சனி, 25 ஏப்ரல், 2015

செயலூக்கத்துடன் செயல்பட்டுகொண்டே இருந்தால் புதியபுதிய கண்டுபிடிப்புகளையும் ஆக்கங்களையும் உருவாக்கிடமுடியும்


நிறுவனம் ஒன்று கடலில் வெகுதூரம் சென்று மீன்களை பிடித்துவந்து நாட்டின் உட்பகுதியில் வெகுதூரத்திலிருந்த நகரங்களுக்கும்ஊரகபகுதிகளுக்கும் கொண்டு சென்றுவிற்பணை செய்துவந்தது

அதனால் புதியதாக பிடித்தமீன்போன்று இல்லாமல் காய்ந்து போனமீனாக விற்பனை செய்யவேண்டியதாகிவிட்டதால் உட்பகுதியில் இருந்த மக்கள் யாரும் வாங்கமுன்வரவில்லை அதனால் குளிர்பதின சாதனத்துடன் கூடிய வண்டிகளில் மீன்களை வைத்து எடுத்துசென்று விற்பனைசெய்தனர்

ஆயினும் மக்கள் குளிர்பதன பெட்டியில் வைத்தமீன்களும் சுவைகுறைந்துவிட்டதுஎன வாங்கமுன்வரவில்லை இந்நிலையில் ஆங்காங்கே நீர்நிறைந்த சிறிய தொட்டிகளை வைத்து அதில் கடலில் பிடித்தமீன்களைவிட்டு உயிரோடு இருக்கும் மீன்களாக மக்களிடம் விற்பனை செய்தனர்

அந்தவழிமுறையிலும் சிறிதுகாலம் கழித்து விற்பனை ஆகவில்லை என்னவென ஆய்வு செய்தபோது நீர்நிறைந்த சிறிய தொட்டிகளில் மீன்களை உயிருடன் இருந்தபோதும் அசைவு அதிகமில்லாததால் சுவையில்லாததாகிவிட்டது

நீர்நிறைந்த சிறிய குளங்களில் உயிருள்ள மீன்களுடன் இளஞ்சுராக்களையும் சேர்த்து வைத்தபோது அதனிடம் தப்பிப்பதற்காக அனைத்து மீன்களும் அங்கும் இங்கும் நீந்திஓடவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது

அதன்பின் மீன்களின் விற்பனை அமோகமாக இருந்துவந்தது அவ்வாறே நாமும் எப்போதும் செயலூக்கத்துடன் செயல்பட்டுகொண்டே இருந்தால் புதியபுதிய கண்டுபிடிப்புகளையும் ஆக்கங்களையும் நம்முடைய வாழ்வின் வசதிக்காக உருவாக்கிட முடியும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...