சனி, 27 ஜூன், 2020

சுயமதிப்பீடு


சிறுவன் ஒருவன் ஒரு கடையிலிருந்த தொலைபேசியில் ஏதோவொரு தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேச தயாரானான். உடன் அந்த கடை உரிமையாளர் அந்த தொலைபேசி உரையாடலைக் கவனிக்கதுவங்கினார்: சிறுவன்: “அம்மா, உங்களுடைய வீட்டின் முற்றத்திலுள்ள புல்தரையின் புல்லை வெட்டும் பணியை எனக்குத் தர முடியுமா? வீட்டுரிமையாளர்பெண்: (தொலைபேசி இணைப்பின் மறுமுனையில்) “எங்களுடைய வீட்டின்முற்றத்திலுள்ள புல்தரையின் புல்லை ஏற்கனவே ஒருவர் வெட்டிகொண்டிருக்கிறார்.” சிறுவன்: "அம்மா, இப்போது உங்கள் புல்தரையை வெட்டும் நபரை விட எனக்கு பாதி கூலி கொடுத்தால் போதும் நான் அதே பணியை மிகவிரைவாக செய்து முடிப்பேன்." வீட்டுரிமையாளர்பெண்: தற்போது எங்களுடைய வீட்டின் முற்றத்து புல்தரையின் புல்லை வெட்டுகிற நபர் நான் மிகவும் திருப்தி அடையுமாறு பணிசெய்கின்றார் அதனால் நான் அந்த பணியை வேறுயாருக்கும் மாற்றி தரவிரும்புவில்லை. சிறுவன்: “அம்மா, நான் அந்த புல்லை வெட்டும் பணியுடன் உங்களுடைய வீட்டின் தரையையும் மாடி படிக்கட்டுகளையும் கூட அதே கூலிக்கு பெருக்கி துடைத்து தருவேன். வீட்டுரிமையாளர்பெண்: தேவையில்லை,எங்களுடைய வீட்டில் ஏற்கனவே பணிசெய்திடும் நபரே அவ்வாறான பணிகள் அனைத்தையும் செய்து முடித்துவிடுகின்றார் நீவேறு யார்வீட்டிற்காவது சென்று உனக்கான பணியை தேடலாம் மிக்க நன்றி . முகத்தில் புன்னகையுடன், தொலைபேசியை சரியாக வைத்து கிளம்ப தயாரானான் அந்த சிறுவன் . இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அந்த கடை உரிமையாளர், சிறுவனை பார்த்து கடை உரிமையாளர்: “தம்பி… உன்னுடைய அணுகுமுறையை நான் விரும்புகிறேன்; மேலும் அந்த நேர்மறையான உணர்வையும் நான் மதிக்கின்றேன், அதனால் நான் என்னுடைய கடையில் உனக்கு ஒரு பணி வழங்க விரும்புகிறேன். " சிறுவன்: “ மிகவும் நன்றி ஐயா எனக்கு பணிஎதுவும் தேவையில்லை ,ஜயா கடை உரிமையாளர்: ஆனால் நீ உண்மையிலேயே ஒருவரிடம் உனக்கு ஒரு பணிவேண்டும் என மிகவும் கெஞ்சிக் கொண்டிருந்தாயே. பையன்: அதெல்லாம் ஒன்றுமில்லை ஐயா, நான் ஏற்கனவே செய்துகொண்டிருக்கும் பணியில் எனது செயல்திறனை சுயமதிப்பீடுசெய்துக்கொண்டிருந்தேன். நான் பேசிக் கொண்டிருந்த அந்த பெண்மணியின் வீட்டில்தான் நான் தற்போது பணி செய்துகொண்டிருகின்றேன்! ”

வியாழன், 25 ஜூன், 2020

இந்தியாவில் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்காக IEC எனும் குறியீடு பதிவு செய்வதற்கான நடைமுறை


இந்தியாவில் எந்தவொரு நிறுவனமும் ஏற்றுமதி அல்லது இறக்குமதி வணிகத்தைத் துவங்குவதற்கு முன் IEC எனும் குறியீட்டினை பெறுவதற்காக கண்டிப்பாக பதிவு செய்திடவேண்டும் ஏனெனில் பொருட்களை ஏற்றுமதி செய்ய அல்லது இறக்குமதி செய்ய இது அவசிய தேவையாகும் இந்த தனித்துவமான பத்து இலக்கங்களைகொண்ட IEC. குறியீட்டு எண்ணை இந்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தின் வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநர் அவர்களால் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப் படுகின்றது இந்த IEC பதிவு செய்து கொள்வதால் கிடைக்கும் பயன்கள் பின்வருமாறு: 1. இந்தியாவில் எந்தவொரு நிறுவனமும் ஒரு ஏற்றுமதியாளராக அல்லது இறக்குமதியாளராக ஆவதற்கான முதன்மை சான்றாக இது விளங்குகின்றது . 2. சுங்கத்துறை, வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம் (DGFT) , ஏற்றுமதி ஊக்குவிப்பு குழு போன்றவற்றிலிருந்து பொருட்களை ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்வது தொடர்பாக பல்வேறு சலுகைகளைப் பெற இந்த சான்று உதவுகின்றது. 3. இந்தியாவிலிருந்து பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும் அல்லது இந்தியாவிற்குள் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் இது ஒருமுதன்மை உரிமமாக பயன்படுகின்றது. 4. இந்த IEC பதிவு எண் வாயிலாக பொருட்களை கொண்டு செல்வதற்கான அனுமதியை சுங்கத்துறை அதிகாரிகளிடமிருந்து பெறுவதை எளிதாக்கு கின்றது. 5. இந்த IEC பதிவு எண் ஆனது சட்டவிரோதமான பொருட்களின் ஏற்றுமதியை அறவே தடுக்கின்றது . 6. தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும் அல்லது இறக்குமதி செய்வதற்கும் இந்தIEC பதிவு எண்தேவையில்லை. 7. இந்த IEC இற்காக பதிவுசெய்து IEC பதிவு எண் பெற்ற பிறகு ஒவ்வொரு வருடமும் வருடாந்திர புதுப்பித்தல் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. 8. அவ்வாறே இவ்வாறு பதிவு பெற்ற பிறகு ஒவ்வொரு ஆண்டும் வருடாந்திர அல்லது அரையாண்டு அல்லது காலாண்டு அறிக்கை சமர்ப்பித்திட வேண்டும் என்ற நடைமுறைஎதுமில்லை. வருமானவரிபதிவுஎண் அடிப்படையிலான இந்த IECபதிவு சான்றிதழ் ஆனது நேரடியாக இணையத்தின் வாயிலாக ( STPஎனும் பயன்முறையில்) பின்வரும் ஆறு படிமுறைகளை பின்பற்றினால் இணையத்தில் தானாகவே உருவாக்கப்பட்டு பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு கிடைக்கின்றது, படிமுறை1.முதலில் வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகத்தின் (DGFT) https://dgft.govt.in/ எனும் இணையதளபக்கத்திற்குசெல்க படிமுறை2. பின்னர்அந்த திரையில்Services=>IEC=> OnlineIECApplication=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக படிமுறை3 அதன்பின்னர் விரியும் திரையில் நம்முடைய வருமான வரி பதிவு எண்ணில் உள்ளவாறு நம்முடைய பெயர் ,பிறந்ததேதி அல்லது நிறுவனத்தின் பெயர் பதிவுசெய்த தேதி , வருமானவரி பதிவுஎண்(PAN) ஆகிய விவரங்களை மிகச்சரியாக உள்ளீடு செய்திடுக படிமுறை4 பின்னர் நம்முடைய கைபேசி எண் ,மின்னஞ்சல் முகவரி ஆகியவைகளை மிகச்சரியாக உள்ளீடுசெய்து கொண்டு Submit=>Create Login ID => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக ( இவைகளின் வாயிலாக OTPஎனும் ஒருமுறைமட்டுமான கடவுச்சொல் பெறுவதற்காக) படிமுறை5 படிமுறை 4 இல்கூறிய வாறு பதிவுசெய்த கைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு வருகின்ற OTPஎனும் ஒரு முறைமட்டுமான கடவுச்சொல் வாயிலாகஇந்த தளத்திற்குள் உள்நுழைவு (Login)செய்திடுக தொடர்ந்து தோன்றிடும் IEC Master Form எனும் திரையில் விண்ணப்பதாரரின் பெயர் ,இருப்பிடமுகவரி, வங்கியின் பெயரும் கணக்கு எண்ணும், நிறுவனத்திற்கு கிளைஅலுவலகங்கள் ஏதேனும் இருந்தால் அவைகளுடைய விவரங்கள், நிறுவனத்தின் தலைவர் அல்லது செயல்படும் முதன்மை கூட்டாளியின் பெயர்,பொறுப்பான்மையிரின் பெயர், தனிநபர் எனில் பொறுப்பாளரின் பெயர் போன்ற IEC பதிவு எண் பெறுவதற்கு தேவையான அனைத்து விவரங்களையும் மிகச்சரியாக உள்ளீடு செய்து கொள்க மேலும் புதியதாக பதிவுசெய்திடுவோர்கள் தம்முடைய வங்கி எண் அல்லது காசோலை , இருப்பிட முகவரிக்கான சான்றிற்காக வாடகை ஒப்பந்தம் அல்லது விற்பணை பத்திரம் அல்லது குத்தகை பத்திரம் மின்சார கட்டணபட்டியல் அல்லது தொலைபேசி கட்டணபட்டியல் அல்லது கைபேசி கட்டணபட்டியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று , நிறுவனம் பதிவு பெற்ற சான்று அல்லது கூட்டாண்மை பத்திரம் ஆகியவற்றின் நகல்களை பதிவேற்றம் செய்து சமர்ப்பித்திடுக ஏற்கனவே IEC பதிவு எண் பெற்றவர்கள் எனில் IEC பதிவு விவரங்களில் ஏதேனும் மாறுதல் இருந்தால் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் இவ்வாறான விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளீடுசெய்து தேவையான அனைத்து நகல்களையும் பதிவேற்றம் செய்து சமர்ப்பித்தபின்னர் அனுமதிக்கப்பட்ட வங்கியின்மூலம் இணையத்தின் வாயிலாக பதிவு கட்டணம் ரூ.500/- அல்லது புதுப்பித்தல் கட்டணம் 200/-செலுத்திடுக இறுதியாக Submitஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன் நாம் மேலே கூறியவாறான விவரங்கள் அனைத்தும் மிகச்சரியாக இருந்தால் உடன் நமக்கான IECபதிவு சான்றிதழ் ஆனது தானாகவே உருவாகி விடும் அதனை பதிவிறக்கம் செய்து அச்சிட்டு கொள்க

செவ்வாய், 23 ஜூன், 2020

இந்தியாவில் Startupஎனும் திட்டத்தின்கீழ் நிறுவனங்கள் துவங்கப்படு வதற்கான தகுதியும் வரி விலக்கும்


