ஞாயிறு, 20 டிசம்பர், 2020

தவறுகளிலிருந்து கற்றல்

 

தாமஸ் எடிசன் எனும் அறிவியல் அறிஞர் மின்சாரத்தில் ஒளிரும் விளக்கை கண்டுபிடிப்பதற்காக இரண்டாயிரம் வெவ்வேறு பொருட்களில் முயற்சித்து கொண்டிருந்தார். எதுவும் திருப்திகரமாக ஒளிதரும் மின்விளக்காக அமையவில்லை அதனால் அவருடன் அந்த ஆய்வகத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த, அவரது உதவியாளர் , “ஐயா இரண்டாயிரம் முறை முயன்றும் நம்முடைய பணிகள் அனைத்தும் வீணாக போய்விட்டது நமக்கு இதுவரையில் ஒன்றும் சரியாக அமைய வில்லை, மின்சாரத்தை பயன்படுத்தி மின்சாரத்தில் மிகச்சரியாக ஒளிரும் மின்விளக்கை நம்மால் கண்டுபிடித்திட முடியுமா என்று உறுதியாக தெரியவில்லை. ” என மிக மனம் வெறுத்து கூறினான் அதனை தொடர்ந்து எடிசன் மிகவும் நம்பிக்கையுடன் , “ஓ, அப்படியா தம்பி நாம் வெகுதூரம் வந்துவிட்டோம், போன்றிருக்கின்றதே பரவாயில்லை ஒரு நல்ல ஒளி விளக்கை உருவாக்க நம்மால் பயன்படுத்த முடியாத இரண்டாயிரம் தவறுகள் இருப்பதை நாம் அறிவோம் அவைகளிலிருந்த நாம் நிறைய கற்றுக்கொண்டுள்ளோம்.அதே தவறினை மீண்டும் செய்யாது முயற்சிசெய்தால் நாம் கண்டிப்பாக வெற்றிபெறுவோம்” என நம்பிக்கை ஏற்படுத்தினார் : ஆம் நம்முடைய தவறுகளிலிருந்தும் அதனை வெற்றியாக்குவதற்கு நாம் கற்றுக்கொள்ளமுடியும்.

