ஞாயிறு, 18 ஜூன், 2017

நீரில் மூழ்கிப்போன பூனை


ஓடும் தண்ணீரில் வீழ்ந்த பூனை ஒன்று , அந்த தண்ணீருக்குள் மூழ்கி தன்னுடைய உயிருக்காக தத்தளித்து கொண்டிருந்தது அதனை கண்ணுற்று கரையில் நின்று கொண்டிருந்த வயதான நபர் ஒருவர் அவ்வாறு உயிருக்கு போராடிகொண்டிருந்த அந்த பூனையை காப்பாற்ற முடிவு செய்தார், . அதற்காக அவர் தனது கையை நீட்டி அந்த பூனையை பிடித்திட முயன்றார் ஆனால் உயிருக்கு போராடி கொண்டிருந்த அந்த பூனையானது தன்னுடைய கால் நகத்தால் அவருடைய கையை கீறியது அதனை தொடர்ந்து அவருடைய கைகளில் ஏற்பட்ட வலியினால் அவர் தனது கையை பூனை காப்பாற்றுவதிலிருந்து இழுத்துகொண்டார் எனினும், ஒரு நிமிடம் கழித்து அவர் அந்த பூனையை காப்பாற்ற மீண்டும் தனது கையை நீட்டி பிடிக்க முயன்றார், ஆனால் அந்தபூனையானது மீண்டும் அவரை தன்னுடைய கால்களின் நகத்தால் கீறியது , அதானால் மீண்டும் ஏற்பட்ட மிக அதிக வலியால் மீண்டும் தன்னுடைய கையை இழுத்து கொண்டார் . இருந்தபோதிலும் மற்றொரு நிமிடம் கழித்து அவர் மூன்றாவது முறையாக மீண்டும் தன்னுடைய கைகளை நீட்டி அந்த பூனையை காப்பாற்ற முயற்சி செய்தார்! உடன் அவருடைய உள்மனமானது அவரிடம், " அந்த பூனையானதுஇரண்டுமுறையும் உன்னுடைய கைகளை தன்னுடைய கால்களின் நகங்களால் கீறி காயப்படுத்தியும் அதிலிருந்து பாடம் எதுவும் கற்றுகொள்ளாமல் மூன்றாவது முறையாக அந்த பூனையை காப்பாற்ற முயற்சிக்கிறாயா?” எனக்கேள்வியை எழுப்பியும் அதனை ஒதுக்கிவிட்டு அந்த மனிதன் வாயற்ற உயிரினம் ஒன்று உயிருக்கு போராடும்போது அந்த பூனையை காப்பாற்ற நம்மால் முடிந்த வரை முயற்சி செய்வது நம்முடைய கடமைஎன முயற்சி செய்து கைகளில் அந்த பூனையின் கால்நகங்களினால் கீறியதால் ஏற்பட்ட வலியை பொருட்படுத்தாது அந்த பூனையின் உயிரைகாப்பதில் வெற்றி பெற்றர். அதேபோன்று மனிதர்களாகிய நாம் அனைவரும் நம்முடைய பிள்ளைகளுக்கும் நம்மைவிட அனுபவமில்லாதவர்களுக்கும் உதவி செய்யமுற்படும்போது நமக்கு ஏற்படும் எந்தவொரு இடர்களுக்கும் சோர்வுறாமல் அவர்களுக்கு தேவையான நல்ல செயல்களை செய்து நல்வழிகாட்டுவது நம்முடைய கடைமையாகும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...