இந்தியாவில் Startup எனும் செயல்திட்டத்தின் படி, ஒரு Startup நிறுவனத்தினை துவங்குவதற்கான தகுதி பெறுவதற்கு பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்திட வேண்டும்: 1.இந்தியாவில்உயிரி தொழில்நுட்ப துவக்க நிறுவனங்கள் எனில் துவங்கப்பட்ட அல்லது பதிவுசெய்யப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்குள் இருக்கவேண்டும். மற்றவையெனில் துவங்கப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 7 வருடங்களுக்குள் இருக்கவேண்டும், 2.முந்தைய நிதி ஆண்டுகளில் வருடாந்திர வருவாய் ரூ .25 கோடிக்கு மிகாமல் இருக்கவேண்டும். 3.Startup எனும் செயல்திட்டத்தின் படிதுவங்கிடும் நிறுவனமானது தொழில்நுட்பம் அல்லது அறிவுசார் சொத்துக்களால் இயக்கப்படும் புதிய தயாரிப்புகள், செயல்முறைகள் அல்லது சேவைகளில் புதுமை, மேம்பாடு, வணிகமயமாக்கல் ஆகியவற்றை அடிப்படை நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாக இருக்கவேண்டும் 4.இந்நிறுவனம் ஏற்கனவே இருக்கும் ஒரு வணிகநிறுவனத்தை பிரிப்பதன் மூலமோ அல்லது புனரமைப்பதன் மூலமோ உருவாக்கப்பட்டதாக இருக்கக் கூடாது. 5.இது போன்ற நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட இடை-நிலை அமைச்சக வாரியத்திடமிருந்து சான்றிதழைப் பெற வேண்டும். 6.Startup எனும் செயல்திட்டத்தின் படிதுவங்கிடும் நிறுவனமானது ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம் அல்லது பதிவு செய்யப்பட்ட கூட்டாண்மை நிறுவனம் அல்லது வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை நிறுவனம் ஆகியவற்றின் ஏதேனும் ஒன்றின்கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலே கூறிய நிபந்தனைகளின்படி தகுதி வாய்ந்தStartup எனும் செயல்திட்டத்தின் படிதுவங்கிடும் நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்படும் வரி விலக்குகள் பின்வருமாறு 1.ஏப்ரல் 1, 2016 க்குப் பிறகு Startupநிறுவனமாக பதிவு செய்யப் பட்ட அல்லது துவங்கப்பட்ட Startupநிறுவனமானது, எந்தவொரு நிதியாண்டிலும் வருடாந்திர வருவாய் ரூ .25 கோடியைத் தாண்டாது இருந்தால், தொகுப்பான ஏழு வருடங்களில் மூன்று வருட காலத்திற்கு 100% வரிச்சலுகை பெற தகுதியுடையதாகும். 2. நீண்ட கால மூலதன இலாபத்தொகை அல்லது அதன் ஒரு பகுதியை மத்திய அரசு அறிவித்த நிதியில் முதலீடு செய்தால், தகுதியான Startup நிறுவனங்களுக்கு வருமான வரிச் சட்டத்தில் 54 EEகீழ் நீண்ட கால மூலதன இலாபத்திற்கான வரிவிலக்கு அனுமதிக்கப்படுகின்றது. அதாவது சொத்து பரிமாற்ற நாளிலிருந்து ஆறு மாத காலத்திற்குள். நீண்ட கால முதலீடாக 3 வருட காலத்திற்கு குறிப்பிட்ட நிதியில் அதிகபட்ச தொகை ரூ .50 லட்சம் வரை முதலீடு செய்யப்படவேண்டும். இவ்வாறான முதலீட்டு தொகையை 3 ஆண்டுகளுக்கு முன்பு திரும்பப் பெறப்பட்டால், தொகை திரும்பப் பெறப்பட்ட ஆண்டிலிருந்து வரிவிலக்கு ரத்து செய்யப்படும். 3.தகுதிவாய்ந்த Startupநிறுவனத்தினுடைய நியாயமான சந்தை மதிப்புக்கு மேல் உள்ள முதலீடுகளுக்கு அரசாங்கம் வரிவிலக்கு அளிக்கின்றது. இத்தகைய முதலீடுகளில் இந்திய குடியுரிமை ஏஞ்சல் முதலீட்டாளர்கள், குடும்பம் அல்லது துணிகர மூலதன நிதிகளாக பதிவு செய்யப்படாதசெய்த முதலீடுகள் ஆகியவை அடங்கும். மேலும், நியாயமான சந்தை மதிப்புக்கு மேல் இன்குபேட்டர்கள் செய்யும் முதலீடுகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. 4மீச்சிறு, சிறு , நடுத்தர நிறுவனச் சட்டம், 2006 இன் கீழ் வரையறுக்கப் பட்டுள்ளபடி சிறு அல்லது நடுத்தர நிறுவனங்களில் நீண்ட கால மூலதன இலாபங்கள் முதலீடு செய்யப்பட்டால், அதாவது 54GB இன்கீழ் குடியிருப்பு சொத்து ஒன்றின் விற்பனை மீதான நீண்டகால மூலதன இலாபங்களுக்கான தொகையை தகுதியான start-ups நிறுவனங்களின் 50% அல்லது அதற்கு மேற்பட்ட பங்குகள்வரை முதலீடு செய்தால் வரிவிலக்கு அனுமதிக்கப்படுகின்றது., , , அத்தகைய பங்குகள் 5ஆண்டிற்குள் விற்கப்படவோ அல்லது மாற்றவோ கூடாது 5.ஆண்டின் கடைசி நாளில் வாக்களிக்கும் சக்தியைக் கொண்ட பங்குதாரரின் உரிமையில் மாற்றம் ஏற்பட்டால் அதன்வாயிலாக ஏற்படும் இழப்புகளையும் மூலதன இலாபங்களையும் முன்னோக்கி கொண்டு சென்று சரிசெய்து(Set Off Carry forworded) கொள்ள அனுமதிக்கப்படுகின்றது. இதற்காக தகுதிவாய்ந்த start-ups நிறுவனங்களில் 51 சதவீத வாக்களிக்கும் உரிமைகள் மாறாமல் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.

சனி, 20 ஜூன், 2020

களிமண் பந்துகளும் அவற்றில் மறைக்கப்பட்ட புதையலும்


ஒரு நாள் நபரொருவர் கடலோரத்திலிருந்த குகைகளில் ஏதேனும் பொருட்கள் இருக்கின்றதாஅல்லது புதையல் ஏதேனும் கிடைக்குமாவென ஆய்வுசெய்து கொண்டிருந்தார். ஒரு குகையில் மட்டும் உடைக்கமுடியாத கடினமான களிமண் பந்துகள் ஒரு பையிலிருப்பதை அவர் கண்டுபிடித்தார். யாரோ களிமண்ணை உருட்டி பந்துகளை போன்று செய்தபின் அவற்றை உடைக்கமுடியாத அளவிற்கு வெயிலில் காய வைத்து கெட்டிபடுத்தி பையில் ஒன்றாக சேர்த்து இந்த குகையில் வைத்து விட்டு சென்று விட்டதாகத் தெரிகிறது என தமக்குள் எண்ணினார் . நாம் புதையல் எதாவது கிடைக்கும் அதனை கொண்டு பெரிய பணக்காரணாக ஆகலாம் என்ற ஆவலோடு இந்த குகைக்குள் வந்து ஆய்வு செய்தால் நமக்கு எதுவுமே கிடைக்காமல் சதி செய்து விட்டனரே கடைசியில் வெறும் களிமண்ணாலான இந்த பந்துகள் மட்டும் தான் நமக்கு கிடைத்தன சே என்ற வெறுப்புடன் அவர் குகையிலிருந்து அந்த பையை மட்டும் வெளியே எடுத்துகொண்டுவந்தார். மேலும் அவர் கடற்கரையில் உலாவும்போது, ஒன்றும் இல்லாத களிமண் பந்துகளை வீட்டிற்கு எடுத்து கொண்டு சென்று என்னசெய்வது என்ற மனச்சோர்வினால் அவற்றை ஒவ்வொன்றாக கடலுக்குள் வீசி எறிந்து கொண்டேவந்தார். இந்நிலையில் களிமண்ணாலான இந்த பந்துகளில் என்னதான் இருக்கின்றது பார்த்திடுவோமே என சிறு ஆர்வத்துடன் ஒரு களிமண் பந்தை மட்டும் மிககடிணமாக முயன்று உடைத்து பார்த்தபோது அதில் அழகான, விலைமதிப்பற்ற வைரகல் ஒன்று இருப்பதை கண்டதும் அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது ஆஹா பரவாயில்லையே நமக்கு புதையல் கிடைத்துவிட்டதே என மகிழ்ந்தார் மேலும் இதனால் உற்சாகமடைந்த அம்மனிதன் கடலில் எறியாமல் மிகுதி கைவசம் இருந்த ஒன்றிரண்டு களிமண்பந்துகளை உடைத்து பார்த்தபோதும் அவைகளிலும் விலைமதிப்பற்ற வைரகற்கள் இருப்பதை கண்டார் அடடா பையிலிருந்த ஏராளமான களிமண் பந்துகளிலும் மறைத்து வைக்கப்பட்ட கோடிக்கணக்கான மதிப்புகொண்ட வைரகற்கள் இருந்திருக்குமே அவைகள் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாமல் போய்விட்டது என்ற பழமொழிக்கு ஏற்ப இவ்வளவு பணம் சம்பாதிப்பதற்கான ஒரு பொன்னான வாய்ப்பை இழந்துவிடுவதற்காக. அவ்வாறான களிமண் பந்துகளை மறைத்து வைத்திருந்த புதையலுடன் , நாமே கடலில் விட்டெறிந்துவிட்டோமே என மிகமனவருத்தத்துடன் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நின்றுவி்ட்டார் அந்த மனிதன் களிமண் பந்துகளுக்குள் இருக்கும் உண்மையான புதையல் வெளியில் தெரியாததால் அதனை தவறாக கணித்து இழந்ததைபோன்று இந்த புவியில் வாழும் நாமும் நமக்கு கிடைக்கின்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெளிதோற்றத்தை மட்டும் கண்டுமயங்கி தயங்கி அவற்றிலிருந்து அரும்பெரும் செல்வம் எதுவும் கிடைக்காது என தவறாக கணக்கிட்டு அவ்வாறான வாய்ப்புகளை நாமே தவறவிடுகின்றோம் ஆயினும் அவைகளை இழந்தபின்னரே அவற்றிற்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள உண்மையான புதையலைக் கண்டுபிடிக்க எங்களுக்கு நேரம் இல்லையே நாங்கள் என்னசெய்வது என நமக்கான அருமையான வாய்ப்பினை நாமே இழக்க காரணமாகிவிடுகின்றோம் என்பதே மிக எதார்த்தமான உண்மை நிலவரமாகும் இந்த புவியில் வாழ்கின்ற நாம் எல்லோரும் தனித்துவமானவர் கள் . நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு புதையல் இருக்கிறது. அந்தந்த நபர் பார்க்கும் விதத்தில் மட்டுமே அந்த புதையலை காணமுடியும் கண்டுபிடித்திடமுடியும் , களிமண் பந்தை புத்திசாலித்தனமாக உடைத்து பார்த்திடும்போது மட்டுமே அதற்குள் இருக்கின்ற வைரகற்கள் பிரகாசிக்கத் துவங்குவதை போன்று நமக்குள் மறைக்கப்பட்ட வைர கற்களை அவை களிமண்போன்று மறைக்கப்பட்டிருப்பதால் விட்டுவிடாமல் முயன்றால் அந்த அதிர்ஷ்டத்தை நாம் இழக்காமல் நாம் வெற்றி பெறுவோம்என்பது திண்ணம் .

வியாழன், 18 ஜூன், 2020

புதிய 2020 ஆண்டில்சசேவ (GST) கீழ் செய்யப்பட்ட முக்கிய மாறுதல்கள்


மத்திய மறைமுகவரி மற்றும் சுங்கவரி வாரியத்தின் சுற்றறிக்கை எண் 75/2019 நாள்26.12.2019 இன் படி 1.01.01.2020 முதல் நமக்கு பொருளை அனுப்பியவர் அல்லது சேவையை வழங்கியோர் GSTR-1 எனும் படிவத்தினை சமர்ப்பிக்க தவறியிருந்தால் பொருள் அல்லது சேவை வழங்கிய பட்டியல் அல்லது வரவுகுறிப்பு தொகையில் 10 சதவிகிதம் மட்டும் ITC எனும் உள்ளீட்டு வரிவரவை எடுத்து கொள்ள முடியும் இதற்குமுன்பு20 சதவிகிதம் மட்டும் ITC அனுமதிக்கப்பட்டது 2. பொருளை அல்லது சேவையை பெறாமலேயே அல்லது இல்லாத கற்பனையான நபரிடமிருந்து பொருளை அல்லது சேவையை பெற்றதாக fraudulently அடிப்படையில் உருவாக்கப்பட்ட பட்டியலின் தொகையானது மின்னனு வரவு பேரேட்டில் வரவு வைக்கப்பட்டதொகையை திரும்ப பெறுவதற்கு அல்லது வரிசெலுத்துவதில் சரிசெய்வதை தொடர்புடைய பகுதி சசேவ(GST) ஆணையருக்கு தடுப்பதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது 3.தொடர்ந்துஇரண்டு மாதங்களில் காலாண்டுகளில் GSTR-1 படிவத்தை சமர்ப்பிக்க தவறியிருந்தால் அந்நிறுவனத்தினரால் தங்களுடைய நிறுவனத்திற்காக E-way Bill எனும் மின்னனுவழிபட்டியலை இணையத்தின் வாயிலாக 11, 1. 2020முதல் உருவாக்கமுடியாது 4.01.04.2020 முதல் ஆண்டு விற்பணை வருமானம் 100 கோடிக்குமேல் உள்ள நிறுவனங்கள் B2B அடிப்படையில் விற்பனைசெய்யப்படும் பொருளிற்கு கண்டிப்பாக E-way Bill எனும் மின்னனுவழிபட்டியலை இணையத்தின் வாயிலாக உருவாக்கி கொண்டுசெல்லும் பொருளுடன் கொண்டு செல்ல வேண்டும் 5. மத்திய மறைமுகவரி மற்றும் சுங்கவரி வாரியத்தின் சுற்றறிக்கை எண் 72/2019 நாள்13.12.2019 இன் படி ஆண்டு விற்பணை வருமானம் 100 கோடிக்குமேல் உள்ள நிறுவனங்கள் B2C அடிப்படையில் விற்பனைசெய்யப்படும் பொருளிற்காக உருவாக்கப்படும் விற்பணை பட்டியலில் QR Code என சுருக்கமாக அழைக்கப்பெறும் விரைவு பதில் குறியீட்டுடன் (Quick Response Code) மட்டுமே 01.04.2020 முதல் விற்பணை பட்டியலில் இடம்பெறவேண்டும் 6.01.04.2020 முதல் தானியங்கியாக சசேவ(GST) நடைமுறையில் அறிக்கைகள் உருவாகிடவும்சசேவ(GST) நடைமுறையை எளிமைபடுத்திடவும் மத்திய மறைமுகவரி மற்றும் சுங்கவரி வாரியமானது GST FORM ANX- 1, GST FORM ANX- 2 ஆகிய இருபடிவங்களை அறிமுகப்படுத்தியுள்ளது 7. நிறுவனங்கள் சசேவ (GST) துறையில் தங்களுடைய குறைகளை களைய கோரும் அனைத்து கடித போக்குவரத்துகளிலும் இணையத்தின் வாயிலாக உருவாக்கப்படும் DIN என சுருக்கமாக அழைக்கப்படும்ஆவணசுட்டிஎண் (Document Identification Number) மட்டுமேகுறிப்பிட வேண்டும் 8 மேலும் TRAN-1 & TRAN-2ஆகிய படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 31.03 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

திங்கள், 15 ஜூன், 2020

நிறுவனங்களின் விவகாரங்கள் துறை அமைச்சகத்திலிருந்து (MCA) வெளியிடபட்டுள்ள அனைத்துதளர்வுஅறிவிப்புகளின் சுருக்கம்


