ஞாயிறு, 6 மார்ச், 2022

பெரியோர்களின் அறிவுரைகளை பின்பற்றிடுக

 


ஒருமுறை பள்ளியின் வகுப்பறையில், இயற்பியல் ஆசிரியர் ஒருவர்மாணவர்களிடம், "நம்முடைட மகிழுந்தில் ஏன் வேகத்தடை வைத்துள்ளோம்?" எனும் கேள்வியை கேட்டார்

உடன்ஒரு மாணவன் எழுந்து, “வண்டியை நிறுத்துவதற்காக வைத்துள்ளோம்” என்று பதிலளித்தார்.
மற்றொரு மாணவர், "
மகிழுந்தின் வேகத்தைக் குறைத்து கட்டுப்படுத்திடுவதற்காக வைத்துள்ளோம்" என்று பதிலளித்தார்.
ூன்றாவதாக ஒருமாணவர்
, 'விபத்தினை தவிர்க்க'' என்றார்.
வெகுவிரைவில், அனைத்து மாணவர்களும் ஏறத்தாழ ஒரே மாதிரியான பதிலைச் சொல்லத் தொடங்கினர். எனவே, ஆசிரியர் கேள்விக்கு தானே பதிலளிக்க முடிவு செய்தார்.
, "
மாணவர்களாகிய உங்கள் அனைவரின் பதில்களையும் நான் பாராட்டுகிறேன். ஆயினும் ந்த வகையில் பார்த்தாலும் - மகிழுந்தில் உள்ள வேகத்தடைகள், அதை வேகமாக இயக்கவே நமக்கு உதவுகின்றன என்பதே உண்மையான பதிலாகும்'', என்றார் இயற்பியல் ஆசிரியர்.
ந்பதிலைக் கேட்டு
, வகுப்பில் ஆழ்ந்த அமைதி நிலவியது, ஏனென்றால் இவ்வாறான பதிலை யாரும் எதிர்பாரத்திடவும் இல்லை ,கற்பனை செய்க்கூடவும்வில்லை,

தொடர்ந்தஆசிரியர் , “ஒரு கணம், நம் மகிழுந்திற்கு வேகத்தடை இல்லை என்று வைத்துக் கொள்வோம், பிறகு நாம் எவ்வளவு வேகமாக மகிழுந்தினை ஓட்ட தயாராக இருக்கிறோம்? என சிந்தித்தீர்களா. மகிழுந்தில் உள்ளவேகத்தடைகள்தான் மகிழுந்தினை வேகமாகசெலுத்தி நாம் சென்றடைய வேண்டிய இலக்கை அடைய வைப்பதற்கான உறுதியை தருகிறது''. என விளக்கமளித்தார்
இயற்பியல் ஆசிரியரின் இந்த விளக்கஉரையை கேட்டுவகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களும் அதிக குழப்பமடைந்தனர். மகிழுந்தின் வேகத்தடைகளைப் பற்றி அவர்கள் இவ்வாறு ஒருபோதும் நினைத்துகூட பார்த்ததில்லை.
ஆயினும் அந்த இயற்பியல் ஆசிரியர் சிரித்துக்கொண்டே தொடர்ந்தார், “அதேபோல், நம் வாழ்க்கையிலும் இதுபோன்ற பல வேகத்தடைகள் உள்ளன.வைம் நம்முடைய வாழ்க்கையில் தாறுமாறாக சென்றிடாமல் தடுக்கின்றது அல்லது நம் தவறு செய்திடாமல் அதனைக் கட்டுப்படுத்துகின். நாம் பின்பற்ற விரும்பும் திசை, நமது முன்னேற்றம் அல்லது வாழ்க்கையில் இலக்குகள் ஆகியவற்றினை நம் பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் சரிசெய்து நம்முடைய வாழக்கையின் சரியான வழியை காட்டுகின்றார்கள்
.
அவர்களின் குறுக்கீடுகள் அல்லது அறிவுரைகளை நமதுவாழ்க்கை பாதையின் குறுக்கே தடுக்கும் வேகத்தடைகற்களாகநாம் பார்க்க முனைகிறோம்
.
ஆனால், நம்முடைய வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்வதை உறுதிசெய்து கொள்ளவும்
, ஆபத்துக்களைிலிருந்து நம்மை தற்காத்து கொள்ளவும் உதவுகின்ற நமது ஆதரவாளர்களாக அல்லது ஊக்கியாக அவர்களைப் பார்ப்பதுதான் மிகச்சரியான நடவடிக்கையாகும். ஏனென்றால், அவர்கள் சில சமயங்களில், நம்வாழ்க்கையின் திசையை தடுத்து நிறுத்தி அல்லது பின்வாங்கி சரியான திசைக்கு செல்ல வழிகாட்டுகின்றனர்
வ்வாறான அவர்களின் குறுக்கீடுகள் அல்லது அறிவுரைகளை தான்வருங்காலத்தில் நாம் நல்ல நிலையை அடைகின்ற வழிகாட்டிகளாக திகழ்கின்றன
.
இந்த வேகத்தடைகற்கள் இல்லாமல்
, நாம் நழுவலாம், திசையை இழக்கலாம் அல்லது துரதிர்ஷ்டவசமான விபத்தில் பலியாகலாம்.
எனவே, நம் வாழ்க்கையில் வேகத்தடைகற்கள் நம்மை பின்னுக்குத் தள்ளவோ ​​அல்லது பிணைப்பதற்கோ அல்ல
, மாறாக முன்பை விட நம்முடைய வாழ்க்கையில் நாம்வேகமாக முன்னேற உதவக்கூடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் நாம் விரைவாகவும் பாதுகாப்பாகவும் நம்முடைய வாழ்க்கையின் இலக்கை அடைய முடியும்''. என்ற நீண்ட விளக்கமளித்தார்

நம் பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் ஆகியோர்களின் குறுக்கீடுகள் அல்லது அறிவுரைகளை நமதுவாழ்க்கை பாதையின் குறுக்கே தடுக்கும் வேகத்தடைகற்களாகநாம் பார்க்காமல் அவற்றை நம்முடைய வாழ்க்கை பாதையின் படிக்கற்களாக பயன்படுத்தி முன்னேற உறுதி செய்து கொள்க

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...