ஞாயிறு, 14 மே, 2023

அரசனுக்கு துறவி சலுகை - சிந்தனையில் மாற்றம்

முன்னொரு காலத்தில்ஒரு அரசன் ஒரு நாட்டினை ஆட்சி செய்தான், அவனுடைய அரசாட்சியின்போது நாட்டில் பணத்திற்கும் உணவுப் பொருட்களுக்கும் பஞ்சமில்லை. அவருடைய ஆட்சியின் கீழ் அவரது நாட்டு குடிமக்கள் மிகமகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
அவ்வாறான சூழலில் குறிப்பிட்ட ஒரு வருடத்தில், அவருடைய நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. பயிர்கள் கருகியகாய்ந்து போனதால், போதுமான மகசூல் கிடைக்கததால் விவசாயிகள் வரி செலுத்த முடியவில்லை. இதனால், வருவாய் குறைந்து, கருவூலம் காலியாகத் துவங்கியது.
இதைப் பார்த்த மன்னன் கவலையடைந்தான், மேலும் தன் குடிமக்களுக்கு பஞ்ச அல்லது வறட்சி நிவாரனம் எவ்வாறு வழங்குவது, அரசாங்கச் செலவுகளை எவ்வாறு கையாளுவது என அவ்வரசன் எப்போதும் யோசித்துக் கொண்டிருந்தார்.
வறட்சிமுடிந்த அந்நாட்டின் நிலைமை வழக்கமான சாதாரண நிலைக்கு மாறிவிட்டது, ஆனால் அவ்வரசன்  கவலைப்படுவதை நிறுத்தவில்லை. மீண்டும் இதேபோன்ற பஞ்சம் ஏற்பட்டால், தனது நாட்டினை எவவாறு  நிருவகிப்பது எனவர் எப்போதும் கவலைப்பட்டு கொண்டே இருந்தார். அண்டை நாடுகளுடனான போருக்கான பயம், மந்திரிகளின் சதி என பல கவலைகள் அவரது பசி, தாகம், மறந்த உறக்கமற்ற இரவுகளாகப் அவருக்கு ஆகிவிட்டது. அவர் தனது தற்போது நிலையைக் கண்டு மிக வருத்தமடைந்தார்.
ஒரு நாள்  துறவி ஒருவர்அவரது அரசவைக்கு வந்தார், அரசன் தனது தற்போதைய  பிரச்சினையை அத்துறவியிடம் கூறி, அந்த பிரச்சினையை தீர்வுசெய்வதற்கான தகுந்த  ஆலோசனை கேட்டார்.
துறவி , "அரசனே இந்த அரசாட்சியே உன்னுடைய அனைத்து கவலைகளக்கும் அடிப்படைகாரணமாகும் அதனால் . இந்த அரசாட்சியை உன்னுடைய மகனுக்குக் கொடுப்பதன் மூலம் நீ கவலைதுமின்றி மிக மகிழ்ச்சியுடனஅ வாழமுடியும். .."எனக்கூறினார்
உடன் அவ்வரசன், "ஆனால் ஐயா என் மகனுக்கு ஐந்து வயதுதான் ஆகிறது அவனால் எவ்வாறு அரசாளமுடியும்.." என்றார்.
துறவியானவார், "சரிஅரசனே அவ்வாறாயின்,உன்னுடைய நாட்டின் அரிசாட்சியை என்னிடம் ஒப்படைக்கலாம், உன்னுடைய மன வருத்தத் தையும் கவலைகளையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்." எனக்கூறினார்
அம்மன்னன் உடனே சம்மதித்து தன்னுடைய நாட்டின  அரசாட்சியை அத்துறவியிடம் ஒப்படைத்தார்
. இப்போது, துறவி அவ்வரசனிடம், " மிகவும் நன்று  இப்போது  நீ உயிர்வாழ்வதற்கான வருமானத்திற்கு என்ன செய்வீர்கள்? எவ்வாறு சம்பாதிப்பீர்கள்?"என வினவினார்.
