக்க வேண்டும்.
2.
இயக்குநர்களின் குழுக் கூட்டத்தை நடத்தி, சி.சி.டி.யை சமவீத பங்குகளாக மாற்றுவதற்கான இயக்குநர்களின் குழுக்கூட்டத்தில் அதற்கு தேவையான தீர்மானத்தை நிறைவேற்றுவதோடு, நிறுவனத்தின் பங்குதாரர்களின் ஒப்புதலுக்காக பொதுப்பேரவை கூட்டத்தின் அறிவிப்பை அங்கீகரிக்கவேண்டும்.
3.
நிறுவனத்தின் பங்குதாரர்களின் பொதுப்பேரவைக் கூட்டத்தை நடத்தி, சி.சி.டி.யை சமவீத பங்குகளாக மாற்றுவதற்கான சிறப்புத் தீர்மானத்தை நிறைவேற்றுவதும். நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 62 ன் படி, சிறப்புத் தீர்மானத்திற்கு விளக்கமளிக்கும் அறிக்கையைத் தயாரிப்பதும் கட்டாயமாகும். அவ்வறிக்கையில் அவ்வாறு மாற்றம் செய்வதற்கு தேவையான அனைத்து தகவல்களும் இருக்க வேண்டும்.

4. இவ்வாறான சிறப்புத் தீர்மானத்தை நிறைவேற்றிய 30 நாட்களுக்குள் படிவம்- MGT -14 வாயிலாக இதுகுறித்த தகவலை நிறுவன பதிவாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும்.

5. அதற்கான ஒரு வாய்ப்பு கடிதம் கட்டாயமாக மாற்றக்கூடிய கடன் பத்திரதாரர்களுக்கு அனுப்பப்படவேண்டும். இவ்வாறான மாற்றத்திற்காக கடன் பத்திரதாரர்கள் ஏற்புகை செய்து அனுப்பிய அந்த ஒப்புதலை சரிபார்க்க வேண்டியது நிறுமச்செயலாளரின் கடமையாகும்.

6. இதுகுறித்து அந்நிறுவனம் மாற்றத்திற்கான மதிப்பீட்டு அறிக்கையைப் பெற வேண்டும்.

7. பொதுப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் சமவீதபங்களை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் அவ்வாறு வழங்கப்படும்பங்கின் விலை தீர்மானிக்கப்படவேண்டும்.

8. இவ்வாறான பங்குதாரர்களுக்கு படிவம் SH-1 இன் படி, பங்கு சான்றிதழை தயாரித்து வழங்குவது கட்டாயமாகும்.
9.
சமவீத பங்கினை ஒதுக்கீடு செய்பவர்களுக்கு பங்குச் சான்றிதழ் வழங்கப்படவேண்டும் மேலும் அவர்களின் பெயர்கள் உறுப்பினர்களின் பதிவேட்டில் பதிவுசெய்யப்படவேண்டும்.

10. இவ்வாறு பங்கு ஒதுக்கீடுசெய்யப்பட்ட 30 நாட்களுக்குள், பங்குகளாக ஒதுக்கீடு செய்வது குறித்து அறிக்கையை படிவம் PAS -3 நிறுமங்களின்பதிவாளரிடம் தாக்கல் செய்யப்பட வேண்டும். முழுமையான பங்குகள் ஒதுக்கிடுசெய்தவர்களின் பட்டியலுடன் நிறுவனங்கள் (பதிவு அலுவலகங்கள் மற்றும் கட்டணம்) விதிகள், 2014 இன் படி கட்டணம் செலுத்தப்பபட வேண்டும்.

11. மேலும் இந்த PAS -3 எனும் படிவத்துடன் தேவையான பட்டியல், பங்குகள் ஒதுக்கீடுசெய்யப்பட்டவர்களின் பட்டியல், இயக்குநர்களின்குழுத்தீர்மான நகல், பொதுப்பேரவைசிறப்புத் தீர்மானத்தின் நகல் , மதிப்பீட்டு அறிக்கை ஆகியவற்றை இணைத்து சமர்ப்பிக்கவேண்டும்

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

மீச்சிறு சிறு நடுத்தர நிறுவனங்கள்( MSME)


I. அறிமுகம்:பொதுவாக இந்தியாவில் MSME என சுருக்கமாக  அழைக்கப்பெறுவது மீச்சிறு சிறு நடுத்தர நிறுவனங்களை குறிக்கின்ற பெயராகும்.  MSME ஆனவை இந்தியாவின் மொத்த தொழிலக வேலைவாய்ப்பில் 45%ஆகவும், இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 50% ஆகவும்பங்களிக்கின்றன, அதனோடு நாட்டின் அனைத்து தொழில்துறை பிரிவுகளில் 95%ஆகவும் 6000 க்கும் மேற்பட்ட வகையான பொருட்களையும் இந்த MSME தொழில்நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன  இந்த MSME தொழில்கள் வளரும்போது, நம்முடைய இந்தியாவின் பொருளாதாரமே  ஒட்டுமொத்தமாக வளர்ந்து செழித்து வளருவதற்கு ஏதுவாகிறது. இது நம்முடைய நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் கணிசமான பங்களிக்கிறது. இந்திய பொருளாதாரத்தில் இந்த MSME யின் ஒருசில பங்களிப்புகள்: -
 அ) .மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிப்பு- நாடு முழுவதும் 36.1 மில்லியனுக்கும் அதிகமான அலகுகளுடன்,  மொத்த உள்நாட்டு பொருட்களின் உற்பத்தியில் 6.11%ஆகவும்  ,மொத்த உள்நாட்டுசேவைத் துறையில் 24.63%ஆகவும் பங்களிக்கிறது.
ஆ). ஏற்றுமதியில் பங்களிப்பு- இந்திய நாட்டின் ஒட்டு மொத்த ஏற்றுமதியில் 45%அளவிற்கு இந்த MSME  பங்களிக்கிறது.
இ). வேலைவாய்ப்பு உருவாக்கம்- இந்தத் துறையானது நமது இந்திய நாட்டில் மிகப்பெரிய வேலை வாய்ப்புகளை வழங்குகிறது, அதாவது இந்தத் துறையானது 120 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி நமது  நாட்டில் இரண்டாவது அதிக வேலைவாய்ப்பு உருவாக்கும் துறையாக விளங்குகின்றது.
தற்போதுஇந்த தொழில்கள் சிறிய அளவிலான தொழில்கள் அல்லது SSI’கள். என அனைவராலும்  அறிந்து கொள்ளப்படுகின்றது
I.  இந்த MSME -க்காக மே 13, 2020 அன்றுநிதி அமைச்சர்  செய்த முக்கிய அறிவிப்புகள்-
> ரூ. 200 கோடிவரை உலகளாவிய விலைபுள்ளிகள் : இந்திய அரசு MSME களுக்கான உலகளாவிய விலைபுள்ளிகள் கோருவதற்கான நோக்கத்தை விரிவுபடுத்தியுள்ளது, MSMEகளை வெளிநாட்டு நிறுவனங்களுடனான நியாயமற்ற போட்டிகளிலிருந்து பாதுகாக்க, இந்திய அரசு. வெளிநாட்டு நிறுவனங்களுக்கான  கொள்முதல் விலைபுள்ளிகளை ரூ.200 கோடி வரை அனுமதிக்காததன் மூலம்  MSMEகளானவை தன்னம்பிக்கையுடன் கூடிய ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது, இந்த நடவடிக்கை வெளிநாட்டு நிறுவனங்களுடன் கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் இந்தியாவின் நடுத்தர நிறுவனங்களுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும்.
> நிதிதேவைக்காக நிதிகளின் மூலம் MSMEகளுக்கு ரூ50,000 கோடி சமவீதபங்குகள் உட்செலுத்துதல்: இந்திய அரசு ரூ. 10,000.கோடியில் corpusஐ   துவங்க முடிவுசெய்துள்ளது இந்த நிதிMSME களுக்கு வளர்ச்சி திறன் மற்றும் நம்பகத்தன்மையுடன் சமவீதபங்குகளின் வாயிலான நிதியை வழங்கும். இந்த நடவடிக்கை MSMEகளின் அளவையும் திறனையும் விரிவாக்க உதவும் மேலும் பங்குச் சந்தைகளின் முக்கிய குழுவில் MSME களின் பட்டியலை ஊக்குவிக்கும்.
> வணிகத்திற்கான 3 லட்சம் கோடி இணையான-இலவச தானியங்கி கடன்கள், : ஏற்கனவே முழுஅடைப்பிற்கு முன்பு செயல்புரிந்த , MSMEக்களுக்கு ஒரு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது மேலும் வங்கிகள் / NBFCs எனும் வங்கிசாராத நிதிநிறுவனங்களிடமிருந்து கடன்களை இயக்கி அவற்றை நிலையான பிரிவில் இயக்கவும் அவை பண நெருக்கடியை எதிர்கொள்ளவும் உதவுகின்றன. அந்த  MSMEகளுக்கு, அவற்றின் செயல்பாடுகளை மீண்டும் துவங்குவது, அதாவது பொருள் கொள்முதல், ஊதியம் / சம்பளம், விற்பனையாளர்களுக்கு கொடுப்பன,அவசரகால கடன் வசதி  போன்றநடவடிக்கைகளுக்கு உதவுவது.   2020 பிப்ரவரி 29 ஆம் நாளன்று நிலுவையில் உள்ள மொத்த கடனில் 20% வரைஇந்த  அவசரகால கடன் வசதியாகும்.இதை பெறுவதற்கான
> தகுதி: முதலீடுரூ. 25/- கோடி மற்றும் விற்பணை ரூ. 100/- கோடிவரை பயனடைய தகுதியுடையவர்கள். (தற்போது விற்பணை ரூ400/- கோடிவரை என உயர்த்தப்பட்டுள்ளது)
> காலம்:  திருப்பிச் செலுத்துதலில் 12 மாத கால அவகாசத்துடன் கடனின் காலம் 4 ஆண்டுகள் ஆகும்.
> 100% கடன் உத்தரவாதம்: அசல் மற்றும் வட்டி அடிப்படையில் வங்கிகள் மற்றும் NBFCs க்களுக்கு 100% கடன் உத்தரவாத பாதுகாப்பு இருக்கும்.
> செல்லுபடியாதல்: இந்த திட்டத்தை அக்டோபர் 31, 2020 வரை பெறலாம் (டிசம்பர் 20 வரை நீட்டிக்க வாய்ப்புகள்)
> வலியுறுத்தப்பட்ட MSMEகளுக்கான 20,000/- கோடி துணைக் கடன்: வலியுறுத்தப்பட்ட(Stressed )  MSME.களுக்கு சமவீதபங்குகளின் ஆதரவு தேவை,NPA அல்லது அழுத்தமாக(Stressed ) இருக்கும்  MSMEகள் செயல்பட தகுதியுடையவை, இந்திய அரசு ரூ. 4000/-கோடி. CGTMSE க்கு, CGTMSE வங்கிகளுக்கு ஓரளவு ஆதரவளிக்கும்,  MSMEகளின் உருவாக்குநர்களுக்கு வங்கிகளால் கடன் வழங்கப்படும், இது அலகின் சமவீதபங்குகளின் உரவாக்குநரால் செலுத்தப்படும்

II.  MSMEஎன்றால் என்ன
 மீச்சிறு சிறு நடுத்தர   நிறுவன மேம்பாடு (MSMED) சட்டம், 2006 இன் படி,  மீச்சிறு, சிறு , நடுத்தர நிறுவனங்கள் (MSME) இரண்டு இணங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன:
1. உற்பத்தி நிறுவனங்கள்: -தொழில்கள் (அபிவிருத்தி மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1951) முதல் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு தொழிற்துறையின் பொருட்கள் உற்பத்தி அல்லது உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் அல்லது ஆலை மற்றும் இயந்திரங்களை பயன்படுத்துதல்
ஒரு தனித்துவமான பெயர் அல்லது தன்மை அல்லது பயன்பாட்டைக் கொண்ட இறுதி தயாரிப்புக்கான மதிப்பு கூட்டல் செயல்முறை.
2. சேவை நிறுவனங்கள்: - சேவைகளை வழங்குவதில் அல்லது அளிப்பதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள்
III. அ). மீச்சிறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வகைகள்


III.ஆ. செயல்பாடுகள் குறிப்பாக MSME சட்டம், 2006 இன் வரையறையிலிருந்து விலக்கப்பட்டுள்ளன
மீச்சிறு, சிறு , நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம் (MSME) 18.09.2015 தேதியிட்டS.O  2576 (E)மற்றும் 10.1.2017 தேதியிட்ட S.O 85(E) அறிவிப்பின் படி தெளிவுபடுத்தியுள்ளது, குறிப்பாக உற்பத்தியில் சேர்க்கப்படாத நடவடிக்கைகள் / அந்தச் சட்டத்தின் பிரிவு 7 இன் படி பொருட்களின் உற்பத்தி அல்லது சேவைகளை வழங்குதல்
1. வனம் மற்றும் மரங்கள்(Logging),,
2. மீன்பிடித்தல் மற்றும் மீன்வளர்ப்பு,
3. மொத்த, சில்லறை வர்த்தகம் , மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் பழுதுபார்த்தல்,
4. மோட்டார் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களைத் தவிர மொத்த வர்த்தகம்,
5. மோட்டார் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களைத் தவிர சில்லறை வர்த்தகம்,
6. உள்நாட்டு பணியாளர்களுக்கான ஊழியர்களாக வீடுகளின் செயல்பாடுகள்,
7. தனியார் வீடுகளின் நடவடிக்கைகளை உருவாக்கும் வேறுபடுத்தப்படாத பொருட்கள் மற்றும் சேவைகள்,
8. வேறு எல்லையிலுள்ள( extraterritorial) நிறுவனங்களின் அமைப்புகளின் செயல்பாடுகள்.

