சனி, 31 ஜூலை, 2021

தந்திரமான அதிகாரியும் அவரது உதவியாளரும்

 


 ஒருமுறை வாடிக்கையாளர் ஒருவர் தனது மேலதிகாரிக்கு பரிசாக வறுத்த கோழியையும் புதிய பழச்சாறு பாட்டில் ஒன்றையும் வழங்கினார். மேலதிகாரியானவர் இவ்விரண்டு பரிசுபொருட்களையும் தனது உதவியாளர் மூலம் தனது வீட்டிற்கு அனுப்ப விரும்பினார் அதனால் தனது உதவியாளரை அழைத்தார். மேலதிகாரியானவர் மிகவும் தந்திரமானவர், அவருடைய உதவியாளர் இந்த உணவைப் பற்றிய விவரம்  தெரிந்து கொள்ள வேண்டாம் என விரும்பினார், ஆகவே, அவ்வுதவியாளரிடம் அவற்றை கொடுக்கும்போது, ​​“இவற்றை என் வீட்டிற்கு எடுத்துச் செல்க, ஆனால் இந்த பொருட்களின் மீது மூடியுள்ள துணியை மட்டும் அகற்ற வேண்டாம் என்பதை நினைவில் கொள்க அவ்வாறு துனியை திறந்துவிட்டால் உடன் இதிலுள்ள  பறவையானது வெளியே  பறந்து சென்றுவிடும், அவ்வாறே இந்த பாட்டிலையும் திறக்க வேண்டாம் இந்த பாட்டிலில் விஷம் உள்ளது தப்பித்தவறி இந்த பாட்டிலை திறந்து அதிலுள்ளதை குடித்துவிட்டால் அதனுடைய விஷத்தால் நீ இறந்தாலும் இறந்துவிட நேரும். என்ன நான் கூறுவது புரிந்தா ?" என விவரமாக கூறி அனுப்பிவைத்தார். உதவியாளரும் ​​“சரி ஐயா நீங்கள் கூறியவாறு பத்திரமாக எடுத்து சென்று உங்களுடைய வீட்டு அம்மாவிடம் கொடுத்துவருகின்றேன் ஐயா "என தலையாட்டி ஆமோதித்தான். ஆயினும் அவ்வுதவியாளர் தனது மேலதிகாரியை பற்றி  நன்கு விவரமாக அறிந்தவனாவான், அதனால்" இந்த பொருட்களை பத்திரமாக தன்னுடைய வீட்டிற்கு கொண்டு சென்று சேர்" என்று கூறுகின்றாரே " இதில் ஏதோ மறைவாக பொருட்கள்உள்ளன"  என  சந்தேகப்பட்டான். எனவே அவ்வுதவியாளர் மேலதிகாரியின் வீட்டிற்கு அவைகளை எடுத்து செல்லும் வழியில், அவன் ஒரு இடத்தினை கண்டுபிடித்து நன்கு வசதியாக அமர்ந்து கொண்டு அவை என்னவென காண. துணியை அகற்றியபோது துனிமூடிய பாத்திரத்தில் வறுத்த கோழியும் பழச்சாறு பாட்டிலும் இருப்பதைக் கண்டான். உடன் வறுத்த கோழி முழுவதையும் சாப்பிட்டுமுடித்தான் மேலும் ,  பாட்டிலிலிருந்த பழச்சாறுமுழுவதையும் குடித்தபின்னர் தான் பணிபுரியும் இடத்திற்கு மெதுவாக திரும்பிவந்துசேர்ந்தான்., மேலதிகாரியானவர் மதிய உணவிற்காக தனது வீட்டை அடைந்து தனது மனைவியிடம் மதிய உணவினை பரிமாறும்படி கோரினார். அவரது மனைவி, ‘சிறிது நேரம் காத்திருங்கள். சாம்பார் இன்னும் தயாராக வில்லை. ” என பதில் கூறியவுடன் மேலதிகாரியானவர், “உதவியாளர் மூலம் நான் அனுப்பிய வறுத்தகோழி, பாட்டில் சாறு ஆகிய இரண்டையும் கொண்டுவா. அது போதும். ”என கூறினார் உடன் அவரது மனைவி ” நம்முடைய வீட்டிற்கு உங்களுடைய.  உதவியாளரும் இன்னும் வந்துசேரவில்லை நீங்கள் அனுப்பிய பொருட்களும் வந்து சேரவில்லை” என்று பதிலளித்தார். ணேலதிகாரிக்கு மிகவும் அதிககோபம் வந்தது அதனால் தன்னுடைய மனைவியிடம் எதுவும் சொல்லாமலும் மதிய உணவினை சாப்பிடாமலும்  தான் பணிபுரியும் இடத்திற்குச் திரும்பி சென்றுசேர்ந்தார் தனது உதவியாளரை அழைத்தபோது அவ்வுதவியாளர் நன்கு நிம்மதியாக தூங்குவதைக் கண்டார்.அதனால் மேலதிகாரியின் கோபம் மிகவும் அதிகமானது தூங்கி கொண்டிருந்த தன்னுடைய உதவியாளரை  எழுப்பி, ‘எங்களுடைய வீட்டிற்கு கொண்டுசெல்லுமாறு நான்  கொடுத்த பொருட்கள் எங்கே?’ என கேள்வி எழுப்பினார் அதற்கு அவ்வுதவியாளர், “ஐயா, நான் அந்த பொருட்களை உங்களுடைய வீட்டிற்கு எடுத்தச் செல்லும்போது,  காற்று அதிகமாக வீசி அடித்ததுஅதனால் அந்த பொருளின்மீது மூடியிருந்து துனி காற்றில் திறந்து கொண்டது. அவ்வாறு அந்த பாத்திரத்தில் மூடியிருந்த துனி திறந்து கொண்டதால் உடன் பறவை ஒன்று உயரே பறந்து போய்விட்டது  , துனியானது காற்றில் திறந்தவுடன் நீங்கள் சொன்னது போல, பறவையும் வானத்தில் பறந்து போய்விட்டதைப் பார்த்து நீங்கள் என்னை கண்டிப்பாக த் தண்டிப்பீர்கள் ஏதாவது தண்டனை கொடுப்பீர்கள் என்று பயந்தேன், அதனால் நான் அந்த பாட்டிலைத் திறந்து அதிலிருந்த விஷம் முழுவதுமாக குடித்தேன் இப்போது அந்த விஷத்தினால் எனக்கு எப்போது இறப்பு வரும் என நான் இங்கே  எனக்கு அந்த மரணம் வருவதற்காக  காத்திருக்கிறேன்.ஐயா " என மிகவும் அப்பாவித்தனமாக பதில் கூறினார் என்ன வாசகரே அந்த உதவியாளருக்கு நீங்களாவது சென்று ஆறுதல் கூறுங்களேன்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...