சனி, 27 ஜூலை, 2019

கல்லால்அல்லது உலோகத்தால உருவாக்கப்பட்ட சிலையானது நம்முடைய கோரிக்கையை எவ்வாறு நிறைவேற்றமுடியும்


நானும் எங்களுடைய சிறிய மகளும் கோயில் ஒன்றிற்கு சென்றோம் கோயிலின் முகப்பிற்கு சென்றபோது உண்மையான சிங்கம் ஒன்று நம்மை நோக்கி பாய்ந்து வருவதை போன்றிருந்த அந்த கோவிலின் தூனிலிருந்த சிற்பத்தை பார்த்த எங்களுடைய சிறியமகள் அப்பா அப்பா சிங்கம் ஒன்று நம்மை அடித்து சாப்பிடவருகின்றது அதனால் வாருங்கள்நாம் கோயிலிற்குள் போகாமல் வெளியே ஓடிவிடலாம் என கத்தி கூச்சலிட்டாள் மகளே அது உண்மையான சிங்கம் அன்று சிங்கம் போன்ற சிலைதான் அதற்குஉயிரில்லை நம்மை ஒன்றும் அடித்து கொல்லாது பயப்படாமல் வா நாம் இந்த கோயிலின் உள்பகுதிக்கு செல்வோம் என ஆறுதல் கூறி பயத்தை போக்கியபின்னர் கோவிலின் உட்பகுதிக்கு சென்றோம் அப்போது எங்களுடைய மகள் அதெல்லாம் சரியப்பா இதுஅது சிலைதான் அதனால் உண்மையான சிங்கம் போன்று நம்மை எதுவும் செய்யாது என கூறுகின்றீர் ஆனால்இந்த கோயிலின் உட்புறம் இருக்கின்றதே கடவு சிலைள் அதுவும் சிலைதானே அதுமட்டும் எப்படி நம்முடைய குறைகளனைத்தையும் தீர்த்து வைக்கமுடியும் என பதில் கேள்வி கேட்டவுடன் எங்களுடைய சிறிய மகளின் கேள்விக்கு என்னால் பதில் பேசமுடியாமல் நின்றுவிட்டேன் அதுவும் உண்மைதானே நட்ட கல்லை சுற்றியே நான்கு பூக்களை வைத்திட்டால் சுற்றிசுற்றி வந்து சாமி சாமி என கும்பிடுவர் நட்டகல்லும் பேசுமோ நாதன் உன்உள்ளிருக்கையில் என முன்டாசு கவிஞர் பாரதியார் கூறிசென்றார் நாம் முயன்று நம்முடைய செயல்களை செய்திடாமல் கல்லால்அல்லது உலோகத்தால உருவாக்கப்பட்ட சிலையானது நம்முடைய கோரிக்கையை எவ்வாறு நிறைவேற்றமுடியும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...