ஞாயிறு, 29 மார்ச், 2015

நாம் என்னவாக இருக்கின்றோமோ அவ்வாறே இந்த சமூக மக்களும இருப்பார்கள் என்பதே உண்மை நிலையாகும்


நகரத்தின் சாலைஒரத்தில்மரநிழலில் ஒருவயதான மனிதன் உட்கார்ந்து கொண்டிருந்தார் அந்த நேரத்தில் கிராமத்தில் இருந்து ஒருவன் அந்த நகரத்தை நோக்கி கால்நடையாக வந்து கொண்டிருந்தான்

அந்த வழிபோக்கன் அந்த பெரியவரை அனுகி “ஐயா இந்தநகரின் மக்கள் நல்லவர்களா கெட்டவர்களா எவ்வாறு இருப்பார்கள்” என அவரிடம் வினவியபோது

“தம்பி நீவருகின்றாயே அந்த ஊரின் மக்கள் எவ்வாறானவர் என கூறு நான் உன்னுடைய கேள்விக்கு பின்னர் பதில் கூறுகின்றேன்” என பதில் கேள்வி கேட்டார்

உடன் அந்த மனிதன் “நான் இருந்து வாழ்ந்து ஊர் மிகவும் மோசம் அனைவரும் கெட்டவர்கள் யாரையும் கெடுதல் செய்து கொண்டே இருப்பார்கள்” என பதிலிறுத்தான்

உடன் அந்த பெரியவரும் “இந்த நகர மக்களும் அவ்வாறானவர்களே அவர்களுடன் முந்தைய நிலையை தொடர்ந்து கடைபிடித்து வாழலாம் போய்வா” என விடைகெடுத்தார்.

சிறிதூரம் சென்ற அவ்வழிபோக்கன் திரும்பவும் அந்த வயதானவரிடம்மீண்டும் வந்து “ஐயா நான் வாழ்ந்து வளர்ந்த என்னுடைய ஊர் மக்கள் மிகவும் நல்லவர்கள் மழையில்லை என்ற ஒரே காரணத்தினாலேயே நான் இந்த நகரத்திற்கு வருகின்றேன் அதனால் சரியாக சொல்லூங்கள் ஐயா இந்த நகரமக்கள் எவ்வாறானவர்கள்” என மீண்டும் வினவியபோது

“தம்பி இந்த நகரத்து மக்களும் மிக நல்லவர்கள்தான் வல்லவர்கள்தான் வந்தவர்கள் அனைவரையும் வரவேற்று அரவணைத்து வாழவைக்கும் தயாள குணம் கொண்டவர்கள்தான் அதனால் அவர்களுடன் நல்லுறவை வளர்த்து மகிழ்ச்சியாக வாழமுடியும் சென்றுவா” என விடைகொடுத்தார்

ஏன் அந்த பெரியவர் நகரத்தின் மக்களை முதலில் கெட்டவர்கள் என்றும் பின்னர் நல்லவர்கள் என்றும் மாற்றிமாற்றி கூறினார்

நாம் என்னவாக இருக்கின்றோமோ அவ்வாறே இந்த சமூக மக்களும இருப்பார்கள் என்பதே உண்மை நிலையாகும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...