சனி, 6 ஜூலை, 2019

பிரச்சினை எதிர்கொண்டால் குறையை மட்டும் கூறுவோமே தவிர அதனை தீர்வுசெய்ய முயற்சி செய்யவேமாட்டோம்


ஒரு மனிதன் நகரத்தில் பெரிய சாலையில் நடந்து போய்கொண்டிருந்தான் அப்போது சாலையின் நடுவில் பெரிய கல்ஒன்று தடங்கலாக இருந்தது கண்ணுற்றதும் "சே சாலையின் குறுக்கே நடப்பவர்களுக்கு இடைஞ்சலாக இவ்வாறு தடையேற்படுத்தி விட்டார்களே அவர்களை சும்மா விடக்கூடாது கடுமையான தண்டனை வழங்கவேண்டும்" என திட்டிகொண்டு ஒதுங்கி சென்றான் அவ்வாறே அடுத்தடுத்துஅந்த சாலைவழியாக நடந்து சென்றவர்கள் அனைவரும் வாயால் திட்டிகொண்டும் குறைகூறிகொண்டும் சென்று கொண்டிருந்தனர் இந்நிலையில் ஒரு இளைஞன் அதே வழியே நடந்து வந்து கொண்டிருந்தான் அவன் இந்த கல்லை பார்த்து விட்டு "அடடா இந்த கல்லானது நடப்பவர்களுக்கு தடையாக இருக்கின்றதே இதனை சாலை ஓரத்திற்கு நகர்த்துவோம்" என மிககடுமையாக முயன்று அந்த கல்லை புரட்டி தள்ளிசாலையின் ஓரத்திற்கு நகர்த்தினான் அப்போது அந்த கல்லிற்கு கீழ்பகுதியில் ஒரு துண்டு சீட்டு இருந்தது அதில் "நண்பரே நீர்தான் இந்த நாட்டிற்கு உண்மையான செல்வம் உன்னை போன்றவர்களால்தான் இந்த நாடு வளமும் வெற்றியும் பெற்றுக் கொண்டிருக்கின்றது மேலும்பெறப்போகின்றது வாழ்த்துகள்!” என இருந்தது ஆம் நம்மில் பெரும்பாலானோர் எந்தவொரு பிரச்சினை எதிர்கொண்டாலும் அதனை பற்றி வாயால் குறையை மட்டும் கூறுவோமே தவிர அதனை தீர்வுசெய்ய நம்மால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்யவேமாட்டோம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...