IV.MSMEகளாக பதிவுசெய்வதால் கிடைக்கும் நன்மைகள்-
MSME இன் பதிவு கட்டாயமில்லை, ஆனால் அவ்வாறு பதிவு செய்வதால் அரசாங்கத்திடமிருந்து பல்வேறு நன்மைகளைப் பெற உதவும், அவற்றில் ஒருசில:
IV.அ. அரசு  பல்வேறு MSME திட்டங்களுக்கான அரசுதிட்டங்களை துவங்கின
MSME ஆக பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களுக்கு வணிகத்தை எளிதாக்குவதற்காக அரசாங்கத்தால் துவங்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் பட்டியல் பின்வருமாறு:
1. Udyog Aadhar Memorandum: - இந்த திட்டத்தின் மூலம், முந்தைய செயல்முறையிலிருந்த 11 படிவங்கள் மாற்றியமைக்கப்பட்டு  அதற்குபதிலாக தொழில்முனைவோர் குறிப்பாணை -1 , தொழில்முனைவோர் குறிப்பாணை- II. ஆகிய இரண்டு படிவங்களை மட்டுமே பயன்படுத்தி  முற்றிலும்  இணையத்தின் வாயிலாக பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது இந்த திட்டத்தின் மூலம் ஆதார் பயன்படுத்தி பதிவு செய்யலாம்  அதனைதொடர்ந்து  பல்வேறு நன்மைகளை பெறலாம்
2. பூஜ்ஜிய குறைபாடு பூஜ்ஜிய விளைவு (ZED) -இந்தத் திட்டம் 'பூஜ்ஜிய குறைபாடு' கொண்ட பொருட்களை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது, எனவே சிறந்த-தரமான தயாரிப்புகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு 'பூஜ்ஜிய விளைவு' எனும் திட்டம் உதவுகின்றது. இந்தத் திட்டமானது உற்பத்தி செய்யப்படும் மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் மற்றும் நாடுகளின் சுற்றுச்சூழல் தேவைகளை பூர்த்தி செய்யவும் பொருட்களின் தரத்தின் பல்வேறு சிக்கல்களை தவிர்ப்பதைக் குறிக்கிறது. . ZED மதிப்பீட்டிற்குப் பிறகு, MSME க்கள் கழிவுகளை குறைக்கலாம், உற்பத்தித்திறனை அதிகரிக்கலாம், தங்களுடைய சந்தையை IOP களாக விரிவுபடுத்தலாம், CPSU களுக்கு விற்பனையாளர்களாகலாம், அதிக IPRகளைக் கொண்டிருக்கலாம், புதிய தயாரிப்புகள் மற்றும் செயல்முறைகளை உருவாக்கலாம்.
3. தர மேலாண்மை தரநிலைகள் மற்றும் தர மேலாண்மை கருவிகள்: - புதிய தொழில்நுட்பத்துடன் பராமரிக்கப்பட வேண்டிய தரங்களை புரிந்துகொள்ளவும் செயல்படுத்தவும் இந்த திட்டம் MSME களுக்கு உதவும். இந்த திட்டத்தின் மூலம்,MSME கள் மிகவும் போட்டித்தன்மையுடையதாக மாறும் மற்றும் போட்டி விலையில் சிறந்த தரமான தயாரிப்புகளை உருவாக்கும். ISO 9000/18000/22000 , QTT போன்ற QMS ஐ செயல்படுத்துவதன் மூலம்: சிக்ஸ் சிக்மா, TQM,ஒருசில துறைகளில் அல்லது தொழில்களின் குழுவில் TPM போன்றவை, தொழில்களின் செயல்திறன் மற்றும் நிராகரிப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களின் புகார்களைக் குறைத்தல் போன்றவைகளுடன் MSE களின் செயல்திறன்.மேம்படும்.
4. குறை கண்காணிப்பு அமைப்பு: - MSME உரிமையாளர்களின் அனைத்து வகையான புகார்களையும் பரிந்துரைகளையும் கண்காணிக்கவும் பூர்த்தி செய்யவும் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. குறைகளைக் கையாளும் முறையை வெளிப்படையானதாகவும் விரைவாகவும் மாற்றுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. குறைகளையும் புகார்களையும்  முற்றிலும் இணையத்தின் வாயிலான தெரிவிக்கும் செயல்முறையைகொண்டுள்ளது. ஒருவர் தங்களுடைய புகாரின் நிலையைஇணையத்தின் வாயிலாக எளிதாகக் கண்காணிக்க முடியும், மேலும் ஒவ்வொரு புகாருக்கும் ஒரு தனிப்பட்ட பதிவு எண் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் முறையீட்டின் முன்னேற்றத்தை கணினி தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டே இருக்கும்.
5. அடைகாத்தல்: -புதிய வடிவமைப்புகள் மற்றும் புதிய தயாரிப்புகள் போன்ற புதிய மற்றும் புதுமையான ஆலோசனைகளை மேம்படுத்துவதும் ஆதரிப்பதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அந்தந்த சேவைத் துறைகளில் புதிய ஆலோசனைகளை ஆராய்ந்து செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு (HI) அரசாங்கம் நிதி உதவி வழங்குகிறது. ஆலை மற்றும் இயந்திரங்களை வாங்குவதற்கும் நிறுவுவதற்கும் ரூ.ஒரு கோடி, மேலும் ஆலோசனைகளை  வளர்ப்பதற்கு ரூ.15 லட்சமும்  வழங்கப்படும்.
6. கடனுடன் இணைக்கப்பட்ட மூலதன மானிய திட்டம் (CLCSS): -இந்த திட்டம் ரூ 15 லட்சம்  வரை 15% மூலதன மானியத்தை வழங்குவதன் மூலம் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. (அங்கீகரிக்கப்பட்ட இயந்திரங்களில் அதிகபட்ச முதலீடு ரூ. 1  கோடிஆகும்) நன்கு நிறுவப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை தயாரிப்பதற்காக நிறுவன நிதி தொடர்பான சிறிய, காதி, கிராமம் மற்றும் நாணய தொழில்துறை அலகுகள் உள்ளிட்ட MSME பிரிவுகளுக்கு. அனுமதிக்கப் படுகின்றது
7. பெண்கள் தொழில்முனைவு: - இந்தத் திட்டம் போதுமான கல்விப் பின்னணி இல்லாத பெண் தொழில்முனைவோரைக்  கவனித்துக்கொள்கிறது, எனவே இதுபோன்ற துறைகளில் பயிற்சி அளிக்கிறது. இந்த பெண்களுக்கு அரசாங்கமானது மூலதனம், ஆலோசனை மற்றும் பயிற்சி அளிக்கிறது
அவர்களின் வணிகத்தை நிர்வகித்து அதை விரிவுபடுத்திட உதவுகின்றது. இத்திட்டத்தின் கீழ், பெண் தொழில்முனைவோர் சிறப்பு பிரிவின் கீழ் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ளனர் மற்றும் திட்டத்திற்கு 25% & 35% முறையே மானியங்களுக்கு உரிமை உண்டு
 IV.ஆ. MSME களுக்கு மற்ற முக்கிய ஆதரவு : -இணை இலவச கடன் இந்திய அரசின் MSME,அமைச்சகம் மற்றும் SIDBI அமைத்த, சிறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளையை (CGTMSE) . கடன் உத்தரவாதத் திட்டம் (CGS) கடனளிப்பவருக்கு உறுதியளிக்க முயல்கிறது, ஒரு MSME அலகு இணை இலவச கடன் வசதிகளைப் பெற்றால், அதன் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறினால், உத்தரவாதம் அளிக்கின்றதுஇயல்புநிலையாக நிலுவையில் உள்ள தொகையின் 85% (அல்லது கடன் வெளிப்பாட்டைப் பொறுத்து 80% / 75% / 50%) வரை கடன் வழங்குநருக்கு ஏற்படும் இழப்பை அறக்கட்டளை ஏற்கும். CGTMSEரூ.  200 லட்சம் இணை / மூன்றாம் தரப்பு உத்தரவாதங்கள் இல்லாமல்.

தொழில்நுட்பம் மற்றும் தர மேம்பாடு (TEQUP)இந்த TEQUP திட்டத்தின் கீழ், திட்ட செலவில் 25% மூலதன மானியம் அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் திட்ட செலவுக்கும் MSME.களுக்கு எரிசக்தி திறன் தொழில்நுட்பத்தை (EET) செயல்படுத்த ரூ..40 லட்சம் வழங்கப்படும், மீதமுள்ள தொகை சிட்பி / வங்கிகள் / நிதி நிறுவனங்களின் கடன் மூலம் நிதியளிக்கப்பட வேண்டும்.  மேலும், இந்த திட்டத்தில், தயாரிப்பு சான்றிதழ் உரிமங்களைப் பெறுவதற்கு MSME உற்பத்தி பிரிவுகளுக்கு அவர்கள் செய்த உண்மையான செலவினங்களில் 75% அளவிற்கு மானியம் வழங்கப்படும். MSME க்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச இந்திய அரசு(GOI)  உதவி தயாரிப்பு உரிமம் பெற / தேசிய தரநிலைகளுக்கு குறிக்க ரூ .1.5 லட்சம் மற்றும் சர்வதேச சான்றிதழ் பெற ரூ. 2 லட்சம்வழங்குகின்றது.
தொகுப்பு(Cluster) மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடுMSME களின் வளர்ச்சியை ஆதரிப்பதற்காக, தொழில்நுட்பம், திறன்கள், பொதுவான வசதிகளை அமைப்பதற்கான சந்தை அணுகல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான உற்பத்தித்திறன் மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கான முக்கிய மூலோபாயமாக இந்திய அரசு (GOI) தொகுப்பு மேம்பாட்டு அணுகுமுறையை ஏற்றுக்கொண்டது.
பயிற்சி மற்றும் சோதனைக்கான மையங்கள் மற்றும் புதிய / இருக்கும் தொழில்துறை பகுதிகளில் அல்லது   களின் தொகுப்பில் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல். பல்வேறு வகையான பயிற்சித் திட்டங்கள் நடத்தப்படுகின்றனசுய வேலைவாய்ப்பு மற்றும் கூலி வேலைவாய்ப்புக்காக. நிரலின் கண்காணிப்புக்கு, நிரலின் ஒருங்கிணைப்பாளர் பிணைக்கப்பட்டுள்ள வலை அடிப்படையிலான அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதுஅவரது புகைப்படம் மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட பயிற்சியாளர்களின் அனைத்து விவரங்களும் இணையதளத்தில் அளிக்கப்படும்.“ஆத்மனிர்பர் பாரத் திட்டத்தின்” கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

