ஞாயிறு, 20 டிசம்பர், 2020

தவறுகளிலிருந்து கற்றல்

 

தாமஸ் எடிசன் எனும் அறிவியல் அறிஞர் மின்சாரத்தில் ஒளிரும் விளக்கை கண்டுபிடிப்பதற்காக இரண்டாயிரம் வெவ்வேறு பொருட்களில் முயற்சித்து கொண்டிருந்தார். எதுவும் திருப்திகரமாக ஒளிதரும் மின்விளக்காக அமையவில்லை அதனால் அவருடன் அந்த ஆய்வகத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த, அவரது உதவியாளர் , “ஐயா இரண்டாயிரம் முறை முயன்றும் நம்முடைய பணிகள் அனைத்தும் வீணாக போய்விட்டது நமக்கு இதுவரையில் ஒன்றும் சரியாக அமைய வில்லை, மின்சாரத்தை பயன்படுத்தி மின்சாரத்தில் மிகச்சரியாக ஒளிரும் மின்விளக்கை நம்மால் கண்டுபிடித்திட முடியுமா என்று உறுதியாக தெரியவில்லை. ” என மிக மனம் வெறுத்து கூறினான் அதனை தொடர்ந்து எடிசன் மிகவும் நம்பிக்கையுடன் , “ஓ, அப்படியா தம்பி நாம் வெகுதூரம் வந்துவிட்டோம், போன்றிருக்கின்றதே பரவாயில்லை ஒரு நல்ல ஒளி விளக்கை உருவாக்க நம்மால் பயன்படுத்த முடியாத இரண்டாயிரம் தவறுகள் இருப்பதை நாம் அறிவோம் அவைகளிலிருந்த நாம் நிறைய கற்றுக்கொண்டுள்ளோம்.அதே தவறினை மீண்டும் செய்யாது முயற்சிசெய்தால் நாம் கண்டிப்பாக வெற்றிபெறுவோம்” என நம்பிக்கை ஏற்படுத்தினார் : ஆம் நம்முடைய தவறுகளிலிருந்தும் அதனை வெற்றியாக்குவதற்கு நாம் கற்றுக்கொள்ளமுடியும்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...