செவ்வாய், 28 ஜனவரி, 2020

சசேவ (GST) அடிப்படையில்வரிமூலபிடித்தம்(TDS) வருமானவரியின்(Income Tax) அடிப்படையில் வரிமூலபிடித்தம்(TDS)


சசேவ (GST) அடிப்படையில்வரிமூலபிடித்தம்(TDS) என்பது 1.10.2018 முதல் கண்டிப்பாக பின்பற்றிடவேண்டும் என்ற நிலையில் ஏற்கனவே நடைமுறையில்உள்ள வருமானவரியின்(Income Tax) அடிப்படையில் வரிமூலபிடித்தம்(TDS) என்பதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு என்னவென பார்த்திடுவோம் 1.வரிபிடித்தம் செய்பவர்(Deductor): சசேவ (GST)இல் அனைத்து மத்திய மாநில அரசுத்துறைகள்,உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு முகமையாளர்கள், இதர மத்தியஅரசு அறிவித்திடும் நபர்கள் ஆகிய அனைவரும் வரிபிடித்தம் செய்பவர்ஆவார்கள் வருமானவரியில்(Income Tax) தனிநபர் கூட்டுகுடும்பம் ஆகியோர் சேர்ந்த எந்தவொரு நபரும் ,நிறுவனமும் வரிபிடித்தம் செய்பவர்ஆவார்கள் 2.வரிபிடித்தம் செய்யப்படுபவர்(Deductee): சசேவ (GST)இல் பொருட்களை வழங்குபவர் அல்லது சேவைகளை வழங்குபவர் அனைவரும் வரிபிடித்தம் செய்யப்படுபவர் ஆவார்கள் வருமானவரியில்(Income Tax) மற்றவர்களிடமிருந்து வருமானமாக பெறுபவர் அனைவரும் வரிபிடித்தம் செய்யப்படுபவர் ஆவார்கள் 3.வரிபொறுப்பு உருவாகும் நிலை:சசேவ (GST)இல் பொருட்களை வழங்கிடும்போது அல்லது சேவைகளை வழங்கிடும்-போது அவைகளின் மதிப்பு ரூ. 2,50,000/-இற்கு மேல் உயரும்போது வரிபிடித்தம் செய்திடவேண்டும் வருமானவரியில்(Income Tax) பிரிவு 194A இன்படி வழங்கப்படும் வட்டித்தொகை ரூ..5,000/- இற்கு மேல் உயரும்போதும் பிரிவு 194J இன்படி தொழில்நுட்ப மற்றும்தொழில்முறை சேவைகளுக்காக வழங்கப்படும் தொகை 30,000 /- இற்கு மேல் உயரும்போது வரிபிடித்தம் செய்திட வேண்டும் 4.வரிவிகிதம்:சசேவ (GST)இல் CGST & SGST/UTGST ஆகிய ஒவ்வொன்றிற்கும் 1% சேர்த்து மொத்தம் 2% ஆக கணக்கிடவேண்டும் இரு மாநிலங்கிடையே எனில் IGST மட்டும் 2% ஆக கணக்கிடவேண்டும் வருமானவரியில்(Income Tax)தொழில்நுட்ப மற்றும்தொழில்முறை சேவைகளுக்காக 10% ஆகவும் LICபிரிமியத்தில் 1% ஆகவும் கணக்கிடவேண்டும் 5.பதிவுசெய்தல்:சசேவ (GST)இல் ஏற்கனவே சசேவ (GST)இற்காக பதிவு எண் பெற்றிருந்தாலும் சசேவ (GST)இன் வரிமூலபிடித்தம்(TDS) செய்வதற்காக கண்டிப்பாக பதிவுசெய்து பதிவெண் பெறவேண்டும் வருமானவரியில்(Income Tax) வரிமூல பிடித்தம் உருவாகிடும்போது மட்டும் கண்டிப்பாக பதிவுசெய்து பதிவுஎண் பெறவேண்டும் 6.பிடித்தம்செய்தவரித்தொகையை அரசிற்கு செலுத்துதல்:சசேவ (GST)இல் அடுத்தமாதத்தில் 10 தேதிக்குள் www.gst.gov.in எனும் இணையதளத்தில் இதற்கான சலானை உருவாக்கி செலுத்திடவேண்டும் வருமானவரியில்(Income Tax) அடுத்தமாதத்தில் 7 தேதிக்குள் www.tin.nsdl.com எனும் இணையதளத்தில் செலுத்திடவேண்டும் 7.அறிக்கை தயார்செய்தல்: சசேவ (GST)இல் இணையத்தில் நேரடியாக GSTR-7எனும் படிவத்தை சமர்ப்பிக்கவேண்டும் வருமானவரியில்(Income Tax) வரிமூல பிடித்தங்களுக்கு ஏற்ப 26Q,24Q,27Q.ஆகிய பல்வேறு படிவங்களை சமர்ப்பிக்கவேண்டும் 8.வரித்தொகையைவரவு வைத்தல்: சசேவ (GST)இல் பதிவுபெற்றவரிபிடித்தம் செய்யப்படுபவர்கள் GSTR 2A/4A ஆகிய படிவங்களின் வாயிலாக தம்முடைய கணக்கில் வரவு வந்துள்ளதை அறிந்து கொள்ளலாம் வருமானவரியில்(Income Tax) வருமான வரித்துறையின் வாயிலாக பதிவுபெற்றுPANஎண் பெற்றவர்கள் 26AS படிவத்தின் வாயிலாக தம்முடைய கணக்கில் வரவு வந்துள்ளதை அறிந்து கொள்ளலாம் 9.வரிபிடித்தம் சான்றிதழ்:சசேவ (GST)இல் படிவம் எண் GSTR 7A வாயிலாக .வரிபிடித்தம் செய்ததற்கான சான்றிதழ் வழங்கப்படும் வருமானவரியில்(Income Tax) வரிமூல பிடித்தங்களுக்கு ஏற்ப 16A, 16 B , 16 C ஆகிய படிவங்களின் வாயிலாக வரிபிடித்தம் செய்ததற்கான சான்றிதழ் வழங்கப்படும் 10. கால தாமதத்திற்கான வட்டி அபராத தொகை விகிதம்:சசேவ (GST)இல் ஐந்து நாட்களுக்குள் வரிபிடித்த சான்றிதழ் வழங்கவில்லையெனில் காலதாமதம் ஆகும் நாளிற்கு நாளொன்றிற்கு ரூ.100/-வீதம் அதிகபட்சம் ரூ5000/- வரை CGST Act & SGST/UTGST ஆகிய ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக அபராத தொகை செலுத்திட வேண்டும் வருமானவரியில்(Income Tax) கால தாமதத்திற்கு அபராத தொகை நாளொன்றிற்கு .200/-வீதம் செலுத்தவேண்டும் அதனோடு வட்டிதொகைக்கு 1% வீதமும் தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை சேவைகளுக்கு 1.5% வட்டி கணக்கிட்டு செலுத்தவேண்டும் மேலேகூறிய விவரங்களை நன்கு மனதில் கொண்டு ஒப்பந்த பணிசெய்திடும் அனைவரும் தங்களுடைய பணியை செய்திடுக என பரிந்துரைக்கப்படுகின்றது

