சனி, 9 நவம்பர், 2019

நூலில்லாத பட்டம்


நகரத்தில் வாழும் ஒரு தந்தையும் அவருடைய மகனும் ஒரு முறை அந்நகரத்தின் உள்ள பூங்காவில் நடத்தப்பட்ட பட்டம் பறக்க விடும்திரு விழாவை கண்டு களிக்கச் சென்றனர். அந்த பட்டம் பறக்க விடும் திருவிழாவில் வானம் முழுவதும் பல்வேறு வண்ணங்களாலான பட்டங்கள் பறந்து கொண்டு இருந்ததைக் கண்டு அவருடைய மகன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அதனை தொடர்ந்து அவருடைய மகன் தானும் வானத்தில் அவ்வாறு ஒரு பட்டத்தை பறக்கவிட விரும்புவதாகவும் அதற்காக தனக்கு அதற்கு தேவையான பட்டம் , நூல்கண்டு ஆகியவற்றை உடனடியாக வாங்கி கொடுக்குமாறு தன்னுடைய தந்தையிடம் கோரி அதிக அடம்பிடித்து அழ ஆரம்பித்தான் எனவே, அந்த பட்டம் பறக்க விடும்திருவிழா நடைபெறும் பூங்காவில் அவைகளை விற்ணைசெய்கின்ற ஒரு கடைக்கு அந்த தந்தை தன்னுடைய மகனை அழைத்து சென்றார்.அந்த கடையில் அவர் தனது மகனுக்காக பட்டம் ஒன்றினையும் தேவையானநூல்கண்டையும் வாங்கிமகனிடம் வழங்கினார் அவரது மகன்உடனடியாக அந்த பட்டத்தை நூலில் இணைத்து பறக்கவிட ஆரம்பித்தான். விரைவில், அந்த பட்டமானது வானத்தில் உயரத்தில் பறக்க ஆரம்பித்ததது. சிறிது நேரம் கழித்து, மகன், “அப்பா,இந்த நூலானது பறக்கும் பட்டத்தை அதற்குமேல் உயரமாக பறக்க விடாமல் தடுத்துவைத்திருப்பதாகத் எனக்கு தெரியவருகின்றது, அதானல் பட்டத்தை இணைத்துள்ள நூலினை அறுத்து அந்த தடையை உடைத்தவிட்டால், பட்டமானது சதந்திரமாக மேலும் உயரத்தில் பறப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் அல்லவா அதனால் நூலால் கட்டி இழுத்து பிடிப்பதை அறுத்துவிடட்டுமா அப்பா ? ” என சந்தேகம் எழுப்பியதை தொடர்ந்து , தந்தை பட்டமானது இணைத்து கட்டப்பட்ட நூலை வெட்டி இணைப்பினை நீக்கினார் தொடர்ந்து இழுத்து பிடித்திருந்த கட்டு அகற்றப்பட்டதால் .அந்த பட்டமானது உடனடியாக மேலே பறந்து செல்ல ஆரம்பித்தது. ஆஹா பிரமாதம் பட்டமானது சுதந்திரமாக வெகு உயரத்திற்க சென்றுவிடும் என அந்த மகன் மிகவும் குதூகலிக்க துவங்கினான் ஆனால், சிறிதுநேரம் கழித்து அந்த பட்டமான மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாக கீழே வர ஆரம்பித்தது.முடிவில் அருகிலிருந்த மொட்டை மாடியில் பறக்காமல் விழுந்துவிட்டது . இதைக் கண்டு அவருடைய மகன் மிகவும் ஆச்சரியப்பட்டான். நூலினால் இணைத்து கைகளால் இழுத்து பிடித்திருந்த தடை நீக்கம் பட்டுவிட்டதால் பட்டமானது சுதந்திரமாக மேலே உயர பறக்க முடியும், ஆனால் அதற்கு பதிலாக அது ஏன் கீழே விழுந்துவிட்டது .என சந்தேகம் எழுந்தது அதனால் தனது தந்தையிடம் , “அப்பா, இணைத்திருந்த நூலை வெட்டிவிட்ட பிறகு, பட்டமானது சுதந்திரமாக மேலேஉயரத்தில் பறக்க முடியும் என நான் நினைத்தேன். ஆனால் அது ஏன் கீழே விழுந்தது? ”என்ற சந்தேகவினாவினை எழுப்பினான் அதற்கு தந்தை, “மகனே, நாம் வாழும் நம்முடைய வாழ்க்கையின் உச்சத்தில், நாம் ஒரு சில செயல்களுடன் பிணைக்கப்பட்டுள்ளோம் என்று நினைக்கிறோம், மேலும் அவை நம்மை மேலும் உயரவிடாமல் தடுக்கின்றன என்றும் தவறாக எண்ணிவிடுகின்றோம்.அந்த நூலானது பட்டத்தை உயரமாகப் பறக்கவிடாமல் இழுத்து பிடிக்கவில்லை, ஆனால் காற்று மெதுவாகச் அடிக்கும்போது பட்டமானது உயரத்தில் இருக்க உதவுகின்றது, காற்று வீசும்போது,பட்டமானது சரியான திசையில் நூல் வழியாக மேலே சென்று பறக்க உதவிகின்றது. அந் நூலை வெட்டிடும்போது, நூல் வழியாக பட்டத்திற்கு வழங்கிய ஆதரவு இல்லாமல் அது கீழே விழுந்துவிட்டது ” என விள.க்கமளித்தார் மகன் தன்னுடய தவறை உணர்ந்தான். நீதி: சில நேரங்களில் நாம் நம் குடும்பத்தினருடன், பிணைக்கப்படாவிட்டால், விரைவாக நம்முடைய வாழ்க்கையில் புதிய உயரங்களை அடைய முடியும் என்று தவறாக எண்ணுகின்றோம். ஆனால், நம்முடைய வாழ்க்கையில் கடினமான நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் ஆதரவளிப்பதன் வாயிலாக நாம் தப்பிப்பிழைக்கஉதவுகிறார்கள் என்பதையும், நம் முடையவாழ்க்கையில் உயரங்களை அடைய ஊக்குவிக்கின்றார்கள் என்பதையும் உணரத் தவறிவிட்டோம். அவர்கள் நம்முடைய முன்னேற்றத்தை தடுத்து பிடித்துவைக்கவில்லை, ஆனால் நாம் முன்னேறுவதற்காக ஆதரவளிக்கிறார்கள். அதனால் குடும்ப உறுப்பினர்களை எப்போதும் அனுசரித்து ஒற்றுமையுடன் வாழமுயற்ச்சித்திடுக .

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...