சனி, 23 செப்டம்பர், 2023

.துறவிக்கு துனி துவைப்பவரின் அமைதியான பதில் -

 ஒரு சமயம் துறவி ஒருவர் ஆற்றின் கரையில் இருந்த ஒரு பெரிய பாறையில் அமர்ந்து தியானம் செய்யத்துவங்கினார்.அவ்வாற்றின் கரையின் அவ்விடத்தில் ஒரேயொரு  பாறை மட்டுமே  இருந்ததால், தினமும் ஒரு துனிதுவைப்பாவரும் அந்த ஆற்றில் ஓடும் தண்ணீரை பயன்படுத்தி அந்த பாறையில் துணி துவைக்க வருவார் . அவ்வாறே இன்று, துனிதுவைப்பதற்காக அந்த பாறைக்கு வந்த அந்த துனிதுவைப்பவர் அந்த பாறையில் துறவி தியானம் செய்து கொண்டிருப்பதை கண்டார். சிறிது நேரத்தில் துறவி தியானம்முடிந்து எழுந்து சென்றுவிடுவார் நாமும் நம்முடைய பணியை செய்திடலாம் என, அவர் காத்திக்க முடிவு செய்தார், ஆனால் இரண்டு மணி நேரம் கழித்துகூட அந்த துறவி எழுந்து செல்லவில்லை. எனவே, அந்த துணி துவைப்பவர்  கைகளைகூப்பி வணங்கிய வாறு துறவியிடம் பணிவுடன்  - ஐயா எனக்கு துணி துவைக்க இந்த பாறை தேவை, நீங்கள் வேறு எங்காவது சென்று உட்கார்ந்து தியானம் செய்தால், நான் என்னுடையபணியைமுடிக்க முடியும்.  என கேட்டுக் கொண்டார் அந்த துறவி எழுந்திருப்பதாக தெரியவில்லை அதனால், துணிதுவைப்பவர் தான் கொண்டு வந்த துணிகளை அந்த பாறையில்  துவைக்கத் தொடங்கினார், அவ்வாறான அவரின் துணி துவைக்கும் பணியில்  அழுக்கடைந்த நீர்  துறவியின் மீது தெறித்தது. இதனால் துணிதுவைப்பரின் மீது அதிக கோபம் கொண்டு துறவி அவரை மோசமாக திட்டினார். இதைகண்ட அந்த துணிதுவைப்பவர்  - நான் ஏதாவது குற்றம் செய்திருக்க வேண்டும் அதனால்தான் என்னை இவ்வாறு இந்த துறவியானவர் கோபமாக திட்டு கின்றார். என எண்ணினார் எனவே, அவர் தனது கைகளை மடக்கி துறவியிடம் மன்னிப்பு கேட்க ஆரம்பித்தார். துறவி கோபமாக அவரை நோக்கி கத்தினார் - உன்னிடம் எந்த ஒழுங்கும் கட்டுப்பாடும் இல்லை, நீ துணிகளை துவைப்பதால் என் மீது அழுக்குத் தண்ணீர் த்தெறித்துவிழுவதை ப் பார்க்கவில்லையா. , அவ்வாறான அழுக்கு நீர் தெறிப்பதால் இப்போது என் உடைகள் அனைத்தும் அழுக்காகிவிட்டன.என திரும்பவும் கோபமாக திட்டினார் உடன் துணிதுவைப்பவர்  - தயவுசெய்து அமைதியாக இருங்கள், நான் தவறு செய்துவிட்டேன்.  அழுக்குத் துணிகளைத் துவைக்கும்போது அழுக்கு தண்ணீர் உங்களின்மீது தெறித்து விழாமல் இருப்பதற்காக நான் கவனம் செலுத்த வில்லை. தயவு செய்து என்னை மன்னித்திடுங்கள் ஐயா. என்று கூறிவிட்டு,தொடர்ந்து தான்கொண்டுவந்த துணிகளை  துவைத்து எடுத்துக்கொண்டு, மீண்டும் துறவியிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டுச் சென்றார். இப்போது யோசித்துப் பாருங்கள், உண்மையான துறவி யார்? கோபமும் சகிப்புத்தன்மையும் உண்மையான புரிதலின் எதிரிகள்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...