MSME கள் உள்ளிட்ட வணிகங்களுக்கு இணை இலவச கடன்கள்வங்கிகள் மற்றும் வங்கிசாராதநிதிநிறுவனங்கள் 2020 இலிருந்து வணிகங்கள் / MSME.களுக்கு தானியங்கி கடன் 2020 பிப்ரவரி 29 ஆம் தேதி நிலுவையில் நிலுவையில் உள்ள மொத்த கடனில் 20% வரை வழங்கப்படும், இது தற்போதுள்ள கடன் வாங்குபவர்களுக்கு ரூ. 25 கோடி மற்றும் விற்றுமுதல் ரூ. 100 கோடி ரூபாய் (தற்போது 400 கோடி ரூபாய்) இந்தத் திட்டத்தைப் பெற தகுதியுடையவர்கள் மற்றும் கடன்களை 4 வருட கால அவகாசம் 12 மாத கால அவகாசத்துடன் திருப்பிச் செலுத்த வேண்டும். இந்த திட்டம் 2020 அக்டோபர் 31 வரை எந்த உத்தரவாதமும் இல்லாமல் மற்றும் புதிய இணை பத்திரங்கள் இல்லாமல் பெறலாம்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக எம்.எஸ்.எம்.இ க்களுக்கான துணை கடன், வலியுறுத்தப்பட்ட எம்.எஸ்.எம்.இ.க்கள் தங்கள் வணிகங்களில்சமவீதபங்கு சிக்கலை எதிர்கொள்கின்றன. இத்தகைய சூழ்நிலையை சமாளிக்க, இந்திய அரசு ரூ. 20,000 கோடி துணைக் கடனாக  CGTMSEக்களுக்கு ரூ.4,000 கோடி ரூபாய். NPA அல்லது வலியுறுத்தப்பட்ட அனைத்து செயல்படும் MSME களும் இந்த திட்டத்தின் பயனைப் பெற தகுதியுடையவை. MSME இன் உருவாக்குநர்களுக்கு வங்கிகளால் கடன் வழங்கப்படும், பின்னர் அவை உருவாக்குநர்களால் வணிகத்தில் சமவீதபங்காக செலுத்தப்படும்.
நிதி நிதியின் மூலம் சமவீதபங்கு உட்செலுத்துதல்MSME .களுக்கு வளரக்கூடிய சமவீதபங்கு நிதியை வழங்குவதற்காக, ஒருநிதிக்குநிதியாக(Fund ofFunds (FoF)) ஒரு தாய் நிதி மற்றும் சில மகள் நிதிகள் மூலம் இயக்கப்படும். மகள் நிதி மட்டத்தில் ரூ 50,000 கோடி நிதியை அந்நியச் செலாவணிக்கு நிதி அமைப்பு உதவும். இது MSME அளவையும் திறனையும் விரிவாக்க உதவும். இத்தகைய முயற்சி MSME.க்களை பங்குச் சந்தைகளின் முக்கிய குழுவில் பட்டியலிட ஊக்குவிக்கும்.
உலகளாவிய விலைபுள்ளிகள் அனுமதிக்கப்படாது: ரூ .200 கோடி வரை அரசு கொள்முதல் விலைபுள்ளிகளில் உலகளாவிய விலைபுள்ளிகள் அனுமதிக்கப்படாது. மேக் இன் இந்தியாவை ஆதரிப்பதற்கும், எம்.எஸ்.எம்.இ.க்கள் தங்கள் வணிகத்தை அதிகரிக்க உதவுவதற்கும் இது ஒரு படி. கோவிட் நெருக்கடியை எதிர்த்து அடுத்த 3 மாதங்களுக்கு அமைச்சகத்தின் முன்மொழியப்பட்ட செயல் திட்டம்:
சந்திப்பு விநியோக அட்டவணை: திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம், திட்ட அறிக்கைகளை சரியான நேரத்தில் சமர்ப்பிக்காதது மற்றும் தயாரிப்பு / சேவைகளில் ஏதேனும் இயல்புநிலை ஏற்பட்டால், நடைமுறைமூலதன சேதங்களை செலுத்துவதற்கான பொறுப்பைத் தணிக்கும் பொருட்டு; பொது நிறுவனங்களின் திணைக்களம் (DPEs), ரயில்வே வாரியம் மற்றும் பிற அமைச்சகங்களை அணுகி பணப்புழக்கத்தில் பொருந்தக்கூடிய தளர்வுக்கு அனுமதிக்க உத்திரவின்படி வழங்குதல் /  நிறைவேற்றுவதற்கான அட்டவணை தேதியிலிருந்து இரண்டு மாத காலத்திற்கு சேத விதிமுறைகள்.
தாமதமான கொடுப்பனவுகள்: பொது நிறுவனங்கள் திணைக்களம் (DPEs), ரயில்வே வாரியம், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் (CPSEs) மற்றும் ரயில்வே ஆகியவற்றால் நிலுவையில் உள்ள அனைத்து கொடுப்பனவுகளையும் MSME களுக்கு உடனடியாக தலையிடுவதற்கும் விடுவிப்பதற்கும் அணுகப்படும்.நிறுவன வசதி கவுன்சில் (MSEFC).
சந்திப்பு நிலையான செலவு: இந்த முடக்க காலத்தில் மின்சாரம் மற்றும் பிற நிலையான கட்டணங்களுக்கு விலக்கு / திருப்பிச் செலுத்த மாநில அரசு முயற்சிகள் எடுக்கும்.மூலப்பொருள் விலைகளின் விரிவாக்கம்
COVID-19 காலகட்டத்தில், MSME க்கள் உயரும் மூலப்பொருட்களின் விலைஉயர்விலிருந்து சவால்களை எதிர்கொள்வது தெளிவாகத் தெரியும். அத்தகைய சூழ்நிலையை சமாளிக்க, விலை உயர்வுக்கு ஓரளவு ஈடுசெய்ய மூலப்பொருட்களின் சசேவவரி விகிதங்களைக் குறைப்பதை நிதி அமைச்சகம் கருத்தில் கொண்டுள்ளது.
MSME களுக்கான கடன் ஆதரவு1. எம்.எஸ்.எம்.இ கடன்கள் மற்றும் பிற வகையான கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு 6 மாத கால அவகாசம், அந்தக் காலகட்டத்தில் கடன் மதிப்பீட்டில் 'எந்த மாற்றமும் இல்லை' என்ற விதிமுறையுடன்.
2. இந்த நெருக்கடி நிலைமையைச் சமாளிக்க MSME களுக்கு தடையற்ற வங்கி உதவி தேவைப்படுவதால், வங்கிகளில் NPA காலத்தை அறிவிப்பதற்கான விதிமுறைகள் குறைந்தது அடுத்த 2 ஆண்டுகளுக்கு 180 நாட்களுக்கு நீட்டிக்கப்படும்.
3. வட்டி வீதக் குறைப்பு  MSME க்களுக்கான கடன்களில் 3% ஆரோக்கியமான மற்றும் NPA க்கள் அல்ல.
IV.இ.
1) வங்கியிடமிருந்து இணை இலவச கடன்கள்: MSME/SSI-க்காக அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, அவை பிணையின்றி கடன் பெற அனுமதிக்கின்றன. சிறந்த MSME பதிவு நன்மைகளில் ஒன்றான, பிணையமில்லாத கடனை வழங்குவதற்கான முன்முயற்சியை இந்திய அரசு(GOI), இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி(SIDBI) மற்றும் மீச்சிறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன அமைச்சகம் கடன் உத்தரவாத நம்பிக்கை நிதி திட்டம் என்ற பெயரில் மேற்கொள்கின்றன. . சிறு வணிக உரிமையாளர்களுக்கான சிறந்த MSME பதிவு சலுகைகள் இதுவாகும் .// வங்கியில் இருந்து  இலவச கடன்கள் (குறிப்பிட்ட வகை கடன்களின் விஷயத்தில்) அதாவது வங்கியில் கடன் பெற பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியமில்லை, // வங்கிகளிடமிருந்து கடன்கள் எடுக்கப்பட வேண்டும் மலிவான வட்டி விகிதத்தில் 2% வரை வட்டி நன்மை. இந்த நிறுவனங்களுக்கு ரூ .50 லட்சம் வரை இணை இலவச கடன்கள் வழங்கப்பட உள்ளது
2) குறைந்த வட்டி விகிதத்தில் வங்கி கடன் / கடன்; வட்டி வீத விலக்குடன் மிகைபற்று வசதி:
MSME சட்டத்தின் கீழ் MSME / SSI ஆக பதிவுசெய்யப்பட்ட வணிகங்கள் அல்லது நிறுவனங்கள் கடன் உத்தரவாத அறக்கட்டளை நிதி திட்டத்தின் ஒரு பகுதியாக மிகைபற்றில் 1% நன்மைகளைப் பெற தகுதியுடையவை.
இது வங்கியில் இருந்து வங்கிக்கு மாறுபடும் என்றாலும் // வங்கியிடமிருந்து மிகைபற்று வசதிக்கான வட்டி விகிதத்தில் 1% வரை விலக்கு, கடனை எளிதாக அணுகலாம்
3) விலைபுள்ளிகளில் இடஒதுக்கீடு போன்ற சட்டரீதியான உதவி // அரசு விலைபுள்ளிகளைப் பெறுவதற்கு உதவுகிறது // MSME நிறுவனங்களுக்கு பிரத்யேகமாக திறந்திருக்கும் விலைபுள்ளிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அணுகல் .// MSME ஆக பதிவுசெய்த நிறுவனங்களுக்கு மட்டுமே பல அரசு விலைபுள்ளிகள் திறந்திருக்கும்.
4) IPR  பதிவில் மானியம்: MSME சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு காப்புரிமை பதிவு செய்வதற்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. ஒரு விண்ணப்பத்தை தொடர்புடைய அமைச்சகத்திற்கு அனுப்புவதன் மூலம் இதைப் பெறலாம். இது தவிர, சிறந்த MSME பதிவு நன்மைகளில் ஒன்று, அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட தொழில்துறை மேம்பாட்டிற்கான மானியத்தைப் பெறுவதாகும்.
5) தொழில்துறை ஊக்குவிப்பு மானியத்திற்கு தகுதியானவர்
6) கடன் இணைக்கப்பட்ட மூலதன மானியம்
7) ISO சான்றிதழ் செலவினங்களின் இழப்பீடு போன்றவை // ISO சான்றிதழ் கட்டணங்களுக்கான திருப்பிச் செலுத்துதல் ,: பதிவுசெய்யப்பட்ட சிறு அல்லது நடுத்தர நிறுவனம் ISO சான்றிதழுக்காக செலவிடப்பட்ட திருப்பிச் செலுத்துவதற்கான செலவுகளை கோரலாம் // காப்புரிமையை பதிவு செய்வதற்கான செலவுகள் மற்றும் பல மதிப்பெண்களை எடுத்துக்கொள்வது வரம்புகளுக்கு உட்பட்டு இந்த நிறுவனங்களுக்கு ISO திருப்பிச் செலுத்தப்பட உள்ளது.
7.அ. காப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை பதிவுக்கு 50% தள்ளுபடி,
8. இப்போது வரை, மீச்சிறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன அமைச்சகம் வணிக உரிமையாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வாங்குபவர் தாமதமாக செலுத்தும் கட்டணங்களுக்கு வட்டி வசூலிக்க அனுமதி வழங்கியுள்ளது.
MSME பதிவு சலுகைகளின் கீழ், வாங்குபவர் வாங்கிய 15 நாட்களுக்குள் பொருட்கள் / சேவைகளுக்கு பணம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாமதமாகிவிட்டால்,  வாங்குபவர்45 நாட்களுக்கு மேல் கட்டணம் செலுத்தினால், நிறுவனம் கூட்டு வட்டி வசூலிக்க தகுதியுடையது, இது ரிசர்வ் வங்கி அறிவித்த விகிதத்தின் 3 மடங்கு ஆகும்.
9 .குறைந்தபட்ச மாற்று வரிக்கு (MAT) அனுமதிக்கப்பட்ட கடன் 10 ஆண்டுகளுக்கு பதிலாக 15 ஆண்டுகள் வரை முன்னோக்கி கொண்டு செல்லஅனுமதிக்கப்படுகின்றது,
10. மின்சாரத் துறைக்கு விண்ணப்பம் செய்வதன் மூலம் மின்சார மசோதா மீதான சலுகை ,: எளிமையான  வாங்குபவர் பதிவு நன்மைகளில் ஒன்று,  வாங்குபவர் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வணிகங்கள் மின்சார கட்டணங்களுக்கு சலுகையைப் பெறலாம். அவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால்,  வாங்குபவர் மூலம் விண்ணப்பம் மற்றும் பதிவு செய்யப்பட்ட சான்றிதழின் நகலுடன் பட்டியல்களை சமர்ப்பித்தல்மட்டுமேயாகும்
11. மாறுபட்ட வரிச்சலுகைகள் அவ்வப்போது அரசாங்கத்தால் வழங்கப்பட உள்ளன.
12. MSME சமாதான திட்டம் என்றஒன்றுஉள்ளது இந்த திட்டத்தின்கீழ் இந்நிறுவனங்களின் வாங்குபவர்களுக்காக அதிகபட்சம் 45 நாட்கள் கடன்அனுமதிக்கப்படும் கடன் விதிமுறைகளுக்கு எதிரானது பாதுகாப்பு கிடைக்கும் மேலும் 45 நாட்களுக்குள் இயல்புநிலையில் கடன்தொகையை திரும்ப செலுத்துவதற்கு அவ்வப்போது மாறுடும் குறிப்பிட்ட  வட்டி விகிதத்தில் வட்டி விகிதம் செயல்படுத்தப்படும்

V. மற்ற முக்கிய தகவல்கள்
1) உத்யோக் ஆதார் என்பது இயங்கும் அலகுகளுக்கானது. புதியதாக துவங்கவிருக்கும் அலகுக்கு விண்ணப்பிக்க தேவையில்லை.
2) அலகு செயல்படும் வரை உத்யோக் ஆதார் பதிவு செல்லுபடியாகும்.
3) MSMEஆக பதிவு செய்வதற்கு அரசு எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை
4) உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் மட்டுமே MSMED சட்டம், 2006 இன் கீழ் பதிவு செய்ய முடியும்,
VI.முடிவுரைமீச்சிறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வேலைவாய்ப்பு உருவாக்கம், மலிவு விலையில் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குதல் போன்ற பல்வேறு வழிகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன. இந்திய MSME களின் தற்போதைய சந்தை மதிப்பு ரு. 1 டிரில்லியன் ஆகும்
2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இது இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30%மும் இந்தியாவிலிருந்து ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 45%மும் MSME கள் பங்களிக்கின்றன. இந்தத் துறையை மிகவும் துடிப்பான மற்றும் குறிப்பிடத்தக்க செயல்வீரராக மாற்ற இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளதுஇந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி. ஆத்மனிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட நிதி சலுகைகள் கோவிட்முடக்கத்தாலான தாக்கத்தின் கீழ் MSME.களை மீட்கும் மற்றும் இந்தத் துறைக்கு மிகவும் தேவையான பணப்புழக்கத்தை வழங்கும், ஆனால் இவை அனைத்தும் தட்டையானதாகிவிடும், ஏனெனில் நம்முடையநாடு தொழிலாளர்கள் இடம்பெயர்வு பிரச்சினையை எதிர்கொள்கிறது மற்றும் நிறுவனங்கள் அதன் பணியாளர்களிடமிருந்து அகற்றப்பட்டுள்ளன. அவர்களில் பெரும்பாலோர் வீடு திரும்பியுள்ளதால் தொழிலாளர் சீர்திருத்தங்கள் வரையறுக்கப்பட வேண்டும், அது சாத்தியமில்லை, அவை விரைவில் திரும்பும்என எதிர்பார்க்கப்படுகின்றது.
VII. MSMEகளாக பதிவுசெய்வதற்கான நடைமுறை
i.MSMEகளாக பதிவு செய்ய சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை உரிமையாளர் இணையத்தில் நேரடியாகவும் இணையஇணைப்பில்லாமலும் செய்யக்கூடிய ஒரு படிவத்தை நிரப்புதல்செய்திட வேண்டும்.
ii. ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்களுக்கு பதிவு செய்ய விரும்பினால், அவர் / அவள் தனிப்பட்ட முறையில்பதிவு செய்யலாம்.
iii. பதிவு செய்ய அவர் / அவள் கீழே பட்டியலிடப்பட்டுள்ள இணையதளத்தில் கிடைக்கும் ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும்
VII.அ. பதிவுசெய்வதற்குதேவையான ஆவணங்களின் பட்டியல் பின்வருமாறு:
1) உரிமையாளர் / இயக்குனர் / உருவாக்குநர்( Promoter) / கூட்டாளி / அங்கீகரிக்கப்பட்ட நபரின் ஆதார் எண் (அதாவது உரிமையாளர், எந்த கூட்டாளி, இயக்குனர்) அங்கீகரிக்கப்பட்ட நபரின் சமூக வகை
2. நிறுவனத்தின் பெயர், நிறுவனங்களின் வகை
3. நிறுவனங்களின் வருமானவரிபதிவு எண் / உரிமையாளரின்வருமானவரிபதிவு எண்/ கூட்டாண்மை / வரையறுக்கப்பட்டகூட்டாண்மை / OPC / தனியார்வரையறுக்கப்பட்டநிறவனம் / பொதுவரையறுக்கப்பட்ட நிறுவனம் போன்றவற்றின் வருமானவரிபதிவுஎண்.
4) வணிக இடத்தின் முகவரி சான்று
5. தொழிலகம் செயல்படும் இடம்
6. தொடக்க தேதி
7) கூட்டாண்மை பத்திரம் / வரையறுக்கப்பட்டகூட்டாண்மை ஒப்பந்தம் / MOA & AOA போன்றவை இருக்கலாம்
8) வங்கி கணக்கு சான்று (வங்கி அறிக்கை / இரத்துசெய்யப்பட்ட காசோலை)
9) தொழில்துறை உரிமங்களின் நகல், பொருத்திய மற்றும் வாங்கிய இயந்திரங்களின் பட்டியல்கள்
10) பணியமர்த்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை
11) ஆலை மற்றும் இயந்திரங்கள் / உபகரணங்கள் மற்றும் விற்றுமுதல் விவரங்களில் முதலீடு. (குறிப்பு:ஆலை மற்றும் இயந்திரங்களின் மதிப்பு செலவாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும், ஆனால் தேய்மானத்திற்குப் பிறகான மதிப்பு அல்ல)
12) தேசிய தொழில் வகைப்பாடு குறியீடு (NIC  குறியீடு)