சனி, 25 ஜனவரி, 2020

நிறுமம் அல்லது பொறுப்புவரையறுக்கப்பட்ட கூட்டாண்மை இரண்டில் எதுசிறந்தது


நிறுமம் என்பது இந்திய நிறுமங்களின் சட்டம்2013 இன்படி பதிவுசெய்யப்பட்டதாகும் இவைகளை தனியார்வரையறுக்கப்பட்ட(Pvt) நிறுமம் என்றும் பொதுவரையறுக்கப்-பட்ட(Public Ltd) நிறுமம் என்றும் இரண்டுவகையாக பிரிக்கலாம்இங்கு ஒப்பீட்டிற்கு தனியார்வரையறுக்கப்பட்ட(Pvt) நிறுமத்தையே கணக்கில் கொள்கின்றோம் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை(LLP) என்பது கூட்டாண்மையின் தன்மைகளும் நிறுமங்களின் வசதியும் ஒன்றினைந்து மேம்படுத்தப்பட்டு உருவாக்கப்-படுவதாகும் இவ்விரண்டில் எதுசிறந்தது இவ்விரண்டிலும் உள்ளநன்மை தீமைகள் யாவை என்பன பற்றி ஒரு பறவை பார்வை பாரத்திடுவோம் நெகிழ்வுதன்மையுடன் இயங்குதல் LLPஆனது கூட்டாண்மையின் தன்மைகளுடன் கூட்டாளிகளுக்கிடையே கூட்டாளிகளால் உருவாக்கி கூட்டாளிகள் அனைவராலும் ஏற்றுகொள்ளப்படும் கூட்டாண்மைஒப்பந்தம்( partnership deed) எனும் ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் தொடர்ச்சியாக இயங்கிடும் (perpetual succession) தன்மையுடனும் கூட்டாண்மை நிறுவனத்தின் பெயரில் மட்டுமேசொத்துகளையும் பொறுப்புகளையும் கொண்டு இயங்கவல்லதாகும் Pvt நிறுமம் ஆனது நிறுமங்களின் சட்டங்களின் படியும் வழிகாட்டுதல்களின் படியும் இயங்கவல்லது 2.சட்டஅங்கிகாரம் LLP ஆனது பொறுப்புவரையறுக்கப்பட்ட கூட்டாண்மை சட்டம் 2008 இன் படிபதிவுசெய்யப்பட்டு செயல்படும். Pvt நிறுமம் ஆனது நிறுமங்களின் சட்டம் 2013 இன்படி பதிவுசெய்யப்பட்டு செயல்படும். 3.இயங்குவதற்கான நிருவாகசெலவு மேம்பட்ட LLPஐ நிருவகிப்பதற்கு மிககுறைந்த அளவே செலவிடவேண்டியிருக்கும் ஆயினும் Pvt நிறுமத்தில் இயக்குநர்களின் குழுக்கூட்டம் பொதுப்பேரவை கூட்டம் தணிக்கையாளர்கள் நியமித்தல் பல்வேறு அறிக்கைகளை சமர்ப்பித்தல் காலதாமதமானால் அதற்கானஅபராத கட்டணம் செலுத்துதல்என நிருவாக செலவு அதிகஅளவு ஏற்படும் 4 குறைந்த பட்சஅதிகபட்சஉறுப்பினர்களின் எண்ணிக்கை LLP இல் குறைந்த-பட்சம் இரண்டு தனிநபர்கூட்டாளிகளும் அதிகபட்சம் எவ்வளவு நபர் வேண்டு-மானாலும் கூட்டாளிகளாக சேர்ந்து LLP ஐ உருவாக்கி இயக்கலாம் Pvt நிறுமத்தில் குறைந்தது 2 தனிநபர்களும் அதிகபட்சம் 200 நபர்கள் மட்டும் உறுப்பினர்களாக இணைந்து இயக்கமுடியும் 5.பதிவுசெய்தல் LLPஐ LLP சட்டம்2008 இன்படி www.mca.gov.in எனும் முகவரியின் நிறுமங்களுக்கான இணையதள வாயிலில் பதிவுசெய்து கொள்ளவேண்டும் தற்போது 2.10.2018 இலிருந்து LLP-RUN(ஒருங்கிணைந்த பெயர் ஒதுக்கீடு(Reserve Unique Name)), FiLLiP ஆகிய இரண்டு புதிய வழிமுறையின் படி ஒருLLPக்கான பெயரை ஒதுக்கீடு-பெற்று இயக்குநர்களுக்கான எண்களை பெற்று LLPஐ பதிவுசெய்து அதற்கான பதிவுசான்றிதழைபெற்றபின்னர் LLPஐ துவங்கமுடியும் Pvt நிறுமத்தினை இதேwww.mca.gov.in எனும் முகவரியின் நிறுமங்களுக்கான இணையதள வாயிலில் RUN (ஒருங்கிணைந்த பெயர் ஒதுக்கீடு(Reserve Unique Name)), SPICe ஆகிய புதிய வழிமுறைகளின் அடிப்படையில் பெயர் ஒதுக்கீடு பெற்று இயக்குநர்களுக்கு எண்களை பெற்று , பதிவுசான்றிதழை பெற்றபின்னர் ஒருPvt நிறுமத்தை துவங்க-முடியும் தொடர்ந்து Pvtக்கு தேவையான PAN , TAN ஆகியவைகளும் நிறுவனம் துவங்கி வியாபார செயல் தடையில்லாமல் இயங்குவதற்கு ஏதுவாக வழங்கப்படும் 6.வருமானவரிவிகிதங்கள் LLP இல் ஈட்டப்படும் இலாபத்தில் 30%உம் அதனோடு மேல்வரியும் சேர்த்து வருமானவரியாக அரசிற்கு செலுத்திடவேண்டும் மிகுதியான இலாபத்தினை கூட்டாளிகள் பிரித்து கொள்ளும் இலாப பகிர்விற்கு வருமான வரி எதுவும் செலுத்த தேவையில்லை Pvt நிறுமத்தில் ஈட்டப்படும் இலாபமானது ஆண்டிற்கு ரூ.250 கோடி வரை25%உம் அதனோடுமேல்வரியும் சேர்த்து வருமானவரி செலுத்திடவேண்டும் அதற்குமேல் எனில் 30%உம் அதனோடுமேல்வரியும் சேர்த்து வருமானவரி செலுத்திட வேண்டும் ஆனால் உறுப்பினர்களுக்க வழங்கப்படும் பங்காதாய (Dividend) தொகையில் 16.55%உம் அதனோடுமேல்வரியும் சேர்த்து வருமானவரி செலுத்திடவேண்டும் 7 முக்கிய அடிப்படைஆவணங்கள் LLP இக்கு LLP சட்டம்2008 இன்படி கூட்டாண்மை ஒப்பந்தம்ஒன்றினை கூட்டாளிகளால் உருவாக்கி அதனை அனைத்து கூட்டாளிகளும் ஏற்று அதில் கையொப்பமிட்டு இருக்கவேண்டும் இந்த ஒப்பந்தத்தில் கூட்டாளிகள் விரும்பியவாறு அனைவரும் ஏற்றுகொண்டு மாற்றி யமைத்து கொள்ளலாம் Pvtஇல் நிறுமங்களின்சட்டம்2013இல் வறையறுத்தவாறு MoA , AoA ஆகிய இரண்டும் அத்தியாவசிய தேவையாகும் இதில் விருப்பப்பட்டவாறு எளிதாக மாற்றி கொள்ளமுடியாது பொதுப்பேரவையின் சிறப்பு தீர்மானத்தின் வாயிலாக தனிஅனுமதிபெற்றால் மட்டுமே மாற்றியமைத்திடமுடியும் 8 கூட்டங்கள் LLPஇல் LLPஇன் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில் கூட்டம் நடத்தவேண்டும் இல்லையெனில் விரும்பினால் கூட்டம் நடத்தலாம். Pvtஇல் நிறுமங்களின்சட்டம்2013இன்படி காலண்டர் ஆண்டில் ஒவ்வொரு காலாண்டிற்கு ஒன்றுவீதம் குறைந்தபட்சம் நான்கு இயக்குநர்களின் குழுக்கூட்டமும் ஒரு நிதியாண்டிற்கு ஒரு பொதுப்பேரவை கூட்டமும் அரசு விடுமுறை இல்லாத நாட்களில் மட்டும் வியாபார நேரத்திற்குள் கூட்டத்திற்கானகுறிப்பிட்ட நாட்களுக்கமுன்பு கூட்டமுன்னறிவிப்பு அனுப்பி கண்டிப்பாக கூட்டவேண்டும் 9 உடைமையாளரை சேர்த்தல் அல்லது மாறுதல்கள் செய்தல் LLPஇல்கூட்டாளிகளை சேர்த்தல் நீக்குதல் ஆகிய செயலிற்கு LLPஒப்பந்தத்தில் திருத்தம் செய்திடவேண்டும் அதனோடு தேவையான முத்திரைக்கட்டணம் செலுத்தி பதிவுசெய்துகொள்ளவேண்டும் அதனால் கூட்டாளிகள் சேர்த்தல் அல்லதுநீக்குதல் என்பதுLLPஇல் மிகச்சிக்கலான பணியாகின்றது. Pvtஇல் சம்பந்தபட்ட உறுப்பினரின் சம்மதம் இயக்குநர்களின் குழுத் தீர்மானம் ஆகிய இரண்டுடன் படிவம் எண் SH-4 ஐ நிறுமங்களுக்கான பதிவாளரிடம் சமர்ப்பித்து அனுமதிபெறுவதன் அடிப்படையில் உறுப்பினர்களை சேர்த்தல் நீக்குதல் ஆகிய பணிகளை மிகஎளிதாக செயற்படுத்தலாம் 10 அறிக்கை சமர்ப்பித்தல் LLPஇல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30 இற்குள் முந்தைய ஆண்டிற்கான கணக்குபதிவியலிற்கானபடிவம் 9, மே31 இற்குள் முந்தைய ஆண்டில் இருந்த உடைமையாளர்களின் அறிவிப்பிற்கான படிவம் 11 ஆகிய இரண்டு மட்டும் நிறுமங்களுக்கான பதிவாளரிடம் சமர்ப்பிக்கவேண்டும் Pvtஇல் ஒவ்வொரு ஆண்டும் முடிவுற்றதும் இலாப நட்ட கணக்கு, இருப்பநிலை குறிப்பு ,ஆண்டு அறிக்கை இயக்குநர்களின் மாறுதல்களின் அறிக்கை பொதுப்பேரவை கூட்ட அறிக்கை, தணிக்கையாளர் நியமித்தற்கான அறிக்கைஎன எண்ணற்ற அறிக்கைகளை அதற்கான தனித்தனி படிவங்களில் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறுமங்களுக்கான பதிவாளரிடம் சமர்ப்பிக்கவேண்டும். 11 தணிக்கையாளர் நியமனம் LLPஇல் தணிக்கையாளர் நியமனம் அத்தியாவசிய-மன்று ஆனால் ஆண்டுவருமானம் குறிப்பிட்ட அளவிற்கு மேல் உயரும்போது மட்டும் கண்டிப்பாக LLPஇல் தணிக்கையாளர் நியமனம் தேவையாகும். Pvtஇல் தணிக்கையாளர் நியமனம் கண்டிப்பாக செய்யவேண்டும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தணிக்கையாளரை மாற்றிடவேண்டும் இவ்வாறான இரண்டு அமைப்புகளுக்குமிடையேயான சாதக பாதகங்களை பார்த்துவரும்போது அதிகஅளவுமுதலீடு தேவைப்படாத தொழில்முறை(Professional) பணிகளுக்கும், சேவைத்துறை பணிகளுக்கும் LLP வகையிலும் அதிகஅளவு முதலீடு தேவைப்படும் பொருட்களின் உற்பத்தி ,போக்குவரத்து போன்ற சேவைத்துறை அல்லாத வகைகளுக்கு பொதுமக்களிடமிருந்து பங்குகள், இட்டுவைப்புத்தொகைகள், கடன்பத்திரங்கள் ஆகியவைகளில் முதலீட்டினை திரட்டும்நிலையில் கண்டிப்பாக Pvt வகையிலும் பதிவுசெய்து துவங்குவது நல்லது என பரிந்துரைக்கப்படுகின்றது