தற்போதைய COVID-19 இன் நிகழ்வுகளின்போது நிறுவனங்களின் விவகாரங்கள் துறை அமைச்சகத்திலிருந்து (MCA) வெளியிடபட்டுள்ள அனைத்துதளர்வுஅறிவிப்புகளின் சுருக்கம் 1. புதிய நிறுவனங்களின் தொடக்கத் திட்டம்(CFSS): நிறுவனங்களும் அல்லது LLPs என சுருக்கமாக அழைக்கபெறும் வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுமங்களும் தற்போதைய COVID-19 இன் நிகழ்வுகளினால் எந்தவொரு விவரஅறிக்கைகள், அறிக்கைகள், ஆவணங்கள் போன்றவற்றை MCA இணையதளத்தில் கால தாமதமாக சமர்ப்பிக்கும்போது அதற்கான தாமத/ கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு 2020 ஏப்ரல் 1 முதல் 2020 செப்டம்பர் 30 வரை தடை விதிக்கப்படுகின்றது. . Moratorium எனும் சமர்ப்பிக்கும் காலத்தை ஒத்திபோடுவதால் ஏற்படும் நன்மையானது அவ்வாறு சமர்ப்பிப்பதற்கான தேதிக்குபதிலாக காலதாமதமாக இந்த காலகட்டத்தில் சமர்ப்பிக்கவிருக்கும் படிவங்கள், விவரஅறிக்கைகள் மட்டுமல்லாமல், இந்த காலத்திற்கு முன்பே சமர்ப்பிக்க தவறியுள்ளவர்களுக்கும் கிடைக்கும். மேலும் இந்த தளர்வின் பயன் ஏற்கனவேகாலதாமதமாகசமர்ப்பித்த நிறுவனங்களுக்கும் கிடைக்கும் இது இணக்கச் சுமையை மட்டுமல்ல, நிதிச் சுமையைகுறைக்கவும் வழிவகுக்கும் 2. இரண்டு இயக்குநர்களின்குழுக் கூட்டங்களுக்கு இடையில் இடைவெளியை நீட்டித்தல்: நிறுவனங்களின் சட்டம் 2013 இன் படி, எந்தவொரு நிறுவனமும் ஒவ்வொரு ஆண்டும் இயக்குநர்களின் குழுக் கூட்டங்கள் குறைந்தபட்சம் நான்காவது(4) நடத்த வேண்டும், அவ்வாறு நடத்தபெறும் தொடர்ச்சியான எந்தஇரண்டு இயக்கு நர்களின் குழுக்கூட்டங்களுக்கு இடையில் அதிகபட்சம் 120 நாட்கள் இடைவெளிக்குமிகாமல் நடத்திட வேண்டும் என்று குறிப்பிடும் கால இடைவெளியை மேலும் 60 நாட்கள் நீட்டித்துள்ளது, அதாவது இதன் மூலம் தொடர்ச்சியான இரண்டு இயக்குநர்களின் குழுக் கூட்டங்களுக்கு இடையிலான இடைவெளி வரம்பை அதிகபட்சமாக 120 நாட்கள் என்பதற்கு பதிலாக 60 நாட்கள் நீட்டித்து 180 நாட்களாக உயர்த்தியுள்ளது. இந்த ஒரு முறை தளர்வானது அடுத்த இரண்டு காலாண்டுகளுக்கு அதாவது செப்டம்பர் 30, 2020 வரை கிடைக்கிறது. இதன் விளைவாகசமூக இடைவெளியை பின்பற்றுவதற்காக COVID 19 தொற்றுநோய்களின் போது குழு கூட்டங்களை நடத்துவதற்கான தேவையை குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. 3. கானொளிகாட்சிமாநாடு அல்லது பிற பேச்சொலிகாட்சி வழிமுறைகள் மூலம் EGM என சுருக்கமாக அழைக்கபெறும் வழக்கமற்ற அசாதாரான பொதுப்பேரவைகூட்டம் நடத்துதல் : கானொளிகாட்சிமாநாடு எனும் வசதியின் மூலம் ஆண்டு பொதுப்பேரவைக் கூட்டங்களை நடத்தும் முறையை நிறுவனங்களின் விவகாரங்களின்துறை அமைச்சகமானது(MCA) தெளிவுபடுத்தியுள்ளது. இச்சுற்றறிக்கையில் பொதுப்பேரவையில்( GM) தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான செயல்கள், அவை “அவசர நடவடிக்கை (urgent nature)”. மட்டும் இந்த சுற்றறிக்கைபொருந்தும் மேலும்இது அனைத்து வகை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இது அனைத்து வகையான அசாதாரண பொதுக் கூட்டத்துடனும், வருடாந்திர பொதுக் கூட்டத்துடனும் தொடர்புடையது. இந்த சுற்றறிக்கையின்படி, நிறுவனம் சாதாரண வணிக நடவடிக்கை களுக்கான தீர்மானத்தை மட்டும் நிறைவேற்ற முடியாது. அதனோடு இந்த சாதாரண வணிகநட வடிக்கை களைப் பற்றி விவாதிக்க முடியாது, மேலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 60 நாட்களுக்குள் MGT-14 எனும் படிவத்தை சமர்ப்பிக்கவேண்டும், அந்த படிவத்துடன் சுற்றறிக்கையும் விதிகளும் மிகச்சரியாக பின்பற்றப்பட்டுள்ளன என்ற அறிவிப்பினையும்சேர்த்து குறிப்பிடவேண்டும். 4. சுதந்திர இயக்குநர்களின் குழுக்கூட்டங்கள்: நிறுவனங்களின் சட்டம் 2013 இன் அட்டவணை IVஇல்,எந்தவொரு நிறுவனத்திலும் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் சுதந்திர இயக்குநர்களின் (independent directors (ID)) குழுக்கூட்டத்தினை ஒன்றாவது மற்ற சுதந்திரமற்ற இயக்குநர்கள் நிருவாக உறுப்பினர்கள் ஆகியோர்களின் வருகை இல்லாமல் நடத்த வேண்டும் என்று கட்டளையிடுகிறது. ஒவ்வொரு ஆண்டிலும் அவ்வாறான சுதந்திர இயக்குநர்களின் குழுக் (ID) கூட்டம் ஒன்றாவது கண்டிப்பாக நடத்தவேண்டும் அவ்வாறான குழுக்கூட்டத்தில் (i) சுதந்திரமற்ற இயக்குநர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இயக்குநர்கள் குழுவின் செயல்திறனை மதிப்பாய்வு செய்தல்; (ii) நிர்வாகஇயக்குநர்கள் நிர்வாகமற்ற இயக்குநர்கள் ஆகியேர்களின் கருத்துக்களை கணக்கில் எடுத்துக்கொண்டு தலைவரின் செயல்திறனை மதிப்பாய்வு செய்தல்; (iii) நிர்வாகத்திற்கும் இயக்குநர்கள் குழுவிற்கும் இடையிலான தரம், அளவு தகவல்களின் காலத்தை மதிப்பிடுதல், ஆகிய பணிகளை செயற்படுத்திடவேண்டும் பொதுவாக அத்தகைய சுதந்திர இயக்குநர்களின் கூட்டங்களை நிதியாண்டின் இறுதியில் நடத்துவது வழக்கம். தற்போதைய COVID 19 தொற்றுநோய்களின் போது சமூக இடைவெளி பின்பற்றவேண்டியுள்ளதால் இந்திய அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட சமூக இடைவெளிகள்,சுதந்திர இயக்குநர்களின்(ID) குழுகூட்டத்தினை பின்பற்றி நடத்த முடியாது 31 மார்ச் 2020 க்கு முன்னர் இதுபோன்ற கூட்டங்களை உண்மையாக நடத்த வேண்டும். இந்த சூழ்நிலைகளில், MCA ஆனது நிறுவனங்கள் அவ்வாறு குறைந்தபட்சம் நிதியாண்டு ஒன்றிற்கு ஒரு சுதந்திர இயக்குநர்களின்(ID) குழுக் கூட்டத்தையாவது நடத்த முடியாது என்று தெளிவுபடுத்தியுள்ளது 2019-20 நிதியாண்டு,MCA இதை சட்டப்பூர்வ இணக்கமாக பார்க்காது விதிகள். அவ்வாறு இருப்பினும், MCAஆனது இந்த தளர்வின் அடிப்படையில் , கூட்டத்தை நடத்த வேண்டாம் என்றும் அதற்குபதிலாக சுதந்திர இயக்குநர்களின் (ID)குழுக்கள் தங்களுடைய கருத்துக்களை கைபேசி, மின்னஞ்சல் அல்லது வேறு எந்த தகவல்தொடர்பு முறையினாலும் தங்களுக்குள்பகிரந்து கொள்ளுமாறு செய்யலாம்என்றும் அதுவும் வழக்கம்போன்ற சுதந்திர இயக்குநர்களின் (ID)குழுக்கூட்டம் நடத்தியது போன்று பொருந்தும் என ஊக்குவித்துள்ளது . இந்த கானொளிமாநாடு சந்திப்பு வசதி அல்லது பிற பேச்சொலி காட்சி வழிமுறைகள் மூலம் சுதந்திர இயக்குநர்களின் குழுக் (ID) கூட்டத்தை நடத்தி . அதில் சுதந்திர இயக்குநர்களின் குழுக் (ID) களின் கூட்ட அழைப்பு அல்லது மின்னஞ்சல்கள் மூலம் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறுள் அனுமதித்துள்ளது 5. தணிக்கையாளர் அறிக்கை: நிறுவனங்களின் (தணிக்கையாளர் அறிக்கை) ஆணை, 2020 (CARO 2020)இன்படி நிறுவனங்களின் சட்டரீதியான தணிக்கைகளின் புதிய வடிவத்தை 2020 பிப்ரவரி 25 அன்று MCAஆனது அறிவித்துள்ளது. ,அதன்படி நிறுவனங்களின் (தணிக்கையாளர் அறிக்கை) ஆணை 2016. CARO ஏப்ரல் 1, 2019 அன்று அல்லது அதற்குப் பிறகு தொடங்கும் அனைத்து சட்டரீதியான தணிக்கைகளுக்கும் (2020) பொருந்தும்என்றும் இது 2019-20 நிதியாண்டுடன் தொடர்புடையது. என்றும் மேலும் CARO 2020 இல் முந்தைய ஆணைக்கு பதிலாக 2020-21 நிதியாண்டுக்கு MCA இப்போது ஒத்திவைத்துள்ளது. 6. வைப்புத்தொகை விதிகள்: வைப்புத்தொகையை ஏற்றுக்கொள்வதன் மூலம் கடன் வாங்கும் அதிகாரங்களைப் பயன்படுத்துவது இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கு மிகவும் பொதுவானதாகும் , இது நிறுவனங்கள் (வைப்புத்தொகையை ஏற்றுக்கொள்வது) விதிகள், 2014 இன் கீழ் இணங்குவதற்கு உட்பட்டது. வைப்புத்தொகைகளை நிலுவையில் வைத்துள்ள ஒரு நிறுவனம்அடுத்த நிதியாண்டில் முதிர்ச்சியடையும் அதன் வைப்புத்தொகையின் குறைந்தபட்சம் 20%வைப்புதொகையை தனியாக ஒதுக்கி வைத்திருக்க வேண்டும் , ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 30 அல்லது அதற்கு முன்னதாக ஒரு தனியானநிதியை வைப்புத் திருப்பிச் செலுத்துவதற்கு ஏதுவாக வைத்திருக்கவேண்டும் அதாவது 2020-21 நிதியாண்டில் . முதிர்ச்சி யடைந்த வைப்புத்தொகைகளுக்கு, அவ்வைப்புத் தொகைகளை திருப்பிச் செலுத்தும் கையிருப்பு வைப்பு தொகையாக செலுத்துவதற்கான தேதியை MCAஆனது 2020 ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது. 7. புதியதாக வணிகத்தைத் தொடங்குவதற்கான அறிவிப்பு: புதியதாகபதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள், தங்களுடைய புதிய வணிகத்தைத் தொடங்குவதற்கான அறிவிப்பை அவை தங்களுடைய வணிக நடவடிக்கைகளை துவங்கிய 6 மாதங்களுக்குள் அதற்கானஅறிவிப்பை (படிவம் 20-A) சமர்ப்பிக்க வேண்டும் . இருப்பினும், புதிதாக பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் தற்போதைய COVID 19 தொற்றுநோய்களின் போது எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு, MCA அத்தகைய அறிவிப்பிற்கான காலக்கெடுவை துவங்கிய தேதியிலிருந்து 6 மாதங்களிலிருந்து 1 ஆண்டா க நீட்டித்துள்ளது. 8. இயக்குநரின் குடியிருப்பு நிலை: நிறுவனங்களின் சட்டம் 2013 இன் கீழ், ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 182 நாட்கள் இந்தியாவில் தங்கியிருக்கும் இயக்குநர் ஒருவராவது இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது . பல்வேறு நாடுகளில் (இந்தியா உட்பட) COVID 19 தொற்றுநோய்களின் போது விதித்துள்ள நீடித்த பயணத் தடை காரணமாக, 2019-20 நிதியாண்டில் இந்தியாவில் குறைந்தபட்சம் 182 நாட்கள் தங்குவதற்கு 'இந்திய குடிமகனாகவாழும்' இயக்குநர்களால் இணங்க முடியாமல் போகலாம். இத்தகைய சிரமங்களை உணர்ந்து, 2019-20 நிதியாண்டிற்கான இணக்கமற்றதான செயலில் குறைந்தபட்ச இந்தியாவில் தங்கியிருப்பதை பூர்த்தி செய்யாதது.குறித்து MCA நடவடிக்கை எதுவும் எடுக்காது 9. மார்ச் 31, 2021 அன்று முதிர்ச்சியடைந்த கடன்பத்திரங்கள்: நிறுவனங்கள் (பங்கு மூலதனம் மற்றும் கடன் பத்திரங்கள்), 2014 இன் விதி 18 (7) இன் படி, அனைத்து நிறுவனங்களும் (அனைத்து இந்திய நிதி நிறுவனங்கள் வங்கி நிறுவனங்கள் ஆகியவை தவிர) குறிப்பிட்ட ஒரு தொகையை முதலீடு செய்யவோ அல்லது கையிருப்பு வைத்திருக்கவோ வேண்டும் ஆண்டின் முதிர்ச்சியடைந்த கடன்பத்திரங்களின் தொகையில் 15% க்கும் குறையாமல், அடுத்த ஆண்டு மார்ச் 31 அன்று முடிவடையும்போது. அத்தகைய தொகை முதலீடுகளின் அல்லது வைப்புகளின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறைகளைப் பயன்படுத்தி முதலீடு செய்துகொள்ளலாம், (அ) எந்தவொரு நாட்டுடைமையாக்கப்ட்ட வங்கியிலும் வைப்புத்தொகையாக , எந்தவொரு கட்டணமும் அல்லது உரிமையும் இல்லாமல்; (ஆ) மத்திய அரசு அல்லது எந்த மாநில அரசின் கணக்கிடப்படாத பத்திரங்களில் வைத்திருக்கலாம் . அத்தகைய வைப்பீடுகள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 30 அல்லது அதற்கு முன்னர் முதலீடுகள் / வைப்புக்களாக செய்யப்பட வேண்டும் மற்றும் மார்ச்சு31 இல் முதிர்ச்சியடைந்த கடன்பத்திரங்களின் மதிப்பில் 15% க்கும் குறைவாக இருக்கக்கூடாது மேலும், அத்தகைய தொகைகள் முதிர்ச்சியடைந்த கடன் பத்திரங்களை மீட்பதைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்த முடியாது. மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் 2020 2021. நிதியாண்டில் முதிர்ச்சியடைந்த கடன் பத்திரங்கள் தொடர்பான இந்த வைப்பு மற்றும் முதலீட்டு இணக்கத்தின் கடைசி தேதியை MCA ஆனது ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது 10. COVID-19 க்கான சமூக பொறுப்புணர்வு நிதிகளின் செலவு: பொருள் எண். (viii) நிறுவனங்கள் தங்களுடைய சமூக பொறுப்புணர்வு கடமைகளை நிறைவேற்றுவதில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை களை விவரிக்கும் நிறுவனங்களின் சட்டம் 2013 இன் அட்டவணை VII இன், இடைநிலை சமூக-பொருளாதார மேம்பாடு மற்றும் நிவாரணத்திற்காக CG அமைத்த எந்தவொரு நிதிக்கும் சமூக பொறுப்புணர்வு செலவு பங்களிப்பை வழங்க அனுமதிக்கிறது. . அதன்படி, PM CARES நிதிக்கு வழங்கப்படும் எந்தவொரு பங்களிப்பும் நிறுவனங்களின் சட்டம் 2013 இன்நிறுவனங்களின் கீழ் சமூக பொறுப்புணர்வு செலவாக தகுதி பெறும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. முதல்வர் நிவாரணம் அல்லது மாநில நிவாரண நிதிக்கான பங்களிப்பு சமூக பொறுப்புணர்வு பொருந்தாது. மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பங்களிப்பு சமூக பொறுப்புணர்வுக்கு தகுதி பெறும். COVID-19 தொடர்பான செயல்பாடுகளுக்கான நிதி செலவு CSR இற்கு பொருந்தாது. ஊரடங்கு காலத்தில் சம்பளம் / ஊதியம் வழங்குவது என்பது சமூக பொறுப்புணர்வு செலவு என ஏற்றுக்கொள்ளக்கூடிய தகுதி பெறாது. ஊரடங்கு காலத்தில் சாதாரண தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் சமூக பொறுப்புணர்வு செலவாக கணக்கிடப்படாது. தற்காலிக / சாதாரண தொழிலாளர்களுக்கு பூரிப்பூதியம் செலுத்துதல் சமூக பொறுப்புணர்வு செலவாக தகுதி பெறும் இது இயக்குநர்களின் குழுவில் வெளிப்படையான அறிவிப்பு செய்வதன் வாயிலாக வும் சட்டரீதியான கணக்காய்வாளரால் முறையாக சான்றளிக்கப்படுவதன் மூலமுமஒரு முறை மட்டும் விதிவிலக்கு அனுமதிக்கப்படுகின்றது 11. DIR-3KYC எனும் படிவத்தை கட்டணமில்லாமல்சமர்ப்பித்தல்: DIR-3KYC / DIR-3KYC WEB ஆகிய படிவங்களை சமர்ப்பிக்காததால் DIN எனும் இயக்குநர்களின் பதிவுஎண் வைத்திருப்பவர்கள் தங்களுடைய பதிவுஎண்கள்(DIN) செயல்படாதவை ('Deactivated') எனக் குறிக்கப்பட்டன மேலும் செயலில் இணக்கமல்லாத ( 'ACTIVE non- compliant') எனக் குறிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் செயல்படும் மின்படிவத்தை(ACTIVE eform ) மீண்டும் சமர்ப்பித்து இணக்கமாக இருக்க ஊக்குவிக்கப்படுகிறது , ஏனெனில் 1 ஏப்ரல் முதல் செப்டம்பர் 30 வரை சமர்ப்பிப்பு கட்டணம் முறையே ரூபாய் 5000/10000 இல்லாமல். DIR-3KYC / DIR-3KYC WEB / ACTIVE படிவங்களை சமர்ப்பித்தல் செய்திடலாம்

