வியாழன், 30 ஜூலை, 2020

சசேவ (GST)இல்லாமல நிறுவன இயக்குநர்களுக்கு சம்பளம் வழங்குதல்

ஒரு சில முரண்பாடான தீர்ப்புகளுக்குப் பிறகு, சசேவ இல்லாமல் நிறுவன இயக்குநர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதாக CBIC தெளிவுபடுத்துகிறது M/s Alcon Consulting Engineers (India) Pvt. Ltd. (Karnataka AAR) dt. 15-2-2019 எனும் வழக்கில் , நிறுவனத்திற்கு பனியாளரிகள் போன்று இயக்குநர்கள் வழங்கும் சேவைகளானவை எதுவும் மசசேவ சட்டம், 2017 இன் அட்டவணை III இன் பிரிவு (1) இன் கீழ் இல்லை எனதெளிவுபடுத்தப்பட்டுள்ளது, அதாவது “ஒரு பணியாளரால் முதலாளிக்கு அல்லது அவரது வேலைவாய்ப்பு தொடர்பாக வழங்கப்படும் சேவைகள்”போன்று இயக்குனர் அந்நிறுவனத்தின் ஊழியர் அன்று. இயக்குநருக்கு வழங்கப்படும் தொகை, இயக்குநரால் நிறுவனத்திற்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்பானது மற்றும் அத்தகைய சேவையைப் பெறுபவர் மசசேவ சட்டத்தின் பிரிவு 2 இன் பிரிவு (93) இன் படி நிறுவனமாகும் மற்றும் அத்தகைய சேவையை வழங்குபவர் இயக்குனர் ஆவார். மேலும், இந்த சேவைகளின்அறிவிப்பு எண் 113/2017- CTR dt 28-6-2017. இன் நுழைவு எண் 6 இன் கீழ் தலைகீழ் கட்டண பொறிமுறைக்கு (RCM)பொறுப்பாகும் என்று AAR கூறியது. M/s Clay Craft India Pvt. Ltd. (Rajasthan AAR) dt. 5-2-2020. எனும்வழக்கிதிலும் இதே போன்ற கருத்துக்கள் உறுதி செய்யப்பட்டன. M/s Anil Kumar Agrawal (Karnataka AAR) dt 4-5-2020,எனும் வழக்கில் மாறுபட்ட கருத்துக்கள் எடுக்கப்பட்டன, அங்கு இயக்குனர் ஒரு நிர்வாக இயக்குனர் என்பதால், அவர் வழங்கிய சேவைகள் உட்பிரிவின் கீழ் வரும் என்று வாதிடப்பட்டது. (1)மசசேவ சட்டம், 2017 இன் அட்டவணை III இன். இப்போது, CBIC இன் சுற்றறிக்கை எண் 140/10/2020-சசேவ நாள் 10-6-2020 ஐ வெளியிட்டுள்ளது, இது இயக்குநர் ஊதியத்தில் சசேவ விதிக்கப்படுமா இல்லையா என்பதை தீர்மானிக்க பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது - படி முறை1: இயக்குனர் நிறுவனத்தின் ஊழியரா இல்லையா என்பதை நாம் சரிபார்க்க வேண்டும். இயக்குனர் ஒரு பணியாளராக இருந்தால் - அது மசசேவ சட்டம், 2017 இன் அட்டவணை III இன் பிரிவு (1) இன் கீழ் வரும், மேலும் எந்த சசேவயும் விதிக்கப்படாது. இயக்குனர் ஒரு ஊழியர் இல்லையென்றால் - அவர் வழங்கிய சேவைகள் சசேவக்கு ஏற்றதாக இருக்கும், மேலும் நிறுவனம் அறிவிப்பு எண் 13/2017 இன் நுழைவு எண் 6 இன் கீழ் தலைகீழ் கட்டண பொறிமுறைக்கு (RCM) மீது வரி செலுத்த வேண்டும்- சி.டி.ஆர் டி.டி 28-6-2017. படிமுறை 2: ஒரு இயக்குனர் நிறுவனத்தின் ஊழியர் என்பதை சரிபார்க்க, இயக்குனர் ஒரு சுதந்திர இயக்குநரா அல்லது முழுநேர இயக்குநரா என்பதை மேலும் சரிபார்த்திடுக. இயக்குனர் ஒரு சுதந்திர இயக்குநராக இருந்தால் - நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 149 (6) இன் கீழ் “சுதந்திர இயக்குநர்கள்” என்பதன் வரையறை, நிறுவனங்களின் 12 வது விதி (பங்கு மூலதனம் மற்றும் கடன் பத்திரங்கள்) விதிகள், 2014 உடன் படியுங்கள், அத்தகைய இயக்குனர் இருக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது அவர் அந்த நிறுவனத்தில் நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிதியாண்டுக்கு முந்தைய மூன்று நிதி ஆண்டுகளில் ஏதேனும் ஒரு ஊழியர் அல்லது உரிமையாளர் அல்லது அந்த நிறுவனத்தின் பங்குதாரராக இருக்கவில்லை.என்பதை உறுதி படுத்திடவேண்டும் எனவே, சுதந்திர இயக்குநர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் தலைகீழ் கட்டணம் அடிப்படையில் நிறுவனத்தின் கைகளில் வரி விதிக்கப்படுகிறது. இயக்குனர் முழு நேர இயக்குநராக இருந்தால் - நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 2 (94) இன் கீழ் முழு நேர இயக்குநரின் வரையறை ஒரு உள்ளடக்கிய வரையறையாகும், இதனால் அவர் நிறுவனத்தின் ஊழியராக இல்லாத ஒரு நபராக இருக்கலாம். முடிவு - முழு நேர இயக்குனர் நிறுவனத்தின் ஊழியராக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். படி 3: ஒரு முழுநேர இயக்குனர் நிறுவனத்தின் ஊழியரா என்பதைச் சரிபார்க்க, நிறுவனம் டி.டி.எஸ்ஸை நொடி 192 இன் கீழ் கழிக்கிறதா அல்லது வருமானவரி சட்டத்தின் 194 ஜெ. வருமானவரி சட்டத்தின் சம்பளத்தின் 192 வது பிரிவின் கீழ் இயக்குநருக்கு வழங்கப்படும் சம்பளம் டி.டி.எஸ்-க்கு உட்பட்டது என்றால் - அத்தகைய ஊதியங்கள் ஒரு பணியாளரால் முதலாளிக்கு வழங்கப்படும் சேவைகளை கருத்தில் கொள்ளும்போது வரிவிதிப்பு அல்ல. சிஜிஎஸ்டி சட்டம், 2017. இயக்குநருக்கு வழங்கப்படும் சம்பளம் வருமானவரி சட்டத்தின் பிரிவு 194 ஜே இன் கீழ் தொழில்முறை அல்லது தொழில்நுட்ப சேவைகளுக்கான கட்டணமாக டி.டி.எஸ்-க்கு உட்பட்டால்- இத்தகைய ஊதியங்கள் சி.ஜி.எஸ்.டி சட்டத்தின் மூன்றாம் அட்டவணை வரம்பிற்கு அப்பாற்பட்ட சேவைகளை வழங்குவதற்கான கருத்தாக கருதப்படும், எனவே. வரி விதிக்கப்படக்கூடியது. மேலும், அறிவிப்பு எண் 13/2017 - 28.06.2017 தேதியிட்ட மத்திய வரி (விகிதம்), அந்த சேவைகளைப் பெறுபவர் அதாவது நிறுவனம், பொருந்தக்கூடிய ஜிஎஸ்டியை தலைகீழ் கட்டண அடிப்படையில் வெளியேற்றுவதற்கு பொறுப்பாகும்.

