சனி, 2 செப்டம்பர், 2017

கொடிக்கம்பத்தின் உயரம் எவ்வளவு எனஅளந்திடுமாறு கோரினால் கொடிக்கம்பத்தின் நீளம் எவ்வளவு என அளந்து கூறுகின்றாரே இது சரியா?


ஒரு நிருவாகிகளின் பயிற்சி நடைபெறும் இடத்தில் நடைபெற்ற பயிற்சியில் கலந்துகொண்ட மூத்த மேலாளர்களின் குழுவிற்கு அருகிலிருந்த கொடிமரத்தின் உயரம் எவ்வளவு என கூறுமாறு பணிக்கப்பட்டனர் உடன் அந்தபயிற்சியில் கலந்து கொண்ட மூத்தமேலாளர்களின் குழுவானது இதற்காக உயரமான ஏணி அளப்பதற்கான நாடா ஆகியவற்றை கொண்டு குழுவாக முயற்சிசெய்தனர் அதாவது அந்த குழுஉறுப்பினர்களில் இருவர் ஏணியைஎடுத்துவந்து அந்த கொடிக்கம்பத்தின்மீது சாய்த்து தரையில் நிற்க வைத்து பிடித்துகொண்டனர் மூன்றாமவர் அளவுநாடாவின் ஒருமுனையை பிடித்து கொண்டு அந்த ஏணியில் கொடிமரத்தின் உச்சிக்கு ஏறமுயன்றுகொண்டிருந்தார் நான்காவது நபர் அளவுநாடவின் மற்றொரு முனையை தரையில் உட்கார்ந்து கொடிக்கம்பத்தின் அடியில்பிடித்து கொண்டிருந்தார் ஐந்தாவது நபர் இதனை மேற்பார்வை செய்துகொண்டிருந்தார் ஏணியின் வாயிலாக கொடிக்கம்பத்திற்கு ஏறமுயற்சித்தவர் ஒரு குறிப்பிட்ட நிலைக்குமேல் ஏறமுடியாமல் கீழேவிழுவதை போன்று தடுமாறினார் அதனால் அதற்குமேல் கொடிமரத்தின் உச்சிக்கு தன்னால் சென்றுஅதன் உயரத்தை அளக்கமுடியாது என கீழேஇறங்கிவந்தார் அந்த குழுவின் மிகுதி உறுப்பினர்களும் கொடிமரத்தின் உச்சிக்கு செல்வதற்கு பயந்ததால் தங்களால் அந்த பணியை செய்யஇயலாது எனஒத்துகொண்டனர் இந்நிலையில் பார்வையாளராக இருந்தஒருவர் தான் அந்த பணியை செய்வதாக ஏற்றுகொண்டு அந்த கொடிமரத்தினை சுற்றி பள்ளம் தோண்டி அந்த கொடிக்கம்பத்தை வெளியிலெடுத்து தரையில் படுக்கவைத்து அளவுநாடவின் வாயிலாக அதன் ஒருமுனையிலிருந்து மற்றொரு முனைவரைஅளந்து எவ்வளவு என தாளில் குறித்து கொண்டு அந்த கொடிமரத்தைமீண்டும் செங்குத்தாக அதேஇடத்தில் நட்டு தோண்டிய பள்ளத்தை மண்ணால் மூடிவிட்டு எவ்வளவு நீளம் அந்த கொடிக்கம்பம் என விடையை கூறிவிட்டு நடையை கட்டினார் அதனை தொடர்ந்து பயிற்சியில் கலந்துகொண்ட மூத்த மேலாளர்களின் குழுவானது கொடிக்கம்பத்தின் உயரம் எவ்வளவு எனஅளந்திடுமாறு கோரினால் இந்த நண்பர் கொடிக்கம்பத்தின் நீளம் எவ்வளவு என அளந்து கூறுகின்றாரே இது எங்களுக்கு தெரியாதா என கேலி செய்து சிரித்தனர்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...