வெள்ளி, 12 ஜூன், 2020

தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தில் கானொளி காட்சி மாநாடு நடவடிக்கையின் வாயிலாக பொதுப்பேரவை கூட்டம் நடத்துதல்


தற்போதைய COVID-19 எனும் நச்சுயிரின் அச்சுறுத்தல் காரணமாக நிறுவனங்களின் பங்குதாரர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, நிறுவனங்களின் விவகாரங்கள் துறை அமைச்சகமானது (MCA) 2020 மே 5 ஆம் தேதி கானொளிகாட்சி மாநாடு (VC) அல்லது பிற பேச்சொலி காட்சி வழிமுறைகள் (OAVM). வாயிலாக வருடாந்திர பொதுப்பேரவை கூட்டம் நடத்த அனுமதிப்பதற்காக சுற்றறிக்கை (எண் 20/2020) ஒன்றினை வெளியிட்டுள்ளது. நிறுமங்களின் சட்டம், 2013 ஆனதுஇவ்வாறான VCஇன் மூலம் நிறுவனங்கள் தங்களுடைய வருடாந்திர பொதுப்பேரவைக் கூட்டத்தை நடத்துவதற்கான விதிகளில் அனுமதி எதுவும் வழங்கவில்லை. எனவே, COVID-19 எனும் நச்சுயிரின் பாதிப்பின் காரணமாக எந்தவொரு நிறுவனமும் அவ்வாறான ஆண்டு பொதுப்பேரவை கூட்டத்தை நடத்த முடியாவிட்டால்,அவ்வாறான நிறுவனங்கள் இந்த சுற்றறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட பின்வரும்நடைமுறைகளைப் பின்பற்றி VC / OAVM பயன்முறை மூலம் ஆண்டு பொதுப்பேரவை கூட்டத்தை நடத்த முடியும். நிறுமங்களின் சட்டத்தின் 108 வது பிரிவின் கீழ் மின்-வாக்களிக்கும் வசதியை வழங்க வேண்டிய நிறுவனங்கள், மின்-வாக்களிக்கும் வசதிகளை வழங்கத் தேவையில்லாத நிறுவனங்கள் ஆகிய இரண்டு வகை நிறுவனங்களுக்கும் தங்களுடைய ஆண்டு பொதுப்பேரவை கூட்டங்களை நடத்தும் நடைமுறைகளானவை இரண்டுவகையிலான தனித்தனி நடைமுறைகளாக உள்ளன. இந்த கட்டுரையில், மின்-வாக்களிப்பு வசதிகளை வழங்கத் தேவையில்லாத நிறுவனங்கள் மட்டும் புதிய VC / OAVM பயன்முறை மூலம் கூட்டத்தை நடத்துவதற்கான விதிகளின் விவரங்கள் கூறப்படுகின்றன. அனைத்து தனியார் நிறுவனங்களும் அத்தகைய வசதிகளை வழங்கத் தேவையில்லை. சட்டவிதிமுறைகள்(Provisions): 2020 மே 5 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண் 20/2020 பொருந்தக்கூடிய பொதுப்பேரவைகூட்டம்: 2020 காலண்டர் ஆண்டில் நடத்தபெறவேண்டிய ஆண்டு பொதுப்பேரவைகூட்டத்திற்கு( AGM)மட்டும் இந்த புதிய வழிமுறைகளின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு: ஆண்டு பொதுப்பேரவை கூட்டம் நடத்துவதற்கான நிபந்தனைகள் நிறுவனமானது அதனுடைய உறுப்பினர் பதிவேட்டில் பதிவுசெய்திருக்கும், உறுப்பினர்களுள் தங்களுடைய பங்குத்தொகைஅனைத்தையும் செலுத்திய கூட்டத்தில் வாக்களிக்கும் உரிமையை பெற்றுள்ள நிறுவனத்தின் பங்கு மூலதனத்தில் 75% க்கும் குறையாத மொத்த உறுப்பினர்களில் குறைந்தது பாதி உறுப்பினர்களின் மின்னஞ்சல் முகவரிகளை இதற்காக பயன்டுத்திக் கொள்ளும். மேலும் நிறுவனமானது அனைத்து பங்குதாரர்களின் மின்னஞ்சல் முகவரிகளையும் பதிவு செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுத்திடவேண்டும் அவ்வாண்டு பொதுப்பேரவை கூட்டங்களில், சாதாரண வணிக நடவடிக்கைகள் மட்டும் பரிசீலிக்கப்படும் மேலும் இயக்குநர்களின் குழுவால் தவிர்க்க முடியாததாகக் கருதப்படும் சிறப்பு வணிகநடவடிக்கைகளின் பரிமாற்றங்களை மட்டும் இப்பேரவைகூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துகொள்ளலாம் மின்னனுவழங்குதல் சேவைகளி ன்(Electronic Clearing Services )அல்லது வேறு வழிகளின் மூலம் உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பங்குஈவுத்தொகையைப் பெறுவதற்கான ஆணையை வழங்குவதற்கு நிறுவனங்கள் போதுமான ஏற்பாடுகளைச் செய்திடவேண்டும். ஆண்டு பொதுப்பேரவை கூட்டத்தின் நடவடிக்கைகளை பதிவுசெய்தலும் கூட்டநடத்துவதற்கான காலமும் ஆண்டு பொதுப்பேரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்அனைத்தும் அதற்கான பதிவேடுகளில் கண்டிப்பாக பதிவு செய்யப்பட்டு பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட வேண்டும். பொதுப்பேரவை கூட்டத்தினை நடத்துகின்ற காலமானது அந்த பொதுப்பேரவை கூட்டத்தில் அனைத்து பங்குதாரர்களும் கலந்து கொள்வதற்கு வசதியாக இருக்க வேண்டும் ஆண்டு பொதுப்பேரவைகூட்டநடத்துவதற்கான வரம்பு ஆண்டு பொதுப்பேரவை கூட்டத்தில் குறைந்தது 500 உறுப்பினர்களோஅல்லது மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் சமமான அளவு உறுப்பினர்களோ இவற்றில் எது குறைவோ ( தனியார் நிறுவனங்களுக்கு அதிகபட்சம் 200 உறுப்பினர்கள் ஆகும்) முதலில் வருபவர்கள் மட்டும் முதலில் அனுமதிக்கப் படுவார்கள் எனும் வரிசை முன்னுரிமையின் அடிப்படையில் பங்கேற்க அனுமதிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். இந்த முதலில் வருபவர்கள் முதலில் அனுமதித்தல் என்ற வரிசை முன்னுரிமை அடிப்படையானது மொத்த உறுப்பினர்களின் பங்குதொகையில் 2% க்கும் அதிகமாக வைத்துள்ள பங்குதாரர்கள் ,நிறுவனத்தினை முதன்முதலில் நிறுவனத்தின் செயலை துவக்குபவர்கள்(promoters), நிறுவன முதலீட்டாளர்கள், இயக்குநர்கள்,முதன்மை நிருவாக அலுவலர்கள்( KMP), தணிக்கையாளர்கள் ஆகியோர்களுக்கு பொருந்தாது, மேலும் உறுப்பினர்களால் தனக்கு பதிலாக வேறொருவரைகூட்டத்தில் கலந்து கொள்வதற்கான பதிலாள் ( proxy) நியமனம் அனுமதிக்கப்படாது ஆண்டு பொதுப்பேரவைகூட்டத்தின் தலைவர் நியமனம் குறித்து நிறுவனத்தின் விதிகள் எதுவும் பரிந்துரைக்கப்படவில்லை எனில் கூட்டத்தில் கலந்துகொள்ளும் எந்தவொரு நபரும் தலைவராக நியமிக்கப்படுவார்.ஆண்டு பொதுப்பேரவை கூட்டத்தில் 50 க்கும் குறைவான உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தால், நிறுவனத்தின் விதிகள் வேறுவிதமாக பரிந்துரைக்கப்படவில்லையெனில்,நிறுமங்களின் சட்டத்தின் 104 வது பிரிவின்படி கலந்துகொள்ளும் உறுப்பினர்கள் தங்களுடைய கைகளைஉயர்த்துதல் அல்லது கருத்துக் கணிப்பு ஆகிய நடைமுறை மூலம் தலைவர் நியமிக்கப்படுவார். மற்ற எல்லா நிகழ்வுகளிலும், தலைவர் ஒரு கருத்துக் கணிப்பால் மட்டும் நியமிக்கப்படுவார் ஆண்டு பொதுப்பேரவை கூட்டத்திற்கு குறைந்த பட்ச உறுப்பினர்கள் கலந்து கொள்வது தவிரஇதர கட்டாய வருகை: ஆண்டு பொதுப்பேரவை கூட்டத்தில்குறைந்தபட்சம் ஒரு சுதந்திரமான இயக்குநராவது (நிறுவனத்தில்நியமனம் செய்யப்பட்டிருந்தால்) கலந்து கொள்ளவேண்டும் நிறுவனத்தின் தணிக்கையாளர் அல்லது ஒரு தணிக்கையாளராக இருக்க தகுதியுடையஅவரது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி,கலந்து கொள்ளவேண்டும் ஆண்டு பொதுப்பேரவை கூட்டத்திற்கான அழைப்புஅறிவிப்பு ஆண்டு பொதுப்பேரவை கூட்டத்திற்கான அழைப்புஅறிவிப்பு சுற்றறிக்கையில் வழங்கப்பட்ட வரச்சட்டமானது எவ்வாறு பயன்பாட்டிற்குக் கிடைக்கும் என்பதையும், பொதுப்பேரவை கூட்டத்தினை எவ்வாறு அணுகுவது மற்றும் பங்கேற்பது என்பது பற்றிய தெளிவான வழிமுறைகளைக் கொண்டிருப் பதையும் அறிவிப்பு வெளிப்படுத்தவேண்டு ம். கூட்டத்திற்கான அழைப்பு அறிவிப்பானது நிறுவனத்தின் அனுமதிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியை வழங்குவதன் மூலம், எந்தவொரு தீர்மானத்தின் மீதும் பொதுப்பேரவை கூட்டத்தின் போது ஒரு வாக்கெடுப்பு எடுக்கப்படும்போது உறுப்பினர்கள் தங்களுடைய வாக்குகளை தெரிவிக்க முடியும். மேலும் கூட்டத்திற்கு முன்பாக அல்லது இதற்கானதொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் உதவி தேவைப்படும் பங்குதாரர்களுக்கான உதவி எண்(தொழில்நுட்ப வழங்குநர் அல்லது வேறுநபர்) அறிவிப்பில் கொண்டிருக்க வேண்டும். ஆண்டு பொதுப்பேரவை கூட்டத்தில் வாக்களிப்பு: கூட்டத்தில் 50 க்கும் குறைவான உறுப்பினர்கள் கலந்து கொண்டால், எந்தவொரு உறுப்பினரும் வாக்கெடுப்புக்கான கோரிக்கை எதையும் முன்வைக்கப்படாவிட்டால், கைகளை உயர்த்துவதன்வாயிலாக வாக்களிப்பது குறித்து தலைவர் முடிவு செய்யலாம்.