VII.ஆ. MSME ஆக பதிவு செய்ய இங்கே நீங்கள் பின்பற்ற வேண்டிய சுருக்கமான செயல்முறை -:
பதிவு செய்வதற்கான நடைமுறை- MSME ஆக பதிவு செய்ய ஒருவர் கீழே குறிப்பிடப்பட்டுள்ள செயல்முறையைப் பின்பற்ற வேண்டும்-
படிமுறை 1-  விண்ணப்பத்தை இணையத்தில் www.udyogaadhaar.gov.in இல் சமர்ப்பித்திடுக
படிமுறை 2- பின்னர் உரிமையாளர், இயக்குனர் அல்லது கூட்டாளியின் தொழில்முனைவோரின் ஆதார் எண் , பெயரை நிரப்புக, அதன்பின்னர்  திரையின் கீழ்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளபடி சரிபார்த்து OTP ஐ உருவாக்கு என்பதைக் சொடுக்குக
படிமுறை 3- இரண்டாவது படி முடிந்ததும் OTP ஐ சரிபார்க்கவும், OTP முழு பயன்பாட்டின் வெற்றிகரமான சரிபார்ப்பு திரையில் திறக்கப்பட்ட பிறகு,தேவையான விவரங்களை பூர்த்தி செய்க.
படிமுறை 4- படிவத்தில் தேவையான அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பின்னர், கைபேசி எண்ணுக்கு OTP அனுப்பப்பட்டவுடன் OTP ஐ உள்ளிடுக .திரையின் கீழ்பகுதியில் காட்டப்பட்டுள்ளபடி இறுதி சமர்ப்பிப்பிற்காக திரையில் காண்பிக்கப்பட்ட ,சரிபார்ப்புக் குறியீடு ஆகியவற்றை உள்ளிடுக:
படிமுறை 5- இறுதி சமர்ப்பிப்பிற்குப் பிறகு  UAM எண் மற்றும் MSME பதிவின் சான்றிதழைப் பெறுவீர்கள், 

 

சனி, 22 ஆகஸ்ட், 2020

வேர்களை வலுவாக வைத்திடுக

 

முன்னொரு காலத்தில், இரண்டுநபர்கள் அருகருகே இருவீடுகளில் வசித்து வந்தனர். அவர்களில் ஒருவர் ஓய்வுபெற்ற ஆசிரியராவார், இன்னொருவர் தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் கொண்ட காப்பீட்டு முகவராவார். அவர்கள் இருவரும் தங்களுடைய வீட்டு தோட்டத்தில் பல்வேறு வகையான காய்கறிகள் பழங்களை தருகின்ற செடிகளையும் மரங்களையும் நட்டு வளர்த்துவந்ந்தனர். ஓய்வுபெற்ற ஆசிரியர் தனது வீட்டு தோட்டத்தி லிருந்த தாவரங்களுக்கு சிறிய அளவு தண்ணீரைமட்டுமே ஊற்றி தோட்டத்தை பராமரித்து வந்தார், எப்போதும் அவைகளின்மீது முழு கவனம் செலுத்தவில்லை, அதே நேரத்தில் தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள மற்ற அயலவரான காப்பீட்டு முகவர் தனது வீட்டுத் தோட்டத்திலிருந்த தாவரங்களுக்கு ஏராளமான அளவில் தண்ணீரைஊற்றி அவற்றை நன்றாக கவனித்து வந்தார்.
ஓய்வு பெற்ற ஆசிரியரின் வீட்டுத்தோட்டத்திலிருந்த தாவரங்கள் எளிமையாக இருந்தன, ஆனால் மிகவலுவாகவும் அழகாகவும் இருந்தன. காப்பீட்டு முகவரின் வீட்டுத் தோட்டத்திலிருந்த தாவரங்கள் மிகவும் உயரமாகவும் பசுமையாகவும் ஆனால் வலுவற்றதாக இருந்தன. ஒரு நாள், இரவு அதிக காற்றுடன் கூடிய புயல் வீசியது மேலும்அதன் காரணமாக பலத்த மழையும் பெய்தது. அதற்கு அடுத்த நாள் காலை, அவ்விருவரும் வீட்டைவிட்டு வெளியே வந்து புயல்காற்றுடன் கூடிய மழையால் தங்களுடைய வீட்டுதோட்டத்திற்கு ஏற்பட்ட சேதத்தை ஆய்வு செய்தனர். காப்பீட்டு முகவராக இருந்த பக்கத்து வீட்டுக்காரருடைய தோட்டத்தில் மரம் செடி கொடி ஆகிய அனைத்தும் முந்தையநாளின் புயல்காற்றினாலும் அதிக மழையினாலும் வேரோடு, சாய்ந்து முற்றிலும் அழிக்கப்பட்டதைக் கண்டார். ஆனால், ஓய்வுபெற்ற ஆசிரியரின் வீட்டுத்தோட்டத்தின் தாவரங்கள் எதுவும் சேதமடையவில்லை, உறுதியாக அழகாக நின்று கொண்டிருந்தன.
சேதமடையாத ஓய்வுபெற்ற ஆசிரியரின் வீட்டுத்தோட்டத்தின் தாவரங்களை கண்டு காப்பீட்டு முகவர் மிகவும் ஆச்சரியப்பட்டார், அவர் ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் சென்று , “நாமிருவரும் ஒரே மாதிரியாக வீட்டுத்தோட்டத்தில் மரம் செடி கொடிகளை நட்டுவைத்து ஒன்றாக வளர்த்துவந்தோம், ஆனால் உங்களைவிட நான் அதிகமாக தண்ணீர் விட்டு தாவரங்களை நன்றாக பராமரிப்பு செய்து கவனித்துவந்தேன், . ஆயினும், என் னுடைய வீட்டுத்தோட்டத்து தாவரங்கள் அனைத்தும் நேற்று வீசிய புயல் காற்றிலும் பொழிந்த மழையிலும் வேரோடு தரையில் வீழ்ந்து அழிந்து விட்டன, அதே நேரத்தில் உங்களுடை தோட்டத்தில் அவ்வாறாகாமல் அனைத்தும் நன்றாக அப்படியே இருக்கின்றன. அது எப்படி சாத்தியம்?" என சந்தேகம் கேட்டார்.
ஓய்வுபெற்ற ஆசிரியர் புன்னகைத்து, “நீங்கள் உங்களுடையவீட்டு தோட்டத்து தாவரங்களுக்கு அதிக கவனத்தை செலுத்தி தண்ணீரை அதிகமாக வழங்கி தங்களுக்கு தேவையான தண்ணீரை எளிதாக தாங்களே உழைத்து பெறவேண்டிய தேவை யில்லாதவாறு சோம்பேறியாக்கிவிட்டீர்கள் தங்களுக்கு தேவையான நீரைவிட அதிகமாக கிடைத்ததால் அவை தங்களுடைய வேர்கள் தரையில் அதிக ஆழமாக செல்லாமல் .வைத்து கொண்டு தளதளவென மிகவும் பசுமையாக உயரமாக வளருவதில் மட்டும் கவணம் செலுத்தின அதனால் அவை நேற்று அடித்த புயல்காற்றில் வேரோடு சாய்ந்து விட்டன ஆனால் நான் என்னுடைய தோட்டத்திலிருந்து தாவரங்களுக்கு போதுமானஅளவைவிட சிறிது குறைத்து தண்ணீரை பாய்ச்சினேன் அதனால் அவை தங்களுக்கு தேவையான மிகுதி நீரை வேறு எங்காவது கிடைக்குமா என தங்களுடைய வேரை தரையில் மிக ஆழமாக செலுத்தி அவற்றின் நிலையை வலிமையாக்கி கடுமையாக முயற்சி செய்து போதுமான நீரை பெற்று திறனுடன்வளர்ந்து வந்தன அதனால்தான் என்னுடைய வீட்டு தோட்டத்திலிருந்த தாவரங்கள் பிழைத்தன ”.என பதில் கூறினார்
நீதி: நம்முடைய குழந்தைகள் இந்த கதைையில் கூறியவாறான வீட்டுதோட்டத்து தாவரங்களைப் போன்றவர்கள் பெற்றோரை சார்ந்துஇருப்பார்கள் . அவர்களுக்கு தேவையான எல்லாமே வழங்கப்பட்டால்,தங்களுக்கு தேவையான பொருட்களை சம்பாதிப்பதற்கான கடின உழைப்பை அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் தங்களுக்குத்தேவையான பொருட்களை தாங்களே கடுமையாக உழைத்து பெறுவதற்கு முயற்சிக்க மாட்டார்கள். ஒருசில நேரங்களில் அவற்றைக் கொடுப்பதற்குப் பதிலாக அவைகளை பெறுவதற்காக கற்றுக்கொள்ளுமாறு அவர்களுக்கு வழிகாட்டுவது நல்லது. எப்படி முயற்சி செய்து பெறுவது என்று அவர்களுக்குக் கற்றுக் கொடுத்திடுக,

சனி, 15 ஆகஸ்ட், 2020

தேர்விற்கான காலியான கேள்வித்தாள்

 
ஒரு நாள் ஒரு பேராசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்து தனது மாணவர்களிடம் ஒரு வித்தியாசமான தேர்வுநடத்த தயாரானார். மாணவர்கள் அனைவரும் அந்த தேர்வு எழுதுவதற்கு தங்கள் இருக்கைகளில் ஆவலுடன் காத்திருந்தனர். பேராசிரியர் வழக்கம் போல் தேர்விற்கான வினாத்தாளை அனைத்து மானவர்களிடமும் வழங்கினார். அவர் அனைவருக்கும் கேள்வித்தாளை ஒப்படைத்தவுடன், தங்களுடைய விடைத்தாளில் பதில் எழுத தொடங்கும்படி மாணவர்களைஅனுமதித்தார். மாணவர்கள்அனைவரும் ஆச்சரியமாக கேள்வித்தாளை திருப்பிதிருப்பி பார்த்தனர் ,அந்த சேள்வித்தாளில் கேள்விகள் எதுவும் இல்லை, ஆனால் கேள்வித்தாளின் மையத்தில் ஒரேயொரு கருப்பு புள்ளி மட்டுமே இருந்தது.
அனைவரின் முகத்திலும் ஆச்சரியவெளிப்பாட்டைக் கண்ட பேராசிரியர்,மாணவர்களிடம், “நீங்கள் உங்களுக்கு வழங்கப்பட்ட கேள்வித்தாளில் என்ன பார்க்கின்றீர்களோ அதை நீங்கள் எழுத வேண்டும்” என்று கூறினார். இவ்வாறு பேராசிரியர் கூறியதை கேட்டவுடன் மிகவும் குழப்பமான மாணவர்கள் காலியான கேள்வித்தாளை வைத்து எவ்வாறு பதில் எழுதுவது என்ற விவரிக்க முடியாதசிக்கலில் தங்களுடைய விடை எழுதும் பணியை தொடங்கினர். அனைவரும் தங்களுடைய பதிலை எழுதி பேராசியிரிடம் ஒப்படைத்தனர் வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களும் விடைத்தாளை ஒப்படைத்துமுடித்தபின்னர், பேராசிரியர் அனைத்து விடைத்தாட்களையும் எடுத்து, அவை ஒவ்வொன்றையும் அம்மாணவர்களின் முன்னால் உரக்கப் படிக்கத் தொடங்கினார். விதிவிலக்குகள் இல்லாமல் அவர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கேள்வித்தாளின் மையத்தில் இருந்த கருப்பு புள்ளியை பற்றி மட்டுமே விவரித்து எழுதிஅதனை விளக்க முயன்றனர்.
அனைத்துவிடைத்தாட்கள் எல்லாம் படித்த பிறகு, வகுப்பறை அமைதியாக இருந்தது. பேராசிரியர் விளக்கத் தொடங்கினார், “நான் உங்கள் அனைவரையும் வித்தியாசமாக சிந்திக்குமாறு தூண்டுவதற்காக விரும்பினேன். அதற்காக காலியான வினாத்தாளை உங்களுக்கு வழங்கினால் நீங்கள் சிறிது வித்தியாசமாக சிந்தித்து எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்அவ்வாறு வழங்கினேன் ஆனால் உங்களுள் யாரும் நான் எதிர்பார்த்தவாறு காகிதத்தின் வெள்ளை பகுதி பற்றி எழுதவேயில்லை. எல்லோரும் மையத்தில் இருந்த கருப்பு புள்ளியில் மட்டுமே கவனம் செலுத்தினீர்கள், நம் வாழ்க்கையிலும் இதே போன்று நிகழ்கிறது. வித்தியாசமாக சிந்திக்கவும் அதற்கேற்ப செயல்படவும் நம்மிடம் வெள்ளை தாள் போன்று நல்ல பகுதி ஏராளமாக உள்ளன, ஆனால் நாம் அனைவரும் எப்போதும் சிறிய இருண்ட கருப்பு புள்ளிபோன்ற குறைகளின் மீது மட்டுமே கவனம் செலுத்துகிறோம். அதனை ஊதிபெரியதாக ஆக்கி வாழ்க்கையை வீணடித்து அதனால் நம்முடைய மனத்தை எப்போதும் மாசாக்கி வீணடிக்கின்றோம் வெள்ளைதாளை போன்ற ஏராளமான அளவிலான பல்வேறு நல்ல செயல்கள் எதுவும் நம்முடைய கண்ணிற்கு தெரிவதே இல்லை அதனை ஏற்று அனைவருடன் அன்புடனும் அக்கறையுடனும் அவை இயற்கை நமக்கு அளித்த பரிசாக. கொண்டாடி மகிழ்ச்சியுடன் வாழ மறந்துவிடுகின்றோம்
அதாவது நம்மைத் தொந்தரவு செய்யும் உடல்நலப் பிரச்சினைகள், பணமின்மை, குடும்ப உறுப்பினருட னான சிக்கலான உறவு, நண்பர்களுடனான ஏமாற்றம் போன்ற நம்முடைய வாழ்வின் இருண்ட கருப்பு புள்ளியில் மட்டுமே நாம் கவனம் அனைத்தையும் செலுத்தி நம்முடைய வாழ்க்கையை வீணாக்குகின்றோம் அவைதான் நம் மனதை மாசுபடுத்துகின்றன.அவ்வாறானநம்முடைய வாழ்க்கையில் உள்ள கருப்பு புள்ளிகளிலிருந்து கண்களை விலக்கிக் வெள்ளைதாளை போன்ற ஏராளமான அளவில் உள்ள நல்ல செயல்களில் கவணம் செலுத்திடுக., வாழ்க்கை உங்களுக்கு ஒவ்வொரு கணமும்வழங்கும் பல்வேறு நல்ல செயல்களை கொண்டு. சாதகமாக மாற்றி மகிழ்ச்சியாக வாழ்ந்திடுக! ” என நீண்ட விளக்கமளித்தார்
பேராசிரியர் விளக்கமளித்தபடி, வாழ்க்கை என்பது நல்ல மற்றும் கெட்ட செய்திகளின் ஒரு கலவையாகும், நம் அனைவரின் முன் நேர்மறையான செயல்களும் எதிர்மறைசெயல்களும் உள்ளன. ஆனால் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான நேர்மறைகளில் மட்டு் நாம் எப்போதும் அதிக கவனம் செலுத்த வேண்டும். எதிர்மறைகளைப் பற்றி நினைத்து நம்முடைய நேரத்தை வீணாக்கவேண்டாம்