சனி, 18 ஜனவரி, 2020

ஓட்டைபானை


பணியாளர் ஒருவர் தூரத்திலிருந்த ஓடையிலிருந்து தன்னுடைய முதலாளியின் வீட்டிற்கு ஒரு நீண்டகுச்சியின் ஒவ்வொரு முனையிலும் ஒவ்வொன்றாக தொங்கவிடப்பட்டிருந்த இரண்டு பெரிய பாணைகளைக் கொண்டுதண்ணீர் எடுத்துகொண்டுவருவார், . அந்தபானைகளில் ஒன்று விரிசலுற்று ஓட்டையாகி ஒழுது கொண்டிருந்தது, மற்றொரு பானை ஓட்டையெதுவுமில்லாமல் சரியாக தண்ணீரை கொண்டுவந்து சேர்த்திடுமாறு இருந்தது அதனால் அந்த பணியாளர் நீண்ட நடைப்பயணத்தின் முடிவில் அந்த பாணைகளில் தண்ணீரை கொண்டுவரும்போது ஒருபாணையில் மட்டும் முழுமையாகவும் மற்றொன்று அரைகுறையாகவும் கொண்டுவந்து சேர்த்து கொண்டருந்தார் அந்த பணியாளர். இந்த நடைமுறையானது ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்கு, தினமும் தொடர்ந்தது, அந்த பணியாளர் தனது முதலாளியின் வீட்டிற்கு ஒன்றரை பானைகளில் மட்டுமே தண்ணீரை கொண்டுவந்து சேர்த்தார். அதனால் , ஓட்டையில்லாத பானையானது தான் முழுமமையாக தண்ணீர்கொண்டுவரும் அதன் சாதனைகளைப் பற்றி பெருமிதம் கொண்டது, . ஆனால் விரிசலுடையஓட்டை பானையானது அதில் பாதியை மட்டுமே கொண்டுவர முடிந்தது என்பதில் பரிதாபமாக தன்னுடைய செயலிற்காக வெட்கப்பட்டது இது ஒரு கசப்பான தோல்வி என ஒப்புகொண்ட இரண்டாவது பானையானது ஒரு நாள் நீரோடையிலிருந்து தண்ணீர் கொண்டுவரும் வழியில் அந்த பணியாளரிடம் . "நான் என்னுடைய திறமையை பற்றி வெட்கப்படுகிறேன், நான் உங்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்".என பேசியது உடன் பணியாளர், “ஏன்? நீ எதைப் பற்றி வெட்கப்படுகிறாய்? ” என்று கேட்டார் அதற்கு அந்த இரண்டாவது பானையானது,“ கடந்த இரண்டு ஆண்டுகளாக தினமும் கொண்டுவரும் தண்ணீரில் பாதியை மட்டுமே முதலாளியின் வீட்டிற்கு என்னால் கொண்டுவந்து சேர்க்க முடிந்தது, ஏனென்றால் என்னிடம் ஏற்பட்ட இந்த விரிசலினால் எஜமானரின் வீட்டிற்கு திரும்பிச் செல்லும் வழியிலேயே பாதிதண்ணீர் கீழே கொட்டிகொண்டேவந்தது. எனது குறைபாடுகள் காரணமாக, தண்ணீரை முழுமையாக முதலாளியின் வீட்டிற்கு கொண்டுசேர்க்கமுடியவில்லை ”. என வருத்தத்துடன் பதிலிறுத்தது பணியாளர் பழைய விரிசல் பானைகூறியதை கேட்டு மிக வருந்தினார், , “ பரவாயில்லை எஜமானரின் வீட்டிற்குத் திரும்பும்போது, நாம் செல்லும்பாதையில் வழிநெடுகஅழகான பூக்கள் இருப்பதை நீ பார்த்தாயா அதற்கு காரணமே நீதான்.” என அதனை தட்டிகொடுத்துபேசினார் “ மேலும் அவ்வாறாக தினமும் உன்னிடும் இருந்து தண்ணீர் ஒழுகிகொண்டே வந்தததால்தான் வழிநெடுக பூச்செடிகள் வளர்ந்து பூக்களுடன் காட்சிக்குஅழகாக தோன்றுகினறன“ எனஉற்சாக படுத்தினார் அந்த பணியாளர “அதைவிட நம்முடைய பாதையின் நீ இருக்கும் பக்கத்தில் மட்டுமே பூக்கள் இருப்பதை பார்த்தாயா, ஆனால் ஓட்டையில்லாத மற்ற பானையின் பக்கத்தில் பூச்செடிகள் ஏதுமில்லை? ஏனென்றால், உன்னுடைய குறைபாட்டைப் பற்றி நான் முன்பே அறிந்துகொண்டேன், அதனால் நான் அதைப் பயன்படுத்திக் கொண்டு. பாதையின் உன்னுடைய பக்கத்தில் வழிநெடுக நான் பூச்செடிகளை நட்டுவைத்தேன், ஒவ்வொரு நாளும் நாம் ஓடையில் இருந்து திரும்பிச் செல்லும்போது, நீ அவற்றிற்கு தேவையான தண்ணீரை ஓட்டையின் வாயிலாக கொடுத்துகொண்டேவந்தாய். இரண்டு வருடங்களாக நம்முடைய எஜமானரின் வீட்டினை அலங்கரிக்க இந்த அழகான பூக்கள்உதவுகின்றன. ”எனமேலும் அதனுடைய குறையை வேறொருவகையில் பயன்படுத்தி கொண்டதை இரண்டாவது பானையை உற்சாகபடுத்திடுமாறு கூறினார் நீதி: இவ்வுலகில் நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான குறைபாடுகள் உள்ளன. ஆயினும் இந்த உலகில், எதுவும் வீணாகப் போவதில்லை. வாழ்க்கையின் அவ்வாறான குறைபாடுகளை பயனற்றது என்று தள்ளிவிடாமல் அவ்வாறான குறைபாடுகளையே நம்முடைய வாழ்க்கையின் வெற்றிபாதையாக மாற்றி கொள்க

