சனி, 2 ஜனவரி, 2021

ஒரு வயதான மனிதனும் அவரது மகனும்

 
தற்போதைய கிராமத்தில் வாழமுடியாத சூழலில் ஒரு இளைஞன் பிழைப்பினை தேடி நகரத்தினை நோக்கி செல்வதற்காக அழைத்தான் அப்போத தன்னுடைய தந்தையையும் தன்னுடன் நகரத்திற்கு அழைத்தபோது தான் பிறந்து வளர்ந்த இந்த கிராமத்தை விட்டு தன்னால் வரமுடியாது என மறுத்து தனியாக தான் இருப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து அவ்விளைஞன் பிழைப்பதற்காக நகரத்தை நோக்கி பயனபட்டான் அதனால் அம்முதியவர் அவருடைய கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். அதன்பின்னர் அந்த வருடத்தில்அக்கிராமத்தில் நல்ல மழைபொழிந்தது அதனை தொடர்ந்து அவர் தனது நிலத்தில் மக்காச்சோளம் அல்லது குச்சிவல்லி கிழங்கு பயிரிட விரும்பினார், ஆனால் அதற்காக அவர் மிகவும் கடினமாக உழைக்கவேண்டியிருந்தது மேலும் நிலத்தினை உழுதிடுவதற்காக போதுமான பணமும் கைவசம் இல்லை பிழைப்பினை தேடி நகரத்திற்கு சென்ற அந்த இளைஞனை தீவிரவாதி என சந்தேகபட்டு சிறையில் அடைத்துவிட்டனர் அதனால். அவருக்கு உதவி செய்த அவரது ஒரே மகன் சிறையில் இருந்ததால், அவ்விளைஞனை வெளியே கொண்டுவருவதற்காக போதுமான பணவசதி இல்லாததால் ஒரு வழக்கறிஞரை நியமிக்க முடியவில்லை. அதனால் அவ்வயதானவர் தனது மகனுக்கு தனது நிலைமையைக் குறிப்பிட்டு பின்வருமாறு ஒரு கடிதம் எழுதி அனுப்பியிருந்தர்:
அன்புள்ள மகனே,
நான் மிகவும் மோசமானநிலையில் இருப்பதாக உணர்கின்றேன், ஏனெனில் இந்த ஆண்டு நமது கிராமத்தில் நல்ல மழைபொழிந்துள்ளது ஆயினும் நமது நிலத்தில் மக்காச்சோளம் அல்லது குச்சிவல்லி கிழங்கு பயிரிடுவதற்கு போதுமான நிதிவசதி இல்லாததால் அவ்வாறு செய்ய முடியாது என்று தெரிகிறது. உன்னுடைய தாயார் எப்போதும் மழைபொழிந்துவிட்டது நம்முடைய நிலத்தில் பயிர்செய்திடுமாறு புலம்பிகொண்டே இருக்கின்றார் அவ்வாறு என்னால் செய்யஇயலாத நிலையில் நான் அதனை நான் வெறுக்கிறேன். எனெனில் எனக்கு வயதாகிவிட்டதால் நிலத்தில் என்னால் கடின உழைப்பை ஈடுபடமுடியவில்லை. நீ இங்கே இருந்திருந்தால், ஏதாவது செய்துகொண்டிருப்பாய்அதனால் எங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் முடிந்துவிடும். ஆனால் நீ சிறையில் இருப்பதால் எதுவும் செய்யமுடியாமல், தவிக்கின்றோம் என்னசெய்வது என்று தடுமாறி இருக்கின்றோம் .
அன்பு, அப்பா
அதன்பின்னர் அந்த வயதானவருக்கு ஒரு தந்தி வந்தது அதில்பின்வருமாறு செய்தி இருந்தது,
 அப்பா, நிலத்தினை நீங்கள் உழுவதை பற்றி கவலைப்பட வேண்டாம்! அங்குதான் நான் ஏராளமான அளவில் துப்பாக்கிகளையும் வெடிகுண்டுகளையும் புதைத்து வைத்திருக்கின்றேன் !! ’
அதனை தொடர்ந்து மறுநாள் அதிகாலையிலேயே அவருடைய நிலத்தில் , அருகிலிருந்த நகரத்தின் ஏராளமானஅளவிலான FBI முகவர்களும் காவல்துறை அலுவலர்களும் அவருடைய நிலத்தில் துப்பாக்கிகளையும் வெடிகுண்டுகளையும் கண்டுபிடிப்பதற்காக முழு தோட்டத்தையும் தோண்டிபுரட்டி பார்த்து ஏதும் கிடைக்கததால் . குழப்ப்ததுடன் சென்றுவிட்டனர்,
பின்னர் அவ்வயதானவர் தனது மகனுக்கு அவருடைய நிலத்தில் என்ன நடந்தது என்று மற்றொரு கடிதத்தினை எழுதி, அடுத்து தான் என்ன செய்வது என்று கேட்டார்.
அதனைதொடொர்ந்து அவரது மகன் : ‘நீங்கள் நம்முடைய நிலத்திற்கு சென்று நீங்கள் விரும்பியவாறுமக்காச்சோளம் அல்லது குச்சிவல்லி கிழங்கு பயிரிடுக அப்பா. இங்கிருந்து உங்களுக்காக நான் செய்யக்கூடியது இதுதான். ’
எனக்குறிப்பிட்டார்

நீதி: நாம் உலகில் எங்கிருந்தாலும் பரவாயில்லை, நாம் மனப்பூர்வமாக ஏதாவது செய்ய முடிவு செய்திருந்தால், நாம் எங்கு இருக்கிறீர்கள் அல்லது நம்மிடம் உதவிகோரும் நபர் எங்கே இருக்கிறார் என்பது முக்கியமன்று அவ்வுதவியை நாம் செய்யலாம்..

1 கருத்து:

'பசி'பரமசிவம் சொன்னது…

படிப்பதற்குச் சிரமமாக உள்ளது. பின்னணி வண்ணத்தை[கறுப்பு] மாற்றலாமே?

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...