சனி, 22 ஜூலை, 2017

நம் மனதில் இருந்து தேவையற்ற எல்லா செய்திகளையும் மறந்துவிட்டால், நிம்மதியாக இருப்பதைஉணரலாம்


ஆசிரியர் ஒருவர் அவருடைய மாணவர்களுடன் சேர்ந்து பொருட்களை விற்கவும் வாங்கவும் செய்வதற்காக பலரும் கூடிடும் ஒரு சந்தையில் நடந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு மனிதன் கயிறு ஒன்றால் கட்டப்பட்ட மாடுஒன்றினை பிடித்து இழுத்து கொண்டிருந்தை பார்த்தனர். . "மாணவர்களே இந்த பசு மாடு மனிதன் ஆகிய இருவரில் யார் யாரைக் கட்டுப்படுத்துகின்றனர் என்று சொல்லுங்கள்? பசுமாடு மனிதனை கட்டுபடுத்துகின்றதா அல்லது மனிதன் பசுமாட்டினை கட்டுபடுத்துகின்றனா? என ஆசிரியர் வினவினார்

உடன் ஒருமாணவன் "மனிதன் மாட்டினை கட்டுப்படுத்துகின்றான், ஏனெனில் மனிதன் அந்த மாட்டினை கயிறுமூலம் கட்டி அதனை தன்னுடைய கட்டுபாட்டில் வைத்திருக்கிறான், அதானால் அந்த மாடுஆனது அந்த மனிதன் எங்கே போனாலும் அவனைப் பின்தொடர வேண்டும் அந்த மாடானாது அவனுக்கு அடிமையாகும அந்தமனிதன் அந்த மாட்டிற்கு எஜமானன் " என்று கூறினான். . "

"இப்போது என்ன நடக்கபோகின்றது என பாருங்கள்" என்று அந்த ஆசிரியர் கூறியபடி, தன்னுடைய பையிலிருந்து கத்தரிக்கோல் ஒன்றினை தன்னுடைய கைகளால் எடுத்து, மாட்டை கட்டியிருந்த கயிற்றினை வெட்டினார். உடன் அந்த பசுமாடானது தன்னுடைய எஜமானனின் பிடியிலிருந்து விடுபட்டு வெகுவேகமாக ஓடியது அதனை தொடர்ந்து அந்த மனிதன் ஓடுகின்ற தனது மாட்டினை பிடிப்பதற்காக வேகாமாக துரத்திக்கொண்டு ஓடினான். .உண்மையில் அந்த பசு மாட்டிற்கு இந்த மனிதன் மீது அக்கறை இல்லை, அதனால் அவனுடைய இழுப்பிற்கு செல்லாமல் திமிறிகொண்டிருந்தது அவ்விருவருக்கும் இடையில் இருந்த தடைநீங்கியவுடன் தப்பித்தால் போதுமென அந்த பசுமாடானது தப்பித்து வேகமாக ஒடுகின்றது அது போலவே, நாம் நம்மனதிற்குள் செல்லும் தேவையல்லாத அனைத்து உணர்வுகளையும் அதில் ஆர்வம் இல்லையென்றாலும் . நாம் . நம் கட்டுப்பாட்டின்கீழ் அனைத்தையும் ஒன்றாக வைத்துக்கொள்ள முயற்சிகின்றோம்.அவ்வாறான நம்முடைய மனதில் நிரப்பப்பட்டிருக்கும் அனைத்து குப்பைகளானசெய்திகளை மிகுதியான ஆர்வத்தால் கட்டுபடுத்தாமல் அவை மாடுகளைப் போலவே, தப்பித்து தானாகவே ஓடி மறைந்துவிடும். "நம் மனதில் இருந்து தேவையற்ற எல்லா செய்திகளையும் மறந்துவிட்டால், நிம்மதியாக இருப்பதைஉணரலாம்

