சனி, 24 மார்ச், 2018

பெற்றோர்களுடன் ஒத்துவாழ முயன்றிடுவோம்


ஒரு நாள் என்னுடைய பெற்றோர் கேவலம் ஒரு இருசக்கர வாகணத்தை (bike)கூட எனக்கு வாங்கிதரக்கூடாது என்றும் நான் ஒரு மருத்துவராகவோ அல்லது ஒரு பொறியாள-ராகவோ ஆவதற்கு கனவு காணகூடாது எனக்கூறுவதற்கு ம் அவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது இவ்வாறான கட்டுபாடுகளுடன் இந்த வீட்டில் இனி ஒரு நிமிடம் கூட வாழமுடியாது அதனால் இப்போதே இந்த வீட்டை விட்டு வெளியேறுவதுதான் சரியான செயலாகும் என்றும் , நான் ஒரு பெரிய மனிதனாக ஆகாதவரை இந்த வீட்டிற்கே திரும்புவதில்லை என்றும் முடிவுசெய்து , மிகவும் கோபமாக எங்களுடைய வீட்டிலிருந்து வெளியேறினேன் கோபத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியாமல் வெளியேற முடிவுசெய்திடும்போது செலவிற்கு பணம் வேண்டுமே அதனால் என்னுடைய தந்தையின் பணப்பையை திருடி பாக்கெட்டில் வைத்து கொண்டுதான் வெளியேறினேன் அவ்வாறு கோபமாக நான் வீட்டைவிட்டு வெளியேறும்போது கவணிக்காமல்என்னுடைய தந்தையின் முழுக்காலணிகளை என்னுடைய கால்களில் அணிந்து கொண்டிருப்பதை உணரவில்லை. பேருந்து நிலையத்தை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தேன் வேகமாக நடக்கும்போது காலில் தரையிலிருந்த கற்கள் குத்தி வலி ஏற்படுத்தி கொண்டிருந்தன பேருந்துநிலையம் வந்து சேர்ந்தபோது பேருந்து எதுவும்அப்போது இல்லை அதனால் காலில் ஏன்கற்கள்குத்துகின்றன என குனிந்து பார்த்தபோது தந்தையின் முழுக்காலணி கிழிந்திருந்ததால் தரையிலிருந்த கற்கள் என்னுடைய காலை குத்தி பதம்பார்த்து வந்து கொண்டிருந்தன , என்ன செய்வது என்று தெரியாமல், நான் என் அப்பாவின் பணப்பையை பார்க்க ஆரம்பித்தேன். அதில் எனக்கு ஒரு மடிக்கணினி வாங்கியதற்கான பட்டியலும் அதனை வாங்குவதற்கான கடன் உறுதி ஆவணமும் இருந்தன அதிர்ச்சியுடன் அதனை பார்த்து கொண்டிருந்தேன் மேலும் அதனோடு மற்றொரு குறிப்புத்தாளும் இருந்தது அது என்னுடைய தந்தையின் அலுவலக மேலாளரிடமிருந்தான கடிதமாகும் அதில் எப்போதும் நல்லஆடையை அணிந்து அலுவலகத்திற்கு வருமாறும் காலில் கிழியாத நல்ல முழுக்காலணியை அணிந்து வருமாறும் கோரியிருந்தது அதனை கண்ணுற்றதும் எனக்கு மேலும் அதிர்ச்சியாகிவிட்டது அந்நிலையில் என்னுடைய தாயும் அவ்வப்போது என்னுடைய தந்தையிடம் புதிய ஆடைகளை வாங்கி அணியுமாறும் புதிய முழுக்காலணியை வாங்கி அணிந்து அலுவலகத்திற்கு செல்லுமாறும் நினைவூட்டி கொண்டேயிருப்பது என்னுடைய நினைவிற்கு வந்தது என்னுடைய தந்தையோ தற்போதைய தன்னுடைய மாதஊதியத்தில் வீட்டின் அன்றாட செலவிற்கே சமாளிக்கமுடியாமல் தத்தளித்து நம்முடைய மகனின் படிப்பிற்காக அவ்வப்போது கடன் வாங்கி சரிசெய்து வருகின்றோம் அதனால் இன்னும் ஆறுமாதம் கழித்து அவ்வாறு செய்கின்றேன் என தன்னுடைய ஆற்றாமையால் சமாளிப்பதும் என்னுடைய நினைவில் வந்து என்னை அலைக்கழித்தது அதுமட்டுமல்லாது அவருடைய ஸ்கூட்டரை கொடுத்து அதற்கு பதிலாக நான்கோரியவாறு பைக்காக மாற்றி கொள்வதற்கான கடிதம் ஒன்றும் இருந்ததை கண்டேன் அதனால் மனவருத்தம் அதிகமாகி மனம் திருந்தி என்னுடைய பெற்றோரை கண்டு மன்னிப்பு கோரிட வீட்டைவிட்டு வெளியேறிய வேகத்தைவிட வேகமாக வீட்டிற்கு திரும்பி ஓடிவந்தேன் , நான் வீட்டை விட்டு வெளியேறியபோது, என்னுடைய தந்தையின் ஸ்கூட்டர் வாயிலில் நின்று கொண்டிருந்தது ஆனால் தற்போது அது அங்கு இல்லை. அதனால் மிகவும் அதிர்ச்சியாகி எனது தந்தை தன்னுடைய ஸ்கூட்டரை கொடுத்துவிட்டு எனக்கு பைக் வாங்குவதற்கு சென்ற இடத்திற்கு வேகமாக ஓடிசென்றேன் எனக்கு துக்கம் கட்டுபடுத்தமுடியாமல் என் அப்பாவைப் பார்த்து, நான் அவரை இறுக்கமாக கட்டி அணைத்து, "அப்பா எனக்கு பைக் தேவையில்லை" என சத்தமாக அழுது கொண்டே கூறினேன் இனி உங்களை இவ்வாறு தொந்திரவுசெய்திடமாட்டேன் உங்களுடைய ஸ்கூட்டருடன் நாம் வீடடிற்கு திரும்பி செல்வோம் என வற்புறத்தி அழைத்து கொண்டு திரும்பினேன் ஆம் நம்முடைய பெற்றோர்கள் எந்தவொரு வலி, துன்பம் போன்ற எதுவும் நமக்கு ஏற்படாமல் நம்முடைய வளர்ச்சிக்காகவும் மகிழ்ச்சியான வாழ்விற்காகவும் தங்களுடைய தேவைகளை தியாகம் செய்து மெழுகு வர்த்தி போன்று தங்களை வருத்திகொண்டு வாழ்ந்துவருவதை உணர்ந்து அவர்களுடன் ஒத்து வாழ முடிவுசெய்திடுவோம் வாருங்கள்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...