ஞாயிறு, 28 மே, 2023

வெற்று காகிதம் - முதிய துறவியும் புகழ்பெற்றஅறிஞரும்

 ஒருமுறை, நான்கு வேதங்களிலும் நன்கு தேர்ச்சி பெற்ற ஒரு புகழ்பெற்ற அறிஞர் ஒரு வயதான துறவியிடம் சென்று, "நான் வாழ்க்கையின் உண்மைதன்மையை அறிய விரும்புகிறேன், தயவுசெய்து எனக்கு வழிகாட்டுங்கள்" என்று கோரினார்.
உடன் அந்த வயதான துறவி , "நீங்கள் யார்?" என கேட்டபோது
அறிஞர், "என்னை உங்களுக்குத் தெரியாதா? நான் புனித நூல்கள் போன்ற பலவற்றையும் நன்கு கற்றறிந்தவன் அதனால்  இந்த நகரத்தில் எனக்குப் பெரும் புகழ் உண்டு  நான் பல வேதங்களை கற்றிருந்தாலும் இன்னும் வாழ்க்கையின் உண்மைதன்மையை என்னால்  கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த உண்மைதன்மையைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையில் நான் உங்களிடம் வந்தேன்." என அவர் கூறினார்
முதிய துறவி , "அப்படியா மிக்கநல்லது நீங்கள் உங்களுக்குத் தெரிந்ததை எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொண்டு வருகிறீர்களா, ஏனென்றால் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தவற்றினை திரும்பவும் நான் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை. உங்களுக்குத் தெரியாத செய்திகளை மட்டுமே நாம் விவாதித்தால் நான் கற்றுக்கொடுத்தால்  மட்டுமே அது உங்களுக்கு நல்லது." என அறிவுரைக்கூறினார்
அதனை தொடர்ந்து அவ்வறிஞர் உடன் தன்னுடைய இருப்பிடத்திறகு திரும்பி வந்து தனக்கு தெரிந்தவற்றை தான் கற்றுக்கொண்டவற்றை எழுதத் தொடங்கினார். அவற்றை முழுமையாக எழுதும்போது மூன்று வருடங்கள் கழிந்தன அவ்வளவு அறிவு அவருக்கு இருந்தது.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவ்வறிஞர் ஆயிரக்கணக்கான பக்கங்கள் நிரப்பப்பட்ட பெரியபையுடன் அம்முதிய துறவியை காண திரும்பவும்சென்றார்.
அவ்வளவு அதிக பக்கங்களின் குவியலைகண்டஅம்முதிய துறவி, "இந்த வயதில் என்னால் இவ்வளவையும் படிக்க முடியாது. இதை இன்னும் சுருக்கிஎழுதிகொண்டுவாருங்கள்" என்றார்.
அவ்வறிஞர் திரும்பி சென்று முன்னர் எழுதியவைகளை சுருக்கமாக எழுதத் தொடங்கினார். அதற்கு மூன்று மாதங்கள் பிடித்தன.
மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவ்வறிஞர் மீண்டும் அம்முதியதுறவியிடம் சென்றார். இம்முறை அவ்வறிஞரிடம் மிகக் குறைவான பக்கங்களே இருந்தன, ஆனால் அவையும் நூறு பக்கங்களின்அளவு இருந்தன.
அவ்வயதான துறவி, "இதுவும் அதிகமாகும். என்னுடைய உடல் பலவீனமாகிவிட்டது. கண்கள் பலவீனமாகிவிட்டன, இவ்வளவு படிக்கக்கூட முடியாது. இவைகளின் சுருக்கமான சாராம்சத்தை மட்டும் என்னிடம் கொண்டு வாருங்கள்." எனக்கூறினார்
அவ்வறிஞர் திரும்பிச் சென்று ஏழு நாட்களுக்குப் பிறகு சில பக்கங்களாகத் தனது அறிவின் சாராம்சத்தை  எழுதி கொண்டுவந்தார்.
அவ்வயதான துறவி அதைக் கண்டு, "உங்களுக்குத் தெரியும் எனக்குமிக வயதாகிவிட்டது, அதிகம் படிக்கமுடியாது.  அதை இன்னும் சுருக்கமாகச் சொல்லுங்கள்" என்றார்.
அதைக் கேட்ட அவ்வறிஞருக்கு, அம்முதியதுறவி என்ன சொல்ல முயல்கின்றார் என்பது புரிந்தது, எனவே அவ்வறிஞர் உடனடியாக வேறொரு அறைக்குச் சென்று ஒரு வெற்றுக் காகிதத்தைக் கொண்டு வந்தார்.
அதைப் பார்த்து முதிய துறவி சிரித்துகொண்டே, "இந்த வெற்றுக் காகிதம் என்றால் நான் வெறுமையாக இருக்கிறேன், முற்றிலும் காலியாக இருக்கிறேன் என்று அர்த்தமாகும்.. இப்போது நீங்கள் புதிய செய்திகளை கருத்துகளை தெரிந்துகொள்ளவும், கற்றுக்கொள்ளவும் தகுதி பெற்றுள்ளீர்கள், ஏனென்றால் இப்போது உங்களுக்கு எதுவும் தெரியாது என்ற அடிப்படையை நீங்கள் புரிந்து கொண்டீர்கள்." என அறிவுரை கூறி தன்னுடைய  கருத்துகளை கூறத்துவங்கினார்


