சனி, 14 செப்டம்பர், 2019

ஊழியர்களுக் கான பங்குமுதலீட்டு திட்டம் (Employee Stock Option (ESO))ஒருஅறிமுகம்


ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்காவும் அந்நிறுவனம் வெற்றிகரமாக செயல்படுவதற்கா-கவும் அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியார்கள் ,அலுவலர்கள் ,இயக்குநர்கள் ஆகியோர் செய்து வரும் அரும்பெரும் பணிகளுக்காக அவர்களை கௌரவிக்கும் பொருட்டு ஒரு நிதியாண்டில் அதிகபட்சம் 200 நபருக்கு மிகாமல் தம்முடைய நிறுவனத்தின் பங்குகளை முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட சலுகை விலையில் குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்கள் கொள்முதல் செய்து கொள்ளுமாறு அனுமதிக்கப்படுவதையே ஊழியர்களின்பங்குமுதலீட்டு திட்டம் (Employee Stock Option (ESO)) என அழைக்கப்படுகின்றது ஆயினும் இந்த வகையான வாய்ப்பு பங்குசந்தை-பரிமாற்றத்தின் வாயிலாக அனுமதிப்பதில்லை அதற்கு பதிலாக இவர்கள் நேரடியாக நிறுவனத்தில் இருந்துமட்டுமே பங்குகளை குறிப்பிட்ட காலக்கெடு-விற்குள் நிர்ணயம்செய்யப்பட்ட சலுகை விலையில் கொள்முதல் செய்திட-வேண்டும் இது ஊழியார்கள், அலுவலர்கள், இயக்குநர்கள் ஆகியோர்களுக்கு வழங்கப்படும் ஒரு மறைமுகமான ஊக்கத்தொகையாக கருதப்படுகின்றது அதாவது நிறுவனம் ஒன்று 1000 பங்குகளை பங்கு ஒன்று ரூ.50 வீதம் இந்த திட்டத்தின் அடிப்படையில் வழங்குவதாக கொள்வோம் ஒன்றிரண்டு ஆண்டு கழித்து அவ்வாறு இந்த திட்டத்தின்கீழ் கொள்முதல் செய்த பங்குகளை அன்றைய சந்தை நிலவரத்தின் படி உதாரணமாக ரூ70 விற்பணைவிலையாக இருக்கின்றது எனில் அந்த விலைக்கு விற்பணைசெய்திடும்போது இந்த பங்குகளை கொள்முதல் செய்த ஊழியருக்கு வருமானமாக ரூ.20000 தொகை கிடைக்கின்றது இதையே மறைமுக ஊக்கவிப்பு தொகை என அழைக்கப்-படுகின்றது இவ்வாறான ESO திட்டத்தின் படி பங்குகளை ஊழியர்களுக்கு வழங்குவதாக இயக்குநர்களின் குழுக்கூட்டத்திலும் பொதுப்பேரவையிலும் சிறப்புத்தீரமானம் ஒன்றினை நிறைவேற்றிடவேண்டும் இந்த ESO திட்டத்தின் வாயிலாக வழங்கப்பட்ட பங்குகள் குறித்த தனியாக பதிவேடுகள் பராமரிக்க-வேண்டும் நிறுமச்செயலர் அல்லது வேறு அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் இந்த பதிவேட்டினை பராமரித்திட அனுமதி பெற்றிருக்கவேண்டும் இயக்குநர்களின் அறிக்கையில் இந்த ESO திட்டம்குறித்த விவரங்களை குறிப்பிடவேண்டும் மேலும் பொதுப்பேரவை கூட்டத்திற்கான ஆண்டறிக்கையிலும் இந்த விவரங்களை குறிப்பிடவேண்டும் போன்றவையே இந்த ESO திட்டத்தினை செயல்படுத்துவதற்கான நிபந்தனைகளாகும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...