செவ்வாய், 31 மார்ச், 2020

இயக்குநர்களிடமிருந்து நிறுமம் கடன்பெறுவது


பதிவுபெற்ற பெரும்பாலான இந்திய நிறுமங்கள் தம்முடைய இயக்குனர்களுக்குக் கொடுக்கப்பட்ட கடன்களைப் பற்றி மட்டுமே இதுவரையில் ஏராளமான வகையில் சச்சரவுகளும் வாத விவாதங்களும் கலந்துரையாடல்களும் இருந்துவந்துள்ளன, ஆனால் தாம்பதவி வகிக்கும் நிறுமங்களுக்கே கடன்களை வழங்கும் இயக்குநர்களைப் பற்றிய செய்திகள் இப்போதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்துகொண்டுள்ளன , ஆயினும் இவ்வாறு நிறுமங்களுக்கு இயக்குநர்கள் கடன்வழங்குவதுகுறித்த சட்டப்பூர்வ இணக்கங்கள் மிகுதியாக உள்ளன. அதனால் அதன்வாயிலாக எழும் குழப்பத்தைத் தவிர்ப்பதற்கு, சமீபத்திய திருத்தப்பட்ட நிறுமங்களின் சட்டம்2013 இன் படி இவ்வாறான சிக்கலை தீர்வு செய்வது பற்றி தற்போது விவாதிப்போம். இயக்குனர்களிடமிருந்து நிறுமங்களானவை இட்டுவைப்புத்தொகை , கடன் தொகை ஆகிய இருவழிகளில் ஏதேனும் ஒருவகையில் தமக்குதேவையான தொகையை பெறலாம் அதனால் இவைகளின் வாயிலாக பெறப்பட்ட தொகையை அதாவது இயக்குநர்களிடமிருந்து இவ்வாறு பெறப்பட்ட தொகையானது கடன்தொகையா அல்லது இட்டுவைப்பு தொகையா என எவ்வாறு வகைப்படுத்துவது என்பதுதான் தற்போதைய சிக்கலாகும் .இங்கு நாம் இயக்குநர்களிட- மிருந்து பெறப்படும் கடன்பற்றிமட்டும் இப்போது காண்போம் இயக்குநர்களிடமிருந்து பெறப்படும் இட்டுவைப்புத்தொகைபற்றி பின்னர் வேறொரு சமயத்தில் காண்போம் பொதுவாக அவ்வாறு இயக்குந்களிடமிருந்து பெறப்பட்ட தொகையானது ஒரு இட்டுவைப்பு தொகையென எனக் கருதப்பட்டால், அது நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 73 (2) அல்லது பிரிவு 76 இன் விதிமுறைகளுடன் இணங்குவதோடு, படிக்கப்பட்ட நிறுமங்களின் (வைப்புத்தொகைகளை ஏற்றுக்கொள்ளும்) விதிமுறைகள் 2014 உடன் ஒத்ததாக இருக்கவேண்டும் . அ்துதவிர இயக்குனர்களிடமிருந்து பெறப்படும் கடன்களை பொதுவாக இயக்குனரின் சொந்த நிதியிலிருந்து பெறப்பட்ட தொகை என்றும் , இயக்குநர்கள் தாம் பெற்ற கடன் நிதியிலிலிருந்து பெறப்பட்ட தொகைஎன்றும் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தலாம் இயக்குனர்கள் தம்முடையசொந்த நிதிகளிலிருந்து பெறப்பட்ட தொகை, நிறுமங்களுக்கு அவ்வாறு வழங்குபவர் ஒரு பங்குதாரரா இல்லையா என்பதன்அடிப்படையில் அவை கடன்களாகக் கருதப்படுகிறது ஆயினும் இந்நிலையில் நிறுமங்களின் சட்டம் பிரிவு 73 (2) அல்லது பிரிவு 76 உடன் இணக்கமாக இருக்கத் தேவையில்லை. எனினும், இந்த நிவாரணத்தைப் பெற இயக்குனர்கள் பணம் கொடுக்கும் நேரத்தில் அந்நிறுமமானது, மற்றவர்களிடமிருந்து கடன்கள் அல்லது வைப்புத்தொகைகளை பெறுதல் அல்லது ஏற்றுக் கொள்வதற்காக அறிவிப்புஏதனும் செய்து அதன் மூலம் சேகரிக்கப்பட்ட நிதிகளில் அடிப்படையில் இந்த தொகை பெறப்படவில்லை என உறுதிபடுத்தி கொள்ளவேண்டும் .ஆயினும், நிறுமமானது நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 180 (கீழே விவாதிக்கப்படுகின்றது)இன்கீழ் பொருந்துமாறு கடன் பெறுவது பற்றிய தகவல்கள் இயக்குனரின் அறிக்கை மற்றும் நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கைகள் ஆகியவற்றில் தக்க குறிப்புகளுடன் வெளிப்படுத்தப்பட வேண்டும்.. இயக்குனர் கடன் வாங்கிய தொகைகளில் பெறப்பட்ட தொகை இதன்கீழ்இயக்குனர் ஒரு பங்குதாரர் அல்லாத சூழ்நிலை, இயக்குநர் ஒரு பங்குதாரராக உள்ள சூழ்நிலை ஆகிய இருவகைகளில் விவாதிப்போம் இயக்குனர் ஒரு பங்குதாரர் அல்லாத சூழ்நிலையில், அவர்களிடமிருந்து பெறப்பட்ட தொகையானது நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 76 ன் விதிமுறைகளுடனும், படிக்கப்பட்ட நிறுமங்களின் (வைப்புகளை ஏற்றுக்கொள்ளும்) விதிமுறைகள் 2014 உடனும்கவருகின்றன. அத்தகைய ஒருநிலையில் நிகர சொத்துமதிப்பு ரூ. 100 கோடி அல்லது அந்நிறுமத்தின் விற்பனைவருமானம் ரூ. 500 கோடி ஆக உள்ள ஒரு பொது நிறுமத்தால் மட்டுமே அவ்வாறான இட்டுவைப்புத்தொகையை பெறமுடியும் (அதாவது, தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமங்கள் மற்றும் தகுதியற்ற பொது நிறுமங்கள் ஆகியவற்றின் இயக்குநர்கள் தாம் கடன்வாங்கிய நிதியிலிருந்து அவர்கள் பதவிவகிக்கும் நிறுமங்களானவை இவ்வாறான கடன்களை / இட்டுவைப்புகளைப் பெற முடியாது). நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 76 இன்படி ஒவ்வொரு வருடமும் கடன் வழங்குவதற்கான தகுதி மதிப்பீட்டை(credit rating ) பெறவும், வைப்புத் தொகையாளர்களுக்கு ஆதரவாக வைப்புத் தொகைக்கு குறையாமல் அந்நிறுமங்களின் சொத்துக்களைப் பொறுப்பேற்பதற்காக பதிவாளரிடம் அந்த சொத்துகளின்மீது பொறுப்பொன்றினை உருவாக்கி (create a charge)பதிவு செய்திட வேண்டும். இது நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 180 மேலும் ஈர்ப்பதால் இது குறித்து தனியாக கீழே விவாதிக்கப்படுகின்றது. இயக்குநர் ஒரு பங்குதாரர் ஆவார் எனும்சூழ்நிலையில் , இயக்குநர்களிடமிருந்து பெறப்பட்ட தொகைகள் இட்டு வைப்புகளாக கருதப்படுகின்றன, ஆயினும், அவை நிறுமங்கள் தம்முடைய உறுப்பினர்களிட- மிருந்து பெறப்பட்ட இட்டு வைப்பு தொகைகளாக கருதப்படுகின்றன, மேலும் இந்நடவடிக்கைகளானவை நிறுமங்களின் (இட்டுவைப்புகளை ஏற்றுக்கொள்ளுதல்) விதிமுறைகளுடன் படிக்கப்படும் நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 73 (2) வின் விதிகளை ஈர்க்கின்றன. மேலும் இந்த நடவடிக்கையும் நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 180 மேலும் ஈர்ப்பதால் இதுகுறித்தும் தனியாக கீழே விவாதிக்கப்படுகின்றது. நிறுமங்களின் சட்டம் 2013பிரிவு 180, இதன்படி ஒரு நிறுமத்திற்கு தம்முடைய இயக்குநர்களிட- மிருந்து இவ்வாறு கடன்பெறுவதற்காக ஒப்புதல் அளிப்பதற்குமுன் அதற்காக அந்நிறுமத்தின் பங்குதாரர்களின் பொதுப்பேரவை கூட்டத்தில் ஒரு சிறப்புத் தீர்மானத்தை நிறைவேற்றிஇருக்கவேண்டும் (அவ்வாறான சிறப்பு தீர்மானமானது படிவம் MGT-14 இன் கீழ் நிறுமங்களின் பதிவாளருக்கு சமர்ப்பித்திருக்க வேண்டும்.), வழக்கமான வணிக நடவடிக்கைக்காக ஏற்கனவே வங்கியாளர்களிடமிருந்து பெறப்பட்ட தற்காலிக கடன்கள் மட்டுமல்லாமல், நிறுமத்தின் பெறப்பட்ட பங்கு மூலதனம்(paid-up share capital), சுதந்திர ஒதுக்கீடுகள் (free reserves) மற்றும் பத்திரங்களின் பிரீமியம்( securities premium) ஆகியவற்றின் மொத்த மதிப்பைவிட கூடுதலாக கடன்பெறுவதற்காக இந்த சிறப்புதீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கவேண்டும் இருப்பினும் 05.06.2015 தேதியிட்ட நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 180 இற்கான அறிவிப்பு, தனியார் நிறுமங்களுக்கு பொருந்தாது. எனவே, தனியார் நிறுவமங்கள், பிரிவு 180 ன் கீழ் ஒரு சிறப்புத் தீர்மானத்தை மட்டும் நிறைவேற்றுவதோடு மட்டுமல்லாமல், தகுதியுள்ள இடங்களில், வைப்புத் தொகையை வாங்கவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ முடியும். இருப்பினும், அனைத்து பொது நிறுமங்களும் நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 180 உடன் இணங்க சிறப்புத்தீர்மானத்தின்வாயிலாக மட்டுமே இயக்குநர்களிடமிருந்த கடன்தொகையைபெறமுடியும்.