செவ்வாய், 28 ஜூலை, 2020

நம்முடைய வருமான வரி அறிக்கையை சமர்ப்பிக்கும் போது தவிர்க்க வேண்டிய நம்மை அறியாமல் நம்முடைய அறியாமையினால்செய்திடும் தவறுகள்


பெரும்பாலும் வரி செலுத்துவோர் தங்களுடைய வருமான வரிஅறிக்கைகளை சமர்ப்பிக்கும் போது தங்களை அறியாமலேயே தங்களுடைய அறியாமையினால் ஒருசில தவறுகளை செய்கிறார்கள், அவ்வாறான தவறுகள் தாங்கள் செலுத்தவேண்டிய வரிகளைத் தவிர்ப்பதற்கான நோக்கத்துடன் அன்று ஆயினும், வெறுமனே தங்களுடைய அறியாமையால். செய்யப்படும் இத்தவறுகளால் இவர்கள் குற்றமற்றவர்கள் என்றாலும் இந்த தவறுகள் விலை உயர்ந்தவை என நிரூபித்து அதற்கான அபராத தொகைஅல்லது தண்டத்தொகை அவர்கள்மீது விதிக்கபடலாம் மேலும் இதுகுறித்து நேரடியாக வருமானவரி அலுவலகத்திற்கு வந்து அதற்கான விளக்கத்தை அளிக்குமாறு வருமான வரித் துறையிலிருந்து அறிவிப்புகள்கிடைக்கப்பெறலாம். நம்முடைய வருமானவரி அறிக்கையை சமர்ப்பிக்கும் போது தவிர்க்க வேண்டிய அவ்வாறான நம்முடைய அறியாமையினால் செய்திடும் தவறுகள் பின்வருமாறு: - 1. வருமானவரி அறிக்கையின்படி நம்முடைய வருமானவிவரத்தை சரியான நேரத்தில் சமர்ப்பிக்காதது அல்லது வருமானவரி அறிக்கையையே சமர்ப்பிக்காதது வரி செலுத்துவோர் பலரின் வருமான வரி செலுத்த வேண்டிய பொறுப்பானது வருமானவரிவரந்பைவிடகுறைவாக இருக்கும்ஆனால் அவர்களின் மொத்த வருமானம் வரிவரம்பிற்கு மேல் இருக்கும்போது தங்களின் வருமானவரி அறிக்கையை சமர்ப்பிக்காது விட்டுவிடுவார்கள், .எ.கா., திரு. அ.என்பவரின்வருமானம். ரூ. 3,50,000 வருமானவரிசட்டம் VIA இன் கீழ் கழிவுகள் ரூ. 1,50,000 / -. இதன்படி இவருக்கு வரி செலுத்தவேண்டிய பொறுப்பு இல்லை, ஆனால் அவரது மொத்த மொத்த வருமானம் வரம்பைவிட அதிகமாக உள்ளது. இந்நிலையில்இவர் தான் வருமானவரி செலுத்தவேண்டிய பொருப்பு இல்லையென தன்னுடைய வருமானவரி படிவத்தை சமர்ப்பிக்கவேண்டும் வருமானவரி அறிக்கை சமர்ப்பிப்பதிலிருந்து விலக்கு என்பது தனிநபர் / இந்து கூட்டுகுடும்ப வரி செலுத்துவோரின் மொத்த வருமானம் அடிப்படை விலக்கு வரம்பை மீறாதநிலைவரைமட்டுமே. எனவே, இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வருமானவரி அறிக்கை சமர்ப்பிக்காதது பிரிவு 271 எஃப் கீழ் ரூ.5000/ -. அபராதம் விதிக்கப்படும் இதேபோல், எந்தவொரு காரணத்தினாலும் வருமானவரி அறிக்கையை தாமதமாக சமர்ப்பித்தால் அதற்கான தாமதமாக கட்டணம் ரூ. 10,000 / -. செலுத்தநேரிடும் மேலும், நடப்பாண்டிற்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டால், இவ்வாறு தாமதமாக வருமானவரி அறிக்கையை சமர்ப்பிப்பதால் அடுத்த ஆண்டிற்கு அந்த இழபிபினை கொண்டுசென்று சரி செய்துகொள்ள முடியாது. 2. வரிவிலக்கு வருமானம் அல்லது வரி இல்லாத வருமானத்தை வெளிப்படுத்தாதது அத்தகைய வருமானம் எந்தவொரு வரிப் பொறுப்பையும் ஈர்க்கவில்லை என்றாலும், அத்தகைய வருமானத்தினை வருமானவரி அறிக்கையில் தெரிவிக்கப்பட வேண்டும். வருமான வரி அறிக்கையை சமர்ப்பிக்கும் போது பொது வருங்கால வைப்புநிதியிலிருந்து பெறும் வட்டி, வரி இல்லாத பரிசுகள், வரிவிலக்குஅளிக்கப்பட்ட நீண்ட கால மூலதன ஆதாயங்கள் போன்ற வருமானம் தெரிவிக்கப்பட வேண்டும். 3. வட்டி வருமானத்தை வெளிப்படுத்தாதது வரி செலுத்துவோர் பலர் தங்களுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து அல்லது நிலையான வைப்புகளிலிருந்து சம்பாதித்த வட்டியை தங்களுடைய வருமானவரி கணக்கிடுவதில் காண்பிக்க மாட்டார்கள். சேமிப்புக் கணக்கிலிருந்து கிடைக்கும் வட்டி ரூ. 10,000 / - இற்கு மேல் இருக்கும்போது வரி விதிக்கப்படுகிறது. ஆயினும் சேமிப்பு கணக்கு வட்டிக்கு பிரிவு 80TTA இன் கீழ் ரூ.10,000 / - வரி விலக்குஅனுமதிக்கப்படுகிறது. நிலையான வைப்புகளில் ஈட்டப்படும் வட்டி முற்றிலும் வரி விதிக்கப்படும். எனவே வருமான வரி அறிக்கையை சமர்ப்பிக்கும் போது அத்தகைய வருமானம் முழுமையாக கணக்கிடப்பட வேண்டும். 4. வணிகம் / தொழிலில் இருந்து வருமானங்களை கணக்கிடும்போது தனிப்பட்ட செலவினங்களுக்கான விலக்குகளை கோருதல் இது வரி செலுத்துவோர் செய்யும் மிகவும் பொதுவான தவறாகும். பெரும்பாலும், வணிகம் /தொழிலில் தனிப்பட்ட இயற்கையான செலவுகள் இலாப நட்டக் கணக்கில் பற்று வைக்கப்படு கின்றன, தொடர்ந்து வணிகம் / தொழிலில் இருந்து வருமானத்தைக் கணக்கிடும்போது அவை மீண்டும் சேர்க்கப்பட்டு வருமானமாக கணக்கிடபடுவதில்லை. எடுத்துக்காட்டாக, வரி செலுத்துவோர் பலர் தனிப்பட்ட மற்றும் வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் மகிழுந்தின் தேய்மானத்தை முழுமையாகக் குறைத்துவிடுகின்றனர்அல்லது தனிப்பட்ட பயணச்செலவை வியாபாரத்திற்கு பயன்படுத்திய பயனச்செலவாக காண்பிக்கின்றனர். இத்தகைய தவறுகளை தவிர்க்க வேண்டும். 5. பிள்ளைகளின் வருமானத்தை கருத்தில் கொள்ளாதது பலர் தங்களுடைய பிள்ளைகளின் பெயரில் முதலீடு செய்கிறார்கள். அத்தகைய முதலீடுகளிலிருந்து கிடைக்கும் வருமானம் பெற்றோரின் வருமானத்தில் இணைத்து கணக்கிடப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வரி செலுத்துவோர் (பெற்றோர்கள்) அத்தகைய தங்களுடைய பிள்ளைகளின் வருமானத்தை தங்களுடைய வருமானத்துடன் சேர்த்து கணக்கிடாமல் விட்டுவிடுகிறார்கள். இத்தகைய நடைமுறை தவிர்க்கப்பட வேண்டும் வருமானவரி அறிக்கை சமர்ப்பிப்பது ஒரு சிக்கலான நடைமுறை மேலும் வருமானவரி துறைஅறிவிப்புகளைப் பெறுவதைத் தவிர்க்க கவனமாக செயல்படுமாறு அறிவிக்கப்படுகின்றது

