ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

நமக்கு ஒரு பணியை அளித்தால் அதனோடு தொடர்புடைய பணியையும் சேர்த்து முடித்தால் அதற்கான பரிசு கண்டிப்பாக நமக்கு கிடைக்கும்


கடலில் இயங்கிடும் படகிற்கு வண்ணம் பூசுமாறு ஒரு வண்ணம் பூசுபவரிடம் படகின் சொந்தகாரர் கோரிவிட்டுசென்றார் அந்த படகிற்கு வண்ணம் பூசி கொண்டிருந்தபோது அந்த படகின் அடிப்பகுதியில் சிறு ஓட்டை ஒன்று இருந்ததை கண்டு அதனையும் அடைத்து வண்ணம் பூசும் பணியை முடித்தார் படகின் சொந்தகாரர் வந்து வண்ணப்பூச்சினை பார்த்து திருப்தியுற்று வண்ணம் பூசுவதற்கான தொகையை அவருக்கு வழங்கிவிட்டு தன்னுடைய படகினை எடுத்து சென்றார்

மறுநாள் அதே படகின் சொந்தகாரர் பெரிய அளவு தொகையுடன் மீண்டும் அந்த வண்ணம் பூசுபவரிடம் கொண்டுவந்து கொடுத்தார் வண்ணம் பூசுபவர் உங்களுடைய படகில் வண்ணம் பூசுவதற்கான தொகையைதான நேற்றே நீங்கள் கொடுத்துவிட்டீர்களே நானும் பெற்றுகொண்டேனே இந்த பெருந்தொகை எனக்கு வேண்டாம் என மறுத்தளித்தார்

உடன் படகின் சொந்தகாரர் இந்த தொகை படகில் வண்ணம் பூசியதற்காக அன்று நான் நேற்று படகினை உங்களிடம் ஒப்படைக்கும்போது அதில் ஒரு சிறு ஓட்டை இருந்தது அதனை நான் கூறாமலேயே நீங்களாகவே அடைத்துசரிசெய்துள்ளீர்கள் அதன்பின்னரே என்னுடைய படகிற்கு வண்ணம் பூசியுள்ளீர் அந்த படகினை நான் எடுத்து சென்று அதில்உள்ளஓட்டையை பின்னர் அடைத்து சரிசெய்தபின்னர் எடுத்துசெல்லலாம் என இருந்தபோது அவசர வேலை ஒன்று குறுக்கிட்டது சரிஇந்த அவசர வேலையை முடித்தபின்னர் படகின் ஓட்டையை அடைத்து சரிசெய்திடலாம் என வெளியேசென்றுவிட்டேன் அந்த நேரத்தில் எங்களுடைய மகன் இந்த படகினை எடுத்து சென்றுவிட்டான் ஓட்டைபடகினை எங்களுடைய மகன் எடுத்து சென்றுவிட்டானேஎன்ன நடக்கபோகின்றதோ என நான் பதைபதைப்புடன் தவித்துகொண்டிருக்கும் போது எங்களுடைய மகன் மிகபத்திரமாக திரும்பிவிட்டான் நான் ஓடிசென்று என்னுடைய படகினைை பார்த்தபோது அந்த ஓட்டையை நீங்கள் அடைத்து சரிசெய்துவண்ணம் பூசியுள்ளீர்கள் எங்களுடைய மகனின் உயிரை காத்துள்ளீர்கள் அதற்கான பரிசு இந்த தொகைஎனவிளக்கம் அளித்தார்

நமக்கு ஒரு பணியை அளித்தால் அதனோடு தொடர்புடைய பணியையும் சேர்த்து முடித்தால் அதற்கான பரிசு கண்டிப்பாக நமக்கு கிடைக்கும் என்பது திண்ணம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...