சனி, 29 ஜூன், 2019

எந்தவொரு பிரச்சினைக்கும் முயன்றால் தீர்வு காணமுடியும்


ஒரு நாள் காலை நேரத்தில் பெரிய வியாபார நிறுவனத்தின் சொந்தகாரன் அன்றைய பிரச்சினையை எவ்வாறு தீர்வுசெய்வது என தெளிவு பெறாமல் குழப்பத்துடன் தன்னுடைய வீட்டின் பால்கனியில் உட்கார்ந்து கொண்டு தேநீர் அருந்தி கொண்டிருந்தான் அந்நிலையில் ஒரு சிறிய எறும்பு அங்கும் இங்கும் சென்றுகொண்டும் வந்துகொண்டிரும் இருந்ததை கண்ணுற்றதும் தன்னுடைய பிரச்சினையை மனதின் ஓரத்தில் ஒதுக்கிவைத்துவிட்டு அந்த சிறிய எறும்பு என்ன செய்கின்றது என பார்வையிட துவங்கினான் அந்த எறும்பானது தன்உருவைவிட மிகப்பெரிய இலை ஒன்றினை தன்னுடைய வாயால் பிடித்து இழுத்துகொண்டு சென்றது எங்குதான் அந்த இலையை இழுத்து செல்கின்றது என பார்ப்போம் என ஆழ்ந்து கவணித்தான் அந்தஎறும்பானது தான் செல்லும் வழியில் அந்த சிறிய எறும்பால் கடந்து செல்லமுடியாதவாறான கீரல் ஒன்று தரையில் இருந்தது அதன் மீது இந்த இலையை கொண்டு சென்று வைத்தது இப்போது அந்த இலையானது தரையிலிருந்த அந்த எறும்பால் கடக்க முடியாதவாறு இருந்த கீரலிற்கு மேல் ஒருபாளம் போன்று ஆகிவிட்டது அதனால் அந்த எறும்பானது அனாயசமாக அந்த இலையின்மீது ஊர்ந்து சென்று கீரலின் அடுத்தபகுதிக்கு சென்றது அங்கு சிறிய மலைபோன்ற தின்பண்டங்களின் கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தன அவற்றில் ஒவ்வொன்றாக தன்னுடைய வாயால் பிடித்து இழுத்துகொண்டு அந்த இலையின் மேல் ஊர்ந்து கீரலிற்கு இந்த பக்கத்தில் கொண்டுவந்து தன்னுடைய வசிப்பிடத்திற்கு கொண்டுசேர்த்தது இதனை கண்டவுடன் அடடா ஒரு சிறிய எறும்பு தனக்குமுன் தன்னால் கடக்கமுடியாத அளவிற்கு பெரிய பள்ளம் போன்று இருந்த கீரல் என்ற தடையை தாண்டிசெல்வதற்கு அருமையான வழியை கண்டுபிடித்து தனக்கு தேவையான உணவினை அடைந்துவிட்டதே என ஆச்சரியம் அடைந்தான் அதனை தொடர்ந்து அவனும் நம்பிக்கையுடன் இன்று நாம் நம்முடைய வியாபாரத்தில் எதிர் கொண்டுள்ள பிரச்சினைக்கான தீர்வினை காண கண்டிப்பாக முயற்சிசெய்வோம் வெற்றி கொள்வோம் என முடிவெடுத்தான் Z

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...