புதன், 12 ஜூலை, 2017

பங்குசந்தை நிலவணிகம் ஆகியவற்றின் சந்தைவிலை நிலவரங்கள்


சிவப்பிந்தியர்கள் வாழும் துருவப்பகுதியின் இலையுதிர் காலத்தில் மக்கள் அனைவரும் தங்களுடைய புதியதாக தலைமை ஏற்றிருந்த தலைவரை நேரடியாக சந்தித்து "வருகின்ற குளிர்காலம் அதிக குளிராக இருந்திடுமா அல்லது மிதமானதாக இருந்திடுமா அதிக குளிராக இருந்தால் அவ்வாறான அதிக குளிரிலிருந்து பாதுகாத்து கொள்ள நாங்கள் என்ன செய்யவேண்டும்? என ஆலோசனை கூறுங்கள்" என கோரினர் உடன் அந்த புதிய தலைமையாளரும் ஒரு நவீன சமுதாயத்தில் அவர் ஒரு புதிய சிவப்பு இந்தியத் தலைவராக இருந்ததால், வானிலை என்னவாக இருக்கும் என்று அவரால் சொல்ல இயலாமல். தடுமாறினார் , பாதுகாப்பாக இருக்கட்டும் என்று "வருகின்ற குளிர்காலம் அதிக குளிராக இருக்குமா அல்லது மிதமானதாக இருக்குமா என யூகிக்கமுடியவில்லை இருந்தபோதிலும் அவரவர்களுக்கு தேவையான போதுமான காய்ந்த விறகுகளை காடுகளுக்கு சென்று சேகரித்து வைத்துகொள்ளுங்கள்" என ஆலோசனை கூறினார் அதனை தொடர்ந்து செவ்விந்தியர்கள் அனைவரும் காடுகளுக்கு சென்று தத்தமக்கு போதுமானஅளவு விறகுகளைசேகரித்து கொண்டுவந்துகொண்டிருந்தனர் அந்த புதிய தலைமையாளரும் மக்களுக்கு நாம் தவறாக வழிகாட்டக்கூடாது அதனால் தேசிய வானிலை சேவையாளரிடமும் அவருடைய கருத்தினை அறிந்து கொள்வோமே என தொலைபேசியில் "வணக்கம் ஐயா! வரவிருக்கும் குளிர்காலமா மிகவும் கடுமையன குளிராக இருக்குமா?” என வினவினார் உடன் அந்த தேசிய வானிலை மைய சேவை அதிகாரியானவர் 'இந்த குளிர்காலம் உண்மையில் மிகவும் குளிராக இருக்கும் போல் தெரிகிறது,' எனப்பதில் கூறினார் அதைக்கேட்டவுடன் அந்த தலைவர் பதறியடித்து கொண்டு தன்னுடைய மக்களிடம் வந்து "மக்களே! வருகின்ற குளிர்காலம் மிகவும்கடுமையானதாக இருக்குமாம் அதனால் நீங்கள் அனைவரும் சோம்பேறித்தனபடாமல் மேலும் போதுமான காய்ந்த விறகுகளை மீண்டும் காடுகளுக்கு சென்று சேகரித்து வைத்துகொள்வது மிகவும் நல்லது" என தன்னுடைய ஆலோசனையை வலியுறுத்தி கூறினார் ஓரிரு வாரங்கள் கழி்த்துஅந்த செவ்விந்தியமக்களின் தலைமையாளர் மீண்டும் தொலைபேசியில் தேசிய வானிலை சேவையாளரிடமும் தன்னுடைய சந்தேகத்தினை உறுதிபடுத்தி கொள்வோமே என "வணக்கம் ஐயா! வரவிருக்கும் குளிர்காலம் மிகவும் கடுமையன குளிராக இருக்குமா?” என மீண்டும் வினவினார் 'ஆமாம் ஐயா,' என தேசிய வானிலை சேவைமையத்தில் உள்ள மனிதன் ஆமோதித்தோடுமட்டுமல்லாது 'இது மிகவும் குளிர்ந்த குளிர்காலமாக இருக்கும்.' மறுபடியும் பதிலளித்தான், அதனை தொடர்ந்து "எப்படி இவ்வாறு உறுதியாக கூறுகின்றீர்கள்" என வினவியபோது "அதுவா செவ்வி்ந்திய தலைமையாளர் தன்னுடைய மக்களிடம் வருகின்ற குளிர்காலத்திற்கு போதுமான காய்ந்த விறகுகளை காட்டிற்கு சென்று சேகரித்துவருமாறு உத்திரவிட்டுள்ளார் அதனால் நான் வருகின்ற குளிர்காலம்மிககடுமையாக இருக்கும்" என முன்னறிவிப்பு செய்தேன் எனபதிலளித்தார் இதே போன்றதே பங்குசந்தை நிலவணிகம் ஆகியவற்றின் சந்தைவிலை நிலவரங்களாகும் என மனதில் கொள்க

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...