சனி, 5 டிசம்பர், 2020

அமெரிக்க சுற்றுலாபயனியும் தமிழக மீனவர்ஒருவரும் - வாழ்க்கை பாடம்

 
ஒரு அமெரிக்க தொழிலதிபர் ஒருவர் தமிழ்நாட்டின் கடற்கரையோர சிறியதொரு மீனவ கிராமத்தின் அருகில் உல்லாச சுற்றுலா படகில் நின்று பயனம் செய்து கொண்டிருந்த போது மீனவர் ஒருவரின் சிறிய மீன்பிடி படகு அந்த உல்லாச சுற்றுலாபடகிற்கு அருகே வந்துவிட்டது. அச்சிறிய படகில் அம்மீனவர் பிடித்து கொண்டுவந்த மீன்கள் குவியலாக இருந்தன. அமெரிக்கர் அம்மீன்கள் தரம் குறித்தும் ஏராளமானஅளவில்மீன்களை அம்மீனவர் பிடித்துகொண்டுவருவதை குறித்தும் அம்மீனவரைப் பாராட்டினார். "இம்மீன்களைப் பிடிக்க எவ்வளவு நேரம் ஆனது?" என அமெரிக்கர் அம்மீனவரிடம் வினவினார். "இப்போதுதான் கடலிற்குள் சென்றேன் ஐயா!மிககுறைந்த நேரத்தில் இந்த மீன்களை பிடித்துகொண்டு திரும்பிவருகின்றேன் ஐயா!" என அம்மீனவர் மிகவும் பணிவுடன் பதிலளித்தார். "அதுசரி இவை உங்களுக்கு போதுமா? நீங்கள் ஏன் அதிக நேரம் கடலிற்குள் இருந்து மிகஅதிக மீன்களைப் பிடிக்கக்கூடாது?"என அமெரிக்கர் அம்மீனவரிடம் வினவியபோது மீனவர் "இது எனது குடும்பத்தின் தேவைகளை ஆதரிக்க போதுமானது ஐயா!" என்று கூறினார்.. தொடர்ந்து அந்த அமெரிக்கர் அம்மீனவரிடம் "ஆனால் உங்களுடைய மீதமுள்ள நேரத்தை நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" என சந்தேகம் எழுப்பியபோது மீனவர் , “நான் தினமும் கடலிற்குள் சென்று மிககுறைந்த நேரம் மட்டும் , கொஞ்சம் மீன் பிடித்தபிறகு,மிகுதிநேரத்தில் என் குழந்தைகளுடன் விளையாடுகிறேன், என் மனைவி யுடனும் பிள்ளைகளுடன் ஒன்றாக சேர்ந்து உணவு அருந்துகின்றேன், ஒவ்வொரு நாள் மாலையும் கிராமத்தில் உலா வருகிறேன், சக உறவினர்களுடனும் நண்பர்களுடனும சேர்ந்து ஏதேனும் இசையை வாசிகின்றேன். என்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொருநாளின் முழுநாளும் ஏதாவது பணி இருந்துகொண்டே யிருக்கின்றதுஐயா! ” என விவரமாக கூறினார்: அதனை தொடர்ந்து அமெரிக்கன் அமமீனவரை கேலி செய்தார்: “நான் ஒரு ஹார்வர்ட் பல்கலைகழக எம்பிஏ, மீன்பிடித்து விற்பணை செய்திடும் உங்களுடைய மீன்வியாபாரத்தில் நீங்கள் முன்னேறுவதற்கு என்னால் உதவ முடியும். நீங்கள் மீன்பிடிக்க தற்போத செலவிடும் நேரத்தை விட அதிக நேரம் செலவிட வேண்டும், அதனால் அதிகஅளவு மீன்களை பிடிக்கலாம் அதனால் அதிக வருமானம் ஈட்டமுடியும் அவ்வாறான அதிக வருமானத்தினால் நீங்கள் ஒரு பெரிய படகு வாங்கலாம், தொடர்ந்து அப்பெரிய படகிலிருந்து கிடைக்கும் வருமானத்துடன், அதிக எண்ணிக்கையில் மீன்பிடி படகுகளை வாங்கலாம்.அதனால் அதிக அளவு மீன்களை பிடித்து அதிக வருமானத்தினை ஈட்டலாம் இறுதியில் நீங்கள் மீன்பிடி படகுகளுடன் கூடிய பெரிய கப்பலை வாங்கி மீன்பிடித்து கொண்டுவருவதற்காக பயன்படுத்தலாம். அதனை தொடர்ந்து நீங்கள் பிடித்த மீன்களை ஒரு இடைத்தரகருக்கு விற்பதற்கு பதிலாக, நீங்களே நேரடியாக நுகர்வோருக்கு விற்பதற்கான கட்டமைப்பினை உருவாக்கி மீன்விற்பணை முழுவதும் உங்கள் கட்டுபாட்டில் கொண்டுவரலாம் மேலும், இறுதியில் உங்களுடைய மீன்களை பதப்படுத்திடும் உங்களுடைய சொந்த தொழிற்-சாலையை உருவாக்கலாம். அதன் மூலம் மீன்பதப்படுத்திடும் தயாரிப்பு, செயலாக்கம் , விநியோகம் ஆகிய அனைத்தையும் நீங்கள் ஒருவரே கட்டுப்படுத்திடமுடியும். அதனால் இந்த சிறிய கடலோர மீன்பிடி கிராமத்தை விட்டு வெளியேறி சென்னை மும்பை போன்ற மிகப்பெரிய நகரங்களுக்கு நீங்கள் குடிபெயர்ந்த பின்னர் இறுதியில் உங்களுடைய மீன்வியாபாரத்தினை இந்தியா முழுவதும் விரிவடைந்துவரும் மிகப்பெரிய நிறுவனமாக உங்களுடைய நிறுவனத்தை நடத்துவீர்கள். ” என தன்னுடைய மீன் வியாபாரத்தினை மேம்படுத்திடும் கருத்துகளை மிக நீண்ட சொற்பொழிவுடன் விவரித்தார் அச்சொற்பொழிவின் இறுதியில் அம்மீனவர் : "ஆனால், ஐயா!, இவ்வாறு வளர்வதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்?" என சந்தேகம் எழுப்பினார் அதற்கு அமெரிக்கர் : "சுமார் 15முதல் 20 ஆண்டுகள் ஆகும் ."என க்கூறினார் "சரிதான் ஐயா! ஆனால், அதன்பின்னர் என்ன செய்யவேண்டும்? என அம்மீனவர் மீண்டும் கேள்வி எழுப்பியபோது அமெரிக்கர் சிரித்துக் கொண்டே : “அதுவே சிறந்த நேரம் அனைத்தும் மிகச்சரியாக இருக்கும்போது, ​​நீங்கள் உங்களுடைய நிறுவனத்தில் - பொது சலுகையை அறிவிப்பீர்கள், மேலும் உங்கள் நிறுவனத்தின் பங்குகளை பொதுமக்களுக்கு விற்று மிகவும் பணக்காரராகி விடுவீர்கள். ”எனக்கூறினார் “அதன்பிறகு ? ” என அம்மீனவர் தொடர்ந்து சந்தேகம் எழுப்பியபோது அமெரிக்கர் மிகமெதுவாக : “அதன்பிறகு நீங்கள் உங்களுடைய வியாபாரத்திலிருந்து ஓய்வு பெறுவீர்கள். ஒரு சிறிய கடலோர மீன்பிடி கிராமத்திற்குச் செல்வீர்கள், அங்கு நீங்கள் தாமதமாக தூங்கலாம், கொஞ்சம் மீன் பிடிக்கலாம், மிகுதிநேரத்தில் உங்களுடைய குழந்தைகளுடன் விளையாடிடலாம், உங்களுடைய மனைவி யுடனும் பிள்ளைகளுடன் ஒன்றாக சேர்ந்து உணவு அருந்தலாம், ஒவ்வொரு நாள் மாலையும் கிராமத்தில் உலா வரலாம், சக உறவினர்களுடனும் நண்பர்களுடனும சேர்ந்து ஏதேனும் இசையை வாசிக்கலாம் ” என பதில் கூறியபோது ”அதைத்தான் ஐயா! இப்போது நான் செய்து கொண்டிருக்கின்றேன்” என்றார் அந்த மீனவர் இறுதியாக.

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...