வியாழன், 28 மே, 2020

நிறுவனங்களின் சட்டம், 2013 இன் படி அடிக்கடி எழும் சந்தேகங்களுக்கானபதில்கள்


1.நிறுவனங்களின் சட்டம், 2013 இன் படி, நிறுவனத்தின் வருடாந்திர பொதுபேரவைக் கூட்டத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்த முடியாது. பொதுபேரவைக் கூட்டத்தில் உறுப்பினர்கள் நேரடியாக கலந்து கொண்டால் மட்டுமே அவ்வாறான கூட்டத்தினை நடத்த முடியும். 2. நிறுவனச் சட்டம், 2013 இன் படி, வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்படும் இயக்குநர்களின் குழுக் கூட்டத்தில் நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையை அங்கீகரிக்க முடியும், ஆயினும் இயக்குநர்களின் குழுக்கூட்டத்தில் நேரடியாக கலந்து கொள்ளும் இயக்குநர்கள் எண்ணிக்கையானது அனுமதிக்கப்பட்ட குறைந்த பட்ச எண்ணிக்கையை கொண்டிருக்க வேண்டும். 3. நிறுவனச் சட்டம், 2013 பிரிவு 92 இன் படி அனைத்து நிறுவனங்களும் MGT-9 ஐ நிதியாண்டு 31.03.2019 இல் முடிய தயார்செய்திடவேண்டும் 4 நிறுவனச் சட்டம், 2013 பிரிவு 134 இன் படி, இணையதளம் கொண்ட ஒவ்வொரு நிறுவனமும் அதன் MGT-7 (வருடாந்திர வருமானம்) நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் மேலும் அதனை இணைப்பாக இயக்குநர்களுக்கான அறிக்கையில் கொடுக்க வேண்டும். 5. நிறுவனச் சட்டம், 2013 பிரிவு 139 (1) இன் படி, நிறுவனத்தின் தணிக்கையாளர் ஒருவரை எந்தவொரு நிறுவனத்திலும் அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே நியமிக்கப்பட முடியும் 6.நிறுவனச் சட்டம், 2013 பிரிவு 134 இன் படி, இயக்குநர்கள் அறிக்கை அதன் இணைப்பு அறிக்கை ஆகிய இரண்டிலும் ஒரேநபரே கையொப்பமிட்டு அனுப்பிடவேண்டும் 7.POSHசட்டத்தின் பிரிவு 22 ன் படி, ஒவ்வொரு நிறுவனமும் இயக்குநர்கள் அறிக்கையில் POSH சட்டத்தின் விதிகள் இணங்குவதை கண்டிப்பாக குறிப்பிடபட வேண்டும். 8.நிறுவனச் சட்டம், 2013 பிரிவு 134 இன் படி, இயக்குநர்கள் அறிக்கை முழுமையான நிதிநிலை அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்படும். 9. செயலக தரநிலை 1 இன் விதிகளின்படி, இயக்குநர்கள் அறிக்கையில் செயலக நியமங்களை பின்பற்றுவது குறித்து ஒவ்வொரு நிறுவனமும் கண்டிப்பாக அறிவிப்பு செய்ய வேண்டும். 10. நிறுவனத்தின் வருடாந்திர பொதுபேரவைக் கூட்டத்தின் குறைந்த பட்ச உறுப்பினர்களை கணக்கிடுவதற்காக அதில் கலந்து கொள்ளும் பதிலாளை கணக்கில் கொள்ளமுடியுாது

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...