திங்கள், 14 மே, 2012

மக்கள் தொடர்பு கலையை எவ்வாறு வளர்த்து மேம்படுத்துவது


தற்போது நாம் அனைவரும் ஒரு குழுவாக சமுதாயமாக சேர்ந்து வாழும் நிலையில் இருந்து வருகின்றோம்.இந்நிலையில் ஒவ்வொருவரும் இந்த சமுதாயத்தோடு தொடர்பு கொள்வதற்கான ஏதேனுமொரு தகவலை எவ்வாறு அளிப்பது என்பது மிக முக்கியமான தகவல்தொடர்பு கலையாகும் இவ்வாறான சமுதாயத்தோடு தொடர்பு கொள்வதற்கான தகவல் தொடர்பு திறனை பின்வரும் வழிகளில் மேம்படுத்தலாம்

1.மற்றவர்களுடன் தொடர்பு கொண்டு நம்முடைய செய்தியை பகிர்ந்து கொள்ளும் முதல் படிமுறையாக நம்மைவிட வயதில் மூத்தவர்களை உறவுமுறையிலும் நம்மைவிட இளையோரை பெயரிட்டும் அழைத்து தொடர்பு கொள்வது இருவருக்குமான தொடர்பை மிக நெருக்கமானதாக அமைத்திடும்

2. நாம் கூறவரும் செய்தியை மிக விரிவாக எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி கூறுவது நன்று

3. நாம் கூறவிரும்பும் செய்தி தொடர்பான அனைத்து விவரங்களையும் அதனுடன் சேர்த்து விவரமாக கூறுவது நன்று

4. தகவலை கூற ஆரம்பிக்கும்போதே அதன் முடிவை கூறுவது நாம் கூற விரும்பும் செய்தியை கேட்பவர்கள் அரைகுறையாக புரிந்து கொள்ளும் நிலை ஏற்படும் அதனால் முதலிலிருந்து வரிசை கிரமமாக செய்தி தொடர்பு விவரங்கள் அனைத்தையும் கூறுவது அதனினும் நன்று

5.செய்தியை மறைமுகமாக யூகித்து அறியுமாறு கூறுவது சரியன்று அதாவது நாம் கூறவிழையும் செய்தி ஒன்றாகவும் அதிலிருந்து பெறுபவர் அறிந்து கொண்ட செய்தி வேறுஒன்றாகவும் இருந்திடுமாறு கூறவேண்டாம்

6. நாம் கூறவிழையும் செய்தி நம்முடைய சொந்த சொற்களாக இருக்கவேண்டும் திரித்து புனைந்து கூறியதாக இருக்கவேண்டாம்

7.கூறும் செய்தி தெளிவாகவும் எளிதாகவும் பெறுபவர் அறிந்து கொள்ளும் வகையிலும் இருந்திடுமாறு பார்த்துகொள்க

8 பெறுபவர் கூறும் செய்திகேற்றவாறு நம்முடைய பதில் இருக்குமாறு பார்த்து கொள்க பதில் செயல் தேவையில்லை

இவ்வாறு மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி நம்முடைய செய்தி தொடர்பு கலையை வளர்த்து மேம்படுத்தி கொள்க

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...