வியாழன், 16 ஜனவரி, 2020

பரிசு பொருட்களுக்கு அல்லது இலவச பொருட்களுக்கு சசேவ(GST)வரி செலுத்தவேண்டுமா


தீபாவளி,ஆங்கில புதுவருடபிறப்பு ,பொங்கல் போன்ற பண்டிகை கால திருவிழாக்-காலங்களில் தங்களுடைய உற்பத்தி பொருட்களை அதிக அளவு விற்பனை செய்வதற்காக வியாபார நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவு பொருட்களை வாங்கினால் குறிப்பிட்ட பொருட்கள் இலவசம் அல்லது பரிசு வழங்கப்படும் என பொதுமக்களை கவருவதற்காக பல்வேறு ஊடகங்களிலும் விளம்பர படுத்திடுவார்கள் அதனை தொடர்ந்து ஏராளமான அளவில் பொதுமக்களும் அந்த வியாபார நிறுவனங்களுக்கு சென்று பொருட்களை வாங்கி செல்வார்கள் இவ்வாறு பரிசு பொருட்களைஅல்லது இலவசபொருட்களை வழங்குவதால் அவைகளுக்காக தொகை ஏதும் பெறாத நிலையில் அவைகளுக்கு புதிய சசேவ(GST)வரி செலுத்தவேண்டுமா என்பதே பொதுவாக அனைத்து வியாபார நிறுவனங்களின்முன் உள்ள மிகப்பெரிய கேள்விகுறியாகும் இவ்வாறான வியாபார நிறுவனங்கள் 1 தங்களுடைய நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2. தங்களுடைய நிறுவனத்தின் விற்பனைவருமானத்தை உயர்த்திடுவதற்காக 3. குறிப்பிட்ட புதிய உற்பத்திபொருட்களுடன் குறிப்பிட்ட பொருட்களை சேர்த்து 4. தங்களுடைய நிறுவனத்தின் பெயர் பொதுமக்களிடம் பிரபலமாகவேண்டும் என்று ஆகிய நான்குவகைகளில் பரிசு பொருட்களை வழங்குவார்கள்.முதல் வகையில் இவ்வாறு பொருட்களுக்கான தொகையை பெறாமல் பணிபுரியும் ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுபொருட்களைரூ 50,000 மிகாமல் வழங்கிடும்போது அரசிற்கு சசேவ(GST) வரியைஅந்த வியாபார நிறுவனம் செலுத்திடத்தேவையில்லை ஆனால் இதற்குமேல் ஒரு நிறுவனம் பரிசுபொருட்களை வழங்கினால் கண்டிப்பாக பொருட்களுக்கான தொகை நிறுவனம் பெறாவிட்டாலும் சசேவ வரியைஅரசிற்கு செலுத்திட வேண்டும் என சசேவசட்டம் பிரிவு 25 கூறுகின்றது. ..இரண்டாவது வகையில் நிறுவனத்திற்கு இது ஒரு செலவாகும் அதனால் வருமானம் ஈட்டப்படாத நிலையிலும் இந்த பரிசு பொருட்களுக்கு சசேவ (GST) வரி அரசிற்கு செலுத்திட-வேண்டும் ஆனால் இவ்வாறு நிறுவனத்தின் செலவிற்காக செலுத்திய வரித்-தொகையை விற்பனையின்போது (ITC) இன் அடிப்படையில் செலுத்தவேண்டிய வரித்தொகையில் கழித்து கொள்ளலாம் .மூன்றாவது வகையில் முதன்மை விற்பனை பொருட்களுக்கான சசேவ வரி அளவையே(Rate) கணக்கிற்கொண்டு இவ்வாறு சேர்த்து வழங்கிடும் பொருட்களுக்கான வரியைகணக்கிட்டு அரசிற்கு வரிசெலுத்திட-வேண்டும்.நான்காவது வகையில் வழங்கப்படும் பொருட்களுக்கு சசேவ வரி அரசிற்கு செலுத்திடவேண்டும் ஆனால் இவ்வாறு நிறுவனத்தின் செலவிற்காக செலுத்திய வரித்தொகையை அதன்பின்னர் வழக்கமான விற்பனையின்போது (ITC) இன் அடிப்படையில்செலுத்தவேண்டிய வரித்தொகையில் கழித்து கொள்ளலாம்

