சனி, 2 மே, 2020

நீங்கள் எந்தவொரு பணியை செய்தாலும் பரவாயில்லை அந்த பணியை முழுமனதுடன் ஆத்மதிருப்தியுடன் செய்யுங்கள்


.ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக முதன்முதல் பதவி ஏற்க செல்லும்நிலையிலஅவருடைய தந்தையானவர் ஒரு முழுக்காலணி தயாரிப்பாளராக இருந்துவந்தார். அதனால், நம்மைபோன்று ஆட்சிஅதிகாரத்தில்இல்லாத ஒரு சாதாரண காலணி தயார் செய்பவனின் மகன் நமக்கு மேல்நிலையில் ஜனாதிபதியாக பதவியேற்பதா என சுயநலவாதிகள் அதிலும் மேட்டுகுடி மாந்தர்களான பிரபுக்கள் அனைவரும் மிகவும் மனவருத்தத்துடன் இருந்தனர் . அம்மேட்டுகுடி மக்கள் பரம்பரை பரம்பரையாக இதுவரையில் ஆட்சி அதிகாரத்தில் இருந்துவருபவர்கள் இவ்வாறான பதவிக்கு இதுவரையில் அவர்களில் ஒருவர்தான் பதவியேற்று ஆட்சி புரிந்துவந்துள்ளனர் அதனால் அப்பிரபுக்கள் அனைவரும், ஜனாதிபதி போன்ற மிக உயர்ந்த அரசாங்க பதவியில் இருப்பது தங்களின் பிறப்புரிமை என்று நினைத்து வந்தவர்கள். மேட்டுகுடி மக்களால் நிறைந்த அந்த கூட்டத்தின் முதல் நாளில், ஆபிரகாம் லிங்கன் தனது தொடக்க உரையை ஆற்றுவதற்காக அந்த கூட்டரங்கில் நுழைந்தபோது, அந்த கூட்டத்தில் இருந்து, ஒருவர் எழுந்து நின்றார். அவர் மிகவும் பணக்கார பிரபுஆவார். அவர், “திரு. லிங்கன், அவர்களே உங்களுடைய தந்தை எங்களுடைய குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் காலணிகளைத் தயாரித்து வழங்கியவர் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. ” என கூறியதும் அங்கு கூடியிருந்த மேட்டுகுடிமக்கள் அனைவரும் "ஆஹா இவர்நாட்டின் மிகஉயர்ந்த பதவியான ஜனாதிபதி பதவியேற்கும்முதல்நாளிலேயே ஆபிரகாம் லிங்கனை நன்றாக மட்டம் தட்டிவிட்டார் மேலும் அவரை முட்டாளாக்கி விட்டார்" என கைகொட்டி சிரிக்கஆரம்பித்தனர் ஆனால் லிங்கன் - அந்த மாதிரியான நபர் முற்றிலும் மாறுபட்ட மனநிலை கொண்டவர் என தெரிந்து கொண்டார் அதனால் - ஆபிரகாம்லிங்கன் அவ்வாறு பேசிய மனிதரைப் பார்த்து, “ஐயா, என் தந்தை உங்கள் குடும்பஉறுப்பினர் அனைவருக்கும் காலணிகளைத் தயாரித்து வழங்கியதை நான் அறிவேன், அவர் ஒரு சிறந்த படைப்பாளி. அவர்உருவாக்கியது வெறும் காலணிகள் மட்டுமல்ல, செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமதுசெல்வும் என அவர் தனது முழுமனத்தையும் ஈடுபாட்டுடன் செலுத்தி அந்த பணியை செய்கொண்டிருந்தார் நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன், உங்கள் குடும்ப உறுப்பினர் எவரேனும் அவர் தயார்செய்த காலணியின்மீது புகார் ஏதேனும் கூறியிருக்கின்றனரா? எனக்குத் தெரிந்தவரை, என் தந்தையின் காலணிகளைப் பற்றி இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. ஏனென்றால் அவர் காலணிகளை உருவாக்கிய விதம், வேறு யாராலும் முடியாது அவ்வாறு திறனுடன் நுகர்வோரின் மன திருப்தியடையுமாறு தன்னுடைய பணியை செய்துவந்தார் அவர் ஒரு மேதை, ஒரு படைப்பாளி, நான் என் தந்தையைப் பற்றி பெருமைப்படுகிறேன்! ஏன் உங்களுக்கு தேவையென்றால் கூறுங்கள் எனக்கும் காலணிகளை உருவாக்கத்தெரியும் இப்போது உங்களுக்கான, காலணிகளை வேண்டுமானால் நான் தயார்செய்து வழங்க தயாராகஇருக்கின்றேன்" என ஆபிரகாம் லிங்கன் பதில் கூறினார் உடன் அவை முழுவதும் அமைதியாகிவிட்டது. ஆபிரகாம் லிங்கன் எந்த வகையான மனிதர் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. . முதலில் அவரை மட்டம் தட்டவேண்டும் என மனநிலை திரிந்தவாறு பேசிய அந்த மனிதனை பார்த்து , “ஐயா நீங்கள் இப்போது வாய்திறந்து பேச வேண்டும்! நீங்கள் ஏன் ஊமையாகிவிட்டீர்கள்? நீங்கள் என்னை ஒரு முட்டாளாக்க விரும்பினீர்கள், இப்போது, சுற்றிப் பாருங்கள்: நீங்களே ஒரு முட்டாளாகிவிட்டீர்கள். பார்த்தீர்களா" ஆபிரகாம் லிங்கன் காலணி தயாரிப்பதை ஒரு கலையாகவும், படைப்பாற்றல் மிக்க பணியாகவும். பெருமிதம் கொண்டார், ஏனென்றால் அவரது தந்தை அந்த பணியை மிகச் சிறப்பாக செய்தார், இதுவரை ஒரு புகார் கூட எழுந்ததில்லை. ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றபோதிலும், அவ்வாறு தன்னுடைய தந்தை செய்த பணியில் புகார் ஏதேனும் எழுந்தால் அதனை தான் சரிசெய்துதர தயாராக இருப்பதாக உறுதியளித்தார் அவ்வாறே நீங்கள் எந்தவொரு பணியை செய்தாலும் பரவாயில்லை. முக்கியமானது என்னவென்றால் - நீங்கள் அந்த பணியை முழுமனதுடன் ஆத்மதிருப்தியுடன் செய்யுங்கள் - உங்கள் சொந்த விருப்பத்துடன், உங்கள் சொந்த பார்வையுடன், . நீங்கள் எதைத் தொட்டாலும் அது தங்கமாக மிளிரும் என்பதை காண்பீர்கள்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...