வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

உண்மையில் காகம் ஏமாந்ததா?


ஒருஊரில் அவ்வூரின் ஓரத்தில் இருந்த பெரியஆலமரத்தின் கீழ் பாட்டி ஒருவர் தன்னுடைய பிழைப்பிற்காக வடைசுட்டு அகலமான தட்டில் வைத்து விற்றுக்கொண்டிருந்தார். அப்போது பசியோடிருந்த காகமொன்று தனக்கு ஏதேனும் இரைகிடைக்குமாவென பறந்து அலைந்து திரிந்து பார்த்து அந்த ஆலமரத்திற்கு வந்து சேர்ந்தது. தன்னுடைய பசியை போக்குவதற்காக அந்த பாட்டி ஏமாந்தநேரமாக பார்த்து அவர் விற்பதற்காக தட்டில் வைத்திருந்த வடைஒன்றை எடுத்துகொண்டு பறந்து சென்ற அருகிலிருந்த மற்றொரு மரத்தின் கிளையில் சென்றமர்ந்து அந்த வடையை தின்று பசியாறலாம் என முயன்றபோது அவ்வழியே வந்த நரியொன்று அதே மரத்தின் நிழலில் சிறிதுநேரம் ஓய்வு கொள்வோம் என நின்றது

உடன் அடடா வடைவாசனை வருகின்றதே எங்கிருந்து வருகின்றது எனசுற்றுமுற்றும் பார்த்துஏதும் காணாததால் உயரே அன்னாந்து பார்த்தபோது காகம் தன்னுடைய வாயில் வடையொன்றை கவ்விகொண்டு இருப்பதை பார்த்து அதனை எப்படியாவது அபகரிக்கவேண்டும் என தந்திரமாக காகமே காகமே உன்னுடைய குரல் எவ்வளவு இனிமையானது தெரியுமா அதனால் உன்னுடைய வாயால் ஒரு பாட்டினை பாடுகின்றாயா கேட்டுமகிழலாம் என கூறியவுடன் அக்காகமானது நம்முடைய குரலை கேட்ககூட நபர் ஒருவர் ரசிகராக இருக்கின்றாரா என உளம் மகிழ்ந்து தன்னுடைய வாயால் காகா என கூவ ஆரம்பித்தது உடன் அதனுடைய வாயில் வைத்திருந்த வடையானது கீழே விழுந்தது அதனை நரிஎடுத்துகொண்டு ஓடிவிட்டது காகம் தன்னுடைய பசியை போக்க வழிஇல்லாமல் ஏமாந்தது என நாமெல்லோரும் சிறுவயதிலேயே இந்த கதையை தெரிந்து வைத்துள்ளோம்

ஆனால் இதே கதையை பிற்காலத்தில் அந்த நரி அவ்வாறு காகத்தின் குரலை கேட்பதாக கூறியவுடன் நரியின் தந்திரத்தை தெரிந்துகொண்டு வடையை வாயிலிருந்து கால்களுக்கு மாற்றி கால்களால் பிடித்து கொண்டு காகா என கூவியது அதனால் வடைஎதுவும் தரையில் விழவில்லை தன்னுடைய தந்திரம் எதுவும் இந்த காகத்திடம் பலிக்காது என நரி வேறு ஏதாவது உணவு இருக்கின்றதா பார்ப்போமென தன்னுடைய வழியே செல்ல ஆரம்பித்தது என மாற்றியமைத்ததையும் நாமெல்லாம் அறிவோம் நாமெல்லோரும் இந்த ஏமாந்த காகம் என்ற கதையின் கருத்து என்ன வென அறிந்து தெளிவுபெறாமலேயே இதுவரை இருந்து வருகின்றோம் என்பதே உண்மை நிலவரமாகும்

அதாவது காகம் எனில் மிக கருமையாக இருக்கும் அதனால மனிதர்களில் கருமைநிறத்தில் இருப்பவர்களை அண்டங்காக்கை என நக்கலாக கூப்பிடுவதை கேள்விபட்டிருக்கின்றோம் அவ்வாறே அது கழிவையும் இதரபொருட்களையும் உண்டு சுத்தபடுத்துவதால் காகமானது ஊரின் தோட்டி என கூறுவதையும் கேள்விபட்டிருக்கின்றோம் அதேபோன்று அதன் குரலும் கரகரவென யாருக்கும் பிடிக்காது

இதனை தொடர்ந்து தன்னுடைய உருவத்தையும் குரலையும் யாருக்கும் பிடிக்காது எனஅந்த காகம் தாழ்வுமனப்பான்மையில் மனத்தின் அடியில் வேதனையோடு இருந்து வந்தது அதனால் நரி அந்த காகத்தின் குரல் இனிமையாக இருக்கின்றது அதனுடைய வாயால் ஒருபாட்டு பாடினால் அதனே கேட்பதாக புகழ்ந்து கூறியவுடன் அப்புகழிற்கு மயங்கி நம்முடையு உருவத்தைதான் அனைவரும் பழிக்கின்றார்கள் தன்னுடைய குரலை கேட்பதற்காகவாவது ரசிகர் ஒருவர் கிடைத்தாரே என அகமகிழ்ந்து தன்னுடைய தற்போதைய இருப்பை மறந்து வாயை திறந்து காகா என கூவியது என கதை முடிவதை அறிந்து கொள்வோமாக.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...