வியாழன், 26 மார்ச், 2020

கூட்டாண்மை நிறுவனத்தை தனியார் நிறுமமாக மாற்றியமைப்பதற்கான வழிமுறைகள்


ஒரு கூட்டாண்மை நிறுவனத்தை தனியார் நிறுமமாக மாற்றியமைப்பதால் பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமங்களின் பல்வேறு வசதி வாய்ப்புகள் கிடைப்பதற்கு ஏதுவாகின்றன அவ்வாறு மாற்றி யமைப்பதற்கான வழிமுறைகள் பின்வருமாறு இது தொடர்பாக நிறுமங்கள் சட்டம் 2013 பிரிவு 366 முதல் 374 வரையிலும் மேலும் நிறுவனங்கள் (பதிவுசெய்யப்பட்ட அங்கீகாரம் பெற்ற) விதிகள், 2014. ஆகியவை நமக்கு வழிகாட்டுகின்றன இதற்காக முதலில் கூட்டாண்மை நிறுவனத்தின் அனைத்து சொத்துக்களும் பொறுப்புகளும் சேர்ந்த வியாபாரத்தை தனியார் நிறுமமாக மாற்றிமைப்பதற்கான செயல்படுத்திடும் ஒப்பந்தத்தை தயாரித்திடவேணடும். குறிப்பு : இவ்வாறு மாற்றியமைப்பதற்கான விதிகள் கூட்டாண்மை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா வென உறுதிபடுத்திகொள்க. இவ்வாறு மாற்றிமைப்பதற்கான அடிப்படைதேவைகள்: அவ்வாறு விரும்பும் கூட்டாண்மை நிறுவனமானது நிறுமங்களின் பதிவாளரிடம்(Registrar of Ministry of Corporate Affairs ) பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும், மேலும் அந்நிறுவனத்தில் குறைந்தபட்சம் 2 கூட்டாளிகளாகவாது தற்போது இருக்கவேண்டும் , அதனோடு தேவைப்பட்டால் இவ்வாறு மாற்றியமைப்பதற்காக கூட்டாண்மை ஒப்பந்தத்தில்போதுமான திருத்தம்செய்து மாற்றியமைப்பதற்கான விதிமுறைகளை சேர்த்து கொள்ளவேண்டும், அதுமட்டுமல்லாது கூட்டாண்மை நிறுவனத்தின் அனைத்து கூட்டாளிகளும் புதிய தனியார் நிறமத்தில் பங்குதாரர்களாக மாறும் நாளில் இவர்கள் ஏற்கனவே வைத்துள்ள நிறுவனத்தின் புத்தகங்களில் இருக்கும்மூலதன கணக்குகளின் அதே விகிதத்தில் பங்குகளாக மாற்றப்படும். அதைவிடமுக்கியமாக இவ்வாறு மாற்றம் செய்வதற்காக கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகளின் பொதுக்குழு கூட்டத்தை அழைத்து அக்கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்களின் அனுமதி பெற்றிருக்கவேண்டும். இவ்வாறு மாற்றிமயைப்பதற்கான படிமுறைகள் பின்வருமாறு படிமுறை 1.இவ்வாறு மாற்றம் செய்வதற்காக கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகளின் பொதுக்குழு கூட்டத்தை அழைத்து அக்கூட்டத்தில் பின்வரும் செயல்களுக்கான தீர்மானத்தை நிறைவேற்றிடவேண்டும் செயல்.1.இவ்வாறு கூட்டாண்மை நிறுவனத்தை தனியார் நிறுமமாகமாற்றம்செய்து பதிவு செய்வதற்கு தேவையான அனைத்து ஒப்பந்தங்கள், ஆவணங்கள் ஆகியவற்றை கையாளுவதற்கான அதிகாரத்தை ஒன்று அல்லது ஒன்றிற்குமேற்பட்ட கூட்டாளிகளுக்கு வழங்கப்படுதல் செயல்.2. இந்த கூட்டாண்மைநிறுவனமாது பதிவில்லாததாக இருந்தால் முதலில் நிறுமங்களின் பதிவாளரிடம் கூட்டாண்மை நிறுவனமாக பதிவுசெய்தல் செயல்.3.கூட்டாண்மை நிறுவனத்திலுள்ளஅனைத்துகூட்டாளிகளின் மொத்த மூலதனத்தை சிறுசிறுபங்குகளாக பிரித்தல் செயல்.4 இவ்வாறு தனியார் நிறுமமாக உருமாற்றுவதற்கான தனியாக தீர்மானம்ஒன்று நிறைவேற்றப்பட்டு அதன்படி ஒவ்வொரு கூட்டாளியும் இதனை ஏற்றுகொள்வதான ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுதல் செயல்.5இதனை கூட்டான்மை நிறுவனத்தை தனியார் நிறுமமாக மாற்றியமைப்பதை ஏற்றுகொள்வதற்கான ஒப்பந்த பத்திரம் தயார்செய்தல் படிஂமுறை 2. இவ்வாறு தனியார் நிறுமமாக மாற்றியமைப்பதை குறித்த அறிவிப்பினை நாளிதழ்களில் விளம்பரமாக கொடுப்பதற்கான விளம்பரப்படிவம் URC 2 ஐ ஒப்புதல் வழங்கவேண்டும் படிமுறை3. இவ்வாறு தனியார் நிறுமமாக மாற்றியமைப்பதற்கு முந்தைய மூன்றுஆண்டுகளில்அந்த கூட்டான்மைநிறுவனத்தின் சொத்துகளின் மதிப்பை மாற்றியமைத்திடவில்லை என உறுதி படுத்தி கொள்ளவேண்டும் படிமுறை4. இவ்வாறு தனியார் நிறுமமாக மாற்றியமைப்பதை பதிவுசெய்வதற்காக அங்கீகாரம் பெற்றவருக்குDSC எனசு ருக்கமாக அழைக்கப்படு இருமகையொப்ப சான்றிதழை (Digital Signature Certificate) பெற்றிடவேண்டும் படிமுறை5. புதிய தனியார் நிறுமத்தின் இயக்குநர்களின் குழுவில் இடம்பெறப்போகும் இயக்குநர்கள் ஒவ்வொருவருக்கும் PAN, AADHAAR , மார்பளவு உருவப்படம் ஆகியவிவரங்களுடன் பதிவுசெய்து அவர்களுக்கான DIN என சுருக்கமாக அழைக்கப்படும் இயக்குநர்களின் சுட்டிஎண்ணை பெறுவதற்காக படிவம் DIR – 3 இல் ஒவ்வொருவருக்கும் பெறப்படவேண்டும் படிமுறை6. புதிய தனியார் நிறுமத்திற்கு RUN என சுருக்கமாக அழைக்கப்படும் ஒருங்குபெயர்ஒதுக்கீட்டின் (Reserve Unique Name) அடிப்படையில் பெயரை பெறுவதற்காக விண்ணப்பிக்கவேண்டும் படிமுறை7. படிவம் URC -2 இல் ஒரு ஆங்கிலமொழி ,ஒரு வட்டார மொழி வெளியிடப்பெறும் இரு நாளிதழ்களில் இந்தகூட்டான்மை நிறுவனத்தை தனியார் நிறுமமாக மாற்றியமைப்பதால் பாதிப்பு எவருக்கேனும் இருந்தால் அதனை 21 நாளில் அறிவிக்கவேண்டும் என்ற விளம்பரப்படுத்திடவேண்டும் படிமுறை8. நிறுமங்கள் சட்டம் 4 இன்படி பதிவுசெய்வதற்கான பெயர் தயாராக இருக்கின்றது எனில் படிவம் URC-1 உடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் தகவல்களையும் நிறுமங்களின் பதிவாளருக்கு சமர்ப்பிக்கவேண்டும் படிமுறை 9.மின் –படிவம் INC – 7 இல் புதிய தனியார் நிறுமத்தின் நியமிக்கப்பட்டுள்ள இயக்குநர்கள் பங்குதாரர்கள் ஆகியோர்பற்றிய விவரங்களை சமர்ப்பிக்கவேண்டும் படிமுறை 10. அதனை தொடர்ந்துபடிமுறை 9.இல்குறிப்பிடப்பட்டுள்ள மின் - படிவம் INC – 7 இன் பின்னினைப்பாகமுக்கியமேலாண்மை பணியாளர்களை பற்றிய விவரங்களுக்கான மின் -படிவம் INC -8 ஐ சமர்ப்பிக்கவேண்டும் படிமுறை 11.அவ்வாறே படிமுறை 9.இல்குறிப்பிடப்பட்டுள்ள மின்– படிவம் INC – 7 இன் மற்றொரு பின்னினைப்பாக பங்குதாரர்களின் உறுதிமொழிக்கான மின் -படிவம் INC -9ஐ சமர்ப்பிக்கவேண்டும் படிமுறை12. தொடர்ந்து மின் -படிவம் DIR -12 இல் புதிய தனியார் நிறுமத்தில் யார்யார் இயக்குநர்களாக நியமிக்கப்படவுள்ளனர் எனபுதிய தனியார் நிறுமத்தின் இயக்குநர்களின் நியமனங்களை பற்றிய விவரங்களை சமர்ப்பிக்கவேண்டும் படிமுறை 13.அதனை தொடர்ந்து இறுதியாக படிவம் INC – 22 இன் படி நிறுமம் உருவாக்கப்பட்ட 30 நாட்களுக்குள் அந்நிறுமத்திற்கான பதிவுஅலுவலகத்தை சரிபார்த்திடுவதற்கான அந்த புதிய தனியார் நிறுமத்தின் பதிவு அலுவலக முகவரியை குறிப்பிட்டு சமர்ப்பிக்கவேண்டும் மேலும் இவ்வாறான படிமுறைகளுடன் படிவம் SPICE-32, e-MOA ,e-AOA ஆகியவற்றையும் சேர்த்து சமர்ப்பிக்கவேண்டும் இவ்வாறு மேலேகூறியவாறான 13.படிமுறைகளை மிகச்சரியாக பின்பற்றினால் அந் தகூட்டான்மை நிறுவனமானது புதிய தனியார் நிறுமமாக மாற்றம்செய்து பதிவு செய்யப்பட்டு அதற்கான பதிவுசான்றிதழ் (Certificate of Incorporation (COI))நிறுமங்களின் பதிவாளரால் வழங்கப்படும்

