ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

ஒரு திறமையற்ற பணியாளர் தன்னுடைய கருவிகள் சரியில்லை என எப்போதும் குறைகூறுவார்.


நம்முடைய வெற்றி நாம் பயன்படுத்திடும் நம்முடைய கருவிகளை சார்ந்தது அன்று, அதற்கு பதிலாக நாம் அவற்றை எவ்வாறு திறமையாக பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தது ஆகும் என்பதே இந்த பழமொழியின் அர்த்தமாகும். எந்தவொரு நபரும் உலகம் முழுவதிலும் உள்ள உபகரணங்கள் அனைத்தையும் தன்கைகளில் வைத்திருக்கலாம், ஆனால் அவற்றை எவ்வாறு மிகச்சிறப்பாக பயன்படுத்துவது என்று அவருக்கு தெரியாவிட்டால் தன்னுடைய பணியில் வெற்றியை ஒருபோதும் அடையவே முடியாது. அதைவிட, தனக்கு கிடைக்கும் எந்தவொரு கருவியையும் கொண்டு திறமையுடைய நபர்ஒருவர் எந்தவொரு பணியையும் மிகவெற்றிகரமாக முடித்திடுவார். அதையே நம்முடைய நடைமுறை வாழ்க்கை சூழலி கூட காணமுடியும். நமது திறமைகளையும் முயற்சிகளையும் அதிகபட்ச நன்மைக்காக வளர்த்து மேம்படுத்திகொள்ள வேண்டுமேயொழிய. அதைவிடுத்து ஏதாவது தவறு நடந்தால் மற்றவர்கள்மீது இதற்காக குற்றம்சாட்டகூடாது .

குமார் ரவி ஆகியஇருவரும் அண்டை வீடுகளில் வாழும் இரு விவசாயிகள் ஆவார்கள். அவ்விருவரும்தங்களுக்கென ஒரு ஜோடி காளை மாடுகளை வைத்திருந்தனர். குமார் தன்னுடைய நிலத்தில் நாள் முழுவதும் கடினமாக உழைத்துவந்தார் அதனோடு, தனது விவசாய பணிகளுக்கு உழவு மாடுகள் மிக அவசியமானது என்று அறிந்திருந்ததால், தன்னுடைய உழவு மாடுகளை நன்றாக கவனித்து பராமரித்துவந்தார்.

அதற்குபதிலாக ரவி என்பவர் தன்னுடைய உழவு மாடுகளை கொண்டு அதிகபட்ச பணியை முடித்திடுவார் ஆனால் அம்மாடுகளுக்கு தேவையான தீவணங்களை இட்டு நன்றாக பராமரிக்காத முழுச்சோம்பேறியாக இருந்துவந்தார்,

அதனால் ஒரு உண்மையான நண்பனாக குமார் என்பவர் இரவி என்பவரிடம் நம்முடைய விவசாயத்திற்கு உதவிடும் விலங்குகளுக்கு தீங்கு விளைவிப்பதையும் கொடுமைப்படுத்தாமலும் அவைகளை பராமரிக்கும்படி அறிவுறுத்தியதோடுமட்டுமல்லாமல் அவைதான் விவசாயத்திற்கு அடிப்படையாகும் என தன்னுடைய நண்பருக்கு சுட்டிகாட்டினார் ஆயினும் இரவி இந்த அறிவுரைகளை ஏற்று பின்பற்றாமல் மாடுகளை சரியாக பராமரிக்காததால் அவைகளினால் விவசாயபிகளை முடிக்கமுடியவில்லை அதனால் அவைகளை அருகிலிருந்த காட்டிற்கு விரட்டிவிட்டார் அதனை தொடர்ந்து இரவி என்பவர் தன்னுடைய நிலத்தில் ஒருபகுதியை விற்று உழவுபணிகளுக்காக புதியதாக டிராக்டர் ஒன்றினை வாங்கினார்.

பருவமழை விரைவில் வந்து பயிரிடவேண்டியநிலையில் . குமார் என்பவர் தன்னுடைய உழவுமாடுகளை கொண்டு நிலத்தை நன்றாக உழுது சாகுபடிக்கு தயாராகவும் இருந்ததால் பயிரிட்டு அந்த பருவத்தில் நல்ல மகசூலை அடையமுடிந்தது. ஆனால் ரவிஎன்பவர் தனது சோம்பேறிதனத்தால் உழவிற்காக வாங்கியிருந்த தனது புதிய டிராக்டரை கூட நன்கு பராமரிக்காமல் விட்டதால் அதனை இயக்கி நிலத்தை உழுது சாகுபடிக்கு தயார்படுத்ததால் குறிப்பிட்ட பருவத்தில் பயிரிடமால் போதுமான மகசூல் விவசாயத்திலிருந்து கிடைக்கவில்லை. அவருடைய பரிதாபகரமான நிலைக்கு அவரே பொறுப்பாளியாவர் என்பதை உணரவில்லை மேலும் விவசாய வருமானத்தை இழந்ததுமட்டுமல்லால் அவர் தன்னுடைய மோசமான பராமரிப்பு காரணமாக புதியாக வாங்கிய டிராக்டரை சரிசெய்வதற்காக அதிக பணம் செலவழித்தார். வருமானத்திற்காக நிலத்தை விற்கவேண்டிய இக்கட்டாண நிலைக்கு தள்ளப்பட்டார்

சிறந்த கருவிகளைப் பெற்றிருந்த போதிலும் ரவிஎன்பவரால் விவசாயத்தில் வெற்றி பெற முடியவில்லை, அதேசமயம் குமார் ஒரு நல்ல திறமைாளராக இருந்ததால், குறைந்த வசதிகொண்ட கருவிகளைகொண்டிருந்தபோதிலும் அவரால் விவசாயத்தில்வெற்றி பெற முடிந்தது.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...