ஞாயிறு, 17 ஜனவரி, 2016

அந்தந்த மனிதர்களுக்கு ஏற்றவாறே எந்தவொரு செயலும் நடைபெறும்


ரபி எனும் முஸ்லிம் சாமியார், ராமன் எனும் இந்துசாமியார் ரகு எனும் வழக்குரைஞர் ஆகிய மூன்று நபர்களும் தூரத்திலிருந்த நகரத்திற்கு மகிழுந்து ஒன்றில் ஒன்றாக பயனம் செய்தனர் இரவாகிவிட்டதால் நெடுஞ்சாலையின் இடையில் ஒருகுக்கிராமத்தில் தங்கவேண்டிய நிலையாகிவிட்டது

அங்கு ஒருவிவசாயினுடயை வீட்டில் இரவு தங்குவதற்காக வேண்டியபோது தன்னுடைய வீட்டின் அறையில் இருவர் மட்டுமே தங்கி ஓய்வெடுக்க முடியும். என்றும் அருகில் தானியங்களை சேமித்துவைக்கும் களஞ்சியத்தில் மேலும் ஒருவர் தங்கலாம் ஆனால் படுத்து ஓய்வெடுக்கும் அளவிற்கு வசதியில்லை என அந்த விவசாயி கூறினார் அதெல்லாம் பரவாயில்லை ஐயா, எங்களில் ஒருவர் தானிய களஞ்சியத்தில் அமர்ந்து கொண்டு இரவை கழித்துகாலையில் புறப்பட்டுவிடுவோம் என உறுதிகூறினார்கள்

முதலில் ரபி எனும் முஸ்லிம் சாமியார் தானியகளஞ்சியத்திலும் மற்றஇருவரும் வீட்டின் அறையிலும் தங்குவதாக முடிவுசெய்து இரவு அனைவரும் ஓய்வெடுத்து கொண்டிருக்கும் போது அந்த விவசாயினுடைய வீட்டின் முன்வாயில் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது உடன் அந்த விவசாயியானவர் இன்று ஒரே தொந்திரவாக போய்விட்டதே என முனுமுனுத்து கொண்டே கதவை திறந்தார் வெளியில் ரபி எனும் முஸ்லிம் சாமியார், மன்னிக்கவேண்டும் ஐயா தானியகளஞ்சியத்திற்கு அருகில் குதிரை ஒன்று அசுத்தமாக இருந்ததால் என்னால் அமர்ந்து ஓய்வெடுக்க முடியவில்லை என கூறினார்

அதனை தொடர்ந்து அவருக்கு பதிலாக ராமன் எனும் இந்துசாமியார் தானிய களஞ்சியத்தில் தான் ஓய்வெடுத்துகொள்வதாக கூறி சென்றார் பின்னர் இரண்டாவது முறையும் அந்த விவசாயினுடைய வீட்டின் முன்வாயில் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது உடன் அந்த விவசாயி என்னடாஇது மிகவும் தொந்திரவாக போய்விட்டதே என முனுமுனுத்து கொண்டே கதவை திறந்தார்

தற்போது ராமன் எனும் இந்துசாமியார் மன்னிக்கவேண்டும் ஐயா தானியகளஞ்சியத்திற்கு அருகில் பசு ஒன்று அசுத்தமாக இருந்ததால் என்னால் அமர்ந்து ஓய்வெடுக்க முடியவில்லை என கூறினார் அதனை தொடர்ந்து அவருக்கு பதிலாக ரகு எனும் வழக்குரைஞர் தானிய களஞ்சியத்தில் ஓய்வெடுத்து கொள்வதாக கூறி சென்றார் அதன்பின்னர் மூன்றாவது முறையும் அந்த விவசாயினுடைய வீட்டின் முன்வாயில் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது உடன் அந்த விவசாயி சேச்சே இது போன்ற தொந்திரவை நான் சந்தித்ததேஇல்லை என மிகுந்த மனவருத்தத்துடன் கதவை திறந்தார் வெளியில் அவருடைய குதிரையும் பசுவும் நின்றுகொண்டிருந்தன .

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...