செவ்வாய், 24 மார்ச், 2020

வியாபார வரவுகள் தள்ளுபடி அமைப்பு (Trade Receivables Discounting System (TreDS ))ஒரு அறிமுகம்


MSMEs எனசுருக்கமாக அழைக்கப்படும் மிகச்சிறிய, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ( Micro, Small and Medium Enterprises) நாட்டின் பொருளாதாரத்தின் துணிச்சலான வளர்ச்சியில் முக்கிய பாத்திரத்தை வகிப்பதுடன் அவை நம்முடைய இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்கின்றன ; ஆயினும் இவை போதுமான நடைமுறைமூலதன நிதியுதவி பெறுவதில் கட்டுப்பாடுகளை எதிர்கொள்வது, குறிப்பாக அவர்களது வர்த்தக வரவுகளை நடைமுறை மூலதன நிதியாக மாற்றியமைக்கும் திறன், உள்கட்டமைப்பு மற்றும் தளவாடங்கள், தொழில்முனைவோர் திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஏராளமானஅளவில் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. இவற்றுள் வர்த்தக வரவுகளின் அடிப்படையில் அந்நிறுவனங்களுக்கு போதுமான நிதியளிப்பதன் மூலம் நடைமுறைமூலதனத்தை சிரமமில்லாமல் பராமரிக்கும்பொருட்டு , இந்திய ரிசர்வ் வங்கியானது மார்ச் 2014இல் மிகச்சிறிய, சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான (MSME)"காரணிகளின் -வர்த்தக வரவுகளின் பரிமாற்ற அமைவு(Factoring-Trade Receivables Exchange )".எனும் அமைப்பை நிறுவுகை செய்து இந்த நடைமுறைமூலதன சிக்கலை தீர்வுசெய்திடலாம் எனும் கருத்தமைவை வெளிட்டது அதனை தொடர்ந்து பெறப்பட்ட கருத்தாக்கங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து பயனாளர்களுடனான தொடர்பு மற்றும் செயல்பாடுகளை நிர்வகிப்பதற்கு வழங்கிய வாதவிவாதங்கள் ஆகியவற்றின் இறுதியில் பெறப்பட்ட பொதுக் கருத்துரைகளின்அடிப்படையில் இந்தியாவில் வர்த்தக பெறுதல் அமைப்புகளை அமைப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் பின்வரும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. இந்த வழிகாட்டுதல்கள் Payment & Settlement Systems Act, 2007 (2007 ஆம் ஆண்டு 51 ஆவது) பிரிவின் 18 வது பிரிவுடன் பகுதி 10 (2) இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்படுகிறது. இந்நிலையில்இந்த TreDS என்றால் என்ன? என்ற கேள்வி நம்மனைவரின் மனதிலும் எழும் நிற்க அரசாங்க நிறுவனங்களும் பொதுத்துறை நிறுவனங்களும் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களும் பொதுமக்களும் மற்றும் பிறசேர்ந்து MSME களிடமிருந்து பொருட்களை அல்லது சேவைகளை பெறுவதால் உருவாக்கப்படும் வர்த்தக பெறுதல்களின் (Trade Receivables) அடிப்படையில் அவ்வாறான MSMEகளுக்கு போதுமான அளவிற்கு நடைமுறைமூலதன நிதியளிக்க உதவுவதற்கான நிறுவன அமைப்புமுறையை நிறுவுதல் மற்றும் செயற்படுத்துவதற்கான திட்டம் வர்த்தக வரவுகள் தள்ளுபடி தீர்வூட்டு முறை (Trade Receivables Discounting System (TReDS)) . என அழைக்கப்படும் இந்த டி.ஆர்.டீஎஸ்க்கள் பொருட்களுக்கானபட்டியல் (invoices), பட்டியல் மாற்று பரிமாற்றங்கள்( bills of exchange) ஆகிய இரண்டிற்கான தள்ளுபடி நடவடிக்கைகளையும் எளிதாக்குகின்றது. மேலும், அடிப்படைக் கூறுகள் ஒன்றுதான் (MSME கள் மற்றும் அரசாங்கத் துறைகளும் பொதுத்துறை நிறுவனங்களும் உட்பட), பெறத்தக்க காரணிகள், அதற்கு மறுதலையான பின்னோக்கி காரணிகள் ஆகிய இரண்டையும் இந்த TREDS ஆல் சமாளிக்க முடியும், இதனால் அதிக பணபரிவர்த்தனைகள் இந்த அமைப்புக்குள் வந்து, MSME நிலையை சிறந்ததாக நிர்ணயிக்கின்றன . இந்த டி.ஆர்.இ.டிஎஸ்.இன் கீழ் செயல்படும் பரிவர்த்தனைகள் MSME களுக்கு "எந்தவிதமானதொந்திரவும் இல்லாமல்"மிகவும் பயனுள்ளதாக உதவிகரமாக இருக்கும். TReDS என்பது வர்த்தவரவுகளின்மீது நிதிவழங்க தயாராக இருக்கும் நிறுவனங்களிடம் ஏலம் விடுவதன் வாயிலாக தேவையானநிதியை திரட்டிட அனுமதிக்கும் ஒரு மின்னணு தளம் ஆகும். பொதுவாக பொருட்களின் விற்பணை பட்டியல்களுக்கான தொகையை தள்ளுபடியுடன் வழங்குதல் அதாவது ஒரு நிதியாளர் (பொதுவாக ஒரு வர்த்தக வங்கி) பொருட்களுக்கான பட்டியலை( வர்த்தக வரவுகளை) தள்ளுடியுடன் வாங்கிடும் நடவடிக்கையாகும் அதாவது பொருட்களின் விற்பணையாளரிட மிருந்து பெறப்படும் பட்டியல்களுக்கான தொகையை அந்து பொருளை வாங்குபவர் வழங்குவதற்குமுன் அல்லது அந்த வழங்குவதற்கான காலக்கெடுவிற்குமுன் பொருட்களின் விற்பணையாளர் அந்த பட்டியலை ஒருநிதியாளரிடம்(பொதுவாக ஒரு வர்த்தகவங்கியிடம்) சமர்ப்பித்து அதன்மீது தள்ளுபடிசெய்து அந்த பொருட்களுக்கான பட்டியல் தொகையை முன்கூட்டியே பெறுகின்ற செயல்முறையாகும் அந்த தள்ளுபடி தொகையே வர்த்தவங்கிகளுக்கான வட்டிதொகையாகும் இந்த செயல்முறையின் ஆர்.பி.ஐ.இன் TReDS வழிமுறைகளின் படி வர்த்தக வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நிதியளிப்பாளர்கள் அனுமதிக்கப்படுவதற்காக, இந்த செயல்முறையில் MSME கள் மட்டுமே விற்பனையாளர்களாக பங்கேற்க முடியும் பெருநிறுவனங்கள்இதில் பங்கேற்று பயன்பெறமுடியாது. இந்த TReDS அமைப்பு எவ்வாறு இயங்குகிறது? ஒரு MSME விற்பனையாளர் இந்த தளத்தில் தான் விற்பணைசெய்த பொருட்களுக்கான பொருட்களின் விலைப்பட்டியலை பதிவேற்ற வேண்டும். அது பின்னர் அந்த பொருட்களை வாங்குவதற்காக அந்த பொருட்களை வாங்குபவருக்கு ஏற்றுகொள்வதற்காக செல்கிறது. அதனை தொடர்ந்து அந்த பொருளை வாங்குபவர் அந்த பொருளின் விற்பணை பட்டியலை ஏற்றுக்கொண்டவுடன், அந்தவிலைப்பட்டியலானது ஒரு காரணி அலகு ஆக மாறுகின்றது. தொடர்ந்து அந்த காரணி அலகு பின்னர் ஏலத்திற்கு செல்கிறது. அவ்வாறான ஏலத்தில் நிதியளிப்பாளர்கள் தங்களுடைய தள்ளுபடி விகிதங்களை அறிவிக்கின்றனர். இறுதியாக எந்த நிதியாளர் குறைந்த அளவு தள்ளுபடி வழங்குகின்றாரோ அதனை பொருளின் விற்பனையார் அல்லது பொருளை வாங்குபவர், ஏற்றகொள்கின்றனர் அதனை தொடர்ந்து நிதியாளர் விற்பணயாளருக்கு அந்த பொருளின்விலைபட்டியின்மீது தொகையை வழங்கி இந்நடவடிக்கையின் முதல்ஒருபகுதி நடவிக்கையை முடிவுக்கு கொண்டுவருகின்றார் இறுதியாக குறிப்பிட்ட காலகெடு முடிவடையும் போது அந்த பொருளை வாங்குபவர் அந்த விலைபட்டியலின் மொத்ததொகையை நிதியாளருக்கு வழங்குகின்றார் தள்ளுபடி தொகையானது நிதியாளர் வட்டியாகவும் விற்பணையாளருக்கு செலவாகவும் முடிவுபெறுகின்றது TReDS நன்மைகள்: MSMEகள் தாம் பொருட்களை உற்பத்தி செய்து விற்பணை செய்துவிட்டோம் ஆனால் அதற்கான விற்பணைத்தொகைமட்டும் உடன் கிடைக்காததால் நடைமுறைமூலதனம் இல்லாமல் அல்லாடவேண்டுமே என தவித்திடாமல் அவ்வாறான வர்த்தக பெறுதல்களை உடனடியாக நடைமுறைமூலதன நிதியாக மாற்றுவதற்கான திறன்இதன் வாயிலாக கிடைக்கின்றது. MSME கள் தங்களுடைய பெறுதல்களை உடனடியாக இந்த தளத்தில் பதிவேற்றம் செய்து அவற்றின் அடிப்படையில் தேவையான நடைமுறைமூலதன நிதியுதவி பெற அனுமதிக்கிறது. காலப்போக்கில் பெருநிறுவனங்கள் தாங்கள் உறுதியளித்தவாறு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விற்பணைக்கான தொகையை செலுத்திடவேண்டும் என்ற ஒழுங்கும் கட்டுபாடும் நடைமுறைபடுத்தப் படுகின்றது விற்பனையாளர்களுக்கான நிதியின் கால அளவு மேம்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தை மூலம் கொள்முதல் செலவில் சேமிப்புக்களை அனுபவிக் கவழியேற்படுகின்றது. நிறுவனங்கள் தங்களுடைய கடன் காலத்தை விரிவாக்குவதன் மூலமும், தங்களுடைய கட்டண சுழற்சியை அதிகரிப்பதன் மூலமும், நிதி செலவினத்தை சேமிக்கும் வழிஏற்படுகின்ரது. மறுபுறத்தில் வருங்காலத்தில் நிதியளிப்பாளர்கள் PSL சொத்துத் தொகுப்பு ஒன்றை உருவாக்கிடும் வாய்ப்புகூட உள்ளது. சிறு வணிகங்களை (MSMEs) தங்களுடைய நடைமுறை மூலதனத்திற்கு இதனை அணுகி தங்களுடைய வர்த்தக பெறுதல்களை ஏலமிடுவதன் மூலம் தேவையான நடைமுறைமூலதனத்தை திரட்டிடுவதற்கான ஒரு சிறந்த மின்னு தளமாக இருக்கும் - இந்த வர்த்தக பெறுநர்கள் தள்ளுபடித் திட்டத்தை (TReDS) தொடங்கி நிருவகிப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி யானது Payment And Settlement Systems Act இன்படி Receivables Exchange of India (RXIL) , A Treds Mynd Solution ,Big Pushஆகிய மூன்று நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியுள்ளது. இந்த மூன்று நிறுவனங்களும் விரைவில் GST இன் கீழ்பதிவுசெய்யபணிக்கப்பட்டுள்ளன அதன் வாயிலாக போலியான விற்பணை பட்டியல்களுக்கு பணம் வழங்குதல் என்ற பிரச்சினை தீர்வுசெய்யப்பட்டு ஏறத்தாழ ரூ.20,000 கோடி அளவிற்கு பணபரிவர்த்தனை இந்த தளத்தின் வாயிலாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது

சனி, 21 மார்ச், 2020

புதிய தொழிலக கட்டமைப்பு


ஒரு புதிய தொழிலை துவங்கிடும்போது அந்த தொழிலிற்கான நிறுவன கட்டமைப்பை வடிவமைப்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இந்த நிறுவனத்தின் முதலீடு , உற்பத்தி அளவு, மேற்கொள்ளபோகும் தொழில் , குறிக்கோள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த கட்டமைப்பானது தீர்மானிக்கப்பட வேண்டும். தகவல்தொடர்பினையும் இதற்காக கூடுதலாக கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறான நிறுவனகட்டமைப்பின் பல மட்டங்களில் உள்ள மேலாளர்கள் அதிக அளவில் தங்களுடைய மேலதிகாரஅமைப்பின் ஒப்புதலுக்காக காத்தி ருக்கவேண்டும். அதனால் மிகச்சரியான நேரத்தில் மிகச்சரியான முடிவை எடுத்து செயல்படுத்த முடியாமல் நிறுவனம் தள்ளாடும் நிலைக்குதள்ளப்படுகின்றது அதற்கு பதிலாக நன்கு வடிவமைக்கப்பட்ட நிறுவன கட்டமைப்புகளுடன் இருந்தால் சரியான தகவல் தொடர்புடன் விரைவான, சரியான முடிவுகளை செயல்படுத்தி நிறுவனம் நன்கு வெற்றிகரமாக செயலபடுமாறு அமைந்திருக்கும். நிறுவனத்தின் கட்டமைப்புகள் பொதுவான வடிவங்கள்பின்வருமாறு. செயல்பாட்டு கட்டமைப்பு தற்போது நடைமுறையில் பெரும்பாலான வியாபார நிறுவனங்களில் இந்த கட்டமைப்பே பின்பற்றபடுகின்றது. இந்த கட்டமைப்பின் மேல்மட்டத்தில் நிர்வாக இயக்குனரும் அவருக்கும் கீழ் இடைநிலையில் - மனித வளநிருவாகத்துறை, சந்தைப்படுத்தும்துறை, கணக்கியல்துறை பொறியியல் துறை உற்பத்தி துறை போன்ற வாறு குறிப்பிட்ட செயலிற்கேற்ப நிறுவனங்களின் கட்டமைப்பு பிரிக்கப்பட்டு அந்ததுறையும் ஒவ்வொரு தலைதுறைத்தலைவர்களால் நிருவகிக்குமாறும் இவையனத்திற்கும் சேர்ந்து நிர்வாக இயக்குநரும் இருக்குமாறு கட்டமைக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட துறைத்தலைவர்கள் இல்லையெனில் அந்த குறிப்பிட்ட துறைசரியாக இயங்காது என்பதுதான் இந்த கட்டமைப்பின் மிகப்பெரியகுறைபாடாகும் தயாரிப்பு கட்டமைப்பு இதன் மேல்மட்டத்தில் நிருவாக இயக்குநரும் அவரின்கீழ் பல்வேறு தயாரிப்புகள் தனித்தனியாக பிரிக்கப்படுகின்றன ஒவ்வொரு உற்பத்திக்கும் ஒவ்வொரு தலைவர் இருந்துகொண்டு அதாவது , உணவு தயாரிப்பு நிறுவனம், குளிர்பானங்கள், சிற்றுண்டி, பால் பொருட்கள் என்றவாரு ஒரேநிறுவனமானது உற்பத்தி கேற்ப தனித்தனியாக பிரிக்கப்பட்டு நிறுவனம் செயல்படும் இவை ஒன்றுக்கு மற்றொன்று நேரடியாக சார்ந்து இருக்காது என்பதால் குறிப்பிட்ட உற்பத்தி தலைவர் இல்லையெனில் மிகுதி உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று நிறுவனத்தின் இயக்கம் தடைபெறாமல் இருக்கும் வாடிக்கையாளர் கட்டமைப்பு உடல்நல பராமரிப்பு போன்ற சேவைகளை ஒரு நிறுவனம் வழங்குகிறது என்றால்,இதில் உள்ள பல்வேறு பிரிவுகளில் ஒவ்வொரு குறிப்பிட்ட பிரிவிலும் ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவைசெய்வதற்காக தனித்தனி குழுவாக பிரிக்கப்படுகின்றன - உதாரணமாக, உள்நோயாளிகள், வெளிநோயாளிகள், இலவச மருத்துவ நோயாளிகள் எனபிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியாக ஒரு மேலாளர் எனறவாறு இவர்களனைவரும் நேரடியாக அந்த மருத்துவமனையின் தலைமைநிருவாகிக்கு கடமைப்பட்டவராகும் கட்டமைக்கப்பட்டிருக்கும் இதில் குறிப்பிட்ட பிரிவு தலைவர் இல்லையென்றாலும்மற்றபகுதி தொடர்ந்து இயங்கும் வட்டாரகட்டமைப்பு மிகப்பெரியநிறுவனம் நாடுமுழுவதும் விரிந்து பரந்து உள்ளது எனில் அந்தந்த பகுதியும் ஒவவொரு மேலாளரின் பொறுப்பின்கீழ் செயல்படுமாறும இவையனைத்திற்கும் பொதுவானநிருவாகி தலைமையிடத்திலும் இருந்தவாறு நிறுவனத்தினை கட்டுபடுத்துவார் இவ்வாறான பல்வேறு கட்டமைப்புகளில் நம்முடைய நிறுவனத்திற்கு பொருத்தமானகட்டமைவுஎதுவெ ன முடிவுசெய்து கட்டமைவுசெய்து கொள்க