சனி, 20 மே, 2023

அரசனின் ஆணையும் அமைச்சரின் ஆலோசனையும் -

 முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் ஒருமுறை, குறிப்பிட்ட ஒரு நபரின் முகத்தை காலையில் முதன்முதலாக பார்ப்பதால் ஏற்படுகின்ற ஆபத்து ,மோசமானஅன்றைய நிலை ஆகியவற்றினால் மிகப் பிரபலமானார் .அதனால் அவ்வூர் பொதுமக்கள் அனைவரும் காலையில் அக்குறிப்பிட்ட நபரை முதன்முதலில் காண்பதற்கே அஞ்சினர்  அதனை தொடர்ந்த அவ்வூர்  மக்கள் அனைவரும் சேர்ந்து அவரைப் பற்றி அந்நாட்டு அரசரிடம் புகார் செய்தனர்.
ஆயினும் இந்த செய்தியை அந்நாட்டு அரசன்  நம்பவில்லை, எனவே அரசன் அதை தானே சரிபார்க்க முடிவு செய்தார். அதனால் ஒரு நாள், அரசன் அந்த நபரை தனது அரண்மனைக்கு அழைத்து, அவருக்கு தன்னுடைய அரண்மலையில் ஒருநாள் இரவு தங்க இடம் கொடுத்தார்.
அடுத்த நாள் காலையில் எழுந்தவுடன் தான் செய்யவேண்டியபணியை துவங்குவதற்கு முன் அரசன் அந்த நபரைச் சந்திக்க முடிவு செய்து  அரசன் அக்குறிப்பிட்ட நபரின் முகத்தினை முதன்முதலில்ப் பார்த்தார். தொடர்ந்து அவ்வரசன் தன்னுடைய வழக்கமான பணிகளை செய்யத்துவங்கினார்
தற்செயலாக, அன்று கால அட்டவணையின் படி அரசன் தன்னுடைய பல்வேறு பணிகளை உடனடியாக முடிக்கவேண்டியிருந்ததால் அதிகவேலைபளு காரணமாக, அரசனால் அந்த நாள் முழுவதும் சாப்பிட நேரம் கிடைக்கவில்லை. எனவே, அந்த மனிதனின் முகம் உண்மையில் மோசமானது என்ற முடிவுக்கு மன்னர் வந்தார்.
எனவே, அரசன் அன்றை யநாள்முடிவில் அந்த மனிதனுக்கு மரண தண்டனை விதித்தார்.
மறுநாள் அந்நாட்டி்ன் அமைச்சர் ஒருவர் அரசனின் இந்த உத்தரவைப் பற்றி கேள்விப்பட்டு உடனடியாக மன்னரிடம் சென்று, "இந்த நிரபராதிக்கு ஏன் மரண தண்டனை விதிக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
அதற்கு மன்னன், "அமைச்சரே, நான் நேற்று . காலையில் என்னுடைய வழக்கமான அனைத்து பணிகளையும் துவங்குவதற்கு முன்இவரின் முகத்தைப் பார்த்ததனால், ஒரு நாள் முழுவதும் உணவு உண்ணக்கூட முடியவில்லை" என்றார்.
அதற்கு அமைச்சர், "அரசே! அந்த மனிதனின் முகத்தைநீங்கள் முதன் முதலாகப் பார்த்தீர்கள், அதனால் ஒரு நாள் முழுவதும் உங்களாால் உணவு உண்ணமுடியவில்லை, ஆனால் அந்த மனிதனைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். நேற்று காலையில் அந்த நபர் முதன் முதலில் பார்த்தது உங்கள் முகத்தைத்தான், அதனால் அவர் இன்று மரண தண்டனையைப் பெற்றார். இப்போது யாருடைய முகத்தை காண்பது மோசமானது ஆபத்தானது என நீங்களே முடிவு செய்யுங்கள். ." என க்கூறினார்
அமைச்சரின் இந்த விளக்கத்தைக் கேட்ட அரசன், இவ்வாறு சிந்தித்துப் பார்க்காததால் திடுக்கிட்டார்.
தொடர்ந்து அமைச்சர், "அரசே! எந்த ஒரு நபரின் முகத்தினையும் முதன்முதலாக பார்ப்பதும் மேசமானதும் ஆபத்தானதும்  இல்லை, நாம் பார்க்கும் அல்லது நினைக்கும் விதம்தான் அவ்வாறாக இருக்கின்றது. அதனால் தயவு செய்து அவரை விடுவித்து விடுங்கள்" என்ற கோரிக்கைய வைத்தார்.
அரசன்  அமைச்சர்ரி கூறிய செய்தியை புரிந்துகொண்டு உடன் அந்த நபருக்கு விதித்த மரணதண்டனையிலிருந்து அவரைவிடுவித்தார்