சனி, 25 ஜூலை, 2020

ஒரே கேள்விக்கு இருவேறுபட்ட பதில்கள்


முன்னாளில் வயதானவர்ஒருவர் ஒரு நகருக்குள் உள்நுழைவுசெய்திடும் வாயிலில் அமர்ந்திருந்தார். அப்போது குதிரைமீதுஅமர்ந்து சவாரி செய்துகொண்டு ஒரு மனிதன் அந்த நகரின் வாயிலுக்கு வந்து சேர்ந்தார், நகரின் நுழைவுவாயிலில் அந்த வயதான மனிதன் அமர்ந்திருந்ததை பார்த்ததும் அவரிடம் அந்த நகரமக்களை பற்றி விசாரித்து அறிந்து கொள்ளலாம் என தான் பயனம் செய்த குதிரையை அங்கே நிறுத்தி. அம்முதியவரிடம், "ஐயா ! இந்த ஊரின் மக்கள் எப்படிப்பட்டவர்கள்?"என கேட்டார் உடன் வயதனான முதியவர் " ஏன் கேட்கிறீர்கள்?" என அவரிடமே திருப்பி,பதில் கேள்வியை கேட்டார் அதற்கு குதிரையில் சவாரி செய்துவந்தவர் , "ஐயா !நான் இதுவரை வாழ்ந்து வந்த நகர மக்கள் மிகவும் அநாகரீக மானவர்கள், நான் அவர்களின் செயல்களினாளால் மிகவும்வருத்தப்பட்டேன், அவர்களுடன் ஒன்றாக கலந்து வாழமுடியாமல் மகவும் கலக்கமடைந்தேன். எனவே, நான் அந்த நகரத்தை விட்டே வெளியேற வேண்டி யிருந்தது, இப்போது நான் வேறு ஏதாவது ஒரு புதிய நகரில் வசிக்க விரும்புகிறேன். அதனால்தான் நான் உங்களிடம் இந்த நகரத்தில் வாழும் மக்களைப் பற்றி கேட்கிறேன் . " என பதிலளித்தார் அதனை தொடர்ந்து அம்முதியவர் , "தம்பி, அப்படியானால் நீங்கள் வேறு ஏதாவது நல்ல நகரத்தை நோக்கி செல்வது நல்லது. இந்த ஊரின் மக்கள் அதைவிட இன்னும் மோசமானவர்கள், மிகவும் துன்மார்க்கர்கள், அநாகரீக மானவர்கள். இங்கே நீங்கள் வாழமுயன்றால் முந்தைய நகரத்தினை விட அதிக சிக்கலில் மாட்டிகொள்வீர்கள், நீங்கள் வேறு எதாவது நகரத்திற்கு சென்று வாழ முயற்சிசெய்து பாருங்கள்" என்று அறிவுரை கூறி திருப்பி அனுப்பிவைத்தார்.அதனை கேள்விபட்டதும் குதிரையில் சவாரிசெய்து வந்தவர் அப்படியே திரும்பி வேறு நகரத்தை நோக்கி நகர்ந்தார். அதற்குப் பிறகு வேறொரு நபர் இன்னொரு குதிரையில் சவாரிசெய்து அதே நகரின் நுழைவு வாயிலிற்கு வந்துசேர்ந்தார்.  இரண்டாவது குதிரையில் சவாரிசெய்து வந்த மனிதன் அங்கு மிங்கும் சுற்றிப் பார்த்து கொண்டே வந்தார், பின்னர் அந்த வயதான கிழவனின் அருகில் வந்து நின்று, "இந்த நகரமக்கள் எவ்வாறு இருக்கிறார்கள்?" என்ற வினவினார் அம்முதியவர் , "நீங்கள் இதுவரை வாழ்ந்து விட்டு வருகின்ற நகர மக்கள் எவ்வாறு இருந்தார்கள்?" என அவரிடமே பதில் கேள்வி கேட்டார் .இரண்டாவது குதிரையில் சவாரிசெய்துவந்த மனிதன் , "நான் இதுவரையில் வாழ்ந்துவந்த நகர மக்கள் மிகவும் அன்பானவர்களாகவும் நட்பாகவும் இருந்தார்கள். எல்லோரும் ஒருவரையொருவர் நன்றாக கவனித்துக் கொண்டார்கள், உதவி தேவைப்படும் சமயங்களில் ஒருவருக்கொருவர் நன்கு உதவி செய்து கொண்டார்கள். நான் அந்த நகரத்தை விட்டு வெளியேறவே விரும்பவில்லை, ஆனால் ஒரு சில காரணங்களால் நான் அந்த ஊரை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. இப்போது நான் வாழ்வதற்கான ஒரு புதியதொரு நகரத்தைத் தேடுகிறேன் ."என பதிலிறுத்தார் .அதனைதொடர்ந்து அம்முதியவர் , "நீங்கள் இந்த நகரத்திற்குள் வரவேற்கப்படுகிறீர்கள். உங்களுடய நகர மக்களைவிட இந்த நகர மக்கள் மிகவும் அன்பானவர்களாக இருப்பதை நீங்களே காண்பீர்கள்! வாருங்கள் !இந்த நிகரத்திலேயே நிரந்தரமாக வாழலாம்" என மகிழ்ச்சியுடன் முகமன் கூறி அந்த இரண்டாவது குதிரையில் சவாரிசெய்துவந்த மனிதனை வரவேற்றார். அம்முதியவருக்கு அருகே உட்கார்ந்திருந்த ஒரு மனிதன், இவ்வாறு இதே நகரத்தினை பற்றி இரண்டு வகையான பதில்களையும் கேட்டுகொண்டிருந்தான், அதனால்மிகவும் ஆச்சரியமாக அம்மனிதன் அந்த வயதான முதியவரிடம், "ஐயா! நீங்கள் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திவிட்டீர்கள்! இந்த நகரவாசிகள் மோசமானவர்களாகவும், துன்மார்க்கர்களாகவும் இருக்கின்றார்கள், அதனால் இந்த நகரத்திற்குள் செல்லவேண்டாம் வேறு நகரத்திற்கு செல்க! எனநீங்கள் முதலாவது குதிரையில் சவாரிசெய்து வந்தவரிடம் அறிவுரை கூறி திருப்பி அனுப்பிவிட்டீர்கள், ஆனால் இரண்டாவதாக  குதிரையில் சவாரிசெய்து வந்தவரிடம் மட்டும் இந்த நகரத்தில் வாழ்பவர்கள் மிகவும் நல்லவர்கள் வல்லவர்கள் அதனால் அவர் மேலும் வேறு எங்கும் செல்ல வேண்டிய தில்லை இங்கேயே வாழலாம் என்று நீங்கள் அவரிடம் சிபாரிசு செய்கிறீர்கள் . ஏன் அவ்வாறு ஒரே நகரத்தினை பற்றி இருவேறு விதமாக பதில் கூறி அவ்விருவரையும் வெவ்வேறு வகையில் வழிநடத்தினார்கள்? " என சந்தேகம் கேட்டான். அம்முதியவர், " தம்பி எல்லா இடங்களிலும் மக்கள் ஒரேமாதிரியாகத்தான வாழ்கின்றார்கள் அவர்களுடன் நாம்  நடந்து கொள்ளும் வழிமுறையில்தான் அவர்களும் நம்மிடம் நடந்து கொள்வார்கள் அதனால் அவர்களுடன் நாம் எப்படி வாழ்கின்றோம் என்பதுதான் முக்கியம்."என பதிலளித்தார்

வெள்ளி, 24 ஜூலை, 2020

நிறுவனத்தினை ஒருங்கிணைப்புசெய்வதற்கான SPICe+எனும் புதிய படிவம் வெளியீடு செய்தல்


இந்திய அரசாங்கத்தின் முன்முயற்சிகளை எளிதாக்குவதன் ஒரு பகுதியாக, 2020 பிப்ரவரி 6 ஆம் தேதி, நிறுவனங்கள்(ஒருங்கிணைப்பு) திருத்த விதிகள், 2020 ஐ வெளியிடுவதன் மூலம், நிறுவனங்கள் (ஒருங்கிணைப்பு) விதிகள், 2014 ஐ மத்திய அரசு திருத்தியுள்ளது. அனைத்து புதிய நிறுவன ஒருங்கிணைப்பிற்கும் பொருந்துகின்ற. இந்த விதியானது 15 பிப்ரவரி, 2020 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த விதிகளைச் செயல்படுத்த MCA ஆனது புதிய நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு படிவம் ‘SPICe +’ ஐ வெளியிடவிருக்கின்றது. இது ஒரு ஒருங்கிணைந்த இணைய படிவமாக இருக்கும், இது , நிறுவனத்தின் பெயரை முன்பதிவு செய்வதற்கு ‘பகுதி A’ , பதிவு தொடர்பான சேவைகளுக்கு ‘பகுதி B’. ஆகிய இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும் இந்த புதிய “SPICe +” எனும் படிவத்தின் “பகுதி A” இப்போது புதிய நிறுவனத்திற்கான பெயரை முன்பதிவு செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதையும், பெயரை முன்பதிவு செய்வதற்காக தற்போது நடைமுறையில் பயன்படுத்தி கொண்டுவருகின்ற “RUN” எனும் சேவையை தற்போது செயலில்உள்ள நிறுவனங்களுக்கான பெயரை ஒதுக்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். (அதாவது ஏற்கனவே ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட நிறுவனங்கள் இந்த “RUN” எனும் சேவையினை பெயர் மாற்றத்திற்காகமட்டும் பயன்படுத்திகொள்ளேவேண்டும், ஆனால் புதிய “SPICe +” எனும் படிவத்தின் “பகுதி A” ஆனது புதியதாக துவங்கிடும் நிறுவனத்திற்கு மட்டும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்). தற்போதுநடைமுறையிலுள்ள விதியினை புதியதாக விதி 9 ஐ கீழே உள்ள விதியுடன் மாற்றுவதன் மூலம் இதற்காக தேவையானவாறு திருத்தத்தை மத்திய அரசு செய்துள்ளது: "விதி 9. பெயர் முன்பதிவு அல்லது பெயர் மாற்றம்செய்தல்- இணைய சேவையின் மூலம் ஒரு நிறுவனத்தின் பெயரினை ஒதுக்கீடுசெய்திடகோரி முன்பதிவு செய்வதற்கான விண்ணப்பம் ஒன்றினை www.mca.gov.in எனும் இணைய சேவையைப் பயன்படுத்தி இதில் கிடைக்கும் SPICe + (மின்னணு முறையில் நிறுவனத்தை இணைப்பதற்கான எளிய விவரம்: INC-32) எனும் படிவத்துடன் சமர்ப்பிக்கவேண்டும், மேலும் நிறுவனங்கள் (பதிவு அலுவலகங்கள் மற்றும் கட்டணங்கள்) விதிகள், 2014 இல் அனுமதிக்கப்பட்ட போதுமான கட்டணத்துடன் இணைய சேவையான RUN ( தனித்த பெயரை ஒதுக்கிடுதல்) எனும் சேவையை பயன்படுத்துவதன் மூலம் பெயரை மாற்றுவதற்காக, அத்தகையஇணைய படிவத்தில் காணும் ஏதேனும் குறைபாடுகளை பதினைந்து நாட்களுக்குள் சரிசெய்து மீண்டும் சமர்ப்பிக்க அனுமதித்த பின்னர் அவை மத்திய பதிவு மைய பதிவாளரால்அங்கீகரிக்கப்படலாம் அல்லது நிராகரிக்கப்படலாம், , இந்தபுதிய படிவத்தினை பயன்படுத்தி கொள்ளும் நடைமுறையானது பிப்ரவரி 15, 2O2O முதல் நடைமுறைக்கு வருகின்றது படிவத்தின் இரண்டாம் பகுதிக்கு பங்குதாரர்கள் தங்களுடைய கவனத்தை நாடலாம். படிவத்தின் "பகுதி B", புதிய நிறுவனங்கள் "EPFO பதிவு", "ESIC பதிவு", "தொழில்முறை வரி பதிவு (மகாராஷ்டிராமாநிலத்திற்கு)", "வங்கிக் கணக்கைத் துவங்குதல்" ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்க வேண்டிய செயல்கள் இப்போது கட்டாயமாக்கப் பட்டுள்ளன. . இந்த படிவத்தின் பகுதி B இன்மூலம் வழங்கப்படும் சேவைகளின் பட்டியல் அவற்றின் பொருந்தக்கூடிய தன்மை ஆகியவை கீழே அட்டவணைப் படுத்தப் பட்டுள்ளன:
சுருக்கமாககூறுவதெனில், புதிய நிறுவனங்கள் அனைத்து பதிவுகளையும் ஒரே இடத்தில் பெறுவதற்கு ஏதுவாக SPICe + எனும் புதியபடிவம் வெளியீடு செய்ததன் வயிலாக மாற்றியமைத்த துள்ள அரசாங்கத்தின் நடவடிக்கையானது வரவேற்கதக்க செயலாகும்,