வியாழன், 19 மார்ச், 2020

நிறுமங்களில் பங்காதாய தொகை வழங்குவதை அறிவித்தல்


நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 2(35) இல்எந்தவொரு நிறுமமும் தன்னுடைய பங்குதாரர்களுக்கு அந்நிறுமத்தால் ஈட்டப்பட்ட இலாபத்தை பகிர்ந்து அளிப்பதையே பங்காதாயம் என வரையறுக்கின்றது அதே சட்டத்தின் பிரிவு123 இன்படி எந்தவொரு நிறுவனமும் அந்நிறுவனத்தின் பங்குதாரரர்களின் பொதுப்பேரவைகூட்டத்தில் அந்நிறுவனத்தின் ஆண்டிறுதி கணக்குகளை ஏற்றபின்னர் இயக்குநர்களின் குழுக்கூட்டத்தில் ஏற்றுக்கொண்ட அளவிற்குமிகாமல அவ்வாண்டிற்கான பங்காதாயத்தொகை வழங்குவதற்கான அறிவிப்பை சாதாரண தீர்மானத்தின் வாயிலாக ஆமோதிக்கலாம். குறிப்பாக அந்நிறுமத்தில் நடப்பு நிதியாண்டில் இலாபம் ஈட்டவில்லையென்றாலும் முந்தைய நிதியாண்டுகளின் பகிர்ந்தளிக்கப்படாத இலாபத்தை கொண்டும் அறிவிக்கலாம் இவ்வாறு அறிவிப்பு செய்யப்படும் பங்காதாயமானது முந்தைய மூன்றாண்டுகளின் சராசரியைவிட அதிகமாக கூடாது மேலும் நிறுவனம் ஈட்டிய இலாபத்தினை Reserve Fund ,Free Reserve ஆகியவற்றிற்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்திடவேண்டும் முந்தைய ஆண்டுகளின் கொண்டு-வரப்பட்ட நட்டம் ஏதேனும் இருப்பின் அவையனைத்தும் சரிசெய்து கொண்டிருக்க-வேண்டும் அதுமட்டுமல்லாது தேய்மான கணக்கினையும் நேர்செய்துகொண்டருக்க-வேண்டும் இந்த நா ன்கு நிபந்தனைகளையும் பூரத்தி செய்தபின்பே அந்நிறுமம் குறிப்பிட்ட நிதிஆண்டில் இலாபங்கினை இயக்குநர்களின் குழுக்கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்ட சதவிகிதத்திற்கு மிகாமல் பொதுப்பேரவை கூட்டத்தில் சாதாரண தீர்மானமாத்தின்வாயிலாக ஏற்கலாம் என நிறுமங்களின் பங்காதாய அறிவிப்பு விதிகள்2014 கூறுகின்றன மேலும் இவ்வாறான பங்காதாயஅறிவிப்பிற்கான தொகையானது பங்குமூலதனமும் Free Reserve உம் சேர்ந்த தொகைக்கு பத்து சதிவிகித்திற்கு மேல் இருக்ககூடாது என மற்றொரு கட்டுப்பாடினை இதே பங்காதாய அறிவிப்பு விதிகள்2014 கட்டுபடுத்துகின்றன இவ்வாறாகஅறிவிப்பு செய்யப்படும் பங்காதாயத்தொகையானது பங்குதாரர்களுக்கு ரொக்கமாக ,காசேலையாக ,டிவின்டென்ட்வாரன்ட்டாக ,மின்னனு பணபரிவர்த்தனையின் வாயிலாக அறிவிப்பு செய்த முப்பது நாட்களுக்குள் வழங்கவேண்டும் அவ்வாறு முப்பது நாட்களுக்குள் பங்காதாயத்தொகை கோரப்படாமல் இருந்தால் ஏழுநாட்களுக்குள் தனியாக இதற்கென வங்கியில் கணக்கு ஒன்றினை துவக்கி அதில் இந்த கோரப்படாத தொகைகை இட்டுவைத்திடவேண்டும் தவறினால் அவ்வாறாக வழங்கப்படாத பங்காதாய தொகைக்கு அந்நிறுவனமானது 12 சதவிகிதம் வட்டி செலுத்தவேண்டியிருக்கும் அந்நிறுவனத்தின் பங்குகளானது பங்குசந்தையில் பட்டியிலிடபட்டிருந்தால் பொதுப்பேரவை கூட்டம் நடைபெறுவதற்கு முன் பங்குதாரர்களின் பதிவேட்டை ஏழுநாட்களுக்கு பங்கு பரிவர்த்தனையை நிறுத்தம்செய்து பராமரத்திடவேண்டும் பங்குசந்தையில் பட்டியலிடபடாத நிறுவனங்கள் பொதுப்பேரவை கூட்டுவதற்கான அறிவிப்பை 21 நாட்களுக்குமுன் அனைத்து பங்குதாரர்களுக்கும் அனுப்பவேண்டும் மேலும் அந்த 21 நாட்களுக்கு பங்குதாரர்களின் பதிவேட்டை பங்கு பரிவர்த்தனையை நிறுத்தம்செய்து பராமரத்திடவேண்டும் தொடர்ந்து ஏழாண்டுகள் குறிப்பிட்ட பங்குதாரர் அறிவிக்கப்பட்ட பங்காதாயத்தொகையை கோரிப்பெறாமல் இருந்துவந்தால் ஏழாவது ஆண்டு முடிந்த 30 நாட்களுக்குள் அவ்வாறு கோரப்படாத பங்காதாய தொகையை முதலீட்டாளர்களின் கல்வி பாதுகாப்பு நிதிக்கு மாற்றிடவேண்டும்

செவ்வாய், 17 மார்ச், 2020

வர்த்தக முத்திரையை(Trade MarK) எவ்வாறு ஒரு நிறுவனத்திற்காக பதிவுசெய்வது


புதியதாக துவங்கிடும் நிறுவனங்கள் தங்களுக்கெனபுதிய பிராண்டுகள், லோகோக்கள் அல்லது வர்த்தக முத்திரைகளை உருவாக்க அதிக அளவில் பணம் செலவழிக்கின்றன. ஆனால் இதனை பதிவுசெய்திடமட்டும் மறந்துவிடுகின்றன இதனால் நிறுவனங்களுக்-கிடையே தகராறும், பிணக்கும் ,சிக்கலும் ஏற்படுகின்றன இதனை தவிர்த்து புதியதாக தொழில் துவங்கும் எந்தவொரு நிறுவனமும் தங்களுடைய நிறுவனத்திற்குஎன தனியாக வர்த்தக முத்திரையை இந்திய அரசின் Patent and Trademark பதிவு அலுவலகத்தில் பதிவுசெய்து கொள்ளவேண்டும் இவ்வாறு அந்நிறுவனத்திற்காக பதிவுசெய்து கொள்ளப்படும் வர்த்தக முத்திரையானது வேறுநிறுவனங்கள் இதே வர்த்தகபெயரை பதிவுசெய்வதிலிருந்து தவிர்ப்பதற்கும் நாடுமுழுவதும் நம்முடைய நிறுவனத்தின் உற்பத்தி பொருளை அல்லது சேவையை சந்தைபடுத்தவும் அத்தியாவசியமாக தேவையாகும் இந்நிலையில் ஒரு வர்த்தக முத்திரை என்றால் என்ன? என்ற சந்தேகம் அனைவருக்கும் எழும்நிற்க ஒருநிறுவனத்திற்கான சொற்கள், பெயர்கள், சின்னங்கள், ஒலிகள் அல்லது நிறங்கள் ஆகியவற்றாலான வர்த்தக முத்திரை யெனும் பிராண்ட் பெயரானது தங்களுடைய உற்பத்தி பொருளை அல்லது சேவையை பொதுமக்களுக்கு பொதுவான குறியீட்டின் அடிப்படையில் விற்பனை செய்வதற்கு அல்லது சேவையை வழங்குவதற்கு பயன்படுத்தப் படுவதையே வர்த்தகமுத்திரை என அழைக்கப் படுகின்றது. இந்தியாவில்முதன்முதலில் வர்த்தகமுத்திரைசட்டம்1940 இல் இயற்றப்பட்டது ஆயினும் அதனை யாரும்சரியாக பயன்படுத்தி கொள்ளாததாலும் கடுமையான வரன்முறைகளை கொண்டிருந்ததாலும் வர்த்தகமுத்திரை மற்றும் வியாபாரசட்டம்1958 என்ற புதியபெயரில் நடைமுறைபடுத்தப்பட்டது அதன்பின்னர் 1994 இல் TRIPS ஒப்பந்தப்படி அறிவுசார் சொத்துரிமைகளில் அடிப்படையானசெந்தரங்களை பராமரித்திடவேண்டியநிலையேற் பட்டது அதனை தொடர்ந்து ஏராளமான அளவில் வர்த்தகமுத்திரை தொடர்பான திருத்தங்கள் 1958 ஆம் ஆண்டு சட்டத்தில் கொண்டுவரப்பட்டன அதற்குபதிலாக புதிய வர்த்தகமுத்திரைசட்டம்1999 என்றும் வர்த்தகமுத்திரை விதிகள்2002 என்றும் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தையும் விதிமுறைகளையும் இயற்றப்பட்டு நடைமுறைக்கு கொண்டவரப்பட்டது இதன்படி ஒரு வர்த்தக சின்னத்தை பதிவு செய்வதால் ஏற்படும் நன்மைகள்பின்வருமாறு நம்முடைய வாடிக்கையாளர்கள் நம்முடைய பொருளைஅல்லது சேவையே எளிதாக அடையாளம் காண இது உதவுகின்றது நம்முடைய போட்டியாளர்களிடமிருந்து நம்முடைய சேவை அல்லது உற்பத்தி பொருளை நம்முடைய வர்த்தக முத்திரைகள் வேறுபடுத்துகின்றன மேலும் நம்முடைய சேவை அல்லது உற்பத்தி பொருளின் நிலையான தரத்தை இது குறிக்கின்றது அதனால் நம்முடைய வர்த்தக சின்னத்தின்மீது நல்லெண்ணத்தை பொதுமக்களிடம் அதிகரி்க்கசெய்கின்றது அதுமட்டுமல்லாது சந்தையில் கிடைக்கும் பல்வேறு பொருளின் அல்லது சேவையின்மீது ஏற்படும் குழப்பத்தை தடுக்கின்றது அதைவிட நம்முடைய வியாபாரத்தின் வளர்ச்சியை இந்த பிராண்ட்பெயரானது போட்டியாளர் இல்லாத ஏகபோகத்தை வழங்குகின்றது வர்த்தக முத்திரைகளின் வகைகள் வர்த்தக முத்திரை சட்டம், 1999 இன்கீழ் பதிவு செய்யக்கூடிய பல்வேறு வகையான வர்த்தக முத்திரைகள்பின்வருமாறு: - • பொருட்களுக்கான வர்த்தக முத்திரைகள்: இவை நிறுவனத்தினால் உற்பத்திசெய்யப்படும் பொருட்களை அடையாளம் காண உதவுகின்றன • சேவைக்கான வர்த்தக முத்திரைகள்: இவை நிறுவனங்களின் சேவைகளை அடையாளம் காணப் பயன்படுகின்றன. உதாரணமாக, கைபேசி வலைைபின்னல் மற்றும் ஒலிபரப்பு சேவைக்கான வர்த்தக முத்திரை. ஒரு நிறுவனம் வழங்கும் சேவையை விளம்பரப்படுத்த உதவுகின்றது. • கூட்டு வர்த்தக முத்திரைகள்: இந்த முத்திரைகள் குழுக்கள் அல்லது அமைப்புகளின் பெயரில் பதிவு செய்யப்படுகின்றன. வணிக நடவடிக்கைகளின்போது குழு உறுப்பினர்களை குழுவுடன் இணைக்க உதவுகின்றன. • சான்றிதழ் வர்த்தக முத்திரைகள்: பொருட்கள்அல்லது சேவைகளின் பயன்பாட்டின்போது அந்த பொருள் அல்லது சேவையின் தரம் உண்மையில் பயன்படுத்தப்பட்ட அளவு போன்ற பிற சிறப்பு காரணிகளைத் தீர்மாணிப்பதற்காக இவை உதவுகின்றன வர்த்தக முத்திரைகளைப் பதிவு செய்வது எவ்வாறு இந்தியாவில் வர்த்தக முத்திரையை பதிவு செய்வது என்பது யார்முதலில் பதிவு-செய்வதற்காக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கின்றார்களோ அவர்களுக்கே முதன்மையுரிமையாகும் என்ற அடிப்படை பின்பற்றபடுவதால். எந்தவொரு நிறுவனமும் மிகவிரைவாக தங்களுடைய வர்த்தக முத்திரையை பதிவுசெய்துகொள்வது நல்லது .மூன்றாம் தரப்பினர் யாரும் எதிர்க்காவிட்டால் இவ்வாறான வர்த்தக முத்திரைபதிவு செய்திடும் நடைமுறை இந்தியாவில் ஏறத்தாழஇரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் எடுத்து கொள்ளும் சென்னை புதுதில்லி மும்பை கொல்கத்தா ,அகமதாபாத் ஆகிய நகரங்களில்உள்ள Controller General of Patents, Trade Marks, Industrial Designs and Geographical Indications அலுவலகஙகலில் வர்த்தக முத்திரை பதிவுவிவரகாரங்கள் கையாளபடுகின்றன வர்த்தக முத்திரையை பதிவுசெய்வதற்காக பின்வரும் வழிமுறைகளை பின்பற்றிடுக முதலில்சிறந்தொடரு வர்த்தக முத்திரையை உருவாக்கிடுக இரண்டாவதாக வர்த்தக முத்திரை முகவர் ஒருவரை தெரிவுசெய்து கொள்க அம்முகவர் மூலமாகவே நம்முடைய வர்த்தக முத்திரை பதிவுதொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் கையாளபடவேண்டும் மூன்றாவதாக நம்முடைய வர்த்தக முத்திரையின் தகுதி, வேறுயாரும் அதனை பயன்படுத்தவில்லை என்ற உறுதிபாடு போன்றகாரணிகளின் அடிப்படையில் நம்முடைய வர்த்தக முத்திரையை தெரிவுசெய்து முடிவுசெய்து கொள்க நான்காவதாக வர்த்தகமுத்திரைக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்திசெய்து அதாவது நம்மடைய பொருள் அல்லது சேவையின் பெயர் அதற்கான வர்த்தக முத்திரையின் பெயர் உரிமையாளரின் பெயர் முகவரி போன்றவிவரங்களுடன் போதுமான கட்டணத்துடன் வர்த்தகமுத்திரை பதிவுஅலுவலகத்தில் நம்சார்பாக நம்முடைய முகவர் சமர்ப்பிப்பார் ஐந்தாவதாக இதனை தொடர்ந்து நம்முடைய வர்த்தகமுத்திரை பதிவுவிண்ணப்பம் முழுமையாக பூரத்தி செய்யப்பட்டுள்ளதாவென சரிபார்த்து அதற்கான ஏற்புகை எண் வழங்கப்படும் ஆறாவதாக அதனை தொடர்ந்து வர்த்தக முத்திரைசட்டம்1999 இன்படி தடைசெய்வது தொடர்பான விவரங்கள் அடிப்படையில் முழுவதுமாக மறுக்கப்படுதல் அல்லது அனுமதிக்கலாம்என வர்த்தகமுத்திரை சங்கமானது தீர்மாணிக்கின்றது அதன்பிறகு இந்த வர்த்தக முத்திரை தொடர்பான ஆய்வுஅறிக்கையை ஒருமாதத்திற்குள் பெறப்படும் அந்த ஆய்வறிக்கையின் படி இந்த விண்ணப்பம் ஏற்கபடுகின்றதுஅல்லது மறுக்கப்படுகின்றது அல்லது மறுப்பதற்கான காரணம் கேட்கும் அறிவிப்பு அளிக்கபடுகின்றது அவ்வாறு காரணம் கோரும் அறிவிப்பு கிடைத்தபின்னர் அதற்கான வாத பிரதி வாதங்களை கேட்டு வர்த்தகமுத்திரையை மறுத்தல் ,ஏற்கபடுதல் குறிப்பிட்ட வரணமுறைக்குள் ஏற்கபடுதல் ஆகிய வற்றுள் ஒன்று செயற்படுத்தப்படும் இந்நிலையில் விண்ணப்பம் மறுக்கப்பட்டால் மேல்முறையீடுசெய்திடமுடியும் இறுதியாக ஏற்கபடுவதை மட்டும் வர்த்தகமுத்திரை இதழில் மூன்றுமாதங்களுக்குள் வெளியிடப்படும் வர்த்தகமுத்திரை இதழில் வெளியிடப்பட்டநிலையில் மறுப்பு எதுவும் கிடைக்கபெவில்லையெனில் அந்த வர்த்தக முத்திரையானது பதிவுசெய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கப்படும் முடிவாக வர்த்தக முத்திரையே நம்முடைய வியாபாரத்திற்கானகுறைந்த செலவிலான விளம்பரமாகும் என்றசெய்தியை மனதில் கொண்டு எவ்வளவு விரைவாக நம்முடைய வர்த்தகமுத்திரையை பதிவுசெய்யமுடியுமோ அவ்வளவு விரைவாக பதிவுசெய்திடுங்க என பரிந்துரைக்கப்படுகின்றது