ஞாயிறு, 14 மே, 2023

அரசனுக்கு துறவி சலுகை - சிந்தனையில் மாற்றம்

முன்னொரு காலத்தில்ஒரு அரசன் ஒரு நாட்டினை ஆட்சி செய்தான், அவனுடைய அரசாட்சியின்போது நாட்டில் பணத்திற்கும் உணவுப் பொருட்களுக்கும் பஞ்சமில்லை. அவருடைய ஆட்சியின் கீழ் அவரது நாட்டு குடிமக்கள் மிகமகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
அவ்வாறான சூழலில் குறிப்பிட்ட ஒரு வருடத்தில், அவருடைய நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. பயிர்கள் கருகியகாய்ந்து போனதால், போதுமான மகசூல் கிடைக்கததால் விவசாயிகள் வரி செலுத்த முடியவில்லை. இதனால், வருவாய் குறைந்து, கருவூலம் காலியாகத் துவங்கியது.
இதைப் பார்த்த மன்னன் கவலையடைந்தான், மேலும் தன் குடிமக்களுக்கு பஞ்ச அல்லது வறட்சி நிவாரனம் எவ்வாறு வழங்குவது, அரசாங்கச் செலவுகளை எவ்வாறு கையாளுவது என அவ்வரசன் எப்போதும் யோசித்துக் கொண்டிருந்தார்.
வறட்சிமுடிந்த அந்நாட்டின் நிலைமை வழக்கமான சாதாரண நிலைக்கு மாறிவிட்டது, ஆனால் அவ்வரசன்  கவலைப்படுவதை நிறுத்தவில்லை. மீண்டும் இதேபோன்ற பஞ்சம் ஏற்பட்டால், தனது நாட்டினை எவவாறு  நிருவகிப்பது எனவர் எப்போதும் கவலைப்பட்டு கொண்டே இருந்தார். அண்டை நாடுகளுடனான போருக்கான பயம், மந்திரிகளின் சதி என பல கவலைகள் அவரது பசி, தாகம், மறந்த உறக்கமற்ற இரவுகளாகப் அவருக்கு ஆகிவிட்டது. அவர் தனது தற்போது நிலையைக் கண்டு மிக வருத்தமடைந்தார்.
ஒரு நாள்  துறவி ஒருவர்அவரது அரசவைக்கு வந்தார், அரசன் தனது தற்போதைய  பிரச்சினையை அத்துறவியிடம் கூறி, அந்த பிரச்சினையை தீர்வுசெய்வதற்கான தகுந்த  ஆலோசனை கேட்டார்.
துறவி , "அரசனே இந்த அரசாட்சியே உன்னுடைய அனைத்து கவலைகளக்கும் அடிப்படைகாரணமாகும் அதனால் . இந்த அரசாட்சியை உன்னுடைய மகனுக்குக் கொடுப்பதன் மூலம் நீ கவலைதுமின்றி மிக மகிழ்ச்சியுடனஅ வாழமுடியும். .."எனக்கூறினார்
உடன் அவ்வரசன், "ஆனால் ஐயா என் மகனுக்கு ஐந்து வயதுதான் ஆகிறது அவனால் எவ்வாறு அரசாளமுடியும்.." என்றார்.
துறவியானவார், "சரிஅரசனே அவ்வாறாயின்,உன்னுடைய நாட்டின் அரிசாட்சியை என்னிடம் ஒப்படைக்கலாம், உன்னுடைய மன வருத்தத் தையும் கவலைகளையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்." எனக்கூறினார்
அம்மன்னன் உடனே சம்மதித்து தன்னுடைய நாட்டின  அரசாட்சியை அத்துறவியிடம் ஒப்படைத்தார்
. இப்போது, துறவி அவ்வரசனிடம், " மிகவும் நன்று  இப்போது  நீ உயிர்வாழ்வதற்கான வருமானத்திற்கு என்ன செய்வீர்கள்? எவ்வாறு சம்பாதிப்பீர்கள்?"என வினவினார்.