வியாழன், 13 ஆகஸ்ட், 2020

குறுஞ்செய்தி மூலம் சசேவ இல்லை( Nill)எனும் அறிக்கையை எவ்வாறு சமர்ப்பிப்பது?


GSTR 3B எனும் படிவத்தினை குறுஞ்செய்தி மூலம்சமர்ப்பித்தல் செய்வதற்கான வசதியை உள்ளடக்கிய சசேவ விதிகளில் ஒரு சிஇல் மாற்றங்களைச் செயல்படுத்த 2020 ஜூன் 8 , 9 ஆகிய தேதிகளில் CBIC என சுருக்கமாக அழைக்கபெறும் மத்திய மறைமுக வரிகளின் வாரியம் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அத்தகைய அறிவிப்பின் விவரங்கள் பின்வவருமாறு

1. மத்திய வரியின் கீழ் அறிவிப்புகளின் சுருக்கம் -

 

 

2.வரியில்லை எனும் GSTR NIL அறிக்கையை குறுஞ்செய்தி மூலம் சமர்ப்பித்தல் - CBIC என சுருக்கமாக அழைக்கபெறும் மத்திய மறைமுக வரிகளின் வாரியம்  படிவம் GSTR 3B இன் வாயிலாக வரியில்லை என சமர்பிப்பதற்காக அறிவிப்பு எண் 44/2020 இன் வாயிலாக   அறிமுகப்படுத்தியுள்ளது -
மத்திய வரி 8 ஜூன், 20.மசசேவ விதிகள், 2017 இன் விதி 67 ஏ இந்த மாற்றத்தை நடைமுறைப் படுத்திடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. குறுஞ்செய்தி மூலம் GSTR 3B இன் வாயிலாக வரியில்லை என சமர்பிப்பதற்கான நடைமுறை பின்வருமாறு -

 

 

 


செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

சசேவ(GST)இன் கீழ் சுய விலைப்பட்டியல் (Self Invoice)

மத்திய சசேவ(CGST ) சட்டத்தின் பிரிவு 9 (4) இவ்வாறு கூறுகிறது: -
"மத்திய வரி விதிக்கக்கூடிய பொருட்கள் அல்லது சேவைகள்  அல்லது இரண்டையுமே   வழங்குவதற்காக ,ஒரு பதிவு செய்யப்படாத வழங்குநரால்  பதிவுசெய்யப்பட்ட ஒருவருக்கு, அத்தகைய நபரால் செலுத்தப்படும்  பெறுநராக தலைகீழ் கட்டணத்தின் அடிப்படையில் மற்றும் இந்த சட்டத்தின் அனைத்து விதிகளும் பொருந்தும்  அத்தகைய பெறுநர் வழங்கல் தொடர்பாக வரி செலுத்துவதற்கு பொறுப்பான நபர் என்றால் அத்தகைய பொருட்கள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும்  வழங்குவதற்காக தயார்செய்வதே  சுயவிலைபட்டியலாகும்".பொருட்களை வாங்கும் அனைத்து பதிவு செய்யப்பட்ட நபர்களுக்கும் மேற்கூறிய சட்டம் பொருந்தும் என கூறுகிறது
பதிவு செய்யப்படாத நபரின் சேவைகள் தலைகீழ் கட்டண அடிப்படையில் வரிகளை செலுத்த வேண்டும்
மேலும் இந்தச் சட்டத்தின் அனைத்து விதிகளும் வழக்கமான சசேவஇன்கீழ் பதிவு செய்யப்பட்ட நபருக்கு பொருந்துவது போலவே பொருந்தும்
வரி செலுத்த வேண்டிய பொறுப்பு.
மத்திய சசேவ(CGST )  சட்டத்தின் பிரிவு 31(f)  பின்வருமாறு கூறுகிறது:
"ஒரு பதிவு செய்யப்பட்ட நபர் துணைப்பிரிவு (3) அல்லது துணைப்பிரிவு (4) இன் கீழ் வரி செலுத்த வேண்டியவர் ஆவார் . பதிவு செய்யப்படாத வழங்குநரிடமிருந்து பிரிவு 9 இன்கீழ்அவர் பெற்ற  பொருட்கள் அல்லது சேவைகளைஅல்லது இரண்டையும் பெற்ற தேதியில் பொருட்கள் அல்லது சேவைகள்  அல்லது இரண்டிற்கு ஒரு விலைப்பட்டியலை வெளியிடுபவர் ஆவார்    ".
எனவே, சசேவஇன் பிரிவு 9 (4) இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட அனைத்து நபர்களும் தலைகீழ் கட்டண அடிப்படையில் வரி செலுத்துகின்றார்கள் எனில் விலைப்பட்டியலை வெளியிடுபவரா்களாக. அவர்கள் இருப்பார்கள்
தங்களுக்குள்ளே விலைப்பட்டியல் தயார்செய்வதால் அது சுய விலைப்பட்டியல் என்று அழைக்கப்படுகிறது.
மேலும், சசேவ விதிகள் 2017 இல், விதி 46 வரி விலைப்பட்டியல் பற்றி பேசுகிறது, அதில் விதிமுறை
பிரிவு 9 (4) இன் கீழ் அனைத்து பதிவு செய்யப்பட்ட நபர்களும் எனத்தெளிவாகக் குறிப்பிடபட்டுள்ளது
சசேவ சட்டம், அதாவது தலைகீழ் கட்டணத்தின் கீழ் வரி செலுத்தும் அனைத்து பதிவு செய்யப்பட்ட நபர்களும் ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் ஒருங்கிணைந்த விலைப்பட்டியல்தயார்செய்திடவேண்டும், அத்தகையவற்றின் மொத்த மதிப்பு  எந்தவொரு வழங்குநரிடமிருந்தும் ஒரு நாளில் பொருட்கள்  ரூ.5000ஐத் தாண்டின என குறிப்பிடவேண்டும். எனவே, பொருட்களின் மொத்த மதிப்பு   ரூ5000ஐத் தாண்டாத நிலையில்உள்ள பொருட்கள் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
மேற்கூறியவற்றைத் தவிர, தலைகீழ் கட்டணத்தில் செலுத்த வேண்டிய அனைத்து வரிகளும் செலுத்தப்படும்
பணத்தின் மூலம், அத்தகைய வரிகளை செலுத்துவதற்கு உள்ளீட்டு வரிவரவைப் பயன்படுத்த முடியாது. பிறகு  கட்டணம், நம்முடைய வரிவரவை செலுத்துவதற்கான உள்ளீட்டு வரவாக அவற்றைப் பயன்படுத்தலாம்.
சசேவ விவரஅறிக்கையில் என்ன காட்ட வேண்டும்?
 GSTR1- வழங்கப்பட்ட ஆவணங்களின் அட்டவணையின் கீழ் வழங்கப்பட்ட விலைப்பட்டியலின் வரிசை எண்களைக் கொடுக்கப்படவேண்டும்.சுய விலைப்பட்டியல் தொடர்பாக வேறு எந்த விவரங்களும் கொடுக்கப்பட வேண்டியதில்லை.
GSTR 3B- அட்டவணை 3.1 வரிகளில் தலைகீழ் கட்டணத்தின் கீழ் பொறுப்பைக் காட்ட வேண்டும்
வெளிப்புற மற்றும் தலைகீழ் கட்டணம் உள்நோக்கி வழங்கல் மற்றும் தலைகீழ் கட்டணத்தின் கீழ் உள்ளீட்டு வரிவரவுஅட்டவணை 4 இல் தகுதியான உள்ளீட்டு வரிவரவு( ITC)ஆகும்

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

எதையும் வாக்குறுதி அளிப்பதற்கு முன்பு நன்கு சிந்தித்து வாக்குறுதி அளித்திடுக

முற்காலத்தில் கவிஞர் ஒருவர் ஒரு நாள் தங்களுடைய நாட்டு அரசனிடம் தனது கவிதைகளை பாடி ஏதாவது பரிசுபொருட்கள் பெற்று தன்னுடைய வறுமையை போக்கலாம் என அந்நாட்டு அரசஅவைக்கு சென்றார். அரசஅவையில் மன்னனைபற்றி இந்தகவிஞர் பாடிய கவிதைகளால் மன்னர் மிகவும் மகிழ்ச்சியுற்றார். அரசன்: கவிஞரே நான் உங்களுடைய கவிதைகளால் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதனால் பரிசுபொருட்களாக நீங்கள் எதை வேண்டுமானாலும் கேளுங்கள் நான் வழங்க தயாராக இருக்கின்றேன் . கவிஞர்: என்னுடைய வறுமையை போக்கவந்த அரசே, எனக்கு அதிகமாக வேறுஒன்றும் தேவையில்லை அடுத்த 64 நாட்களுக்கு மட்டும் நான் கோருகின்றவாறுஅரிசிகளை வழங்கினால் போதும் அரசே. அரசன்: (மிகவும் குழப்பத்துடன்) கவிஞரே நீங்கள் விரும்பிய அளவிற்கு தங்கத்தையும் நிலத்தையும் உங்களுக்கு நான் கொடுக்கத் தயாராக இருக்கிறேன், ஆனால் நீங்கள் விலை மலிவான வெறும் அரிசிகள் மட்டும் போதும் என்று கேட்கிறீர்ளே? கவிஞர்: ஆம் அரசே. இன்று எனக்கு ஒரு அரிசி கொடுங்கள். நாளை எனக்கு 2 அரிசிகளை கொடுங்கள் . நாளை மறுநாள் எனக்கு 4 அரிசிகளை கொடுங்கள். இவ்வாறு தினமும் முந்தைய நாள் கொடுத்ததை போன்று இரண்டு மடங்கு அரிசிகளின் எண்ணிக்கையை கூட்டி கொடுத்தால் போதும்அரசே. இது போன்று அடுத்த 64 நாட்களுக்கு நான் தொடர்ந்து வருவேன் 64 நாட்களுக்கும் எனக்கு முந்தைய நாள் கொடுத்ததை போன்று இரண்டு மடங்கு அரிசிகளை தாங்கள் வழங்கினால் போதும் அரசே . அரசன்: (சத்தமாக சிரிக்கிறார்) நீங்கள் மிகவும் வேடிக்கையானவர். உங்களுக்கு அரிசிகளை 64 நாட்களுக்கு கொடுக்குமாறு கோருகிறீர்கள், அதுவும் இன்று ஒரு அரிசி மட்டுமே. அதனால் உங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதாக நான் உறுதியளிக்கிறேன். அத்தகைய வேடிக்கையான விருப்பத்தை அரசஅவையின் முன்பு அரசன் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். அந்த அரசன் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் உறுதியான கொள்கைகளை உடையவர். அவர் எப்போதும் தனது வாக்குறுதிகளை கடந்த காலங்களில் தவறாது நிறைவேற்றியிருந்தார். எனவே ஏழை கவிஞர் அன்றைய தினம் ஒரு அரிசியுடன் துவங்கி தினமும் அந்த கவிஞர் கோரியாவாறு அரிசிகள் பின்வருமாறு வழங்கப்பட்டுவந்தன. நாள் 0: 1 அரிசி நாள் 1: 2 அரிசிகள் நாள் 2: 4 அரிசிகள் நாள் 3: 8 அரிசிகள் நாள் 4: 16 அரிசிகள் நாள் 5: 32 அரிசிகள் நாள் 6: 64 அரிசிகள் நாள் 7: 128 அரிசிகள் நாள் 8: 256 அரிசிகள் நாள் 9: 512 அரிசிகள் நாள் 10: 1024 அரிசிகள் .நாள் 32: 4,294,967,296 அரிசிகள் .நாள் 64: 18,446,744,073,709,551,616 அரிசிகள் சொற்களில் குறிப்பிடவேண்டுமெனில் 64ஆவது நாளில் கொடுக்கப்படவேண்டிய அரிசிகளின் மொத்த எண்ணிக்கை ◦ “பதினெட்டு குவிண்டிலியன், நானூற்று நாற்பத்தி ஆறு குவாட்ரில்லியன், எழு நூற்று நாற்பத்து நான்கு டிரில்லியன், எழுபத்து மூன்று பில்லியன், எழு நூற்று ஒன்பது மில்லியன், ஐநூற்று ஐம்பத்தொராயிரம், அறுநூற்று பதினாறு” [1] அரிசிகள். அதாவது 1 அரிசியின் எடை = 0.03 கிராம் என கணக்கில் கொண்டு 64ஆவது நாளில் கொடுக்கப்பட வேண்டிய அரிசிகளின் எடையை டன்களாக மாற்ற முயற்சித்தால் தோராயமாக 553 402 322 211 டன் கள் அளவிற்கு அரிசிகள் வழங்கப்படவேண்டும் என்று தெரியவருகிறது அதாவது அரிசிகளின் எடை சொற்களில் “ஐநூற்று ஐம்பத்து மூன்று பில்லியன் நானூற்று இரண்டு மில்லியன் முந்நூற்று இருபத்தி இரண்டாயிரத்து இருநூற்று பதினொரு” டன் கள் என தெரியவருகின்றது இந்த அரிசிகளின் எடை . கிலோ கூட இல்லை டன்களாகும் என்பதை கவணத்தில் கொள்க . தற்போதைய நிலையில் ஒப்பிடும்போது: ◦ “தற்போது உலகளாவிய ஆண்டு ஒன்றிற்கு அரிசி உற்பத்தியானது 700 மில்லியன் டன் கள் மட்டுமேயாகும்” மன்னர் தனது நாடு முழுவதையும் விற்றாலும் நாளுக்கு நாள் தான் வாக்குறுதி கொடுத்தவாறு 64 நாட்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை. அதனால் அரசர் கவிஞரிடம் உறுதியளித்தவாறு தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றமுடியவில்லை அதற்காக தன்னை மன்னித்துவிடுமாறு இறைஞினார் . கவிஞர் அரசரை மன்னித்து “நீங்கள் எதையும் வாக்குறுதி அளிப்பதற்கு முன்பு அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியுமா வென நன்கு சிந்தியுங்கள். ஒரு சில செயல்கள் முதலில் தவறானவையாகவும் மிகவும் வேடிக்கையானவையாகவும் தோன்றும், ஆனால் அவை உண்மையில் சரியானவை, நம்முடைய கற்பனைக்கு அப்பாற்பட்டவை ” என அறிவுறை கூறினார் . என்னவாசகரே நீங்களும் இதைபோன்ற கற்பணைக்கு அப்பாலான வாக்குறுதிகளை கொடுத்து அதனை நிறைவேற்றமுடியாமல் அல்லாடுமாறு சிக்கலில் மாட்டிகொள்ளாதீர்கள்

