திங்கள், 10 அக்டோபர், 2011


போர்க்கால அடிப்படையில் தாஜ்மஹாலின் அடித்தளத்தை சரிசெய்யும் நடவடிக்கை எடுக்காவிட்டால் உலக அதிசயங்களில் ஒன்றானதும் மிகச்சிறந்த சுற்றுலாதளமானதுமான வடஇந்தியாவில்ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் ஆனது இன்னும் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் அழியவிருக்கின்றது என எச்சரிக்கின்றார்கள்
அதன்அருகே ஓடும் ஆற்றின் மாசுபாடு, தொழில்துறைவளர்ச்சி காடழித்தல் போன்றகாரணிகளே இந்த தாஜ்மஹாலின் வாழ்வுக்கு உலைவைப்பவையாகும் இதனால் இதனுடைய அடித்தளங்கள் உடைந்து சிதைவுற ஆரம்பித்துள்ளன. இதன் தொடர்ச்சியாக விரிசல்கள் ஆங்காங்கே கல்லறை பகுதிகளில் கடந்த ஆண்டே தோன்றின,மேலும் இவை நினைவுச்சின்னத்தை சுற்றியுள்ள நான்கு தூபிகள்,, சாய்ப்பதற்கான அறிகுறிகளை காண்பிக்கின்றன.
மேலும் இந்த தாஜ்மஹாலானது தற்போது நீரோட்டமற்ற வற்றிய யமுனா நதியின் கரையில் உள்ளது. இந்த நதி எதிர்காலத்தில் இவ்வாறு வற்றிவிடும் நிலைஏற்படும் என்று இதனை உருவாக்கியவர்கள்கூட எதிர்பார்க்கவில்லை இவ்வாறு இந்நதியில் நீரோட்டம் இல்லாவிட்டால் தாஜ்மஹாலும் அழிந்துவிடுவது என்பது திண்ணம்
நன்றி யாகூ செய்தி

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...