சனி, 1 ஆகஸ்ட், 2020

மதிப்புமிக்க பேனா- வாழ்க்கை பாடம்

ஜே.ஆர்.டி டாடாவுக்கு ஒரு நண்பர் இருந்தார், அவர் தனது பேனாவை அடிக்கடி  தவறவிட்டு காணாமல் போக்கிவிடுவதால்  எழுதவதற்காக புதிய பேனாக்களை அவ்வப்போது வாங்கி கொண்டேயிருந்தார். அவை மிகவும் விலை மலிவானதாக இருந்ததால் அவ்வாறு தன்னுடைய பேனாக்கள் இழப்பதைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை என இறுமாந்திருந்தார் .
நண்பர் ஜே.ஆர்.டி டாட்டாவிடம் தான்  பேனாக்களை பத்திரமாக வைத்திருக்காமல் காணாமல் போக்கிடும் தனது பொறுப்பற்ற  பழக்கத்தைப் பற்றி கவலைப்படுவதாகக் கூறினார்.
ஒரு நாள், ஜே.ஆர்.டி தன்னுடைய நண்பரிடம்  விலையுயர்ந்த பேனாவை வாங்குமாறு பரிந்துரைத்தார், இவ்வாறான விலையுயர்ந்த பேனாவாக இருந்தால் அவருடைய பொறுப்பு எவ்வாறு இருக்கின்றது என பார்க்கலாம் என அறிவுரைகூறினார் அதனைதொடர்ந்து . அந்நண்பரிடம் 22 காரட் தங்கத்திலான பேனாஒன்றினை வாங்கி பரிசளித்தார்.
ஏறக்குறைய ஆறு மாதங்களுக்குப் பிறகு ஜே.ஆர்.டி தன்னுடைய நண்பரைச் சந்தித்த போது, தற்போதும் பேனாவை இழக்கும் செயல் நடைபெறுகின்றதா என நண்பரிடம் வினவினார்.
நண்பர் சிரித்துக்கொண்டே, இப்போது  தனது பேனாவைப் பற்றி மிகவும் கவனமாக இருப்பதாகவும், தங்கத்திலான பேனா மட்டும் தற்போது காணாமல் போகவில்லை பத்திரமாக தன்னுடைய கைவசம் இருக்கின்றது என்றும்  இப்போது மட்டும்   எப்படி கவனக்குறைவாக இல்லாமல் பேனாவை தான்பத்திரமாக வைத்திருக்கமுடிகின்றது  என்பதைக் கண்டு ஆச்சரியப்படுவதாகவும் கூறினார்.
அதற்கான வித்தியாசம்  பேனாவின் மதிப்பு மட்டுமே என்று ம்  வழக்கமான  அவருடைய செயல்களில் அல்லது பொருட்களின் மீதான கவனமாக வைத்திருப்பதில்  அவரிடம் தவறில்லை, அவர் எதிலும் கவனக்குறைவாக இல்லை, ஆனால் கவனமானது அந்த பொருளின்  அல்லது செயலின் மதிப்பிற்கு ஏற்ப மட்டுமே மாறுகின்றது என ஜே.ஆர்.டி அவருக்கு விளக்கமளித்தார்

ஆம்.  நாம் நம்முடைய  வாழ்க்கையில் மிகவும் மதிப்புள்ள செயல்களை அல்லது பொருட்களைப் பற்றி மிககவனமாக இருக்கின்றோம். கவனம் என்பது மனிதனின் அடிப்படை பண்பு, ஆனால் எப்போது கவனமாக இருக்க வேண்டும் எப்போது கவனமில்லாமல்  இருக்க வேண்டும் என்பது  அந்தந்த பொருளின் அல்லது செயலின் மதிப்பிற்கு ஏற்ப மாறுபடும் .என்பதே வாழ்க்கையின்எதார்த்தமான உண்மை நிலவரமாகும்    மேலும் கவனக்குறைவு  என்பது அதனுடைய  மதிப்பில்லாததண்மையை மட்டுமே காட்டுகிறது.நாம் பணத்தை மதிக்கிறோம் என்றால், செலவு செய்யும் போது கவனமாக இருப்போம் ..
நாம் நேரத்தை மதித்தால், நாம் நேரத்தை வீணாக்க மாட்டோம் ..

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...