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

சிறு வணிகநிறுவனங்களுக்கானசிறிய நடுத்தர நிறுவனங்களின் துவக்கநிலை பொதுவெளியீடு(SME IPO)

 

கடந்த சில ஆண்டுகளாக, சிறு நடுத்தர நிறுவனங்கள் (Small and Medium Enterprises (SMEs) ) இந்திய பொருளாதாரத்தின் மிகவும் பிரமிப்பூட்டும் அளவில் வளர்ந்து வருகின்றன.பெரிய அளவிலான தனியார் பொது த்துறை நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், இ்ந்த SME க்கள் மிகக் குறைந்த முதலீட்டைக் கொண்டுள்ளன, ஆனால் அவை இந்திய நாட்டுமக்களுக்கு வழங்குகின்ற வேலை வாய்ப்புகளானவை பெரிய நிறுவனங்களை விட நான்கு மடங்கு அதிகமாகும் , இதனால், SME க்கள் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகமுக்கிய பங்களிப்பாளராக விளங்குகின்றன. இவை வட்டார அளவிலான வளர்ச்சியை சமநிலைப்படுத்துவதற்கும், சமமான பொருளாதார வளர்ச்சியுடன் வருமான சமத்துவமின்மையைக் சரிசெய்து கொண்டுவருவதற்கும் பேருதவியாக அமைந்துள்ளன.அதாவது SME க்கள், நம்முடைய நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கின்றன, ஏனெனில் அவை பொதுமக்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான முக்கியஆதாரமாகவிளங்குகின்றன. வேலைவாய்ப்புகளை வழங்குவதைத் தவிர, SME க்கள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக கிராமப்பகுதியில் இவை செழித்து வளரும்போது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்கின்றன, அதனால் இவை கிராமப்புற பொருளாதார மேம்பாட்டிற்கும் நாட்டின் பின்தங்கிய பகுதிகளின் பொருளாதார மேம்பாட்டிற்கும் பேருதவியாய் திகழ்கின்றன. இந்த SME களானவை பெரிய தொழில்நிறுவனங்களுக்கு , துணை அலகுகளாக, தோள்கொடுத்து அவைகளின் தடையறா இயக்கத்திற்கும் வளர்ச்சிக்கும்பேராதரவை வழங்குவதன் வாயிலாக நமது நாட்டின் பொருளாதாரா வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கினறன. வெற்றிகரமான SME களின் சிறந்த சமநிலை என்னவென்றால், அவை புதிய முயற்சிகளைத் தொடங்க மக்களை ஊக்குவிக்கின்றன, மேலும் புதுமையான ஆலோசனைகளைப் பற்றி சிந்திக்க, போட்டித் தன்மையை மேம்படுத்துகின்றன எல்லாவற்றிற்குமேலாக இவை பொருளாதாரத்தை மிகச்சிறப்பாக வழிநடத்தி செல்லுகின்றன. SME களின் வளர்ச்சிகளுக்கான தடைகள் சிறு வணிகநிறுவனங்கள் நாட்டின் பொருளாதார வளரச்சிக்கு பேரார்வங்களைக் கொண்டிருக்கின்றன, ஆனால் அவற்றின் செயல்முறையில் பல்வேறுவகையிலான இடையூறுகளையும் சிக்கல்களையும் எதிர்கொள்கின்றன, எல்லாவற்றிற்கும் மேலாக முதன்மையாக மிகப்பெரியஇடையூறாக இருப்பது அவைகளின் தடையற்றஇயக்கத்திற்கு போதுமான அளவிற்கு நிதி உதவியைப் பெறுவதாகும். எந்தவொரு முதலீட்டாளரையும் சமாதானப்படுத்துவதும், அவர்களின் கனவை யதார்த்தமாக மாற்றுவதும் கிட்டத்தட்ட சாத்தியமற்ற செயலாகும், எனவே, முதலீட்டிற்கான கணிசமான தொகையினை மூலதனக் கடன்களாகப் பெறுவது சாத்தியமற்றதாக அமைகின்றது. இவ்வாறான சூழலில் நிதி நிறுவனங்கள் துவக்கநிலைநிறுவனங்கள் , தனிநபர் நிறுவனங்கள் ஆகிய SMEகள் தங்களுக்குத்தேவையான மூலதன நிதியை அணுகுவது சந்தேகத்திற்கு இடமின்றி அவைகளின் விரும்பிய வளர்ச்சியில் மிகப்பெரிய தடையாக இருந்துவருகின்றன. எந்தவொரு வணிகநிறுவனத்திற்கும் ‘அவ்வணிகத்தின் உயிர்நாடி’ என்பது அவைநன்றாக செயல்படுவதற்கு தேவையான நிதிவசதிபெறுவதாகும் மிகச்சரியாகக் கூறவேண்டுமெனில் இந்நிதிவசதியானது எப்போதுமே SME க்களுக்கு குறுகிய காலவிநியோகத்தில் மட்டுமேஉ ள்ளது, அதனால் அவைகளின் விரிவாக்கத்தையும் வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்துவதற்கு தேவையான நிதிவசதியைஉடனுக்குடன் பெறமுடியாத நிலையானது SME களை மேலும் வளர்ச்சிபெறமுடியாமல்தேக்கநிலையை அடையச்செய்கின்றன. தற்போது நமது நாட்டில் கிட்டத்தட்ட 55 மில்லியன் SME க்கள் செயல்பட்டு வருகின்றன, மேலும் இவை 60 மில்லியன் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை அளித்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாக அமைந்திருப்பதால், இவை மிகப்பெரிய வேலைவாய்ப்பு வழங்குநராக இருப்பதில் ஆச்சரியமில்லை. SME களின் பங்களிப்பை அரசாங்கம் ஒப்புக்கொள்கிறது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நன்கு அறிந்திருக்கிறது. , அவைகளுக்கு இணக்கமான செயல்களையும் நிதி உதவிகளையும் பெறுகின்ற நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கு ஏதுவாகவும் அரசானது செயல்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக SME IPO எனும் திட்டத்தின் வாயிலாக தங்களுக்கு தேவையான நிதியை பொதுமக்களிடமிருந்து திரட்டிகொள்வதற்கான வசதியை துவக்கியுள்ளது இந்தியாவில் SME களின் மகத்தான பங்கு உணரப்பட்டு அவற்றின் பரந்த அளவிலானவளர்ச்சியினை புரிந்துகொண்டு, அர்ப்பணிப்பு உணர்வுடன் SME IPO எனும் திட்டத்தினை நடைமுறைபடுத்திடுவதற்காக இந்திய அரசால்NSE , BSE ஆகிய தளங்கள் நிறுவப்பட்டுள்ளன. குறிப்பு SME IPO என்பது சிறுநடுத்தர நிறுவனங்களில் (Small and Medium Enterprises (SMEs) ) பொது மக்களின் துவக்கநிலை முதலீட்டிற்கான வாய்ப்பு (Initial Public Offer) எனும் திட்டத்தின் படி பரவலாக பொதுமக்களும் இந்த SMEகளில் தங்களுடைய முதலீட்டினை இடுவதற்கான வாய்ப்பினை வழங்குவதாகும் இந்த பங்குபரிமாற்றதளங்கள் SMEகளுக்கு SME IPO புதிய பட்டியல் வெளியிடும் வாய்ப்பை வழங்குகின்றன, இதனால் SMEகளும் பொதுமக்களிடமிருந்து ஏராளமான அளவில் நிதிதிரட்டுவதற்கான வாய்ப்புகளை பெறுகின்றன.SMEகளின் ஒட்டுமொத்த முயற்சிகளுக்கு தேவையான மூலதனத்தை எளிதில் அணுகுவதற்கான சிறந்த வழியாக இருப்பது SME IPO பட்டியலிடும் வழிமுறைக்கு செல்வதாகும். அவ்வாறான SME IPOவை வெளியிடுவதற்கான தகுதிகள் பின்வருமாறு 

 

SME IPO இல் புதியதாக பட்டியலிடுவதற்காக விண்ணப்பிப்பதற்கு முன் வேறு சில முக்கியமான காரணிகளை கருத்தில் கொள்ளப்பட வேண்டும். 1. தொழில்துறை நிதி புனரமைப்பு வாரியத்தின் ((BIFR)) அல்லது தற்போதைய IBCஎனும் நிறுவன நொடிப்புதீர்வு வாரியத்தின் நடவடிக்கையி ன் கீழ் நிறுவனம் இருக்கக்கூடாது. 2. நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக எந்தவொரு மனுவும் இருக்கக்கூடாது. 3. SME IPO பட்டியலிடுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்த நாளிலிருந்து முந்தைய ஒரு வருடத்தில் நிறுவனத்தினை உருவாக்கியவர்களில்(Promoters) எந்த மாற்றமும் இருக்கக்கூடாது. SME IPO பட்டியலிடுவதற்கான நடைமுறை SME க்களுக்கான IPO செயல்முறையை முதன்மைப்படுத்துவதுஎன்பது ஒப்பீட்டளவில் எளிதானது நிறுவனம் இவ்வெளியீட்டிற்காக ஒரு முன்னணி மேலாளரை நியமிக்கும் நாளிலிருந்து கிட்டத்தட்ட 5-6 மாதங்கள் ஆகும். வணிக வங்கியாளரை நியமித்தல், மூலதன கட்டமைப்பு, அதற்குரிய விடாமுயற்சி , IPO-க்கு முந்தையசெயல்முறை, வங்கியாளர்கள், பதிவாளர், சந்தை தயாரிப்பாளர்கள், RTA போன்றவர்களை நியமித்தல், வெளியீட்டு ஆவணம் தயாரித்தல் (DRHP), பங்குசந்தையில் DRHP ஆவணத்தை சமர்ப்பி்த்தல் , பங்கு பரிமாற்ற சந்தையிலிருந்தும் நிறுவனங்களின் பதிவாளரிடமிருந்தும்(RoC) ஒப்புதல்பெறுதல், வெளியிடும் பங்குகளுக்கான விலை நிர்ணயம் செய்தல், பொது வெளியீட்டைத் திறத்தல், வெளியீடுசெய்தல் பங்குகளை ஒதுக்கீடுசெய்தல், பட்டியலிடுதல் , வர்த்தகம் செய்தல் ஆகியவை SME IPO பட்டியலிடுவதற்கான பொதுவான நடைமுறைகளாகும் SME IPO வெளியிடுவதால் கிடைக்கும் நன்மைகள் 1. சமபங்குவெளியீட்டின் வாயிலாக முதலீட்டு தொகையை SMEகளில் உள்ளீடு செய்வதன் மூலம் அவைகளின் மூலதனத்தை பொதுமக்கள் அணுகுவதற்கான வாய்ப்பு கிடைக்கின்றது. 2. இவ்வாறான வெளியீடானது பொதுமக்களிடம் SME களின் கவுரவத்தையும் நம்பகத்தன்மையையும் வளர்ப்பதோடுமட்டுமல்லாமல், நிறுவனத்தின் நிகர மதிப்பையும் மேம்படுத்துகிறது. 3. நிறுவனத்தின் நிகர மதிப்பு உயர்வுஅடைவதால் அந்நிறுவனத்தை விரிவுபடுத்தவும், மேம்படுத்தி பன்முகப்படுத்தவும், முடிகின்றது. 4. முன்னுரிமை பங்குகள் வெளியீடு, உரிமைபங்குகள் வெளியீடுகள், தகுதிவாய்ந்த நிறுவன முதலீடு (QIP) பிற சர்வதேச நிதி திரட்டும் கருவிகள் என்பன போன்ற பல்வேறு மூலங்களிலிருந்து SME க்கள் போதுமான மூலதனத்தை திரட்ட முடியும். 5. இவ்வெளியீடானது பொதுமக்களின் கைகளுக்கு செல்வதன் மூலம், நிறுவனம் பங்குதாரர்களுக்கு தேவையான பணப்புழக்கத்தை வழங்குகின்றது. இவ்வெளியீடானது பொதுமக்களின் கைகளுக்கு சென்றபின் SME களின் வளர்ச்சி விகிதமானது மிகவும் ஊக்கமளிக்கின்றது, எனவே, இதனை தொடர்ந்து மேலும் தொடக்கநிலை(STRATUP) நிறுவனங்களும் சிறு வணிகநிறுவனங்களும் இதேபோன்று பொதுமக்களுக்காக பட்டியலிடுவதற்காக தயாராகி வருகின்றன. SME IPO பட்டியல் வளர்ந்து வரும் நிறுவனங்கள் சமபங்குகளின் மூலம் மூலதனத்தை திரட்டக்கூடிய ஒரு வழியைத் உருவாக்குகின்றதுது, இதனால் சேகரிக்கப்பட்ட நிதியும் நிறுவனத்தின் தேவையைப் போலவே முழு சுதந்திரத்துடன் அதைப் பயன்படுத்துவதற்கான வசதியையும் அளிக்கின்றது. வெற்றிகரமான IPO பட்டியலிடும் செயலானது முதலீட்டாளர்கள், முதலாளிகள் பணியாளர்கள் ஆகிய அனைத்து தரப்பினர்களுக்கும் பேரளவு நன்மைகளைத் வழங்குகின்றது