திங்கள், 13 ஜனவரி, 2020

தனியார் நிறுமத்தை நான்கு எளியபடிமுறையில் பதிவுசெய்திடலாம்


வணிகச் சந்தையில் புதியதான நம்முடைய நிறுவனத்தை இணைத்திடு-வதற்கு நாம் கூடுதலாக அனைத்து சட்டப்பூர்வ மான தேவைகளையும் கடைபிடிக்க வேண்டும் என்பதால், புதியதொரு வர்த்தக நிறுவனத்தை துவங்குதல் என்பது எந்தவொரு வியாபாரிக்கும் மிகவும் சிக்கலான சிரமமான பணியாகின்றது. பொதுவாக புதியதாக தொழில் முனைவோர் அனைவரும் தம்முடைய வியாபார நிறுவனத்தை துவக்கி நல்லநிலையில் வணிகத்தை நடத்துவதில் மட்டுமே கவனம் செலுத்த தயாராக உள்ளனர், ஆயினும் அவ்வாறான நிறுவனத்தை சட்டநடைமுறைபடி பதிவு செய்திடும் பணியை செயல்படுத்துவதற்காக தயாராக இருக்கும் உள்ளூர் பகுதியில் தொழில் நுட்ப வல்லுநர்களை அனுகினால் அதிக செலவிட வேண்டியிருக்கும் என அவ்வாறான நிறுவனத்தை சட்டநடைமுறைபடி எந்தவித தொந்திரவுமில்லாமல பதிவுசெய்வதில் மட்டும் கவணம் செலுத்தாமல் விட்டிடுகின்றனர் அவ்வாறானவர்கள் அதிக செலவில்லாமல் பின்வரும் எளிய படிமுறையை பின்பற்றி நேரடியாக இணையத்தின் வாயிலாக தம்முடைய புதிய நிறுவனத்தை பதிவுசெய்து வியாபாரநிறுவனத்தை துவங்கலாம் . படிமுறை-1.இரும கையொப்பசான்றிதழ் பெறுதல் முதல் பணியாகDSC என சுருக்கமாக அழைக்கப்படும் இருமகையொப்ப சான்றிதழ் பெறுவதாகும் தற்போது நிறுமத்திற்கான MCA இணையபக்கமட்டுமல்லாமல் நம்மடைய அனைத்து நடவடிக்கைகளும் இணையத்தின் வாயிலாகவே நடைபெறுவதால் அவை ஒவ்வொன்றிலும் அதனை பதிவேற்றுபவரின் கையொப்பமிடுவதற்கு பதிலாக அங்கீகாரம் பெற்றவர்களின்இந்த இருமகையொப்ப சான்றிதழை இணைத்தால் போதும் இந்த சான்றிதழை பெறுவதற்காக அவ்வாறு இரும கையொப்ப சான்றிதழ் பெறவிரும்புவோரின் மார்பளவு உருவப்படம்,சுயமாக கையொப்பமிட்டஅவருடைய முகவரிக்கான ஆதாரசான்றிதழின் நகல், சுயமாக கையொப்பமிட்ட அவருடைய வருமானவரி எண் அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பித்தால் உடன் விண்ணப்பம் செய்வோருக்கான இரும கையொப்பசான்றிதழ் கிடைக்கப்பெறும் படிமுறை-2 எந்தவொரு நிறுவனத்திலும்இயக்குநர்குழுவே இடைநிலையில் முகவர்களாக இருந்து செயல்படுவராவார்கள். நிறுமத்தின் MCA இணையதளத்தின் வாயிலாக அவ்வாறான நிறுவன இயக்குநர் குழுவின் ஒவ்வொரு இயக்குநருக்கும் (DIN)என சுருக்கமாக அழைக்கப்படும் இயக்குநர் சுட்டிஎண் ஒன்று வழங்கப்படுகின்றது அதனை இயக்குநராக பதிவுசெய்திட விரும்பும் ஒவ்வொருவரும் பெறவேண்டும் இதற்காக அவ்வாறு DIN பெறவிரும்புவோரின் மார்பளவு உருவப்படம்,சுயமாக கையொப்பமிட்ட அவருடைய முகவரிக்கான ஆதாரசான்றிதழின் நகல், சுயமாக கையொப்பமிட்ட அவருடைய வருமானவரி எண் அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பித்தால் உடன் விண்ணப்பம் செய்வோருக்கான இயக்குநர்சுட்டிஎண் கிடைக்கப்பெறும் படிமுறை-3 இந்திய நாட்டில் ஒரு தனியார் நிறுமமாக பதிவுசெய்வதற்குமுன் அந்நிறுமத்திற்கான பெயரை முதலில் ஒதுக்கீடுசெய்து கொள்ளவேண்டும் இதற்கான விண்ணப்பமாக புதியதனியார் நிறுமத்திற்கு INC-1எனும் மின்படிவத்தை பூர்த்தி செய்து போதுமான கட்டணத்துடன் நாம் பெயரிடவிரும்பும் புதியநிறுமத்திற்கான பெயர்களாக ஆறுபெயர்களை மட்டும் வரிசைபடுத்தி MCA இணையதளத்தில் பதிவேற்றம்செய்தால் அவ்வாறான பெயர் வேறுயாரும் தெரிவுசெய்யவில்லை என தேடுதல்செய்து சரிபார்த்தபின் அவற்றுள் ஒரு பெயர் மட்டும் நிறுமபதிவாளரால் 60 நாட்களுக்குள் அனுமதிக்கப்படும் அல்லது நாம் பட்டியலிட்டபெயர் ஏற்கனவே வேறு நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தால்வேறு பெயர் பட்டியலை கூடுதலாகமீண்டும் சமர்ப்பிக்குமாறு கோரப்படுவதை ஏற்று சமர்ப்பித்தால் சரிபார்த்து அவற்றுள் ஒரு பெயர்மட்டும் நிறுமபதிவாளரால் அனுமதிக்கப்படும் இவ்வாறாக நாம் சமர்ப்பிக்கும் பெயரானது உச்சரிக்கவும் நினைவில் கொள்ளவும் எளியதாகவும் சுருக்கமாகவும் இருந்திடுமாறு பார்த்துகொள்க படிமுறை-4 SPICe என சுருக்கமாக அழைக்கப்படும் நிறுவனத்தை இணைப்பதற்கான எளிமையான மின்னனுநடைமுறை படிவத்தை சமர்ப்பித்திடவேண்டும் 1. பொதுவாக ஒரு நிறுமத்தின் அடிப்படை நோக்கம் செயல் குறிப்புகள் அடங்கிய MoA எனசுருக்கமாக அழைக்கப்படும் Memorandum of Association of Companyஎன்பதும் அவற்றை எவ்வாறு செயல்படுத்தபோகின்றோம் என விளக்ககுறிப்புகளடங்கிய AoA எனசுருக்கமாக அழைக்கப்படும் Articles of Association. என்பதும் ஆன அடிப்படையான மிகமுக்கியமான ஆவணங்களை அதற்கான தொழில்நுட்ப வல்லுனர்களின் துனையுடன் மிக கவனமாக உருவாக்கிவிடவேண்டும் 2.அதனைதொடர்ந்து SPICe எனும் படிவத்துடன் நிறுமத்தின் பதிவுஅலுவலகம் அமையவுள்ள இடத்திற்கான சொந்தகாரரின் NOC சான்றிதழ் , 2.அ.வாடகை அலுவலகம் எனில் வாடகை ஒப்பந்தபத்திரமும் வாடகை பெற்றதற்கான சான்றும், 3.நிறுமத்தில் இயக்குநராக செயல்பட சம்மதி்த்த நபர்களின் DIR – 2 எனும் படிவத்தின் வாயிலாக ஒப்புதல் , 4.முதன்முதலாக முதலீடு செய்பவர்கள் ,இயக்குநர்கள் ஆகியோர்களின் INC – 9 எனும் படிவத்தின் வாயிலாக வெளிப்படையான வாக்குமூலமும் அறிவிப்பும் அதனோடு அவை பதிவுபெற்ற சட்டவல்லுனரின் சான்றொப்பமும் கொண்டதாகஇருக்கவேண்டும் 5.முதன்முதலாக முதலீடு செய்பவர்கள் ,இயக்குநர்கள் ஆகியோர்களின் இருப்பிடத்தின் சுயமான சான்றிதழ் 6. நிறுமத்தை பதிவுசெய்வதற்காக அரசிற்கான கட்டணம் முத்திரைத்தாள் கட்டணம் ஆகியவை செலுத்திய சான்று 7.நிறுமத்திற்கு தேவையான PAN , TAN ஆகியவற்றை பெறுவதற்கான விண்ணப்பம்செய்த நகல் ஆகிய சான்றுகளுடன் SPICe இணைத்தின் வாயிலாக MCA இணையதளத்தில் பதிவேற்றம்செய்திட்டால் நிறுமபதிவாளர் இவைகளை சரிபார்த்து அனைத்தும் சரியாக இருக்கின்றதுஎன திருப்தியுற்றால் Certificate of Incorporation (CoI) எனும் புதியநிறுமத்தினை பதிவுசெய்ததற்கான சான்றிதழை வழங்குவார் இதனை தொடர்ந்து புதிய தனியார் நிறுமம் தன்னுடைய வியாபாரத்தை செயல்படச் செய்யலாம் அதன்பின்னர் நிறுமங்களின் சட்டம்2013 இன்படி தேவையான படிவங்களையும் வருடாந்திர படிவங்களையும் ஒவ்வொரு வருடமும் அல்லது குறிப்பிட்டகால இடைவெளியில் தொடர்ந்து MCA இணையதளத்தில் பதிவேற்றம் செய்து சமர்ப்பித்து கொண்டே இருக்கவேண்டும்