செவ்வாய், 21 ஜூலை, 2020

எந்தவொரு நிறுவனத்திலும் கூடுதல் இயக்குனர்களையும் முக்கிய நிர்வாக பணியாளர்களையும் நியமிப்பதற்கான செயல்முறை


கூடுதல் இயக்குனர் (பிரிவு 161 மற்றும் அத்தியாயம் XI இன் படி நிறுவனங்கள் (இயக்குநர்களின் நியமனம் மற்றும் தகுதிகள்) விதிகள், 2014] கூடுதல் இயக்குநர் என்பவர் இயக்குநர் குழுவால் எந்த நேரத்திலும் நியமிக்கப்படக்கூடியவர், அவர் அடுத்த ஆண்டு பொதுப்பேரவைக் கூட்டம் நடைபெறும் நாள் வரை அல்லது வருடாந்திர பொதுப்பேரவைக் கூட்டம் நடத்தப்பட வேண்டிய கடைசி நாள்வரை, இவற்றுள் எது முந்தையதோ அந்த நாள்வரையில் கூடுதல் இயக்குநராக இருப்பார். இவ்வாறான கூடுதல் இயக்குநரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் பின்வருமாறு- 1. கூடுதல் இயக்குநரை நியமிப்பதற்கான இயக்குநர்குழுத் தீர்மானம் ஒன்றினை இயக்குநர் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றவேண்டும் 2. படிவம் DIR 2 இன் வாயிலாக தொடர்புடைய நபரின் ஒப்புதல் கடிதம் பெறவேண்டும் 3. தொடர்புடைய நபர் பிற நிறுவனங்களில் ஆர்வம் காட்டுபவராக இருந்தால் MBP 1 , DIR 8 ஆகிய இரு படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்திடவேண்டும் 4. ஆதார் அட்டை வருமானவரி அட்டை ஆகிய இரண்டையும் சுய சான்றளிக்கப்பட்டு விருப்ப இணைப்பாக இணைத்திடவேண்டும் 5. DIR 12 எனும் படிவத்தினை மேலே கூறிய ஆவணங்களுடன் நிறுமங்களின் பதிவாளரிடம் சமர்ப்பித்திடவேண்டும் எந்தவொரு நிறுவனமும்,தங்களுடைய இயக்குநர் குழுவில் எந்தவொரு இயக்குநரையும் நியமித்த முப்பது நாட்களுக்குள், நிறுவனங்கள் (பதிவு அலுவலகங்கள் மற்றும் கட்டணங்கள்) விதிகள், 2014 இல் வழங்கப்பட்ட கட்டணத்துடன், படிவம் DIR-12 இல் பதிவாளரிடம் தொடர்புடைய நபரின் ஒப்புதல் படிவும்DIR 2 இணைத்து சமர்ப்பித்திட வேண்டும். முக்கிய நிர்வாக பணியாளர்களின் நியமனம் (பிரிவு 196, 203 மற்றும் அத்தியாயம் XIII இன் படி நிறுவனங்கள் (நிர்வாக பணியாளர்களின் நியமனம் மற்றும் ஊதியம்) விதிகள், 2014] முக்கிய நிர்வாக பணியாளர் என்றால் யார் நிறுவனங்களின் சட்டம் பிரிவு 2 (50) இன் படி, "முக்கிய நிர்வாக பணியாளர்கள்", என்பவர் ஒரு நிறுவனம் தொடர்பாக, (i) தலைமை நிர்வாக அதிகாரி அல்லது நிர்வாக இயக்குநர் அல்லது மேலாளர்; (ii) நிறுவனத்தின் செயலாளர்; (iii) முழுநேர இயக்குனர்; (iv) தலைமை நிதி அதிகாரி அத்தியாயம் XIII இன் பிரிவு 203 மற்றும் விதி 8 இன் படி நிறுவனங்கள் (நிர்வாக பணியாளர்களின் நியமனம் மற்றும் ஊதியம்) விதிகள், 2014 இன்படி பட்டியலிடப்பட்ட ஒவ்வொரு நிறுவனமும் பத்து கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் செலுத்தப் பட்ட பங்கு மூலதனத்தைக் கொண்ட ஒவ்வொரு பொது நிறுவனமும் முழுநேர முக்கிய நிர்வாக பணியாளர்களை கொண்டிருக்கவேண்டும். எனவே தனியார் நிறுவனங்கள் முக்கிய நிர்வாக பணியாளர்களை நியமிக்க தேவையில்லை என்று முடிவு செய்யலாம். ஆனால் இதற்கு விதிவிலக்கு உள்ளது XIII அத்தியாயத்தின் விதி 8A இன் படி (நிர்வாக பணியாளர்களின் நியமனம் மற்றும் ஊதியம்) விதிகள், 2014 பத்து கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் செலுத்தப் பட்ட பங்கு மூலதனத்தைக் கொண்ட ஒவ்வொரு தனியார் நிறுவனத்திற்கும் முழுநேர நிறுவன செயலாளர் கண்டிப்பாக இருக்க வேண்டும் முக்கிய நிர்வாக பணியாளர்களை நியமிக்கும் நடைமுறை 1 ஊதியம் உள்ளிட்ட நியமனத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைக் கொண்ட தீர்மாணத்தினை இயக்குநர்களின் குழுக்கூட்டத்தில் நிறைவேற்றவேண்டும். 2. MBP-1 , DIR 8 ஆகிய இரண்டு படிவங்களையும் மிகச்சரியாக பூர்த்தி செய்து பெறவேண்டும் 3. DIR 12 எனும் படிவத்தினை மேலே கூறிய ஆவணங்களுடன் நிறுமங்களின் பதிவாளரிடம் சமர்ப்பித்திடவேண்டும் 4. சிறப்புத் தீர்மானத்தை நிறைவேற்றிடுக (நிர்வாக இயக்குனர், முழுநேர இயக்குநர் அல்லது மேலாளரை நியமித்தல் தொடர்பாக) 4. MGT-14 எனும் படிவத்தினை நிறுமங்களின் பதிவாளரிடம் சமர்ப்பித்திடவேண்டும்(பொது நிறுவனமாக இருந்தால் மட்டும்) 5. MR 1 எனும் படிவத்தினை நிறுமங்களின் பதிவாளரிடம் சமர்ப்பித்திடவேண்டும்பொது நிறுவனமாக இருந்தால் மட்டும்) கவனிக்க வேண்டிய முக்கிய செய்திகள் 1. ஒரு முழுநேர முக்கிய நிர்வாக பணியாளர்கள் ஒரே நேரத்தில் அதன் துணை நிறுவனத்தை தவிர ஒரு நிறுவனத்திற்கு மேல் பணியில் இருக்க முடியாது: 2. முழுநேர முக்கிய நிர்வாக பணியாளர்கள் பணிவிலகளினால் உருவாகும் காலிபணியிடமானது அத்தகைய காலியிடம் உருவாகி ஆறு மாத காலத்திற்குள் இயக்குநர்களின் குழுக் கூட்டத்தால் நிரப்பப்படும், . 3. எந்தவொரு நிறுவனமும் ஒரே நேரத்தில் ஒரு நிர்வாக இயக்குனரையும் மேலாளரையும் (நிருவாகியை) நியமிக்கவோ அல்லது பணியமர்த்தவோ கூடாது. 4. எந்தவொரு நிறுவனமும் ஒரு நபரை அதன் நிருவாக இயக்குனராக, முழுநேர இயக்குனராக அல்லது மேலாளராக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒரேசமயத்திற்கு நியமிக்கவோ அல்லது மீண்டும் நியமிக்கவோ கூடாது:

சனி, 18 ஜூலை, 2020

ஆடுமேய்த்திடும் சிறுவனும் ஓநாயும்


ஆடுமேய்த்திடும் சிறுவன் ஒருவன் கிராமத்தின் ஒவ்வொருவருடைய வீடுகளிருந்தும் ஆடுகளை ஒன்று சேர்த்து அந்த கிராமத்திற்கு அருகிலிருந்த ஒரு பெரிய காட்டிற்கு கொண்டு சென்று மேய்த்து கொண்டு வருவது வழக்கமான செயலாகும் . தினமும் ஒவ்வொருவருடைய வீடுகளிருந்தும் ஆடுகளை ஒன்று சேர்த்து அந்த கிராமத்திற்கு அருகிலிருந்த ஒரு பெரிய காட்டிற்கு கொண்டு சென்று மேய்த்து கொண்டு வருகின்ற இதேபணியை செய்வதால் விரைவில் அந்த ஆடுமேய்த்திடும் சிறுவனுக்கு காட்டில் ஆடுகளை கொண்டுசென்று மேய்த்திடும் வாழ்க்கையானது மிகவும் சலிப்பாக இருப்பதை கண்டான். இவ்வாறான பணியின்போது அந்த ஆடுகளுடன் அரட்டை அடிப்பது அல்லது ஆட்டிற்கான புல்லாங்குழலை இசைப்பது ஆகிய இரண்டில் ஒன்று மட்டுமேஅவனுடைய வாழ்க்கையில் சிறிது உற்சாக மூட்டுவதாக இருந்தது வேறு எந்தவொரு செயலும் அவனுடைய அன்றாட வாழ்க்கையை மகிழ்ச்சியூட்டுவதாக இல்லை அதனால்ஒரு நாள் தன்னுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேறு என்ன செய்யலாம் என அந்த ஆடுமேய்த்திடும் சிறுவன் ஆலோசித்து கொண்டே செம்மறி ஆடுகளையும் அமைதியான காட்டையும் பார்த்துக் கொண்டிருந்த போது, ஓநாய் ஒன்று இங்கு வந்தால் என்னவாகும் தான் என்ன செய்யவேண்டும் என்று அந்த சிறுவனின் சிந்தனை திசைமாறு சென்றுகொண்டிருந்தபோது, . அவ்வாறு ஓநாய் ஏதேனும் வந்தால் அது ஆட்டுமந்தையைத் தாக்கத்துவங்கிடும் அவ்வாறான இக்கட்டான நிலையில் தங்களை உதவிக்கு அழைக்கும்படி யும் , அவ்வாறு உதவி கோரியவுடன் கிராமவாசிகள் அனைவரும் அங்குவந்து அந்தஓநாயை விரட்டிடுவார்கள் என அவ்வாடுகளின் சொந்தகாரர்கள் தன்னிடம் கூறியிருந்தை அச்சிறுவன் நினைவுகூர்ந்தான். எனவே இப்போது, உண்மையில் ஓநாய் எதையும் காணவில்லை என்றாலும், அச்சிறுவன் உரத்த குரலில் “ஓநாய்! ஓநாய்!" என கூச்சலிட்டவாறு கிராமத்தை நோக்கி ஓடினான், அந்த சிறுவன் எதிர்பார்த்தபடி, அந்த சிறுவனின் “ஓநாய்! ஓநாய்!" என கூச்சலிட்டதைக் கேட்ட கிராமவாசிகள் அனைவரும் தாங்கள் செய்து கொண்டிருந்த பணியை அப்படியே விட்டுவி்ட்டு, அந்த ஓநாய் தங்களுடைய ஆடுகளை அடித்து தின்றிடாமல் காத்திடுமாறு விரட்டியடிப்பதற்காக மிகவும் வேகமாக அந்த காட்டில் ஆடுமேயும் பகுதிக்கு ஓடிவந்து சேர்ந்தனர் . ஆனால் அவர்கள் அங்கு சென்றுசேர்ந்தபோது ஓநாய்எதுவுமில்லாமல் அந்த ஆடு மேய்த்திடும் சிறுவன் தந்திரமாக விளையாடி தங்களை ஏமாற்றியதை எண்ணி அனைவரும் திடுக்கிட்டு நின்றுவிட்டனர் இவ்வாறு அனைவரும் ஓநாய்எதுவும் இல்லாமல் திடுக்கிட்டநிற்பதை கண்டு அந்த சிறுவன் சிரிப்பதையும் கண்டனர் . ஒரு சில நாட்களுக்குப் பிறகு ஆடுமேய்த்திடும் சிறுவன் மீண்டும், “ஓநாய்! ஓநாய்!" என கூச்சலிட்டதைக் கேட்ட கிராமவாசிகள்அனைவரும் தாங்கள் செய்து கொண்டிருந்த பணியை மீண்டும் அப்படியே விட்டுவி்ட்டு, அந்த ஓநாய் தங்களுடைய ஆடுகளை அடித்து தின்றிடாமல் காத்திடுமாறு விரட்டியடிப்ப தற்காக மிகவும் வேகமாக அந்த காட்டின் ஆடுமேயும் பகுதிக்கு ஓடிவந்து சேர்ந்தனர் . ஆனால் அவர்கள் அங்கு சென்றுசேர்ந்தபோது ஓநாய் எதுவுமில்லாமல் அந்த ஆடு மேய்த்திடும் சிறுவன் தந்திரமாக விளையாடி மீண்டும் தங்களை ஏமாற்றியதை எண்ணி அனைவரும் திடுக்கிட்டு நின்றுவிட்டனர் இவ்வாறு அனைவரும் ஓநாய்எதுவும் இல்லாமல் திடுக்கிட்ட நிற்பதை கண்டு அந்த சிறுவன் மீண்டும் சிரிப்பதையும் கண்டனர் . இவ்வாறான நிலையில் ஒரு நாள் மாலை சூரியன் காடுகளின் பின்னால் மறைந்துகொண்டிருந்தபோது, மேய்ச்சல் முடிந்து ஆடுகள் அனைத்தும் காட்டிலிருந்து கிராமத்தை நோக்கி திரும்பி ஊர்ந்து கொண்டிருந்த போது, உண்மையில் ஓநாய் ஒன்று வந்து ஆடுகளின் மீது பாய்ந்து அடித்து தின்ன துவங்கியது. அதனை கண்டவுடன் ஆடுமேய்த்திடும் சிறுவன் உண்மையில் அதிக பயத்துடன் “ஓநாய்! ஓநாய்!" என கத்தி உதவி கோரினான் ஆனால் கிராமவாசிகள்இந்த சிறுவனின் கூக்குரலைக் கேட்டாலும், முன்பு இரண்டுமுறை தங்களை அந்த சிறுவன் ஓநாய் எதுவும் வராமலேயே வந்ததைப் போன்று தங்களை உதவிக்கு அழைத்து ஏமாற்றியதை போன்று இப்போதும் அந்த சிறுவன் ஏமாற்றுவதாக . "அவன் மீண்டும் நம்மை முட்டாளாக்க முடியாது," என்று எண்ணி யாரும் அந்த ஆடுமேய்த்திடும் சிறுவனுடைய உதவிக்கு ஓடிவந்து சேரவில்லை . அதனால் அந்த ஓநாய் ஆனது ஆடுகளில் பலவற்றை அடித்து கொன்று தின்ற, பின்னர் காட்டுக்குள் சென்றுசேர்ந்தது. அறிவுரை: நாம் தொடர்ந்து பொய்யை பேசிகொண்டே இருந்தால் ஒருநாள் உண்மையை பேசினாலும் யாரும் நம்மை நம்ப மாட்டார்கள். அதனால் எப்போதும் உண்மையை பேசுக.