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

புதியவர்கள் ஒரு சட்டத்தைப் படித்தால் புரிந்துகொள்வதற்கான சட்டம் பற்றிய அடிப்படைகள்

சட்டம் பயிலும் விரும்பும் எவரும் எதிர்வருங்காலத்தில் வெற்றிகரமான தொழில்முறைசட்ட நிபுணராக பயனிக்க பல்வேறு வகையான சட்டங்கள் (வரிவிதிப்பு சட்டங்கள், வியாபார சட்டங்கள், வணிக சட்டங்கள், தொழிலாளர் சட்டங்கள், பாதுகாப்பு சட்டங்கள், பொருளாதார சட்டங்கள் என்பன போன்றவை) பற்றிய நல்ல அறிவைப் பெற்றிருக்க வேண்டும். இதற்காக தற்போது சந்தையில் ஏராளமான சட்ட குறிப்பு புத்தகங்கள் கிடைக்கன்றன, அவை சட்டத்தைஓரளவிற்கு புரிந்துகொள்ள உதவுகின்றன.
பொதுவாக பொதுமக்கள் செயல்படும் சூழல் ,சமுதாயத்தினுடைய தேவைகள்ஆகியவற்றின் அடிப்படையிலேயே சட்டங்கள் அனைத்தும் உருவாக்கப் படுகின்றன. நாம் வாழும் மனித சமுதாயம் ஒருபோதும் நிலையானதாக இல்லாததால், நமது சட்டங்களும் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கின்றன . நம்முடைய வாடிக்கையாளர்களை நாம் கையாளும் போது பயன்படுத்தி கொள்கின்ற இன்று நாம் பயன்படுத்தி கொண்டுவரும் சட்டங்களும் விதிகளும் எப்போதும் நிலையாக அப்படியே இருக்கும் என்பது ஒருபோதும் உறுதியாகத் தெரியவில்லை. அதனால் தற்போது நாம் பயன்படுத்திகொள்வதற்காக கிடைக்கும் புத்தகங்கள் எதுவும் நமக்கு பிற்காலத்தில் உதவாது, அந்நிலையில் நாம் முதன்முதலில் நிறைவேற்றபட்ட உண்மையான சட்டங்களுக்கு திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும். இருப்பினும், ஒரு வெற்றுச் சட்டங்களின்(Bare Acts) சட்ட மொழியில் படிப்பது என்பது நம்முடைய அலமாரியில் உள்ள வேறு ஏதேனுமொரு புத்தகத்தைப் படிப்பதைப் போன்றதன்று. இதற்கு சட்டத்தின் மொழி பற்றிய சிறப்பான புரிதலும் சரியான விளக்கமும் நமக்கு தேவையாகும். அத்தகைய சூழ்நிலையில், வெற்றுச் சட்டங்களைக் குறிப்பிடாமல், அவற்றைப் பற்றிய நுண்ணறிவுகளைப் பெற முயற்சிக்காமல், அந்த குறிப்பு புத்தகங்களின் உதவியுடன் தற்போதைய சட்டங்களைப் படித்து புரிந்துகொள்வதன் மூலம் இதற்காக நடத்தபெறும் தேர்வுகளில் மட்டும் வெற்றி பெறுவது சரியன்று
அதனால் சட்டத்தை படிக்கவிரும்பும் ஒவ்வொருவரும் எந்தவொரு சட்டத்தையும் படிக்கும்போது மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக இங்கு ஒரு சில விவரங்களைக் கண்டுபிடித்து தொகுத்து வழங்க முயற்சிக்கப்படுகின்றது. இருப்பினும்,இந்த பட்டியல் முழுமையானது அன்று என்ற செய்தியை மனதில் கொண்டு தொடர்ந்து செல்க.
1. பொதுவாக இந்தியாவில் நாம் பயன்படுத்தி கொண்டுவருகின்ற அனைத்து சட்டங்களும் இந்திய நாடாளுமன்றத்திலோ அல்லது மாநிலங்களின் எந்தவொரு மாநில சட்டமன்றத்திலோ நிறை வேற்றப் பட்டவைகளாகும். ஒரு நாட்டின் பல்வேறு பிரச்சினைகள் குறித்த பல்வேறு விதிகளும் ஒழுங்குமுறைகளும் உள்ளன. இருப்பினும், ஒவ்வொரு பிரச்சினையிலும் சட்டத்தை உருவாக்க வும் நிறைவேற்றிடவும் ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் (மத்திய அல்லது மாநில) அதிகாரம் இல்லை. அதாவது இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் சட்டமியற்றிடும் அதிகாரங்கள் (மாநில அரசுகளும் ஒன்றிய அரசும் நாட்டில் எழும் பிரச்சினைகள் குறித்து சட்டங்களை உருவாக்க அதிகாரம் பெற்றவைகளாகும் ) அவ்வாறான சட்டம் இயற்றிடும் அதிகாரங்கள் 1.இந்திய ஒன்றியத்தின் பட்டியல் , 2 இந்திய ஒன்றியம் ,மாநிலங்கள் ஆகிய இரண்டிற்குமான பட்டியல் , 3.மாநிலங்களின் பட்டியல் என்றவாறு மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன:
.
2. ஒரு சில சட்டங்களின் பெயருக்கு முன்பு 'Central ' என்ற சொல் முன்னொட்டாக ஏன் வருகின்றது என நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் (இது குறித்த விவரங்களை அறிந்து கொண்டுள்ளோம்). அல்லது நம்மில் எத்தனை பேருக்கு இது மாநில சட்டம் அன்று நாடளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு மத்திய சட்டமாகும் அதனால் இந்த 'Central ' என்ற சொல் முன்னொட்டாக வந்துள்ளது என தெரிந்து கொண்டிருக்கின்றோம். அதெல்லாம் சரி, சுங்க சட்டம், 1962 (Customs Act, 1962 )பற்றி நமக்கு என்ன தெரியும்? இதுவும் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு மத்தியச் சட்டம்தான், ஆயினும் இதில் 'Central' என்ற முன்னொட்டு சொல் இல்லையே. அதனால் இது மத்திய அரசுச்கு சொந்தமானது அன்று என தவறாக எண்ணக்கூடாது நிச்சயமாக அது ஒரு முழுமையற்ற பதிலாகும் .இந்நிலையில் 'Central' என்ற முன்னொட்டு சொல் எப்போதும் மத்தியஅரசின் சட்டங்களுடன் முன்னொட்டாக இருக்கும். ஆனால் அவ்வாறான 'Central' என்ற முன்னொட்டு சொல் அனைத்து மத்திய அரசின் சட்டங்களிலும் இல்லையே ஆயினும் அவற்றை மத்திய அரசு நடைமுறைபடுத்தி வருகின்றதே எனும் சந்தேகம் நம்மனைவருக்கும் எழும் நிற்க . பொதுவாக மத்தியஅரசு மாநிலஅரசுகள் ஆகிய இரு அரசாங்கங்களுக்கும் சட்டங்களை உருவாக்குவதற்கான அல்லது இயற்றுவதற்கான அதிகாரங்களை பெற்றுனள்ளன இருந்தபோதிலும் இந்தியா முழுவதற்குமான பிரச்சினைகள் குறித்த சட்டங்களை மாநில சட்டத்திலிருந்து வேறுபடுத்தி காண்பிப்பதற்காக மத்திய அரசால் 'Central என்ற சொல் முன்னொட்டாக சேர்க்கப்படுகின்றன.( Central Goods And Service Tax Act(CGST),என்பது மத்திய அரசிற்கு உரியது Integrated Goods And Service Tax Act(IGST) என்பது மாநிலங்களுக்கு இடையேயான சட்டமாகும் State Goods And Service Tax Act(SGST)என்பது மாநில அரசுகளுக்கு உரியது) . ஆயினும் மத்திய அரசால் கொண்டுவரப்படும் வேறுசில சட்டங்களில் 'Central' என்ற சொல்கொண்டிருக்கவில்லையே, ஏனெனில் மைய அரசிற்கு உரிய உரிமையின் அடிப்படையில் அயலுறவு ,பொருட்களை அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தல் அயல்நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்தல் போன்றவை தொடர்பான சட்டத்தை உருவாக்க எந்த மாநில அரசாங்கங்களுக்கும் அதிகாரம் வழங்கப் படவில்லை. அவ்வாறே வருமானவரி வசூலித்தல் தொடர்பான வருமான வரிச் சட்டம், 1961 இல்'Central' என்ற சொல் இல்லை என்பதை நினைவில் கொள்க. ஆயினும் வேளாண்மை வருமானம் குறித்த சட்டத்தை உருவாக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருந்தாலும், விவசாய வருமான வரிவிதிப்பை நிர்வகிக்கும் எந்தவொரு சட்டத்தையும் இன்றுவரை எந்த மாநிலமும் வடிவமைக்கவில்லை.என்ற செய்தியை மனதில் கொள்க
3. நாம் எப்போதாவது எந்தவொரு புதிய சட்டத்தை பார்த்ததாலும், அதில் No _ of Year _). போன்ற சொற்களைக் பார்த்திருப்போம். எ.கா. நிறுவனங்களின் சட்டம், 2013 (No. 18 of 2013). இது உண்மையில் எதைக் குறிக்கிறது என்று எப்போதாவது யோசித்தோமா? எந்த ஆண்டில் குறிப்பிட்ட சட்டம் நிறைவேற்றப் பட்ட து என்றும் எத்தனையாவது சட்டமாக நிறைவேற்றபட்டது என்றும் இது குறிக்கிறது. கொடுக்கப்பட்ட எடுத்துக்காட்டில்,இதில் பிறையடைப்பில் உள்ள, 2013 என்பது2013 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது எண் 18 என்பது அது18 வது சட்டமாக நிறைவேற்றபட்டதாக கூறுகிறது.

4. யாராவது நம்மிடம் வந்து வருமான வரிச் சட்டம், 1961 இன் நோக்கம் என்ன? என்ற ஒரு அடிப்படை கேள்வியைக் கேட்டால், தொழில் ரீதியாக அதற்கு நாம் எவ்வாறு பதிலளிக்க முடியும்? ஒவ்வொரு சட்டத்திற்கும் ஒரு முன்னுரை( preamble) உள்ளது, அது அந்த சட்டத்தின் நோக்கங்களை குறிக்கின்றது. அதாவது எந்தவொரு சட்டத்திலும் பிரிவு -1 க்கு மேல்பகுதியான, அந்த சட்டத்தின் முதல் பக்கத்தில் அந்த சட்டம் இயற்றப்படுவதற்கான நோக்கத்தைத் தேடினால் கண்டிப்பாக கிடைக்கும். எ.கா. வருமான வரிச் சட்டத்தின் குறிக்கோள்களாக அந்த சட்டத்தின் முதல்பக்கத்தின் முன்னுரையின் (preamble )படி, வருமான வரி மற்றும் முதன்மை வரி தொடர்பான சட்டத்தை ஒருங்கிணைத்து திருத்தம் செய்திடுதல் எனக் குறிப்பிடப் பட்டிருக்கும்

5. ஒவ்வொரு சட்டமும் பகுதிகளாகவும் பிரிவுகளாகவும் இடையிடையே பிரிக்கப்பட்டுள்ளது. மேலும், இது துணைப்பிரிவுகள், உட்பிரிவுகள், துணை உட்பிரிவுகள்ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆனால், "Section - 40(1)" என்பது குறித்து விவரமாக கூறுக என யாரவது நம்மிடம் கோரினால், நாம் எவ்வாறு அதனை பார்த்து அதனுடைய விவரங்கள்குறித்து விவரிக்க முடியும்? அதாவது பிரிவு 40 இன் துணைப்பிரிவு 1 அல்லது பிரிவு 40 இன் இனம் (Clause) 1? இவற்றுள் எது சரி, சட்டத்தில் கொடுக்கப்பட்ட பிரிவைப் பார்க்காமல் பேசுவது நடைமுறையில் சாத்தியமற்றது. ஏனெனில், பிரிவுக்குப் பிறகு ஏதேனும் அடிப்படைக் கோடு( Base Lline) கொடுக்கப்பட்டிருந்தால், அது ஒரு இனம் (Clause),ஆகும் இல்லையெனில் அது துணைப்பிரிவாகும். இதனை புரிந்து கொள்வதற்காக வருமான வரிச் சட்டத்தின் விரிவான எடுத்துக்காட்டு ஒன்றினை இப்போது காண்போம்: வருமான வரிச் சட்டத்தின் 24 வது பிரிவைப் பார்வையிட்டால், அது பின்வருமாறு கூறுகிறது:
பிரிவு 24. "Income from house Property" என்ற தலைப்பில் வசூலிக்கக்கூடிய வருமானம் பின்வரும் விலக்குகளைச் செய்தபின் கணக்கிடப்படும், அதாவது: -
(a) A sum equal to எனத்துவங்கிடும் இதனுடைய உட்பிரிவு (a) , பிரிவு (24) ஆகிய இரண்டிற்கும் இடையில் ஒரு அடிப்படைக் கோடு உள்ளது. எனவே இது பிரிவு 24 இன் இனம் (Clause), (a) ஆக படிக்கப்படும். இருப்பினும், இதே சட்டத்தின் பிரிவு 23 ஐப் பார்வையிட்டால், 23. (1) for the purposes of section 22 எனகுறிப்பிடப்பட்டுள்ளது இங்கு துனைப்பிரிவு (1) பிரிவு (23) ஆகியஇரண்டிற்கும் இடையில் அவ்வாறான அடிப்படைக் கோடு எதுவும் இல்லாததை காணலாம். எனவே, இது பிரிவு 23 இன் துணைப்பிரிவு (1) ஆக படிக்கப்படும்.