அரசன், "அதனால் என்ன ஐயா நான் இப்போது ஏதாவது வியாபாரம் செய்து பிழைத்து கொள்ளலாம் என திட்டமிடுகின்றேன் ஐயா." என பதில் கூறினார்
உடன் அத்துறவி  "மிகவும் நன்று ஆனால் அந்த வியாபாரத்திற்கு போதுமான பணத்தினை  உன்னால் எவ்வாறு  ஏற்பாடு செய்யமுடியும்? ஏனெனில் இப்போது அரசாட்சி என்னுடையது என்பதால் கருவூலப் பணத்தின் மீது எனக்கு உரிமை உள்ளது. அதை உன்னுடைய வியாபரத்திற்கு கண்டிப்பாக பயன்படுத்த முடியாது", என்றார் துறவி.
அதனை தொடர்ந்து அரசன் "அவ்வாறாயின்  எனக்கு ஏதேனும் ஒரு வேலை கிடைக்குமா என தேடவேண்டும.",என பதிலளித்தார்.
உடன் அத்துறவி "மிகவும்நல்லது. ஆனால் நீ வேலையைச் செய்ய வேண்டும் என்றால், வேறு எங்கும் தேடிசெல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த அரசவையிலேயே நீ வேலை செய்யலாம்", எனபதிலளித்தார் .
அவ்வரசன் மிகவும் ஆர்வமாக, "நான் இந்த அரசவையில் என்ன வேலை செயயவேணடும்?" என்று கேட்டார்.
அதற்கு அத்துறவி சிரித்துக்கொண்டே, "நான் ஒரு துறவி, நான் என் குடிசையில் மட்டுமே தங்குவேன், அரண்மனையில் தங்கி, என் சார்பாக இந்த அரசாட்சியை நீயே நடத்து" என்றார்.
அவ்வரசன் ஏற்றுக்கொண்டு அத்துறவியிடம் வேலை செய்ய ஒப்புக்கொண்டார். அரசன தனது வேலையின் ஒரு பகுதியாக அரசு நிர்வாகத்தை கையாளத் தொடங்கினார். துறவி தன் குடிசைக்குச் சென்றுவிட்டார்
சில நாட்களுக்குப் பிறகு, துறவி மீண்டும் அரசவைக்கு வந்து அரசரைச் சந்தித்து, "இப்போது உங்களுக்கு பசிக்கிறதா , உங்கள் தூக்கம் எவ்வாறு இருக்கிறது?" என்று கேட்டார்.
உடன் அவ்வரசன் "ஐயா நான் இப்போது நிறைய சாப்பிட்டு நன்றாக தூங்குகிறேன்.ஆயினும் முன்பும் நான் இதே வேலையைத்தான் செய்தேன், ஆனால் அப்போது என்னால் சரியாக சாப்பிடவோ தூங்கவோ முடியவில்லை, ஆனால் இப்போது என்னால் அனைத்து செய்ய முடிகின்றது. இந்த மாற்றம் எவ்வாறு ஏற்பட்டது? இது என் புரிதலுக்கு அப்பாற்பட்டது. ", என தூவியியம் சந்தேகம் எழுப்பினார்.
உடன் துறவி சிரித்துக் கொண்டே, “முன்பெல்லாம் நீங்கள் இந்த அரசாட்சி பணியை எனும் உங்கள் மனதில் எப்போதும்  பெரியசுமையாக கருதி சுமந்து கொண்டிருந்தீர்கள்
. ஆனால் அரசாட்சியை என்னிடம் ஒப்படைத்த பிறகு, அதை உங்கள் கடமையாகக் கருதி எல்லா வேலைகளையும் செய்கிறீர்கள்.
கற்றல்:வாழ்க்கையில் எந்த வேலையைச் செய்தாலும், அதை கடமையாகக் கருதி, அதைச் சுமையாகக் கருதாமல் செய்தால் நம்முடைய கவலையிலிருந்து விலகி இருக்க முடியும்.

