ஒரு ஏழை கடந்த இருபது வருடங்களாக மிகசிக்கனமாக செலவுசெய்தபின் மிகுதி செலவிடப்படாமல் உள்ள தொகையை ஒவ்வொரு பைசாவாக சேமித்து கொண்டுவந்து கனிசமான தொகைசேர்ந்ததும் அந்த பணத்தை தனது குடும்பத்துடன் சேர்ந்து சொந்த வீட்டில் வாழ்வதற்காக தன்னுடைய குடும்பத்திற்காகவென தனியாக ஒரு வீடு கட்ட பயன்படுத்தினார். இறுதியாக, அவரது வீடு கட்டி முடிக்கப்பட்டது. அதன் பிறகு, அவரது குடும்பத்துடன் புதுவீட்டில் குடிபுகுவதற்காக ஒரு நல்ல நாளும் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் அந்த புதுவீட்டில் குடிபுகுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல நாளிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது அதனால் அவரது வீடு முற்றிலும் அழிக்கப்பட்டது. ஏழைக்கு அந்த செய்தி கிடைத்ததும், நிலநடுக்கத்தால் இடிந்த போன தன்னுடைய புதிய வீடு இருக்கும் இடத்திற்குச் செல்வதற்கு முன் கடைத்தெருவிற்குச் சென்று இனிப்பு வாங்கிகொண்டுவந்தார் இடிந்துபோன புதியதாக கட்டப்பட்டிருந்த அவரதுவீ்ட்டிற்கு முன்பாக வேடிக்கை பார்ப்பதற்காக. பலர் கூடியிருந்த இடத்தை அவர் அடைந்தபோது, பலரும் அந்த புதுவீட்டில் அவரது குடும்பம் குடிபுகும் முன்பே தனது வீட்டை இழந்ததால், அவரிடம் வருத்தம் தெரிவித்தனர். சிலர் அவருக்கு ஆறுதல் கூற முயன்றனர். ஆனால் அந்த ஏழை வேடிக்கை பார்ப்பதற்காக கூடியிருந்த அவர்கள் அனைவருக்கும் இனிப்புகளை எடுத்து விநியோகிக்க ஆரம்பித்தார். இதைகண்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களுள் அந்த ஏழையை நன்கு அறிந்த அவனது நண்பன் ஒருவன் "நண்பரே நீங்கள் வாழ்நாளெல்லாம் மிகவும் அதிக சிக்கனத்துடன் வாழ்ந்து சேமித்த பணத்தை கொண்டு புதிதாகக் கட்டிய வீடு இடிந்து விழுந்து விட்டது, நீங்கள் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்ததை இந்த நிலநடுக்கம் வீணடித்து விட்டது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் இனிப்புகளை வழங்குகிறீர்கள்!!" என கேட்டார். உடன் ஏழை சிரித்துக்கொண்டே," நண்பரே இந்த செயலின் எதிர்மறையான பக்கத்தை மட்டுமே நீங்கள் பார்க்கிறீர்கள், எனவே, உங்களால் நேர்மறையான பக்கத்தைப் காண முடியாது. இன்று நிலநடுக்கத்தால் வீடு இடிந்து விழுந்தது நல்லது. ஒருவேளை இரண்டு நாட்களுக்குப் பிறகு நான் இந்த புது வீட்டிற்கு குடிபுகுந்து இதில் என் குடும்பத்துடன் வசிக்கத் தொடங்கியபின்னர் இடிந்து விழுந்திருந்தால் என்ன செய்வது. அப்போது இடிந்து விழுந்திருந்தால், நான், என் மனைவி, குழந்தைகள் அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லவா! அப்போது எவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கும்? எனவே எது நடந்தாலும் அது நன்மைக்காக மட்டுமே நடந்தது. எனக்கொள்க அதனால்தான் நான் அனைவருக்கும் இனிப்பு வழங்குகின்றேன்
ஞாயிறு, 15 அக்டோபர், 2023
ஏழை மனிதனின் இழப்பும் அவனது நேர்மறையான அணுகுமுறையும்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...
-
ஒரு மனிதன் வீட்டுச் செலவுகள் அனைத்தையும் அவரே ஏற்க வேண்டியதாலும், முழுக் குடும்பத்தின் பொறுப்பும் தன் மீது இருப்பதாலும், உறவினர்களின் அல்லத...
-
ஒருமுறை ஒரு பணக்காரர் சாலையோரத்தில் ஒரு இளம் பிச்சைக்காரனைப் பார்த்தார், அப்பணக்காரர் அப்பிச்சைக்காரனிடம் சென்று, "நீங்கள் பணிசெய்வதற்...
-
ஒரு மனிதன் தனது வாழ்நாள் முழுவதும் கடினமாக உழைத்து, 50 வயதை எட்டியபோது, அவர் பல தொழில்நிறுவனங்களைத் துவங்கியதால் அந்நகரின் மிகப்பெரிய தொ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக