ஞாயிறு, 17 மே, 2020

சிறு நடுத்தர நிறுவனங்குளுக்கு உதவிடும் பணம் இல்லாமல் காசோலை வருவதற்கான திருத்தங்கள்


தற்போது நிலையில் இவ்வாறு காசோலை ஒன்றின் வாயிலாக தொகை கிடைக்கபெற்றால் அந்த காசோலையில் குறிப்பிட்டுள்ள நாளிலிருந்து மூன்று மாதத்திற்குள் நாம் கணக்கு வைத்திருக்கும் வர்த்தக வங்கியில் சமர்ப்பித்து பணம் கோரலாம் அதனை தொடர்ந்து வர்த்தக வங்கியானது குறிப்பிட்ட காசோலைக்கு பணம் இல்லையென திருப்பி அனுப்பிய நிலையில் தொடர்புடைய அந்த காசோலையில் கையொப்பமிட்ட நபருக்கு உடன் பணம் வழங்க கோரி ய கடிதம் ஒன்றின்வாயிலாக முப்பது நாட்களுக்கள் அறிவிப்பு ஒன்றினை அனுப்பிடவேண்டும் அவ்வாறான அறிவிப்பிற்கு பதினைந்து நாட்களுக்குள் காசோலை எழுதியவர் பணம் வழங்கியிருக்கவேண்டும் அவ்வாறு வழங்கவில்லையெனில் பாதிக்கப்பட்டவர் இதற்கான நீதிமன்றத்தில் காசோலைக்கான பணம் கிடைக்கப்பெறாமல்காசோலையே திரும்ப வந்தது (Cheque Bounce ) குறித்து வழக்கு தொடுக்கலாம் இவ்வாறான வழக்கானது செலாவணி முறிச்சட்டம் (Negotiable Instruments Act) 1881 இன் கீழ் வழக்காக பதிவுசெய்யப்பட்ட ஆறுமாத்தத்திற்குள் நீதிமன்றம் உத்திரவிடவேண்டும் என மிக நீண்ட நடைமுறையில் பாதிக்கப்பட்ட நபர் தன்னுடைய வியாபார நடவடிக்கைகளுக்கு போதுமான நடைமுறை மூலதனம் இல்லாமல் அல்லலுறவேண்டிய அவலநிலைக்கு தள்ளப்படுகின்றார் அதாவது MSME என சுருக்கமாக அழைக்கப்படும் மிகச்சிறிய சிறிய நடுத்தர நிறுவனங்கள் , சிறிய வியாபாரிகள் ஆகியோர்கள் தங்களுக்கு வழங்கப்படும் காசோலைகள் அவைகளுக்கான தொகை தமக்கு வழங்கப்பட்ட காசோலையில் குறிப்பிட்ட வர்த்தக வங்கியின் கணக்கில் இல்லாத தால் திரும்பிவிடும் நிலையில் அதற்கான நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அந்ததொகை பெறுவதற்குள் போதும் போதும் என அதிக காலவிரையம் ஆவது மட்டுமல்லாமல் தங்களுடைய வியாபார நடவடிக்கைகளக்கு தேவையான போதுமான நடைமுறை மூலதனம் இல்லாமல் நிறுவனத்தின் இயக்கத்தையே நிறுத்திவிடும் நிலைக்கு தள்ளப்படும் தற்போதை ய அவலநிலையில் இவ்வாறான சிக்கலை தீர்வு செய்வதற்காக உதவிடும் பொருட்டு செலாவணிமுறிச்சட்டம் 1881 இல் பிரிவு 143A ,148 ஆகிய இரண்டிலும் திருத்தம் செய்து கடந்த செப்டம்பர் 1., 2018 இலிருந்து நடைமுறை படுத்தப்பட்டுள்ளது என்ற ஒரு நல்லசெய்தியானது அவ்வாறு அல்லல்படும் பவர்களுக்கு வயிற்றில் பால்வார்த்தது போன்றதாகும் . பணமில்லாமல் காசோலை திரும்ப வந்ததற்காக தொடர்புடையவர்மீது வழக்கு தொடுத்தபின்னர் இடைக்கால நிவாரணமாக 20% இற்கு மிகாமல் 60 நாட்களுக்குள் இந்த தொகையுடன் வங்கியின் வட்டிவிகிதத்தின் அடிப்படையில் வட்டியும் சேர்த்து வழங்கிடுமாறு நீதிமன்றம் உத்திரவிடலாம் இந்த உத்திரவின்படி தொடர்புடையநபர் தொகை வழங்கத்தவறினால் தொடர்புடைய நபருக்கு சொந்தமான நிலையான சொத்துகளை மாவட்ட ஆட்சியர் வாயிலாக பொது ஏலத்தில் விற்பணைசெய்து பாதிக்கப்பட்டவருக்கு தொகை வழங்குமாறு நீதிமன்றம் உத்திரவிடலாம் பிரிவு 148 இன் படி பாதிக்கப்பட்டவர் இவ்வாறான வழக்கு தொடுத்தவுடன் காசோலையில் கையொப்பமிட்டு கொடுத்த நபர் தொடர்புடைய நீதிமன்றத்ததில் 20% தொகையை வைப்புதொகையாக செலுத்திடவேண்டும் வழக்கு காசோலை வழங்கிய நபருக்குசார்பாக தீர்ப்பானால் அந்த தொகையும் அதற்கான வட்டியும் சேர்த்து அவருக்கு திருப்பிவழங்கப்பெறும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...