புதன், 15 ஜூலை, 2020

Vahan System எனும் அமைப்புடன் மின்னனு வழி பட்டியலின் (E Way Bill )தளத்தினை ஒருங்கிணைத்தல்


தற்போது சரக்கு சேவைவரியின் கீழ் செயல்படுத்தப்படும் மின்வழி பட்டியலானது (E Way Bill (EWB)) போக்குவரத்துத் துறையின் Vahan System எனும் அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த வாகன் சிஸ்டம் என்பது இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களின் டிஜிட்டல் தரவுகளின் அடிப்படையில் நாடு தழுவிய அளவிலான தேடலிற்கான அனுமதியை வழங்குகிறது.மின் வழி பட்டியல் தயாரிக்கும்போது உள்ளிடப்பட்ட வண்டி எண் இப்போது புதிய வாகன் சிஸ்டதரவுகளின் தளத்தின் மூலம் சரிபார்க்கப்படுகின்றது. அதாவது மின்வழிபட்டியல் தயார்செய்வதற்காக வண்டிஎண்ணை உள்ளீடு செய்தவுடன், எச்சரிக்கை செய்தியொன்று திரையில் பிரதிபலிக்கும், பின்னர், வாகன் தரவுத்தள அமைப்பில் அவ்வண்டியின் விவரங்கள் கிடைக்கவில்லை என்றால், மின்வழி பட்டியலை உருவாக்க இந்த தளமானது அனுமதிக்காது. அதனால் அதற்குமுன் போக்குவரத்தாளர்கள் தங்களுடைய வண்டியின் விவரங்களை https://vahan.nic.in/nrservices/faces/user/searchstatus.xhtml எனும் இணையதளத்தில் உள்ளீடு செய்து தங்களுடைய வண்டியின் எண் உள்ளதாவென இந்த வாகன் அமைப்பில் சரிபார்த்திடுக என பரிந்துரைக்கப் படுகின்றது வாகன் அமைப்பில் இந்த வண்டியின் எண் இல்லை என்றால். மின் வழி பட்டியலைத் தயாரிப்பவருக்கு வாகன் தரவுத்தளத்தில் குறிப்பிட்ட வண்டி எண் கிடைக்காதது குறித்து ‘எச்சரிக்கை செய்தி’ யொன்று கிடைக்கும். ஒரு வேளை, EWB எனசுருக்கமாக அழைக்கப்பெறும் மின் வழி பட்டியலில் உள்ளிடப்பட்ட வண்டி எண் வாகன் தரவுத்தளத்தில் கிடைக்கவில்லை என்றால், உடனடியாக போக்குவரத்தாளர்கள் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) வண்டியின் பதிவை சரிபார்த்து புதுப்பிக்க வேண்டும்., அவ்வாறு புதுப்பிக்கவில்லை யெனில் , இந்த வண்டியின் எண்ணைகொண்டு மின்வழிபட்டியல் உருவாக்க அனுமதிக்கப்படாது ஒரு வேளை, மின்வழிபட்டியில் உள்ளிடப்பட்ட வண்டியின் எண் பதிவு செய்யப்பட்டு, கணினி இன்னும் ‘எச்சரிக்கை செய்தியை’ காண்பித்து கொண்டிருந்து எனில் உடன் சம்பந்தப்பட்ட RTO வை அணுக பரிந்துரைக்கப்படுகிறது. வாகன் அமைப்பில் வண்டியின் விவரங்கள் புதுப்பிக்கப்பட்டதும், வழக்கம்போன்ற மின்வழிபட்டியினை தயார்செய்து கொள்ளலாம் அவ்வாறு புதுப்பித்தல்செய்வதற்காக. போக்குவரத்தாளர் அசல் RC , பிற ஆவணங்களுடன் RTO வைப் சந்தித்து தங்களுடைய இந்த குறையை சரிசெய்திடுமாறு கோரி விவரங்களை வாகன் தரவுத்தளத்தில் புதுப்பிக்க வேண்டும். வாகன எண் தற்காலிக பதிவுடன் இருந்து விவரங்கள் சரிபார்க்கப்படாவிட்டால், பயனாளர்கள் உடன் TR இல் துவங்கிடும் தற்காலிக வண்டி எண்ணை தங்களுடைய மின்வழிப்டடியில் உள்ளிட வேண்டும். விவரங்கள் வாகன் தரவுதளத்தில் கிடைக்கின்றன, ஆனால் மின்வழிபட்டியல் தளத்தில் கிடைக்கவில்லை: என்றால்,உடன் வாகன் அமைப்பில் இருக்கும் வண்டி எண்ணானது மின்வழிபட்டியல் தளத்தில் கிடைக்கவில்லை: எனும் குறையை தீர்வுசெய்திடுமாறு கோரி தொடர்புடைய துறையில் மனு ஒன்றினை சமர்ப்பித்திடுமாறு பரிந்துரைக்கப்படுகின்றது

ஞாயிறு, 12 ஜூலை, 2020

நேர்மையின் பரிசு.


ஒரு பால்காரன் நேர்மையற்ற வழிமுறையின் மூலம் மிகவும் செல்வந்தரானார். எவ்வாறு எனில் தனது சொந்த கிராமத்திலிருந்து வாடிக்கையாளர்கள் வசிக்கும் நகரத்தை அடைய அவர் தினமும் ஒரு ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. அந்த ஆற்றை கடக்கும்போது போதுமானஅளவு ஆற்று தண்ணீரை தாராளமாக பாலுடன் கலக்கி விற்று நல்ல இலாபம் அடைந்தால்மிகவும் பெரியசெல்வந்தரானார் அவர் தனது மகனின் திருமணத்திற்காக இதுவரையில் பாலைவிற்று சேமித்து வைத்திருந்தத் தொகையைச் சேகரித்து அதில் குறிப்பிட்ட தொகையை மட்டும் வீட்டில் பத்திரமாக வைத்துவிட்டு மிகுதி. இவ்வாறு சேகரிக்கப்பட்ட பெரிய தொகையுடன் அருகிலிருந்த நகரத்திற்கு சென்றார் அந்த நகரில் அவர் பணக்காரர்கள் அணியும் உடைகள் பளபளப்பான தங்க ஆபரணங்கள் ஆகியவற்றைஏராளமான அளவில் வாங்கிகொண்டு அதே ஆற்றினை கடந்து தன்னுடைய கிராமத்திற்கு திரும்பினார். மகனின் திருமணத்திற்கான விலையுயர்ந்த பொருட்களை வீட்டிற்கு கொண்டுசெல்வதால் அந்த ஆற்றினை கடப்பதற்காக ஒரு வாடகை படகை அமர்த்தி அதில் பயனம் செய்தார் ஆனால் ஆற்றைக் கடக்கும்போது அந்த படகு கவிழ்ந்தது அதனால் அவர் நகரத்தில் திருணமத்திற்காக கொள்முதல் அனைத்து விலையுயர்ந்த பொருட்களும் ஆற்றின் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டன. அந்த பால் காரர் மட்டும் எப்படியோ நீச்சலடித்து ஆற்றின் கரையேறி அதிக மனவேதனையுடனும் துக்கத்துடனும் அடுத்து என்ன செய்வது என திகைத்து அந்த ஆற்ங்கரையிலேயே பேசாமல் அமர்ந்துவிட்டார் . அப்போது ஆற்றில் இருந்து , “அதிகம் வருத்தபடாதே பால்காரரே நீங்கள் உங்களுடைய வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதன் மூலம் சம்பாதித்த சட்டவிரோதமான இலாபத்தை மட்டுமே தற்போது இழந்துவிட்டீர்கள். ஏமாற்றாத பணம் உங்களுடைய வீட்டில் பத்திரமாக இரு்க்கின்றது அதனை கொண்டு சிக்கனமாக உங்களுடைய மகனின் திருமணத்தை நடத்திடுக “ என ஒரு குரல் கேட்டது ஆம் உண்மைதான் : நேர்மையான நடவடிக்கைகள் எப்போதும் மிக உயர்ந்தவை அதன் வாயிலாக சம்பாதித்த பணம் இழக்கபடாமல் பத்திரமாக இருக்கும் ஆனால் . தவறான முறைகளால் சம்பாதித்த பணம் ஒருபோதும் நிலைத்திருக்காது.

செவ்வாய், 7 ஜூலை, 2020

சிறு வணிக உரிமையாளர்களுக்கு MSME கடன்கள் ஏன் சிறந்த தேர்வாக இருக்கின்றன?