ஞாயிறு, 7 மே, 2023

சிறிய ஒரே கல்லிற்கு வெவ்வேறு இடங்களின் வெவ்வேறுமதிப்பு

 ஒரு நாள் மகன்ஒருவன்  தன் தந்தையிடம் சென்று, "அப்பா, உயிரின் மதிப்பு என்ன?"
அப்பா சிரித்துக்கொண்டே சொன்னார், "உண்மையில் உன் உயிரின் மதிப்பைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், நான் சொல்வதைச் செய்ய வேண்டும். மகன் ஒப்புக்கொண்டான்
தந்தை ஒரு கல்லை வாங்கி மகனிடம் கொடுத்து, “மகனே, இதை எடு
சாலையோரத்தில் மார்க்கெட்டுக்கு கல், பிறகு சில இடத்தில் உட்கார வேண்டும். யாராவது அதன் விலையைக் கேட்டால், போடுங்கள்
உங்கள் இரண்டு விரல்களை மேலே. நீங்கள் அதை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்."
அந்தக் கல்லைப் பார்த்த மகன் ஏன் இவ்வளவு எளிமையான கல்லை வாங்குவார்கள் என்று நினைத்தான். அப்போதும் அவன் தந்தை சொன்னபடி சந்தைப்பேட்டைக்குச் சென்று அங்கேயே சிறிது நேரம் அமர்ந்திருந்தபோது, ஒரு வயதான பெண் அவனிடம் வந்து, "இந்தக் கல்லின் விலை என்ன?"
பையன் எதுவும் பேசவில்லை, அப்பா சொன்னது போல் இரண்டு விரல்களை உயர்த்தினான். அதைப் பார்த்த அந்த பெண், "சரி.. இந்த கல்லை 200 ரூபாய்க்கு வாங்க ரெடி" என்றாள்.
சிறுவன் தன் தந்தையின் அறிவுறுத்தலின்படி அந்தக் கல்லை விற்கவில்லை, திரும்பி வந்தான். 200 ரூபாய்க்கு வாங்க அந்த பெண் தயாராக இருப்பதாக அவர் மகிழ்ச்சியுடன் தந்தையிடம் கூறினார்.
இப்போது அவனுடைய தந்தை, "இந்த முறை நீங்கள் அருங்காட்சியகத்திற்குச் செல்லுங்கள். அங்கேயும் இந்தக் கல்லின் விலையை யாராவது உங்களிடம் கேட்டால், முன்பு போல் இரண்டு விரலை உயர்த்துங்கள்" என்றார்.
சிறுவன் கல்லுடன் அருங்காட்சியகத்திற்குச் சென்றான். அங்கே ஒருவன் அந்தக் கல்லைப் பார்த்து, “என்ன விலை?” என்று கேட்டான்.