ஒரு வாக்கெடுப்பு கோரப்பட்டால், உறுப்பினர்கள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரி வாயிலாக மின்னஞ்சல்களை அனுப்புவதன் மூலம் மட்டுமே தீர்மானத்தில் வாக்களிக்க வேண்டும், அவை கூட்டஅறிவிப்பில் விநியோகிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்பப்பட்டு நிறுவனத்தில் பதிவு செய்யப்படவேண்டும். பொதுப்பேரவைகூட்ட அறிக்கையின் தேவை இந்த பொறிமுறையின்படி நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் பொதுப்பேரவை கூட்டம் நடந்த 60 நாட்களுக்குள் நிறுவன பதிவாளரிடம் (ROC) சமர்ப்பிக்கப்படவேண்டும், அதில் சட்டத்தின் பிற விதிமுறைகளும் விதிகளும் முறையாக இணக்கமாக செயல்டுத்துப்பட்டுள்ளன என்பதை உறுதிபடுத்திட வேண்டும் இதர செயல்கள்: பொதுப்பேரவைக் கூட்டங்கள் தொடர்பான வெளியீடுகளுடன் தொடர்புடைய , வெளியீடு செய்தல், உறுப்பினர்களால் ஆய்வு செய்வது தொடர்பான ஆவணங்கள் போன்றவை சட்டத்தில் வழங்கப்பட்டவை , நிறுவனத்தின் AOAஎனும் விதிமுறைகள் ஆகியஅனைத்து இணக்கங்களும் மின்னணு முறை மூலம் செய்யப்படுகின்றன என்பதை நிறுவனங்கள் உறுதி செய்யவேண்டும். இந்த பயன்முறையின் வாயிலாக கூட்டத்தில் கலந்து கொண்ட பங்குதாரர்கள் பொதுப்பேரவை கூட்டத்திற்கான குறைந்தபட்சம் கலந்துகொண்டவர்களாக கருதப்படுவார்கள் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த ,சுற்றறிக்கையில் வழங்கப்பட்ட கட்டமைப்பிற்கு ஏற்ப தங்களுடைய ஆண்டு பொதுப்பேரவை கூட்டம் ( AGM) நடத்த முடியாத நிறுவனங்கள், நிறுமங்களின் சட்டத்தின் 96 வது பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட பதிவாளருக்கு ஆண்டு பொதுப்பேரவை கூட்டம் (AGM) தள்ளிவைப்பதற்கான விண்ணப்பத்தை சமர்த்திடுமாறு அறிவுறுத்தப்படுகின்றன. ஆண்டு பொதுப்பேரவைகூட்டம் நடத்திடும்போதான நடைமுறை சவால் இந்த சுற்றறிக்கையின் படி நிறுவனங்களின் பதிவாளரிடம்(RoC) சமர்ப்பிக்கபடவேண்டிய தீர்மானங்கள் மின்-படிவம் MGT -14 அல்லது GNL -1 அல்லது GNL -2 இல் சமர்ப்பிக்கப்பட வேண்டுமா அல்லது வேறு எந்த படிவத்தில் தெரிவிக்கப்பட வேண்டும் என எந்தவித பரிந்துரையும் செய்யப்படவில்லை. . பொதுவாக படிவம்எண் MGT -14 இல் சமர்ப்பித்தல் சிறந்த தேர்வாக இருக்கலாம், ஏனெனில் இந்த படிவம் பல்வேறு தீர்மானங்களை சமர்ப்பித்திட பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், தற்போது இந்த சுற்றறிக்கையில் இது குறித்து குறிப்பிட்ட அறிவுறுத்தல்கள் எதுவும் இல்லை இந்த சுற்றறிக்கையில் பதிலாள் இவ்வாறான கூட்டத்தில் கலந்துகொள்வதைகட்டுப்படுத்துகிறது. ஆயினஉம் தொலைதூர இடங்களில் இருக்கும் மின்னணு பயன்முறையை அணுக முடியாத பங்குதாரர்கள், இவ்வாறான கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான அவர்களின் உரிமைகள் தடைசெய்யப்படுகின்றன. 50 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தால் ஒரு வாக்கெடுப்பு மூலம் கூட்டம் நடத்தப்பட வேண்டும். எனும் வாக்களிக்கும் முறை இந்த சுற்றறிக்கை முக்கியமானதாகும் . , முடிவுரை: நாட்டில் நிலவும் COVID-19 தொற்றுநோயின் தற்போதைய சூழ்நிலைகளின் பின்னணியில், MCAஆனது நிறுவனங்களின் வருடாந்திரபொதுப்பேரவைகூட்டத்தை நடத்த நிறுவனத்திற்கு தளர்வு அளித்துள்ளது மின்னணு முறையில் சந்திப்பு. VC அல்லது OAVM பயன்முறை மூலம் உறுப்பினர்களை சந்திப்பதற்கு அனுமதிக்க எந்தவொரு குறிப்பிட்ட ஏற்பாடுகளையும் சட்டம் வழங்காததால் இந்த தளர்வு ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கை மின்னனு இந்தியா எனும் கருத்தமைவை ஊக்குவிப்பதற்கான வழியைக் கொடுக்கும், மேலும் தொற்றுநோயால் ஏற்படும் கடுமையான இடையூறுகளுக்கு முகங்கொடுத்து ஒருசில அவசர முடிவுகளை எடுக்கவேண்டிய நிறுவனங்களுக்கு இந்த சுற்றறிக்கை உதவக்கூடும். இந்த தற்காலிக நடவடிக்கை வரவிருக்கும் காலங்களில் மெய்நிகர் பொதுக் கூட்டங்களுக்கான கதவைத் திறக்கலாம்.

செவ்வாய், 9 ஜூன், 2020

FSSAI இன் கீழ் உணவகதொழிலை பதிவுசெய்தல்


FSSAI என்பது இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தை( Food Safety and Standards Authority of India) குறிக்கின்றது, இது இந்தியாவில் உணவு வணிகத்தை கண்காணிக்கவும் நிருவகிக்கவும் ஆன பொறுப்பினை வகிக்கும் ஒரு ஆணையமாகும். இந்தியாவில் அனைவராலும் நுகரப்படுகின்ற உணவினை கையாளுகின்ற உணவகமானது முக்கியமான வளர்ந்து வரும் தொழிலாகும், நம்மனைவரின் உடல் ஆரோக்கியமானது இந்த உணவினை பொறுத்தேஅமைகின்றது, அதனால்தான் இந்தியாவில் உணவகத் தொழிலை கட்டுபடுத்தி ஒழுங்குபடுத்துவதற்காக தற்போது FSSAI எனும் கட்டுப்பாட்டாளரை நிறுவுகை செய்யப்பட்டுள்ளது இந்தியாவில் உணவு வணிக இயக்குபவர்களை (FBO) பதிவுசெய்து உரிமம் வழங்குவதற்கான பொறுப்பினை இது வகிக்கின்றது மேலும் இந்தியாவில் உணவு வணிகத்தை நடத்துவதற்கான விதி முறைகளையும் ஒழுங்குமுறைகளையும் வரையறுக்கின்றது.அதன் முக்கியமான வசதி வாய்ப்புகளை பின்வருமாறு FSSAI இல் பதிவுசெய்திடுவது அனைத்து உணவு வணிக உரிமையாளர்களுக்கும் மிகவும் முக்கியமானதும் கட்டாயமானதுமான செயலாகும். உணவுப் பொருட்களின் உற்பத்தி, பதப்படுத்துதல், சேமிப்பு விநியோகம் விற்பனை ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு உணவு வணிக இயக்குபரும் கட்டாயமாக FSSAI பதிவு அல்லது உரிமத்தைப் பெற வேண்டும். இந்தபதிவானது 14 இலக்க பதிவு அல்லது உரிம எண் கொண்டதாகும், இது வணிகநிறுவனங்களால் தயாரிக்கப்படும் அனைத்து உணவுப் பொதிகளிலும் அச்சிடப்படுகிறது. FSSAI பதிவு அல்லது உரிமமானது பொதுவாக வணிகத்தின் அளவையும் வளாகஇடத்தையும் அடிப்படையாகக் கொண்டதாகும். FSSAI இல் பதிவானது : அ) மத்திய உரிமம் ஆ) மாநில உரிமம் இ) அடிப்படை பதிவு ஆகிய வகைகளில் ஏதேனும் ஒன்றின் கீழ் வருகின்றது. அ) FSSAI அடிப்படை பதிவினை அல்லது உரிமத்தினை பெறுவதற்கான படிமுறைகள் படிவம் A இன் கீழ் FSSAI இல் பதிவுசெய்திடுமாறு கோரி ஒரு விண்ணப்பத்தை உணவு மற்றும் பாதுகாப்புத் துறைக்கு சமர்ப்பிப்பதன் மூலம் FSSAI இல் பதிவு அல்லது உரிமம் பெறலாம். அவ்வாறு படிவம் A இன் கீழ் FSSAI இல் பதிவுசெய்வதற்காக சமர்ப்பிக்கபடும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படலாம் அல்லது விண்ணப்பத்த நாளிலிருந்து 7 நாட்களுக்குள் உணவு மற்றும் பாதுகாப்புத் துறையால் நிராகரிக்கப்படலாம், அவ்வாறு நிராகரிக்கபடும்போது அதற்கான காரணத்தினை விண்ணப்பதாரருக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட வேண்டும். படிவம் A இன் கீழ் FSSAI இல் பதிவுசெய்திடுமாறு கோரி சமர்ப்பித்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப் பட்டால், விண்ணப்பதாரரின் புகைப்படத்துடன் உணவு மற்றும் பாதுகாப்புத் துறையால் அதற்கான பதிவு எண் ணுடன் பதிவுஅல்லது உரிமச் சான்றிதழ் வழங்கப்படும். உணவு வணிகம் நடைபெறும் இடத்தில் எந்தநேரத்திலும் பதிவுஅல்லது உரிமச் சான்றிதழை மிக முக்கியமாக கோரும்போது காண்பிப்பதற்கு ஏதுவாகFBO ஆனவர் அதனை தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த FSSAI இல் பதிவுஅல்லது உரிமம் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள்பின்வருமாறு அவ்வாறான படிவம் A இன் கீழான விண்ணப்பமானது எந்தவொரு பகுதியும் விடுபட்டுவிடாமல் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு கையொப்பமிடப்பட வேண்டும் FBO இனுடைய புகைப்படமும் அடையாள ஆதாரமும் அதில் இணைக்க்படவேஂண்டும் வணிகத்தை செயல்படுத்திடும் வளாகங்களை வைத்திருப்பதற்கான சான்று (எ.கா. வாடகை ஒப்பந்தம், உரிமையாளர் ஆவணங்கள் போன்றவை) நிறுவனத்தின் விதிகளுக்கான ஆவணங்கள் / கூட்டாண்மை நிறுவனத்தின் பத்திரம் / நிறுவனத்தின் பதிவு சான்றிதழ் போன்றவை. நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்ற அல்லது கையாளப்பட வேண்டிய உணவுப் பொருட்களின் பட்டியல் உணவு பாதுகாப்பு மேலாண்மை அமைப்பு திட்டம் ஆ) மாநில உரிமம் மற்றும் மத்திய உரிமத்தைப் பெறுவதற்கான படிமுறைகள் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பமானது எந்தவொரு பகுதியும் விடுபட்டுவிடாமல் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு கையொப்பமிடப்பட வேண்டும் ஒருவர் கையாளவிரும்பும் உணவுப் பொருட்கள் ஒன்றின் பெயரை குறிப்பிட்டும் அதற்கான அறிவிப்பு ம் இருக்கவேண்டும் . அந்த விண்ணப்பத்துடன் துறைசார் கட்டணம் செலுத்திடவேண்டும் அதன்பின்னர் உணவு ஆய்வாளர்களில் ஒருவர் உணவு வணிக இடம் அல்லது உற்பத்தி செயல்முறைக்கு ஆய்வு நோக்கத்திற்காக வருவார் FSSAI துறையானது இதற்கான ஆவணங்களையும் வணிக இடத்தினையும் பார்வையிட்டு அனைத்து விசாரணைகளையும் பரிசோதனைகளையும் செய்தவுடன், FSSAI உரிமம் வழங்கப்படும். அதனைதொடர்ந்து FSSAI இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட அல்லது உரிமம் பெற்ற எந்தவொரு நபரும் FSS சட்டம், 2006 இன் கீழ் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கடைபிடிக்க வேண்டும். உணவு பாதுகாப்பு அதிகாரி பொதுவாக உணவு வணிக இயக்குபவரின் வசதியை ஆய்வு செய்து ஒரு சரிபார்ப்பு பட்டியலைப் பயன்படுத்தி ஒழுங்குமுறைக்கு இணங்குவதற்கான அளவை அடையாளம் காட்டுகிறார்.