6. இப்போதெல்லாம் சட்டமியற்றுபவர்கள் ஒரு சில நேரங்களில் "a, b, c ..." ஆகியவற்றை உட்பிரிவுகளாகவும் வேறு சில நேரங்களில் "1, 2, 3 .." ஆகியவற்றை உட்பிரிவுகளாகவும் பயன்படுத்து கின்றனர்? அவ்வாறாயின் சட்டமியற்றுபவர்கள் தம்முடைய விருப்பப்படி ஒருசில சட்ட பிரிவுகளுக்கு பிரிவு 40 (a ),40 (b ), 40 (c ) ... என்றவாறும் வேறுசில சில சட்ட பிரிவுகளுக்கு பிரிவு 22(1), 22(2), 22(3 ) ... என்றவாறு அவரவர்களுடைய விருப்பத்தின் பேரில் உருவாக்கமுடியுமா? நிச்சயமாக இல்லை. உண்மையில் சட்டத்தின் பிரிவில் 26 அல்லது அதற்கும் குறைவான உட்பிரிவுகளை மட்டுமே சேர்க்கப்பட வேண்டும் என்ற நிலையில், "a, b, c,..." என்பவற்றை உட்பிரிவுகளாகயும் ஒரு சட்டத்தின் உட்பிரிவுகளானவை அதற்கும் அதிகமாக இருந்தால் "1, 2, 3,..." என்பவற்றை உட்பிரிவுகளாக வும் பயன்படுத்தி கொள்கின்றனர்

7. ஒருசில சட்டப்பிரிவுகளில் (40A (2), 47A) என்றவாறு குழப்பமான பிரிவுகளை கொண்டிருந்தால் அதென்ன அவைகளில் ஆங்கில பெரியஎழுத்து A என்பதை சட்டத்தின் பிரிவுஎன்களுடன் சேர்த்து கொடுத்து விடுகின்றனர் என்று மனம் ஒரே சோர்வாக இருக்கிறதா? கவலையேப்படாதீர்கள் இந்த ஆங்கில பெரிய எழுத்து A ஆனது பொதுவாக குறிப்பிட்ட சட்டப்பிரிவில் செய்யப்பட்ட திருத்தத்தை குறிக்கிறது.

8. உள்ளடக்கிய வரையறைகள் ஒவ்வொரு சட்டத்தின் ஒரு பகுதியாகும். புனைகதையாக கருதுகின்ற உள்ளடக்கத்தை உருவாக்கப் பயன்படும் "Include" என்ற சொல் ஒரு வரையறையின் நோக்கத்தை அதன் பொது அர்த்தத்திற்கு அப்பால் நீட்டிக்கிறது. ஒரு சாதாரண மனிதனின் மொழியில், "Include" என்ற சொல்லுடன் துவங்கும் ஒரு வரையறை இருந்தால், இதன் பொருள் பொதுவாக அந்த சொல்லின் அர்த்தம் என பொதுவாகக் கருதப்படுவதைத் தவிர, அதற்கு பின்வருவனவும் அதனுடன் உள்ளடங்கியதாகக் கருதப்படும் .

9. ஒவ்வொரு சட்டத்திற்கும் பொருந்தக்கூடிய ஒரு சட்டப்பிரிவுகளில் அவற்றை திருப்தி செய்வதற்காக பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. அத்தகைய நிலைமைகளில் பொதுவாக "AND" அல்லது "OR" உடன் அந்த நிபந்தனைகள் பிரிக்கப்படுகின்றன. அவ்வாறு பிரிப்பதில் இவ்விரண்டும் என்ன வித்தியாசத்தை உருவாக்குகின்றன? ஒரு சட்டப்பிரிவில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிபந்தனைகளுக்கு இடையில் "AND" இருந்தால், அவை அனைத்தும் திருப்தி அடைந்தால் மட்டுமே குறிப்பிட்ட சட்டப்பிரிவு செயலில் இருக்கும் .வேறொரு சட்டப்பிரிவின் நிபந்தனைகளுக்கு இடையில் "OR" என்ற சொல் இருந்தால், அவற்றில் ஏதேனும் ஒரு நிபந்தனையை மட்டும் திருப்தி செய்தால் போதுமானதாகும் என குறிக்கின்றது .

10. சட்டம் என ஒன்று இருந்தால் அந்த சட்டத்திற்கு எப்போதும் விதிவிலக்குஎன்ற ஒன்றும் கண்டிப்பாக இருக்கும்; அவ்வாறான சட்டத்தின் விதிவிலக்குள் கூட. பல்வேறாக இருக்கும். அவை Proviso's என்பதன் உதவியுடன் சட்டப்பிரிவுகளுக்கிடையில் வழங்கப்படுகின்றன. "Provided that" என்று துவங்குபவை அந்த சட்டப்பிரிவின் அவ்வாறான விதிவிலக்குகளாகும் என்பதை நினைவில் கொள்க

11. வழக்குச் சட்டங்கள் (Case Laws ) என்பவை எப்போதும் எந்தவொரு சட்டத்தின் ஒரு பகுதியாகும். எனவே, அவற்றின் சரியான மேற்கோளைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும் எடுத்துக் காட்டாக Union of India Versus Delhi Cloth and General Mills Co. Ltd. 1977 (1) E.L.T. (J 199) (S.C.)
- இதில், Union of India என்பவர் ஒரு மேல்முறையீட்டாளர் (அல்லது வாதியாவார்)
- அதாவது இந்த வழக்கினை தாக்கல் செய்த வர் ஆவார்.
- Delhi Cloth and General Mills Co. Ltd. என்பவர் அவ்வழக்கின்ஒரு பிரதிவாதி (அல்லது பதிலளிப்பவர்)
- 1977 என்பது இந்த வழக்கின் தீர்ப்பு வெளியிடபட்ட ஆண்டு ஆகும்.
- (1) என்பது தீர்ப்பு வெளியிடப்பட்ட பத்திரிகையின் தொகுப்பு எண் ஆகும்.
- E.L.T.. அந்த தீர்ப்பினை வெளியிட்ட வெளியீட்டாளர் அல்லது பத்திரிகையாகும்.
- (J 199) என்பது. அந்த தீர்ப்பு வெளியிடப்பட்ட இதழின் பக்க எண் ஆகும்.
- (S.C.)என்பது அந்த தீர்ப்பு எந்த நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது எனக்குறிப்பிடும் நீதிமன்றத்தின் பெயராகும் .

12. தடைசெய்யப்படாத இனம்(Clause ) - இவை கொடுக்கப்பட்ட நிபந்தனைகளின் திருப்தி குறித்த ஒரு சில விதிகளை( provisions) இரத்து செய்யும் அதிகபட்ச ஆளுமை கொண்ட இனங்களாகும்( clauses) . இவை பொதுவாக பின்வரும் வழியில் உள்ளடக்கங்களாக உள்ளன; "Notwithstanding anything contained in". என்றவாறும். அதுமட்டுமல்லாமல் "Subjects to the provisions of." என்றவாறான உள்ளடக்கங்களாககூட இருக்கலாம்

வேறு ஒருசில பொதுவானவைகள்
1. வருமான வரிச் சட்டத்தில், "Income from House Property" என்ற பெயரில் ஒரு தலைப்பு இருப்பதும், "Property consisting of any building or land". என்று பொறுப்பு ஏற்பு செய்திடும் விதிகள் பிரிவு 22 இல் இருப்பதும் ஒரே குழப்பமாக இருக்கின்றதல்லவா? ஆயினும், தலைப்பிற்கும் அதனுடைய விதிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டால், நிச்சயமாக பிந்தையதே மேலோங்கும் என்ற தகவலை மட்டும்தெரிந்து கொள்க .
2. நம்முடைய வருமான வரிப் பொறுப்பைக் குறைக்க மூன்று வழிகள் உள்ளன:
அ) வரி திட்டமிடல் - சட்டத்தால் வழங்கப்பட்ட நன்மைகளைப் பயன்படுத்தி முற்றிலும் சட்டபூர்வமாக குறைப்பது.
b) வரி தவிர்ப்பு - சட்டத்தில் உள்ள ஓட்டைகளை தவறாகப் பயன்படுத்துதல். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, வரி தவிர்ப்பு சட்டவிரோதமானது அன்று. இருப்பினும், எந்தவொரு பொறுப்புள்ள குடிமகனும் அதைப் பயன்படுத்தக்கூடாது.
c) வரி ஏய்ப்பு - அதை மறைப்பதற்காக தவறான தகவல்களை வழங்குவதற்காக. சட்டவிரோத நடைமுறையை பயன்படுத்துதல்.
3. பொதுவாக சட்டத்தில் உள்ள தவறுகளை ஓட்டைகள் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றை சரிசெய்வது " சட்டத்தின் ஓட்டைகளை அடைத்தல் ( Plugging the Loophole)" என்று அழைக்கப்படுகிறது.
  இதுவரை நாம் கண்டுவந்த சட்டத்தை விளக்கம் செய்வது என்பது சட்டத்தை கற்றல்தொடர்பான ஒரு தொடர்ச்சியான மற்றும் முடிவில்லாத செயலாகும் .

சனி, 1 ஆகஸ்ட், 2020

மதிப்புமிக்க பேனா- வாழ்க்கை பாடம்

ஜே.ஆர்.டி டாடாவுக்கு ஒரு நண்பர் இருந்தார், அவர் தனது பேனாவை அடிக்கடி  தவறவிட்டு காணாமல் போக்கிவிடுவதால்  எழுதவதற்காக புதிய பேனாக்களை அவ்வப்போது வாங்கி கொண்டேயிருந்தார். அவை மிகவும் விலை மலிவானதாக இருந்ததால் அவ்வாறு தன்னுடைய பேனாக்கள் இழப்பதைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை என இறுமாந்திருந்தார் .
நண்பர் ஜே.ஆர்.டி டாட்டாவிடம் தான்  பேனாக்களை பத்திரமாக வைத்திருக்காமல் காணாமல் போக்கிடும் தனது பொறுப்பற்ற  பழக்கத்தைப் பற்றி கவலைப்படுவதாகக் கூறினார்.
ஒரு நாள், ஜே.ஆர்.டி தன்னுடைய நண்பரிடம்  விலையுயர்ந்த பேனாவை வாங்குமாறு பரிந்துரைத்தார், இவ்வாறான விலையுயர்ந்த பேனாவாக இருந்தால் அவருடைய பொறுப்பு எவ்வாறு இருக்கின்றது என பார்க்கலாம் என அறிவுரைகூறினார் அதனைதொடர்ந்து . அந்நண்பரிடம் 22 காரட் தங்கத்திலான பேனாஒன்றினை வாங்கி பரிசளித்தார்.
ஏறக்குறைய ஆறு மாதங்களுக்குப் பிறகு ஜே.ஆர்.டி தன்னுடைய நண்பரைச் சந்தித்த போது, தற்போதும் பேனாவை இழக்கும் செயல் நடைபெறுகின்றதா என நண்பரிடம் வினவினார்.
நண்பர் சிரித்துக்கொண்டே, இப்போது  தனது பேனாவைப் பற்றி மிகவும் கவனமாக இருப்பதாகவும், தங்கத்திலான பேனா மட்டும் தற்போது காணாமல் போகவில்லை பத்திரமாக தன்னுடைய கைவசம் இருக்கின்றது என்றும்  இப்போது மட்டும்   எப்படி கவனக்குறைவாக இல்லாமல் பேனாவை தான்பத்திரமாக வைத்திருக்கமுடிகின்றது  என்பதைக் கண்டு ஆச்சரியப்படுவதாகவும் கூறினார்.
அதற்கான வித்தியாசம்  பேனாவின் மதிப்பு மட்டுமே என்று ம்  வழக்கமான  அவருடைய செயல்களில் அல்லது பொருட்களின் மீதான கவனமாக வைத்திருப்பதில்  அவரிடம் தவறில்லை, அவர் எதிலும் கவனக்குறைவாக இல்லை, ஆனால் கவனமானது அந்த பொருளின்  அல்லது செயலின் மதிப்பிற்கு ஏற்ப மட்டுமே மாறுகின்றது என ஜே.ஆர்.டி அவருக்கு விளக்கமளித்தார்

ஆம்.  நாம் நம்முடைய  வாழ்க்கையில் மிகவும் மதிப்புள்ள செயல்களை அல்லது பொருட்களைப் பற்றி மிககவனமாக இருக்கின்றோம். கவனம் என்பது மனிதனின் அடிப்படை பண்பு, ஆனால் எப்போது கவனமாக இருக்க வேண்டும் எப்போது கவனமில்லாமல்  இருக்க வேண்டும் என்பது  அந்தந்த பொருளின் அல்லது செயலின் மதிப்பிற்கு ஏற்ப மாறுபடும் .என்பதே வாழ்க்கையின்எதார்த்தமான உண்மை நிலவரமாகும்    மேலும் கவனக்குறைவு  என்பது அதனுடைய  மதிப்பில்லாததண்மையை மட்டுமே காட்டுகிறது.நாம் பணத்தை மதிக்கிறோம் என்றால், செலவு செய்யும் போது கவனமாக இருப்போம் ..
நாம் நேரத்தை மதித்தால், நாம் நேரத்தை வீணாக்க மாட்டோம் ..

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...