வியாழன், 24 ஆகஸ்ட், 2017

நம்பிக்கையானவர்கள் யார்யார் என அறிந்து கொள்க


முற்காலத்தில் முனிவர் ஒருவர் ஒருநாட்டின் இளவரசனுக்கு பரிசாக மூன்று பொம்மைகளை அளித்தார் உடன் அவ்விளவரசன் அம்முனிவரிடம் ஐயா நான் என்ன விளையாட்டு பிள்ளையா இந்த பொம்மைகளை வைத்து விளையாடுவதற்கு என கூறினான் உடன் இளவரசே கொஞ்சம் பொறுங்கள் வருங்காலத்திய அரசனுக்கு இந்த பொம்மைகளின் செயல் மிகமுக்கிய படிப்பினையாக இருக்கும் பாருங்கள் இப்போது எனக்கூறினார் அதனைதொடர்ந்து அம்முனிவர் அவ்விளவரசினடம் சிறு கம்பியை கொடுத்து அந்த பொம்மைகளின் ஒவ்வொன்றின் காதுகளின் வழியாக அந்த கம்பியினை உள்செலுத்துக அதன்பின்னர் என்ன நடைபெறுகின்றது என பொறுமையாக பார் எனக்கூறினார் அதனை தொடர்ந்து அவ்விளவரசன் முனிவர் வழங்கிய கம்பியைமுதல் பொம்மையின் காதின் வழியாக உள்நுழைத்தபோது அந்த கம்பியின் முனையானது மற்றொரு காதுவழியாக வெளிவந்தது இவ்வாறான மனிதர்கள் நாம் கூறும் எந்தவொரு செய்தியையும் ஒருகாதில் வாங்கி மறுகாதுவழியாக விட்டிட்டு நாம் கூறும் கட்டளையை பின்பற்றி செயல்படமாட்டார்கள் அதனால் அவ்வாறானவர்களை நம்பவேண்டாம் என அறிவுரைகூறினார் அடுத்த பொம்மையின் காதின் வழியாக கம்பியை அவ்விளவரசன் உள்நுழைத்தபோது அந்த கம்பி அந்த பொம்மையின் வாய்வழியாக வெளியேவந்தது இந்த பொம்மையானது நாம் கூறும் எந்தவொரு செய்தியையும் இரகசியம் காத்திடாமல் மற்றவர்களுக்கு உடனடியாக தகவலை பரப்பிவிடுவார்கள் அதனால் இவர்களையும் நம்பிக்கையான நபராக வைத்து கொள்ளக்கூடாது அவ்விளவரசன் மூன்றாவது பொம்மையின் காதின் வழியாக கம்பியை உள்நுழைத்தபோது அப்படியே உள்ளேயே இருந்தது இந்தமூன்றாவது பொம்மைபோன்ற மனிதர்கள் நாம்கூறும் செய்திகளை எங்கும் யாருக்கும் கூறவும்மாட்டார்கள் மேம்போக்காக விட்டிடவும் செய்யமாட்டார்கள் மிகநம்பகமான மனிதர்கள் அவர்களை நம்முடன் வைத்து கொள்ளலாம் இவ்வாறான அறிவுரையை இந்த பொம்மைகளின் தொகுதிகளிலிருந்து மனிதர்களின் தன்மையை தெரிந்து நம்பகமானவர்கள் யார்யார் என அறிந்து செயல்படுக என அம்முனிவர் இளவரசனுக்கு அறிவுரை வழங்கினார்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...