சனி, 13 ஜூலை, 2019

மனதினை தொந்திரவு எதுவும் செய்திடாமல்அமைதியாக இருந்தால் மனதும் தானாகவே தெளிவாகி விடும்


கௌதம புத்தர் தன்னுடைய சீடர்களுடன் அடுத்தகிராமத்திற்குசென்று கொண்டிருந்தார் அப்போது கோடைகாலமாதலால்அதிக தாகமாக இருந்தது அதனால்தன்னுடைய சீடர்களுள் ஒருவனிடம் அருகில் ஓடிகொண்டிருந்த ஓடையில் தண்ணீரை மண்பாத்திரத்தில் முகர்ந்து கொண்டுவருமாறு கோரினார் அந்த சீடன் ஓடைக்கு சென்று தண்ணீரை கொண்டுவராமல் திரும்பி வந்தான் ஏன்என வினவினார் "ஐயா அங்கு ஒருசிலர் குளித்து கொண்டும் துனிகளை துவைத்தும் கொண்டும் இருப்பதால் கலங்களாக உள்ளது அதனை குடிக்க முடியாது" என பதில் கூறினான் சரி என சிறிதுநேரம் அருகிலிருந்த ஆலமரநிழலில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார் சிறிதுநேரத்திற்கு பின்னர் "ஓடையில் யாரும் இல்லை இப்போது சென்று தண்ணீர் கொண்டுவா" என கட்டளையிட்டார் சீடனும் மண்பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவந்து புத்தருக்கு கொடுத்தான் "இப்போது கலங்களாக இல்லாமல் ஓடையின் தண்ணீர் தெளிவாக இருக்கின்றது" என சீடன் கூறினான் "அந்த ஓடையின் தண்ணீர் தெளிவடைந்து செல்வதற்கு நீ ஏதாவது முயற்சி செய்தாயா" என வினவினார் புத்தர் .சீடன் "நான் ஒன்றும் செய்யவில்லை ஆட்கள் போகும் வரை சிறிது நேரம் காத்திருந்தேன்" என பதிலிருத்தான் சீடன்.அதேபோன்றே மனதினை தொந்திரவு எதுவும் செய்திடாமல்அமைதியாக இருந்தால்தானாகவே தெளிவாகி விடும் என அறிவுறுத்தினார்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...