சனி, 14 மார்ச், 2020

குழந்தைகள் தங்களுக்கு தேவையான ஆடைகளை படம்வரைவதன் வாயிலாக பெற்றுக்கொள்ள முடியும்


ஜெய்மி நியூபெர்ரி எனும் தாய் தங்களுடயை குழந்தைகளின் படம்வரைதலின் திறனை ஊக்குவிப்பதன் வாயிலாக அக்குழந்தைகளக்கான ஆடைகளை பெறலாமே என்ற ஆலோசனையின்படி நல்ல அருமையான ஆடை வடிவமைக்கப்பட்டு கிடைக்கப்பெற்றன அதனை தொடர்ந்து அந்த குழந்தைகளின் நண்பர்கள் அவர்களின் பெற்றோர்களும் அவ்வாறே தங்களுடைய பிள்ளைகளுக்கான ஆடைகளை அவர்கள் வரையும் ஓவியத்தின் வாயிலாக பெற்றனர் இதனடிப்படையில் ‘Picture This’எனும் தலைப்பில் , Newberry’s எனும் நிறுவனம் ஓவியம் வரைக ஆடையை பெறுக (“Picture This” –) என்ற திட்டத்தை செயல்படுத்தி விளம்பரப்படுத்தி மிகபிரபலமாக நடைமுறைபடுத்தி வருகின்றது இதன்மூலம் பிள்ளைகள் தாங்கள் அணியும் ஆடையை ஓவியம் வரைவதலின் வாயிலாக பெறமுடியும் இதற்காகவிரும்புபிள்ளைகள் https://www.newberry.org/எனும் இந்த இணைய தளபக்கத்திற்கு சென்று வண்ணத்தாளை தேவையானஅளவு தெரிவுசெய்து அச்சிட்டு கொள்க அல்லது மாதிரி படிமத்தை பதிவிறக்கம்செய்து அச்சிட்டுகொள்க அதன்பின்னர் அதில் நம்முடைய பிள்ளைகள் அவர்களுக்கு தெரிந்த படத்தை ஓவியமாக அந்த தாளில் வரையச்செய்திடுக பின்னர் இந்த தளத்தில் அந்த ஒவியத்தை பதிவேற்றம் செய்திடுக இரண்டுவாரம் கழித்தபின்னர் கூரியர் அல்லது அஞ்சல் வாயிலாக அந்த பிள்ளைகளுக்கான ஆடை வந்துசேரும் நம்முடைய பிள்ளைகள் தங்களுடைய கற்பணையை ஆடையாக அணிந்து மகி்ழ்வதை காணலாம் பிள்ளைகள் தங்களுக்கு ஆடைதேவையில்லை அதற்குபதிலாக தங்களுடைய விளையாட்டு பொம்மைகளுக்கு தேவையான ஆடையை ஓவியமாக வரைந்து பெற்றுகொள்ளலாம் இவ்வாறே நாமும் நம்முடைய மனதில் உதிர்த்த ஆலோசனைகளை புதிய தொழிலாக துவங்கிடலாமே

