வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

புறங்கூறுதலை பொருட்டாக எடுத்து செயல்படவேண்டாம்


சீனநாட்டின் ஒரு கிராமத்தில் வயதான மனிதனும் அவனுடைய மகனும் வாழ்ந்துவந்தனர் அவர்களுக்கு சிறிதளவுநிலமும் அந்த நிலத்தின் விவசாய பணிக்காக ஒரு குதிரையும் தங்குவதற்கு ஒரு குடிசையும் மட்டுமேஅவர்களின் சொத்தாக இருந்துவந்தனஇந்நிலையில் அவர்களிடம் இருந்த அந்த ஒருகுதிரையும் ஓடிவிட்டது அதனால்காடுகழனிகளில்விவசாய பணிசெய்வதற்கு குதிரை இல்லாமல் என்னசெய்வது எனஅவ்விருவரும்தங்களின் வறுமையினால் வேறு குதிரையும்வாங்கமுடியவில்லையேஎன்ன செய்வதுஎன தவித்துகொண்டிருந்தனர் இதையறிந்த அவ்வூரில் வாழ்ந்துவந்த மற்றஅனைத்து கிராமமக்களும் அவருடையவீட்டிற்கு வந்து கைவசம் இருந்த ஒரு குதிரையும் ஓடிவிட்டதாமேஅடடா என்ன செய்வீர்கள்பாவம் எனதுக்கம் விசாரித்தனர் இருந்தபோதிலும் அந்த குடியானவன் தங்களுடைய துக்கத்தை அவர்கள்அனைரும் விசாரி்க்க வந்ததால் அனைவருக்கும் நன்றி கூறி அனுப்பிவைத்தார் சிலநாட்கள் கழித்தபின்னர் அந்த விவசாயியின் ஓடிபோன குதிரையானது துனைக்கு குதிரைக்குட்டியுடன்கூடிய பெண்குதிரை ஒன்றுடன் திரும்பவந்து சேர்ந்தது அதனால் அவருக்கு காடுகழனிகளின் பணியைமுடிப்பதற்கான இரண்டு குதிரைகளாகவும்மூன்றாவதாக புதிய குதிரையும் அவருக்குபரிசாக கிடைத்தது இதை கேள்வி்பட்ட அந்த கிராமத்தவரகள்அனைவரும் அவரிடம் வந்து அதிர்ஷ்டம் ஐயா உங்களுக்கு குட்டியுடன் கூடிய புதிய பெண்குதிரையுடன் உங்களுடைய குதிரை திரும்பி வந்துவிட்டதாமேஇனி உங்களைபிடிக்கவேமுடியாதுஎனஅனைவரும் அவரிடம் வந்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர் அப்போதும் அவ்வனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார் அவர் இந்நிலையில் அந்த விவசாயியின் மகன் அவர்களிடம் இருந்த இருகுதிரைகளையும் கொண்டுதங்களுடைய நிலத்தில் விவசாய பணியைசெய்யலாம் என துவங்கிடும்போது புதியதாக வந்த குதிரை அவ்விவசாயியின் மகனை காலால் எட்டி உதைத்து அவருடைய மகனின் கால் நடக்கமுடியாதவாறு உடைந்துவிட்டது அதனால் அந்த விவசாயியானவர் இவ்வாறான மகனுக்கு எவ்வாறு மருத்தும் செய்வது எவ்வாறு வயிறாற சாப்பிடுவது எவ்வாறு வாழ்வது என மிகமனவருத்ததுடன் இருந்தார் அதனை தொடர்ந்து அந்த கிராமத்து மக்கள் அனைவரும் அவரிடம் வந்து அடடா உங்களுடைய வயதான காலத்தில்உறுதுனையாக இருக்கின்ற உங்களுடைய மகனின் காலை புதியதாக வந்த குதிரை உடைத்துவிட்டதாமே பாவம் என்ன செய்யபோகின்றீர் என துக்கம் விசாரித்து சென்றனர் இருந்தபோதிலும் அவர் மனமுடையாமல் அனைவருக்கும் நன்றி கூறிஅனுப்பிவைத்தார் இந்நிலையில் அருகிலிருந்த ஜப்பான் நாடு இவர்களின் சீன நாட்டுடன் கடுமையான போர் ஒன்றை தொடுத்தது அதனால் சீன நாட்டு அரசர் நாட்டில் உள்ளஅனைத்து குடும்பங்களிலும் உள்ள இளைஞர்களை போரிடுவதற்காக கண்டிப்பாக கலந்துகொள்ளவேண்டும் என உத்திரவிட்டதை தொடர்ந்து அந்த கிராமத்தில் அந்தவயதானவிவசாயின் மகனுடைய கால்நடக்கமுடியாதவாறு உடைந்து விட்டதால்அவருடைய மகனைதவிர மற்ற அனைத்து இளைஞர்களும் போர்படையில் சேர்க்கபட்டு ஜப்பான்நாட்டிற்கு எதிரான போரில்கலந்து கொண்டனர் ஆனால் ஒருவரும் திரும்பிவரவேஇல்லை சிறிது நாட்களில் போரும் முடிவுக்கு வந்தது அந்த விவசாயியின் மகனுடைய கால் சரியாகிவிட்டது தற்போது அந்த விவசாயியின் மகன் தங்களுடையநிலத்தில் அந்த குதிரைகளை கொண்டு விவசாய பணியை நன்கு செய்தான் போதுமான வருமானத்துடன் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...