செவ்வாய், 13 ஜூன், 2017

இரத்தத்தில் சர்க்கரை இருக்கின்றதா எனும் பரிசோதனை


தமிழ்நாட்டின் கிராமம் ஒன்றில் வாழும் ஒரு நடுத்தர வயதுமனிதன் அருகிலிருந்த நகரத்தின் மருந்துகடை ஒன்றிற்கு சென்றார்கையோடு சிறு கண்ணாடியாலான பாட்டில் ஒன்றும் ஒரு ஸ்பூனும் எடுத்து சென்றிருந்தார் அந்த மருந்துகடையில் இருந்த மருந்தாளுநரிடம் தான்வைத்திருந்த பாட்டிலிலிருந்த தண்ணீர் போன்ற திரவத்தை கைவசமிருந்த ஸ்பூனில் ஊற்றி "ஐயா! இந்த தண்ணீரை சுவைத்து பாருங்கள் இனிப்பாக இருக்கின்றதா? என சுவைத்தபின் கூறுங்கள்" என கேட்டுகொண்டார் அதனைதொடர்ந்த அந்த மருந்தாளுநரும் அந்த ஸ்பூனில் இருந்த தண்ணீரை வாயில் வைத்து சுவைத்தபின்னர் "இனிப்பாகவும் இல்லை சுவையாகவும் இல்லையே" என பதில் கூறினார் "இதைதான்ஐயா! நானும் கூறுகின்றேன் ஆனால் மருத்துவர் "உனக்கு சர்க்கரை வியாதி வந்துள்ளது உன்னுடைய மூத்திரத்தில் சர்க்கரை அளவு அதிகமாக செல்கின்றது நீபோய் அந்த மருந்து கடையில் நான் எழுதிதரும் மாத்திரையை வாங்கி ஒருமாதத்திற்கு சாப்பிட்டபின் திரும்பிவா" எனக்கூறுகின்றார் இது சரியா? ஐயா! என்னுடைய மூத்திரம் இனிப்பாக இல்லை எனநீங்களே கூறிவிட்டீர்கள் அப்புறம் நான்எதற்கு சர்க்கரைக்கான மாத்திரை வாங்கவேண்டும்" என பஞ்சாயத்து பேசினார் இவ்வாறான பேச்சினை கேட்டவுடன் மருந்தாளுநர் வெண்ணைதின்ற குரங்காக அடுத்து என்னசெய்வது என தெரியாமல் திகைத்து உட்கார்ந்து விட்டார்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...