புதன், 11 மார்ச், 2020

எந்த வொருசிறுவணிகத்தையும் எவரும் துவங்கலாம்


பொதுவாக தற்போது வாழும் பெரும்பாலானமக்களின் கண்ணோட்டமானது ஏதோவொரு பாதுகாப்பான பணியில் சேர்ந்தோமா பணம் சம்பாதித்தோமா குறிப்பிட்ட வசதியில வாழ்ந்தோமா பணிஓய்வு பெற்றோமா என்பதைவிடுத்து புதியதாக தொழில் துவங்கி எதற்காக கஷ்டபடவேண்டும் என்ற மனப்பாண்மையில் நம்மில் பெரும்பாலானோர் வாழ்ந்து வருகின்றோம் என்பதே எதார்த்தமான உண்மைநிலவரமாகும் அதனால் இறுதியில் நாம் கற்பனையாககூட நம்முடைய வாழ்வின் உயர்ந்த நிலையை அடையாமல் வாழ்ந்துவருகின்றோம் மேலும் பெரும்பாலான மூத்த தொழில் முனைவோர்கள் அனைவரும்நம்மைத்தவிர வேறுஎவரும் பெரியதொரு தொழிலை துவங்கி நடத்தமுடியாதுஎன்றே தவறாக கணிக்கின்றார்கள் - ஆயினும் நாம் விரும்பும் தொழிலை சரியான சிறு தொழிலை கண்டறிவது என்பது முதலில் சாத்தியமற்றதாகத் தோன்றினாலும் அதனை தெரிவுசெய்வதேநம்முடைய பெரியமுடிவாகும் .அதனை தொடர்ந்து அதனை செயல்படுத்திடமுனையும்போது பெரும்பாலான தொழில் முனைவோர் முதலாவது படிநிலையில் விட்டுக் கொடுக்கிறார்கள் அதன்பின்னரே வெற்றி கொள்கின்றார்கள் என்ற செய்தியை மனதில் கொள்க இவ்வாறான நம்முடைய மனதில் தோன்றிய எண்ணங்களை சிறந்த தொழில்முனைவாக எவ்வாறு ஒழுங்கமைத்து செயல்படுத்திடுவது என்பதற்கான ஒரு சில ஆலோசனைகள் பின்வருமாறு முதலாவதாக ஸ்டீவ் ஜாப்ஸ், பென் அண்ட் ஜெர்ரி போன்ற பிற தொழிலதிபர்களின் வெற்றிகரமான புதிய தொழில் துவங்குவதற்கான கருத்துகளை படித்தறியுங்கள் நாம் துவக்கவிருக்கும் நம்முடைய தொழில் முதலில் சிறியதாக துவங்கசெய்திடுக எடுத்தவுடனேயே பெரியநிறுவனமாக வெற்றிநடைபோட வேண்டும்என கற்பணைகோட்டை கட்டவேண்டாம் நம்முடையபுதிய தொழில் கருத்துக்களை முதலில் முடிந்தவரை எளிமையாக வைத்திடுக புதிய தொழில்நுட்ப ஆலோசனையிலிருந்து தொடங்கி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பொருட்கள் மற்றும் மனிதவள மேம்பாடு ஆகியகாரணிகளை நம்முடைய தொழில் துவங்கவதற்கான செயலின் கருத்தில் கொள்வது மிகவும் கடினமாக இருக்கும் இருந்தபோதிலும் அவற்றையும் கவணத்தில்கொள்ளவேண்டும் நம்முடைய உற்பத்திபொருளானது புதியதாகவும் மக்களிடன் தேவைஅதிகமாகவும் அதிக இலாபம் நமக்கு தருவதாகவும் இருக்கவேண்டும் அதேசமயத்தில் சந்தையில் தரமானபொருளாகவும் மிககுறைந்தவிலையில் உதாரணமாக சீனதயாரிப்பு பொருட்கள் மலிவுவிலையில் நம்முடைய ஊரிலேயே கிடைப்பது போன்று கிடைத்திடவேண்டு்ம் நம்முடைய பொருளிற்கு சந்தையில் போட்டியாளர்கள் உள்ளனரா அவர்களின் உற்பத்தி செலவு இலாப சதவிகிதம் பொருளின் தரம் ஆகியவற்றை கருத்தில் கொள்க நமமுடைய பொருள் மேம்படுத்தப்பட்டதாகவும் அழகாகவும் மக்களின் மனமகிழசெய்வதாகவும் இருக்கவேண்டும் ஆப்பில் கைபேசி இந்த அடிப்படை கருத்தமைவில் உருவாக்கப் பட்டு வெளியிடபடுகின்றன அதுபோன்று நாம் ஒரு கார் பழுது பார்த்தல் போன்ற சேவையை வழங்குவதாக இருந்தால் இந்த காருக்கான சக்கரங்களின் டயர்களின் பழுபார்ப்பு கட்டணமில்லாமல் செய்து தரப்படும்என்பது போன்று நம்முடைய போட்டியாளர்களிடமிருந்து வித்தியாசமாக ஏதாவது ஒன்றை நம்முடைய சேவையில் இருப்பதை உறுதி செய்து கொள்க புதிய தொழில் துவங்குவதற்கான ஆலோசனை நம்முடைய மனதில் தோன்றினால் நாம் அதை பின்வரும் கருத்துகளின் அடிப்படையில் பரிசோதித்து . எல்லா சாத்தியங்களையும் ஆராய்ந்து முடிவுசெய்தால் தெளிவாகவும், முழுமையாகவும் மாறிவிடுவதை காணலாம். துவக்க முதலீடு நம்முடைய புதிய வியாபாரத்திற்கு செலவிடுவதற்காக நம்முடைய கையில் முதலீட்டிற்கான தொகை எவ்வளவு இருக்கிறது? நம்முடைய கடன் பெறுவதற்கான தகுதி மதிப்பீடு எவ்வாறு உள்ளது? இவ்வாறான தொழிலிற்கு தேவையான துணிகர முதலிடுகள், குடும்பஉறுப்பினர்கள் , நண்பர்கள் அல்லது வங்கியில் இருந்து எவ்வளவு மூலதனம் நம்மால் பெறமுடியும்? இந்த தொழிலில் இருந்து நம்முடைய முதலீட்டிற்கான இலாபத்தை பெறுவதற்காக எத்தனை ஆண்டுகள் நாம் காத்திருக்க தயாராக இருக்கவேண்டும்? தொழிலதுவங்குவதற்கானஇடம் நம்முடைய தொழில் நகர்ப்புறத்திலா அல்லது புறநகர் பகுதியிலா எங்கு துவங்கவிருக்கின்றோம்? நம்முடைய தொழில் துவங்கிடும் பகுதியின் சராசரி நபர் வருமானம்எவ்வளவு? ந்ம்முடைய உற்பத்தி பொருள் மிகவும் விலையுயர்ந்ததாஅல்லது விலைமலிவானதா? சந்தை நிலவரம் நாம் தொழில் துவங்கவிருக்கும் பகுதியில் இதே போன்ற தொழில்கள் ஏற்கனவே உள்ளனவா? நம்முடைய நிறுவனத்தின் உற்பத்தி பொறுள் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது அதன் நன்மைகள் தீமைகள் யாவை? நம்முடைய நிறுவனத்தின் உற்பத்தி பொருள் மற்ற துனைப்பொருட்களை கொண்டு முழுமையாக பூர்த்தி செய்யக்கூடிய எந்தவொரு வியாபாரமும் இருக்கிறதா? சந்தை தேவை இப்பகுதியில் நம்முடைய தயாரிப்பு அல்லது சேவைக்கான நிரூபிக்கப்பட்ட தேவையிருக்கின்றதா? அதே தயாரிப்புகளை அல்லது சேவைகளை வழங்கும்வேறு ஏதேனும் நிறுவனங்கள் இதற்குமுன் முன் முயற்சி செய்து தோல்வியேதனும் அடைந்துள்ளனரா? பொருளின் தரம் மற்றும் அளவு - நம்முடைய உத்தேச தயாரிப்பு அல்லது சேவையின் தேவை துல்லியமாக கணக்கிடபட்டுள்ளதா. வளர்ச்சி சாத்தியம் இலாபம் வந்தாலும் நட்டம் வந்தாலும் நாம் தொடர்ந்து ஐந்துஅல்லது ஆறாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நம்முடைய பொருளை உற்பத்தி செய்வோமா? நம்முடைய தொழிலில் இலாபத்தை அடைவதற்கு எவ்வளவு காலம் எடுத்துகொள்ளும்? அவ்வாறு இலாபத்தை அடைந்தவுடன், மேலும் வளருவதற்காக எவ்வாறு திட்டமிட்டுள்ளோம்? தொழில் நுழைவு தடைகள் வருங்கால போட்டியாளர்களுடன் போட்டியிடுவது எவ்வளவு கடினமாக இருக்கும்? நம்முடைய தயாரிப்பு அல்லது சேவையை எளிதில் வடிவமைக்க முடியுமா அல்லது காப்புரிமை அல்லது வர்த்தக இரகசியங்களால் பாதுகாக்கப்பட்டதா? நம்முடைய முதன்மை வணிகத்தை பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக, நம்முடைய வணிகத்தின் துனை தொழில்களை கொண்டு எவ்வாறு பாதுகாக்க முடியும்? இந்த அளவுகோல்களின் மூலம் நம்முடைய புதிய தொழில் துவங்க முடியாவிட்டால், நம்முடைய தொழில் துவங்கிடுவதற்கான ஆலோசனையை நாம் தீவிரமாக மறுபரிசீலனை செய்யதயாராக இருக்க வேண்டும். நம்முடைய ஆலோசனை நீண்ட காலத்திற்கு நீடித்து நிலைத்திருப்பதாக இருக்க வேண்டும் நம்முடைய சேமிப்புகள் புத்திசாலித்தனமான திட்டமிடல், கவனமான சந்தை ஆய்வு, நீண்ட தொலைநோக்கு பார்வை ஆகியவைகளே வெற்றிகரமான சிறு வணிகத்தை உருவாக்குவதற்கான விசைகளாகும் என்ற விவரங்களை மனதில் கொண்டு புதிய தொழிலை துவங்கிடுக .

