சனி, 23 நவம்பர், 2019

தீங்கு விளைவிப்ப வர்களிடமிருந்து தூரமாக விலகி செல்க


மிகவும் அதிக குளிரான பனிகாலத்தில் ஒருநாள் அதிகாலையில் விவசாயி ஒருவர் தன்னுடைய வயல் வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அவருடைய நிலத்தில் தரையெல்லாம் பனிக்கட்டியால் உறைந்த நிலையில் பாம்பு ஒன்று அவ்விடத்தில் நகர்ந்து செல்வதற்கு முயன்றும் முடியாமல் பணிகட்டியால் உறைந்திருந்ததை கண்ணுற்றார். அந்த பாம்பு ஆனது உயிர்வாழ்வதற்காக வே முடியாத எவ்வளவு ஆபத்தான மாட்டிகொண்டுள்ளது என இரக்கப்பட்டு அந்த பாம்பினை அந்த சூழலிலிருந்து எடுத்து மீண்டும் பழையவாறு உயிர்தப்பிக்க உதவிடவேண்டும் எனமுடிவுசெய்து கையில் ஒருகுச்சியை எடுத்து அதன்மூலம் அந்த பாம்பினை மிககடினமாக முயன்று எடுத்து தன்னுடைய வீட்டிற்கு கொண்டு வந்துசேர்ந்தார். அவருடைய வீட்டில் குளிரை விரட்டிடுவதற்கான வெப்பமூட்டும் இயந்திரம் இருந்ததால் அந்த பாம்பு விரைவில் புத்துயிர் பெற்றது, அதனோடு அது ஊர்ந்து நகர்ந்து செல்வதற்கு போதுமான வலிமை யும் பெற்றுவிட்டது, அதன்பின்னர் தான் குளிரில் விரைத்து இறக்கபோகின்ற நிலையில் தன்னை அங்கிருந்து எடுத்து கொண்டு வந்த காத்திட்ட அந்த விவசாயியை கடித்தது. அதனால் அந்தவிவசாயி பாம்பின் விஷம் உடல்முழுதும் பரவி இறக்கபோகும் நிலைக்கு ஆளானார் அந்நிலையில் அவருடைய உறவினர்கள் அவரை சுற்றி மிக சோகமாக அமர்ந்திருந்தனர் . அவர் தனது கடைசி மூச்சை விடும் நிலையில் தன்னை ,சுற்றி இருந்த உறவினர்களிடம், “ஒரு துரோகி மீது பரிதாபப்படக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்” என்றார். நாம் எவ்வளவுதான் நல்ல முறையில் நடந்து கொண்டு நல்லது செய்தாலும், தங்களின் தன்மையை ஒருபோதும் மாற்றாத மாற்றிகொள்ளாத மாற்ற விரும்பாத ஒருசில தீங்கு விளைவிப்பவர்கள் இருக்கின்றார்கள். அதனால் எப்போதும் விழிப்புடன் , அவர்களிடமிருந்து தூரமாக விலகி செல்க என அறிவுறுத்தப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...