புதன், 7 மார்ச், 2018

மற்றவர்களை எப்போதும் கண்ணியமாகவும் மற்றவர்களுடைய பார்வையில் இருந்து எந்தவொரு செயலை பார்க்கவும் கற்றுக்கொள்க


முன்னொரு காலத்தில், ஒரு சிறிய நகரத்தில் தன்னுடைய கண்களால் வெளிஉலகை காண முடியாத ஒரு மனிதன் வாழ்ந்து வாழ்ந்தார். அவர் கண் பார்வையற்ற குருடனாக இருந்தார். ஆனாலும், இரவில் அவர் வெளியே செல்லும் போதெல்லாம் தன்னுடைய கையில் ஒளிரும் விளக்கு ஒன்றை எடுத்துச் செல்வது வழக்கமாகும். அவ்வாறு ஒருநாள் இரவு அவர் வெளியே சென்று இரவு உணவு உண்ட பிறகு தன்னுடைய கையில் ஒளிரும் விளக்கு டன் தன்னுடைய வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, இளைஞர்கள் குழு ஒன்று சிரித்து பேசிகொண்டு எதிரில் வந்தது. இவர் கண்பார்வையில்லாத குருடனாயிருந்தாலும், பிரகாசிக்கிற விளக்கை கையில் ஏந்திக்கொண்டு வருவதை கண்ணுற்று அவரைப் பற்றி கிண்டலும் கேலியும் கருத்துத் தெரிவித்து கொண்டிருந்தனர் அவர்களுள் ஒருவன் , "ஐயா! நீங்கள் கண்பார்வையில்லாத குருடனாக இருக்கின்றீர்கள், உங்களால் எதையும் பார்க்க முடியாது! ஆயினும் ஏன் நீங்கள் கையில் ஒளிரும் விளக்கை ஏந்தி கொண்டு நடக்கின்றீர்கள்? " என அவரிடம் வினவினான் உடன் கண்பார்வையற்ற அம் மனிதர், "ஆமாம் தம்பி, துரதிர்ஷ்டவசமாக, நான் குருடனாக இருக்கிறேன், நான் எதையும் என்னுடைய கண்களால் பார்க்க முடியாது என்பது சரிதான் ஆனால் இந்த இரவுநேரத்தில் கண்பார்வையுடைய உங்களை போன்றவர்கள் இந்த ஒளி விளக்கு என்னுடைய கைகளில் இல்லையெனில் என்மீது வந்து மோதி கீழே நான்விழாமல் நடந்து செல்லவேண்டாமா அதனால் தான் "என்றார். உடன் அந்த இளைஞர்கள் குழுவானது வெட்கத்துடன் தங்களுடைய தவறினை உணர்ந்தது அவரிடம் தாங்கள் தவறாக அவரை பார்த்து கிண்டலும் கேலியமாக பேசியதை மன்னிக்குமாறு தங்களுடைய நடத்தைக்கு மன்னிப்பு கோரியுது. ஆம் மற்றவர்களை எப்போதும் கண்ணியமாகவும் மற்றவர்களுடைய பார்வையில் இருந்து எந்தவொரு செயலை பார்க்கவும் கற்றுக்கொள்க

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...