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

வினைவிதைத்தவன் அந்தவினையையே அறுவடைசெய்வான்


ஒரு நாள் அலுவலக ஊழியர்கள் அனைவரும் தம்முடைய அலுவலகத்தை அடைந்தபோது, நுழைவு வாயிலிற்கு அருகில் உள்ள அறிவிப்பு பலகையில் “நேற்று இந்நிறுவனத்தில் பணிபுரிந்த உங்கள் வளர்ச்சிக்குத் தடையாக இருந்த நபர் ஒருவர் இயற்கை எய்திவிட்டார். அவருடைய உடலிற்கு இறுதி மறியாதை செய்வதற்காக அருகிலுள்ள ஜிம்மிற்கான அறைக்கு உங்களை அழைக்கிறோம் ” என்று எழுதப்பட்ட அறிவிப்பு ஒன்றினை கண்டனர் அவ்வாறான இறுதி மரண அஞ்சலி அறிவிப்பினை கண்டவுடன் .அவர்கள் அனைவரும் தங்கள் சக ஊழியர்களில் ஒருவரின் மரணத்திற்கு வருத்தமடைந்தனர், ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு, நம்முடைய வளர்ச்சியை தடுத்த அந்த நபர் யார் என்பதை அறிய மிகவும் ஆர்வம் காட்டத் துவங்கினர். இந்த செய்தி காட்டுத்தீ போன்று பரவியதால் ஜிம்செயற்படுத்திடும் அறைக்குள் ஏராளமான அளவில் ஊழியர்கள் “இந்த நிறுவனத்தில் என்னுடைய முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த அந்த நபர் யார்?“ என்பதை காண மிகவும் பரபரப்புடன் சென்றனர், அதனால் அந்த அறைக்குள் கூட்டத்தை கட்டுப்படுத்த ஏராளமான பாதுகாவலர்கள் ஒழுங்குபடுத்திடும் பணியைசெயற்படுத்திடும் அளவிற்கு கூட்டம் கட்டுக்குள் அடங்காமல் உயர்ந்துகொண்டிருந்தது “ அந்த துரோகி நேற்றோடு நம்மைவிட்டு ஒழிந்தான் பரவாயில்லை! அவ்வாறான துரோகி இறந்ததும் .நல்லதுதான், “ என மனநிம்மதியுடன் ஆனாலும் அந்த துரோகியார்தான் என காணும் ஆவலால் உந்தப்பட்டு பெருந்திரளான அலுவலக ஊழியர்கள் சவப்பெட்டியை காண ஒன்று சேர்ந்ததால் அந்த அறை முழுவதும் வெப்பகதிர்வீசும் அளவிற்கு இடநெருக்கடி ஏற்பட்டுவிட்டது. பார்வையாளர்கள் எல்லோரும் ஒவ்வொருவராக சவப்பெட்டியை காண அனுமதிக்கப்பட்டனர்,ஆனால் அவர்கள் சவப்பெட்டியின் உள்ளே பார்த்தபோது அதுவரையில் ஆரவாரத்துடன் வந்து கொண்டிருந்த அவர்கள் அனைவரும் திடீரென்று அதிர்ச்சியடைந்தவர்களாக ஒவ்வொருவரும் பேச்சுமூச்சில்லாமல் மாறிவெளியேறினர். ஏனெனில் காலியான சவப்பெட்டிக்குள் அவர்களுடைய உருவம் பிரிதிபலிக்குமாறான ஒரு கண்ணாடியானது பார்வையாளர்களின் உருவத்தையே காண்பித்தது மேலும் "உங்கள் வளர்ச்சிக்கு தடையாக நிற்கும் திறன் கொண்டஒரேயொருவர் மட்டுமே இருக்கிறார்: அது நீங்கள்தான்." "உங்கள் வாழ்க்கையில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரே நபர் நீங்கள் தான். உங்கள் மகிழ்ச்சியையும் உங்கள் வெற்றியையும் பாதிக்கக் கூடிய ஒரே நபர் நீங்கள்மட்டும் தான். நீங்களே உங்களுக்கு உதவக்கூடிய ஒரே நபர்ஆவீர்கள். நீங்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மாறும்போதும், உங்களுடைய நண்பர்கள் மாறும்போதும், உங்கள் வாழ்க்கை மாறாது. ஆனால் நீங்கள் அதற்கேற்ப மாறும்போது உங்கள் வாழ்க்கை மாறியமைகின்றது, உங்களுடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் நீங்கள் மட்டுமே பொறுப்பு என்பதை நீங்கள் உணருங்கள் " என்ற சிறுஅறிவிப்பு வேறு அதில் எழுதப்பட்டிருந்ததை படித்தபின்னர் பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் தான்மட்டுமே தன்னுடைய முன்னேற்றத்திற்கு காரணமானவனா என அதிர்ச்சி அடைந்து பேச்சுமூச்சற்று வெளியேறிகொண்டிருந்தனர் . நீதி: உலகவாழ்க்கையானது ஒரு கண்ணாடி போன்றது. ஒருவர்எண்ணங்களின் பிரதிபலிப்பையே அதுஅவருக்கு திருப்பித் தருகிறது. வினைவிதைத்தவன் அந்தவினையையே அறுவடைசெய்வான் எனும் பழமொழிக்கு ஏற்ப இவ்வுலகின் யதார்த்த வாழ்க்கைநிலையானது அந்த சவப்பெட்டியில் உள்ள கண்ணாடிபோன்று நம்முடைய செயலையே பிரதிபலிப்பவையாகும், . அதில் நீங்கள் வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதம் தான் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

புதன், 8 ஜனவரி, 2020

பொருட்களைவழங்குவதற்கான பயன்பாடுகள்(Delivery Driver Apps)


