செவ்வாய், 13 மார்ச், 2018

பதிலுக்குபதில்


விவசாயி ஒருவர் தன்னுடைய வயலில் தர்பூசணிகளை பயிரிட்டிருந்தார் . அவர் தன்னுடைய வயலில் பயிரிட்ட அந்த தர்பூசனியை நன்றாக பராமரித்து செய்துவந்தார், அதனால் அவருடைய வயல் முழுவதும் தர்பூசனி காய்த்து குலுங்கின ஆனால் சில உள்ளூர் சிறுவர்கள் அந்த தர்பூசனிகளை அவர் இல்லாதபோது அவருடைய வயலில் திருட்டுதனமாக தர்பூசணிகளை அறுவடைசெய்து தின்று காலிசெய்து வந்தனர் அதனால் அந்த விவசாயி மிகவும் அவதிப்பட்டார், அதனை தொடர்ந்த இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்வுசெய்து அல்லது இந்த செயலை தவிர்ப்பதற்கு என்ன மாற்றுவழி செய்வதுஎன தவித்து சோர்வுற்றார் கடைசியாக புத்திசாலிதனமான சிந்தனை ஒன்று அவருக்கு தோன்றியது உடன் அந்த திட்டத்தை செயல்படுத்திட முடிவுசெய்தார் அதாவது அவருடைய வயலில் , "எச்சரிக்கை! இந்த வயலில் உள்ள தர்பூசனிகளில் ஒன்றுமட்டும் சயனைடு என்ற விசம் உட்செலுத்தப்பட்டது" என்றஎச்சரிக்கை செய்தியை வைத்து சென்றார் அடுத்தநாள் அந்த தற்பூசனி விளைந்திருந்த வயலிற்கு வந்த சிறுவர்கள் இந்த எச்சரிக்கை செய்தியை படித்தவுடன் "ஐய்யய்யோ! நமக்குஇந்ததர்பூசனி பழமே வேண்டாம்"என ஓடிவிட்டனர் இருந்தாலும் மீண்டும் அந்த வயலிற்கு திரும்பிவந்து இந்த விவசாயியானவர் நாம் இந்த தற்பூசனி பழத்தை சாப்பிடக்கூடாது என நம்மை பயமுறுத்துவதற்கு இவ்வாறு செய்துள்ளார் அதனால் நாமும் அந்த விவசாயியால் இதனை பயன்படுத்தமுடியாதவாறு செய்திடுவோம் என முடிவுசெய்துஅதற்கு பதிலடியாக "எச்சரிக்கை! இந்த வயலில் உள்ள தர்பூசனிகளில் ஒன்றுமட்டுமன்று இரண்டுமட்டும் சயனைடு என்ற விசம் உட்செலுத்தப்பட்டது" என்ற எச்சரிக்கை செய்தியை எழுதிவிட்டு சென்றுவிட்டனர் அதற்கடுத்த நாள் விவசாயி தன்னுடைய வயலை வெகு தூரத்தில் இருந்து பார்த்த போது தன்னுடைய வயலில் அனைத்து தர்பூசனிகளும் பறிக்காமல் பத்திரமாக இருப்பதை கண்ணுற்று மனநிம்மதியுடன் வயலிற்கு வந்து சேர்ந்தார்ஆனால் அந்த சிறுவர்கள் வைத்த எச்சரிக்கை செய்தியை பார்த்தபோது திகைத்து மனசோர்வுற்ற தலையில் கைவைத்து கொண்டு வயலில்அமர்ந்து விட்டார்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...