அரசன், "அதனால் என்ன ஐயா நான் இப்போது ஏதாவது வியாபாரம் செய்து பிழைத்து கொள்ளலாம் என திட்டமிடுகின்றேன் ஐயா." என பதில் கூறினார்
உடன் அத்துறவி  "மிகவும் நன்று ஆனால் அந்த வியாபாரத்திற்கு போதுமான பணத்தினை  உன்னால் எவ்வாறு  ஏற்பாடு செய்யமுடியும்? ஏனெனில் இப்போது அரசாட்சி என்னுடையது என்பதால் கருவூலப் பணத்தின் மீது எனக்கு உரிமை உள்ளது. அதை உன்னுடைய வியாபரத்திற்கு கண்டிப்பாக பயன்படுத்த முடியாது", என்றார் துறவி.
அதனை தொடர்ந்து அரசன் "அவ்வாறாயின்  எனக்கு ஏதேனும் ஒரு வேலை கிடைக்குமா என தேடவேண்டும.",என பதிலளித்தார்.
உடன் அத்துறவி "மிகவும்நல்லது. ஆனால் நீ வேலையைச் செய்ய வேண்டும் என்றால், வேறு எங்கும் தேடிசெல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த அரசவையிலேயே நீ வேலை செய்யலாம்", எனபதிலளித்தார் .
அவ்வரசன் மிகவும் ஆர்வமாக, "நான் இந்த அரசவையில் என்ன வேலை செயயவேணடும்?" என்று கேட்டார்.
அதற்கு அத்துறவி சிரித்துக்கொண்டே, "நான் ஒரு துறவி, நான் என் குடிசையில் மட்டுமே தங்குவேன், அரண்மனையில் தங்கி, என் சார்பாக இந்த அரசாட்சியை நீயே நடத்து" என்றார்.
அவ்வரசன் ஏற்றுக்கொண்டு அத்துறவியிடம் வேலை செய்ய ஒப்புக்கொண்டார். அரசன தனது வேலையின் ஒரு பகுதியாக அரசு நிர்வாகத்தை கையாளத் தொடங்கினார். துறவி தன் குடிசைக்குச் சென்றுவிட்டார்
சில நாட்களுக்குப் பிறகு, துறவி மீண்டும் அரசவைக்கு வந்து அரசரைச் சந்தித்து, "இப்போது உங்களுக்கு பசிக்கிறதா , உங்கள் தூக்கம் எவ்வாறு இருக்கிறது?" என்று கேட்டார்.
உடன் அவ்வரசன் "ஐயா நான் இப்போது நிறைய சாப்பிட்டு நன்றாக தூங்குகிறேன்.ஆயினும் முன்பும் நான் இதே வேலையைத்தான் செய்தேன், ஆனால் அப்போது என்னால் சரியாக சாப்பிடவோ தூங்கவோ முடியவில்லை, ஆனால் இப்போது என்னால் அனைத்து செய்ய முடிகின்றது. இந்த மாற்றம் எவ்வாறு ஏற்பட்டது? இது என் புரிதலுக்கு அப்பாற்பட்டது. ", என தூவியியம் சந்தேகம் எழுப்பினார்.
உடன் துறவி சிரித்துக் கொண்டே, “முன்பெல்லாம் நீங்கள் இந்த அரசாட்சி பணியை எனும் உங்கள் மனதில் எப்போதும்  பெரியசுமையாக கருதி சுமந்து கொண்டிருந்தீர்கள்
. ஆனால் அரசாட்சியை என்னிடம் ஒப்படைத்த பிறகு, அதை உங்கள் கடமையாகக் கருதி எல்லா வேலைகளையும் செய்கிறீர்கள்.
கற்றல்:வாழ்க்கையில் எந்த வேலையைச் செய்தாலும், அதை கடமையாகக் கருதி, அதைச் சுமையாகக் கருதாமல் செய்தால் நம்முடைய கவலையிலிருந்து விலகி இருக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...