தற்போது கணினி, மடிக்கணினி ,கைக்கணினி, கைபேசி, திறன்பேசி என எங்கெங்கும் நம்முடைய வாழ்வின் அனைத்து செயல்களிலும் நீக்கமற நிறைந்து நம்முடைய வாழ்க்கையின் ஒரு உறுப்பாகவே ஆகிவிட்டநிலையில் இவைகளை நம்முடைய அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தி கொள்வதற்கு பொருத்தமான பயன்பாடுகள்தான் மிகமுக்கியபங்கு வகிக்கின்றன இவைகளை ப்ளேஸ்டோர் அல்லது வேறு இடங்களில் இருந்து பெறமுடியும். பணபரிமாற்றம் ,மருத்துவர்கள் மருத்துவமணைகளில் நாம் செல்வதற்காக பதிவுசெய்தல் விமாணபயனம் ,தொடர்வண்டிபயனம் ,பொழுதுபோக்கு காட்சிக்கு பதிவுசெய்தல ஆகியவற்றிற்காக பதிவிசெய்திடுதல் அதுமட்டுமல்லாது நமக்கு தேவையான மளிகை பொருட்கள் இதரபொருட்களை கொள்முதல் செய்தல் குறிப்பிட்ட கால இடைவெளியில் தானாகவே கொள்முதல்செய்தல் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் ஏதாவதொரு பயன்பாட்டின் வாயிலாகவே நடைபெறுகின்றன ஆயினும் இந்த பொருட்களை நம்முடைய வீட்டிற்கு கொண்டுவந்து சேர்ப்பதற்காக .Delivery Driver Appsஎனும் பயன்பாடும் மிகமுக்கியதேவையாகும் அதாவது ஒரு பொருளை கொள்முதல் செய்பவர் அதனை விற்பவரிடம் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்து அதற்கான தொகையை இணையத்தின் வாயிலாக செலுத்திவிடுகின்றார் இந்த நடைமுறைகளுக்கான பயன்பாடுகள் இந்த பொருட்களை கொள்முதல் செய்தல் அதற்கன பணபரிவர்த்தனை ஆகிய செயல்களை செயல்படுத்திடுகின்றன. அதற்கடுத்ததாக அவ்வாறு கொள்முதல் செய்த பொருட்களை விற்பணையாளரிடமிருந்து கொள்முதல் செய்பவருக்கு கொண்டு சென்று சேர்த்திடவேணடுமல்லவா இங்குதான் Delivery Driver Appsஎனும் பயன்பாடானது இவ்விருவருடைய விருப்பத்தையும் பூர்த்திசெய்திடும் இடைமுகவராக இருந்து செயல்படுகின்றன வாடிக்கையாளர் தான் இருந்த இடத்திலிருந்தவாறு தனக்கு தேவையான உணவுப்பொருட்களை இந்த பயன்பாடுகளின் வாயிலாக கோரி பெறமுடியும் அவ்வாறே தன்னுடைய வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களையும் மற்ற மணை அணிய பொருட்களையும் இந்த பயன்பாடுகளின் வாயிலாக பெறமுடியும் அதனால் அவர் அதற்காக செலவிடும் நேரத்தை வேறு பயனுள்ள வகையில் பயன்படுத்தி கொள்ளமுடியும் இந்த பயன்பாட்டினால் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு கொண்டுசேர்ப்பதற்கான புதிய வேலைவாய்ப்பு உருவாகின்றது என்ற செய்தியை மனதில் கொள்க

சனி, 4 ஜனவரி, 2020

ஒரு அதிசயத்தின்விலைநூற்று பதினோரு ரூபாய்மட்டுமே


தம்பி அறிவின் உடல்நிலையே பற்றி அம்மாவும் அப்பாவும் பேசுவதைக் கேட்டபோதுஅருள்மொழி எட்டு வயதுடையசிறுமியாவாள் . அவளுக்குத் தெரிந்ததெல்லாம், தனது தம்பி அறிவு மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்துவருவதும், அதற்கான மருத்துவும் செய்வதற்காக போதுமான பணமெதுவும் தங்களுடைய குடும்பத்தில் இல்லைஎன்பதுதான் .மேலும்இதுவரையில் தம்பியின் மருத்துவசெலவினால் கைவசம் இருந்த பணம்முழுவதும் காலியாகிவிட்டது வீட்டில் போதுமான பணம் இல்லாததால் தற்போது குடியிருக்கும் பெரியவீட்டிற்கான வாடகைதொகை செலுத்தமுடியாத நிலைஉருவாகிவிட்டது அதனால் வேறொரு சிறியவீட்டிற்குள் அடுத்த மாதம் செல்லவிருக்கின்றனர். மிகவும் விலையுயர்ந்த அறுவைசிகிச்சையால் மட்டுமே இப்போதுதம்பியை காப்பாற்ற முடியும், மேலும் அந்த அறுவுசிகிச்சைக்கு தேவையான பணத்தினை அவர்களுக்குக் கடன் கொடுத்து உதவ யாரும் இல்லை என்றநிலை இருந்தது. அவளுடைய அப்பா கண்ணீர் மல்க விரக்தியுடன் , "ஒரு அதிசயம் மட்டுமே இப்போது அறிவை காப்பாற்ற முடியும்." என தன்னுடைய தாயிடம் கூறியதை மட்டுமே அருள்மொழி கேட்டாள் அதனை தொடர்ந்து அருள்மொழி தனது படுக்கையறைக்குச் சென்று, அங்கு தான்வைத்திருந்த உண்டியலை திறந்து தரையில் கொட்டி எவ்வளவு தொகை இருக்கும்என கவனமாக எண்ணினாள். பின்னர் அந்த தொகையை சிறிய பணப்பையில் வைத்துகொண்டு ஏராளமான நபர்கள் வந்து கொண்டும் போய்கொண்டும் இருந்தசிவப்பு கூட்டல்குறி அடையாளமிட்ட அந்த பிரபலமான பெரியஆங்கில மருந்துகடைக்கு சென்றாள். மருந்தாளுநர் அவளிடம் திரும்பி என்னவேண்டும் என கேட்கும்வரை அவள் மிகவும் பொறுமையாகக் காத்திருந்தாள், ஆனாலும் மருந்தாளுநர் அவளை திரும்பிகூட பாராமல் மிகவும் பரபரப்பாக இருந்தார் அதனால் . மருந்தாளுநரின் கவணம் தன்பக்கம் திரும்பிடுமாறு அருள்மொழி தொண்டை யிலிருந்து ஒரு கரகரப்பான ஒலிவருமாறு செருமினாள் பின்னர் கையிலிருந்தசிறிய பணப்பையினால் மேஜையை தட்டினாள் இவ்வாறு பல்வேறு முயற்சிகளுக்குபின்னர் "உனக்கு என்ன வேண்டும்?" என அந்த ஆங்கிலமருந்தகத்தின் மருந்தாளர் சிறிது எரிச்சலூட்டும் குரலில்அருள்மொழியிடம் கேட்டார். "நான் இந்த நகரில் வசிக்கும் எனது தம்பிக்காகஉங்களிடம் பேசவேண்டியுள்ளது " என்றுவேண்டுகோள்விடுத்தாள் அதனைதொடர்ந்து "வேலை என்னுடைய தலைக்குமேல் ஏராளமாக இருக்கின்றன பொறுமையாக பேசுவதற்கு எல்லாம் எனக்கு நேரம் இல்லை " என அந்த மருந்தாளுநர் பதில் கூறியதும் . "சரி, நான் என்னுடைய தம்பியை பற்றி உங்களுடன் பேச விரும்புகிறேன்," என அருள்மொழி மீண்டும் கோரிக்கைவிடுத்தாள்.பின்னர் தொடர்ந்து "என்னுடைய தம்பி உடல்நிலை சரியில்லாமல் இருக்கின்றான் ..அதனை சரியாக்குவதற்காக. நான் உங்கள் கடையிலிருந்து ஒரு அதிசயத்தை வாங்க விரும்புகிறேன்." என கோரினாள் “ சரியாக கேட்கவில்லை என்ன மருந்துவேண்டும்? மீண்டும் கூறு” என்றார் மருந்தாளுநர். "எனது தம்பி அறிவின் தலையில் ஏதோ மோசமாக வளர்ந்து கொண்டிருக்கின்றதாம் , ஒரு அதிசயம் இருந்தால் மட்டுமே இப்போது அவனைக் காப்பாற்ற முடியுமாம் என்னுடைய அப்பா கூறுகின்றார். ஒரு அதிசயத்தின்விலை எவ்வளவு? ” என அருள்மொழி கேட்டாள் அதனை தொடர்ந்து அந்த மருந்தாளுநர் “நாங்கள் இங்கே அதிசயம் எல்லாம விற்க மாட்டோம்,போ போ வேறு கடைக்கு செல் , ”என்று மருந்தாளுநர் அருள்மொழியை விரட்டினார்.இருந்தாளும்அவள்தொடர்ந்து “அந்த அதிசயத்திற்கான பணம் என்னிடம் உள்ளது. இது போதாது என்றால், மீதியைப் கொண்டுவருகின்றேன். எவ்வளவு பணம் வேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள். ” என மீண்டும்வலியுறத்தி கோரினாள் அப்போது அந்த அந்த மருந்து கடைக்கு வந்த நன்கு உடையணிந்த மனிதர். குனிந்து அந்தச் சிறுமியிடம், “உங்களுக்கு என்ன அதிசயம் தேவை?” என்று கேட்டார். "எனக்குத் தெரியாது," எனஅருள்மொழி பதிலளித்தாள் தொடர்ந்து. "ஆனால் என்னுடைய தம்பி உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை அறிவேன், எனதுதம்பிக்கு ஒரு அறுவை சிகிச்சை தேவை என்றுஅம்மா கூறினாள். ஆனால் என் அப்பா அதற்கு போதுமான பணம் இல்லை ஏதாவது அதிசயம் இருந்தால் சரியாகும் என கூறினார் , எனவே அந்த அதிசயத்தை வாங்குவதற்கு நான் சிறிது சிறிதாக சேமித்து வைத்த எனது பணத்தைஇங்கு எடுத்து வந்துள்ளேன் . ”என விவரித்தாள்அருள்மொழி "உங்களிடம் எவ்வளவு இருக்கிறது?" என்று அவர் கேட்டார். "நூற்று பதினொரு ரூபாய்,உள்ளது" என அருள்மொழி பதிலளித்தார். “ என்னிடம் உள்ள எல்லாப் பணமும்இவ்வளவுதான், ஆனாலும் அந்த அதிசயத்திற்காக இன்னும் தேவைப்பட்டால் கொண்டுவந்து கொடுப்பேன்“ என அருள்மொழி பதில் கூறினாள் . "சரி,பரவாயில்லை," அந்த மனிதன் சிரித்தார். தொடர்ந்துஅவர்"நூற்று பதினொரு ரூபாய் - அருள்மொழியின் தம்பி அறிவிற்கான ஒரு அதிசயத்தின் சரியான விலை." என கூறிகொண்டு அவளுடைய பணத்தை ஒரு கையில் வாங்கிகொண்டு அவளுடைய கையை பிடித்து, "நீங்கள் வசிக்கும் இடத்திற்கு என்னை அழைத்துச் செல்லுங்கள். நான் உங்கள் சகோதரனைப் பார்த்திடவிரும்புகின்றேன். உங்களுக்கு தேவையான அதிசயம் என்னிடம் இருக்கிறதா என்று பார்ப்போம். ” என கூறினார் நன்கு உடையணிந்த அந்த மனிதர் பிரபலமான, ஒரு அறுவை சிகிச்சை நிபுணர்ஆவார், அவர் நரம்பியல் அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர். அவர்களுடைய வீட்டிற்கு சென்று அவளுடையதம்பியை பார்த்தபின்னர் தன்னுடைய மருத்துவமனைக்கு அழைத்து கட்டணம் எதுவும் வசூலிக்காமல் சரியான அறுவைசிகிச்சை செய்து அவளுடைய தம்பிஅறிவின் உடல்நிலையை பழையநிலைக்கு கொண்டுவந்து மீண்டும் வீட்டிற்கு வந்து நன்றாகச் செயல்படுமாறு செய்தார் . அவளுடைய அம்மாவும் அப்பாவும் “அந்த அறுவை சிகிச்சை உண்மையில் ஒரு அதிசயம்தான். அதற்கு எவ்வளவு செலவாகியிருக்கும் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது? ” என அவளுடைய தம்பியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சரிசெய்த நிகழ்வுகளை மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.. அந்த ஒரு அதிசயத்திற்கான விலை நூற்று பதினொரு ரூபாய் -என்று அருள்மொழி மனதிற்குள் சிரித்தாள் இதுதான் இளம் சிறுவர்களின் உண்மையான நம்பிக்கையாகும்