உலகளவில் செயல்படும் சிறு வணிக உரிமையாளர்களின் எண்ணிக்கையில் சீனா முதலிடத்தையும் இந்தியா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன, இந்தியாவில் MSME களைப் பற்றி MSME கள் ஏற்றுமதியில் 40% மற்றும் மொத்த வேலைவாய்ப்பில் 70% பங்களிப்பு செய்கின்றன, இந்தியா சிறு வணிக உரிமையாளர்களின் இரண்டாவது பெரிய வீடாக அமைகிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 2019 அறிக்கையின்படி, இந்தியாவில் 63.38 மில்லியன் எம்எஸ்எம்இ அலகுகள் உள்ளன நாடு முழுவதும் 111 மில்லியன் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன. MSME களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்களிப்பு 28% ஆகும், இது விவசாயத் துறைக்கு அடுத்ததாக உள்ளது. ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, உற்பத்தித் துறையின் பங்கு தற்போது 16% இலிருந்து 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 25% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த இந்த MSME களில் 75% ஆந்திரா, பீகார், குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட முதல் 10 மாநிலங்களால் பங்களிக்கப்படுகின்றது. . இவ்வாறான சிறு வணிக உரிமையாளர்களில் பெரும்பாலானோர் தாங்கள் தொடங்க விரும்பும் வணிகத்தில் முதலீடு செய்வதற்காகவோ அல்லது இருக்கும் வணிகத்தை விரிவுபடுத்துவதற்காகவோ வரையறுக்கப்பட்ட நிதியைமட்டுமே கொண்டுள்ளனர். மேலும், ஒவ்வொரு சிறு வணிக உரிமையாளரும் துவக்கத்தில் தாங்கள் விரும்பும் ஒரு புதிய நிறுவனத்தைத் துவங்குவதற்காக தங்களுடய கடினமான உழைப்பில் சம்பாதித்த அவனுடைய / அவளுடைய பணத்தை முதலீடு செய்ய விரும்புவதில்லை. இவ்வாறான நிலையில் அவர்களைப் பொறுத்தவரை, இந்த புதிய MSME கடன்கள் மிகவும் பொருத்தமானவை, ஏனெனில் இந்த கடன்களின் பல வசதிகளும் தன்மைகளும் வழக்கமான வணிகக் கடன்களிலிருந்து இவை வேறுபடுகின்றன. எம்.எஸ்.எம்.இ கடன்களானவை சிறு வணிக உரிமையாளர்கள், தொடக்கநிலை நிறுவனங்கள், பெண்தொழில் முனைவோர் மீச்சிறு சிறு நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு மட்டுமே பொருந்தக் கூடியவை,களாகும் அவை மிககுறைந்த வட்டி விகிதத்தில் எளிதாக திருப்பிச் செலுத்தும் விருப்பங்களுடன் வழங்கப்படுகின்றன. சிறு வணிக உரிமையாளர்களை பாதிக்கும் காரணிகள் சிறு வணிக உரிமையாளர்கள்அனைவரும் பணவீக்கம், செயல்படும் இடத்திற்கு அதிக வாடகை, விலையுயர்ந்த மூலப்பொருட்கள், மாறுபடும் அரசாங்கக் கொள்கைகள் என்பன போன்ற இவ்வணிக நிறுவனங்களின் வளர்ச்சியை பாதிக்கக்கூடிய பல்வேறு வெளிப்புற சவால்களைச் சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இவ்வாறானவைகளில் ஒரு சில காரணிகளை சிறு வணிக உரிமையாளர்களால் மாற்றவோ தவிர்க்கவோ முடியாது, ஆனால்வணிக விரிவாக்கம், உபகரணங்களையும் இயந்திரங்களையும் வாங்குவது அல்லது மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்வது என்பன போன்ற பணம் தொடர்பான அனைத்து காரணிகளையும் சமாளிக்கமுடியாமல் தத்தளிக்கும் நிலையில் இவைகளை சமாளித்திடும் நோக்கங்களுக்காக MSME கடன்களை தேர்வு செய்வது மிகந்த பயனளிக்கும் ஒருவழிமுறையாகும். சிறு வணிக உரிமையாளர்களுக்கான அரசு கடன் திட்டங்கள் ஒரு தேநீர் விற்பனையாளர் கூட இந்த எம்.எஸ்.எம்.இ கடனுக்காக விண்ணப்பிக்கலாம், அதில் ஒரு விற்பனையாளருக்கான ஆரம்ப முதலீடு ரூ. 10,000மிகாமல்இருக்கவேண்டும். ஏராளமான வங்கி சாரா நிதி நிறுவனங்களும் ( Non-banking Financial Companies (NBFCs)), மீச்சிறு நிதி நிறுவனங்களும் (Micro Finance Institutions (MFIs)) அரசு நிறுவனங்களும் சிறு வணிக உரிமையாளர்களுக்கு கடன் மதிப்பெண் (credit score) அல்லது ITRஐ சரிபார்க்காமலேயே எம்.எஸ்.எம்.இ கடன்களை வழங்கதயாராக உள்ளன. பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) இன் கீழ் வழங்கப்படும் மீச்சிறுநிறுவன மேம்படுத்துதல் மறுநிதிமுகமை (Micro Units Development and Refinance Agency (MUDRA)) கடன் திட்டத்தின் படி வழங்கப்படும் கடனானது அரசாங்க கடன் திட்டத்தின் சிறந்த எடுத்துக்காட்டாகும், இதில் எந்தவொரு நபரும் புதியதாக தொழில் தொடங்குவதற்கான கடன் தொகையை ரூ. 50,000 முதல் ரூ. 10 லட்சம் வரை மிககுறைந்த வட்டி விகிதத்திலும் திருப்பிச் செலுத்தும் காலம் அதிகபட்சம் 60 மாதங்கள் வரையிலும் அனுமதித்து கடன்வழங்கப்படுகின்றது. இந்திய அரசு அனுமதித்துள்ள எம்.எஸ்.எம்.இ திட்டங்கள் பின்வருமாறு வங்கி கடன் வசதி திட்டம்,மீச்சிறு சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை (CGTMSE),59 நிமிடங்களில் தொடக்க நிறுவனங்களுக்கான MSME வணிக கடன்கள்,பிரதான் மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP),பிரதான் மந்திரி ரோஸ்கர் யோஜனா (PMRY) எம்.எஸ்.எம்.இ க்களுக்கானSIDBமேக் இன் இந்தியா மென்மைகடன் நிதி (SMILE) ஸ்டாண்ட்-அப் இந்தியா,தொடக்கநிலை (Start-up )வணிக கடன்கள் ,ஆகியவைகளாகும் மீச்சிறு நடுத்தர நிறுவனங்களின் (MSME) கடன்களின் வசதிவாய்ப்புகள் இவை குறுகிய கால கடன்கள் என்றும் அழைக்கப்படுவதால், இவை அவசர பணத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் நம்முடைய வணிகத்தின் பணப்புழக்கத்தை மேம்படுத்துவதற்கும் உதவுகின்றன. பெறக்கூடிய எம்எஸ்எம்இ கடன் தொகை குறைந்தது ரூ. 6000மும் அதிகபட்சம் ரூ.2 கோடி யும்வணிக தேவைகளைப் பொறுத்து அதற்கு மேற்பட்டும்இருக்கலாம் . அவ்வாறே திருப்பிச் செலுத்தும் காலம் குறைந்தபட்ச 12 மாதங்கள் முதல் அதிகபட்சம் 60 மாதங்கள் வரையிலும் இருக்கலாம்., கட்டணங்களும்அபராத கட்டணங்களும் ஒவ்வொரு நிதி நிறுவனத்திற்கு ஏற்ப மாறுபட்டவைகளாகும். எந்தவொரு ஆவணத்திலும் கையொப்பமிடுவதற்கு முன்பு நாம் அனைத்து கடன் விவரங்களையும் கவனமாகவும் முழுமையாகவும் படிக்க வேண்டும். இந்த கடன்ஆனது ஒரு துனை பிணையம் எதுவும் இல்லாத ( collateral free) கடன் என்பதையும் நினைவில் கொள்க, அதில் நாம் எந்தவொரு காப்புத்தொகையயும் கடன் வழங்குபவரிடம் டெபாசிட் ஆக செலுத்த வேண்டியதில்லை. MSME கடனுக்கு விண்ணப்பிக்க தகுதி விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது குறைந்தபட்சம் 18 வயதும் கடன் முதிர்வு நேரத்தில் அதிகபட்சம் 65 வயதாகவும் இருக்கவேண்டும் .வணிக இருப்பு இருக்கும்(Business existence) விற்பணை நடவடிக்கைகளின் மீதானகுறைந்தபட்ச வருவாய் ஆகியவை அந்தந்த நிதி நிறுவனங்களால் தீர்மானிக்கப்படும்.வர்த்தகம், சேவைகள் உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே MSME கடன்கள் வழங்கப்படுகின்றன சிறு வணிக உரிமையாளர்களைத் தவிர, தனிநபர்கள், சுயதொழில் வல்லுநர்கள், சுயதொழில் புரியாத தொழில் வல்லுநர்கள், தனியார் மற்றும் பொது வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள், தனிநிபர் உரிமையாளர், கூட்டாண்மைநிறுவனங்கள், பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை , வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், அறக்கட்டளைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் போன்றவை இந்தஎம்.எஸ்.எம்.இ கடன்களை பெறமுடியும் . முடிவு: சிறு வணிக உரிமையாளர்களுக்கு எம்.எஸ்.எம்.இ கடன் சிறந்த கடன் விருப்பமாகும், ஏனெனில் இது அவர்களின் வணிகத் தேவைகளை சரியாக பூர்த்தி செய்கிறது. நீண்டகால சுமை மற்றும் தொந்தரவைத் தவிர்க்க, சிறு வணிக உரிமையாளர்கள் தங்களது அவசர பணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய குறுகிய கால கடன்களைத் தேர்வுசெய்து கடன் தொகையை விரைவில் திருப்பிச் செலுத்தலாம். எம்.எஸ்.எம்.இ கடனைப் பெறுவதற்கு, சிறு வணிக உரிமையாளர்கள் விரும்பிய NBFC, MFI ஐ அல்லது அரசு கடன் திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை நேரடியாக பார்வையிடலாம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலமும், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களுடன் தேவையான ஆவணங்களை இணைப்பதன் மூலமும் இணையத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். நிதி சந்தையில் கிடைக்கும் பல்வேறு கடன் விருப்பங்களிலிருந்து சரிபார்த்து ஒப்பிடலாம் தேவைகளுக்கும்விருப்பத்திற்கும் ஏற்ற சிறந்த கடன் ஒப்பந்தத்தை தேர்வு செய்யலாம்.

