சனி, 26 அக்டோபர், 2019

மகிழ்ச்சியைத் துரத்த வேண்டாம். மற்றவர்களுக்கு உதவுகின்ற மனப்பான்மையானது மகிழ்ச்சியை தானாகவே கொண்டுவரும்


ஒரு கிராமத்தில் முதியவர் ஒருவர் வாழ்ந்துவந்தார்.அவர் எப்போதும் மற்றவர்களைபற்றிய மிக மோசமான மனநிலையில் மிகநீண்ட காலமாக அவர்களை பற்றி இல்லாததும் பொல்லாததுமாக விஷமத்தனமாக குறைகூறி கொண்டிருந்தார் மேலும் அவர் மற்றவர்களிடையே மகிழ்ச்சியற்ற உணர்வை உருவாக்குகின்ற அவதூறு பிரச்சாரத்தையும் செய்து கொண்டிருந்தார். அதனால் அவரைத் தவிர்ப்பதற்காக அந்த கிராமத்து மக்கள் தங்களால் முடிந்தவரை அவரிடம் அனுகாமல் தூர விலகிவிலகி ஓடிச் சென்றனர் இவ்வாறான சூழலில் அவருக்கு எண்பது வயதாகும்போது, ஒருநாள் . "அந்த வயதானவர் இன்று மகிழ்ச்சியாக இருக்கின்றார், அவர் யாரைப் பற்றியும் புகார் கூறுவதிவில்லை, யாரைகண்டாலும் வெறுத்து ஒதுக்காமல் புன்னகைசெய்கின்றார், மேலும் அவரது முகம் கூட புத்துணர்ச்சியுடன் தென்படுகின்றது. மிகமுக்கியமாக யாருக்காவது எந்தவொரு உதவிவேண்டுமானாலும் தான் செய்யதயாராக இருப்பதாக உதவிக்கரம் நீட்டுகின்றார் " எனும் செய்தி காட்டுதீபோன்று உடனடியாக அந்த கிராமத்தில் வாழும் மக்கள் எல்லோருரிடமும் பரவியது அவ்வாறான செய்தியை கேள்வியுற்றதும் அந்த கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரும் அந்த வயதான மனிதரைச் சுற்றி கூடி, "மிகவும் அதிசயமாக இருக்கின்றதே எவ்வாறு இப்படி மாறிவிட்டீர்கள் உங்களுக்கு என்ன நேர்ந்தது?" என மூலைக்குமூலை அவரிடம் கேள்விகேட்க ஆரம்பித்தனர் அதனை தொடர்ந்து அம்முதியவர், " அதிசயம் ஒன்றும் இல்லை யப்பா. எண்பது ஆண்டுகளாக நான் மகிழ்ச்சியைத் துரத்திக் கொண்டிருந்தேன், அது பயனற்றது என நேற்றுதான் தெரிந்துகொண்டேன்அதாவது நான் மகிழ்ச்சியுடன் வாழவேண்டுமானால் மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை மகிழ்ச்சியுடன் செய்தால் போதும் என தெரிந்துகொண்டேன் அதனால் நானும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன் என்னை சந்திக்கின்ற மற்றவர்களும் இப்போது மகிழ்ச்சியாக இருக்கின்றனர்." என கூறிக்கொண்டிருந்தார் நாம் வாழும் நம்முடைய வாழ்க்கைக்கான மகிழ்ச்சியைத் துரத்த வேண்டாம். மற்றவர்களுக்கு உதவுகின்ற மனப்பான்மையானது மகிழ்ச்சியை தானாகவே கொண்டுவரும் என்ற செய்தியை மனதில் கொள்க

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...