ஞாயிறு, 8 மார்ச், 2020

நம்முடைய நோக்கத்திற்கு ஏற்றவாறான முதலீட்டு வாய்ப்பினை பயன்படுத்தி கொள்க


ஒருதந்தையானவர் தன்னுடைய நான்கு மகன்களையும் அழைத்து ஊருக்கு வெகுதூரத்தில் காட்டில் உள்ள ஆலமரத்தினை ஆண்டின் வெவ்வேறு பருவத்தில் வெவ்வாறு மகன்களை சென்று பார்த்து வருமாறு அறிவுறுத்தினார் அதாவது ஒருமகனை குறிப்பிட்ட ஆண்டின் இலையுதிர்காலத்திலும் மற்றொருமகனை இளவேனிற்காலத்திலும் என்றவாறு நான்கு வெவ்வேறு பருவகாலங்களில் அனுப்பி வைத்தார் ஒருமகன் அந்த ஆலமரத்தினை பார்த்து வந்து இலையெல்லாம் உதிர்ந்து மரம் பார்க்கவே சகிக்கவில்லை யென கூறினான் மற்றொரு மகனோ புதிய இலை துளிர் விட்டுகொண்டிருப்பதாக கூறினான் மூன்றாமவன் பூபூத்து கொண்டிருப்பதாக கூறினான் நான்காமவன் கிளை ஒடிந்து விழுமாறு மரம் முழுவதும் பழங்கள் காய்த்து தொங்குகின்றன அதனால் ஏராளமான பறவைகள் அந்த ஆலமரத்திற்கு வந்து அந்த பழங்களை கடித்து தின்று பசியாறுகின்றன என கூறினான் இந்த நான்கு மகன்களையும் ஒவ்வொருவராக அழைத்து அந்த ஆலமரத்தினை பற்றிய அவர்களின் கருத்து என்னெவென வினவியபோது அந்நால்வர்களும் அவரவர் பார்த்த நிலைக்கு ஏற்றவாறு அம்மரத்தினை பற்றிய கருத்தினை வெவ்வேறாக கூறினர் அதனால் அந்த ஆலமரத்தின் தன்மை வெவ்வேறாக இருக்கமுடியுமா இருக்காதுஅல்லவா அதேபோன்றே பல்வேறு வியாபார நிறுவனங்களால் வெளியிடபடும் சாதாரன பங்குகளின் தன்மையும் குறிபிட்ட காலத்திற்கேற்றவாறு அதன் தன்மையும் ஏற்றஇறக்கங்களுடன் இருக்கும் என்ற கருத்தினை மனதில் கொண்டு சாதாரணபங்குகளை நீண்டகால நோக்கிலான முதலீட்டிற்கு பயன்படுத்தி கொள்க குறுகிய காலம் எனில் இட்டுவைப்பு போன்றவைகளில் முதலீடு செய்திடுக என பரிந்துரைக்கப்படுகின்றது

புதன், 4 மார்ச், 2020

சிறிய அளவில் ஏராளமான வகையில்தொழிலை துவங்கலாம்


தகவல் தொழில்நுட்ப காலகட்டமானஇந்த 21 ஆம் நூற்றான்டில் சிறிய அளவில் ஏராளமான வகையில்தொழிலை துவங்கலாம் 1.Online Tutorialsபொதுவாக தற்போது நம்மில் பெரும்பாலோர் இருந்த இடத்திலிருந்தவாறே எந்தவொரு புதிய தொழில்நுட்பத்தையும் கற்க விரும்புகின்றனர் அதனால் அவ்வாறான கற்றலை வழங்குகின்றஇணையவழிகல்வியாக தொழிலநுட்பம் இசை நாட்டியம் ஓவியம் சமையல்ஆகியவற்றிற்கான ஆன்லைன் டுட்டோரியல் கல்வி எனும் தொழிலை குறைந்தசெலவில் நடத்தலாம் 2. Animation தற்போதைய தகவல்தொழில்நுட்ப காலகட்டத்தில் அசைவூட்டு (Animation)படங்கள் மிகமுக்கிய இடத்தை வகிக்கின்றன அதிலும் நிறுவனங்கள் தங்கள் பொருட்களை சந்தைபடுத்திடுவதற்கு இந்த அசைவூட்டுபடங்கள்மிகமுக்கிய பங்களிக்கின்றன அதனால் சிறிய அளவில் அசைவூட்டு படங்களை உருவாக்கி டும் பணியைசெய்யலாம் 3. Advertisement Makingதற்போத எந்தவொரு உற்பத்தி பொருளும் விளம்பரமில்லாமல் சந்தையில் நிலைத்து இருக்கமுடியாத என்றநிலையில் பொருளிற்கான விளம்பரங்களை உருவாக்கிடும் பணியை செய்திடலாம் 4.Advertisement Agencyஇவ்வாறான விளம்பரதயாரிப்பாளர் தனியுலகமாகவும் பொருள்உற்பத்தி தனியுலகமாகவும் இருக்கின்றநிலையில் அவைகளுக்கு இடையேஇணைப்பு பாளமாக விளங்கிடும்விளம்பர முகவர் பணியை செய்யலாம் 5. Photographyஎந்தவொரு செய்தியையும் உரையாக வழங்குவதைவிட அவ்வுரையுடன் விளக்கப்படமும் இணைத்து வழங்கும்போது மக்களின் மனதில் அந்த செய்தி உடன் பதியும் அதற்காகபடப்பிடிப்பு மிகமுக்கிய இடத்தைவகிக்கின்றது இவ்வாறான படபிடிப்பு தொழில் குறைந்த முதலீட்டில் செய்திடமுடியும் 6. Freelance Writerசெய்திகளை உரையாக எழுதி உருவாக்குவது அதிலும் எந்தவொரு செய்தி நிறுவனத்தையும் சாராமல்சுதந்திரமாக எழுதுவது மிகச்சிறந்த தொழில் வாய்ப்பாகும் இவ்வாறான யாரையும் சார்ந்திராத சுதந்திர எழுத்தாளர் பணியை செய்திடுக 7.Translation servicesஅனைத்து தொழில்களும் உலகளாவிய இன்றையை நிலையில் நாடுகளுக்கு இடையேஅந்நாடுகளின் பேசப்படும் மொழிகளுக்கு இடையே பாளமாக விளங்குவது மொழிபெயர்ப்பு பணியாகும் அவ்வாறான மொழிபெயர்ப்பு பணியானது மிகமுக்கியஇடத்தினைவகிக்கின்றது அதனால் இந்த மொழிபெயர்ப்பு பணியைசெய்திடலாம் 8. Domain and Hostingதற்போது இணையமில்லாது எந்தவொரு செயலும் இல்லை அதிலும் வியாபரத்திற்குஇணை பக்க்கள்தான் அடிப்படையாக விளங்குகின்ற இன்றையை நிலையில் வியாபார நிறுவனங்கள் அனைத்தும் தத்தமக்கு என தனியாக இணையபக்கத்தை உருவாக்கிடவிரும்பிடுகின்றன அதனை எளிமையாக செயல்படுத்திபடுவதற்காக Domain and Hosting என்ற சேவைத்தொழிலை மேற்கொள்க 9.Search Engine Optimization (SEO)Consultantஇணையத்தில் கூகுள் யாகூ .பிங்க்போன்றவை தேடுபொறியில் முதன்மை இடத்தை வகிக்கின்றன அவ்வாறான தேடுபொறிகளில் நம்முடைய இணையபக்கத்தைமுதல் பத்து இடங்களில் கொண்டு வருமாறு செய்வதற்காக நம்முடைய இணையபக்கத்தின் உள்ளடக்கங்களை மாற்றியமைத்திடவேண்டியுள்ளது அவ்வாறு தேடுபொறியில் இணையபக்கத்தை முதலிடங்களை கொண்டுவருவதற்கானஆலோசகர் பணிமிகமுக்கிய இடத்தை வகிக்கின்றது அவ்வாறான தேடுபொறி ஆலோசகர் பணியை செய்திடுக

ஞாயிறு, 1 மார்ச், 2020

கெண்டகி ஃபிரைடு சிக்கன் (KFC)எனும் உணவினை உற்பத்தி செய்திடும்நிறுவனம்


கலோனல் சான்டர்ஸ் என்பவர் தன்னுடைய 65 ஆவது வயதில் தனது சமூக பாதுகாப்பிற்கான காசோலை 99 டாலர் ஓய்வூதியம் பெற்றுவந்தார் அப்போது அவரிடம் வாழ்வதற்காக மிகச்சிறிய வீடுஒன்றும் எங்காவது செல்வதற்காக பழைய மகிழுந்து ஒன்றும் மட்டுமே அவருடைய சொத்துகளாக உடைமையாக இருந்தன ஆனால் அவர் மிகசிறப்பாக அனைவரும் விரும்புமாறான கோழிவருவல் உணவை தயாரித்திடுவார் அதனால் அவருடைய நண்பர்கள் அனைவரும் இந்த கோழிவருவலுக்காகவே அவரை சுற்றிசுற்றி வந்து கொண்டிருப்பார்கள் அந்நிலையில்இதனை ஏன்ஒரு நல்ல தொழிலாக மாற்றியமைத்து செயற்படுத்தக்-கூடாது என அவர் சிந்தித்தார் அதனை தொடர்ந்த அதனை நடைமுறை படுத்திடுவதற்காக முனைந்தார் அதனால் நாடுமுழுவதும் சுற்றுலாவை செயற்படுத்திடும் முகவர்கள் நடத்திடும் உணவகங்களில் இந்த கோழிவருவல் உணவை இலவசமாக வழங்க தான் தயாராக இருப்பதாகவும் அதனை அனுமதிக்குமாறும் அவ்வுணவகங்களில் 1000 முறை கோரினார் ஆயிரமுறையும் அவ்வாறான சுற்றலா முகவர்களின் உணவகங்களில் கட்டணமில்லாமல் அவருடைய கோழிவருவல் உணவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குமாறான அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டன இருந்தபோதிலும் அவரும் இவ்வாறான நிராகரிப்பினால் சோர்வுற்றிடாமல் கடைசியாக இன்னும் ஒருமுறை முயன்றுதான் பார்ப்போமே என 1001 ஆவதுமுறை முயற்சிசெய்தார் அதாவது சுற்றுலா உணவகத்தில் இவருடைய கோழிவருவல் உணவை இலவசமாக வாடிக்கை-யாளர்களுக்கு வழங்குவது எனும் கோரிக்கை ஏற்கப்பட்டு செயற்படுத்தப்பட்டது அதனை தொடர்ந்து இவருடைய கோழிவருவல் உணவு வாடிக்கையாளர் அனைவரும் விரும்பும் உணவாக வாடிக்கையாளர்களின் உணவுப்பழக்கமே மாறிப்போனது அவ்வாறு வாடிக்கையாளர்களின் உணவு பழக்கம் மாறியதை தொடர்ந்த அவருடைய கோழிவருவல் உணவினை உற்பத்தி செய்திடும் ஆண்டொன்றிற்க 45 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் ஈட்டிடும் அவருடைய கெண்டகி ஃபிரைடு சிக்கன் (KFC)எனும் மிகவும் பிரபலமான உணவு நிறுவனமாகவும். 220 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் செயல்படும் ஒரு உலகளாவிய மாபெரும் நிறுவனமாகவும் பரந்து வளர்ந்து விட்டது. விடாமல்முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் என்ற பழமொழியை மனதில் கொள்க

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...