சனி, 20 ஜூலை, 2019

தர்பூசனி பயிரிட்ட விவசாயியும் கிராமத்து சிறுவர்களும்


ஒரு கிராமத்தில் ஒரேயொரு விவசாயிமட்டும் கோடைகாலத்தில் பயன்படும் தர்பூசனியை தன்னுடைய நிலத்தில் பயிரிட்டிருந்தார் அவருடைய விளைநிலம் முழுவதும் தர்பூசனிபழம் பழுத்திருந்தன ஆயினும் சிறுவர்கள் அவர் இல்லாத நேரத்தில் அவருடைய கொல்லைக்கு வந்து தர்பூசனி பழத்தை அறுத்து சாப்பிட்டு சென்றனர் இதனை எவ்வாறு தடுப்பது என சிந்தித்து கடைசியாக எச்சரிக்கை இந்த கொல்லையில் விளைந்த தர்பூசனி பழத்தில் ஒன்றுமட்டும் சயினைடு விசம் கலந்தது என்ற அறிவிப்பு பலகை ஒன்றினை கட்டி தொங்கவிட்டு சென்றார் அதன்பின்னர் அந்த கிராமத்து சிறுவர்கள் தர்பூசனி பழத்தை அறுத்து சாப்பிடலாம்என அங்கு வந்தபோது இந்த எச்சரிக்கை பலகையை கண்டவுடன் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டனர் ஆயினும் ஒரு சிறுவன் மட்டும் சிறிது நேரம் ஆலோசித்து அதே அறிவிப்பு பலகையில் ஒன்றன்று இரண்டில் மட்டும் சயினைடு விசம் கலந்தனவாகும் என எழுதி வைத்து விட்டு சென்றான் அதன் பிறகு அந்த விவசாயி திரும்ப வந்து இந்த எச்சரிக்கையை பார்த்தவுடன் ஐயய்யோ என்னுடைய கொல்லையில் விளைந்த தர்பூசனி பழம் எதையும் பறித்து விற்கமுடியாது போய்விட்டதே என தலையில்கைவைத்து கொண்டு உட்கார்ந்துவிட்டான்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...