சனி, 4 ஜூலை, 2020

எந்தவொரு பிரச்சினையையும் வித்தியாசமாக தீர்வுசெய்தல்


ஒரு கிராமத்தில் வயதானவர் ஒருவர் தனது மூன்று மகன்களுடன் வசித்து வந்தார். அவ்வயதானவர் காலமான பிறகு. அவருடைய வழக்கறிஞர் ஒருவர் அந்த வயதானவருடைய மூன்று மகன்களிடம் வந்து அந்த வயதானவர் தனது விருப்பப்படி எழுதி பதிவுசெய்திருந்த உயிலின்படி அவருடைய வீடுகள், வயல்கள் , இதர சொத்துகள் ஆகிய அனைத்தயும் பிரித்துக் கொடுத்தார். அந்த உயலின்மிகுதியாக அவருடைய குடும்பத்தில் 17 பசுமாடுகளை வளர்த்துவந்ததில் அந்த வயதானவரின். விரும்பியவாறு எழுதி பதிவுசெய்திருந்த உயிலின்படி, "மூத்த மகன் 17 பசுமாடுகளில் பாதி (1/2) பெற வேண்டும். இரண்டாவதான நடு மகனுக்கு 17 பசுமாடுகளில் மூன்றில் ஒரு பங்கு (1/3 ) பெறவேண்டும் ,மூன்றாவதான இளைய மகனுக்கு 17 பசுமாடுகளில் ஒன்பதில் ஒருபாகம் (1/9) கொடுக்கப்பட வேண்டும். " எனக் குறிப்பிட்டிருந்ததால் அதனை நீங்களே உங்களுக்குள் தகராறு இல்லாமல் பிரித்துகொள்க என கூறிஉயிலின் நகலில் அம்மூவரிடமும் கையெழுத்து வாங்கி கொண்டு சென்றுவிட்டார் குடும்பத்தில் பொதுவாக இதுவரை வளர்த்து வந்த இந்த 17 பசுமாடுகளை தங்களுடைய தந்தையின் உயிலின் படி எவ்வாறு பிரித்துகொள்வது என அந்த சகோதரரர்கள் மூவரும் திகைத்து உட்கார்ந்துவிட்டனர் . அவர்களால் அனைத்து சொத்துக்களையும் பிரிக்க முடிந்தது, ஆனால் அவர்களுக்கிடையில் 17 மாடுகளை மட்டும் பாகம் பிரிக்க முடியவில்லை. அந்த 17 மாடுகளை மட்டும் தங்களுக்குள் பாகம் பிரிக்க முடியாததால், தங்களுடைய தந்தையின் விருப்பப்படி உயிலில் குறிப்பிடப்பட்ட வாறு. அக்கிராமத்தில் இருந்த வயதான நல்ல நேர்மையான புத்திசாலியான மனிதர் ஒருவரிடம் சென்று தங்களுடைய பிரிச்சினையை தீர்வுசெய்திடுமாறு மூன்று சகோதரர்களும் கோரலாம் எனமுடிவுசெய்தனர், அவர் ஊருக்கு வெளியே வசித்து வந்தார் .அதனால் மூன்று சகோதரர்களும் அந்த பாகம்பிரிக்கமுடியாத மாடுகள் அனைத்தையும் கும்பலாக புத்திசாலியான நேர்மையான பெரியவருடைய வீட்டிற்கு ஓட்டிசென்று தங்களுடைய குறைகளைகூறி தங்களுடைய கையோடு எடுத்தசென்றிருந்த தங்களுடைய தந்தையாரின் உயிலின் நகலையும் அவரிடம் கொடுத்தனர் மேலும் தங்களுடைய தந்தையின் விருப்பத்தைப் பற்றி அவரிடம் கூறி அதன்படி பிரச்சினை எதுவும் இல்லாமல் அந்த 17 மாடுகளை தங்களுக்கு பிரித்து அளிக்குமாறு கோரினார்கள். அந்த புத்திசாலியான வயதானமனிதர் மிகவும் கவனமாகவும் பொறுமையுடனும் அவர்களுடைய பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்டார். மேலும்அந்த உயிலையும் நன்கு படித்தறிந்து கொண்டு தன்னுடைய வீட்டிடலிருந்த சொந்த பசு மாடு ஒன்றினை சகோதரர்கள் மூவரும் கொண்டுவந்த பசுமாடுகளுடன் சேர்த்து தற்போது மொத்தம்எத்தனை பசுமாடுகள் இருக்கின்றன என கணக்கிடுமாறு கூறினார் உடன் சகோதரர்கள் மூவரும் மிககவணமாக பசுமாடுகளை கணக்கிட்டபோது இப்போது மொத்த பசுக்களின் எண்ணிக்கை 18 ஆக இருக்கின்றன என கூறினர்.மிகவும் சரி என ஆமோதித்த அந்த புத்திசாலியான வயதானமனிதர் அந்த சகோதர்ரகளுடைய தந்தையின் உயிலை திறந்து படித்து அதில் கூறிய விவரங்களை கூறுமாறு சகோதர்ரகளில் ஒருவனிடம் கோரினார் , பின்னர் அதற்கேற்ப பசுக்களை பிரித் திட முடிவெடுத்தார் அதாவது முதலில் 18 பசுக்களில் பாதி (1/2) பாகமான 9 பசுக்களை மூத்த மகனுக்கு கொடுத்தார் .இரண்டாவதாக 18 பசுக்களில் மூன்றில் ஒரு பங்கு (1/3) பாகமான 6 பசுக்களை இரண்டாவது நடு மகனுக்கு கொடுத்தார் மூன்றாவதாாக 18 பசுக்ககளில் ஒன்பதில் ஒரு பங்கு (1/9)பாகமான 2 பசுக்கள் மூன்றாவதாக இளைய மகனுக்கு கொடுத்தார் இப்போது அவர்களுடைய உயிலின்படி பிரித்து கொடுத்த மொத்த பசுக்களின் (9 + 6 + 2 = 17)ஆகின்றது என கணக்கிட்டார் நான்காவதாக இந்த பசுக்களுடன் ஒன்றுசேர்த்த தன்னுடைய ஒரு பசுவை புத்திசாலியான வயதானமனிதர் தன்னிடம் வைத்து கொண்டு சகோதர்களின் தந்தையின்உயிலின்படி பசுக்களை பிரித்து கொடுத்தவாறு அவற்றை அவரவர்கள் கொண்டுசெல்லுமாறு அம்மூன்று சகோதர்களிடமும் அறிவுரை அனுப்பிவைத்தார் ஆம் நம்மால் ஒரு சில நேரங்களில் எந்தவொரு பிரச்சினைக்கும் உரிய தீர்வினை கண்டுபிடிப்பது என்பது கடினமாக இருந்தாலும். ஒரு நபர் ஒரு பிரிச்சினையின் . பொதுவான நிலையைக் கண்டுபிடிக்க முடிந்தால் அந்த பிரச்சினயை அவரால் எளிதாக தீர்வுசெய்திட முடியும். மேலும் எந்தொரு பிரச்சினைக்கும்உரிய தீர்வை அடைய, முதல் படி அந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு இருக்கிறது என்று நம்புவதாகும்.ஆயினும் அந்த பிரச்சினைக்கு உரிய ஒரு தீர்வு இல்லை என்று நாம் கருதினால்.அந்த தீர்வினை நம்மால் கண்டிப்பாக அடையவே முடியாது.

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...