ஞாயிறு, 22 ஜனவரி, 2023

முதுமையில் மகிழ்ச்சியின் இரகசியம் (கட்டாயம் படிக்கவும்)

 ஒருமுறை புகழ்பெற்ற கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ் பயணத்தின் போது ஒரு நகரத்திற்குச் சென்றார். அங்கு அவர் ஒரு முதியவரை சந்தித்தார். சிறிது நேரத்தில் இருவரும் நன்றாகப்பேசி  பழகினர்.
முதியவர் சாக்ரடீஸை தனது இல்லத்திற்கு வரும்படி வற்புறுத்தினார். சாக்ரடீஸ் சம்மதித்து முதியவரின் வீட்டிற்கு சென்றார். முதியவர் மகன்கள், பேரன்கள்  பேத்திகள் என ஒரு பெரிய அளவிலான குடும்பஉறுப்பினர்களைக் கொண்டிருந்தார்,
சாக்ரடீஸ் முதியவரிடம் , 'உங்கள் வீட்டில் திருப்தியும் மகிழ்ச்சியுமாக இருக்கிறது. , நீங்கள் இப்போது என்ன செய்கிறீர்கள்?" என கேட்டார்
  உடன் முதியவர் , "இப்போது, நான் எதுவும் செய்ய வேண்டியதில்லை. , எங்கள் குடும்பத்திற்கு என ஒரு நல்ல தொழில் உள்ளது, அதன் அனைத்து பொறுப்புகளும் இப்போது மகன்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. அதனால் எங்கள் குடும்பத்தொழிலை மகன்களும் எங்கள் மருமகள்கள் வீட்டையும் நன்குக் கவனித்துக் கொள்கிறார்கள். அதனால் எங்களுடைய  வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கிறது." என  விளக்கமளித்தார்
இதைக் கேட்ட சாக்ரடீஸ், "ஆனால் இந்த முதுமையிலும் நீங்கள்  மகிழ்ச்சியாக இருக்கின்றீர்கள் உங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையின் இரகசியம் என்னவென்று கூறுங்களேன்?"
முதியவர் சிரித்துக்கொண்டே , “நான் வாழ்க்கையின் இந்த கட்டத்தில் மற்றவர்களிடம் அதிகம் எதிர்பார்க்காமல், கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடையும் ஒரே ஒரு கொள்கையை மட்டுமே ஏற்றுவாழ்ந்துவருகின்றேன்.
நானும் என் மனைவியும் எங்கள் குடும்பப் பொறுப்பை மகன்களிடமும் மருமகள்களிடம் ஒப்படைத்தோம். நான் என் பேரக்குழந்தைகளுடன் சிரித்து விளையாடுகிறேன்.
எங்கள் மகன்ள் தவறு செய்தால், நான் அவர்களின் எந்த வேலைக்கும் இடையூறாக இல்லாமல் அமைதியாக இருப்பேன். ஆனால் பிள்ளைகள் என்னிடம் ஆலோசனைக்கு வரும்போதெல்லாம், என் வாழ்க்கையின் எல்லா அனுபவங்களையும் அவர்கள் முன் வைத்து, அவர்களின் தவறின் தீய விளைவுகளைப் பற்றி எச்சரிக்கிறேன்.
இப்போது அவர்கள் என் ஆலோசனையை எவ்வாறு பின்பற்றுகின்றார்கள் அல்லது பின்பற்றவில்லை என்பதைப் பார்ப்பது என் வேலை அன்று, அதனால்அவர்கள் பின்பற்றவில்லை என்றால், என் மனதை வருத்தப்படுத்த நான் அனுமதிக்க மாட்டேன். என்னுடைய அறிவுரைகளை அவர்கள் பின்பற்ற வேண்டும் என்று நான் அவர்களை வற்புறுத்துவதும்இல்லை.
என்னுடைய ஆலோசனைக்குப் பிறகும் அவர்கள் தவறு செய்தால் நான் கவலைப்பட மாட்டேன், ஆனால் அவர்கள் மீண்டும் என்னிடம் வந்தால், நான் அவர்களுக்கு மீண்டும் சரியான ஆலோசனைகூறி அனுப்பிவைக்கிறேன்." என மிகநீண்ட விளக்கமளித்தபோது சாக்ரடீஸ்  இதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
 சாக்ரடீஸ், " இந்த வயதில் வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உங்களிடமிருந்து நான் மிகச்சரியாக புரிந்து கொண்டேன்." எனக்கூறினார்
கற்றல்:
நீங்கள் வயதின் நான்காவது கட்டத்தில் நுழைந்தால், முதலில் உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்தப் பழகுங்கள், இது மகிழ்ச்சிக்கான முதல் படியாகும். மற்றவர்களின் வேலையில் தலையிடுவதைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...