சனி, 6 ஜூன், 2020

தக்காளி விற்பணையாளர்


அமெரிக்க நாட்டில் பணிவாய்ப்பு எதுவும் இல்லாத இளைஞன் ஒருவன் மிகப் பெரிய நிறுவனத்தில் ‘அலுவலக உதவியாளர்’ பதவிக்கு விண்ணப்பித்தார். அந்நிறுவனத்தின் முதலாளி அந்த இளைஞரை நேர்காணல் செய்தார், அந்நேர்காணலின்போது முதலாளி அந்த இளைஞரிடம் தங்களுடைய அலுவலகத்தின் தரையை சுத்தம் செய்யுமாறு கோரினார் உடன் அந்த இளைஞரும் அந்நிறுவனத்தின் முதலாளியின் உத்திரவிற்கு இணங்க அந்த அலுவலகத்தின்தரையை பெருக்கி தண்ணீரால் கழுவி சுத்தமாக்கினார் . அதனை தொடர்ந்து"உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை மட்டும் கொடுத்துவிட்டு செல்லுங்கள் அலுவலக உதவியாளர்பணிக்கு உங்களை தேர்வுசெய்த விவரத்தினையும் பணியில் எந்த தேதிக்குள் பணியில் சேரவேண்டும் என்ற உத்திரவினையும் நான் உங்களுக்கு அனுப்புகிறேன்." என அந்த முதலாளி கூறினார் உடன் அந்தஇளைஞர், “ஐயா என்னிடம் கணினியும் இல்லை, தனியாக எனக்கு மின்னஞ்சல் முகவரியும் இல்லை” என்று பதில் கூறியதும் அந்த நிறுவனத்தின் முதலாளி "மன்னிக்கவும், மின்னஞ்சல் முகவரி இல்லையென்றால், உங்களுக்கு இந்நிறுவனத்தில் வேலை இல்லை" என்று கூறி அந்த இளைஞரை வெளியில்அனுப்பிவிட்டார். அதனால் அந்த இளைஞன் இந்த பணியும் கிடைக்கவில்லையே என மிகச்சோர்வுடன் நம்பிக்கை யெதுவுமின்றி அந்த அலுவலகத்தைவிட்டு வெளியேறினார். பணிவாய்ப்பு எதுவும் கிடைக்காத அந்த இளைஞர் வாழ்வதற்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தார் , தற்போதைய நிலையில் அவருடைய சட்டைப் பையில் 10 அமெரிக்க டாலர் மட்டுமே உள்ளது. அந்த இளைஞர் அருகிலிருந்தஅந்த நகரத்தின் முதன்மைசந்தைக்கு செல்ல முடிவு செய்தார், அந்த சந்தையில் கையிலுள்ள பணத்திற்கு ஏற்ப 10 கிலோ எடைகொண்ட தக்காளி கூடை ஒன்றினை வாங்கினார், பின்னர் அந்த தக்காளி கூடையை எடுத்து கொண்டு ஒவ்வொரு வீடாக கொண்டுசென்று விற்றார். இரண்டு மணி நேரத்திற்குள், அந்த ஒருகூடை தக்காளியையும் விற்று தனது மூலதனத்தை இரட்டிப்பாக்கி தன்னுடைய வாழ்க்கையின்முதல் வெற்றியை பெற்றார். அவர் மீண்டும் தன்னுடைய கையிலிருந்த பணத்தினைகொண்டு தக்காளிகூடைகளை வாங்கி முந்தையமாதிரி ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சென்ற விற்றார் இவ்வாறு ஒரேநாளில் மூன்று முறை இவ்வாறான வியாபார நடவடிக்கையை மீண்டும் மீண்டும் செய்து 60 அமெரிக்க டாலர்களுடன் அன்று மாலை அந்த இளைஞர் தன்னுடைய வீடு திரும்பினார். இந்த வழியில் பயனித்தால்தான் உயிர்வாழ முடியும் என்பதை உணர்ந்த அந்தஇளைஞர்,இதே வியாபாரி பணியை செய்வதற்காக தினமும் அதிகாலையில் செல்ல ஆரம்பித்தார், வியாபார பணிமுடிந்த ஒவ்வொரு நாளும் தாமதமாக வீடு திரும்பினார். இதனால், அவருடைய முதலீடு தினமும் இரட்டிப்பாக அல்லது மூன்று மடங்காக அதிகரித்தது. சிறிது காலத்திற்கு பிறகு தலையில் பொருட்களை சுமந்து சென்று விற்பணை செய்வதற்கு பதிலாக , அந்த இளைஞர் ஒரு இருசக்கர வண்டியொன்று வாங்கி விற்பணையை தொடர்ந்தார், பின்னர் நான்கு சக்கர சுமையுந்து வண்டி வாங்கி பொருட்களை கொண்டு சென்று விற்பணை செய்துவந்தார்,அதன் பின்னர் தான் ஒருவன்மட்டும் அவ்வாறான விற்பணைசெய்துமுடிக்க முடியாது என தனக்கு கீழ் பல்வேறு இளைஞர்களை பணிநியமனம்செய்தும் ஏராளமான அளவில் நான்கு சக்கர வாகணங்களை வாங்கியும் பொருட்களை வீடுகளுக்கு கொண்டு சென்று விற்பணை செய்துவரும் பணியை விரிவாக்கம் செய்து தனது வியாபாரத்தினை பெருக்கி கொண்டே வந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த இளைஞரின் நிறுவனம் மிகப்பெரிய உணவு பொருட்களில் சில்லறை விற்பனையாளர்களில் ஒன்றாக வளர்ந்து பீடுநடைபோட்டது. அவர் தனது குடும்பம் எதிர்காலத்தில் பாதுகாப்பாக இருப்பதற்காக தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு ஆயுள் காப்பீடு செய்ய முடிவு செய்தார். அதற்காக ஒரு காப்பீட்டு தரகரை அழைத்து ஒரு பாதுகாப்புத் திட்டத்தைத் துவங்குவது குறித்து விவாதித்தார் . அந்த உரையாடல் முடிவில் காப்பீட்டு, தரகர் அவரிடம் அவருடைய மின்னஞ்சல் முகவரியைக் கோரினார். "எனக்கு மின்னஞ்சல்முகவரி எதுவும் இல்லை." என்று அந்த இளைஞர் பதிலளித்தார்: அதனை தொடர்ந்து, “ஐயா உங்களிடம் மின்னஞ்சல் முகவரி இல்லாமல், இவ்வாறான பெரிய நிறுவனத்தினை எவ்வாறு வெற்றிகரமாக உருவாக்கமுடிந்தது. உங்களிடம் மின்னஞ்சல் முகவரி மட்டும் இருந்தால் நீங்கள் வாழ்க்கையில் எங்கோ உயரத்திற்கு சென்றிருக்கு முடியும் என்று கற்பணை செய்து பாருங்கள் ஐயா ” என காப்பீட்டு தரகர் ஆர்வத்துடன் பதிலளித்தார் அந்த இளைஞர் சிறிது நேரம் யோசித்து, “கற்பணையெல்லாம் வேண்டாம் நான் மின்னஞ்சல் முகவரிமட்டும் வைத்திருந்தால் ஒரு நிறுவனத்தில் சாதாரண அலுவலக உதவியாளர் பணியை தற்போது செய்து கொண்டிருப்பேன் அவ்வளவுதான் நீங்கள் போகலாம் !” என்று பதிலளித்தார். இன்று நீங்கள் செய்த முயற்சிக்கு வெற்றி எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை சோர்வடைய வேண்டாம். சிறந்த வாய்ப்புகள் எப்போதும் நமக்காக காத்திருக்கின்றன. அவைகளுள் ஒன்றினை நீங்கள் மிகச்சரியாக பயன்படுத்தி வாழ்க்கையை வாழ கற்றுகொள்க

வெள்ளி, 5 ஜூன், 2020

இந்தியாவில் Startupஎனும் திட்டத்தின்கீழ் நிறுவனங்கள் துவங்கப்படு வதற்கான தகுதியும் வரி விலக்குகளும்


