சனி, 22 ஜூலை, 2017

நம் மனதில் இருந்து தேவையற்ற எல்லா செய்திகளையும் மறந்துவிட்டால், நிம்மதியாக இருப்பதைஉணரலாம்


ஆசிரியர் ஒருவர் அவருடைய மாணவர்களுடன் சேர்ந்து பொருட்களை விற்கவும் வாங்கவும் செய்வதற்காக பலரும் கூடிடும் ஒரு சந்தையில் நடந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு மனிதன் கயிறு ஒன்றால் கட்டப்பட்ட மாடுஒன்றினை பிடித்து இழுத்து கொண்டிருந்தை பார்த்தனர். . "மாணவர்களே இந்த பசு மாடு மனிதன் ஆகிய இருவரில் யார் யாரைக் கட்டுப்படுத்துகின்றனர் என்று சொல்லுங்கள்? பசுமாடு மனிதனை கட்டுபடுத்துகின்றதா அல்லது மனிதன் பசுமாட்டினை கட்டுபடுத்துகின்றனா? என ஆசிரியர் வினவினார்

உடன் ஒருமாணவன் "மனிதன் மாட்டினை கட்டுப்படுத்துகின்றான், ஏனெனில் மனிதன் அந்த மாட்டினை கயிறுமூலம் கட்டி அதனை தன்னுடைய கட்டுபாட்டில் வைத்திருக்கிறான், அதானால் அந்த மாடுஆனது அந்த மனிதன் எங்கே போனாலும் அவனைப் பின்தொடர வேண்டும் அந்த மாடானாது அவனுக்கு அடிமையாகும அந்தமனிதன் அந்த மாட்டிற்கு எஜமானன் " என்று கூறினான். . "

"இப்போது என்ன நடக்கபோகின்றது என பாருங்கள்" என்று அந்த ஆசிரியர் கூறியபடி, தன்னுடைய பையிலிருந்து கத்தரிக்கோல் ஒன்றினை தன்னுடைய கைகளால் எடுத்து, மாட்டை கட்டியிருந்த கயிற்றினை வெட்டினார். உடன் அந்த பசுமாடானது தன்னுடைய எஜமானனின் பிடியிலிருந்து விடுபட்டு வெகுவேகமாக ஓடியது அதனை தொடர்ந்து அந்த மனிதன் ஓடுகின்ற தனது மாட்டினை பிடிப்பதற்காக வேகாமாக துரத்திக்கொண்டு ஓடினான். .உண்மையில் அந்த பசு மாட்டிற்கு இந்த மனிதன் மீது அக்கறை இல்லை, அதனால் அவனுடைய இழுப்பிற்கு செல்லாமல் திமிறிகொண்டிருந்தது அவ்விருவருக்கும் இடையில் இருந்த தடைநீங்கியவுடன் தப்பித்தால் போதுமென அந்த பசுமாடானது தப்பித்து வேகமாக ஒடுகின்றது அது போலவே, நாம் நம்மனதிற்குள் செல்லும் தேவையல்லாத அனைத்து உணர்வுகளையும் அதில் ஆர்வம் இல்லையென்றாலும் . நாம் . நம் கட்டுப்பாட்டின்கீழ் அனைத்தையும் ஒன்றாக வைத்துக்கொள்ள முயற்சிகின்றோம்.அவ்வாறான நம்முடைய மனதில் நிரப்பப்பட்டிருக்கும் அனைத்து குப்பைகளானசெய்திகளை மிகுதியான ஆர்வத்தால் கட்டுபடுத்தாமல் அவை மாடுகளைப் போலவே, தப்பித்து தானாகவே ஓடி மறைந்துவிடும். "நம் மனதில் இருந்து தேவையற்ற எல்லா செய்திகளையும் மறந்துவிட்டால், நிம்மதியாக இருப்பதைஉணரலாம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...