ஞாயிறு, 22 அக்டோபர், 2023

முயலும் அதன் நண்பர்களும்!

  ஒரு வேளான் பண்ணைக்கு அருகிலிருந்த ஒரு காட்டில் முயல்ஒன்று வசித்து வந்தது அது தன்னுடைய இனமல்லாத மற்றபல்வேறு இன விலங்குளை நண்பர்கள்ஆக  கொண்டிருந்தது, அதனால் அது எப்போதும் தனது நண்பர்களுடன் வேடிக்கையாக  பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் ,  இருந்துவந்தது, அவ்வாறாக அந்த முயலின் வாழ் நாட்கள் மகிழ்ச்சியாகக் கழிந்து கொண்டிருந்தன, அதனால்  பல்வேறு நண்பர்களைநாம் பெற்றிருப்பது எவ்வளவு அதிர்ஷ்டசாலி என எப்போதும் நினைத்து மகிழ்ச்சியுடன் இருந்துவந்தது. ஒரு நாள், அதுவாழும் வேளான் பண்ணைக்கு அருகிலிருந்த ஆற்றங்கரையில் நண்பர்களுடன் விளையாடியபின் தன்னுடைய உணவிற்காக சிறிது தூரம் சென்று கொண்டிருந்தபோது, சிறிது நேரத்தில், ஒரு சிங்கம் தன்னை நோக்கி மெதுவாக தன்னை பிடித்து உண்ணவருவதைக் கண்டு பயந்துவிட்டது, அதனால் நமக்குதான் ஏராளமான நண்பர்கள் இருக்கின்றனரே  இவ்வாறான இக்கட்டான நேரத்தில் அவர்களிடம் நம்மை காப்பாற்றுமாறு உதவிகேட்போம்   அவர்கள் கண்டிப்பாக நமக்கு உதவுவார்கள்என நினைத்து அருகில் மேய்ந்து கொண்டிருந்த தன் நண்பன் குதிரையை நோக்கி ஓடி வந்து அதனிடம் தன்னுடைய உயிரை காப்பதற்காக உதவி கேட்டு அழுதது உடன் குதிரையான, "நண்பரே, நான் உங்களுக்கு உதவி செய்வதற்காகத்தான் விரும்புகிறேன், ஆனால் நான் இப்போது ஒருமுக்கியமான  வேலைக்கு செல்லவேண்டியுள்ளது " எனக்கூறியவாறு  குதிரை ஓடிவிட்டது. அப்போது முயல் மரத்தடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தன் நண்பன் காளையைப் பார்த்து, “நண்பா, என்னை கொள்ள ஒரு சிங்கம் வருகிறது. தயவு செய்து உனது கூர்மையான கொம்புகளால் அந்த சிங்க்ததினைப் பயமுறுத்தி துரத்தி என்உயிரை காப்பாற்று." எனகோரியது .உடன் அதனுடைய மற்றொரு நண்பனான படுத்துகொண்டிருந்த காளையான எழுந்து நின்று, "நண்பா, நான் என்கூரியகொம்பால்குத்தி அந்த சிக்கத்தை ஓட வைக்க முடியும், ஆனால் இந்த வேளாளர்  தன்னுடைய  வயலில் உழுவுபணி செய்திட என்னை அழைத்துள்ளார்." எனக்கூறிவிட்டு காளை நழுவியது. இப்போது, முயல் மற்றுமொரு நண்பனான ஆட்டைப் பார்த்து, அதனிடம் சிங்கம் ஒன்று தன்னை கொல்லவருவதாகவும், தயவு செய்து. தன்னை அதன் முதுகில் ஏற்றிகொண்டு  இங்கிருந்து வெகுதூரத்திற்கு ஓடி   காப்பாற்றிடமாறு கோரியது. என்னுடைய உயிரைக் காப்பாற்றவே நான் சிரமபட்டு தனியாக ஓட வேண்டும். அவ்வாறான நிலையில் நாம் நம்முடைய முதுகில் முயலை கூடுதலாக சுமந்து கொண்டு  பாரத்தை அதிகரிக்க வேண்டும் என்று ஆடு நினைத்தது. உடன் அந்த  ஆடு மட்டும் அங்கிருந்து ஓடியது. சிங்கம் தன்னை நெருங்குவதை முயல் பார்த்தது. வேறு வழியின்றி அது முடிந்தவரை வேகமாக ஓடி வெகுதூரம் சென்று தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அங்கு நிலத்தில் இருந்த ஒரு குழிக்குள் ஒளிந்து கொண்டது. அன்றைக்குதான்  முயல் தனக்கு ஏராளமான அளவில் பலவேறு நண்பர்கள் உள்ளனர்  ஆனால் இவ்வாறான ஆபத்தான நிலையில் உதவக்கூடிய உண்மையான நண்பர்களாக அவர்கள் இல்லை, அவர்கள் அனைவரும் சுயநலவாதிகளாக இருப்பதைப் புரிந்துகொண்டது,
 தன்னை காத்திட தான் நம்பக்கூடிய ஒருவன் தான் மட்டுமே என்று புரிந்துகொண்டது. கற்றல்: மற்றவர்களை நம்புவதற்கு பதிலாக உங்களைமட்டுமே நம்புங்கள்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...