இந்தியாவில் Startup எனும் செயல்திட்டத்தின் படி, ஒரு Startup நிறுவனத்தினை துவங்குவதற்கான தகுதி பெறுவதற்கு பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்திட வேண்டும்: 1.இந்தியாவில்உயிரி தொழில்நுட்ப துவக்க நிறுவனங்கள் எனில் துவங்கப்பட்ட அல்லது பதிவுசெய்யப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்குள் இருக்கவேண்டும். மற்றவையெனில் துவங்கப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 7 வருடங்களுக்குள் இருக்கவேண்டும், 2.முந்தைய நிதி ஆண்டுகளில் வருடாந்திர வருவாய் ரூ .25 கோடிக்கு மிகாமல் இருக்கவேண்டும். 3.Startup எனும் செயல்திட்டத்தின் படிதுவங்கிடும் நிறுவனமானது தொழில்நுட்பம் அல்லது அறிவுசார் சொத்துக்களால் இயக்கப்படும் புதிய தயாரிப்புகள், செயல்முறைகள் அல்லது சேவைகளில் புதுமை, மேம்பாடு, வணிகமயமாக்கல் ஆகியவற்றை அடிப்படை நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாக இருக்கவேண்டும் 4.இந்நிறுவனம் ஏற்கனவே இருக்கும் ஒரு வணிகநிறுவனத்தை பிரிப்பதன் மூலமோ அல்லது புனரமைப்பதன் மூலமோ உருவாக்கப்பட்டதாக இருக்கக் கூடாது. 5.இது போன்ற நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட இடை-நிலை அமைச்சக வாரியத்திடமிருந்து சான்றிதழைப் பெற வேண்டும். 6.Startup எனும் செயல்திட்டத்தின் படிதுவங்கிடும் நிறுவனமானது ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம் அல்லது பதிவு செய்யப்பட்ட கூட்டாண்மை நிறுவனம் அல்லது வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை நிறுவனம் ஆகியவற்றின் ஏதேனும் ஒன்றின்கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலே கூறிய நிபந்தனைகளின்படி தகுதி வாய்ந்தStartup எனும் செயல்திட்டத்தின் படிதுவங்கிடும் நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்படும் வரி விலக்குகள் பின்வருமாறு 1.ஏப்ரல் 1, 2016 க்குப் பிறகு Startupநிறுவனமாக பதிவு செய்யப் பட்ட அல்லது துவங்கப்பட்ட Startupநிறுவனமானது, எந்தவொரு நிதியாண்டிலும் வருடாந்திர வருவாய் ரூ .25 கோடியைத் தாண்டாது இருந்தால், தொகுப்பான ஏழு வருடங்களில் மூன்று வருட காலத்திற்கு 100% வரிச்சலுகை பெற தகுதியுடையதாகும். 2. நீண்ட கால மூலதன இலாபத்தொகை அல்லது அதன் ஒரு பகுதியை மத்திய அரசு அறிவித்த நிதியில் முதலீடு செய்தால், தகுதியான Startup நிறுவனங்களுக்கு வருமான வரிச் சட்டத்தில் 54 EEகீழ் நீண்ட கால மூலதன இலாபத்திற்கான வரிவிலக்கு அனுமதிக்கப்படுகின்றது. அதாவது சொத்து பரிமாற்ற நாளிலிருந்து ஆறு மாத காலத்திற்குள். நீண்ட கால முதலீடாக 3 வருட காலத்திற்கு குறிப்பிட்ட நிதியில் அதிகபட்ச தொகை ரூ .50 லட்சம் வரை முதலீடு செய்யப்படவேண்டும். இவ்வாறான முதலீட்டு தொகையை 3 ஆண்டுகளுக்கு முன்பு திரும்பப் பெறப்பட்டால், தொகை திரும்பப் பெறப்பட்ட ஆண்டிலிருந்து வரிவிலக்கு ரத்து செய்யப்படும். 3.தகுதிவாய்ந்த Startupநிறுவனத்தினுடைய நியாயமான சந்தை மதிப்புக்கு மேல் உள்ள முதலீடுகளுக்கு அரசாங்கம் வரிவிலக்கு அளிக்கின்றது. இத்தகைய முதலீடுகளில் இந்திய குடியுரிமை ஏஞ்சல் முதலீட்டாளர்கள், குடும்பம் அல்லது துணிகர மூலதன நிதிகளாக பதிவு செய்யப்படாதசெய்த முதலீடுகள் ஆகியவை அடங்கும். மேலும், நியாயமான சந்தை மதிப்புக்கு மேல் இன்குபேட்டர்கள் செய்யும் முதலீடுகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. 4மீச்சிறு, சிறு , நடுத்தர நிறுவனச் சட்டம், 2006 இன் கீழ் வரையறுக்கப் பட்டுள்ளபடி சிறு அல்லது நடுத்தர நிறுவனங்களில் நீண்ட கால மூலதன இலாபங்கள் முதலீடு செய்யப்பட்டால், அதாவது 54GB இன்கீழ் குடியிருப்பு சொத்து ஒன்றின் விற்பனை மீதான நீண்டகால மூலதன இலாபங்களுக்கான தொகையை தகுதியான start-ups நிறுவனங்களின் 50% அல்லது அதற்கு மேற்பட்ட பங்குகள்வரை முதலீடு செய்தால் வரிவிலக்கு அனுமதிக்கப்படுகின்றது., , , அத்தகைய பங்குகள் 5ஆண்டிற்குள் விற்கப்படவோ அல்லது மாற்றவோ கூடாது 5.ஆண்டின் கடைசி நாளில் வாக்களிக்கும் சக்தியைக் கொண்ட பங்குதாரரின் உரிமையில் மாற்றம் ஏற்பட்டால் அதன்வாயிலாக ஏற்படும் இழப்புகளையும் மூலதன இலாபங்களையும் முன்னோக்கி கொண்டு சென்று சரிசெய்து(Set Off Carry forworded) கொள்ள அனுமதிக்கப்படுகின்றது. இதற்காக தகுதிவாய்ந்த start-ups நிறுவனங்களில் 51 சதவீத வாக்களிக்கும் உரிமைகள் மாறாமல் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.

வியாழன், 4 ஜூன், 2020

புதிய 2020 ஆண்டில்சசேவ (GST) கீழ் செய்யப்பட்ட முக்கிய மாறுதல்கள்


மத்திய மறைமுகவரி மற்றும் சுங்கவரி வாரியத்தின் சுற்றறிக்கை எண் 75/2019 நாள்26.12.2019 இன் படி 1.01.01.2020 முதல் நமக்கு பொருளை அனுப்பியவர் அல்லது சேவையை வழங்கியோர் GSTR-1 எனும் படிவத்தினை சமர்ப்பிக்க தவறியிருந்தால் பொருள் அல்லது சேவை வழங்கிய பட்டியல் அல்லது வரவுகுறிப்பு தொகையில் 10 சதவிகிதம் மட்டும் ITC எனும் உள்ளீட்டு வரிவரவை எடுத்து கொள்ள முடியும் இதற்குமுன்பு20 சதவிகிதம் மட்டும் ITC அனுமதிக்கப்பட்டது 2. பொருளை அல்லது சேவையை பெறாமலேயே அல்லது இல்லாத கற்பனையான நபரிடமிருந்து பொருளை அல்லது சேவையை பெற்றதாக fraudulently அடிப்படையில் உருவாக்கப்பட்ட பட்டியலின் தொகையானது மின்னனு வரவு பேரேட்டில் வரவு வைக்கப்பட்டதொகையை திரும்ப பெறுவதற்கு அல்லது வரிசெலுத்துவதில் சரிசெய்வதை தொடர்புடைய பகுதி சசேவ(GST) ஆணையருக்கு தடுப்பதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது 3.தொடர்ந்துஇரண்டு மாதங்களில் காலாண்டுகளில் GSTR-1 படிவத்தை சமர்ப்பிக்க தவறியிருந்தால் அந்நிறுவனத்தினரால் தங்களுடைய நிறுவனத்திற்காக E-way Bill எனும் மின்னனுவழிபட்டியலை இணையத்தின் வாயிலாக 11, 1. 2020முதல் உருவாக்கமுடியாது 4.01.04.2020 முதல் ஆண்டு விற்பணை வருமானம் 100 கோடிக்குமேல் உள்ள நிறுவனங்கள் B2B அடிப்படையில் விற்பனைசெய்யப்படும் பொருளிற்கு கண்டிப்பாக E-way Bill எனும் மின்னனுவழிபட்டியலை இணையத்தின் வாயிலாக உருவாக்கி கொண்டுசெல்லும் பொருளுடன் கொண்டு செல்ல வேண்டும் 5. மத்திய மறைமுகவரி மற்றும் சுங்கவரி வாரியத்தின் சுற்றறிக்கை எண் 72/2019 நாள்13.12.2019 இன் படி ஆண்டு விற்பணை வருமானம் 100 கோடிக்குமேல் உள்ள நிறுவனங்கள் B2C அடிப்படையில் விற்பனைசெய்யப்படும் பொருளிற்காக உருவாக்கப்படும் விற்பணை பட்டியலில் QR Code என சுருக்கமாக அழைக்கப்பெறும் விரைவு பதில் குறியீட்டுடன் (Quick Response Code) மட்டுமே 01.04.2020 முதல் விற்பணை பட்டியலில் இடம்பெறவேண்டும் 6.01.04.2020 முதல் தானியங்கியாக சசேவ(GST) நடைமுறையில் அறிக்கைகள் உருவாகிடவும்சசேவ(GST) நடைமுறையை எளிமைபடுத்திடவும் மத்திய மறைமுகவரி மற்றும் சுங்கவரி வாரியமானது GST FORM ANX- 1, GST FORM ANX- 2 ஆகிய இருபடிவங்களை அறிமுகப்படுத்தியுள்ளது 7. நிறுவனங்கள் சசேவ (GST) துறையில் தங்களுடைய குறைகளை களைய கோரும் அனைத்து கடித போக்குவரத்துகளிலும் இணையத்தின் வாயிலாக உருவாக்கப்படும் DIN என சுருக்கமாக அழைக்கப்படும்ஆவணசுட்டிஎண் (Document Identification Number) மட்டுமேகுறிப்பிட வேண்டும் 8 மேலும் TRAN-1 & TRAN-2ஆகிய படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 31.03 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

புதன், 3 ஜூன், 2020

மீச்சிறு சிறு நடுத்தர நிறுவனங்களை(MSME)பற்றி தெரிந்து கொள்ளவேண்டிய அடிப்படை செய்திகள்


இந்தியாவில் பொதுவாக மிககுறைந்த முதலீட்டில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்களை மீச்சிறு, சிறு ,நடுத்தர நிறுவனங்கள் (Micro small and medium Enterprise) என்றும் இவைகளை சுருக்கமாகMSME எனவும் அழைக்கப்பெறும். இவைகளை கட்டுபடுத்திடுவதற்காக கொண்டுவரப்பெற்ற மீச்சிறு சிறு நடுத்தர நிறுவனங்களின் மேம்படுத்துதல் (MSMED) சட்டம் 2006 ஆனது இவைகளை உற்பத்தி நிறுவனங்கள் என்றும் சேவைநிறுவனங்கள்என்றும் இரண்டாக வகைப்படுத்திடு கின்றது அதாவது தொழிலகங்கள் மேம்படுத்துதல் ஒழுங்குபடுத்துதல் சட்டம் 1951 இன் முதல் அட்டவணையில் குறிப்பிடப்பட்ட எந்தவொரு பொருளையும் உற்பத்தி செய்திடும் அல்லது உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் அல்லது ஒரு தனித்துவமான பெயரைக் கொண்ட இறுதி தயாரிப்பு பொருளாக மதிப்பு கூட்டும் செயல்பாட்டில் ஈடுபடும் எந்தவொரு தொழிற்துறையும் உற்பத்தி நிறுவனம் என வரையறுக்கப்படுகின்றது. சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் சேவைத்துறை நிறுவனங்கள் என வரையறுக்கப்படுகின்றது மேலும் மேலேகூறியவாறு உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களுடைய முதலீடுகளின் இயந்திர தளவாடங்களின்மொத்தமதிப்பு ரூ.இருத்தைந்து இலட்சத்திற்கு மிகாமல்இருப்பவை மீச்சிறு உற்பத்தி நிறுவனங்கள்என்றும் இயந்திர தளவாடங்களின்மொத்தமதிப்பு ரூ.இருத்தைந்து இலட்சத்திற்கு மேல் ஆனால் ரூ.ஐந்து கோடிக்குமிகாமல் இருப்பவை சிறு உற்பத்தி நிறுவனங்கள் என்றும் இயந்திர தளவாடங்களின்மொத்தமதிப்பு ரூ.ரூ.ஐந்து கோடிக்குமேல் ஆனால் ரூ. பத்துகோடி க்குமிகாமல் இருப்பவை நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள்என்றும் இந்த சட்டம் வரையறுக்கின்றது அவ்வாறே சேவைத்துறையில் ஈடுபடும் நிறுவனங்கள் பயன்படுத்திடும் கருவிகளின் முதலீடுகள் ரூ. பத்துஇலட்சத்திற்குமிகாமல் இருப்பவை மீச்சிறு சேவைத்துறை நிறுவனங்கள் என்றும் பயன்படுத்திடும் கருவிகளின் முதலீடுகள் ரூ. பத்துஇலட்சத்திற்குமேல் ஆனால் ரூ.இரண்டுகோடிக்கு மிகாமல் இருப்பவை சிறு சேவைத்துறை நிறுவனங்கள்என்றும் பயன்படுத்திடும் கருவிகளின் முதலீடுகள் ரூ.இரண்டுகோடிக்கு மேல் ஆனால் ரூ. ஐந்து கோடிக்கு மிகாமல் இருப்பவை நடுத்தர சேவைத்துறை நிறுவனங்கள்என்றும் இந்த சட்டம் வரையறுக்கின்றது மேற்கன்டவாறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள எந்தவொரு மீச்சிறு, சிறு ,நடுத்தர நிறுவனமும் தொழிலகங்கள் மேம்படுத்துதல் ஒழுங்குபடுத்துதல் சட்டம் 1951 இன்படி பதிவுசெய்து கொள்ளவேண்டும் இந்திய அரசால் அறிமுகபடுத்தப்பட்ட கடன் உத்தரவாத அறக்கட்டளை நிதி திட்டம் (The Credit Guarantee Trust Fund Scheme),இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (Small Industries Development Bank Of India) ,மீச்சிறு சிறுநடுத்தர நிறுவனங்களின் துறை அமைச்சகத்தால் அறிமுகபடுத்தப்பட்டு நடைமுறையில் உல்ள கடன்உத்திரவாத திட்டம் ஆகியவற்றின் கீழ் இவ்வாறு பதிவுசெய்திடும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான கடன்வசதிகளை பெறமுடியும் மேலும் MSME ஆக பதிவுபெற்ற இந்நிறுவனங்கள் ISO சான்றிதழ் பெறுவதற்காக செலவிட்ட தொகைகைய இந்திய அரசிடமிருந்து திரும்ப பெற்றுகொள்ளமுடியும் அதுமட்டுமல்லாது MSME ஆக பதிவுபெற்ற இந்நிறுவனங்கள் தாங்கள் பயன்படுத்திடும் மின்சாரத்திற்கு கட்டண சலுகைகளை பெறமுடியும் அதனோடு இவ்வாறான நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை சேவைகளை பெறும் நிறுவனங்கள் அதற்கான தொகையை 15 நாட்களுக்குள் வழங்கவேண்டும் தவறினால் அதிகபட்சம் 45 நாட்களுக்குமேல் தவறிடும்போது ஏற்றுகொண்ட மாதாந்திர வட்டிக்குமேல் இந்திய ரிசர்வங்கி அறிவித்த வட்டிசதவிகிதத்திற்குமேல் மூன்றுமடங்கு கூட்டுவட்டியுடன் வழங்க தவறிய தொகையை வசூலிக்கமுடியும் மேலும் இந்திய அரசின் தொழிலதுறைஊக்கவிப்புமானியதொகையை பெறமுடியும் அதுமட்டுமல்லாது இந்நிறுவனங்கள் தங்களுடைய நடைமுறைமூலதனத்திற்காக வாங்கும் கடன் தொகையில் கூடுதலாக 1%சதவிகித தொகை கடனாக பெறமுடியும் அதைவிட தங்களுடைய நிறுவனத்தின் காப்புரிமையை பதிவுசெய்வதற்கான கட்டணத்தில் 50% காப்புரிமை பதிவுக்கான கட்டணத்தொகை மானியத்தொகையாக கிடைக்கும் இறுதியாக வருமான வரிசெலுத்துவதிலிருந்து குறிப்பிட்ட ஆண்டுவரை விலக்கு கிடைக்கின்றது

