ஞாயிறு, 3 ஜனவரி, 2016

ஒருவர் இறந்தபின்னரும் அவர் செய்த நற்செயல்களால் விளையம் பெயரும்புகழும் என்றென்றும் நிலைத்து நிற்கும்


மிகப்பெரிய தொழில் அதிபர் ஒருவர் இருந்தார் அவருக்கு அன்று மிக முக்கியமான வியாபார கூட்டம் ஒன்றில கலந்து கொண்டிருந்தார் அப்போது அவருடைய சொந்த வாகண ஓட்டுனர் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தது உடன் தன்னுடைய வியாபார கூட்டத்தை அப்படியே இடையில் நிறுத்தும் செய்துவிட்டு ஓட்டுனரின் குடும்பத்தாரை தான் வந்தபின் இறுதிசடங்கு நிகழ்வுகளை நடத்துமாறு கோரியபின் அதிகவேக வண்டியை பிடித்து அவருடையவாகண ஓட்டுனரின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள திரும்பினார்.

பிறகு அவருடைய சொந்த வாகண ஓட்டுனரின் ஊருக்கு வந்துசேர்ந்தபின் அவ்வோட்டுனருடைய உடலை தன்னுடைய வாகணத்திலேயே வைத்து ஊர்வலமாக இடுகாடுவரை அந்த தொழில் அதிபரேவாகணத்தை ஓட்டி சென்று சேர்த்தார்

அனைவரும் அந்த தொழில் அதிபரிடம் எதற்காக அவ்வாறு தன்னுடைய வாகணஓட்டுனரின் இறுதி பயனத்தின் வாகணத்தினை அந்த தொழில் அதிபரே ஓட்டிசென்றார் என்று வினவியபோது

அந்த வாகணஓட்டுனர் அல்லுபகலும் அயராது அந்த தொழில் அதிபருடனே இருந்து பணிபுரிந்துவந்தார் எப்போதும் அந்த தொழில் அதிபரை கண்ணும்கருத்துமாக பாதுகாத்துவந்தார் அதற்கு நன்றிகடனாக அவ்வாறு செய்ததாகவும் நம்முடைய வாழ்வில் நாம் எவ்வளவுதான் பணத்தையும் சொத்துகளையும் சம்பாதித்தாலும் அவையனைத்தும் நாம் இறந்தபின்னர் நம்மோடு எடுத்து செல்லமுடியாது ஆனால் ஒருவர் இறந்தபின்னரும் அவர் செய்த நற்செயல்களால் விளையம் பெயரும்புகழும் என்றென்றும் நிலைத்து நிற்கும்

அதனால் நம்முடைய வாழ்நாளில் ஏதாவது நற்செயல்களை செய்திடவேண்டும் என அறிவுரை கூறினார் அதைபோன்று நம் வாழும் நாளில் நம்மால் முடிந்த செயல்களை உதவிகளை நாமும் செய்திடுவோம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...