வியாழன், 2 ஜனவரி, 2020

பிரபலமான நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத்திற்கான பெயரினை இட்டவரலாறு


புதியதாக நிறுவனம் துவங்கிடும்போது அந்நிறுவனத்திற்கான பெயரை தேர்வுசெய்வது என்பதே மிகசிக்கலான குழப்பமான செயலாகும் இருந்த போதிலும் பொருத்தமான பெயரை தெரிவுசெய்திடவேண்டும்என்ற நிலையில் மிகப்பிரபலமான நிறுவனங்கள் எவ்வாறு தங்களுடைய நிறுவனத்தின் பெயர்களைதெரிவுசெய்தனர் என பின்வரும்பகுதியில் காணலாம் உண்மை எனும் பொருள் கொள்ளுமாறான veritasஎனும் இலத்தின் சொல்லும் horizonஎனும் சொல்லும் இணந்து Verizon என்ற நிறுவனத்தின் பெயர் உருவாக்கப்பட்டது Sky-Peer-to-Peer ஆகிய சொற்கள் கலந்த Skyper எனமுதலிலும் பின்னர் Skypeஎன்றும் நிறுவனத்தின் பெயர் உருவாக்கப்பட்டது ever-sharp pencil என்பதிலிருந்து sharp எனும் நுகர்வோர் மின்னனுசாதனங்களின் நிறுவனபெயர் உருவாக்கப்பட்டது நன்றாக விளையாடு என டேனிஷ் மொழியிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டு அனைத்தையும் ஒருஇடத்தில் சேர்த்து வைத்துள்ளேன் எனும் இலத்தின் பொருள் கொள்ளும்படியான leg godtஎனும் சொற்கள் கலந்து Lego என்ற நிறுவனத்தின் பெயர் உருவாக்கப்பட்டது Ingvar Kamprad Elmtaryd Agunnaryd ஆகிய சொற்களின்முதலெழுத்துகளை சேர்த்து Ikea என்ற நிறுவனத்தின் பெயர் உருவாக்கப்பட்டது FranklinQuest , Covey Leadership ஆகிய இரண்டுபெயர்களின் முதல் சொற்களை கொண்டு Franklin Covey என்ற நிறுவனத்தின் பெயர் உருவாக்கப்பட்டது coca வின் இலையும் kolaவின்கொட்டையும் சேர்ந்த குடிநீரை உருவாக்கிய coca Colaஎன்ற நிறுவனத்தின் பெயர் உருவாக்கப்பட்டது Kwanon.Kwanoniஎன்ற ஜப்பானிய பெயரிலிருந்து Canon என்ற நிறுவனத்தின் பெயர் உருவாக்கப்பட்டது பொதுமக்களின் வண்டி என்ற பொருள்தரும் பேரளவு வண்டிகளை உருவாக்குவதற்காக Volkswagen என்ற நிறுவனத்தின் பெயர் உருவாக்கப்பட்டது html,எனும்நிரல்தொடர் மொழியின் பெயரின் எழுத்துகளிலிருந்து Hotmail என்ற மின்னஞ்சல் நிறுவனத்தின் பெயர் உருவாக்கப்பட்டது ஒன்றுக்கு பிறகு நூறு பூஐ்ஐியம் சேர்ந்தஅளவிற்கு தகவல்களை அளிக்கவல்லதுஎன பொருள்தருமாறு googol Google என்ற நிறுவனத்தின் பெயர் உருவாக்கப்பட்டது

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...