செவ்வாய், 2 ஜூன், 2020

மின்னனு வழிபட்டியல் உருவாக்கிடும்போது ஏற்படும் பிரச்சினைகளை ஒரேயொரு சொடுக்குதலில் தீர்வுபெறமுடியும்


சசேவஇல்(GST) புதியதாக அறிமுகபடுத்தப்பட்ட மின்னனுவழிபட்டியலை(E-Way Bill) ரூ. Rs. 50,000/-.இற்குமேல் பொருட்களை கொண்டுசெல்லும்போது அவ்வாறு பொருட்களை கொண்டுசெல்வோர் கண்டிப்பாக அதற்கான மின்னனு வழி பட்டியலையும் உடன் கொண்டு செல்ல வேண்டும். 2018-19 நிதியாண்டில் ரூ 55.78 கோடி மதிப்பிற்கான மின்னனுவழிபட்டியல்கள் இல்லாமல் அல்லது தவறாக உருவாக்கப்பட்டு கொண்டு செல்லபட்டன ஏறத்தாழ5% வாகணங்கள் அதாவது 2.75 கோடி வாகணங்கள் சரியான மின்னனு வழிபட்டியலை உடன் கொண்டுவரததால் அல்லது தப்பும் தவறுமான மின்னனு வழிபட்டியலை உடன் கொண்டு சென்றதால் தண்டிக்கப்பட்டன இவ்வாறான நிகழ்விற்கு குறைந்தபட்சம் ரூ. 10,000 அபராத தொகையும் உடன் கொண்டுசெல்லும் அந்த குறிப்பிட்ட பொருளும் வாகணமும் அந்த தொகைசெலுத்தும்வரை நிறுத்தம்செய்து வைத்திடுகின்ற நடைமுறை தற்போது உள்ளது இந்த மின்னனு வழிபட்டியலை உருவாக்கிடும் போது இந்த பட்டியலிற்கான வரிசை எண் , இந்த பொருளை கொண்டுசெல்கின்ற வாகண அடையாள எண் , பொருளின் பெயர் ,விலை போன்ற பல்வேறு விவரங்களை உள்ளீடு செய்து உருவாக்கிடும்போது உள்ளிடுகின்ற விவரங்களில் மனித தவறுகள் ஏற்படஏதுவாகின்றன மேலும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பல்வேறு காரணங்களினால் அந்த பொருளை கொண்டுசெல்ல தவறிவிடுகின்றன அதனால் அவ்வாறு கொண்டு செல்லபபடும் பொருட்களுக்கான மின்னனு வழிபட்டியலானவை காலக்கெடு தவறிய மின்னனு வழிபட்டியலாக அமைந்துவிடுகின்றன மேலும் இவ்வாறான மின்னனு வழிபட்டியலிற்கான JSON கோப்புகளை கையாளதவறிடுகின்றன அதுமட்டுமல்லாது இந்த மின்னனு வழிபட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் GSTR 1 அறிக்கையுடன் ஒப்பிட தவறிடுகின்றன என்பன போன்ற பல்வேறு காரணங்கள் இந்த மின்னனு வழிபட்டியலில் உருவாக்கிடும்போது சந்திக்க வேண்டியுள்ளது அதன்வாயிலாக நம்முடைய வியாபார நடவடிக்கைகள் பாதிக்கின்றன இவைகளை தீர்வு செய்வதற்காக குறைந்த செலவில் GSTHero எனும் புதிய பயன்பாடானது கைகொடுக்க தயாராக இருக்கின்றது இது தற்போது நிறுவனங்கள் மின்னனு வழிபட்டியலை உருவாக்கிடுவதற்காக பயன்படுத்திவரும் ERP ஐ விட்டு வெளியேறாமல் அல்லது மாற்றிடாமல் அதனோடு ஒருங்கிணைந்து வழக்கம் போன்று மின்னனுவழிபட்டியலை உருவாக்கிட உதவுகின்றது. மிகமுக்கியமாக இது நம்முடைய ERP ஐ உடன் ஒருங்கிணைந்து செயல்படதுவங்கியவுடன் E-way bill உருவாக்கிடும் இணையதளத்துடன் தானாகவே ஒருங்கிணைந்து செயல்பட தயாராகிவிடுகின்றதுமேலும் மின்னனு வழிபட்டியல் தயார் செய்வதற்காகவென தனியாக நம்முடைய ERP ஆல் தயார்செய்த விற்பணைபட்டியலின் தகவல்களிலிருந்து நகலெடுத்து ஒட்டிடவேண்டிய தேவையை இது அறவே நீக்கி தானாகவே அந்த தகவலை மின்வழிபட்டியலை தயார்செய்திட எடுத்து கொள்கின்றது ஒவ்வொருமுறையும் நாம் E-way bill உருவாக்கிடும் இணைய தளத்திற்கு சென்று நமக்கான மின்னனுவழிபட்டியலை தயார்செய்திடுவதற்கு பதிலாக இந்த GSTHeroஆனது தானாகவே நம்முடைய விற்பணைபட்டியல் தயார்செய்த ERP ஐயும் E-way bill உருவாக்கிடும் இணையதளத்தையும் ஒருங்கிணைத்து புதிய மின்வழிபட்டியலை உருவாக்கிடு கின்றது தொடர்ச்சியாக அடுத்தடுத்த மின்வழிபட்டியல் எண்ணை நிகழ்நிலைபடுத்தி அடுத்த பட்டியலை தாயர்செய்திட தயாராக இருக்கின்றது அதைவிட ஒன்றுக்குமேற்பட்ட மின்வழிபட்டியலை மொத்தமாக(Bulk) உருவாக்கிடவும் உதவுகின்றது குறிப்பிட்ட மின்வழிபட்டியல் குறிப்பிட்டகால முடிவடைகின்றது அதனை புதுப்பித்தல் செய்திடவா என நினைவூட்டல் செயலையும்செய்திடுகின்றது மின்வழிபட்டியல் உருவாக்கிடும் நிகழ்வு நேரத்தில் உருவாகிடும் ஏதேனும் பிழையை அவ்வப்போது சரிசெய்திடுகின்றது போலியான விற்பணை பட்டியல் எண்ணை கொண்டு மின்வழிபட்டிலை உருவாக்குவிடுவதை சுட்டிகாட்டி அதனை தவிரத்திடுகின்றது Json கோப்புகளை கையாளுவதற்காகவென தனியாக நாம்எதுவும் நடவடிக்கை எடுத்திடாமலேயே இது தானாகவே அந்த பணியையும் செயல்படுத்திடுகின்றது மேலும் விற்பணைபட்டியல் மின்வழிபட்டியல் ஆகியவற்றை GSTR 1. அறிக்கையுடன் ஒப்பிட்டு சரிபார்த்திடுகின்றது மேலேகூறிய வசதி வாய்ப்புகளினால் மின்வழிபட்டியல் கையாளும் போது ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும் இந்த GSTHero ஐ கொண்டு தீர்வுசெய்து கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது

திங்கள், 1 ஜூன், 2020

இந்தியாவில் ஒவ்வொரு வியாபார நிறுவனமும் தெரிந்து கொள்ளவேண்டிய அடிப்படையான தகவல்கள்


துவக்கநிறுவனமாக (Startup Enterprises)வியாபார உலகில் குதிக்க தயாராக இருப்பவரா அல்லது ஏற்கனவே ஒரு வியாபார நிறுவனத்தினை வெற்றிகரமாக நடத்துபவரா ஆம் எனில் பின்வருமாறான சட்டப்படியான அனைத்தும் பதிவுசெய்துவிட்டதை உறுதி செய்துகொள்க. இந்தியாவில் உள்ள அவ்வாறான ஒவ்வொரு வியாபார நிறுவனமும் தெரிந்து கொள்ளவேண்டிய அடிப்படையான சட்டப்படியாக பதிவுசெய்தல்விவரங்கள் பின்வருமாறு 1. வியாபார நடவடிக்கைகளை துவங்க விரும்பும் எந்தவொரு நிறுவனமும் வருமானவரித்துரையில் பதிவுசெய்து PAN எனும் வருமானவரிபதிவுஎண் பெறவேண்டும் அவ்வாறே தாம் வழங்கிடும் தொகை குறிப்பிட்ட வரம்பிற்குமேல் செல்லும்போது அதற்கான வருமான வரியை பிடித்தம்செய்து வழங்குவதற்காக வருமானவரித்துரையில் பதிவுசெய்துTAN எனும் மற்றொரு பதிவுஎண் பெறவேண்டும் அதைவிட தற்போது பரிமாற்றதொகையானது ரூ. 50,000/-இக்குமேல் எனில் கண்டிப்பாக ஆதார் எண் கண்டிப்பாக இருக்கவேண்டும் 2. வியாபாரசெய்திடும் நிறுவனங்கள் வியாபார நடவடிக்கைகளுக்காக பத்து பணியாளர்களைவிட கூடுதலாக பயன்படுத்தி கொள்வதாக இருந்தால் வர்த்தக உரிமமும்(Trade License ) கடைகளும் நிறுவனங்களுக்கும் ஆன உரிமமும்(Shops and Establishment License) தொழிலாளர் ஆணையரிடம் பதிவுசெய்து பெறவேண்டும் 3.விற்பணைவருமானம் ரூ. 20 இலட்சத்திற்கு மேல் உயரும்போது கண்டிப்பாக புதிய சசேவவின்படி (GSTIN) பதிவுசெய்து அதற்கான பதிவெண் பெறவேண்டும் 4.நம்முடைய வியாபார நிறுவனம் துவக்கநிறுவனமாக வரையறுக்கப் பட்ட கூட்டாண்மை நிறுவனமா கூட்டாண்மை நிறுவனமா தனிநபர் நிறுமமா ,தனியார் நிறுமமா ,பொதுநிறுமமா என அதனதன் துறைஅமைச்சகத்தில் பதிவுசெய்து கொள்ளவேண்டும் 5. நாம் துவங்கவிருக்கும் வியாபார நிறுவனத்தில் 20 பணியாளர்களைவிட கூடுதலாக பயன்படுத்தி கொள்வதாக இருந்தால் மாதாந்திர சம்பளத்தொகை ரூ. 15000 மிகாமல் இருந்தாலும் பணியாளர்களின் பொது வருங்கால வைப்புநிதி (EPF) நிறுவனத்தில் பதிவுசெய்து கொள்ளவேண்டும் 6. நாம் துவங்கவிருக்கும் வியாபார நிறுவனத்தில் 20 பணியாளர்களைவிட கூடுதலாக பயன்படுத்தி கொள்வதாக இருந்தால் மாதாந்திர சம்பளத்தொகை ரூ 21,000 மிகாமல் இருந்தாலும் பணியாளர்களின் மாநில காப்பீடு (ESI) நிறுவனத்தில் பதிவுசெய்துகொள்ளவேண்டும் அல்லது அந்நிறுவனத்திலிருந்து விலக்கு சான்றிதழ் பெற்றிடவேண்டும் 7.இந்த வியாபார நிறுவனம்செயல்படபோகும் உள்ளூராட்சியில்( நகராட்சி , பேரூராட்சி) தொழிலக வரி இதர தண்ணீர்வரி போன்றவைகளுக்காக உள்ளூராட்சி அலுவலகத்தில் பதிவுசெய்திடவேண்டும் 8.நம்முடைய நிறுவனத்தில் ஒரு சில பணிகளை அதாவது 10 பணியாளர்களைவிட கூடுதலாக வெளியாட்களை ஒப்பந்த அடிப்படையில் செயல்படுத்தி பயன்பெறுவிழைவோம் அதற்காக ஒப்பந்த பணியாளர்சட்டத்தின்கீழ் தொழிலாளர் ஆணையரிடம் பதிவுசெய்து கொள்ள வேண்டும் 9.நம்முடைய வியாபார நிறுவனம் சுற்றுசூழல் பாதிப்புஎதுவும் ஏற்படுத்தாதுஅல்லது குறிப்பிட்ட வரையறைக்குள் வியாபார நடவடிக்கைகள் அமையும் என சுற்றுசூழல் கட்டுபாட்டு குழுவில் பதிவுசெய்து நம்முடைய நிறுவனத்தை நிறுவுவதற்கும்Consent for Establish (CFE ) செயல்படுத்திடுவதற்கும்Consent to Operate (CTO) ஒப்புதல் சான்றிதழ் பெறவேண்டும் 10.நம்முடைய வியாபாரத்திற்கு என தனியாக பொருட்களை கொண்டுவரவும் பணியாளர்கள் பயன்படுத்திகொள்வதற்காகவும் நான்கு சக்கரவாகணங்களை கொள்முதல் செய்திடுவோம்அதனை நம்முடைய நிறுவனத்தின்பெயரில் பதிவுசெய்துஅது சாலையில் செல்வதற்கு பொருத்தமானதுஎன பதிவுசான்று பெறவேண்டும

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...