ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

சிறிய செயலாக இருந்தாலும் நாம் அதனை மிகச்சரியாக செய்தால் அதன் பலன் உடன் நமக்கு கண்டிப்பாக கிடைக்கும்


பதினெட்டுவயதுமுடிந்தஒருவன் ஒரு இருசக்கரவாகணங்கள் பழுதுபார்ப்பு கடையொன்றில் புதியதாக பணியில் சேர்ந்து பணிபுரிந்துவந்தான் இந்நிலையில் வாடிக்கையாளர் ஒருவர் தன்னுடைய இருசக்கர வாகணத்தின் சக்கரத்தில் காற்றில்லாமல் கைகளால் தள்ளிகொண்டுந்து அதனைசரிசெய்து தரும்படி கோரிவிட்டுவிட்டு சென்றார் அதனை தொடர்ந்து புதியதாக பணிக்குசேர்ந்தவனிடம் அந்த பணிஒப்படைக்கபட்டது உடன் புதியதாக பணிக்கு சேர்ந்த இளைஞன் அதனை சரிசெய்ததோடு அந்த இருசக்கர வாகணத்தை நன்கு தண்ணீர் அடித்து கழுவி சுத்தம் செய்து வண்டியை பளபளவென புத்தம்புதியதாக தோன்றிடுமாறு செய்ததை அவனுடன் பணிபுரிந்தமற்ற நண்பர்கள் சொன்னவேலையை மட்டும் செய்திடாமல் சொல்லாததையும் செய்துவிட்டான் என கிண்டலும் கேலியும் செய்து கைகொட்டி சிரித்தனர்.

மறுநாள் அந்த இருசக்கர வாகணத்தின் உரிமையாளர் வண்டியை எடுத்து செல்லஅந்த இடத்திற்கு வந்து பார்த்தபோது தன்னுடைய வண்டியானது தான் புதியதாக வாங்கியபோது இருந்த தோற்றத்தில் இருந்ததை கண்டு மிகவும் மகிழ்வுற்று யார்இவ்வாறு செய்தது என விசாரித்து அறிந்து கொண்டார் அதன் பின்னர் ஓரிருநாளில் அந்த புதியஇளைஞனுக்கு தம்முடைய தொழிலகத்தில் சிறந்ததொரு பணியையும் நல்லசம்பளத்துடன் வழங்கினார்.

ஆம் சிறிய செயலாக இருந்தாலும் நாம் அதனை மிகச்சரியாக செய்தால் அதன் பலன் உடன் நமக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்பதே உலகநியதியாகும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...