பையன் மறுபடி எதுவும் பேசாமல் "சரி. 20 ஆயிரம். வாங்குறேன்" என்று இரண்டு விரலை மட்டும் போட்டான். , மனிதன் பதிலளித்தான்.
கல்லுக்கு இவ்வளவு மதிப்பு இருக்கும் என்பதை அறிந்த சிறுவன் ஆச்சரியமடைந்தான். மீண்டும் அந்த கல்லை விற்க மறுத்துவிட்டு வீட்டுக்கு வந்தார். தந்தையிடம் எல்லாவற்றையும் சொன்னான்.
இப்போது, இந்த அப்பா சொன்னார், "இப்போது நீங்கள் இந்தக் கல்லை ஒரு விலையுயர்ந்த கல் கடைக்கு எடுத்துச் செல்லுங்கள், அங்கேயும் யாராவது உங்களிடம் அதன் விலையைக் கேட்டால் இரண்டு விரல்களை உயர்த்துங்கள்."
சிறுவன் கல் கடைக்குச் சென்று, கல் கடைக்காரரைப் பார்த்ததும், "இந்தக் கல் உங்களிடம் எப்படி இருக்கிறது. இது மிகவும் அரிதானது, நான் இந்தக் கல்லை வாங்க விரும்புகிறேன். சொல்லுங்கள், நீங்கள் என்ன விலைக்கு விற்கிறீர்கள்?" பையன் எதுவும் பேசாமல் இரண்டு விரல்களை உயர்த்தினான்.
நாயகன் மகிழ்ச்சியுடன், "நிச்சயமாக. 2 லட்சத்திற்கு வாங்குகிறேன்" என்று பதிலளித்தார்.
பையன் மீண்டும் ஆச்சரியப்பட்டான். அவர் மீண்டும் கல்லை விற்காமல் வீட்டிற்கு வந்தார்.
வீட்டை அடைந்ததும் தன் தந்தையிடம், "அப்பா, இந்தக் கல்லுக்கு ஒருவர் 2 லட்சம் கொடுக்கத் தயாராக இருக்கிறார், சிலர் 200 ரூபாய்க்கு மட்டும், மற்றவர் 20 ஆயிரம் கொடுக்கத் தயாராக இருக்கிறார். எப்படி இவ்வளவு வித்தியாசம்?"
தந்தை விளக்கினார், "மகனே, உன் உயிரின் மதிப்பை உனக்குச் சொல்லச் சொன்னாய். இதுவே உன் பதில்.
இந்த கல்லின் இடத்தில் உங்கள் வாழ்க்கையை வைத்து, உங்கள் வாழ்க்கையின் மதிப்பை மதிப்பிடுங்கள். இந்த கல்லின் விலை வெவ்வேறு இடங்களில் வித்தியாசமாக இருந்தது. வாழ்க்கையிலும் அப்படித்தான்.
உங்கள் வாழ்க்கையின் மதிப்பு நீங்கள் உங்களை எங்கு வைக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது."

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...